Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கில் புதிதாக திருமணபந்தத்தில் இணையும் ஐந்து ஜோடிகளுள் நான்கு ஜோடிகளுக்கு குழந்தைப்பாக்கியம் இல்லாமல் போகின்றதாக தென் பிரதேச ஆளுநரான பேராசிரியர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் இரசாயன உரங்களின் பாவனை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வடமத்திய மாகாணத்தில் மட்டுமே காணப்பட்ட சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை இன்று வடக்கு, கிழக்கு, தெற்கு என நாடளாவிய ரீதியல் அதிகரித்துள்ளது. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் உலோகம் கலந்த நீர் வயல்வெளிகளுக்குச் செல்வதோடு, குடிநீரிலும் கலக்கப்படுவதே இதற்கான காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பழவகைகள் இரசாயன பதார்த்தங்களைக் கொண்டு பதனிடப…

  2. 2,500 இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வெளிநாடுகளில் வசிக்கும் இரட்டைப் பிரஜாவுரிமை பெற்ற 2500 இலங்கையர்களுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. ஏற்கனவே, 4200 பேருக்கு இரட்டை பிரஜா உரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/news/9846

  3. நீதிதானே காயங்களை ஆற்றும்! ஆலமரத்தடி இன்னும் எத்தினை நாளைக்கு இந்தச் சனங்கள் அழப்போகுதுகள்? என்ற கேள்வியுடன் ஆலமரத்தடிக்கு வந்தார் கந்தையா. இப்ப இரண்டு மூண்டு நாளாய் பேப்பரை திறந்தால் கண்ணீர் விடுகிற சனங்கள். நெஞ்சை உருக்குதுகளடா.. என்றார் இரத்தினத்தார். அண்ணே காணாமல் போனவையள் இல்லை எண்டுபோட்டு காணாமல் போனோர் தொடர்பாய் விசாரிக்கிற ஆணைக்குழு ஏன் உந்த சனங்களை அழ வைக்கினம். பேசாமல் ஆணைக்குழுவை கலைக்கலாம்தானே. சனங்கள் என்ன செய்ய வேணும் எண்டு தீர்மானிக்கும்தானே என்று கேட்டான் சின்னத்தம்பி. அடேய்.. உது மகிந்தர் சர்வதேசத்தின்டை கண்ணிலை மண்ணை தூவவும் எங்கடை சனங்களை மௌனமாக்கவும் கொண்டுவந்த ஆணைக்குழு. ஆனால் பேச்சுக்கு செய்தது இப்ப அரசேக்க…

  4. தீர்ப்பளித்த சட்டத்தரணிகள் இருவருக்கும் கடுஞ்சிக்கல் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நால்வரிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சட்டத்தரணிகள் இருவர், விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில் மார்ச் மாதம் 9ஆம் திகதியன்று ஆஜராகுமாறு நீதிபதி கேமா சுவர்ணாதிபதி உத்தரவிட்டுள்ளார். இலங்கை சட்டஉதவி ஆணைக்குழுவின் அநுராதபுர காரியாலயத்தின் சட்டத்தரணி ஹுஸ்ரா பாத்திமா மற்றும் அந்தக் காரியாலயத்தின் சட்டத்தரணி ஒருவருமே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர். அந்த நால்வரும், தம்மீது சுமத்த…

  5. புங்குடுதீவு மாணவி கொலை: சந்தேகநபர்கள் இருவர் விடுவிப்பு புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் தொடர்புபட்டவர்கள் என குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கடந்த திங்கட்கிழமை (29) கைதுசெய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும், நேற்று செவ்வாய்க்கிழமை (01) விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒருவர், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மற்றையவரை குற்றப்புலனாய்வுப் பொலிஸார் விடுவித்தனர். ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என்ற சந்தேகத்தில் புங்குடுதீவைச் சேர்ந்த இந்த இருவரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர். 2015ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி வன்ப…

