Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்ப்பாண சம்பவங்களுக்கு பொலிசாரும், அமைச்சர் ஜோன் அமரதுங்கவுமே பொறுப்பு! - சுசில் பிரேம் ஜயந்த [Wednesday 2015-05-27 19:00] புங்குடுதீவு மாணவியின் கொலைக்கு பின்னர் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் பொது அமைதிக்கான அமைச்சர் ஜோன் அமரதுங்க உட்பட பொலிஸார் பொறுப்பு கூறவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சட்டம் ஒழுங்கான முறையில் செயற்படாமையினாலே வடக்கில் இவ்வாறான வன்முறை ஏற்படுவதற்கான காரணம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.co…

  2. எதிர்வரும் 3ஆம் திகதி அவசரமாக கூடுகிறது நாடாளுமன்றம்! [Wednesday 2015-05-27 18:00] அரசியலமைப்புச் சபைக்கு நியமிக்கப்படவுள்ள சிவில் சமூகத்தைச் சேர்ந்த மூவரின் பெயர்களை அங்கீகரிப்பதற்காக எதிர்வரும் 3ஆம் திகதி புதன்கிழமை விசேட நாடாளுமன்ற அமர்வொன்றுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. அடுத்த நாடாளுமன்ற அமர்வை எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் திகதி நடத்த ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அவசர நடவடிக்கைக்காக அத்தினத்துக்கு முன்னர் நாடாளுமன்ற அமர்வை நடத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என பிரதி சபாநாயகர் மேலும் கூறினார். நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்துக்கமைய நியமிக்கப்படவுள்ள அரசியலமைப்புச்…

  3. பொதுத்தேர்தலை சனிக்கிழமை நடத்த தேர்தல் திணைக்களம் விருப்பம்! [Wednesday 2015-05-27 19:00] பொதுத்தேர்தல் சனிக்கிழமை நடத்தப்பட்டால் உசிதமாக இருக்கும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சனிக்கிழமை தேர்தல் நடத்தப்படுவதனையே தேர்தல் திணைக்களம் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் குறித்து அரசாங்க அதிகாரிகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சனிக்கிழமை தேர்தலை நடத்தினால் அரச மற்றும் தனியார் ஊழியர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க சந்தர்ப்பம் ஏற்படும். ஜனாதிபதி பாராளுமன்றை கலைக்காவிட்டால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரையிலேயே இந்த பாராளுமன்றிற்கான பதவிக் காலம் காணப்படுகிறது. முன்கூட்டிய தே…

  4. திருமலையில் உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்! [Wednesday 2015-05-27 19:00] கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் கடமை நிறைவேற்று உதவிக் கல்வி பணிப்பாளர்களாக பணியாற்றும் அதிகாரிகள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டார்கள்.இரண்டு வருடங்களுக்கும் மேலாக நாங்கள் கடமை நிறைவேற்று உதவிக் கல்வி பணிப்பாளர்களாக சேவையாற்றி வருகின்றோம். கடந்த வருடம் எமக்கு நிரந்தர வாய்ப்பு வழங்குவதற்காக மத்திய கல்வி அமைச்சில் நேர்முக பரீட்சை நடத்தப்பட்டு எமது விபரங்கள் உறுதி செய்யப்பட்டது. ஆனால் இன்று வரை எமக்கு நிரந்தர பணிப்பாளர்கள் பதவிக்கான கடிதங்கள் வழங்கப்படவில்லை. எமக்கான நிரந்தர நியமனத்தை துரிதப்படுத்த வேண்டும். என்பதை வ…

  5. காணாமற்போனோர் குறித்த விசாரணைக்கு உதவ கொழும்பு வருகிறது ஐ.நா குழு! [Wednesday 2015-05-27 19:00] காணாமற் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் செயற்குழு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகிஷினி கொலோன் தெரிவித்துள்ளார். யுத்த கால ஆட்கடத்தல் மற்றும் காணாமல் போனோர் தொடர்பில் உதவி வழங்கும்படி முன்னைய அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, பலவந்தமாக கடத்தப்பட்ட அல்லது காணாமல் போக செய்யப்பட்டமைக்காக விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே இந்த குழு இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்த இந்த குழு, காணாமல் போனதாக கூறப்படுவோர் எங்கு உள்ளனர் என கண்டறிவதோடு, காணாமல் போனவர…

