ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
தூர்வாருமாறு இராணுவத்தைச் சொல்லவில்லை ரொமேஸ் மதுசங்க யுத்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் வடிகான்களை மூடிய இராணுவத்தினர், யுத்தத்தின் பின்னர் இந்த வடிகான்களை மீண்டும் மறுசீரமைக்குமாறு தருமாறு கூறினேனே தவிர, இராணுவத்தினரை யாழ்பாணத்தில் குப்பை கான்களை தூர்வாருமாறு கூறவில்லை என, வடமாகாண முதலமைச்சர் சி.சி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வட மாகாண சபையைக் கட்டியெழுப்புவது தொடர்பான யாழில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். யுத்தத்தின் போது, விடுதலைப் புலிகள், யாழ்ப்பாணத்தில் இருந்த வடிகான்கள் ஊடாக கிளைமோர் தாக்குதல் மற்றும் ஏனைய தாக்குதல் மேற்கொள்வதனால், இராணு வீரர்கள் ஊடாக குறித்த வடிகான்கள் அடைக்க நடவடிக்கை எடுக்கப்ப…
-
- 0 replies
- 409 views
-
-
சர்வதேச விடுமுறையாகும் வெசாக் பௌர்ணமி தினம்! [ திங்கட்கிழமை, 04 சனவரி 2016, 02:26.49 AM GMT ] இலங்கையில் பௌத்தர்களுக்கு மிகவும் முக்கியமான தினங்களில் ஒன்றாக கருதப்படும் வெசாக் பௌர்ணமி தினம், சர்வதேச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெசாக் பௌர்ணமி தினம் ஐக்கிய நாடுகள் அமைப்பில் விடுமுறை தினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் மே மாதம் 21ம் திகதி ஐக்கிய நாடுகள் அமைப்பின் விடுமுறை தினமாக ஏற்றுக்கொள்ளபபட்டுள்ளது. அண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் 193 உறுப்பு நாடுகளும் கூடிய போது, வெசாக் பௌர்ணமி தினத்தை விடுமுறையாக அறிவிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக தீபாவளி பண்டிகை, பெரிய வெள்ளி, யூதர்களின் யோமி கிப்புர்…
-
- 0 replies
- 405 views
-
-
ஐ எஸ் அமைப்பில் பல இலங்கையர் இணைந்துள்ளனர்" இலங்கையிலிருந்து சிரியாவுக்கு சென்றுள்ள பலர், இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் அமைப்புடன் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிரியாவில் ஐ எஸ் அமைப்பு பல இடங்களில் பலமாக உள்ளனர் அவ்வகையில் குறைந்தது 36 பேராவது சிரியா சென்றுள்ளது தமக்கு தெரியவந்துள்ளது என இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை செயலர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி பிபிசியிடம் தெரிவித்தார். இதில் ஆண், பெண் இருபாலாரும் அடங்குவர் எனவும வர் கூறுகிறார். இலங்கையிலிருந்து சிரியாவுக்கு சென்ற அனைவரும் இல்லையென்றாலும், அநேகர் ஐ எஸ் அமைப்பில் இணைந்துள்ளனர் எனவும் பாதுகாப்புச் செயலர் கூறுகிறார். ப…
-
- 1 reply
- 609 views
-
-
அவசர அழைப்புக்கு இலவச அம்புலன்ஸ் சேவை வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் அறிமுகம்: 04 ஜனவரி 2016 வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் முதன்முறையாக அவசர அழைப்புக்கு இலவச அம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் 06.01.2015 இந்த சேவை சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கத்தினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர நிலைமைகளில் பொதுமக்கள் இந்தசேவையை பெற்றுக்கொள்ளமுடியும். இதற்காக விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என மேலும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71…
-
- 0 replies
- 455 views
-
-
இலங்கையில் சீனாவின் சாதனையை முறியடிக்க வருகிறது அமெரிக்கா! [ திங்கட்கிழமை, 04 சனவரி 2016, 02:32.50 AM GMT ] இலங்கையின் தனித்த பெரிய முதலீட்டாளராக விளங்கும் சீனாவின் ஆதிக்கத்தை விரைவில் அமெரிக்கா தகர்த்துவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 1.4 பில்லியன் டொலர்கள் ஒதுக்கீட்டில் போட் சிட்டி திட்டத்தை ஆரம்பித்துள்ளதன் மூலம் சீனா, இலங்கையின் பாரிய முதலீட்டாளராக பரிணமித்துக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் தென்னிலங்கையில் 2.5 பில்லியன் டொலர்கள் முதலீட்டுடன் அமெரிக்கா, எரிபொருள் சுத்திகரிப்பு மையங்களை அமைக்கவுள்ளது. இந்த முதலீடுகளை அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ப்ளுர் கோப்பரேசன் உட்பட்ட நிறுவனங்கள் மேற்கொள்ளவுள்ளன. ப…
