ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
"தமிழர் பாரம்பரிய நிலங்கள் இராணுவத்தினரின் பங்களிப்புடன் எவ்வாறு சிங்கள மயமாக்கப்படுகின்றது என்பதை முல்லைத்தீவின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிடுமாறு சுவிற்சர்லாந்தின் தூதுவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்." - இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த சுவிற்சர்லாந்து தூதுவர் தோமஸ் லிப்ரென் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே இந்த வேண்டுகோளை அவர் விடுத்தார் இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து இராணுவம் இருப்பதால் பொதுமக்களின் வாழ்க்கைக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் இராணுவத்தினரால் பொருளாதார, சமூக விருத்…
-
- 0 replies
- 618 views
-
-
ஐ.நா நிபுணர் குழுவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டது? ஆங்கில நாளிதழ் செய்தி ! [Thursday, 2014-06-26 11:07:17] சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா நிபுணர் குழுவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் படி, இந்த விசாரணைகள் தொடர்பாக, வரும் செப்ரெம்பர் மாதம் நடக்கவுள்ள பேரவையின் 27வது அமர்வில் வாய்மூல அறிக்கையையும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள பேரவையின் 28வது அமர்வில் விரிவான அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும். சிறிலங்கா அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாவிட்டாலும், இதுபோன்ற ஏனைய சந்தர்ப்பங்கள…
-
- 1 reply
- 855 views
-
-
ஆஸி.வழங்கிய நன்கொடை சிங்கள மாவட்டங்களுக்கு news ஆஸ்திரேலிய அரசால் நன் கொடையாக வழங்கப்பட்ட 25 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் நிதி, வடக்கு கிழக்குடன் தொடுகையாகவுள்ள 4 சிங்கள மாவட்டங்களின் 22 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சிங்களப் பிரதேச சபை களுக்கு தலா 50 மில்லியன் ரூபாய்களும், வடக்கு கிழக்கின் 79 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தலா 15 தொடக்கம் 20 மில்லியன் ரூபாய்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. உலக வங்கியின் நிதியில் வடக்கு கிழக்கிலுள்ள பிரதேச மேம்பாட்டுக்காக நெல்சிப் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. மக்கள் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தச் செயற்றிட்டம் 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண…
-
- 0 replies
- 370 views
-
-
ஆசி அரசு இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிய இரண்டாவது ரோந்துப் படகு கொழும்புத் துறைமுகத்தில்! [Thursday, 2014-06-26 10:43:57] அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிய இரண்டாவது ரோந்துப் படகு நேற்று கொழும்புத் துறைமுகத்தை அடைந்திருக்கிறது. இந்தப் படகு துறைமுகத்தை அடைந்த சமயத்தில், இதற்கு கடற்படையின் பாரம்பரியங்களுக்கு அமைய வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய கடற்படைத் தளபதி ஜயநாத் கொலம்பகே, இது இலங்கை கடற்படையின் வரலாற்றில் மிகவும் முக்கியமான தினம் என்றார். அவுஸ்திரேலிய அரசாங்கம் அன்பளிப்பாக வழங்கிய படகு 38 மீற்றருக்கு மேலான நீளமும், 2.3 மீற்றர் அகலமும் கொண்டது. இது 24 கடல் வேகத்தில் பயணிக்கக் கூடியதாகும். கடந்தாண்டு பொதுநலவாய நாடுகளின் இ…
-
- 0 replies
- 327 views
-
-
