Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாடசாலை மாணவ மாணவியரை நல்வழிப்படுத்தி ஒழுக்கசீலர்களாக உருவாக்க வேண்டுமானால் அவர்களுக்கு முறையான உளவள ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் . மாறாக , இராணுவ ஒழுக்கக் கோவையினால் அதனை ஏற்படுத்த முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்தார் . இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 1 , தரம் 11 போன்ற பதவி நிலைகளுக்குத் தெரிவு செய்யப்படுகின்றவர்களுக்கு கேர்ணல் மற்றும் லெப்டினன்ட் கேர்ணல் போன்ற பதவி நிலைகளை வழங்கி கல்விச் சேவையை இராணுவமயமாக்குகின்றனர் . இது ஏற்புடைய ஒன்றல்ல எனவும் அவர் தெரிவித்தார் . இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது , கல்வி நிர்வாக சேவையில் இவ்வாறான பதவி நிலைகளை வழங்கும் போது அவர்கள் , இராணுவ ஒழுக்கக் கோவை போன்ற கடுமையான செயற்பாடுகள…

  2. ஆளும்கட்சி அரசியல்வாதிகளின் சொத்துக்களை முடக்குவதில், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தீவிரம்! – கொழும்பு ஊடகம் செய்தி. [sunday, 2014-02-23 18:35:45] அரசாங்க அரசியல்வாதிகளின் சொத்துக்களை முடக்குவதற்கும், பயணத் தடையை விதிப்பதற்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் முயற்சித்து வருவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை ஆளும்கட்சி அரசியல்வாதிகள் வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ள தடை விதித்து அவர்களது சொத்துக்களை முடக்குவதற்கே, புலம்பெயர் தமிழ் அமைப்புகள் முனைப்பு காட்டி வருகின்றன. பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் புலம்பெயர் அமைப்புக்கள் இந்த முயற்சியை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த முயற்சி வெற்றியளித்தால் ஜனாதிபதி மஹ…

  3. யுத்தம் தோற்கும் கட்டத்தை எட்டியிருந்தது – சரத் பொன்சேகா யுத்தம் தோற்கும் கட்டத்தை எட்டியிருந்ததாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தற்காலிக அடிப்படையில் ஏற்படுத்திக் கொண்ட யுத்த நிறுத்தத்தினால், யுத்தம் தோற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் 500 படைவீரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். கெசல்வத்த பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 48 மணித்தியால யுத்த நிறுத்தத்திற்கு உத்தரவிட்டிருந்தார் எனவும், அதற்கு தாம் கடும…

  4. நிக்கோபர், அந்தமான் தீவுகளில் புலி உறுப்பினர்கள்:- 23 பெப்ரவரி 2014 நிக்கோபர், அந்தமான் தீவுகளில் புலி உறுப்பினர்கள்:- இந்தியாவின் நிக்கோபர் மற்றும் அந்தமான் தீவுகளில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இருக்கக் கூடுமென தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அதிகாரிகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். அந்தமான் மற்றும் நி;க்கோபர் தீவுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சிய போராளிகள் தங்கியிருக்கக் கூடும் என்ற கருத்தை மறுப்பதற்கில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மியன்மார், பங்களாதேஷ், தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் குறித்த தீவுகளுக்கு அடிக்கடி ஊடுருவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் மொத்தமாக 572 தீவுகள் காணப்படுவதாகவும் இதில் 3…

  5. சென்னையில் மாணவர்களால் திரையிடப்பட்ட No Fire Zone! காணொளி மூலம் பேசிய கலம் மக்ரே இன்று சென்னையில் தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டமைப்பு சனல் நான்கு ஏற்கனவே வெளியிட்ட சிறீலங்காவில் நடந்த இனப்படுகொலை காட்சிகள் அடங்கிய ஆவணப்படத்தை மீண்டும் வெளியிட்டனர். இதில் ஆறு நிமிடங்கள் புதிய காட்சிகள் இணைக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து இப்படத்தை இயக்கிய கெலம் மக்ரே லண்டனில் இருந்து நேரடியாக மாணவர்களிடம் உரையாடினார். மாணவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஐ.நா வில் வரவிருக்கும் மனித உரிமை கூடத் தொடரில் தமிழக மாணவர்கள் இந்தியாவிற்கு தொடர் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் , இலங்கையில் பன்னாட்டு விசாரணை நடைபெற அமெரிக்க மற்றும் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது என்…