  6. பேச்சுக்களின் போது தேசம் என்ற நிலையினை வலுவிழக்கச் செய்யாதீர்கள்! - கூட்டமைப்பிடம் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வேண்டுகோள்! [Wednesday 2015-05-27 19:00] பேச்சுக்களின் போது தேசம் என்ற நிலையினை வலுவிழக்கச் செய்யாதீர்கள்! உரிமைகளை வெல்லும்வரை தமிழ் மக்களின் தார்மீகக் கோபத்தைத் தணிக்க முயலாதீர்கள்!! கூட்டமைப்பிடம் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வேண்டுகோள்! - சிறிலங்கா அரசுடன் பேசிப் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும் எனக் கருதி பேச்சுக்களில் ஈடுபடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், இவ் வேண்டுகோளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கும் உலகத் தமிழர் பேரவையிடமும் முன்வை…

  7. குடாநாட்டில் சில்லறைகளுக்கு தட்டுப்பாடு : ஜெயசேகரம் சுட்டிக்காட்டு பெற்றோல் செற், பேருந்துகளில் ரிக்கற் மற்றும் கடைகளில் பொருட்களை வாங்கும் நுகர்வோருக்கு மிச்சக் காசுகள் கொடுக்கப்படுவதில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.அது உண்மை தான் அதற்கு காரணம் குடாநாட்டில் போதியளவு சில்லறைக்காசுகள் இல்லை என்று வணிகர் சங்கத் தலைவர் ஜெயசேகரம் சுட்டிக்காட்டினார். நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில், கடைகள்,மற்றும் பேருந்துகளில் மிச்சக் காசுகள் கொடுக்கப்படுவதில்லை என்று மக்களால் குற்றஞ்சாட்டப்படுவது உண்மை .ஏனென்றால…

    • 8 replies
    • 487 views
  8. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக, நீதிபதி எம்.இளஞ்செழியன் பிரதம நீதியரசர் கே.சிறிபவனால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் சுண்டுக்குழி பாடசாலை மாணவி கிருஷாந்தி கொலை வழக்கில் முன்வைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், ஆரம்பிக்கப்பட்ட செம்மணி புதைகுழி வழக்கில் யாழ்ப்பாணத்தில் விசேட நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு, 1999 இலிருந்து 2000 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தில் இவர் கடமையாற்றியிருந்தார். அதன் பின்னர் 3 வருடங்கள் மன்னார் மாவட்ட நீதிபதியாகவும், பின்னர் 2008 ஆம் ஆண்டு வரையிலான கொடுமையான யுத்த காலத்தில் வவுனியா மாவட்ட நீதிபதியாகவும், நீதிபதி இளஞ்செழியன் கடமையாற்றியிருந்தார். அதனையடு…

  9. பார்வையற்றவர்களுக்கான விசேட நூலகம் திறந்து வைப்பு யாழ்ப்பாணம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் அனுசரணையில் யாழ். பொது நூலகத்தில் பார்வையற்றவர்களுக்கான விசேட நூலக அலகு இன்று திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் சம்பிரதாயபூர்வமாக பார்வையற்றவர்களுக்கான நூலகத்தை ஆரம்பித்து வைத்தனர். யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்தின் தலைவர் அற்புதராஜ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணமும் சிறப்பு விருந்தினராக யாழ் மாநகரசபை ஆணையாளர் பிரணவநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=325984054127201677#sthash…

  10. யாழ்ப்பாணம் நாரந்தனை வடக்கு தம்பாட்டி பகுதியில் 23 வயது இளைஞனால் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு வந்த 13 வயதுச் சிறுமியொருவர், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய செவ்வாய்க்கிழமை (26) மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் கூறினர். தாயும், தந்தையும் பிரிந்து வாழ்ந்து வருவதால் குறிப்பிட்ட சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வருகின்றார். இந்தச் சிறுமிக்கு அதேயிடத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். இது தொடர்பில் சிறுமியின் பாட்டி சிறுவர் பாதுகாப்பு சேவையின் அவசர இலக்கத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார். அவர்கள் இது தொடர்பில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்…

