ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
சுதந்திரக் கூட்டமைப்பை அழிக்கும் பாவச்செயலுக்கு துணைபோகப்போவது இல்லை [ Wednesday,10 February 2016, 03:10:24 ] எதிர்க்கட்சியில் இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களுக்கான நேர ஒதுக்கீட்டில் அநீதி இழைக்கப்படுவதை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரை சுயாதீனக் குழுவாக அங்கீகரிக்குமாறு நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், கூட்டமைப்பிற்குள் காணப்படும் உட்கட்சி மோதலை தீர்த்துக்கொள்ளும் பட்சத்தில் நேரஒதுக்கீட்டு சிக்கலுக்கு தீர்வு வழங்க முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் ஐ…
-
- 0 replies
- 347 views
-
-
பிரகீத் எக்நெலிகொட கொலை செய்பய்பட்டமைக்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன? 10 பெப்ரவரி 2016 லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட கொலை செய்யப்பட்டமைக்கான வலுவான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்றைய தினம் ஹோமாகம நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றப் புலனாய்வு பிரிவின் துணைக் காவல்துறை அத்தியட்சகர் சானி அபேகுணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ள இராணுவப் புலனாய்வு பிரிவினரின் தொலைபேசி அழைப்புக்களின் ஊடாக இந்தக் கொலை குறித்த முக்கிய தகவல்கள் கிட…
-
- 0 replies
- 229 views
-
-
சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு சபை இன்று கூடுகின்றது [ புதன்கிழமை, 10 பெப்ரவரி 2016, 02:32.56 AM GMT ] அரசியலமைப்பு சபை இன்று பிற்பகல் 4 மணிக்கு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. புதிய சட்டமா அதிபரை நியமிப்பதற்காக ஜனாதிபதியினால் அரசியலமைப்பு சபைக்கு பிரேரிக்கப்பட்ட மூன்று பெயர்கள் தொடர்பிலலேயே இன்று கலந்தாலோசிக்கப்பட உள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க குறிப்பிட்டார். அதன் பின்னர் அரசியலமைப்பு சபை அங்கத்தவர்களின் இணக்கத்துடன் சட்டமா அதிபர் நியமனம் குறித்து தீர்மானம் எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.tamilwin.com/show-RUmuyCSUSWgv0F.html
-
- 0 replies
- 278 views
-
-
வெல்லம்பிட்டியில் துப்பாக்கிச் சூடு ; மூவர் பலி [ Wednesday,10 February 2016, 03:59:18 ] கொழும்பை அண்மித்த வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மூவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டிய கித்தம்பஹுவ பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 19, 24 மற்றும் 49 வயதுடைய மூவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிப் பிரயோகத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மூவரும், தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், வெல்லம்பிட்டிய பொலிஸார் சம்பவம் குற…
-
- 0 replies
- 191 views
-
-
காணாமல் செய்யப்பட்ட உறவுகள் தொடர்பிலான விசாரணைகளில் நம்பிக்கை இல்லை [ Wednesday,10 February 2016, 03:24:30 ] ஒப்படைக்கப்பட்டு அல்லது கடத்தப்பட்டு காணாமல் செய்யப்பட்ட தமது உறவுகள் தொடர்பிலான விசாரணைகள் மற்றும் ஆணைக்குழுக்களின் மீது தான் நம்பிக்கை இழந்துள்ளதாக காணாமல்போயுள்ள உறவுகளை தேடிக்கண்டறியும் வடக்கு, கிழக்கு மாகாண சங்கங்களின் தலைவி ஆஷா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையளார் செயிட் ரா-அத் அல் ஹுசைனுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போது தான் தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு குறிப்பிட்டார். காணாமல் போனோர் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களின் சமக…
-
- 0 replies
- 236 views
-
-
சுதந்திரமான நடுநிலையான விசாரணையே அவசியம்! - மனித உரிமை ஆணையாளர் [Wednesday 2016-02-10 07:00] மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிமன்றம் என்பது மிகவும் அரிதான விடயமாகும். எமது அறிக்கையில் நாங்கள் சர்வதேச நீதிமன்றம் குறித்து பேசவில்லை. என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் தெரிவித்தார். மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிமன்றம் என்பது மிகவும் அரிதான விடயமாகும். எமது அறிக்கையில் நாங்கள் சர்வதேச நீதிமன்றம் குறித்து பேசவில்லை. என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் தெரிவித்தார். அதற்கான நியாயாதிக்க செயற்ப…