-
- 0 replies
- 403 views
-
-
முகாம்களில் வாழும் மக்களின் காணிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை என வலி.வடக்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எஸ்.சுகிர்தன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், புதிய ஆட்சி மாற்றத்தின் பின்னர் வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்கு பிரதேசங்களில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மக்கள் மீள் குடியேற அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 690 ஏக்கரே விடுவிக்கப்பட்டது. தற்போது மீண்டும் வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்கில் 690 ஏக்கர் நிலபரப்பு விடுவிக்கப்பட்டு உள்ளது. 701.5 ஏக்கர் நிலப்பரவு விடுவிக்கப்படும் என கூறப்பட்ட போதிலும் 690 ஏக்கர் நிலப்பரப்பே விடுவிக்க பட்டு உள்ளன. யாழில் உயர் பாதுகாப்பு வலயமாக 5ஆயிரத்து 710 ஏக்கர் உள்ளது. இன்னமும் வலி.வடக்கில் 5 ஆயிரத்து 500 ஏக்…
-
- 0 replies
- 429 views
-
-
வடக்கில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு http://tamil.adaderana.lk/news.php?nid=75708 2015ம் ஆண்டில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை, கடந்த 2014ம் ஆண்டை விட 10,402 இனால் அதிகரித்துள்ளது. அத்துடன் வன்னித் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை 1,705 இனால் அதிகரித்துள்ளது என யாழ்ப்பாணத் தேர்தல்கள் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2015ம் ஆண்டுக்குரிய வாக்காளர் பெயர்ப் பட்டியல் கடந்த வியாழக்கிழமை தேர்தல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம் மற்றும் வன்னித் தேர்தல் மாவட்டம் என்பவற்றில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின்…
-
- 3 replies
- 688 views
-
-
விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ரீசேட் அணிந்து வந்த தமிழ் இளைஞர்களுக்கும் பெரும்பான்மை இன இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறிய சம்பவமொன்று மத்திய கிழக்கு நாடொன்றில் இடம்பெற்றுள்ளது. மாவீரர் தினத்தன்றே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் குறித்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கு நாடொன்றில் ஒரே வேலைத்தளத்தில் பணிபுரியும் இளைஞர்களிடையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ரீசேட் அணிந்து வந்த தமிழ் இளைஞர்களை சிங்கள இளைஞர்கள் தகாத, இனத்துவேச வார்த்தைகளால் திட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி, இலங்கைக்கு திரும்பும் போது விமான நிலையத்தில் வ…
-
- 8 replies
- 963 views
-
-
மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயத்திற்குப்பட்ட கதிரவெளி விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இருந்து வரலாற்றில் முதல் தடவையாக ஒரு மாணவன் பல்கலைகழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையில் உயர்தரம் ஆரம்பித்த காலப்பகுதியில் இருந்து இவ்வருடம் முதல் தடவையாக கலைப்பிரிவில் தியாகராஜா ஜீகரன் என்ற மாணவன் மூன்று பாடங்களிலும் (புவியியல், இந்துநாகரீகம், அரச அறிவியல்) ஏ பெறுபேற்றை பெற்று பல்ககலைக்கழக தகுதி பெற்றுள்ளார். குறித்த பாடசாலையில் இருந்து இம்முறை 24 மாணவர்கள் உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். http://www.tamilwin.com/show-RUmuyBTXSWjr5G.html
-
- 1 reply
- 417 views
-
-
வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய முதியவர் மீண்டும் வெளிநாடு செல்ல மனமற்ற நிலையில் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கொக்குவில் கிழக்கில் இடம்பெற்றுள்ளது. கொக்குவில் கிழக்கு கல்லூரி வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சபாபதி பாலசுப்பிரமணியம் (வயது 80) என்பவர் கடந்த வாரம் நியூசிலாந்து நாட்டில் இருந்து மனைவியுடன் தனது வீட்டுக்கு வந்து இருந்தார். இன்று மீண்டும் கொழும்பு சென்று வெளிநாடு செல்ல வேண்டிய நிலையில், நேற்று மதியம் அயலில் உள்ள கொக்குவில் புதுக்கோவிலுக்கு சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றவர் மாலையாகியும் வீடு திரும்பவில்லை. இந் நிலையில் இவரை உறவினர்கள் அயலவாகள் தேடிய போதிலும் கண்டு பிடிக்காத நிலை…