    • 0 replies
    • 763 views
  11. இருப்பதை இல்லை என்றும், இல்லாததை இருகின்றது என்று சொல்லும் ஒரு மனநோயால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவதிப்படுகிறார். இவருக்கு இன்று உடனடியாக மனோ வைத்தியம் தேவைப்படுகிறது. நாட்டின் எந்த பகுதியிலும் இன்று பறக்காத புலிக்கொடிகளை பறப்பதாக இவர் கூறுகிறார். இது இன்று இவர் கண்களுக்கு மாத்திரம் தெரிகிறது. 19ம் திருத்தத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் குறைக்கப்பட்டதை தவிரவேறு எதுவும் கிடையாது என்றும் இவர் கூறுகிறார். அங்கே நாம் உருவாக்கியுள்ள பதினோரு சுயாதீன ஆணைக்குழுக்களும் இவருக்கு தெரியவில்லை. சிங்கள மக்கள் மத்தியில், தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதத்தை தூண்டிவிட்டு ஆட்சியை பிடிக்கலாம் என்று மகிந்தர் கனவு காண்கிறார். ஆகவே பதவி ஆசை பித்து பிடித்து போய் நமது இந்த ஆட்சி மாற…

    • 0 replies
    • 510 views
  12. வடக்கு மாகாணசபைக்கு கூடுதல் நிதி தேவை! - ஜனாதிபதியிடம் கோரிக்கை [Wednesday 2015-05-27 08:00] எமது மாகாணம் கடுமையாக போரினால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, வட மாகாணசபைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கையை முன்வைத்ததாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆளுநர் இல்லத்தில் முதலமைச்சருடனும் பேச்சுநடத்தியிருந்தார். அந்த பேச்சுகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வடமாகாண ஆளுநர் கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு…

  13. பொலிஸாருடன் நெருங்கிய தொடர்பை பேணிய சுவிஸ் குமார்! - [Wednesday 2015-05-27 12:00] புங்குடுதீவில் மாணவி கொலைசெய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் சுவிஸ் குமார் என்றழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் . இவர் ஆரம்பத்தில் கைதுசெய்யப்பட்டு பொலிஸாருக்கு நன்கு அறிந்தவர் என்ற அடிப்படையில் விடுவிக்கப்பட்டமையானது யாழில் பதற்றம் ஏற்பட காரணமாக அமைந்திருந்த தாக விசேட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.மாணவியின் கொலை தொடர்பில் ஆரம்பத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதன்பின்னர் கொலையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சுவிஸ் குமார் உட்பட 6 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். எனினும் சுவிஸ் குமார் மட்ட…

  14. வெதுப்பகங்களில் அவிச்ச றோஸ் பாண் விற்கத் தடை வெதுப்பகங்களில் அவிச்ச றோஸ் பாண் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக உணவு பரிசோதகர் பார்த்தீபன் தெரிவித்தார். நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். வெதுப்பகங்களில் பாணில் பல வகைகள் உண்டு.றோஸ் பாண் வேறு.அவிச்ச றோஸ் பாண் வேறு. றோஸ் பாணில் நீர்த்தன்மை வெளியேறி இருப்பதுடன் நன்றாக வெதுக்கப்பட்டு முறுகியிருக்கும்.ஆனால் அவிச்ச றோஸ் பாணில் நீர்த்தன்மை அதிகமாக இருக்கின்றது.நீர் வெளியேறுவது கடினம்.ஆனால் சிலர் அவிச்ச ஸோஸ் பாணையே விரும்புகின்றனர். எனினும் அவிச்ச றோஸ் பாண் விற்கத்தடை விதித்திருந்த போதிலும் ந…

