ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
புங்குடுதீவு மாணவி விவகாரம்: ஊடகவியலாளரிடம் விசாரணை எம்.றொசாந்த் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில், நீதிமன்றத்துக்கு வெளியில் வைத்து சந்தேகநபர்கள், பொலிஸார் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில், அச்செய்தியுடன் தொடர்புடைய ஊடகவியலாளர், ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (05) விசாரிக்கப்பட்டார். மாணவி கொலை வழக்கு மன்றில் நடைபெற்ற பின்னர் வெளியில் வந்த சந்தேகநபர்கள், ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கொலை செய்யப்போவதாக மிரட்டியதாக, யாழ்;ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டது. அந்தச் செய்தி தொடர்பில் விளக்கம…
-
- 0 replies
- 316 views
-
-
நெதர்லாந்தின் அதிசொகுசு பயணிகள் கப்பல் அம்பாந்தோட்டைக்கு வருகை நெதர்லாந்திற்கு சொந்தமான மிகப்பெரிய அதிசொகுசு பயணிகள் கப்பலான எம்.எஸ்.ரொட்டடம் எதிர்வரும் ஞாயிறன்று அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளது. 238 மீட்டர்கள் நீளங்கொண்ட இக்கப்பலில் 600 இற்கும் அதிகமான நிர்வாகக் குழுவினர்கள் உள்ளார்கள். இந்தியாவின் கொச்சின் துறைமுகத்திலிருந்து வருகை தரவிருக்கின்ற இக்கப்பலானது ஞாயிறு காலை 8.00 மணிக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடும். இக்கப்பலில் 1176 பயணிகள் வருகை தரவுள்ளார்கள் என அமைச்சர் அர்ஜீன ரணதுங்க தெரிவித்தார். இதற்கு முன்னர் யூரோபா 2 என்கின்ற மிகப் பெரிய பயணிகள் கப்பலே அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை …
-
- 0 replies
- 442 views
-
-
கலப்பு நீதிமன்ற கட்டமைப்பை வலியுறுத்தும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்! ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதியிடம் கலப்பு நீதிமன்றக் கட்டமைப்பை வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் சயிட் அல் ஹுசைன் மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இதன்போது, இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்ட கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் வலியுறுத்தவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. …
-
- 0 replies
- 257 views
-
-
யோஷிதவை முதலீடாக்கும் மஹிந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்த நேரத்திலும் உடையலாம் என்ற சூழல் நிலவுகின்ற கட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரான யோஷித ராஜபக்ஷவைக் கைது செய்வதற்கு அரசாங்கம் எடுத்த முடிவு சரியானதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரவலாக காணப்படுகிறது. ஏனென்றால், யோஷித ராஜபக்ஷவின் கைது. ராஜபக்ஷக்களை மூர்க்கமடைய வைத்திருப்பதாகவே தெரிகிறது. ஜனாதிபதித் தேர்தல் தோல்விக்குப் பின்னர், மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படுத்தி வந்த கருத்துக்களுக்கும் யோஷித ராஜபக்ஷவின் கைதுக்குப் பின்னர் அவர் வெளிப்படுத்தி வரும் கருத்துக்களுக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மஹ…
-
- 0 replies
- 288 views
-
-
நாட்டை வந்தடைந்தார் சுஷ்மா இலங்கை - இந்திய ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் 9ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவ்ராஜ், சற்று முன்னர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரை சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, அலரிமாளிகையில் வைத்து இன்று பிற்பகல் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/165412/%E0%AE%A8-%E0%AE%9F-%E…
-
- 0 replies
- 244 views
-
-
