Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பில் ஹிருணிக்காவுக்கு 1 இலட்சத்து 39 ஆயிரம் விருப்பு வாக்குகள்! – உதய கம்மன்பிலவை பின்தள்ளினார். [Monday, 2014-03-31 10:01:50] கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட்ட ஹிருணிக்கா பிரேமச்சந்திர அதிக விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார். இதன்படி அவர் 139,034 விருப்பு வாக்குகளையும் உதய கம்மன்பில 115638 வாக்குகளையும் உபாலி கொடிகார 478222 வாக்குகளையும் ஜோகர் செனவிரத்ன 44011 வாக்குகளை பெற்ற அதேவேளை மல்ஷா குமாரதுங்க 43324 வாக்குகளை பெற்றுள்ளார். இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ்.எம்.மரிக்கார் 67243 விருப்பு வாக்குகளையும் மஞ்சு ஶ்ரீ அரங்கல 45654 வாக்குகளையும் முஜீபர் ரஹூமன் 42126 வாக்குகளையும் நிரோஷன் பதுக்க 338…

  2. ஐநாவில் இந்திய நிலைப்பாட்டின் எதிரொலி: இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி 30 மார்ச் 2014 இலங்கைக் கடற்படையினர் இனிப்பு - மென்பானம் வழங்கி மீனவர்களை உபசரித்தனர்:- ஐநாவில் இந்திய நிலைப்பாட்டின் எதிரொலி: இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இன்றைய தினம் கச்சத்தீவிற்கு அருகாமையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் அன்பாக உபசரித்தனர் என தெரிவிக்கப்படுகிறது. கச்சத்தீவிற்கு அருகாமையில் மீன்பிடிக்க அனுமதித்ததுடன் இலங்கைக் கடற்படையினர் இனிப்பு மற்றும் மென்பா…

  3. வன்னியில் யுவதிகளை கட்டாய இராணுவத்தில் சேர படையினர் வலியுறுத்தல் - குளோபல் தமிழ் செய்தியாளர்:- புலிகளின் கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பின் போது கதறியவர்கள் இப்போ மௌனித்திருப்பது ஏன்? இலங்கை இராணுவத்தின் கட்டாய ஆட்சேர்ப்;பில் இணைந்து கொள்ள மறுத்த யுவதி ஒருவரின் சகோதரனை இராணுவம் வலுக்கட்டாயமாகப் பிடித்து சென்ற நிகழ்வொன்று இன்று முல்லைதீவின் முள்ளியவளை பகுதியில் நடந்துள்ளது. ஜந்திற்கும் அதிகமான வாகனங்களில் சென்ற இராணுவப்புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களே முள்ளியவளை தண்ணிரூற்று கணுக்கேணி பகுதியினைச் சேர்ந்த 28 வயதுடைய பாலச்சந்திரன் விஜயரூபன்- என்பவரை பிடித்து சென்றுள்ளனர். குடும்பஸ்தரான இவர் கைது செய்யப்பட்ட வேளை அங்கு நின்றிருந்த மற்றொரு உறவினனான 25 வயதுடைய சதன் என்பவரும் …

  4. வவுனியா, மாமடு குளத்தில் படகு கவிழ்ந்து உயிரிழந்த மூவரில் ஒருவர், இளம் பெண் ஊடகவியலாளர் என அடையாளங் காணப்பட்டுள்ளார். வவுனியா, செட்டிகுளத்தை பிறப்பிடமாகவும் பட்டக்காடை வசிப்பிடமாகவும் கொண்ட பிரகாஷ் ஜான்ஸி (வயது 26) என்ற பெண் ஊடகவியலாளரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர், இலங்கை இதழியல் கல்லூரியில் கடந்த 2010 ஆம் ஆண்டு அச்சு ஊடகத்தில் கல்வி பயின்று பின், தினகரன் மற்றும் சுடரொளி ஆகிய பத்திரிகைகளில் ஊடகவியாளராக பணியாற்றியுள்ளார். திருமணம் முடித்து நான்கு மாதங்களே ஆன நிலையில் இவர் படகு விபத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/105244-2014-03-31-09-11-24.html வவுனியா மாமட…