-
- 0 replies
- 244 views
-
-
நாடு பூராகவும் 40,000 போலி வைத்தியர்கள்! வைத்திய அதிகாரிகள் சங்கம் முறைப்பாடு [ புதன்கிழமை, 10 பெப்ரவரி 2016, 02:54.09 AM GMT ] இலங்கை முழுவதும் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் செயற்படுவதாக, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். நாடளாவிய ரீதியில் மோசடியில் ஈடுபட்டுள்ள போலி வைத்தியர்கள் தொடர்பிலான தகவல்களை திரட்டும் நடவடிக்கையின் போதே மேற்படி தகவல்கள் பெறப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த முறைப்பாடு தொடர்பாக பொலிஸ்மா அதிபர் உடனடியாக போலி வைத்தியர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். போலி வ…
-
- 0 replies
- 237 views
-
-
புதுக்குடியிருப்பில் காணி அபகரிப்பு; மீட்டுத்தருமாறு கிராம மக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் [ Wednesday,10 February 2016, 05:34:32 ] நானாட்டான் - புதுக்குடியிருப்பு, சூரிய கட்டைக்காடு கிராமத்தில் காணிகள் உரிய முறையில் எல்லையிடப்பட்டுள்ளதா என பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் எவரும் வருகை தந்து பார்வையிடவில்லை என அக்கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் அக்கிராம மக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். நானாட்டான் புதுக்குடியிருப்பு கிராமத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி எல்லைக்கற்கள் போடப்பட்ட இடங்களை நில அளவைகள் திணைக்களத்தினால் அனுப்பப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். குறித்த எல்லைக்கற்கள் சரியான…
-
- 0 replies
- 192 views
-
-
மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசி தாக்குதல்? இராமேஸ்வரத்தில் இருந்து 600க்கும் மேற்பட்ட படகுகளில் 2000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை இலங்கை கடற்படையினர் கல் வீசி தாக்கியுள்ளனர் என தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. மேலும், இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகள் மீது மோதி சேதப்படுத்தியதோடு, வலைகளையும் அறுத்துள்ளதாக கூறப்படுகின்றது. இதையடுத்து இராமேஸ்வர மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல், கரை திரும்பினர். இதில் பலரது வலைகள் அறுக்கப்பட்டதால், பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறினர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை சென்று திரும்பி இரண்டு நாள் கூட ஆகாத நிலையில் தங்கள் மீது இலங்கை கடற்படையினர…
-
- 0 replies
- 424 views
-
-
சர்வதேச நீதிமன்றம் குறித்து பேசவில்லை மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிமன்றம் என்பது மிகவும் அரிதான விடயமாகும். எமது அறிக்கையில் நாங்கள் சர்வதேச நீதிமன்றம் குறித்து பேசவில்லை. அதற்கான நியாயாதிக்க செயற்பாடுகள் எந்தளவு கடினமானவை என எங்களுக்குத் தெரியும். இது தொடர்பில் இலங்கையில் சட்டமூலங்கள் நிறைவேற்றப்படவேண்டும். இலங்கைப் பாராளுமன்றத்தில் அவ்வாறான சட்டமூலங்கள் நிறைவேற்றப்படுவது கடினமான செயற்பாடாகும். எனவே இங்கு சர்வதேச நீதிமன்றம் என்ற விவகாரம் விவாதத்திற்குட்படவேண்டிய அவசியமில்லை. இது இலங்கையின் செயற்பாடாகவே அமையும் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் தெரிவித்தார…
-
- 0 replies
- 365 views
-
-
"சாதிக்க வேண்டிய என்னை சாகடித்து விட்டீர்கள் " மாணவன் பா. சுவஸ்திகன்:- திருநெல்வேலி பகுதியில் தனியார் பேருந்தும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளான். கடந்த 3ம் திகதி இ.போ.ச. பேருந்தும் தனியார் பேருந்தும் பலாலி வீதியில் போட்டி போட்டு ஓடியதில் தனியார் பேருந்து வேக கட்ட…
-
- 0 replies
- 778 views
-
-
அச்சநிலை தெற்கில் குறைந்துள்ள போதும் வடக்கு, கிழக்கில் கவலையளிக்கிறது! February 9, 2016 03:33 pm அச்ச சூழ்நிலை தெற்கிலும் கொழும்பிலும் குறிப்பிடத்தக்களவிற்கு குறைவடைந்துள்ளது எனினும் வடக்கு மற்றும் கிழக்கில் அது உருமாறியுள்ளது, ஆனால் கவலையளிக்கும் விதத்தில் அது காணப்படுகின்றது என, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார். நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவர் இன்று கொழும்பில் வைத்து ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இவ்வாறு கூறியுள்ளார். இலங்கை கடந்த ஒரு வருடத்தில் முன்னேற்றங்களை சந்தித்துள்ளது, ஊடகங்களிற்கு இது நன்கு தெரியும் நீங்கள் விரும்பியதை எழுதுவதற்கும், நீங்கள் நினைத்ததை அறிக்கையிடுவதற…
