Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காரைதீவு கோமணகிருஷ்ணன் எழுதிய மூலக்கட்டுரையை சில திருத்தங்களுடன் காரைதீவு தமிழ்வேந்தன் அவர்கள் அனுப்பிவைத்துள்ளார். இன்று ஊடகங்களில் பிரதானமாகப் பேசப்படும் விடயங்களில் ஒன்றாக அம்பாறை மாவட்டத்தில் கல்முனைத் தமிழ் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விடயம் காணப்படுவதால் அது குறித்த வரலாற்றுப் பின்னணியை இச் சந்தர்ப்பத்தில் வெளிக் கொணர்வது அவசியம். கல்முனை மற்றும் கல்முனைக்குடி என்பன இரு வௌ;வேறு தனிக்கிராமங்களாகும். மட்டக்களப்பு கச்சேரியிலுள்ள பதிவேடுகளின் படி கல்முனைப்பட்டினமானது ஆரம்பத்தில் நூறு வீதம் தமிழர்களையே கொண்டிருந்தது. கல்முனைப்பட்டினமானது வடக்கே தமிழ்க்கிராமமான பாண்டிருப்பையும் தெற்கே முஸ்லிம் கிராமமான கல்முனைக்குடியையும் கிழக்கே கடலையும் மேற்கே கிட்டங்கி வாவியையும…

    • 0 replies
    • 392 views
  2. உடன்படாத சந்தர்ப்பங்களில் தாக்கப்பட்டு வல்லுறவு! - தமிழ் பெண் சிப்பாய்களது நிலை இப்படி! [Tuesday, 2014-03-18 19:56:08] சிங்கள இராணுவத்தில் சேர்ந்த பின் 10ற்கும் மேற்பட்ட சிங்கள இராணுவப் படை அதிகாரிகளாலும் சாதாரன கோப்றல் தர ராணுவத்தாலும் தான் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் 23 வயதான இளம் தமிழ் இராணுவப் பெண். தான் இராணுவத்தில் சேர்ந்த பின் தன்னையும் தன்னைப் போன்ற மற்றைய தமிழ்ப் பெண்களையும் தவணை முறை வைத்து இரவில் உயரதிகாரிகளின் பாலியல் தேவைக்காக அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தாங்கள் அதற்கு உடன்படாத சந்தர்ப்பங்களில் தாங்கள் தாக்கப்பட்டதாகவும் தங்களில் சிலர் கருத்தரித்து பின்னர் அது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்…

  3. உள்நாட்டுப் பிரச்சனைகளை சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியுமே தவிர வெளியார் தலையிட்டு தீர்த்து வைப்பார்கள் என்பது நடக்க முடியாத காரியம் என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நேற்றைய தினம் மட்டகளப்புக்கான ஒரு நாள் பயணத்தை மேற்கொண்ட கோட்டாபய, சமூக, சமய மற்றும் ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் உட்பட பலர் மத்தியில் தற்போதைய நிலவரம் தொடர்பாக உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றியதாவது, அண்மையில் அமெரிக்க பிரஜை ஒருவர் என்னிடம் நாட்டை எவ்வாறு கொண்டு செல்கிறீர்கள் என கேட்ட போது எங்களுக்கு புத்தி சொல்லத் தேவையில்லை. எங்களது நாட்டில் புத்திஜீவிகள் இருக்கின்றனர். எங்களது பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துக் க…

  4. பிள்ளைகள் காணாமற்போனதற்கு கருணாவே பொறுப்புக்கூற வேண்டும்! – ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தந்தை சாட்சியம். [Thursday, 2014-03-20 19:03:48] விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்ட பின்னர் காணாமல் போயுள்ள தனது பிள்ளைகள் தொடர்பில் கருணா அம்மான் தான் பொறுப்பு கூற வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த 57 வயதான தந்தையொருவர் தெரிவித்துள்ளார். வடக்கு- கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகள நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்திற்கான முதலாவது அமர்வு இன்று ஆரம்பமானது. இன்று தொடக்கம் நாளை மறுதினம் சனிக்கிழமை வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆணைக்குழுவின் அமர்வுகள் நடைபெறுகின்றன.இன்று முதலாவது நாள் செங்கலடி பிரதேச செயலகத்தில் நடைப…