    • 0 replies
    • 533 views
  5. வடக்கு கிழக்கு சிறுவர் சிறுமியரில் பலருக்கு கண்களில் உபாதை? 31 மார்ச் 2014 வடக்கு கிழக்கைச் சேர்ந்த சிறுவர் சிறுமியரில் பலருக்கு கண்களில் உபாதை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல சிறுவர் சிறுமியர் கண் தொடர்பான நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. எனவே குறித்த இரண்டு மாகாணங்களினதும் வைத்தியசாலைகளுக்கு கண் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுகப்பட்டு வருவதகாத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவ மாணவியர் கண் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாகாணங்களின் வைத்தியசாலைகளது வசதிகள் …

  6. பனை அபிவிருத்தி சபையினால் நாளை செவ்வாய்க்கிழமை (01) முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரையான காலப்பகுதி 'கித்துள் வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்தார். இந்தக் காலப்பகுதியில் கடந்த கால யுத்தத்தினால் அழிந்து போயுள்ள எமது செல்வமான பனைமரங்களின் விதைகளை நாட்டுதல், பனம் பொருட்கள், கித்துள் பொருட்களை சந்தைப்படுத்தல் சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பொதுமக்களிடம் இவற்றைப்பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறினார். இதேவேளை, திவிநெகும வாழ்வெழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சி பிரதேசத்தில் பனை அபிவிருத்திச் சபையின் பயிற்சிகளைப் பெற்ற 98 பயனாளிகளுக்கு தலா 10,000 ரூபா பெறுமத…

    • 0 replies
    • 506 views
  7. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களை தடை செய்வதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் செயற்பட்டு வரும் புலி ஆதரவு அமைப்புக்களை தடை செய்வதற்கான முனைப்புக்கள் முன்னெடுக்கப்பட உள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள் பல்வேறு பெயர்களில் இயங்கி வருவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வாறான அமைப்புக்கள் குறித்த நாடுகளின் அரசியல் கட்சிகள் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதுடன், இலங்கைக்கு எதிராக சர்வதேச அரங்குகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே, புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் நிறுவனங்களை தடை செய்வ…

  8. சரிகிறது ஆளும்கட்சியின் செல்வாக்கு! – தேர்தல் முடிவுகள் குறித்து அரசியல் நோக்கர்கள் கருத்து. [Monday, 2014-03-31 09:13:32] மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டிருந்தாலும் அதன் வாக்கு வீதமும், ஆசனங்களும் குறைந்திருப்பது என்பது இலங்கை அரசு மீதான அதிருப்தி அதிகரித்து வருவதை குறிப்புணர்த்துவதாக தினக்குரல் செய்தியாசிரியர் கேஆர்பி ஹரன் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். 2009ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடும் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது 12 ஆசனங்களைக் குறைவாகப் பெற்றுள்ளது, ஐக்கிய தேசிய கட்சியும் இரண்டு ஆசனங்களைக் குறைவாகப் பெற்றுள்ளது, ஆனால் ஜேவிபி உறுப்பினர்களின் எண்ணி…

  9. தேர்தல் வெற்றி நாட்டுக்கு எதிராக செயற்படும் சக்திகளுக்கு சிறந்த பதிலடி! – என்கிறார் ஜனாதிபதி [Monday, 2014-03-31 09:48:38] மேல் மற்றும் தென் மாகாணசபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கிடைத்த பாரிய வெற்றியானது , பொதுமக்களுக்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு மக்கள் வழங்கிய சிறந்த சான்று என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தாய்நாட்டுக்கு எதிராக செயற்படும் சக்திகளுக்கு இது சிறந்த பதிலடி என ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தவொரு சக்திக்கும் நாட்டின் தேவைகளை தோல்வி அடைய செய்ய முடியாது. சர்வதேச அழுத்தங்களுக்கு மக்கள் இடமளிக்க போவதில்லை என்பதனை இந்த மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. …