  6. ஜனாதிபதியின் ஜேர்மன் விஜயத்தால் பலன் : ரவி கருணாநாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜேர்மன் விஜயத்தின் பலன்கள் தற்போது கிடைத்து வருவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டுக்கு வந்துள்ள ஜேர்மன் சிரேஷ்ட அமைச்சர் டெக்மர் கேபிரியலுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நாட்டின் முதலீடு மற்றும் நிர்வாகம் தொடர்பில் ஜேர்மன் அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கை மற்றும் ஜேர்மனுக்கு இடையில் காணப்படும் தொடர்பை வர்த்தகத்துறை ஊடாக மேலும் வலுப்படுத்த வேண்டும் எனவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். http://onlineuthayan.co…

  7. கைதடி - நாவற்குழி பாலத்தில் விரிசல்! பயணிப்போர் அச்சத்தில்! கைதடி - நாவற்குழிப் பாலத்தில் விரிசல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. அதனால் பயணிப்போர் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் குறித்து கேட்ட போது, விரைவாக குறித்த பாலத்தை சீர்செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வீதி அபிவிருத்தி அதிகாரi சபையின் யாழ்.மாவட்டப் பிரதான பொறியியலாளர் வி.சுதாகர் தெரிவித்தார். கைதடி - நாவற்குழிப் பாலம், கடந்த 2000ஆம் ஆண்டு போர் நடவடிக்கை காரணமாக அழிக்கப்பட்டது. இதன் பின்னர், 2001ஆம் ஆண்டு இராணுவத்தின் பொறியியல் பிரிவால் பாலம் இரும்புக் கேடர்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டிருந்தது. …

  8. தமிழர் தேசத்துக்கான இறுதிப் பயணத்தில் வெற்றி கிடைக்கும்! சம்பந்தன் நம்பிக்கை! எங்களுடைய இலக்கை நாம் இன்னும் அடையவில்லை. எமக்கான சுயநிர்ணய உரிமை, நாடு பிளவுபடாத சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு, வடக்கு - கிழக்கு இணைந்த அலகாகவும் அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட்டதுமான தமிழர் தேசம் ஒன்றை அடையும் வரை எமது பயணம் தொடரும். எனவே, எதிர்க்கட்சித் தலைவரானதும் எமது மக்களின் அன்றாட தேவையையும் அபிவிருத்தியையும் நிறைவு செய்தால் எமது இலக்கை அடைந்து விட்டோம் என்று அர்த்தமில்லை. எமது மக்கள் ஆண்டாண்டு காலத்திற்கு இந்த மண்ணில் சுயநிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய ஒரு நிரந்தர தீர்வை நோக்கியே நாம் பயணிக்கின்றோம். இந்தப் பயணத்தின் இறுதிக்கட்டத்தில் தற்போது இருக்கின்…

  9. அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்; தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவு [ Wednesday,2 March 2016, 02:47:17 ] தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தால், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்டிருக்கும் இந்த கருத்து முரண்பாடுகளையும், உட்கட்சி பிளவுகளையும் தீர்ப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை எதிர்வரும் 6ஆம் திகதி சனிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவரது கொழும்பு அலுவலகத்தில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளது. கடந்த வருடம் தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்த உண…

  10. இலங்கையில் 40% ஆண்களும் 2% பெண்களும் மதுவுக்கு அடிமை! [ புதன்கிழமை, 02 மார்ச் 2016, 03:35.01 AM GMT ] இலங்கையிலுள்ள வளர்ந்தோர்களில் 40 சதவீதமான ஆண்களும் 2 சதவீதமான பெண்களும் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர் என ஹெல்தி லங்கா நிலையத்தின் வேலைத்திட்டப் பணிப்பாளர் சாமிக ஜயசிங்க தெரிவித்துள்ளார். வளர்ந்தோரில் ஒவ்வொரு இலட்சம் பேருக்கும் 33.4 சதவீதமானோர் ஈரல் அழற்சி நோய்க்கு உள்ளாகியுள்ளனர் எனவும், இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் 20 சதவீதமான கட்டில்களில் மதுவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளே உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். காலி மாவட்டத்தில் நலன்புரி அமைப்புகள் முன்னெடுத்துள்ள மது ஒழிப்புத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டபோதே சாமிக ஜயசிங்க மேற்கூறிய தகவல்…

