ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142551 topics in this forum
-
பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்! பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து மதிப்பாய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்செகுலரத்ன, குழுவின் அறிக்கை, பரிந்துரைகளை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வது குறித்து மதிப்பாய்வு செய்வதற்கும் பொருத்தமான சட்ட நடவடிக்கைகளை முன்மொழிவதற்கும் இந்தக் குழு அமைக்கப்பட்டதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு ஏப்ரல் 13 அன்று அறிவித்தது. பரந்த, உள்ளடக்கிய சீர்திருத்த செயல்முறையை உறுதி செய்வதற்காக, சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து உள…
-
- 0 replies
- 69 views
-
-
Nov 11, 2025 - 08:00 AM மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் அந்தநாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கை மீனவப் படகில் போதைப்பொருள் இருந்தமையை மாலைத்தீவு பொலிஸார் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். சட்டவிரோதமாக மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்த மீனவப் படகை, கடந்த 7ஆம் திகதி அந்நாட்டின் தேசிய பாதுகாப்புப் படையின் கடலோரக் காவல்படை அதிகாரிகள் கைப்பற்றினர். 'அவிஷ்க புத்தா' எனப்படும் குறித்த மீனவப் படகில் 355 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் இருந்ததாக மாலைத்தீவு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த படகில் இருந்த 5 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக மாலைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட மீனவர்கள் மற்றும் படகு தொடர்பில் மாலைத்தீவு …
-
- 1 reply
- 137 views
- 1 follower
-
-
13 Nov, 2025 | 12:26 PM மன்னார், அடம்பன் பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், எதிரி குற்றவாளியாக இனங்காணப்பட்டு, அவருக்கு 8 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தக் குற்றம், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை, மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி . எம். மிஹால் முன்னிலையில் நேற்று புதன்கிழமை (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வழக்கின் நீண்ட விசாரணைகளின் பின்னர், எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டார். எதிரி தரப்பிற்கு சார்பாக சட்டத்தரணி தினேஷன் ஆஜராகியிருந்தார். வழக்குத்தொடருநர் தரப்பிற்காக, அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் ஆ…
-
- 0 replies
- 70 views
- 1 follower
-
-
13 Nov, 2025 | 11:36 AM மன்னாரில் 20 கிராம் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்தமை தொடர்பான வழக்கில், எதிரிக்கு ஆயுள் தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தக் குற்றம், கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு, நேற்று புதன்கிழமை (12) மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம். மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கில், வழக்குத்தொடருநர் தரப்பிற்காக அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் ஆஜராகி, வழக்கினை நெறிப்படுத்தினார். எதிரி தரப்பிற்காக ஜனாதிபதி சட்டத்தரணி யு. ஆர். டி சில்வா ஆஜராகியிருந்தார். வழக்கு விசாரணையின் முடிவில், வழக்குத் தொடுநர் தரப்பி…
-
- 0 replies
- 64 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 1 13 Nov, 2025 | 08:43 AM இலங்கை, இந்திய கடற்படைகள் மற்றும் கடலோர காவற்படைகளுக்கு இடையிலான 35வது சர்வதேச கடல்சார் எல்லைக் கோடு சந்திப்பு கடந்த 11ஆம் திகதி, காங்கேசன்துறைக்கு வடக்கே உள்ள இந்தோ - இலங்கை கடல்சார் எல்லைக் கோட்டில் INS சுகன்யா கப்பலில் நடைபெற்றது. இரு நாடுகளின் கடற்படைகள் மற்றும் கடலோர காவற்படையினர் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பகிரப்பட்ட கடல்சார் சவால்களை எதிர்கொள்ள செயற்படுத்தக்கூடிய கூட்டு உத்திகளை ஆராய்வதும், உறவுகளை வலுப்படுத்துவதும் வருடாந்திர IMBL கூட்டத்தின் நோக்கமாக காணப்படுகிறது. வடக்கு கடற்படைப் பகுதியின் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தலைமையில் இலங்கை குழுவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைப் பகுதி…
-
- 0 replies
- 57 views
- 1 follower
-
-
Published By: Vishnu 09 Nov, 2025 | 10:56 PM (இராஜதுரை ஹஷான்) மத்தியக் கிழக்கில் தலைவறைவாகியுள்ள இலங்கையைச் சேர்ந்த 7 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இலங்கை பொலிஸ் அதிகாரிகளிடம் சரணடைய இணக்கம் தெரிவித்துள்ளார்கள். போதைப்பொருளுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். கொழும்பு மாவட்டச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (9) நடைபெற்ற முழு நாடும் ஒன்றாக செயற்திட்ட கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, போதைப்பொருள் ஒழிப்புக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்…