  10. "இலங்கை ராணுவத்தினரால் சுடப்பட்டு இறந்த மற்றும் காயம் அடைந்த மீனவர்கள் எவரும் இதுநாள் வரை இல்லை" என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விண்ணப்பத்திற்கு, மீன்துறை இயக்குநரகம் விளக்கம் அளித்துள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் தே.ராஜீ. இவர் ராமநாதபுரம் மாவட்ட கடல் எல்லையில் இலங்கை ராணுவத்தினரால் 1947 முதல் 2013 ஆம் ஆண்டு வரை சுடப்பட்டு இறந்த மீனவர்களின் எண்ணிக்கை, காயம்பட்ட மீனவர்களின் பெயர், அவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகை, மீனவர்களை சுட்ட இலங்கை ராணுவத்தின் மீது இந்திய அரசு எடுத்த நடவடிக்கை ஆகியவற்றை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்களைத் திரட்ட முயற்சித்தார். இதற்காக தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன்படி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விபர…

  11. 2016ஆம் ஆண்டுவரை என்னிடம் ஜனாதிபதி தேர்தல் பற்றி கேட்காதீர்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை (29) தென் மாகாணத்தின் டி.ஏ.ராஜபக்ஷ மகாவித்தியாலயத்தில் தனது வாக்கினை பதிவுசெய்ததன் பின்னர், ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மேற்படி கூறியுள்ளார். மக்கள் இப்பொழுது புலனாய்வு தகவல்கள் பற்றியெல்லாம் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம். மக்கள் ஜனநாயகத்தினை விரும்புகிறார்கள். ஆகையினால், அவர்களின் எதிர்பார்ப்பு ஒருபோதும் வீண்போகாது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். தனது வாக்கினை பதிவு செய்ததன் பின்னர், வாக்களிக்க வந்தவர்களிடமும் நட்புரீதியில் ஜனாதிபதி உரையாடியமை குறிப்பிடத்தக்கது. http://ta…

  12. கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய மேல் மாகாண சபை மற்றும் காலி,மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாகாண சபை ஆகிய இரண்டு சபைகளுக்குமான போனஸ் ஆசனங்களை உள்ளடக்கிய ஆசனங்களின் விபரங்கள் பின்வருமாறு மேல் மாகாண சபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -1,363,675 ஆசனங்கள்- 56 ஐக்கிய தேசியக்கட்சி -679,682 ஆசனங்கள்- 28 ஜனநாயகக்கட்சி 203,767 ஆசனங்கள் -09 மக்கள் விடுதலை முன்னணி 156,208 …

  13. ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகர் உதய கம்மன்பிலவை மேல் மாகாண முதலமைச்சராக நியமிக்கும் கோத்தாபய ராஜபக்சவின் திட்டம், தோல்வியில் முடிந்துள்ளது. மேல் மாகாணசபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஆளும்கட்சியின் முதன்மை வேட்பாளராக உதய கம்மன்பில் நிறுத்தப்பட்டிருந்தார். இவருக்கு கோத்தாபய ராஜபக்சவின் முழு ஆதரவு இருந்தது. உதய கம்மன்பிலவின் தேர்தல் பரப்புரையை கோத்தாபய ராஜபக்சவே ஆரம்பித்து வைத்ததுடன், அதிக விரும்பு வாக்குகளை அவருக்கு அளித்து முதலாவதாகத் தெரிவு செய்ய வேண்டும் என்றும் வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். அரசு அதிகாரியான கோத்தாபய ராஜபக்ச வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக பரப்புரை செய்தது சர்ச்சையாக உருவெடுத்த போது, தனது தவறுக்காக தேர்தல் ஆணையாளரிடம் வருத்தம் தெரிவித…