  6. பக்கசார்பாகச் செயற்படுகிறார் நவநீதம்பிள்ளை! – மீண்டும் குற்றம்சாட்டத் தொடங்கியது அரசாங்கம். [sunday, 2014-02-23 09:05:57] .நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை பக்கச்சார்பாக செயற்படுவதாக குற்றம்சாட்டி, இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஐ.நாவுக்கு முறைப்பாட்டு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சேனுகா செனேவிரட்னவினால் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள பிரேரணையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையே தயாரித்து வழங்கியதாக இலங்கை அரசாங்கத்துக்கு தகவல் கிடைத்திருப்பதாக அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர், தமது கடமையில் இருந்து …

  7. ஜெனீவா குறித்த நகர்வுகளைத் தீர்மானிக்க கூட்டமைப்பில் உயர்மட்டக்குழு நியமிப்பு! – சுரேஸ் பிரேமச்சந்திரன் தகவல். [sunday, 2014-02-23 18:20:16] ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உயர் மட்ட குழுவொன்றை நியமித்துள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தெரிவித்தார். இதேவேளை வட மாகாணசபையின் செயற்பாடுகள் மற்றும் செயற்பட வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக ஆராய மேலுமொரு உயர் மட்ட குழு வொன்றும் நேற்று முன்தினம் கொழும்பில் நடை பெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் நியமிக்கப்பட…

  8. ஹெரோயினுடன் பிடிபட்ட லெப்.கேணல் அதிகாரியின் பதவி பறிபோனது! [sunday, 2014-02-23 08:47:52] 3 கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமைச் சேர்ந்த லெப்டினன்ட் கேர்ணல், இராணுவத்தில் வகித்து வந்த பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். 3 கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் விசேட பிரிவு அறிவித்துள்ளது.அத்துடன் அவருக்கு போதைப்பொருட்களை வழங்குவதற்காக அதனை கொண்டு வந்த நபரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதையடுத்தே, இராணுவத் தளபதியால் உடனடியாக குறிப்பிட்ட இராணுவ அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. …

  9. 2009இல் புலிகளின் தாக்குதலால் யுத்தம் தோற்கும் கட்டத்தை அடைந்தது! – ஒப்புக்கொண்டார் பொன்சேகா [sunday, 2014-02-23 08:55:20] 2009ம் ஆண்டின் தொடக்கத்தில் யுத்தம் தோற்கும் கட்டத்தை எட்டியிருந்ததாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கெசல்வத்தயில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தற்காலிக யுத்தநிறுத்தம் அறிவிக்கப்பட்டதால், யுத்தம் தோற்க வேண்டிய கட்டத்தை அடைந்தது. 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் 500 படைவீரர்கள் கொல்லப்பட்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 48 மணித்தியால யுத்த நிறுத்தத்திற்கு உத்தரவிட்டிருந்தார். அதற்கு நான் கடுமையாக எதிர்ப்பை வெளியிட்டிருந்தேன். புலிகள் …

  10. 35 கிலோ தங்கம் கடத்திச் சென்ற இலங்கையர் இருவர் இராமேஸ்வரம் பாம்பனில் கைது! [sunday, 2014-02-23 08:31:19] இலங்கையில் இருந்து 35 கிலோ தங்கம் கடத்திச் சென்ற இருவரை இந்திய கடலோர காவல் குழும பொலிஸார் நேற்றையதினம் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு இலங்கையில் தங்கம் கடத்திவரப்படுவதாக கடலோர காவல் குழும பொலிஸாருக்கு ரகசிய தகவல்கிடைத்தது. இதனையடுத்து விரைந்து சென்ற பொலிஸார் பாம்பன் ரயில் நிலையத்தில் சாக்குமூட்டையுடன் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் சாக்கு மூட்டையில் இருந்த 35 கிலோ தங்கத்தை பொலிஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 11 கோடி என தெரிய பொலிஸார் தெரிவித்தனர். …

