Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யோசித குறித்த விசாரணை அறிக்கையை மூடி மறைக்கிறது பாதுகாப்பு அமைச்சு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான, கடற்படை அதிகாரி லெப். யோசிதராஜபக்ச, தொடர்பான விசாரணை அறிக்கையை பாதுகாப்பு அமைச்சு மூடிமறைப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. கடற்படையில் இருந்தபோது, லெப்.யோசித ராஜபக்ச, கடற்படையின் விதிமுறைகளை மீறியதாக குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது பாதுகாப்பு அதிகாரியாக யோசித ராஜபக்ச பணியாற்றியிருந்தார். இதுதொடர் பாக கடற்படையின், ரியர் அட்மிரல் வெட்டவா தலைமையிலான குழு விசாரணைகளை நடத்தி, அது தொடர்பான அறிக்கையை பாதுகாப்பு அமைச்சிடம் கையளித்திருந்தது. எனினும், இந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்ப…

  2. கைத்துப்பாக்கி கோரும் எம்.பிக்கள் அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு வழங்குவதைப் போல 9 எம்.எம். வகையான கைத்துப்பாக்கி வேண்டும் என்று நாடாளுமன்றத்துக்குப் புதிதாகத் தெரிவாகியுள்ள எம்.பி.க்களில் 35 பேர் கோரியுள்ளனர். நாடாளுமன்றத்துக்குப் புதிதாக தெரிவாகியுள்ள 33 உறுப்பினர்கள் மற்றும் பெண் உறுப்பினர்கள் இருவரே இவ்வாறு கோரியுள்ளனர். இது தொடர்பில் அவர்கள், நாடாளுமன்ற சேவைகள் காரியாலயத்துக்கு எழுத்து மூல கடிதமொன்றையும் கையளித்துள்ளனர். தங்களுக்கு வழக்கவிருக்கின்ற 03.8 வகையைச் சேர்ந்த ரிவோல்வர் பழைய வகையைச் சேர்ந்ததாகும். எனவே, அந்த பழைய ரிவோல்வர் வேண்டாம். 9 எம்.எம் வகையான கைத்துப்பாக்கி வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இம்முறை நாடாளுமன்றத்துக்குப்…

  3. மட்டக்களப்பில் நேற்று சனிக்கிழமை (24) இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை இரவு 8.30 மணிமுதல் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் 182.80 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பாளர் கே. சூரியகுமாரன் தெரிவித்தார். வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையின் காரணமாக தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு மழை பெய்யும் காலநிலை காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். http://www.malarum.com/article/tam/2015/10/25/12304/கடும்-மழையால்-மட்டக்களப்பில்-இயல்பு-நிலை-பாதிப்பு.html#sthash.NBiQMLDs.dpuf

  4. போர்க்குற்றங்கள் குறித்து இலங்கையில் சாட்சியமளிக்கத் தயார்! - கலம் மக்ரே (sunday 2015.10.25 .20:00] இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில், இலங்கையில் அமைக்கப்படவுள்ள நீதிமன்றில் சாட்சியமளிக்கத் தயார் என்று சனல் 4 ஊடகவியலாளரும் பிரபல ஆவண தயாரிப்பாளருமான கெலம் மக்ரே தெரிவித்துள்ளார். சர்வதேச பங்களிப்புடன் நம்பகமான உள்ளக விசாரணைப் பொறிமுறை இலங்கையில் உருவாக்கப்பட்டால் மாத்திரமே தாம் சாட்சியமளிப்பதாக அவர் கூறியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில், இலங்கையில் அமைக்கப்படவுள்ள நீதிமன்றில் சாட்சியமளிக்கத் தயார் என்று சனல் 4 ஊடகவியலாளரும் பிரபல ஆவண தயாரிப்பாளருமான கெலம் மக்ரே தெரிவித்துள்ளார். சர்வதேச பங்களிப்புடன் நம்பகமான உள்ளக விசாரணைப் பொறிமுற…