  15. மருந்தகங்களில் விலைப் பட்டியல் அவசியம் என்கிறார் :பார்த்தீபன் மருந்தகங்களில் விலைப்பட்டியில் போடப்பட்டிருக்க வேண்டும் .அவ்வாறு போடப்படாமல் இருப்பதால் வறிய குடும்பத்தினரும் அதிக விலைகளில் மருந்துகளை பெற்றுக் கொண்டு செல்லக்கூடிய சாத்தியம் உருவாகின்றது.உணவு மற்றும் மருந்து பரிசோதகர் பார்த்தீபன் தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலிலே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர், மருந்தகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஒரு சிலர் பணக்காரர்களாகவும்,ஒரு சிலர் வறியவர்களாகவும் இருப்பர்.ஆனால் சில மருந்தகங்களில் மருந்துகள் கொள்வனவு எப்படியிருப்பது என்றால் குறைந்த விலையில் மருந்துகள் இருப்பினும் விற்பனையாளர்கள் நான்கு மருந்துகளை வெவ்வேறு விலைகள…

  16. ஆர்ப்பாட்டங்களுக்கு மல்லாகம் நீதிமன்றமும் தடைவிதிப்பு ஆர்ப்பாட்டங்கள் , ஊர்வலங்கள் , நடைபவனிகள் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மல்லாகம் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சுன்னாகம் நகர்ப்பகுதியில் போராட்டம் ஒன்றினை நேற்று நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையிலேயே நீதிமன்றத்தினால் தடை உத்தரவ பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமாதானத்திற்கு சீர்குலைவு , மக்களுக்கு குழப்பம் ஏற்படும் என சுட்டிக்காட்டி சுன்னாகம் பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு நீதிமன்றத்தினால் இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் 14 நாள்களுக்கு எதுவித போராட்டங்களையும் மேற்கொள்ள முடியாது என்றும் அறிவித்துள்ளது. இதனையடுத்து போராட்டமும் நிறுத்தப்பட்டமை குறி…

  17. கற்றலுக்கான சூழல் தனியார் கல்வி நிறுவனங்களில் காணப்பட வேண்டும் தெல்லிப்பழை சுகாதார வைத்திய பணிமனைக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளரிற்கு தெல்லிப்பழை சுகாதார வைத்திய பிரிவினரும் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தின் தேசிய சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தரும் இனைந்து கருத்தரங்கொன்றை நடாத்தியிருந்தனர். இது தொடர்பாக தெல்லிப்பழை சுகாதார வைத்திய பணிமனை வட்டாரங்கள் தெரிவிப்பதாவது, குறித்த கருத்தரங்கில் கல்வி நிலையங்களின் அமைப்பு முறை மாணவர்களது ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு என்பன தொடர்பாக அறிவுறுத்தப்பட்டது. இதன்படி கல்வி நிறுவனமொன்றின் சுற்று சூழல் டெங்கு நோய் மற்றும் எனைய நோய்கள் ஏற்படதா வகையில் காணப்பட வேண்டும். நிறுவனத்தின் நான்கு புற எ…

  18. சீனா புறக்கணிக்கணக்கப்பட்டுள்ளதான கருத்துக்களை வெளிநாட்டமைச்சு நிராகரிப்பு சீனா புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களை நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேசினி கொலொன்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். புதிய அரசு பதவிக்கு வந்தபின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளதை சுட்டிக்காட்டிய பேச்சாளர் சீனா புறக்கணிக்கப்பட்டுள்ளதாக எவராலும் கூறமுடியாது எனத்தெரிவித்தார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=631764053727124478#sthash.4HtHIlNc.dpuf

  19. பஸிலின் பிணை மனு நிராகரிப்பு; தொடர்ந்து விளக்கமறியல் நீடிப்பு! முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷவுக்கு அடுத்த மாதம் 10 ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடுவெல நீதிமன்ற நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். பஸில் ராஜபக்‌ஷ உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்கள் இன்று பிணை மனுக் கோரினர். எனினும் பிணைமனுக்களை நிராகரித்து நீதிவான் விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தார். இதன்படி பஸில் ராஜபக்‌ஷ, நிஷால் ஜெயதிலக்க மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆர்.கே.கே.ஏ.ரணவக ஆகியோரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=639434053827689065#sth…