  11. இலங்கையுடனான நட்புறவைப் பாதிக்கும் என்பதாலேயே நோ பயர் சோன் ஆவணப்படத்துக்குத் தடையாம்! – காரணம் கூறுகிறது இந்தியா. [sunday, 2014-02-23 08:27:52] இலங்கையுடனான நட்புறவை பாதிக்கும் என்ற காரணத்தினாலேயே, நோ பயர் சோன்- (NO FIRE ZONE- The Killing Fields of Sri Lanka) ஆங்கிலத் திரைப்படத்தை இந்தியத் திரையரங்குகளில் வெளியிட இந்திய திரைப்பட தணிக்கைத் துறை அனுமதி மறுக்கப்பட்டதாக, தமக்கு காரணம் கூறப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குநர் கலம் மெக்ரே தெரிவித்தார். இந்தியாவின் இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும் மிகவும் தவறான முடிவு என்றும் கலம் மெக்ரே கூறினார்.'இலங்கையுடனான நட்புறவைப் பாதிக்கும் என்ற காரணத்தை அவர்கள் சொல்லியிருப்பது, குறுகிய கால அரசியல் அனுபவங்களை அடிப்படையாகக…

  12. நூற்றாண்டை கடந்து நினைவில் நிற்கும் 'போட் மெயில்' கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் உள்ளிட்ட பல விஷயங்களுக்காக, கடல் கடந்து செல்வது, தமிழர்களுக்கு புதிதல்ல. 'திரை கடல் ஓடி, திரவியம் தேடு...' என்ற பாடல் நமக்கு ஓராயிரம் நினைவுகளை தரும். அந்த வகையில், சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு, நூறு ஆண்டுகளுக்கு முன், ரயில் வசதி இருந்தது என்றால் நம்ப முடிகிறதா? கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் என பல வகையிலும், தமிழகத்திற்கும், இலங்கைக்கும் நல்ல தொடர்பு இருந்த காலம் அது. இன்றைய காலகட்டத்தில், நதி நீர் பிரச்னை உட்பட, பல்வேறு விஷயங்களுக்காக, அண்டை மாநிலங்களுடன், தமிழகத்திற்கு எப்போதும் சச்சரவு தான் இருந்து வருகிறது. ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன், இரு நாடுகளுக்கு இடையே ர…

  13. பிரபாகரனின் ஆவியே விக்னேஸ்வரன்: அவதானமாக இருக்க வேண்டும் அரசாங்கம்; :பொது பல சேனா வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயற்பாடுகளும் கருத்துக்களும் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் மீண்டுமொரு அழிவை கொண்டு வருவதற்கான சமிக்ஞையாகவே தென்படுகிறது. எனவே புலிகள் இயக்கத்தால் செய்ய முடியாது போனவற்றை செய்ய முயலும் பிரபாகரனின் ஆவியே விக்னேஸ்வரன் என்று பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். வட மாகாண மக்கள் முறையான அடிப்படை வசதிகளின்றி பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகிறார்கள். அவர்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைத்து அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டுவர வேண்டிய பொறுப்பு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு உண்டு. அதையெல்லாம் கண்டு க…

  14. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகையின்போது முள்ளிவாய்க்காலில் அகற்றப்பட்டிருந்த இறுதிப்போரின் எச்சங்கள் முள்ளி வாய்க்கால் கடற்கரையோரம்(பனையடி ) குவிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. இத்தகவலை வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் உறுதிப்படுத்தியுள்ளார். அண்மையில் முள்ளிவாய்க்கால் மீனவர்களின் அழைப்பை ஏற்று அவர்களின் இவ்வருட கரைவலை மீன்பிடியை(நாள் வலை ) தொடக்கி வைக்க சென்றிருந்த போதே, இப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்த இறுதிப்போரின் எச்சங்களை நேரில் அவதானித்துள்ளார். http://www.sankathi24.com/news/38743/64//d,fullart.aspx