இறுதி யுத்தத்தின் போது, இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் அங்கம் வகிக்கும் மூவரின் பெயர்களை ஜ.நா வெளியிட்டுள்ளது. பின்லாந்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மார்டி அதிசாரி, நியுஸிலாந்தின் முன்னாள் ஆளுனரும் நீதிபதியுமான சில்வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தானின் தலைமை நீதிமன்றத்தின் முன்னாள் தலைவரான அஸ்மா ஜஹாங்கீர் ஆகியோரின் பெயர்களை ஐ.நா அறிவித்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/115694-2014-06-25-12-41-01.html
-
- 2 replies
- 786 views
-
-
The MP went onto say that this communalistic group was being led by Kapila Hendrawitharana, secretary to Gotabhaya Rajapaksa, and its key coordinator is Suresh Salley, a Malay, and State Inteligence Service chief DIG Wagista is also involved. http://lankaenews.com/English/news.php?id=14310
-
- 0 replies
- 670 views
-
-
நாட்டின் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அரசியல் நோக்கத்திற்காக செயற்படவில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் சமகால விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இன்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். புலனாய்வுத் துறை அதிகாரிகள் தமது கடமைகளுக்கு அப்பால் அரசியல் நோக்கோடு ஒருபோதும் செயற்படவில்லை. அவ்வாறு அவர்கள் செயற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுக்கிறேன். எமது நாட்டின் தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பாரிய அச்சுறுத்தல்கள் ஏற்படும் வகையில் தேசிய ப…
-
- 0 replies
- 384 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற யுத்த வெற்றி விழா நிகழ்வுகளில் கலந்து கொள்ளாத சுவிட்சர்லாந்து நாட்டுக்கு தமிழ் மக்கள் சார்பாக வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் நன்றி தெரிவித்துள்ளார். யுத்தத்திற்கு பின்னர் வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் அறிந்து கொள்ளும் நோக்குடன் இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் இன்று காலை யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். இவ்வாறு விஜயம் மேற்கொண்டவர்கள் காலை 11மணிக்கு வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானத்தை சந்தித்து கலந்துரையாடினர். அதன்போதே தூதுவருக்கு நன்றி தெரிவித்தார். அதன்படி 2009 ஆம் ஆண்டு பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாட்டில் சுதந்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசினால் அறிவிக்கப்பட்டு 5ஆம் ஆண்டு யுத்த வெற்றியினை கொண்டாடும் நிகழ்வு…
-
- 0 replies
- 481 views
-
-
சிந்தனைக்கூடம் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தின் குழுநிலைக் கலந்துரையாடலின் பின்னரான அறிக்கை. - தொகுப்பு (ஓய்வுநிலைப் பேராசிரியர் இரா. சிவசந்திரன், பணிப்பாளர், சிந்தனைக்கூடம்) சிந்தனைக்கூடம் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தின் குழுநிலைக் கலந்துரையாடலின் பின்னரான அறிக்கை. தொகுப்பு (ஓய்வுநிலைப் பேராசிரியர் இரா. சிவசந்திரன், பணிப்பாளர், சிந்தனைக்கூடம்) அண்மைக் காலத்தில் யாழப்பாணத்து மக்களுடைய குடிநீர்ப் பிரச்சினை பற்றிப் பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இவற்றினை தொகுத்து பின்வரும் முக்கிய விடயங்களை வரிசைப்படுத்தலாம். யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீர் பல்வேறு காரணிகளால் குடிநீர் பயன்பாட்டிற்கு உகந்ததற்றதாகி வருகின்றது. யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீரை…