-
- 1 reply
- 390 views
-
-
முள்ளியவளையில் வசிக்கும் 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் இருதய பலவீனத்தால் திடீர் மரணத்தை தழுவியுள்ளார். கெங்கேஸ்வரன் தீபா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, பல உயிர்களின் இறப்பை நேரில் பார்த்த காரணத்தினால் இருதயம் பலவீனமடைந்திருந்தார். அவரது கணவர் நாட்டில் சுதந்திரமாக நடமாட முடியாத காரணத்தினால் அவுஸ்திரேலியா சென்றுள்ளார். கணவனின் பிரிவும் இவரைப் பாதித்தது. இவரின் இழப்பு முள்ளியவளை மக்களை பெரிதும் கவலையடைய வைத்துள்ளது. குறித்த பெண்ணைப் போன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் பலர் திடீர் மரணத்தை தழுவுகின்றனர். அவர்களின் இறப்பு மரண அறிவித்தல்களுடன் மட்டும் முடிவடைகின்றது. இன்னும் பல…
-
- 1 reply
- 440 views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு சரியாக ஒரு ஆண்டு கழித்து, மஹிந்த ராஜபக்ச சீனாவுக்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளவிருக்கிறார். வரும் 11ம் திகதி தொடக்கம், நான்கு நாட்கள் அவர் சீனாவில் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக, மஹிந்த ராஜபக்சவின் பேச்சாளர் ரொகான் வெலிவிட்ட உறுதிப்படுத்தியிருக்கிறார். இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா வழங்கிய உதவிகளுக்கு நன்றி கூறவே அவர் பீஜிங் செல்வதாகக் காரணமும் கூறியிருக்கிறார் மஹிந்த ராஜபக்சவின் பேச்சாளர். மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது, ஏழு தடவைகள் சீனாவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார். ஆட்சியிலிருந்தபோது அவரது சீனப் பயணங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருந்து வந்திருக்கிறன. இப்போதும் கூட அவரது சீனப் பயணம் அரசியல் ம…
-
- 1 reply
- 510 views
-
-
யாழில் 5ஆயிரத்து 710 ஏக்கர் உயர்பாதுகாப்பு வலயமாக உள்ளது - குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் முகாம்களில் வாழும் மக்களின் காணிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை என வலி.வடக்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எஸ்.சுகிர்தன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், புதிய ஆட்சி மாற்றத்தின் பின்னர் வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்கு பிரதேசங்களில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மக்கள் மீள் குடியேற அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 690 ஏக்கரே விடுவிக்கப்பட்டது. தற்போது மீண்டும் வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்கில் 690 ஏக்கர் நிலபரப்பு விடுவிக்கப்பட்டு உள்ளது. 701.5 ஏக்கர் நிலப்பரவு விடுவிக்கப்படும் என கூறப்பட்ட போதிலும் 690 ஏக்கர் நிலப்பரப்பே விடுவி…
-
- 0 replies
- 410 views
-
-
புதிய தலைமுறை பௌத்த பிக்குகள் குறித்து மக்களுக்கு நம்பிக்கையில்லை – ஜனாதிபதி புதிய தலைமுறை பௌத்த பிக்குகள் குறித்து மக்களுக்கு நம்பி;க்கையில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்போது பௌத்த பிக்குகளாக துறவறம் பூணும் சிலர் தொடர்பில் பொதுமக்கள் நம்பிக்கையற்ற நிலையில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். அமரபுர நிக்காயவின் பீடாதிபதி வணக்கத்திற்குரிய தெவுல்தென்ன ஞானீஸ்ஸர தேரரரின் 100ம் பிறந்த நாளை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஞானீஸ்ஸர தேரரர் போன்ற பௌத்த பிக்குகளையே பொது மக்கள் பின்பற்றி வருவதாகத் தெரிவித்துள்hளர். எவ்வாறனெனினும் சில புதிய பௌத்த…
-
- 24 replies
- 1.2k views
- 1 follower
-
-