  5. பிரபாகரனைத் தப்பிச்செல்ல வழியேற்படுத்த முயன்றவர்கள் தேசப்பற்றாளர்களா? – சரத் போன்சேகா கேள்வி. [Thursday, 2014-03-20 09:38:18] விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பிச் செல்ல வழியேற்படுத்திக் கொடுக்க முயன்றவர்களை தேசப்பற்றாளர்கள் என கூற முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா. காலியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், இன்று தேசப்பற்றாளர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சிலர், அன்று பிரபாகரன் தப்பிச் செல்ல வழியமைத்துக் கொடுத்தார்கள். இறுதிக் கட்ட போர் நடைபெற்று வந்த வேளையில் 48 மணித்தியால போர் நிறுத்தத்தை அறிவித்தனர்.இந்த போர் நிறுத்த அறிவிப்பானது பிரபாகரன் தப்பிச் செல்வதற்காகவேயாகும். …

    • 2 replies
    • 604 views
  6. ஐ நா மனித உரிமைகள் பேரவையில் சர்வதேச நாடுகளினதும் தலைவர்களினதும் கவனத்தை ஈழத் தமிழர்களின் பாற் கொண்டு வருவதுடன் இலங்கை மீது சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்தும் முயற்சியியல் தீவிரம் காட்டிவரும் பிரித்தானிய தமிழர் பேரவை இந்தியாவில் பல முக்கிய அரசியற் கட்சித் தலைவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுடனும் இராஜதந்திர ரீதியாக பல மட்டங்களிலும் பேச்சுக்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த உறுப்பினரும்; முந்நாள் நிதி அமைச்சருமான ஜஸ்வந் சிங்காவுடனும் பல கட்டப் பேச்சுக்களை முன்னெடுத்திருந்தனர். சர்வதேச மனித உரிமைகள் தினம் அன்று இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் ஜஸ்வந் …

  7. வன்னியினில் படைத்தரப்பின் சுற்றிவளைப்பு தேடுதல்கள் பல பகுதிகளிலும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக உடையார்கட்டிற்கு மேலாக உள்ள சுதந்திரபுரம் மற்றும் இருட்டுமடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் இன்று அதிகாலை முதல் படையினரின் சுற்றிவளைப்பிற்கு உள்ளாகியிருந்தது. இளம்வயதினை உடைய அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் பால் வேறுபாடின்றி படையினரால் பிடித்துச்செல்லப்பட்டு பொது விளையாட்டரங்கொன்றில் வைத்து அங்கு அவர்கள் அடையாளப் படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு சென்றிருந்த இராணுவப்புலனாய்வு பிரிவினர் மற்றும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் ஆட்களை வகைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சும…

  8. திருமலை ஸ்தம்பிதம்:- ஜெனீவாவில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிராக திருகோணமலை நகரத்தில் இன்று வியாழக்கிழமை ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.. சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றியத்தின் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களால் இந்த ஹர்த்தலுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. ஹர்த்தாலினால் வாகனப்போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருந்தது. வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. வங்கிகள் நிதிநிறுவனங்களின் பணிகளும் ஸ்தம்பிதமடைந்திருந்தன தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பிரதான பஸ் நிலையங்கள் வெறிச்சோடிக்காணப்பட்டன. அதுமட்டுமன்றி பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவும் மிக குறைந்தே காணப்பட்டது. இதே வேளை கிண்ணியா,மூதூர், மற்றும் கந்தளாய் பிரதேசங்களில…

  9. முல்லைதீவின் புதுக்குடியிருப்பு மூங்கிலாறு பகுதியில் அண்மையில் மீட்டெடுக்கப்பட்ட மனித மனித எச்சங்கள் இலங்கை இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களுடையது என குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு உறுதியாகியுள்ளது. குறித்த மனித எச்சங்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் படையினரால் ஏவப்பட்ட எறிகணைகளது துண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சுமார் பதினொருவரையிலான எறிகணை துண்டங்கள் காணப்பட்டு உள்ளதாகவும் அவை அலுமினியம் மற்றும் பித்தளை வகைகளினை கொண்டவையாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி திருவையாறு பகுதியினை சேர்ந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்தவர்களது மனித எச்சங்களாக இவை இருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகின்றது. எனினும் குடும்பத்தவர்கள் அனைவரும் உயிரிழந்த நிலையில் மனித நேய…