பதிவு செய்த நாள் : 5, பிப்ரவரி 2016 (10:44 IST) ) ஈழத்தமிழர்களை நிரந்தரக் கொத்தடிமைகளாக்க புதிய அரசியல் சட்டம்: சிறிசேனாவுக்கு வைகோ கண்டனம் இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள கண்டனம்: ’’கண்ணீராலும், இரத்தத்தாலும் எழுதப்பட்ட ஈழத்தமிழர்களின் சோக வரலாறு இன்னும் எத்தனை ஆண்டு காலம் தொடருமோ! என்று உலகத் தமிழினம் பெரும் துயரம் அடைந்திருக்கிறது. வரலாற்று காலம் தொட்டே இலங்கையின் பூர்வகுடி மக்களாக வாழ்ந்து வந்த தமிழர்களின் அடிமை விலங்கை ஒடிப்பதற்குத்தான் தந்தை செல்வா தலைமையில் முப்பது ஆண்டு காலம் அறப்போராட்டமும், மாவீரர் திலகம் பிரபாகரன் தலைமையில் முப்பதாண்டு காலம் மறப்போரும் நடந்தத…
-
- 0 replies
- 318 views
-
-
தேசிய கீதத்தை தமிழ்மொழியில் பாடுவதால் மாத்திரம் தமிழர் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டதாக கருத முடியாது Published by Rasmila on 2016-02-05 08:48:15 வரலாற்றில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 68 ஆவது சுதந்திர தினத்தில் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதற்கான இயலுமை ஏற்படுத்தப்பட்டிருந்தமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாகும். ஆனால் தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடுவதால் மாத்திரம் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டதாக கருத முடியாது. எனினும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முன்னெடுப்புகளில் இதனை ஒரு ஆரம்பமாக கொள்ளமுடியும். இதனை யாரும் இனவாத கண்கொண்டு பார்க்க வேண்டாம். இதனை அரசியல் பிரச்சினையாக மாற்றுவதற்கு ய…
-
- 0 replies
- 329 views
-
-
கடற்படையினரின் கல்வீச்சுத் தாக்குதலில் தமிழக மீனவர் பார்வையை இழந்த பரிதாபம்! [ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2016, 12:23.24 AM GMT ] தமிழக மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் கல்வீசித் தாக்கியதில், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவருக்கு இடது கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தெரியவருவதாவது, புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் முகமது மன்சூர் (42), அப்துல்லா (40), செல்வம் (38) உள்ளிட்டோர் கோட்டைப் பட்டினத்தில் இருந்து நேற்று முன்தினம் புதன்கிழமை பகலில் மீன் பிடிக்கச் சென்றனர். இந்திய எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இரவு நேரத்தில் அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் அவர்களைச் …
-
- 0 replies
- 342 views
-
-
யோசித குழந்தை என்றால் படையிலை சேத்த கோத்தபாய ஜெயிலிலை இருக்கோணும்! ஆலமரத்தடி:- 05 பெப்ரவரி 2016 அண்ணே யோசிதவுக்கு எத்தினை வயது? பத்தே? என்றபடி மூச்சிறைக்க ஆலமரத்தபடிக்கு ஓடிவந்தான் சின்னத்தம்பி. உனக்கென்ன விசரே என்றார் கந்தையா. பிறகென்ன என்ன? பாக்க நல்ல பெரிய பொடியன் மாதிரி இருக்கிறான். மீசை எல்லாம் முளைச்சுட்டுது. யோசிதவை எங்கடை வீட்டுக் குழந்தை எண்டு கோத்தபாய சொல்லுறார் என்றான் சின்னத்தம்பி. கோத்தபாயவுக்கு விசர் எண்டு கந்தையா அண்ணை சொல்லப்போறாரோ என்று ஆலமரம் மனதுக்குள் நினைத்தது. அப்பிடி அவரின்டை கண்ணுக்குத் தெரியுது. அண்ணாவின்டை பிள்ளைதானே. அது பாசமடா என்றார் கந்தையா. ஆனால் அண்ணை யோசித குழந்தையாய் தெரிஞ்ச கண்களுக்கு பாலச்சந்திரன் எப்பிடி தெரிஞ்சிருக…
-
- 0 replies
- 523 views
-
-
புலிகளின் முன்னாள் சிரேஸ்ட போராளிகள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட வேண்டும் - கோதபாய: 05 பெப்ரவரி 2016 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சிரேஸ்ட போராளிகள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட வேண்டுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களை கண்காணிப்பதற்கான சரியான பொறிமுறைமை ஒன்றை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவினை பலப்படுத்தி கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாது புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களை விடுதலை செய்வது நாட்டுக்கு பாரதூரமான பாதுகாப்பு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடுமென என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2009ம் ஆண்டு யுத்தம் நிற…
