Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விசேடமொழியாக்கம் குளோபல்தமிழ்ச்செய்திகள் இலங்கையின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவரான உபாலி விஜேவர்தன பயணம் செய்த விமானம் காணாமல் போன பகுதிலேயே மலேஷிய விமானமும் காணாமல் போயுள்ளது. மலேஷிய விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777 ரக விமானம் அண்மையில் காணாமல் போயிருந்தது. இந்த விமானத்தில் மொத்தமாக 239 பயணம் செய்திருந்தனர். இந்த விமானம் காணாமல் போன அதே பிரதேசத்தில் பிரபல வர்த்தகர் உபாலி விஜேவர்தன பயணம் செய்த விமானமும் காணாமல் போயிருந்தது. 1983ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ம் திகதி உபாலி விஜேவர்தன பயணம் செய்த விமானம் காணாமல் போயிருந்தது. இந்த விமானத்தில் உபாலி விஜேவர்தனவுடன் மேலும் ஐந்து பேர் பயணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் முதனிலை செல்வந்தரான உபாலி வ…

  2. –டக்ளஸ் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் மூலம் தீர்வு காண முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் உதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த முயற்சி பலனளிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு வலுவான ஓர் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டம் காட்டத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.சர்வதே சமூகத்தின் ஒத்துழைப்புடன் தீர்வ…

  3. இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று, ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 25ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக எதிர்வரும் 20ஆம் திகதி ஜெனீவா புறப்படவுள்ளதாக நம்பத்தகுந்த அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச வரைவின் கேள்வி நேரம் இம்மாதம் 20ஆம் திகதியின் பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை அரசாங்கம் தொடர்பாக உத்தேச வரைவில் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. வடக்கு தமிழர்களின் மீள்குடியேற்றம…

  4. அமெரிக்க தீர்மானத்தினை ஆதரிக்கவேண்டும் அல்லது கடுமையான விமர்சனத்திற்குள்ளாக்க கூடாது என்பவர்களுக்கு வெளிப்படையாக எமது கேள்விகளை முன்வைக்கிறோம்... பின்வரும் நிகழ்வுகளை முழுமையாக படித்துவிட்டு பின் பேசுங்கள், பொத்தாம் பொதுவான விவாதத்திற்கு நாங்கள் வரவில்லை. விவரங்கள், நிகழ்வுகள் அடிப்படையில் பேசலாம்.... ( அனைவரும் வாசிக்க வேண்டுகிறேன்) 1. 2009 போர் முடிந்தவுடன் மே மாதத்தில் ஐ.நாவின் மனித உரிமைக் கமிசன் சர்வதேச விசாரணையை பான் கி மூன் அதிகாரத்தின் கீழ் (விதி எண் 99) கொண்டு வரவேண்டும் எனக் கோரியது. 2. பான் கி மூன்னின் சட்ட வல்லுனர் குழு 2009 ஜூலையில் இதே கோரிக்கையை முன் வைத்தது. 3. இந்தக் கோரிக்கை ஐ.நாவின் விதி. இதை மறுக்க முடியாது என்பதால் , சர்வதேச விசாரணையை திசை திருப…

  5. போர் முடிவடைந்து ஏறத்தாழ நான்கு வருடங்கள் கடந்து விட்ட நிலையில், இந்த நான்கு வருடங்களும் சிவில் சமுக செயல்பாடுகளில் இராணுவ தலையீடுகளை எதிர்த்தும், இராணுவ மயப்படுத்தப்படும் சூழலை கண்டித்தும், வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பிரதேசங்களில் பல்வேறு சிவில் சமுக அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் போராடிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய போராட்டங்களின் தீவிரத்தை சகித்துக்கொள்ள முடியாத சிறீலங்கா அரசு, சிவில் சமுக அமைப்புகளை நலினப்படுத்தும் கைங்கரியத்துக்குள் ஆழமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு அங்கமாக வற்றாப்பளை, கேப்பாப்பிலவு பகுதிகளைச்சேர்ந்த மாதர் அபிவிருத்தி சங்கங்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், கூட்டுறவு சங்கங்கள், கமக்கார அமைப்புகள், முன்பள்ளிகள், ஆலய பரிபாலன சபைகள் என்று பல்வேறு சிவ…