-
- 0 replies
- 880 views
-
-
அதற்கான கடிதங்களும் அனுப்பி வைக்கப்பட்டன:- வட மாகாண சபையின் உறுப்பினர்கள் சிலருக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்படுவதாக வடக்கு மாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸ் அறிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான பொலீஸ் பாதுகாப்பு வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லை எனக் குறிப்பிட்டு வட மாகாண சபையின் மூன்று உறுப்பினர்களுக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸ் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். அதன்படி, “தங்களது பாதுகாப்புக்காக பொலிஸ் உத்தியோகத்தர்களைப் பெற்றுக் கொடுப்பதற்காக சட்டம் மற்றும் ஒழுங்கு சம்பந்தமான அமைச்சின் மூலம் அனுமதி பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். எனது பதவி நிலைக்குரிய அதிகார எல்லையின் பிரகாரம் தங்களுக்க…
-
- 0 replies
- 471 views
-
-
அமெரிக்காவுக்கான தூதராக பிரசாத் காரியவசம்; ஒபாமாவையும் சந்திப்பாராம்! அமெரிக்காவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பிரசாத் காரியவசம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை எதிர்வரும் 14 ஆம் திகதி சந்தித்துப் பேசவுள்ளதாக வாஷிங்டனிலுள்ள இலங்கைத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.இந்தியாவுக்கான இலங்கையின் தூதுவராகக் கடமையாற்றிய பிரசாத் காரியவசம் அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவராக கடந்த வாரத்தில் நியமிக்கப்பட்டார். அமெரிக்காவில் இலங்கையின் தூதுவராகப் பணியாற்றிய ஜாலிய ஜெயசூரியவின் இடத்துக்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தன்னுடைய நியமனப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதியை ஜூலை 14 ஆம் திகதி பிரசாத் காரியவாசம் சந்திக…
-
- 1 reply
- 463 views
-
-
-க.ருத்திரன்,எம்.எம்.அனாம் மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச அலுவலகத்தை வாகரை, அம்பந்தனாவெளிக் கிராமத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று புதன்கிழமை திறந்துவைத்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாகரை பிரதேச அமைப்பாளரும் மீள்குடியேற்ற பிரதி அமைச்சரின் இணைப்பாளருமான எஸ்.பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அதிதிகளாக நகர அபிவிருத்தி அமைச்சின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பேர்டி பெரேரா, மீள்குடியேற்ற பிரதி அமைச்சரின் இணைப்பாளர் பொன். ரவீந்திரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத்தொகுதி அமைப்பாளர்…
-
- 0 replies
- 248 views
-
-
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை விபத்திற்குள்ளான சிறுவன் ஒருவனின் மூளை இறந்துள்ளது. இந்த நிலையில், செயற்கை சுவாசம் அளித்து வருவதாக வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய கலாநிதி கு.அகிலேந்திரன் தெரிவித்தார். கிளிநொச்சியை சேர்ந்த எஸ்.மதுசன் (வயது 6) கொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற பேருந்தில் பயணித்துள்ளார். இந்தப் பேருந்து தாண்டிக்குளம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு முன்பாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், பேருந்திலிருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்டபோது அதே திசையிலிருந்து வந்த வாகனம் ஒன்று இந்தச் சிறுவனை மோதியது. இதில் காயமடைந்த சிறுவனை வவுனியா பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்த…