  14. இலங்கைக்கு வந்து விசாரணைகளை நடத்துவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு அனுமதி மறுக்கப்படுமானால், வெளிநாடுகளிலிருந்து இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஆணையாளர் அலுவலகம் விசாரணை மேற்கொள்ளும் என்று ஜெனிவா தரப்புக்கள் தெரிவித்துள்ளன இவ்வாறு கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் 2002 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையில் இடம் இலங்கை பெற்ற பெரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள், போர்க் குற்றங்கள் தொடர்பில் பரந்தளவிலான விசாரணைகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மேற்கொள்வதற்கான அனுமதியை கடந்த வாரம் ஐ.நா மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் வழங்கியுள்ளது. இந்த விசாரணைகளை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு வருவதற்கு, ஐ.…

  15. ஞாயிறு, மார்ச் 30, 2014 - 19:50 மணி தமிழீழம் | சக்திவேல், தமிழ்நாடு தமிழினப் படுகொலைகளும் பிணந்தின்னிகளும் - பெ.மணியரசன் ஆகாதவனை அழிப்பதற்கான பல்வேறு சூழ்ச்சித் திட்டங்களில் “ அனுகூலச் சத்துரு” உத்தியும் ஒன்று என்று ஆரியநூல்கள் கூறுகின்றன, அவற்றுள் இன்னொரு உத்தி திருதராட்டிர ஆலிங்கனம். நண்பனைப் போல் உறவு கொண்டு, உதவுவது போல் நடித்து, நண்பன் ஏமாந்த வேளையில் அவன் கழுத்தை அறுப்பது அல்லது அவனை ஆபத்தில் மாட்டி விடுவது. இது அனுகூலச் சத்துரு உத்தி. திருதராட்டிர ஆலிங்கனம் என்பது, அன்பு பாராட்டுவது போல் ஒருவரை ஆரத்தழுவி, அப்படியே எலும்பு நொறுங்குகிட இறுக்கி அணைத்துக் கொன்றுவிடுவது! ஈழத்தமிழர் இனப்படுகொலை மீது நடவடிக்கை எடுத்து இலங்கை அரசுத் தரப்பினரைத் தண்டிப்பது தொடர்பான ச…

  16. மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் அம்பாந்தோட்டை மாவட்டம் பெலியத்த தேர்தல் தொகுதி முடிவுகள் Submitted by ceditor on Sun, 03/30/2014 - 00:47 ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 32,393 ஐக்கிய தேசிய கட்சி - 9,657 மக்கள் விடுதலை முன்னணி - 5,521 ஜனநாயக கட்சி - 2,173 http://www.virakesari.lk/?q=node/362538 அம்பாந்தோட்டை மாவட்டம் திஸ்ஸமஹாராம தேர்தல் தொகுதி முடிவுகள் Submitted by ceditor on Sun, 03/30/2014 - 02:03 அம்பாந்தோட்டை மாவட்டம் திஸ்ஸமஹாராம தேர்தல் தொகுதி முடிவுகள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 54731 வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சி - 35294 வாக்குகள் மக்கள் விடுதலை முன்னணி - 13665 வாக்குகள் ஜனநாயக கட்சி - 1551 வாக்குகள் http://www.virakesari.lk/?q=node…

  17. புலிகளின் முன்னாள் கடற்புலிகள் தளபதி ஒருவருடைய வீடு மந்திகையில் படையினரால் சல்லடையிட்டு தேடுதல்:- 30 மார்ச் 2014 புலிகளின் முன்னாள் கடற்புலிகள் தளபதி ஒருவருடைய வீடு மந்திகையில் படையினரால் சல்லடையிட்டு தேடுதல்:- மந்திகை பகுதியிலுள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் கடற்புலிகள் தளபதி ஒருவருடைய வீடு சல்லடை போட்டு இன்று காலை முதல் தேடப்பட்டுள்ளது. இச்செய்தி வெளியாகும் வரை அங்கு படையினர் நிலை கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புனர்வாழ்வளிக்கப்பட்டு குறிப்பிட்ட தளபதி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் தேடுதல்கள் நடந்த வேளை அவரோ அவரது குடும்பமோ அங்கிருந்திருக்கவில்லை என மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/art…