  5. மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகள் விசாரணைக்கு அழைப்பு! [Monday 2015-10-26 09:00] ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து, மூன்று முன்னாள் கடற்படை தளபதிகளிடம் விரைவில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அட்மிரல் சோமதிலக திஸநாயக்க, அட்மிரல் ஜயனாத் கொலம்பகே மற்றும் அட்மிரல் ஜயந்த பெரேரா ஆகியோரிடமே விசாரணை நடத்தப்படவுள்ளது.ரக்ன லங்கா குறித்து தற்போது நடைபெற்றுவரும் விசாரணைகளுக்கு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில், பாரிய ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவால் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து, மூன்று முன்னாள் கடற்படை தளபதிகளிடம் விரைவில்…

  6. ஹம்பாந்தோட்டையில் சிவப்பு மழை 26-10-2015 10:12 AM ஹம்பாந்தோட்டை, அம்பலாந்தோட்டை - சியம்பலகஸ்வில பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) சிவப்பு மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதியிலுள்ள சிவப்பு மழை பெய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாக, அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/157487/ஹம-ப-ந-த-ட-ட-ய-ல-ச-வப-ப-மழ-#sthash.UbnAEPBY.dpuf

  7. போர்க்குற்றச்சாட்டு பட்டியலில் மஹிந்த, கோத்தா உட்பட 48 பேரின் பெயர்கள் [ திங்கட்கிழமை, 26 ஒக்ரோபர் 2015, 03:09.30 AM GMT ] ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படவிருந்த பிரேரணையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட 48 பேருக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்ததாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எனினும் புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு நீக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எப்படியிருப்பினும், போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு அற…

  8. விடுதலைப்புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்வது குறித்து இன்று பேச்சுவார்த்தை 26 அக்டோபர் 2015 தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்வது குறித்து இன்றைய தினம் அரசாங்கத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை எவ்வாறு விடுதலை செய்வது என்பது குறித்து இன்றைய தினம் ஆராயப்பட உள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நூற்றுக் கணக்கான தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை எந்த அடிப்படையில் விடுதலை செய்வது என்பது குறித்து பேசப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த விசேட சந்திப்பில் சட்ட மா அதிபர், சிறைச்சாலைகள் …

  9. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் இலங்கை நீதிமன்றில் சாட்சியமளிக்கத் தயார் என செனல்4 ஊடகவியலாளர் கலம் மக்ரே தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் நம்பகமான விசாரணை நடத்தினால் அதற்கு பூரண அதரவளிக்கத் தயார் எனவும், பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் தாம் சாட்சியமளிக்கப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், சாட்சியங்களை வழங்கியவர்கள் மற்றும் தம்முடன் பேசியவர்களின் விபரங்களை தாம் வெளியிடப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். சுய மரியாதையுடைய ஊடகவியலாளர்கள் எவரும் தகவல்களை வழங்கியவர்களை அம்பலப்படுத்த மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். சிறைக்குச் சென்றாலும் தகவல் மூலங்களை வழங்கியவர்களை ஊடகவியலாளர்கள் காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார். போதிய…

  10. அரசியல்கைதிகளிற்கு பொதுமன்னிப்பு வழங்கினால், படையினருக்கும் பொதுமன்னிப்பு வழங்கவேண்டியிருக்கும்: 25 அக்டோபர் 2015 தமிழ் கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் அரசாங்கம் அரசியல் கைதிகளிற்கு பொதுமன்னிப்பு வழங்காது என சட்டஓழுங்கு மற்றும் சிறைச்சாலை சீர்திருத்த அமைச்சர் திலக்மாரப்பன தெரிவித்துள்ளார். அரசாங்கம் அவர்களிற்கு பொதுமன்னிப்பு வழங்காது ஆனால் அவர்களுடைய பிரச்சினைகளிற்கு நவம்பர் மாத நடுப்பகுதிக்கு முன்னர் தீர்வை காணும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். பொதுமன்னிப்பு என எதுவும் இல்லை, நாங்கள் ஓவ்வொரு வழக்காக ஆராய்வோம், யாராவது உரிய ஆதாரங்களோ அல்லது குற்றச்சாட்டோ இல்லாமல் நீண்ட காலம் தடுத்துவைக்கப்பட்டிருந்தால் அவர்களை விடுதலைசெய்வோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். …