முகாம்களில் வாழும் 10,000 பேரிற்கு அடுத்த ஆறு மாதங்களிற்குள் வீடுகள் கட்ட நிலங்கள் வழங்கப்படும் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களின் பின்னரும் முகாம்களில் வாழும் 10000பேரிற்கு அடுத்த ஆறு மாதங்களிற்குள் வீடுகளை கட்டுவதற்கான நிலங்களை வழங்கப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இது மிகவும் இலட்சியபூர்வமான இலக்கு, எனினும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களிற்கு வீடுகளை கட்டுவதற்கான நிலங்கள் வழங்கப்படுவதை உறுதிசெய்வேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வடக்குகிழக்கில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களிற்கு மாத்திரமின்றி புத்தளத்தில் உள்ள மக்களிற்கும் இந்த வருட நடுப்பகுதிக்குள் காணிகள் வழங்கப்படும…
-
- 0 replies
- 377 views
-
-
நாளை பிரதமர் விஷேட உரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை காலை 09.30 அளவில் அலரி மாளிகையில் வைத்து விஷேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக, பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு லண்டன் சென்றிருந்த பிரதமர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளார். இவர் கடந்த டிசம்பர் 22ம் திகதி லண்டன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=75706
-
- 0 replies
- 286 views
-
-
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சரியான வழியில் செல்லாது விட்டால் மாற்று அரசியல் கட்சி உருவாகும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சரியான வழியில் செல்லாது விட்டால் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் மாற்று அரசியல் கட்சி உருவாக முடியும், அரசியலில் எதுவும் நடக்கலாம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிnறேமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளர். இன்று ஞாயிற்று கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில் தமிழ் மக்கள் பேரவை ஒரு அரசியல் கட்சியல்ல அது ஒரு இயக்கம் இதனை கண்டு எவரும் அச்சம் கொள்ளவோ, பதற்றம் அடையவோ தேவையி…
-
- 0 replies
- 478 views
-
-
தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு ஒரு மாத்திற்குள் பூர்த்தி. சுரேஸ் பிறேமச்சந்திரன் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் கௌரமாகவும், சுயாட்சியுடனும் வாழக் கூடிய வகையில் அரசியல் தீர்வு திட்டம் ஒன்றை ஒரு மாத்திற்குள் தமிழ் மக்கள் பேரவை தயார் செய்து விடும் அதற்கான பணிகள் முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிறேமச்சநதிரன் தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்று கிழமை கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள நூறு மாணவர்களுக்கு லண்டனைச் சேர்ந்த யோகானந்தம் என்பவரின் அனுசரணையில் கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர…
-
- 0 replies
- 497 views
-
-
புதிய அரசியல் யாப்பு: ஜெனீவா தீர்மானம், போர்க்குற்ற விசாரணைகளை இல்லாமல் செய்யும் [ Sunday,3 January 2016, 03:47:31 ] புதிய அரசியல் யாப்பு தொடர்பாகவும் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பான பேச்சுக்களும் தற்போது தீவிரமாக அடிபடுகின்றன. ஆனால் ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்துக்கு அமைவாக போர்க்குற்ற விசாரணை நடைபெறுமா அது சர்வதேச விசாரணையா அல்லது உள்ளக விசாரணையா என்ற பேச்சுக்கள் கைவிடப்பட்டுள்ளன. விசாரணை நடைபெறுமா என்பது கூட சந்தேகமாகவே இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். புதிய அரசியயல் யாப்பு என்று பேசப்படும்போது முக்கியமாக மூன்று விடயங்களை அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும் ஒன்று இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுக்களை…
-
- 3 replies
- 477 views
-
-
செல்வம் எம்.பிக்கு திடீர் மாரடைப்பு எஸ்.றொசேரியன் லெம்பேட் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், திடீர் மாரடைப்பு காரணமாக, ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் செய்தியை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் உறுதிப்படுத்தியுள்ளார். 'நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர…