  10. மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலியல் பலாத்கார தேவைகளுக்காக இராணுவத்தில் தமிழ் பெண்களை சேர்க்கும் நடவடிக்களின் முகவராக அரசசார்பற்ற நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் செயற்படுவதாக மட்டக்களப்பில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். கொக்கட்டிச்சோலை பகுதியிலும் இதற்கான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தினக்கதிருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் இதனை உறுதிப்படுத்தினார். மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரஜைகள் அமைப்பு என்ற பெயரில் சிலர் தமிழ் பெண்களை ஆசை வார்த்தைகூறி படையில் இணைப்பதற்கான சூழ்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அண்மைக் காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்…

  11. முஸ்லிம் சமூகத்தின் செயற்பாடுகளை பொது பலசேனாவினால் ஒருபோதும் தடுக்க முடியாது. பௌத்த இனவாதிகளுக்கு முஸ்லிம் சமூகம் அடங்கிப்போகாது என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். மேலும், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்தக்கூடாது என்பதே எமது கோட்பாடு. அவ்வாறானதொரு நிலைமையினை எப்போதும் ஏற்படுத்திவிடமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தனது உத்தியோகபூர்வ இணையத்தள வெளியீட்டின்போது இக் கருத்தினை அவர் முன்வைத்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், இலங்கையில் முஸ்லிம் சமூகத்தினை ஒடுக்கி, கட்டுப்படுத்தும் செயற்பாட்டினை பௌத்த அமைப்புகள் பல முன்னெடுத்து வருகின்றன. குறிப்பாக பொதுபலசேனா பௌத்த அமைப்பினர் அரசாங்கத்தின் ஒரு சில தூண்டுதல் சக்திகளின் துணை…

  12. நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மன்னிப்பு கோர வேண்டுமென பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம், இலங்கை நிலைமைகள் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்காக ஹக்கீம் மன்;னிப்பு கோர வேண்டுமென பொதுபல சேனா தெரிவித்துள்ளது. மன்னிப்பு கோரவிட்டால் ஹக்கீமை தோலுரிக்கப் போவதாக பொதுபல சேனா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிங்கள சமூகத்திடம் ஹக்கீம் மன்னிப்பு கோர வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.ஹக்கீமிற்கு நாட்டின் நீதி அமைச்சுப் பதவியை ஏன் ஜனாதிபதி வழங்கினார் என்பது புரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைச் சிறுபான்மை மதங்கள் மீது சிங்கள கடும்போக்கு …

  13. சட்டவிரோதமான முறையில் தம்மையும் தமது நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியுள்ளார்.2005;ம் ஆண்டு முதலே இவ்வாறு கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.இவ்வாறு இரகசியமான முறையில் தம்மை கண்காணிப்பதானது தமது அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுதந்திரமாக நடமாடுதல், சுதந்திரமாக ஏனையவர்களுடன் தொடர்பு கொள்ளுதல் போன்ற மிக அடிப்படையான உரிமைகளை அரசாங்கம் முடக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 5ம் திகதி ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு கடிதம் ஒன்று ஊடாக இந்த விடயங்களை தெரிவித்துள்ளார். அரச…

  14. காணாமல்போனோர் குறித்து இன்று மட்டக்களப்பில் விசாரணைகளைத் தொடங்குகிறது ஜனாதிபதி ஆணைக்குழு! [Thursday, 2014-03-20 09:42:54] காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு இன்று மட்டக்களப்பில் ஆரம்பமாகிறது. இன்று முதல் எதிர்வரும் 22ஆம் திகதிவரை இந்த அமர்வு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய அமர்வு ஏறாவூர் பற்று - செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்கான விசாரணைகள் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறும். 21 ஆம் திகதி கோரளைப்பற்று வடக்கு - வாகரை கோரளைப்பற்று தெற்கு - கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான விசாரணைகள் கிரானிலுள்ள றெஜி கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 22ஆம் திகதி மண்முனை வடக்கு மட்டக்களப்பு பிரதேச செயலகப்பிரிவுக்கான விசாரணைகள் மண்முனை வடக்கு …