-
- 2 replies
- 790 views
-
-
முடிந்தால் குற்றங்களை நிரூபித்துக் காட்டுங்கள்; சவால் விடுக்கும் கோத்தா பணத்தைக் கொள்ளையிட்டு, பாரியளவில் சொத்துக்களைச் சேர்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜக்ச மீது சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானது, முடிந்தால் அந்த குற்றங்களை நிரூபித்துக் காட்டுங்கள் என கோத்தபாய ராஜபக்ச சவால் விடுத்துள்ளார். நம்மைக் கொலை செய்தாலும் கூட ராஜபக்சவினரை அரசியலிலிருந்து ஓரம் கட்டிவிட முடியாது. ராஜபக்சவினர் கடந்த 80 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வாறனவர்களை அரசியல் ரீதியில் அழித்துவிட முடியாது . மக்களின் பணத்தைக் கொள்ளையிட்டு, பாரியளவில் சொத்துக்களைச் சேர்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிப…
-
- 0 replies
- 357 views
-
-
வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக உறுப்பினர்கள் போர்க் கொடி, தனித்து நின்ற விவசாய அமைச்சர்! வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக மாகாண சபையில் பிரேரணை கொண்டுவரப்பட்டு சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன்போது, இரணைமடு நீர்ப்பாசன திட்டம் தொடர்பிலான செயற்பாடுகள், பார்த்தீனிய ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகள் , பளை பிரதேசத்தில் நிறுவப்பட்ட காற்றாலை தொடர்பிலான விடயம்,சுன்னாக நிலத்தடி நீர் தொடர்பிலான செயற்பாடுகள், மருதங்கேணி கடல்நீரை நன்னீர் ஆக்கும் செயற்பாடு, கார்த்திகை மர நடுகை, அனர்த்த நிவாரண விநியோகம், உழவர் திருநாள், …
-
- 0 replies
- 645 views
-
-
ஞானசார தேரருக்கு பிணை ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இரண்டு இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் அவரை ஹோமாகம நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மேலதிக வழக்கு விசாரனையை மாதம் 23ம்; திகதி வரை ஒத்திவைக்க நீதிபதி ரங்க விஜேசிங்க உத்தரவிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/2939
-
- 1 reply
- 649 views
-
-
சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றாமல் புலிகளின் கொடியையா ஏற்றுவது? : ரணில் கேள்வி! சுதந்திர தினத்தின் போது தேசிய கொடியை ஏற்ற வேண்டாம்” என்று தேசிய தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளதை தாம் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு இடையில் புரிந்துணர்வு அரசியல் ஒப்பந்தம் இன்று அலரி மாளிகையில் நடந்தபோது, குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பின் தேசிய கொடியை ஏற்ற வேண்டாம் என கூறிய முதலாவது நபர் குறித்த தேசிய தலைவர் எனவும் …
-
- 55 replies
- 3.3k views
- 1 follower
-
-
ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுங்கள்! : உசைனிடம் கூட்டமைப்பு வலியுறுத்து! ஐ.நா வின் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைனை இன்று கொழும்பில் வைத்து சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்…
-
- 1 reply
- 278 views
-
-
பயம் போக்கப்பட்டுள்ளது: ஹுஸைன் வடக்கு மற்றும் தெற்கில் நிலவியிருந்த பயம், தற்போது போக்கப்பட்டுள்ளது என்று ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன் தெரிவித்தார். கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்வாறு தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/165652/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B3-%E0%AE%B3%E0%AE%A4-%E0%AE%B9-%E0%AE%B8-%E0%AE%A9-#sthash.C85g8q0C.dpuf
-
- 0 replies
- 300 views
-
-
டெல்லி: இலங்கைக்கு சென்றிருந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரனை மட்டும் சந்திக்கவில்லை. அவரை சந்திக்கக் கூடாது என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அவரைத் தவிர மற்றவர்களை சந்தித்துப் பேசியுள்ளார் சுஷ்மா. இது எந்த அளவுக்கு ஈழத் தமிழர்களுக்கு உதவி புரியும் என்று தெரியவில்லை. அதை விட முக்கியமாக தமிழர்களின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஆக்கப்பூர்வமாக எதுவும் விவாதிக்கப்பட்டது போலவும் தெரியவில்லை. தமிழ் மக்கள் ஓட்டுப் போட்டுத் தேர்வு செய்த விக்னேஷ்வரனை சுஷ்மா சந்திக்கவில்லை என்பதிலிருந்தே தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான ஆக்கப்பூர்வமான பேச்சுக்கள், சுஷ்மாவின் பயணித்தின்போது இடம்பெற்ற…