-
- 0 replies
- 404 views
-
-
-செல்வநாயகம் கபிலன் வலி.கிழக்குப் பிரதேச சபையின் புதிய தவிசாளர் துரைசிங்கம் கணபதிப்பிள்ளை தலைமையில் இன்று புதன்கிழமை (25) இடம்பெற்ற மாதாந்தக் கூட்டம் பெரும் கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் ஒத்திவைக்கப்பட்டது. புதிய தவிசாளராக நியமிக்கப்பட்டவர் வெறும் 800 விருப்புகள் மட்டும் பெற்றவர் எனவும், அவரை விட அதிகமாக நவரத்தினம் ரூபராஜ் என்பவர் 2632 விருப்பு வாக்குகள் பெற்றவர் என்றும் அவரைத் தவிசாளாராக நியமித்திருக்க வேண்டும் என உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். 21 உறுப்பினர்களைக் கொண்ட மேற்படி சபையில் 5 உறுப்பினர்கள், தவிசாளருக்கு ஆதரவாகவும் ஏஞ்சியவர்கள் எதிராகவும் இன்றைய (25) சபை அமர்வில் செயற்பட்டனர். (16 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 5 ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்…
-
- 0 replies
- 289 views
-
-
கொலைகார கோத்தபாய கைது உறுதி - அமெரிக்க சட்டப் பேராசிரியர் அறிவிப்பு! ஜூன் 25, 2014 தமிழ்த் தலைவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் சரணடைந்தவுடன் அவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக கொலை செய்யும்படி கோத்தபயா இராசபக்சே உத்தரவிட்டதற்கு சாட்சியங்கள் உள்ளன. விடுதலைப்புலிகளுக்கு எதிரானப் போரில் எப்படியும் வெற்றிபெறுவதற்காக அப்பாவி பொதுமக்களை வேண்டுமென்றே கொலை செய்ய தான் ஒருபோதும் தயங்கப்போவதில்லை என பலமுறை அவர் கூறியுள்ளார் என பேராசிரியர் ரைடன் குட்மேன் கூறியுள்ளார். கோத்தபயாவுக்கு எதிராக ஏராளமான சாட்சியங்கள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். நியூயார்க் பல்கலைக் கழகத்தின் சட்டக்கல்லூரியில் இவர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மேலும் கூறுகையில் "அமெரிக்கா…
-
- 3 replies
- 1.1k views
-
-
புலிகளுக்காக கதைப்பதற்கு வெட்கப்படுகிறாராம் சம்பந்தன்!? வணக்கம் பாருங்கோ எப்பிடி இருக்கிறியள்? எங்கட நாட்டில பிரச்சினை இல்லாத நாளில்லை எண்டது போல நாளுக்கு நாள் ஏதோ ஒரு பிரச்சினை இருந்துகொண்டு தான் இருக்குது பாருங்கோ, என்ன இருந்தாலும் தங்கட எசமானர்கள் சிங்களத் தலைவர்கள் எண்டு அவையின்ர வாலப்பிடிச்ச முஸ்லிம் தலைவர் மார் தங்கட தலையில கையை வைச்சுக்கொண்டு யோசிக்கிற அளவுக்கு நிலைமை மாறியிருக்குது.. அத நினைக்க சந்தோசப்படவும் முடியல்ல வேதனைப் படவும் முடியல்ல ஏன் எண்டால் பாருங்கோ தலையிடி காய்ச்சல் தனக்குத் தனக்கு வந்தால் தான் தெரியும் எண்டு தெரியாமலேயே எங்கடை ஆக்கள் அந்த நாளில சொன்னவை. இதுக்கிடையில எங்கட கூட்டமைப்புக்கார ஐயாக்களின்ர அட்டகாசமும் ஓயாமல் நடந்து கொண்டே இருக்குது…
-
- 2 replies
- 993 views
-
-
இலங்கையில் பொது பல சேனாவினால் இஸ்லாமியத் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழத்து விடப்பட்டுள்ள தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக கனடாவின் தலைநகர் ரொறன்ரோவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த கண்டன - எதிர்ப்பு ஆர்ப்பட்டத்தை இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து கனடவில் வசிக்கும் தமிழ் மக்களும், இஸ்லாமிய தமிழ் மக்களும் இணைந்து நேற்று ஞாயிறன்று நடாத்தினர். ஸ்காபுரோ நகரின் செப்பார்ட் - மார்க்கம் சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது அதிருப்தியையும் - எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். கனடாவில் இஸ்லாமிய தமிழர்கள், ஈழத்தமிழர்களுடன் இணைந்து நடத்திய - இலங்கை அரச அடக்குமுறைககு எதிரான - முதல் நிகழ்வாக இது பதிவாகியுள்ளது. …