  6. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பஸ் திடீரென தீப்பற்றி முற்றாக எரிந்து நாசமானது. கனகராயன்குளத்துக்கும் புளியங்குளத்துக்கும் இடையில் இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பஸ்ஸின் குளிரூட்டிப் பகுதியில் ஏற்பட்ட தீக் கசிவினாலேயே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. தீக்கசிவினைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக பஸ்ஸில் இருந்து இறக்கப்பட்டமையால் எவ்வித உயிர்சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.onlineuthayan.com/News_More.php?id=151382732913624329

  7. இலங்கைக்கான கனடா தூதுவர் ஷலீ வைற் உலக உணவு திட்டம் தொடர்பி்லான ஆய்வொன்றை மேற்கொள்வதற்காக யாழ்ப்பாணம் வந்துள்ளார். இன்று வியாழக்கிழமை காலை 11மணியளவில் யாழ் .கீரிமலை நகுலேஸ்வரா மகாவித்தியாலத்துக்கு நேரடியாக சென்று இந்த திட்டம் தொடர்பில் அவர் ஆய்வொன்றை நடத்தினார். இந்த நிகழ்வுக்கு வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா ,யாழ் கீரிமலை நகுலேஸ்வரா மகாவித்தியாலய அதிபர் தயானந்த் மற்றும் கனடா நாட்டு பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். http://www.onlineuthayan.com/News_More.php?id=880012733513897137

  8. திருத்தப்பட்ட இரண்டாவது வரைவு ஜெனிவாவில் சனியன்று சமர்ப்பிக்கவுள்ளது அமெரிக்கா! [Thursday, 2014-03-13 11:07:42] ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் முன்வைக்கப்பட்டவுள்ள தீர்மானத்தின் இரண்டாவது வரைவு நாளை மறுதினம் சனிக்கிழமை முன்வைக்கப்படவுள்ளது. அன்றைய தினமே அது சபையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளின் பார்வைக்கு வழங்கப்படவுள்ளது. அமெரிக்கா முன்வைத்த முதலாவது வரைவு தொடர்பில் தமிழர் தரப்பிலிருந்தும் காட்டமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. போர்க் குற்ற விசாரணை ஒன்றை இந்த வரைவு வலியுறுத்தவில்லை என்று தமிழர்கள் சுட்டிக்காட்டினர். அமெரிக்கா ஏமாற்றிவிட்டது என்று தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் சிலரும் மாணவர்களும் கொந்தளித்துக் கரு…

  9. வலி.வடக்கில் இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட 6 ஆயிரத்து 500 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் அனைத்தும் அரசாங்கத்திற்குரிய காணிகள் என்று இராணுவத்தினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். அதேவேளை இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் இடம்பெறாது என்பதையும் உறுதிப்படுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். நலன்புரி நிலையத்தின் தலைவர்கள் மற்றும் மீள்குடியேற்ற குழுவின் பிரதிநிதிகளுடன் வலி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கிவாழ்ந்துவரும் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் யாழ்.காங்கேசன்துறை படைமுகாமில் இராணுவத்தினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே 515 ஆவது பிரிகே டியர் ஈஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த இராணுவ அதிகாரியின் மேற…

  10. 400 கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் சேமிக்க உதவும் வானூர்தி தொழினுட்பத்தைக் கண்டறிந்த தென்மராட்சி இழைஞருக்கு இலண்டன் அரசு பாராட்டு. [Tuesday, 2014-03-11 19:59:28] 400 கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் வானூர்தி நிறுவனங்கள் சேமிக்க உதவும் தொழினுட்பத்தைக் கண்டறிந்தவர், தென்மராட்சி இளைஞர். முனைவர் சிதம்பரநாதன் சபேசன். அன்னாரை உலகம் இன்று வியந்து பாராட்டுகிறது. 1984இல் பிறந்த இவர். 2003 12ஆம் ஆண்டுத் தேர்வுக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படித்தவர். அதற்குமுன்பு சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் படித்தவர். மொரட்டுவைப் பல்கலைக் கழகத்தில் பொறியியலாளராக முதலாண்டு படிக்கையிலேயே புலமைப் பரிசில் பெற்று பிரித்தானியா சென்றார். செபீல்டு பல்கலையில் மின்னணுப் பொறியியல்…