  15. தனது எதிர்ப்பையும் மீறி மகிந்த ராஜபக்ச அறிவித்த போர்நிறுத்தத்தினால், 2009 ஜனவரி இறுதியில், விடுதலைப் புலிகளுடனான போரில் தோல்வியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டதாக, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்சியின் தலைவரான அவர், செசல்வத்தையில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 2009 ஜனவரி 31ம் நாள் அறிவிக்கப்பட்ட இரண்டு நாள் தற்காலிக போர்ஓய்வை அடுத்து, விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் 500 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டனர். சிறிலங்கா அதிபர் 48 மணிநேர போர்ஓய்வை அறிவித்த போது நான் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தேன். இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளால், பின்தள்ளப்பட்ட…

  16. தென்னாபிரிக்காவின் முறைப்படியான அழைப்பு இல்லாமலேயே, சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு, அந்த நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையிலான உயர்மட்டக்குழு கடந்த 20ம் நாள் தொடக்கம், 22ம் நாள் வரை தென்னாபிரிக்காவில் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கான பயணத்தை மேற்கொண்டது. எனினும், இதற்கு தென்னாபிரிக்காவிடம் இருந்து முறைப்படியான அழைப்பு ஏதும் விடுக்கப்படவில்லை என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, தென்னாபிரிக்காவின் அனைத்துலக உறவுகளுக்கான பிரதி அமைச்சர் இப்ராகிம் இஸ்மாயில் இப்ராகிமுடன் தாம் தொடர்பு கொண்ட போதே, சிறிலங்கா குழு அழைப்பின்றியே பயணம் மேற்கொண்ட …

  17. விசாரணைக்குழு அமைக்கப்படுமானால் த.தே.கூ. வின் ஆலோசனை பெறப்பட வேண்டும்: சுரேஷ் ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் தீர்மானத்துக்கு அமைவாக சர்வதேச விசாரணையொன்று கொண்டு வரப்படுமானால் அப்பொறி முறையினூடான விசாரணை சிறப்புடையதாக அமையும் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார். அவரிடம் ஜெனிவா மாநாடு பற்றி கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் இன்னுமொரு பொறிமுறை பற்றியும் கூறப்படுகிறது. ஆனால் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கு அமைய விசாரணை மேற்கொள்ளப்படுமானால் அதுவே கனதியாக இருக்க முடியும் என தெரிவித்துள்ளார். ஜெனிவா மனித உரிமைப்பேரவையினால் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்படும் போது…

  18. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடும்போக்குவாதிகளினால் வட மாகாணசபையின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக அமைச்சர் திஸ்ஸ விதாரண குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு தீர்மானங்களை குறித்த தரப்பினர் நிறைவேற்றி வருகின்றனர். வட மாகாணசபை எந்தவொரு தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியும் என்ற போதிலும், அது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கே காணப்படுகின்றது. நேரடியாக விமான மற்றும் கப்பல் சேவைகளை முன்னெடுக்க வட மாகாணசபைக்கு மெய்யான தேவை இருந்திருந்தால், மத்திய அரசாங்கத்துடன் பேசி அதற்கான நடவடிக்கை எடுத்திருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியதுடன், விமான நிலையங்களோ,…

  19. ஆதவன்-பிரியராசா யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை 9.30 மணியளவில் வருகைதந்த இந்திய தெற்கு இராணுவத் கட்டளைத்தளபதி லெப்டினல் ஜெனரல் அசோக் சிங் மற்றும் துணை இராணுவ கட்டளைத் தளபதி ஆகியோர் பலாலியிலுள்ள இந்திய இராணுவ வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதேவேளை யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர். ஜெனரல் உதயப் பெரேராவையும் பலாலி படைத் தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்.பலாலி படைத்தலைமையகத்திற்கு இன்று காலை வருகைதந்த இந்திய இராணுவ கட்டளைத்தளபதி யாழ்.மவட்ட கட்டளைத்தளபதி கைலாகுகொடுத்து வரவேற்றார். இதனையடுத்து செங்கம்பள வரவேட்பும் இந்திய இராணுவ கட்டளைத்தளபதிக்கு வழங்கப்பட்டது. பலாலி படைத் தலைமையகத்திலுள்ள இந்திய இராணுவத்தினரின் ந…