  18. 51,000 வாக்குகளை தந்து மேல்மாகாணத்தில் தமிழ் மக்களின் தலைமை சக்தியாக மக்கள் அங்கீகரித்துள்ளார்கள்:- மனோ கணேசன்:- மேல்மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஒட்டு மொத்தமாக 51,000 வாக்குகளை வழங்கி மேற்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களின் தலைமை கட்சியாக நம்மை மக்கள் அங்கீகரித்துள்ளார்கள். இந்த வெற்றியை நாம் தனித்து நின்று எமது சொந்த சின்னத்தில் போட்டியிட்டு பெற்றுள்ளோம். அதேவேளையில் அரச வளங்கள் மற்றும் அதிகாரங்களுடன் கூடிய அமைப்புகளையும், தனிநபர்களையும் எதிர்கொண்டு பெற்றுள்ளோம். இன்று நமக்கு எதிராக களம் இறக்கப்பட்ட நபர்களுக்கு விபரம் புரியா நிலையில் வழங்கப்பட்ட வாக்குகள் காரணமாக எமக்கு கிடைக்கப்பட இருந்த மூன்றாவது ஆசனம் கிடைக்காமல் போயுள்ளது. அதேபோல் ஆர…

    • 0 replies
    • 750 views
  19. வடக்கு மாகாணத்தில் இன்று - ‘கிரைம் ரவுண்டப்' ! [sunday, 2014-03-30 19:21:17] வவுனியா, மாமடு குளத்தில் படகு செலுத்திய இளைஞர் ஒருவர் உட்பட மூவர் இன்றுகாலை நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் இரு பெண்களும் அடங்குகின்றனர். இவர்கள் மூவரும் வவுனியா, குருமங்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாக பொலிஸார் கூறினர். இவர்கள் பயணித்த படகின் மிதவை உடைந்து படகு கவிழ்ந்ததிலேயே மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். போட்டியில் பங்கேற்ற இராணுவச் சிப்பாய் படுகாயம் பலாலி இராணுவ படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை நடைபெற்ற சைக்கிள் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட இராணுவ வீரரின் சைக்கிளும் மோட்டார் சைக்க…

  20. இலங்கையில் உள்ள தமிழர்களின் நலனைப் பாதுகாக்கவே ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங் விளக்கமளித்துள்ளார். இலங்கையின் வடக்கிலுள்ள அதி உயர்பாதுகாப்பு வலயங்களைக் குறைப்பது, காணாமற் போனவர்கள் விவகாரம், இராணுவம் கைப்பற்றியுள்ள நிலங்களைப் படிப்படியாக உரிமையாளர்களிடம் கையளிப்பது உள்ளிட்ட தமிழர்களின் பல்வேறு நலன்களைச் செயற்படுத்தவே இலங்கைக்கு எதிரான ஜெனிவா வாக்கெடுப்பில் இருந்து ஒதுங்கியதாக வெளிவிவகாரச் செயலர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையிலுள்ள தமிழர்களின் நலன் மற்றும் முன்னேற்றங்களைப் பாதுகாப்பதில் இந்திய அரசு எப்போதும் அதிக அக்கற…

  21. தீர்மானத்தை ஆதரிக்குமாறு எந்த நாட்டையும் மிரட்டவில்லை! - இலங்கையின் குற்றச்சாட்டை அமெரிக்கா நிராகரிப்பு. [sunday, 2014-03-30 09:14:46] ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்குமாறு சில நாடுகளை அமெரிக்கா அச்சுறுத்தியதாக இலங்கை அரசாங்கம் கூறிய குற்றச்சாட்டை அமெரிக்கா நிராகரித்துள்ளது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்குமாறு அமெரிக்கா சில நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யவிட்டால், அந்நாடுகளை அமெரிக்கா எச்சரித்திருக்கும். சில நாடுகள் தீர்மானத்தை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஏனெனில் அந்நாடுகள் அமெரிக்காவுடன் வலுவான பொருளாதார உறவுகளைக் கொண்டுள்ளன என அம்பாந்தோட்டையில் கடந்த செவ்வாய்க்க…