    • 31 replies
    • 2.1k views
  11. இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஒமந்தை பகுதியின் புகையிர பாதையில் தூங்கிக்கொண்டிருந்த மாடுகள் மீது கொழும்பில் இருந்து வந்த யாழ்தேவி புகையிரதம் ஏறி சென்றுள்ளது.குறித்த விபத்து சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று மாடுகளும் இறந்த நிலையில் காணப்பட்டது. இது தவிர முன்னைய காலங்களில் இவ்வாறாக கால்நடைகள் ஏ-9 நெடுஞ்சாலையில் பயணிக்கும் பேரூந்துகளில் சிக்கி இறக்கும் நிலை காணப்பட்டதாகவும்.தற்போது யாழ்தேவியிலும் மாட்ட வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் ஊர்மக்கள் தெரிவித்தனர். இதுவேளை மழைகாலங்களில் இவ்வாறாக கால்நடைகள் குளிர் காரணமாக தமது உடல் வெப்பநிலையை தக்கவைத்துக்கொள்வதற்காக காப்பெற் வீதியின் கரையோரங்களில் நித்திரை கொள்வது வழமை.இதன் காரணமாக மழை கால விபத்துக்களில் அதிகளவான கால்நடைகள் ச…

  12. சிறுவர் தொழிற்சந்தையின் இரண்டாம் நாள் நிகழ்வு இன்று காலை 10.30 மணி முதல் சாவகச்சேரி டிறீபேர்க் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது. செலான் வங்கியினால் தென்மராட்சி பாடசாலை மாணவர்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் நான்கு பாடசாலைகளில் இந்தத் தொழிற்சந்தை நடத்தப்படுகின்றது. இதில் தரம் 5 க்கு உட்பட்ட மாணவர்களால் அவர்களது வீடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தென்மராட்சி வலயக்கல்வி பிரதிப் பணிப்பாளர் சி.சிவத்துரையும், சிறப்பு விருந்தினராக செலான் வங்கியின் வடபிராந்திய முகாமையாளர் வி.சிவகரன் மற்றும் கல்லூரி முதல்வர் து.அருந்தவபாலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன்போது இலங்கை மகளிர் க…

    • 11 replies
    • 982 views
  13. சுமந்திரனும், அனந்தியும் ஜெனீவாவுக்குப் பயணம்! - தனித்தனியாகவே செயற்படுவர். [Wednesday, 2014-03-12 07:55:13] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றிரவு மீண்டும் ஜெனீவா பயணமானார். இதேசமயம் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் மீண்டும் ஜெனீவா சென்றிருக்கின்றார். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெனீவா புறப்பட்டார் என்று கூறப்படுகின்றது. ஜெனீவாவில் தற்போது நடைபெறும் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் 25 ஆவது அமர்வின் போது இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் மற்றும் அட்டூழியங்களுக்கு நீதி கேட்கும் ரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதியாக சுமந்திரன் எம்.பி. அங்க…

    • 2 replies
    • 889 views
  14. யாழ். நாயன்மார்கட்டு இராஜேஸ்வரி வீதியில் இன்று அதிகாலை புகுந்த சுமார் 6 அடி நீளமான முதலையை அப்பகுதி இளைஞர்கள் பிடித்து கட்டி வைத்துள்ளார்கள். இச் சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, இன்று அதிகாலை 1.30 மணியளவில் வீதியில் நாய்கள் இடைவிடாது குரைக்கும் சத்தம் கேட்டதுடன் வித்தியாசமான சத்தம் ஒன்றும் உணரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு சென்று பார்த்தபோது இந்த முதலையை சுற்றி நாய்கள் நின்று குரைத்து கொண்டு நின்றன முதலையும் தன் வாலினால் நாய்களை தாக்க முயற்சித்து கொண்டு இருந்தது அதனை தொடர்ந்து அங்கு நின்ற இளைஞர்கள் அந்த முதலையை கயிற்றினை போட்டு பிடித்து அருகில் உள்ள மரத்தோடு கட்டி வைத்துள்ளனர். இந்த முதலை செம்மணி நீர்நிலையிலிருந்து வயல் பிரதேசத்தின் ஊடாக ஊருக்குள…