  11. மனோ கணேசன் வைத்தியசாலையில் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தனது உத்தியோகபூர்வ முகநூலில் தரவேற்றியுள்ளார்.அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இப்போது அறைக்கு மாற்றப்பட்டு கடந்த நான்கு நாட்களாக தனியார் மருத்துவமனையில் இருக்கின்றேன். மருத்துவ ஆலோசனைப்படி, எனது அனைத்து பொது நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என அதில் குறிப்பிட்டுள்ளார். http://onlineuthayan.com/new…

    • 6 replies
    • 552 views
  12. மாணிக்க கங்கையில் சுறா: ஆச்சரியத்தில் மக்கள் உலகின் மிகவும் மோசமான சுறா ஒன்று மாணிக்க கங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 3 அடி நீளமான இந்த சுறாவானது எவ்வாறு மாணிக்ககங்கைக்கு வந்தது என்று தெரியவில்லை. மேலும் கடல் நீரில் மட்டும் வாழும் இந்த சுறா எவ்வாறு ஆற்று நீரில் வாழுகின்றது என்று பல கேள்விகள் இருப்பினும், மாணிக்ககங்கையில் வாழுவது உண்மை. http://www.virakesari.lk/article/3746

    • 4 replies
    • 696 views
  13. வெளிநாட்டு நீதிபதிகள் தீர்ப்புச் சொல்வதை ஏற்கமாட்டேன் -எம்.றொசாந்த் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில், வெளிநாட்டு நீதிபதிகள் தீர்ப்புச் சொல்வதற்கு அனுமதிக்கமாட்டேன் என காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார். காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாவகச்சேரி அமர்வு பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்றது. அமர்வு முடிவடைந்தப் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துக் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். சர்வதேச தொழில்நுட்ப உதவிகள் தேவை எனில் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், சர்வதேச அவதானிப்பாளர்கள…

    • 3 replies
    • 590 views
  14. சூளைமேடு கொலை வழக்கு: டக்ளஸிடம் 5ஆம் திகதி வீடியோ விசாரணை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் எதிர்வரும் 5ஆம் திகதி காணொளிக் காட்சி மூலம் விசாரணை நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு அரசு தரப்பு சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜராக ஏற்பாடுகள் செய்யவேண்டும் என நீதிபதி எம்.சாந்தி, உத்தரவு கடிதம் அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரச சட்டத்தரணி எம்.பிரபாவதி மற்றும் சூளைமேடு பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆகிய இருவருக்கும் இந்த உத்தரவு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், 'தேசிய தகவல் மையத்தின் மூலம், இலங்கையில் உள்…

    • 4 replies
    • 437 views
  15. ஐ.நா மனித உரிமைச்சபையின் கூட்டத் தொடரில், The Sri Lanka Monitoring and Accountability Panel (“MAP”)சிறிலங்காவை மையப்படுத்திய நீதிப்பொறியமைவுகளை கண்காணிக்கும் அனைத்துலக நிபுணர்குழுவின் செயற்பாடு முதன்மைப் படுத்தப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைச்பையின் 31வது கூட்டத் தொடர் பெப்29 திங்களன்று ஜெனீவாவில் தொடங்கியுள்ளது. ஒன்பது நாடுகள் 2016ம் ஆண்டின் இவ்முதற் கூட்டத் தொடரில் இருந்து புதிதாக அங்கத்துவம் பெற்றுள்ளன. அண்மையில் சிறிலங்காவுக்கு மேற்கொண்டிருந்த தனது பயணம் தொடர்பில் அமர்வின் முதன்நாள் தொடக்கவுரையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் {ஹசேன் அவர்கள் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை. கடந்தாண…