-
-
- 5 replies
- 446 views
- 1 follower
-
-
வடக்கில் போதைப்பொருள் வியாபாரம் ; பின்னணியில் இராணுவத்தினர், பொலிஸார் ; மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் இணைவு - அமைச்சர் சந்திரசேகர் 12 Nov, 2025 | 04:24 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனூடான பிரச்சினையின் பின்னணியில் இராணுவத்தினர், பொலிஸார் இருப்பதாக கூறுவதில் உண்மை இருக்கின்றது. இது மாபியாக்களுடன் தொடர்புபட்டுள்ளது. அந்த மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் இணைந்துள்ளனர் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப…
-
-
- 3 replies
- 268 views
- 1 follower
-
-
பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை ;செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி! பெண் ஒருவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கசிந்த செல்வம் அடைக்கலநாதனின் உரையாடலை தொடர்ந்து, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை பதவியில் அவர் தொடர்வதற்கு, கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கட்சியின் முக்கியஸ்தர்களில் பெரும்பாலானவர்கள், செல்வம் அடைக்கலநாதன் தாமாகவே முன் வந்து தலைமை பதவியிலிருந்து விலக வேண்டுமென வலியுறுத்தவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் , செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி தோன்றியுள்ளது. சம்பவம்தொடர்பில் மேலும் தெரியவருகையில், ரெலோவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், பெண் ஒருவர் தொடர்பில் மற்…
-
-
- 16 replies
- 1.3k views
- 2 followers
-
-
இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை மதிப்பீட்டுக்கமைய இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளது. இந்நிலையில், இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதமாகவும்,பெண்களின் எண்ணிக்கை 51.7 வீதமாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை, இலங்கையில் சனத்தொகை கூடிய மாவட்டமாக கம்பஹா மாவட்டம் பதிவாகியுள்ளது. இலங்கையில் தங்கி வாழ்வோரின் வீதம் ( 65 வயதுக்கு மேற்பட்ட ,தொழில் புரியாதோர்) 12.6 வீதமாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் மொத்த சனத்தொகை குறித்து வெளியான தகவல் ! | Virakesari.lk
-
-
- 17 replies
- 1.2k views
- 1 follower
-
-
12 Nov, 2025 | 11:55 AM கொழும்பு மேயர் வ்ராய் கெலீ பல்தசார், துணியால் கண்களை கட்டிக்கொண்டு வீதியில் நடந்துச் சென்று பார்வைக் குறைபாடுள்ளவர்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டார். இந்த விழிப்புணர்வு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பார்வைக் குறைபாடுள்ள இலங்கையின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வாவும் கலந்துகொண்டார். இதன்போது, கொழும்பு மேயர் வ்ராய் கெலீ பல்தசார், துணியால் கண்களை கட்டிக்கொண்டு வீதியில் நடந்துச் சென்றார். “நான் துணியால் கண்களை கட்டிக்கொண்டுள்ளேன், கண்பார்வை இல்லாமல் நடப்பது எப்படியிருக்கும் என்பதை நான் இப்போது புரிந்துகொள்கிறேன்," என கொழும்பு மேயர் வ்…
-
- 0 replies
- 137 views
- 1 follower
-
-
Nov 12, 2025 - 07:04 AM அடுத்த போகத்தில் இருந்து விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கை 220 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தை 150 ரூபாவுக்கும் அரசாங்கம் கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பதாக விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த நேற்று (11) பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். இதன் விளைவாக, சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை ஒரு கிலோகிராம் ரூபா 200 வரையிலும், உருளைக்கிழங்கின் விலை ஒரு கிலோகிராம் ரூபா 300 வரையிலும் உயரும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் பயிரிடும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன்வைத்து அமைச்சர் இந்தக் கொள்வனவு விலைத் திட்டத்தை வெளியிட்டார். https://adaderanatamil.lk/news/cmhvbu92101jao…
-
-
- 1 reply
- 157 views
- 1 follower
-
-
தலாவ பஸ் விபத்து-பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்! பாடசாலை மாணவர் ஒருவரின் உயிரைப் பறித்து, சுமார் 40 இற்கும் மேற்பட்ட பயணிகளுக்குக் காயங்களை ஏற்படுத்திய தலாவை, ஜயகங்க பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்துச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பஸ்ஸின் சாரதி, எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தம்புத்தேகம நீதவான் கயாத்திரி ஹெட்டியாரச்சி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன் இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, அதன் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு தம்புத்தேகம பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, விபத்துச் சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் …