    • 2 replies
    • 714 views
  15. ஐ.சி.சி 20- 20 உலக கிண்ண போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறவேண்டும் என வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கைரேகை பதிவுசெய்யும் நடவடிக்கை நடைபெறுகிறது. மொபிடெல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று காலை முதல் யாழ்ப்பாணத்தில் கைரேகை பதிவுசெய்யும் நடவடிக்கை நடைபெறுகிறது. இந்த நிகழ்வு பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பெருமளவான மக்கள் இலங்கை அணிக்கு ஆதரவு தெரிவித்து தமது கைரேகைகளைப் பதிவு செய்து வருகின்றனர். ஐ.சி.சி 20- 20 உலக கிண்ண போட்டி இம் மாதம் 16 ஆம் திகதி வங்கதேசத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.e-jaffna.com/archives/23281

  16. மக்கள் எம்மோடு இருக்கும் வரை எம்மை யாரும் அசைக்க முடியாது! – ஜனாதிபதி மஹிந்த சூளுரை. [Wednesday, 2014-03-12 07:48:34] நாட்டு மக்கள் எம்மோடு இருக்கும் வரை ஆட்சி மாற்றத்துக்கு இடமில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ரத்மலானையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். 2016 வரை மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளனர். எனினும், எச்சந்தர்ப்பத்திலும் நாம் தேர்தல் நடத்த தயாராகவே உள்ளோம். தேர்தலுக்கு நாம் பயந்தவர்களல்ல. எதனையும் நாம் மேற்கொள்வது சர்வதேச அழுத்தங்களுக்குப் பயந்து அல்ல, சர்வதேச அழுத்தங்களுக்கு அன்றி மக்கள் விருப்பத்துக்கு நாம் எப்போதும் தலைவணங்குகிறோம். செய்வதற்கும் சொ…

  17. பிச்சைக்காரர்களைப் போல், அமைச்சர்கள் வெளிநாடுகளிடம் கையேந்துகின்றனர்! - சரத் பொன்சேகா கிண்டல். [Wednesday, 2014-03-12 08:00:31] இலங்கை அரசாங்கம் எதிர்வரும் ஐந்து தலைமுறை மக்களுக்கு கடனை சேர்த்து வைத்திருப்பதாக, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், தற்போதுள்ள அமைச்சர்கள் தங்களின் நாளாந்த பணிகளை மாத்திரம் சிந்தித்து நாட்களை கடத்துகின்றார்கள். மக்கள் குறித்து அவர்கள் சிந்திப்பதில்லை. தங்களுக்கு தரகு பணம் கிடைக்கிறது என்பதற்காக பிச்சைக்காரர்களைப் போல், வெளிநாடுகளிடம் கையேந்துகிறார்கள். ஆனால் இதன் மூலம் நாட்டு மக்களுக்கு அதிக கடனையே சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். …

  18. முக்கியமான தருணத்தில் இந்த காணொளியை வெளியிடுவது பத்திரிகையாளரின் கடமை என்று சனல்4 ஊடகவியலாளர் கெலம் மக்ரே தெரிவித்துள்ளார். இந்திய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அண்மையில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ உண்மையானதுதான் என்பதில் சந்தேகம் இல்லை. வீடியோவை கொடுத்தவரையும் சந்தேகப்பட முடியாது. வீடியோவில் உள்ள படங்களை வீடியோ நிபுணர்களிடம் கொடுத்து சுயேச்சையான வழியில் ஆய்வு செய்து நம்பகத்தன்மையை உறுதி செய்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார். இந்த வீடியோ வெளியான நேரமும் அமெரிக்க கொண்டு வந்துள்ள தீர்மானம் மீது வாக்களிக்க உள்ள நாடுகளில் வீடியோ வெளியானதும் தற்செயல் நிகழ் வாகும். அண்மையில்தான் வீடியோ கிடைத்தது. அதன் நம்பகத்தன்மையை பரிசோதிக்க சில கால…

  19. இரணைமடு விவசாயச் சம்மேளனச் செயலாளர் முத்து சிவமோகன்:- இரணைமடு நீர் விநியோகத்திட்டம் தொடர்பிலான ஆய்வினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் திடமான முடிவினை எடுத்துள்ள வடக்கு மாகாண சபைக்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக இரணைமடு விவசாயச் சம்மேளனச் செயலாளர் முத்து சிவமோகன் தெரிவித்துள்ளார். இரணைமடுவிலிருந்து குடாநாட்டிற்கு நீர் விநியோகிக்கும் திட்டம் தொடர்பில் ஏற்பட்டுவந்த இழுபறிக்கு தீர்வு காணும் வகையில் வடக்கு மாகாண சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு குறித்த திட்டம் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டு அறிக்கையினை சமர்ப்பித்திருந்தது. நிபுணர்குழு அறிக்கையின் நிலைப்பாடு தொடர்பில் ஆசிய அபிவிருத்திவங்கிக்கு விளக்கமளிக்கும் முக்கிய கூட்டம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றிரு…