  15. விசேடமொழியாக்கம் குளோபல்தமிழ்ச்செய்திகள் நாட்டில் மாற்றுக் கருத்துக்கள், மாற்றுச் சிந்தனையாளர்களை முடக்கும் முனைப்பக்கள் தீவிரம் பெற்றுள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர் ரூகி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச் சட்;டத்தின் கீழ் அண்மையில் ரூகி பெர்னாண்டோ மற்றும் வணக்கத்திற்குரிய பிரவீன் மஹேசன் அருட்தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். மாற்றுச் சிந்தனையாளர்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் வகையிலேயே தாம் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கைதுகள் திட்டமிட்ட ஓர் அடக்குமுறையாகவே கருதப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டுக்குள் என்ன நடக்கின்றது என்பதனை இலங்கைக்கு வெளியே தெரிப்படுத்தவோ விமர்சனம் செய்யவோ கூடாது என்னும் நோக்கில் இ…

  16. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவினை திரட்டும் முனைப்புக்களில் அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.மனித உரிமைகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும், அமைச்சருமான மஹிந்த சமரசிங்க இன்றைய தினம், ஜெனீவாவில் முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளினால் கொண்டு வரப்பட உள்ள தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு மஹிந்த சமரசிங்க முஸ்லிம் நாடுகளிடம் கோரிக்கை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.யுத்தத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி தொடர்பிலும் அவர் விளக்கம் அளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐ…

  17. இலங்கை ராணுவத்தில் சேரும் பெண்களின் பயிற்சிக்கால அவலத்தை இந்த காணொளி சித்தரிக்கிறது! இதை பார்த்தாவது திருந்துவார்களா! https://www.youtube.com/watch?v=GohUnkH0neQ&feature=youtube_gdata_player

    • 3 replies
    • 599 views
  18. இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்த 75 இந்திய மீனவர்களை நேற்று கைது செய்துள்ள கடற்படையினர் அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து இந்திய ஊடகமொன்று தெரிவிக்கையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டோரில் 25 பேர் இராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் எனவும் எஞ்சியோர் நாகபட்டினம், தஞ்சாவூர் மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்தவர்களெனவும் குறிப்பிட்டுள்ளது. பாக்கு நீரிணையில் உள்ள கச்சதீவு மற்றும் நெடுந்தீவு ஆகியவற்றுக்கு அருகில் இலங்கையால் தடை செய்யப்பட்டுள்ள மீன்பிடி வலைகளைப் பாவித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே அவர்கள் கைது செய்யப்பட்டனர். பாக்கு நீரிணையில் மீன்பிடித்தல் சம்பந்தமாக எ…

  19. கிளிநொச்சிக் கிராமங்களில் வீடு வீடாகப் படையினர் தேடுதல்! – பொதுமக்கள் அச்சம். [Wednesday, 2014-03-19 17:37:56] கிளிநொச்சி நகரை அண்டிய கனகபுரம், உதயநகர் கிராமங்கள் இன்று படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்களும்,சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று இரவு முதல் மேற்படி கிராமங்களில் படையினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை கிராம அலுவலருடன் வீடு வீடாக சென்று குடும்ப பதிவு அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றை பரிசீலித்து ஆட்களை குடும்ப அங்கத்தவர்களை உறுதிப்படுத்திக் கொள்ளவதோடு வீடுகளுக்குள்ளும் புகுந்து அறைகளையும் சோதனை செய்து வருகின்றனர். அத்தோடு வெளியிடங்களிலிருந்து புதிதாக எவரும்…

  20. ஐ.நாவுக்குத் தகவல் வழங்குவோர் என்று சந்தேகிக்கப்படுவோரைக் கண்காணிக்க சிறிலங்காவின் புலனாய்வுப் படைப்பிரிவினால், சிறப்பு பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக, தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளது என்று அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. ஐ.நாவுக்கான அனைத்துலக மன்னிப்புச்சபையின் பிரதிநிதி பீற்றர் ஸ்பிளின்ரர் நேற்று லண்டனில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொறுப்பக்கூறல், மனிதஉரிமைகளுக்காக குரல் கொடுப்போருக்கு எதிராக சிறிலங்கா அரசு அடக்குமுறைகளைக் கையாள்கிறது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கண்காணிப்புக்கு உள்ளாகியிருக்கும், சிறிலங்கா, அதை திசை திருப்புவதற்காக, அதிருப்தியாளர்களை மௌனமாக்குவதற்கு கேவலமான தந்திரங்களைக் கையாள்கிறது. மனிதஉரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், சட்டவாளர்…