-
- 0 replies
- 129 views
-
-
விசேட சோதனையில் பெருந்தொகை போதைப்பொருளுடன் அறுவர் கைது! கிரிந்த பிரதேசத்தில் பெருந்தொகையான போதைப்பொருளுடன் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவும் தெற்கு மாகாண பொலிஸ் குழுவும் இணைந்து கிரிந்த பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது பெருந்தொகையான போதைப்பொருளுடன் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து 300 கிலோகிராம்களுக்கும் அதிகமான ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் போதைப்பொருள் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1452577
-
- 0 replies
- 116 views
-
-
11 Nov, 2025 | 02:52 PM ( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) ஏழைகளுக்கு வரி விதித்து, செல்வந்தர்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் தான் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும், நாட்டு மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கும் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். அடுத்த ஆண்டாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை 50 சதவீதமளவிலேனும் நிறைவேற்றுங்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்திடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாற…
-
- 0 replies
- 85 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது , வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் மோதி விபத்துக்கு உள்ளானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ் . நகரில் பணியாற்றி வரும் நிலையில் , கடந்த 06ஆம் திகதி பணி முடிந்து , தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது , வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் மோதி விபத்துக்களான நிலையில் , படுகாயங்களுடன் , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து - இளைஞன் உயிரிழப்பு! | Virakesari.lk
-
-
- 1 reply
- 149 views
-
-
08 Nov, 2025 | 04:46 PM (பு.கஜிந்தன்) கொழும்பு கொட்டாஞ்சேனை 16ஆம் ஒழுங்கையில் நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் உட்பட இருவர் யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் வைத்து மானிப்பாய் பொலிஸாரால் இன்று சனிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, கொட்டாஞ்சேனை 16ஆம் ஒழுங்கையில் நேற்று இரவு சொகுசு காரில் வந்த குழுவொன்று, நபரொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அதே காரில் மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் 43 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப…
-
-
- 9 replies
- 701 views
- 2 followers
-
-
10 Nov, 2025 | 04:24 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வவுனியாவில் இருந்து புளியங்குளம் வரையிலான 14 புகையிரத கடவைகளில் 12 கடவைகள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சட்டவிரோத கடவைகளால் மஹவ முதல் ஓமந்தை வரையில் மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கவேண்டிய புகையிரதத்தால் குறிப்பிட்ட வேகத்தில் பயணிக்க முடியாத நிலைமை காணப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம், வடக்கு புகையிரத வீதியின் புகையிரதக் கடவைகள் தொடர்பில் எழுப…
-
-
- 4 replies
- 340 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் 1 மணி நேரம் முன் வடக்கில் நாளை தாதியர் வேலைநிறுத்த போராட்டம்! வடக்கு மாகாணத்தில் நாளை காலை முதல் 24 மணிநேரம் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படல் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்பப் பதிவு புத்தகம் பயன்படுத்தல் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முடிவுக்கு எதிராக, குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது. வேலைநிறுத்தம் நாளை 12ஆம் திகதி காலை 7 மணிக்கு ஆரம்பித்து, நாளை மறுநாள் 13ஆம் திகதி காலை 7 மணிக்கு முடிவடையவுள்ளது. இது தொடர்பில் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் வெளியிட்ட அறிக்க…
-
- 0 replies
- 136 views
-
-
யாழ்ப்பாணம் 5 மணி நேரம் முன் வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு தயாரில்லை - யாழ். மாநகரின் முதல்வர்! முறையான முன்னறிவிப்போ, தெரியப்படுத்தலோ இன்றி வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு நான் தயாரில்லை என சுட்டிக்காட்டிய முதல்வர் மதிவதனி, சதிகளின் பின்னணிகள் மூலம் போராட்டத்தில் இறங்கியுள்ள இவர்கள், வேண்டுமானால் தன்னை எழுத்துமூலமான ஆவணத்துடன் நேரடியாக வந்து சந்தித்தால் அது தொடர்பில் பரீசலிக்கலாம் என்றும் தெரிவித்தார். பொறியியலாளரது கட்டுப்பட்டிலிருந்து தம்மை விடுவித்து பிராந்திய சுகாதார சேவை அதிகாரியின் கீழ் செயற்பட அனுமதிக்குமறு கோரி யாழ். மாநகர சுகாதார சிற்றூழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போரட்டம் ஒன்றை இன்றையதினம் முன்னெடுத்தனர். யாழ். மாநகரின் மாதாந்த அமர்வு இன்றையதினம் (11) இட…