  16. இலங்கையில் சமூக வலைத்தளங்களின் பாவனை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில், முகப்புத்தகத்தின் (பேஸ்புக்) பாவனை, பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும்' மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு பேராசியர் லோஷந்தக ரணதுங்க தெரிவித்தார். முகப்புத்தகத்தின் பாவனை, இலங்கையில் 92.63 வீதமாக காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த பேராசிரியர், 'கடந்த வருடத்தில் இலங்கையின் சனத்தொகை 20.36 மில்லியனாக அதிகரித்துள்ளது. அதேவேளை, இலங்கையில் அலைபேசி பாவனையாளர்களின் தொகை 27.40 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது 135 சதவீதமாகக் காணப்படுகின்றது. இந்நாட்டில், இணையத்தளப் பயன்பாட்டில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை 4.79 (24 சத…

  17. குற்றவாளிகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிப்போம்! காணாமற்போனோரின் உறவினர்கள், நேரடியாக குற்றஞ்சாட்டிய குற்றவாளிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அந்தக் குற்றவாளிகள் குறித்த விடயங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கி, விதப்புரை செய்வோம் என காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார். காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாவகச்சேரி அமர்வு, பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் கூறுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், எமது விசாரணைகள் மூன…

  18. பிள்ளையான் கைதின் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு (லியோ நிரோஷ தர்ஷன்) பிள்ளையான் கைதின் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது. வடக்கு கிழக்கை இணைக்கும் யோசணைக்கு எதிர்ப்பு தெரிவித்தமையே கூட்டமைப்பு பிள்ளையானை காட்டிக் கொடுக்க காரணம் என்று தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டப்ளியூ. டீ. வீரசிங்க ,கருணா அம்மான் மற்றும் கே.பி ஆகியோரை கைது செய்வதாக கூறி மார் தட்டிக்கொண்ட அரசாங்கம் இன்று மௌனித்து இருப்பது வேடிக்கையாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்ற இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் பேர்தே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டப்ளியூ. டீ. வீரசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.…

  19. கலகோட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணை இலங்கையின் பொது பல சேனா என்ற பௌத்த அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரர் உட்பட 13 பேருக்கு தண்டனை வழங்குமாறுகோரி, சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையில் பௌத்தர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுவருவதாகக் கூறுகிறார் ஞானசார தேரர். தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான மாலபேயில் அமைந்துள்ள கத்தோலிக்க போதனை நிலையமொன்றை, 2008ஆம் ஆண்டு தாக்கி சேதப்படுத்தியதற்காக கலகோட அத்தே ஞானசார தேரர் உட்பட 13 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட மா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில் இர…

  20. கொடிகாமம் புகையிரத நிலையம் வதை முகாமாக இயங்கியது. - ஆணைக்குழு முன் சாட்சியம். கொடிகாமம் புகையிரத நிலையம் இராணுவ வதை முகாமாக இயங்கி வந்ததாக சாவகச்சேரியை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியம் அளித்துள்ளார் யாழில் நடைபெற்று வரும் காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி நாள் அமர்வு செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. அந்த அமர்வில் சாட்சியம் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், விடுதலை புலிகளுடன் தொடர்பு எனும் சந்தேகத்தில் என்னை கொடிகாமம் பகுதியில் இயங்கி வந்த இராணுவ முகாமுக்கு அருகில் இராணுவத்தினரின் சிவில் காரியாலயம் இயங்கி வந்தது. அதில் இரண்டு நா…