    • 2 replies
    • 642 views
  11. முஸ்லிம் மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­திற்கு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்­கா­விட்­டாலும் பர­வா­யில்லை. அதற்கு முட்­டுக்­கட்டை போடாமல் இருந்தால் போது­மா­னதாகும் என அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார். மீள்­கு­டி­யேற்ற அமைச்­ச­ராக நான் பதவி வகித்­த­போது, தமிழ் மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கினேன். ஆனால் இன்று முஸ்­லிம்கள் ஓரங்­கட்­டப்­ப­டு­கி­றார்கள் என்றும் அமைச்சர் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்தினம் வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற இலங்கை தொடர்­பான ஐ.நா. அறிக்கை மற்றும் அமெ­ரிக்க பிரே­ரணை தொடர்­பான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே, கைத்­தொழில் வர்த்­தக அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் இவ்­வாறு தெரி­வித்தார். அமைச்…

  12. கனடிய தேர்தல் தொடர்பாக கனடாவில் இருந்து ஊடகவியலாளர் குயின்ரஸ் துரைசிங்கம் அவர்கள், அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 23.10.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasuweb/bxy0ab5w5yoh

  13. இலங்கை கடற்பரப்புக்குள் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள். ஆனால் மீன்பிடி படகுகளும் வலைகளும் அரசு உடமையாக்கப்படும் என இலங்கை மீன் பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகின்றார். இலங்கை மீன் பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கிழக்கு மாகாணத்திற்கான 3 நாள் வீஜயமொன்றை மேற்கொண்டுள்ள அவர் இன்று ஞயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு, உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களின் ஊடுருவல்களை தடுப்பதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின்படி அப்பாவி மீனவர்களை தண்டிப்பதை விட படகுகளின் உரிமையாளர்களே தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். ''இந்திய மீன்பிடி படகுகளின் உரிமையாளர்களில் பலரும் தமிழ்…

  14. இலங்கை தொடர்பில் ஜெனீவாவிலுள்ள ஐ நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இலங்கைக்கு மிகவும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். ஜெனிவா தீர்மானம் இலங்கைக்கு ஆபத்து என்கிறார் மஹிந்த அந்தத் தீர்மானத்தின் பல பத்திகள் மிகவும் ஆபத்தானவை என அவரது அறிக்கை கூறுகிறது. அந்தத் தீர்மானத்தின் ஆறாவது பத்தியின் அடிப்படையில், போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஒரு புதிய சட்ட முறைமையை ஏற்படுத்த அரசு ஒப்புக் கொண்டுள்ளது என்றும் இதில் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், விசாரணையாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோர் பங்குபெற வழி செய்யப்படுகிறது எனவும் கூறும் அவரது அறிக்கை, இதன் மூலம் நாட்டிலுள்ள குற்றவி…

  15. இலங்கைக்கு சுப்பர்சோனிக் விமானங்களை வழங்க இந்தியா முன்வந்துள்ளது- தமிழில் குளோபல்தமிழ் செய்திகள் இலங்கைக்கு சுப்பர்சோனிக் விமானங்களை வழங்க இந்தியா முன்வந்துள்ளது- தமிழில் குளோபல்தமிழ் செய்திகள் இந்தியா உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதனது புதிய டெஜாஸ் சுப்பர்சோனிக் யுத்தவிமானங்களை இலங்கைக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளது.இலங்கையின் விமானப்படை தளபதி உயர்மார்சல் கஹான் புளத்சிங்க பாகிஸ்தானிற்கு அடுத்த மாதம் விஜயம்மேற்கொண்டு பாகிஸ்தானின் ஜெட் விமானங்கள் குறித்து ஆராயவுள்ள நிலையிலேயே இந்தியாவின் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படையின் பழைய விமானங்களிற்கு பதில் புதிய விமானங்களை வாங்குவதற்காகவே பாக்கிஸ்தானிற்கான இந்த விஜயம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி…

  16. நவீன வசதிகளுடன் மஹிந்த அமைத்திருந்த நிலத்தடி சொகுசு மாளிகை! - பரபரப்பை ஏற்படுத்தியுள்ள படங்கள் [Saturday 2015-10-24 08:00] ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகைக்கு நேற்று குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது பதவிக்காலத்தில் இந்த மாளிகையை நிர்மாணித்திருந்தார். மாளிகையை நிர்மாணிப்பதற்கான நல்லநேரத்தையும் மஹிந்தவின் ஆஸ்தான சோதிடரான சுமணதாச என்பவரே குறித்துக் கொடுத்துள்ளார். ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகைக்கு நேற்று குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது பதவிக்காலத்தில் இந்த மாளிகையை நிர்மாணித்திருந்தார். மாளிகையை நிர்மாணிப்பதற்கான …