-
- 0 replies
- 161 views
-
-
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு, கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (11)குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்ததாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் மொஹமட் மிஹால் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது. இதன்போது நீதிமன்றில் ஆஜரான இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள், ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதனை பரிசீலித்த கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான், ரமித் ரம்புக்வெல்லவை குறித்த வழக்கிலிருந்து 50…
-
- 0 replies
- 128 views
-
-
11 Nov, 2025 | 04:12 PM யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. ஆயிரம் போதை மாத்திரைகளும் இரண்டு கிலோ 420 மில்லிகிராம் கஞ்சா கலந்த மாவாவும் இதன்போது கைப்பற்றப்பட்டது. இருபது வயது மதிக்கத்தக்க குறித்த சந்தேக நபர் கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக உடுவிலில் கைது செய்யப்பட்டவரின் உறவினர் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரை மானிப்பாய் பொலிஸார் ஊடாக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மானிப்பாயில் போதை மாத்திரைக…
-
- 0 replies
- 94 views
-
-
பாராளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஷ, டி.வி. சானக, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் திங்கட்கிழமை (11) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமல் சிரிபால டி சில்வா செயலாளர் துமிந்த திஸாநாயக்கவுடன் லசந்த அலகியவன்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா, சாமர சம்பத் தசநாயக்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இருதரப்பினரும் கலந்துரையாடிய பின்னர், நாமல் ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில், 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் தொடர்பாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் நாங்கள் கலந்துரையாடினோம். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த இடத்திற்கு வந்து, அரசு நடத்தும் ஏமாற்று நடவட…
-
- 0 replies
- 99 views
-
-
11 Nov, 2025 | 04:17 PM நவம்பர் 27 நினைவு நாளை கொண்டாட ஒற்றுமையாக வாருங்கள் இல்லையேல் இரு தரப்பினருக்கும் நல்லூர் பகுதி நிலம் வழங்கப்படாது என முதல்வர் மதிவதனி தெரிவித்துள்ளார். யாழ். மாநகரின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற நிலையில் நல்லூர் மேற்கு வீதியில் இருக்கும் காணி நிலத்தில் நினைவேந்தல் செய்வதற்கு வழங்குவது தொடர்பில் விவாதிக்கப்பட்டது. இதன்போது சைக்கிள் கட்சி மற்றும் மான் கட்சி ஆகியனயார் நினைவேந்தலை குறித்த இடத்தில் நடத்துவது என்று கடும் வாதப் பிரதிவாதம் நடைபெற்றது. குறிப்பாக சைக்கிள் கட்சிக்கு மட்டும் நினைவேந்தல்கள் செய்யும் உரிமை கிடையாது. அனைத்து தமிழ் தேசித கட்சிகளுக்கும் அதனை நினைவேந்த உரிமை உண்டு. இதே நேரம் வருடா வருடம் சைக்கிள் கட்சி தரப்பினரே …
-
- 0 replies
- 73 views
-
-
11 Nov, 2025 | 03:35 PM வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால், அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பினால் ஆறு சிறுவர்களின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் நால்வர் முற்றாக பார்வையிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் கண் மருத்துவ நிபுணர் எம். மலரவன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கண்களில் கல் போன்ற பிறபொருட்கள் உட்புகும்போது அதற்கு முலைப்பாலையோ, சேவலின் குருதியையோ கண்களில் விடவேண்டாம். இதை செய்வதால் கிருமித் தொற்று காரணமாக நிரந்தரமாக பார்வை இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. அத்தோடு மயிர்க்கொட்டி தாக்கம் காரணமாக கண்கள் பாதிக்க…
-
-
- 2 replies
- 175 views
- 1 follower
-
-
புதியதாக நியமிக்கப்பட்ட தொல்லியல் ஆலோசனைக் குழுவில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த எந்த பிரதிநிதிகளும் இடம்பெறவில்லை என அரச வர்த்தமானி அறிவிப்பில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த 19 பேர் கொண்ட குழுவில் சக்திவாய்ந்த புத்த சமயத்தை சேர்ந்த மூத்த பிக்குகள் மற்றும் தெற்கு பகுதியைச் சேர்ந்த சிங்கள கல்வியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் Dr Hiniduma Sunil Senevi, 1998ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட தொல்லியல் சட்டம் (அத்தியாயம் 188) பிரிவு 39 “A” கீழ் இந்த குழுவை நியமித்து, நவம்பர் 1 ஆம் தேதியிட்ட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். இக்குழுவின் காலவரம்பு 10.03.2025 முதல் 09.03.2027 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குழுவில் நியமிக்கப்பட்டுள்ளவர்கள்…
-
- 2 replies
- 204 views
-