-
- 0 replies
- 339 views
-
-
750 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானம் [ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2016, 02:56.07 AM GMT ] 750 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இரட்டை பிரஜாவுரிமைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பரிசீலித்த பின்னரே இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.என்.ரணசிங்க தெரிவித்தார். இரட்டை பிரஜாவுரிமைக்காக விண்ணப்பித்தவர்களில் 3500 பேருக்கு இதுவரை இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் நடவடிக்கைகள், கடந்த மார்ச் மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. …
-
- 0 replies
- 396 views
-
-
பேஸ்புக்கில் ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வீடியோவைப் பதிவேற்றிய இருவர் குறித்து விசாரணை! [Friday 2016-02-05 07:00] ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பேஸ்புக்கில் வீடியோவை பதிவு செய்த பெண் உள்ளிட்ட இருவர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பேஸ்புக்கில் வீடியோவை பதிவு செய்த பெண் உள்ளிட்ட இருவர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிர…
-
- 0 replies
- 182 views
-
-
இலங்கை, பாகிஸ்தான், மாலைதீவு கூட்டு பயங்கரவாத தடுப்பு பயிற்சில்... 05 பெப்ரவரி 2016 இலங்கை, பாகிஸ்தான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் படையினர் பயங்கரவாத ஒழிப்பு குறித்த கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தானில் இந்தப் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு வாரங்கள் நடைபெறவுள்ள பயிற்சிகளின் போது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் கள அனுபவங்கள் தொடர்பில் மூன்று நாடுகளினதும் படையினரும் கவனம் செலுத்த உள்ளனர் பயங்கரவாத தடுப்பு குறித்து பயிற்சிகளை ஏற்பாடு செய்யுமாறு நட்பு நாடுகள்கோரி வருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. சவூதி …
-
- 0 replies
- 1.3k views
-
-
விமானங்கள் மீது தாக்குதல் நடத்த கட்டுநாயக்கவில் காணி வாங்கிய புலிகள்! [ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2016, 04:13.58 AM GMT ] விமானங்கள் மீது தாக்குதல் நடாத்த தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுநாயக்கவில் காணி கொள்வனவு செய்திருந்தனர் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையில் காணியொன்றை புலிகள் கொள்வனவு செய்திருந்தனர். தாக்குதல் நடத்தப்பட்டு பல ஆண்டுகளின் பின்னரே வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த காணி பற்றிய விபரங்களை திரட்டிய பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், அதனை அரசுடமையாக்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் காணி பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளார். …
-
- 0 replies
- 352 views
-
-
வாஸ் குணவர்தனவின் மனைவிக்கு அழைப்பாணை! மரணதண்டனை பெற்றுள்ள ஐவரையும் ஆஜர்படுத்தவும் உத்தரவு [ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2016, 04:04.55 AM GMT ] ஆபத்தான ஆயுதங்களை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கு தொடரப்பட்டிருக்கும் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி ஷியாமலி பிரியதர்ஷினி பெரேராவை எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார். தற்போது மரணதண்டனை பெற்று சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வாஸ் குணவர்தன, அவரது மகன் ரவீந்து குணவர்தன உட்பட ஐந்து கைதிகளையும் அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு நீதிவான் சிறை நிர்வாகத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். htt…