-
- 21 replies
- 1.4k views
-
-
அல் ஜசீரா ஊடகவியலாளரை கைது செய்யுமாறு அரச ஊடகம் கோரிக்கை 25 ஜூன் 2014 அல் ஜசீரா ஊடகவியலாளரை கைது செய்யுமாறு அரச ஊடகமொன்றின் செய்தி ஆசிரியர் கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்க ஊடகமான டெய்லி நியூஸ் ஊடகத்தின் செய்தி ஆசிரியர் ராஜ்பால் அபேயநாயக்க இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.இலங்கையில் இன, மத வன்முறைகளைத் தூண்டும் வகையில் செய்தி அறிக்கையிட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார். அல் ஜசீரா ஊடகத்தின் கொழும்பு செய்தியாளராக தினுக்கொலம்கே என்பவர் கடமையாற்றி வருகின்றார்.பிழையான செய்தி அறிக்கையிடல்களில் கொலம்பே ஈடுபட்டுள்ளதாகவும் அவரை கைது செய்து தண்டிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். டுவிட்டர் ஊடாக இந்தக் குற்றச்சாட்டை ராஜ்பால் அபேயநாயக்க தெரிவித்துள்ளார். உயிரிழப்பு த…
-
- 0 replies
- 445 views
-
-
தமிழரசுக்கட்சியின் முயற்சி வெற்றி! கூட்டமைப்பு பதிவு விவகாரம் முடிவுக்கு வருகிறது!? 2015 ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடைபெறும் என பேச்சடிபடுகின்ற நிலையில், நீதிமன்ற உத்தரவு காரணமாக அதற்கு முன்னர் புதிய கட்சிகள் எதனையும் பதிவு செய்ய முடியாது எனத் தேர்தல்கள் திணைக்களம் கைவிரித்து விட்டது. அதேசமயம், இன, மத, ரீதியிலான பிளவுகளை வெளிப்படுத்தி நிற்கும் ‘தமிழ்’, ‘முஸ்லிம்’, ‘ஹெல’ போன்ற சொற்களுடன் புதிய கட்சியைப் பதிவு செய்வதற்கு விண்ணப்பிப்பதைத் தவிர்க்குமாறும் தேர்தல் திணைக்களம், புதிய கட்சிகளைப் பதிவுசெய்ய விண்ணப்பிப்போருக்கு அறிவுறுத்தல் வழங்கவிருக்கின்றதாம்! இந்த அறிவுறுத்தலுக்கு அமைவாக, மேற்படி சொற்களைக் கொண்ட – ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட – கட்சிகளும் தமது பெயர்க…
-
- 0 replies
- 408 views
-
-
இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டு உத்தியாக இராணுவப் பிரசன்னம் – வீரகேசரி! எங்கும் இராணுவம், எதிலும் இராணுவம் என்பதுதான் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டு உத்தியாக இருக்கின்றது. முப்பது வருடங்களாகத் தொடர்ந்திருந்த யுத்தத்தை இந்த அரசாங்கம் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. அது ஒரு பெரிய சாதனையாகப் பதிவாகியிருக்கின்றது. அந்த சாதனைமிக்க யுத்த வெற்றிக்காகப் பயன்படுத்தப்பட்ட இராணுவத்தையும், அதன் புலனாய்வுச் செயற்பாடுகளையும் அரசாங்கம் தனது சுயலாப அரசியல் செயற்பாடுகளுக்கு முழு அளவில் தந்திரோபாய ரீதியில் பயன்படுத்தி வருவதைக் காண முடிகின்றது. உள்ளுரிலும் சர்வதேச மட்டத்திலும், இந்த நடவடிக்கை பரந்த அளவில் மேற்கொள்ளபட்டு வருகின்றது. இதன் காரணமாகவே எங்கும் இராணுவம், எத…
-
- 0 replies
- 456 views
-
-
புதன், ஜூன் 25, 2014 - 08:48 மணி தமிழீழம் | வேந்தன் சிறிலங்கா புதிய ஜெட் போர் விமானங்கள், ரேடர் , ஏவுகணை கொள்வனவு சிறிலங்கா விமானப்படை புதிய ஜெட் போர் விமானங்களைக் கொள்வனவு செய்யும் முயற்சியில் இறங்கவுள்ளது. சிறிலங்கா விமானப்படையில் உள்ள கிபிர் மற்றும் மிக் -27 போர் விமானங்கள் நீண்டகாலம் சேவையாற்றி விட்டதால், அவற்றை நீக்கி விட்டுப் புதிய விமானங்களை கொள்வனவு செய்வது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. 10வது இலக்க ஸ்குவாட்ரனில் உள்ள கிபிர் போர் விமானங்கள் 1996ம் ஆண்டு இஸ்ரேலிடம் இருந்து வாங்கப்பட்டவையாகும். 12வது இலக்க ஜெட் ஸ்குவாட்ரனில் உள்ள மிக் 27 விமானங்கள் 2000ம் ஆண்டு ரஸ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டன. இவை நீண்டகாலம் போர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவை என்ப…