  20. யாழ் .குடாவிற்கு மூன்றாண்டுக்குள் மருதங்கேணியிலிருந்து நன்னீர் ; வடக்கு நீர்ப்பாச அமைச்சர் யாழ்.குடாநாட்டு மக்களின் நீர்த்தேவையினை பூர்த்தி செய்வதற்கு முதலாவது மாகாண சபைக்கு உட்பட்ட காலத்திலேயே கடல் நீரை நன்னீராக மாற்றும் திட்டம் மருதங்கேணியில் செயற்படுத்தப்படும் என வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். மருதங்கேணியின் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தினால் சூழலுக்கும் , மீன்பிடிக்கும் பாதிப்பு ஏற்படும் என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதனால் குறித்த பகுதி மக்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். எனவே அவர்களுக்கான சந்தேகங்களை நீக்கி திட்டத்தை ஆரம்பிக்கும் வகையில் அமெரிக்காவில…

  21. யுத்தத்தின் போது சில குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் இவை திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுவே தமது தெளிவான நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அப்போது தாம் குற்றமற்றவர் என்பதனை நிரூபித்துக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் ஒட்டுமொத்தமாக யுத்கத் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என்பதனை உத்தரவாதத்துடன் குறிப்பிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் இராணுவத் தளபதியாக கடமையாற்றிய காலத்தில் பாலியல் வன்கொடுமைகள், சித்திரவதைகள் இடம்பெறவில்ல…

    • 1 reply
    • 467 views
  22. [ செவ்வாய்க்கிழமை, 26 மே 2015, 08:27.31 PM GMT ] ஆட்சி மாற்றத்தின் பின்னர் பல திருப்பு முனைகள், கைதுகள், விசாரணைகள் என்று நடந்திருந்தாலும், நாடு பழமையை, பழைய சிந்தனையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகின்றது. மேற்குலகின் விருப்பத்திற்குரிய ஆட்சி இலங்கையில் நிறுவப்பட்டாலும், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் தமிழர்கள் விரும்பும்படியான நிகழ்வுகள் நடந்ததாக இல்லை. ஆட்சி மாற்றத்தின் பின்னர் நடந்த முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று 18ஐ அகற்றி 19வது சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது தான். 19வது சீர்திருத்தம் பற்றி பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும், பல ஆய்வாளர்களின் கருத்துக்களை ஊடகங்களில் வந்திருந்தாலும், சில யதார்த்தத்தை இதுவரை எவரும் முன்வைக்கவில்லை என்பது தான் உண்மை.…

    • 2 replies
    • 757 views
  23. கிளிநொச்சி மணியங்குளம் பகுதியில் கசிப்பு காய்ச்சும் நடவடிக்கை அண்மைக்காலமாக அதிகளவில் இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் கிளிநொச்சி பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எட்மன் மகேந்திரா தெரிவித்திருந்தார். கசிப்பு காய்ச்சும் மற்றும் விற்பனை செய்யும் இடங்களை பொதுமக்கள் அடையாளப்படுத்தி தரும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார். மணியங்குளம் அலகரைப் பகுதியிலுள்ள பற்றைக்காடுகள…

    • 0 replies
    • 385 views
  24. ஒஸ்ட்ரியாவின் விமான நிலையத்தின் ஊடாக இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டவிரோதமான முறையில் கடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வியன்னா விமான நிலையத்தின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்களே இவ்வாறு சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெருமளவிலான இலங்கையர்கள் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு இலங்கையர்கள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வியன்னா விமான நிலையத்தில் கடமையாற்றி வந்த 13 தனியார் பாதுகாப்பு ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. ஜீ4எஸ் என்னும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் …

    • 0 replies
    • 491 views
  25. மட்டக்களப்பு, துறைநீலாவணைக் கிராமத்தில் சோழ இளவரசி சீர்பாததேவியின் சிலை திங்கட்கிழமை (25) திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது. துறைநீலாவணை இளைஞர் அமைப்பின் தலைவர் எம்.சதீஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ரி.கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (படங்கள்: வா.கிருஸ்ணா, வடிவேல் சக்திவேல்) http://www.tamilmirror.lk/146867#sthash.zHuvK9yd.dpuf

    • 0 replies
    • 467 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.