    • 3 replies
    • 1.5k views
  17. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டதல்ல. கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் சம்பந்தம் இருந்ததாக எனக்குத் தெரியாது. கூட்டமப்பின் தலைவராகப் புலிகள் என்னைத் தெரிவு செய்யவில்லை. - இப்படி அடித்துக் கூறியிருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். கொழும்பு தெலைக்காட்சி ஒன்றுக்கு அண்மையில் வழங்கிய செவ்வியிலேயே அவர் இப்படி ஒரு புதிய தகவலை அடித்துக் கூறியிருக்கின்றார். அந்தப் பேட்டியில் அவர் கூறியவை வருமாறு:- கேள்வி:- 2001 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் அமைப்பு ஓர் ஜனநாயக ரீதியானது அல்ல என்ற காரணத்தினால் சர்வதேசம் முன்வைத்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு, விடுதலைப் புலிகள் அமைப்பு பிர…

  18. ஒரே நாளில் இருவேறு ஆலயங்கள் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்; சிலைகள் உடைப்பு இனந்தெரியாத நபர்கள் சிலர் மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய நவக்கிரக விக்கரங்களை உடைத்ததுடன், சில விக்கரகங்கள் வீதிகளிலும், ஆலய கிணற்றிலும் போட்டு விட்டு சென்றுள்ளனர். ஆலயத்தின் நவக்கிரகத்திலுள்ள விக்கிரகங்கள், ஆஞ்சநேயர், நந்தி, பலிபிடம் அடங்களாக 13 சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. வழக்கம் போல் அதிகாலை ஆலயத்திற்கு சென்ற ஆலய பரிபாலன சபைச் செயலாளர் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டு கீழே கிடைப்பதை கண்டுள்ளார். இதன்பின்னர் நிருவாக சபையினர் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனிடம் தெரியப்படுத்தியதுடன், பாராளுமன்ற உறுப்பினர் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவித்து பொலிஸார் சம்பவ …

  19. லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் முக்கிய தகவல்கள் சண்டேலீடர் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக சீ.ஐ.டியினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் தமக்கு தொலைபேசியால் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல்களை கொண்டே இந்த தகவல்களை பெறமுடிந்ததாக பொலிஸ் அதிகாரியான பி.எஸ். திஸேரா கடந்த வாரம் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார். கடந்த 21ஆம் திகதியன்று திஸேராவுக்கு காலை 7.42க்கு உத்தியோகபூர்வ கடமைக்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு செல்லும்போது இந்த அழைப்பு கிடைத்துள்ளது. தொலைபேசியின் மறுமுனையில் பேசியவர், தெளிவான சிங்களத்தில் லசந்த விக்கிரமதுங்கவின் மரணம் தொடர்பில் விசாரணை செய்வது பற்றி கேட்டுள்ளார். இதன்பின்னர் தகாத வார்த்தைகளால் மற…

  20. தனது ஆலோசனைகளின் சில பக்கங்களை அனுமதியின்றி எடுத்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முயற்சி மக்ஸ்வெல் பரணகம அறிக்கைக்கு தான் வழங்கியிருந்த சில ஆலோசனைகள் அடங்கிய பக்கங்களை சிலர் தனது அனுமதியின்றி எடுத்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கமுயன்றதாக காணமற்போனவர்கள் மற்றும் கடத்தல் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவின் சட்டஆலோசனை குழுவின் தலைவர் சேர் டெஸ்மன்ட் டி சில்வா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்தவை காணாமல் போன ஆவணங்களின் ஓரு பகுதியே. இவை எனது அனுமதியில்லாமல் பெறப்பட்டுள்ளன. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் பிரதமர் தெரிவித்த பதில் மிகச்சரியானது. நான் எழுதிய இரகசியத்தன்மை வாய்ந்த கருத்துக்களை உள்ளடக்கிய ஆவணங்கள் எனது அனுமதியில்லாமல் எடுக்கப்பட்டு பத்திரிகைகளி…