-
- 0 replies
- 202 views
-
-
புகையிலைச் செய்கைக்கு விரைவில் தடை! - விவசாய அமைச்சர் [Friday 2016-02-05 07:00] புகையிலை செய்கையை தடை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வடமத்திய மாகாணம், இபலோகமவில் அண்மையில் இடம்பெற்ற விவசாய அபிவிருத்தி திட்டமொன்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் வர்த்தக விவசாய செய்கையாக புகையிலையை பயிரிடுவதைத் தவிர்த்து, உணவுப் பொருட்கள் பயிரிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். புகையிலை செய்கையை தடை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வடமத்திய மாகாணம், இபலோகமவில் அண்மையில் இடம்பெற்ற விவசாய அபிவிருத்தி…
-
- 0 replies
- 380 views
-
-
ஜேர்மன் பெண்ணின் 28 வருடகால சுதந்திரத் தாகம் 05-02-2016 08:51 AM இலங்கையின் சுதந்திரதின வைபவத்தில் கலந்துகொள்வதற்காக இந்நாட்டுக்கு, ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் (76) கடந்த 28 வருடங்களாக வந்து செல்கிறார். பெந்தோட்டையிலுள்ள ஹோட்டலொன்றில் நடைபெறும் வைபவத்திலேயே அவர் பங்கேற்கின்றார். ஹெலன் கோல் என்ற பெயருடைய அந்தப் பெண், நரம்பு நோயினால் 18 வயது முதல் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த பல வருடங்களாக நடக்க முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளார். தற்போது சக்கர கதிரையில் இருந்தபடி தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் அவர், இலங்கைக்கு வரும்போதும் விசேட சக்கரக் கதிரையையும் கொண்டு வருகிறார். 1989ஆம் ஆண்டு முதல் ஒவ்வருடமும் இலங்கைக்கு வ…
-
- 0 replies
- 428 views
-
-
சர்வதேச நாணய நிதியத்திடம் ஸ்ரீலங்கா உதவி கோரியது [ Friday,5 February 2016, 02:46:35 ] சர்வதேச நாணய நிதியத்திடம் ஸ்ரீலங்கா உதவி கோரியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உலக வங்கியிடம் ஒரு பில்லியன் நிதியுதவி கோரப்பட்டுள்ள நிலையில் தற்போது சர்வதேச நாணய நிதியத்திடமும் உதவி கோரப்பட்டுள்ளதாக அவர் கூறினார். உள்ளக அபிவிருத்தி மற்றும் எரிபொருள் மானியம் ஆகிய தேவைகளை உள்ளடக்கி சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோரப்பட்டுள்ளது என்றும் அதற்கான பேச்சுக்கள் நடத்தப்படும் என்றும் திறைசேரி அதிகாரி குறிப்பிட்டார். சென்மதி நிலுவை பற்றாக்குறை இடைவெளி அதிகரித்துச் செல்லும் நிலையில் அதனை கையாள்வதற்கு உதவியாக புதிய பிணை மீட்புப் பொதி…
-
- 0 replies
- 370 views
-
-
தமிழ் மொழியில் தேசிய கீதம் : அரசியல்வாதி ஆர்ப்பாட்டம் (க.கிஷாந்தன்) இலங்கையின் 68 ஆவது சுதந்திர தின நிகழ்வில் தமிழ்மொழியில் தேசியகீதம் இசைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள அரசியல் வாதியொருவர் அட்டன்- கினிகத்தேனை நகரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார். அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான எலபிரிய நந்தராஜ் என்பவரே கினிகத்தேன பஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள மலசலகூடமொன்றின் மேல் ஏறி இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார். 'நல்லாட்சிக்காரர்கள் நாட்டின் சட்டத்தை மீறி தமிழிழ் தேசிய கீதம் பாடியுள்ளனர். நல்லாட்சி அரசில் சிங்களவர்களுக்கு எதிராக நயவஞ்சக அணுகுமுறை கடைபிடிக்கப்படுகின்ற…
-
- 4 replies
- 749 views
-
-
எலிசபெத் மகாராணியின் சுதந்திர தின வாழ்த்து! இலங்கை, தனது 68ஆவது சுதந்திர தின நிகழ்வை கொண்டாடுவதற்கு இங்கிலாந்து நாட்டின் அரசியலான எலிசபெத் மகாராணி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில், 'இலங்கை ஜனாதிபதிக்கு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதை எண்ணி பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். இனிவரும் வருடங்களில் இலங்கை மக்கள் சந்தோசமாகவும் அதிஷ்டம் மிக்க ஆண்டாக இருப்பதற்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை, இலங்கை வாழ் மக்களுக்கு, 68ஆவது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்' என்று குறிப்பிட்டுள்ளார். …