-
- 0 replies
- 502 views
-
-
இந்தியாவில் இன்னமும் 100,000 இலங்கை அகதிகள் உள்ளனர்! ஐ.நா. தகவல் [ ஞாயிற்றுக்கிழமை, 03 சனவரி 2016, 05:44.37 AM GMT ] இலங்கையின் இனப்பிரச்சினை காரணமாக அண்டை நாடான இந்தியாவில் ஒரு இலட்சத்து 22 ஆயிரத்து 553 இலங்கை அகதிகள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரம் இதனை தெரிவித்துள்ளது. இந்தநிலையில் சுமார் 50 ஆயிரம் பேர் உள்ளகத்தில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் இருந்து கடந்த வருடம் முதல் கால்பகுதியில் 231 பேர் தாயகம் திரும்பினர். இந்தநிலையில் இலங்கை அகதிகள் தாயகம் திரும்ப ஏதுவாக இந்திய அரசாங்கம் உரிய ஊக்குவிப்புகளை வழங்கவேண்டும் என்று ஈழஅகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் தலைவர்…
-
- 0 replies
- 377 views
-
-
சிங்கத்தின் இரத்தம்! ஸ்டிக்கர்கள் விற்பனை! [ ஞாயிற்றுக்கிழமை, 03 சனவரி 2016, 05:55.07 AM GMT ] நாடளாவிய ரீதியில் ஸ்டிக்கர் மற்றும் ரீஷேர்ட் கலாசாரமொன்று அதிகரித்து வருகின்றது. "சிங்களவர்கள் சிங்கத்தின் வழித்தோன்றல்கள்" என்று பெருமை பேசும் வாசகங்களுடன் இந்த ஸ்டிக்கர் மற்றும் ரீஷேர்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. "சிங்க லே" (சிங்கத்தின் இரத்தம்) என்பதே குறித்த ஸ்டிக்கரின் வாசகமாகும். சிங்கள இனப்பற்றுள்ள அனைவரும் தமது வாகனங்களில், வர்த்தக நிலையங்களில் இந்த ஸ்டிக்கரை ஒட்டிக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளின் பின்னணியில் சிங்கள பேரினவாத சக்திகள் முழுமூச்சாக இயங்கி வருவதோடு நாட்டில் குழப்ப நிலைய…
-
- 0 replies
- 518 views
-
-
கபொத உயர்தரப்பரீட்சை முடிவுகள் வெளியீடு - தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள் [ ஞாயிற்றுக்கிழமை, 03 சனவரி 2016, 12:39.28 AM GMT ] 2015ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகள் இன்று காலை வெளியாகியுள்ளன. இந்தநிலையில் குறித்த பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளமான http://www.doenets.lk/exam/home.jsf இல் பார்க்கமுடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் 4ம் திகதி முதல் 29ம் திகதி வரை நடைபெற்ற க.பொ.த. உயர் தர பரீட்சை 2,180 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற மேற்படி பரீட்சையில் 309,069 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. க.பொ.த உயர்தரப்பரீட்சை …
-
- 2 replies
- 444 views
-
-
மனித உரிமைகள் ஆணையாளரின் ஸ்ரீலங்கா விஜயம் உறுதிசெய்யப்படவில்லை [ Sunday,3 January 2016, 05:28:14 ] ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயத் ரா-அத் அல் ஹுசைனின் ஸ்ரீலங்கா விஜயம் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணையாளரின் ஸ்ரீலங்கா விஜயம் இந்த வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னதாக அமையுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அவரது விஜயத்திற்கான திகதி இன்னமும் உறுதிசெய்யப்படவில்லை என ஆணையாளரின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயத் ரா-அத் அல் ஹுசைனின் ஸ்ரீலங்கா விஜயம் குறித்த திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும், அது தொடர்பில் ஆராயப்படுவதாகவும் அவரது பேச்சாளர் ரவினா ஷாம்டாசெனி த…
-
- 0 replies
- 396 views
-
-
கட்டுநாயக்கவில் விமானத்தின் மீது மோதியது ட்ரக்! - இறக்கை சேதம் [Sunday 2016-01-03 09:00] கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம் ஒன்றுடன் கனரக வாகனம் ஒன்று மோதியுள்ளது. சிவில் விமான சேவையின் 103வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த கனரக வாகனம், கடந்த 28ஆம் திகதி இரவு இசைக்கருவிகளை ஏற்றிச் சென்ற போது ஏ 340 விமானத்தில் மோதியுள்ளது. இதன்போது விமானத்தின் இடதுபக்க இறக்கை பாரிய சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம் ஒன்றுடன் கனரக வாகனம் ஒன்று மோதியுள்ளது. சிவில் விமான சேவையின் 103வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வின் போ…
-
- 0 replies
- 523 views
-