-
- 6 replies
- 1.1k views
-
-
வடமாகாண சபை கலைக்கப்படவுள்ளது? -எம்.றொசாந்த் மத்திய அரசாங்கத்தால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்படவுள்ளதாக எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்போது வடமாகாண சபையும் கலைக்கப்படுமா என்பது தொடர்பில் தெரியவில்லையென வட மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, வட மாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/165636/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AA-%E0%A…
-
- 0 replies
- 609 views
-
-
குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குமாம்! யாழ்ப்பாணத்தம்பி: 09 பெப்ரவரி 2016 மனித உரிமை ஆணையாளரின்டை விஜயம் வேடிக்கையாய் இருக்குதாம் கோத்தபாயவுக்கு. பின்ன இருக்காதே? அதை வைச்சும் இவரும் இனவாத அரசியல் செய்த இடமிருந்தால் அது வேடிக்கைதானே. இல்லாட்டி மனித உரிமை ஆணையாளர் என்ன மஜிக் சோ நடத்தவே வந்தவர்? அவர் வந்து நிலமையைளை பாக்கிறார். நீங்கள் ஏன் முந்திரிக்கொட்டை மாதிரி முந்தி முந்தி கூட்டம் போடுறியள்? குற்றம் உள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும். இராணுவ வீரர்கள் யுத்தக் குற்றம் இழைக்கவில்லையாம். சரி அப்ப ஏன் பயப்பிடுறியள்? குற்றம் இழைக்காட்டில் ஏன் இந்த பதற்றம்? கொழும்பிலை மீட்டிங்கை போடுறியள். கையெழுத்து வேட்டை செ…
-
- 0 replies
- 2.9k views
-
-
போரினை முடிவுக்கு கொண்டுவந்ததே நான் செய்த தவறு!;புலம்புகிறார் மகிந்த போரினை முடிவுக்குக் கொண்டு வந்ததே தாம் செய்த மிகப்பெரிய தவறாகும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். குருநாகல் பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். போரினை முடிவுக்குக் கொண்டு வந்திருக்காவிட்டால் இன்று யோசித சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கப்பட மாட்டார், நான் உள்ளிட்ட எனது குடும்ப உறுப்பினர்களுக்கு விசாரணைகள் என்ற பெயரில் நெருக்கடிகள் ஏற்பட்டிருக்காது. தற்போது ஆளும் கட்சியில் இணைந்து கொண்டுள்ள ஸ்ரீலங்கா சு…
-
- 4 replies
- 587 views
-
-
யாழில் மதுரை மல்லி... இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட மதுரை மல்லிகைப்பூ செடிகளை நாட்டும் நிகழ்வு யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவான் பகுதியில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ்நாடு வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜகதீஷன், யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஏ.நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டு மதுரை மல்லிகைப்பூ செடிகளை நாட்டிவைத்தனர். - See more at: http://www.tamilmirror.lk/165504/%E0%AE%AF-%E0%AE%B4-%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%B2-#sthash.kGlDInpF.dpuf
-
- 6 replies
- 1k views
-
-
'பரிசம்' போட்டுச் சென்றுள்ள சுஷ்மா தெய்வீகன் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ்;, கொழும்புக்கு வந்து முக்கியமான சில பேச்சுக்களில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பியிருக்கிறார். இலங்கையின் கடந்த நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக தோற்றம்பெற்றபோதும் அதன் அதன் தலைவர் இரா.சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டபோதும்கூட, எந்த அசுமாத்தமும் காட்டாமல் இலங்கையின் நகர்வுகளை மதிப்பிட்டுக்கொண்டிருந்த இந்தியா, முதன் முதலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் நேரடியாக சந்தித்துப் பேசியிருக்கிறது. தமிழ்த் தேசியக் …
-
- 2 replies
- 534 views
-
-
ஹுஸைன்- மைத்திரி சந்திப்பு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுகொண்டிருக்கின்றது. - See more at: http://www.tamilmirror.lk/165632/%E0%AE%B9-%E0%AE%B8-%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%AA-#sthash.jzTZZTpD.dpuf
-
- 0 replies
- 323 views
-