  20. இந்தியாவில் உள்ள அனைத்து இலங்கைத் தமிழர்களையும் உடனடியாக நாடு கடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான வீ.வைத்தியலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ``ராஜீவ் காந்தியின் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மத்திய அரசாங்கத்தின் ஆலோசனை இன்றி தன்னிச்சையாக தமிழக அரசாங்கம் இவ்வாறு தீர்மானிக்க முடியாது. இது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் நோக்கத்துக்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் என்றார். இதனைத்தொடர்ந்து, இந்தியாவில் உள்ள அனைத்து இலங்கைத் …

  21. கிளர்ச்சிகளுக்கு அஞ்சி சமூக வலைத் தளங்களை முடக்க அரசு முயற்சி! [saturday, 2014-02-22 09:07:21] கிளர்ச்சிகளுக்கு அஞ்சி அரசாங்கம் சமூக வலைத் தளங்களை முடக்க முயற்சித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். முகநூல் போன்ற சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி கிளர்ச்சிகள் மேற்கொள்ளப்படக் கூடுமென்ற அச்சம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் முகநூலை தடை செய்யும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். முகநூல் தொடர்பிலான ஒரு சில சம்பவங்களைப் பயன்படுத்தி அரசாங்கம் நாட்டில் முகநூல் பயன்பாட்டை தடை செய்ய முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். ஒரு சில சம…

  22. 25 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்காவில் இந்திய அமைதி காக்கும் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டமை உரிமை மீறல் சம்பவம் என உள்நாட்டுப் போரில் காணாமற் போனவர்கள் தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசாங்கத்தின் ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டுள்ளது. சிறிலங்காவின் வடக்கில் இவ்வார இறுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆணைக்குழுவின் விசாரணையின் போதே இந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிராகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாக என தனது பெயரை வெளிப்பட விரும்பாத, இந்த ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். "இந்த முறைப்படானது ஆணைக்குழுவால் விசாரணை செய்யப்படும் காலப்பகுதிக்கு அப்பாற்பட்டது" என குறித்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்திய அமைதி காக்கும…

  23. கிளிநொச்சியில் இளம் சமூகத்தினர் ஆபத்தான சூழலை நோக்கி செல்கின்றனர் -சிவில் சமூக பிரதிநிதிகள் கவலை. குளோபல்தமிழ்ச்செய்தியாளர் கிளிநொச்சி கிளிநொச்சி மாவட்டத்தில் இளம் சமூகத்தினர் ஆபத்தான சூழலை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூகங்களின் பிரதிநிதிகள் கவலை தெரிவித்துள்ளனர். இன்று(22-02-2014) முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்டத்தின் சிவில் சமூக பிரதிநிதிகளின் கலந்துரையாடலின் போதே மேற்படி கவலை வெளியிடப்பட்டுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த சிவில் சமூக பிரதிநிதிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசலை மாணவர்கள் உள்ளிட்ட இளம் தலைமுறையினர் மதுபானம்,புகைத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் அண்மைக்கா…

  24. குளோபல்தமிழ்ச்செய்தியாளர் மன்னார் யுத்தம் முடிந்து 4 ஆண்டுகளில் மன்னாரில் வங்கிகளும்,லீசிங் கம்பனிகளும் பல்கிப்பெருகியுள்ளன. இதன் விளைவாக மன்னார் மக்களும் குறிப்பாக பெண்களும் பெரும் கடன் சுமையில் மூழ்கி தலை மறைவாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மன்னாரில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட வங்கிகளும் அதற்குச்சமமாக 'லீசிங்' கம்பனிகளும் கடை விதித்துள்ளன. -இதில் குறிப்பாக லீசிங் கம்பனிகளின் பிரதிநிதிகள் வீடு,வீடாகச் சென்று அங்கு தனிமையில் இருக்கும் பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக்கூறி தமது பொருட்களை சந்தைப்படுத்தி வருகின்றனர். இவர்களுடைய ஆசை வார்த்தைகளில் மயங்கிய பெண்கள் முற்பணத்தைக் கொடுத்து பொருட்களை பெற்றுக்கொண்டு மாதாந்த தவணைப்பணத்தை செலுத்த முடியாது அவதி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.