  21. வடக்கு கிழக்கு இணைந்ததாக அரசியல்தீர்வு அமையவேண்டும் : சம்மந்தன் எமது மக்களின் அபிலாசைகளை தீர்க்காத எந்த ஒருதீர்வையும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அது வடக்கு கிழக்கு இணைந்தாகவும் ஆனால் தமிழ் மக்களை பிரிக்காததாகவும் அமைய வேண்டும் என எதிர்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையில் தமிழ் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மத்தியில் சமகால நிலமைகள் பற்றி அவர் திங்கட்கிழமை மாலை விளக்கமளிக்கையிலேயே மேற்படி கருத்தை அவர் வெளியிட்டார். அவர் இங்கு தொடர்ந்து பேசுகையில் இன்று மக்கள் மத்தியில் ஒரு துணிவு இருக்கின்றது. தாங்கள் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது ஒரு நல்ல விடயம். எமது நாட்டில் இன்று எமது மக்க…

  22. 'இராணுவம் விடுவித்த மறுநிமிடம் வெள்ளைவான் கடத்தியது' -எம்.றொசாந்த் 'மானிப்பாய் இராணுவ முகாம் இராணுவ வீரர்களால் பிடிக்கப்பட்ட மாசிலாமணி தியாகராஜா (வயது 37), இராணுவம் விடுவித்த மறுநிமிடம் வெள்ளை வான் மூலம் கடத்தப்பட்டார்' என தாயார் இராஜேஸ்வரி சாட்சியமளித்தார். 'நாங்கள் வரணியைச் சேர்ந்தவர்கள். எனது மகன் சண்டிலிப்பாயைச் சேர்ந்த பெண்ணொருவரை திருமணம் செய்து அங்கு வசித்து வந்தார். எனது மருமகள் இருதயநோய் காரணமாக இறந்தார். 2007ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி சண்டிலிப்பாயிலுள்ள வீட்டில் மனைவியின் ஓராண்டு திதியை எனது மகன் செய்துகொண்டிருந்தபோது, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இராணுவத்தினர் எனது மகனைப் பிடித்து,…

  23. சனல்- 4 வெளியிட்ட புகைப்படத்தில் காணாமற்போன மகன்! - ஆணைக்குழுவிடம் தாய் முறைப்பாடு [Tuesday 2016-03-01 07:00] சனல்- 4 வெளியிட்ட புகைப்படங்களில் ஒன்றில் தனது மகன் காணப்பட்டதாக தாய் ஒருவர் பரணகம ஆணைக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியம் அளித்துள்ளார். காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஐனாதிபதி ஆணைக்குழு முன் அவர் தனது மகன் சம்பந்தப்பட்ட புகைப்படத்தையும் காண்பித்து அடையாளம் காட்டினார். காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் நேற்று யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் நடைபெற்றன. இதன் போதே குறித்த தாய் தனது மகனை அடையாளம் காண்பித்துள்ளார். குறித்த தாய் தனது மகன் தொடர்பாக மேலும் குறிப்…

  24. மகிந்தவின் தோல்விக்கு பசில் தான் காரணம்! - எஸ்.பி.திசநாயக்க குற்றச்சாட்டு [Tuesday 2016-03-01 07:00] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் தோல்விக்கு பிரதானகாரணம் பஷில் ராஜபக் ஷ தான் என்று சமூக நலன்புரி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெ ளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க மேலும் குறிப்பிடுகையில், விடுதலை புலிகளை இல்லாமல் செய்த மஹிந்த ராஜபக்ஷவிற்கு இந்த ஆட்சியை கவிழ்ப்பது பெரிய விடயமல்ல என பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இவரது கருத்து உண்மை என்பதனை ஏற்றுக்கொள்கின்றோம…

  25. மகிந்த அரசினால் மறைக்கப்பட்ட 1151 பில்லியன் ரூபா கடன்கள் கண்டுபிடிப்பு! [Tuesday 2016-03-01 07:00] கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட 1151 பில்லியன் ரூபா செலவீனங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியிருப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துக்குக் கூடத் தெரியப்படுத்தாது இந்த செலவீனங்கள் மறைக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் மீது சுமையை ஏற்படுத்தாது இதனை ஈடுசெய்வது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடவிருப்பதாகவும் கூறினார். நிதியமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இத்தகவல்களை வெளியிட்டார். 2014ஆம் ஆண்டு டிசம்பர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.