  22. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையுடன் சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்காது போனால், தடைகள் உள்ளிட்ட தீவிரமான நடவடிக்கைகளை எதிர்காள்ள வேண்டியிருக்கும் என்று, போருக்குப் பிந்திய பொறுப்புக்கூறல் தொடர்பான ஐ.நாவின் முன்னாள் ஆலோசகர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார். “தடைகள் பல்வேறு வடிவங்களில் விதிக்கப்படலாம். அது எப்படிப்பட்டதாக இருக்கும் என்று என்னால் கருத்துக் கூறமுடியாது. அனைத்துலக விசாரணைக்கு சிறிலங்கா ஒத்துழைக்காது போனால் அல்லது அதனை நிராகரித்தால், தடைகள் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்பது தெரியும். ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநதம்பிள்ளையின் முடிவை நிராகரிப்பதாக அது அர்த்தமாகாது, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் முடிவை நிராகரிப்பதாகவே கருதப்படும். விசாரணைக்கு சிறிலங்கா ஒத்துழைக்க மறுத…

  23. இராஜதந்திர அணுகுமுறைக் குறைபாடே ஜெனிவா தீர்மானத்துக்குக் காரணம்! –அரசாங்கத்தைச் சாடுகிறது ஹெல உறுமய. [sunday, 2014-03-30 08:41:36] ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, சர்வதேச விசாரணைகளுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜாதிக ஹெல உறுமய கட்சி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியுள்ளது. ரஸ்யா, சீனா உள்ளிட்ட இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த 12 நாடுகளுக்கும் நன்றி பாராட்டுவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் நேசம் பாராட்டாத பிரேஸில், ஆர்ஜன்டீனா மற்றும் சிலி போன்ற நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்தமை வருத்தமளிக்கின்றது. நாட்டின் இராஜதந்திர உறவுகளில் நிலவி வரும் குறைபாடுகளே இவ…

  24. மீண்டும் தமிழர்களுக்கு துரோகமிழைத்துள்ளது இந்தியா! – சீக்கிய அமைப்பு குற்றச்சாட்டு. [sunday, 2014-03-30 09:06:27] இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து நம்பகமான,சுதந்திரமான அனைத்துலக விசாரணை கோரும் தீர்மானத்துக்கு, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இந்தியா ஆதரவளிக்காதது குறித்து சீக்கியர்களின் அமைப்பான அனைத்துலக தல் கால்சா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் தலைவர், சர்தார் ஹர்சரன்ஜித் சிங் தாமி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,“இந்தியாவினது இந்த பிரதிபலிப்பை, சீக்கியர்கள் மற்றும் காஷ்மீரிகளினதும் மற்றும் ஏனைய சிறுபான்மை இனங்களினதும், மீதான தமது சொந்த மனிதஉரிமை மீறல்களின் பின்னணியில் நோக்க வேண்டும். இந்தியா தமிழர்கள…

  25. குடியுரிமையை இழக்கவில்லை சரத் பொன்சேகா! – நேற்றைய தேர்தலில் வாக்களித்தார். [sunday, 2014-03-30 08:44:49] சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. அவர் நேற்றைய தேர்தலில் பிலியன்தல பெட்டகன்தர சுமனசார வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர், வாழ்க்கையில் முதல் தடவையாக வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித்தேன் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் தபால் மூலமே வாக்கு அளித்திருந்ததாகவும், வாக்குச் சாவடிக்குச் சென்று முதல் தடவையாக ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சாசனத்திற்கு அமைவாக தான் வாக்களிப்பதற்கான உரிமை இருக்கின்றது என்பதனை தேர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.