  21. பங்காளிக் கட்சிகளிடையே முரண்பாடு: தேசிய அரசாங்கத்திற்கு ஆபத்து தேசிய அரசாங்கத்தின் முக்கிய பங்காளிக் கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் மத்தியில் முரண்பாடுகள் தலையெடுத்துவருவதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கள் கட்சியை விட ஏனைய கட்சி அமைச்சர்களுக்கு கிடைத்துள்ள அமைச்சுப் பதவிகள் மற்றும் அலுவலக வசதிகள் என்பனவே இந்த முரண்பாடுகளுக்கான காரணமாகும். அத்துடன் இரண்டு கட்சி அமைச்சர்களும் மஹிந்த ராஜபக்ஷ சர்வாதிகாரத்தின் வீழ்ச்சிக்கு தாங்களே காரணம் என்று தனித்து உரிமை கொண்டாடத் தொடங்கியிருப்பதும் இந்த முரண்பாடுகளுக்கான மற்றுமொரு காரணமாகும். இவ்வாறான நிலையில் இந்த முரண்பாடுகள் மிக விரைவில் பகிரங்கமாக வெடிக்கும் அதேவேளை தேசிய அரசாங்கத…

  22. சனல் 4 தொலைக்காட்சி முன்வைத்துள்ள காணொளி ஆவணங்களை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்று காணாமல் போனோர் தொடர்பான விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார். குறித்த காணொளிகளை தமது ஆணைக்குழு ஆய்வுக்குட்படுத்தியது என தெரிவித்த அவர்,இதன் தொழில்நுட்பம் சார்ந்த விடயங்கள் குறித்து கவனத்தில் கொள்ளவில்லை எனவும் இவற்றையும் இறுதிக்கட்ட யுத்ததத்தின்போது இடம்பெற்ற சில சம்பவங்களுக்கான ஆதாரங்களாக கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். மேலும்,இவை உண்மையென்று நிரூபிக்க மேலும் ஆதாரங்கள் இருக்கக்கூடும்.எனவே,இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/157426/க-ண-ள-ஆவணங-கள-ஆய-வ-க-க-ட-பட-த-த-வ-ண-ட-ம-#sthash…

  23. தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்து புற்றுநோயால் சாவடைந்த தமிழினி தொடர்பாக தமிழ்க்கவி அவர்கள், அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 23.10.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasuweb/jxds9i4upit2

  24. யாழ்.மாவட்டத்தில் வயிற்றுளைவு அதிகரிப்பு யாழ்.மாவட்டத்தில் வயிற்றுளைவு மற்றும் வயிற்றோட்டம் ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வாராந்தம் இவ்வாறு 30 தொடக்கம் 40 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். எனவே சுட்டாறிய நீரை அருந்துமாறும், நன்கு கழுவிய பழங்களை உட்கொள்ளுமாறும் சுகாதாரப் பகுதியினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றனர். முன்னர் வயிற்றோட்டத்துக்கு வாராந்தம் 3 தொடக்கம் 4 பேர் வரையில் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது அவ்வாறு பாதிக்கப்புடுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வாராந்தம் 30 தொடக்கம் 40 பேர் வரையில் சிகிச்சை பெறுகின்றனர். அனைத்து வயதினருக்கும் இந்தப் பிரச்சினை உள்ளபோதும் மிக அதிகளவில் 5 வயதுக்குட்பட்ட சிறார்களே பாதிக்கப்படுகின்றனர் என்பது புள்…

  25. அரசியல் கைதிகள் விடுதலைக்காக தேவாலயங்களில் இன்று ஆராதனை சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வடக்கு - கிழக்கில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று விசேட ஆராதனை நடைபெறவுள்ளது. வாராந்த ஆராதனையைத் தொடர்ந்து இந்த விசேட ஆராதனை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட ஆராதனைக்கான ஏற்பாடுகளை வடக்கு-கிழக்கில் உள்ள மறைமாவட்ட ஆயர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசு பொதுமன்னிப்பில் தங்களை விடுதலை செய்யவேண்டும் எனக் கோரி, நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 12ஆம் திகதி ஆரம்பித்திருந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.