-
- 2 replies
- 622 views
-
-
தமிழ் மக்களுக்கு கௌரவம் அளித்துள்ளோம் : நல்லிணக்கத்தை இழிவுபடுத்த வேண்டாம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக நீண்ட வருடங்களுக்கு பின்னர் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது. இது தமிழ் மக்களுக்கு அரசாங்கம் அளிக்கும் கௌரவமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், தேசிய கீதம் தமிழ் மொழியில் இசைக்கப்பட்டமைக்கு எதிராக இனவாதிகளினால் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. அரசின் நல்லிணக்க செயற்பாடுகளை இழிவுப்படுத்த வேண்டாம் எனவும் அவர் மேலும் கோரிக்கை விடுத்தார். இவ்வாறான போராட்டங…
-
- 0 replies
- 481 views
-
-
இலங்கையின் சுதந்திர தினம்! தமிழ் மக்களுக்கு சுதந்திரமற்ற தினம்! : சிறிதரன் எம்.பி இலங்கையின் சுதந்திர தினமானது தமிழ் மக்களுக்கு சுதந்திரமற்ற தினமாகவே பார்க்கப்படுகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு அருகில் காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சங்த்தினால் இன்று காலை எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 09.00 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் நாடாளுமனற் உறுப்பினர் சிறிதரன் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிறிதரன் இவ்வாறு கூறிய…
-
- 0 replies
- 425 views
-
-
யாழ்.குடாநாட்டில் பல பாகங்களிலும் தேசியக் கொடி பறக்கிறது! இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு இன்று பல்வேறு இடங்களில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டு அனைத்து வர்த்தக, மற்றும் வியாபார, சந்தை நிலையங்கள், அரச நிறுவனங்கள், அரசார்பற்ற நிறுவனங்கள் போன்ற இடங்களில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து அரச, தனியார் கட்டடங்கள், வாகனங்கள் மற்றும் வீடுகளில் தேசியக்கொடியை பறக்க விடுமாறு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 2 replies
- 559 views
- 1 follower
-
-
சிசிலியா கொத்தலாவல கைது செலிங்கோ குழுமத்தின் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவல, கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். கோல்டன் கீ நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு பிறகு அதன் நிரந்தர வைப்பாளர்கள், தமது வைப்பு பணத்தை திருப்பிக் கேட்டபோது அவர் இலங்கையிலிருந்து தப்பிச்சென்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். அவரை கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரினால் (இன்டர்போல்) பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது. 2009ஆம் ஆண்டு இவர் இலங்கையிலிருந்து சென்ற நிலையில், இங்கிலாந்திலிருந்து கட்டார் வழியாக இலங்கைக்கு…
-
- 0 replies
- 397 views
-
-
யோசித்த ராஜபக்ச ஒரு அரசியல் கைதியா? ஒரு படை அதிகாரியாக இருந்த போதிலும், தந்தையின் பதிவிக் காலத்தின் பின்னால், ஆட்சி அதிகாரம் தமது குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்ற கனவுடன், இலங்கை சுதந்திரக் கட்சியின், இரு இளைஞர் பிரிவுகளில் (தருன்யட்ட ஹெடக், நில் பலகைய) தனது இரு சகோதரர்களுடன் சேர்ந்து கலந்து கொண்டார். இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதை கடற்படை விதிகள் தடுத்தாலும், எந்த ஒரு அதிகாரிக்கும், இது குறித்த கேள்விகள் கேட்கும் துணிவுகள் இருந்ததில்லை. சகோதரர்களுக்கு பிடித்தமான ரக்பி விளையாட்டுகளில் கூட, யோசித்த பங்குகொண்ட கடற்படை அணியே வெல்ல வேண்டும் என்பது எழுதப் படாத விதி. கடற்படையில் இல்லாத இரு சகோதரர்கள் கூட இந்த அணியில் விளையாடினார்கள். எதிர் அணி, மத்திய…
-
- 0 replies
- 564 views
-