-
- 0 replies
- 540 views
-
-
புலிகளைப் போற்றிப் புகழ்ந்த மல்லாவி சிறீலங்கா காவல்துறையினன் ஜூன் 25, 2014 “புலிகள் முப்பது வருடம் பாடுபட்டு வளர்த்ததை நீங்கள் மூன்று வருடத்தில் நாசமாக்கிப்போட்டியள்” என்று வன்னிக் காடழிப்புச் செயற்பாட்டைப் பார்த்து சிங்களக் காவல்துறையினர் ஒருவர் கூறிய சம்பவம் முல்லைத்தீவு மல்லாவியில் இடம்பெற்றுள்ளது. குறித்த காவல்துறையினன் புலிகள் தொடர்பாக வைத்திருக்கும் நன்மதிப்பை இது குறித்து அறிந்த மல்லாவி மக்கள் மெச்சியுள்ளனர் என்று சங்கதி24 இன் முல்லைத்தீவுச் செய்தியாளர் தெரிவித்தார். யுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிக் காடுகளில் உள்ள பெருமளவான மரங்கள் வெட்டப்பட்டு தென்னிலங்கைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. வன்னியில் உள்ள படையினரும் இந்த வி…
-
- 0 replies
- 684 views
-
-
பேருவளையில் முஸ்லிம் வர்த்தக நிலையம் பெற்றோல் குண்டுவீச்சில் தீக்கிரை! - நேற்றிரவு சம்பவம். [Wednesday, 2014-06-25 07:31:07] News Service பேருவளை - அம்பேபிட்டிய சந்தியில் உள்ள முஸ்லிம் ஒருவரின் வர்த்தக நிலையம் நேற்றிரவு தீக்கிரையாகியுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த வர்த்தக நிலையத்தில் தீப்பற்றியதா அல்லது தீ வைக்கப்பட்டதா என்பது குறித்து தெரியவரவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்த தீ விபத்துச் சம்பவத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் மற்றும் புத்தகங்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையமே தீக்கிரையாகியுள்ளது. கடையின் பின்பகுதி கதவு உடைக்கப்ப…
-
- 0 replies
- 700 views
-
-
போர் இழப்புகள் குறித்த தொகை மதிப்பீட்டு அறிக்கை மூன்று வாரங்களில் அரசாங்கத்திடம் கையளிப்பு! [Wednesday, 2014-06-25 08:02:28] போர் இழப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தொகை மதிப்பீட்டு அறிக்கை மூன்று வாரங்களில் அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்கள பணிப்பாளர் டீ.சி.ஏ.குணவர்தன தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமையவே இந்த தொகை மதிப்பீடு முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர் சில வரையறைக்குட்பட்டே வடக்கு, கிழக்கு பகுதிகளில் இது தொடர்பான தொகைமதிப்பீடு முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்தார். அவர் யுத்தத்தினால் இறந்தவர்கள், காணாமல் போனவர்கள், அங்கவீனமுற்றோர் குறித்தும் ஏற்பட்ட சொத்து இழப்புக்கள் குறித்தும் தொகை மதிப்பு புள்ளிவிபரவியல…
-
- 0 replies
- 412 views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது அதிகாரமிக்க சகோதரரான பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும் பொது பல சேனவின் செயலகத்திற்கு இரண்டு தடவைகள் இரு வேறு நிகழ்வுகளுக்காகச் சென்றிருந்தனர். இவ்வாறு சென்னையை தளமாகக் கொண்ட The Hindu ஆங்கில நாளேடு எழுதியுள்ள ஆசிரியத் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், தற்போது மீண்டுமொரு தடவை சிறிலங்கா வாழ் முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தென்சிறிலங்காக் கரையோரத்தில் காணப்படும் சுற்றுலா மையங்கள் உள்ள இடங்களில் பெரும்பான்மை பௌத்த சிங்களவர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இந்த வன்முறைச…
-
- 5 replies
- 808 views
-