  21. இலங்கையில் நிரந்தர அமைதியையும் நீடித்த சட்ட ஆட்சியையும் நிலை நிறுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் அமைதிப் படை இங்கு வரவழைக்கப்பட வேண்டும். இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் பகிரங்கக் கோரிக்கை விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். கிளிநொச்சியில் ஜெயகுமாரி, அவரது மகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் கைதுகள் தொடர்பில் பொலிஸார் நடந்துகொண்ட விதம் குறித்து அவர் தனது உரையில் விரிவாக எடுத்துரைத்தார். வடக்கு, கிழக்கில் எதற்கெடுத்தாலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்திப் பொலிஸார் மக்களை அடக்கி ஆள்வதை அவர் வன்மையாகக் கண்டித்தார். தமிழர்கள் இலங்கைப் பொலிஸாரால் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுத்தப்படுகின்றனர் என்பதனையும் நாடாளுமன…

  22. இலங்கைக்கு எதிரான அமெ ரிக்கப் பிரேரணை நிறைவேறினாலும், நாம் அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். இலங்கை அரசின் பொறுப்புகளை வெளிநாட்டுக்குக் கையளிக்க முடியாது. அது எமது அரசமைப்புக்கு முரணானது. பிரேரணை நிறைவேறினாலும் - சர்வதேசத்தின் அழுத்தம் தொடர்ந்தாலும் எவருக்கும் இலங்கை அஞ்சாது- என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் இலங்கை அரசின் வெளி விவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கின்ற போதிலும், அவை அமெரிக்காவின் செல்வாக்குக்கு உட்பட்டுள்ளன. அதனால் பிரேரணையை நிராகரிக்க முடியாத நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியிருக்கின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைமை யகத்தில் நேற…

  23. அத்துமீறும் இந்திய படகுகளை அரச உடைமையாக்க தீர்மானம் வியாழக்கிழமை, 20 மார்ச் 2014 10:15 இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகளை அரசுடைமையாக்க தீர்மானித்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர். இவர்களின் அத்துமீறிய மீன்பிடித்தலைத் தடுக்கும் வகையில், எதிர்வரும் காலங்களில் அவர்களின் படகுகளை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/103840-2014-03-20-04-46-27.html

  24. திருகோணமலை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற திருக்கரைசையம்பதி எனப்போற்றப்படும் மூதூர் கங்குவேலி அகத்தியர் ஸ்தாபன சிவன் ஆலய புனரருத்தாரணப்பணியை புத்த பிக்கு ஒருவன் தலைமையிலான சிங்கள காடையர் குழு புகுந்து சேதப்படுத்தியுள்ளது. நேற்று (14.03.2014) பிற்பகல் 4.30 மணியளவில் ஆலய பணிகள் இடம்பெற்ற இடத்தில் இருந்த களஞ்சிய (மடைப்பள்ளி) சாலையை உடைத்து சேதப்படுத்தியதுடன் பல பொருட்களையும் எடுத்துச்சென்றதாக முறையிடப்பட்டுள்ளது. கடந்த 12ம் திகதியில் இருந்து புனர்தாரணப்பணிகள் இடம்பெற்று வந்தன. காவல் கடமையில் முதூர் பொலிசாரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். எதிர்வரும் 17ம் திகதி வைபரீதியாக அடிக்கல் நாட்டப்பட இருந்த நிலையில் புத்த பிக்கு இந்த அடாவடித்தனத்தை புரிந்துள்ளான். இதேவேளை இவ்வாலயத்திற்கு …

    • 0 replies
    • 833 views
  25. சிறிலங்காவுக்கு தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவின் முறைசாரா பகிரங்க கலந்தாய்வு, பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது. ஜெனிவாவில் உள்ள அமெரிக்க சிறப்பு பிரிதிநிதி Paula Schriefer அவர்களின் தலைமையில் இக்கலந்தாய்வு இடம்பெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு, உறுப்பு நாடுகளின் பார்வைக்காக, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால், விநியோகிக்கப்பட்ட திருத்தப்பட்ட இரண்டாவது தீர்மான வரைவின் உள்ளடக்கம் குறித்தே இந்தக் கூட்டத்தில் விரிவாக பேசப்பட்டது. 43 நாடுகள் பங்கெடுத்திருந்த இக்கலந்தாய்வில் சிவில் அமைப்பினரும் பங்கெடுத்து கருத்துக்களை வழங்கியிருந்தனர். 30க்கும் மேற்பட்ட தமிழர் பிரதிநிதிகளும் பங்கெடுத்திருந்தனர். இரண்டு மணிநேர…

    • 0 replies
    • 763 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.