  20. அமெரிக்காவுக்கு எதிராகப் போராட்டம் நடத்த ராவண பலயவுக்கு தடை! – கோட்டை நீதிமன்றம் உத்தரவு. [Wednesday, 2014-03-12 07:09:41] அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக ராவண பலய பௌத்த அமைப்பு இன்று நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தாம் தடையுத்தரவை பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்த நீதிமன்ற உத்தரவு ராவண பலய அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தவே ராவண பலய அமைப்புத் திட்டமிட்டிருந்தது. http://www.seithy.com/breifNews.php?news…

  21. அனைத்துலக அழுத்தங்களின் பாதிப்புகளில் இருந்து உண்மையிலேயே மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் கருதினால், ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களுடன் பேசிய அவர், வெளியாரின் தலையீடுகளை தடுக்க வேண்டும் என்றால், ராஜபக்ச அரசாங்கம், சட்டத்தின ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும். தற்போது சிறிலங்காவில் அதற்கு மரியாதை இல்லை. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில், சிறிலங்கா மீது கொடுக்கப்படும் தேவையற்ற அழுத்தங்களில் இருந்து தப்பிக்க இலகுவான வழி உள்ளது. நல்லாட்சியை ஏற்படுத்தல், மனிதஉரிமைகளை பாதுகாத்தல், அனைத்துலக அளவில் ஏற்றுக்கொள்ள…

  22. -எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா இந்தியாவுக்கு தன்னால் செல்லமுடியும். ஆனால், திரும்பி வரமுடியாதென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (11) ஊடகவியலாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது, 'இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி தொடர்பில் படகு முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தீர்கள். இப்போராட்டம் முன்னெடுக்கப்படுமா? என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'இருநாட்டு மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்…

  23. -எஸ்.கே.பிரசாத் 'நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் டானியல் றெக்ஷியன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள கந்தசாமி கமலேந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.இந்தக் கொலைச்சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படவேண்டும், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்று நான் உத்தரவினை வழங்கியிருந்தேன். ஆனால் இது தனிப்பட்ட நபரின் பிரச்சினை. சில ஊடகங்கள் கட்சியின் மீது குற்றம்சாட்டுவது பொருத்தமற்றது' என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா (11) தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர், 'இந்தச் …

  24. கிளிநொச்சி மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர், பாதுகாவல் பணிகளுக்கு நூற்றுக்கணக்கான நாய்களைப் பயிற்றுவித்துள்ளனர். கிளிநொச்சிப் படைத்தலைமையகத்தின் கீழ் உள்ள 57, 65, 66வது டிவிசன்களைச் சேர்ந்த படையினரால், பாதுகாப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும், 353 நாய்களுக்கு 66-1வது பிரிகேட்டினால் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் இந்த நாய்களை பராமரிக்கும் படையினரும் பங்கேற்றுள்ளனர். இது கிளிநொச்சிப் படைத் தலைமையகத்தினால் காவல்நாய்களுக்காக வழங்கப்படும் இரண்டாவது கட்ட பயிற்சியாகும். காவல்நாய்களுக்கான இந்தப் பயிற்சி நிறைவும், நாய்களின் சாகச நிகழ்வும் கடந்த 6ம் நாள் கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது. இதில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட 180 நாய்களும் அவற்றின் பராமரிப்ப…

  25. கொழும்பிலுள்ள அமெரிக்க, பிரித்தானிய தூதுவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நீண்ட பேச்சுக்களை நடத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க தலைமையிலான நாடுகளால் ஜெனிவாவில் முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு எதிரான தீர்மான வரைவு தொடர்பாகவே இவர்கள் நேற்று முன்தினம் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரன்கின்னையும், அமெரிக்கத் துணைத் தூதுவர், வில்லியம் வெய்ன்ஸ்ரெய்னினையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின தலைவர். இரா.சம்பந்தன் தலைமையிலான, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவே இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றுள்ளது. இந்தச் சந்திப்புகளில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.