Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. -மொஹொமட் ஆஸிக் கண்டி நகரிலுள்ள வெளிநாட்டு வேலை வழங்கும் நிறுவனம் ஒன்றிக்கு முன்பாக 14,12,7 வயதுகளை உடைய தனது மூன்று பிள்ளைகளையும் கைவிட்டுவிட்டு தலைமறைவான தந்தையை தேடி வலைவிரித்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர். கைவிடப்பட்ட குழந்தைகையில் 7 வயதுடைய பிள்ளை பெண் என்றும் மற்றைய இருவரும் ஆண்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். குழந்தைகளின் தாய், கண்டியிலுள்ள வெளிநாட்டு வேலை வழங்கும் நிறுவனம் ஒன்று மூலமாக மத்திய கிழக்கு நாடொன்றிற்கு பணிப் பெண்ணாகச் சென்றுள்ளார்.இந்நிலையில்,நேற்று மாலை அவரின் கணவர் தனது மூன்று பிள்ளைகளையும் குறித்த நிறுவனத்திற்கு அழைத்து வந்து அவர்களைக் அங்கு கைவிட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார். மேற்படி மூன்று பிள்ளைகளையும் கண்டி நீதவான் மன்றில் ஆஜர் செய்ய…

  2. இலங்கையின் சிரேஸ்ட ராஜதந்திரிகளில் ஒருவரும் அவுஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸின் கொன்சோல் அதிகாரியுமான பந்துல ஜயசேகர இன்னமும் வளர்ச்சியடையவில்லை என செனல்4 ஊடகவியலாளர் கலம் மக்ரே குற்றம் சுமத்தியுள்ளார். பந்துல ஜயசேகரவிற்கும் கலம் மக்ரேவிற்கும் இடையில் டுவிட்டர் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. செனல்4 ஊடகவியலாளர் கலம் மக்ரே, தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக பந்துல ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார். மக்ரே, புலிகளின் தத்துவாசிரியா அமரர் அன்ரன் பாலசிங்கத்தின் பாரியார் அடெல் பாலசிங்கத்திற்காக செயற்பட்டு வருவதாக அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார். யுத்த சூன்ய வலயம் என்ற ஆவணப்படத்தை இயக்கிய மக்ரே புலிகளின் பிரச்சாரப் பொறுப்பாள…

  3. கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் முன்னால் தேசிய அமைப்புகளின் ஒன்றியம் இன்று காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. அமெரிக்காவின் போர் குற்றவிசாரணைக்குப் பொறுப்பான தூதுவர் ஸ்டீபன் ஜெ ரெப் இலங்கைக்கு வந்துள்ள நிலையிலேயே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை விடயத்தில் அமெரிக்காவின் தலையீடு மற்றும் நாட்டை இரண்டாக பிளவுபடுத்தும் முயற்சி ஆகிய செயற்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோஷங்களை எழுப்பினர். (படம் : எம்.எஸ்.சலீம்) http://www.virakesari.lk/?q=node/360549

  4. இலங்கையிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளவர்களையும் அரசாங்கத்தின் நல்லெண்ணத்தை இனப்பிரச்சினைத் தீர்வில் காட்டும் முகமாக பொது மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி விடுவிக்க வேண்டும். இதற்கு வடமாகாண சபை ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுக்கவேண்டுமென மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் சபையில் பிரேரணையை முன்வைத்தார். யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையின் கட்டடத்தில் நடைபெற்ற சபையின் நான்காவது அமர்வின்போதே சிவாஜிலிங்கம் இப்பிரேரணையை முன்வைத்தார். இப்பிரேரணையை வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் முன்மொழிய மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரவேற்று உரையாற்றினார். பிரேரணையை முன்வைத்…

  5. வவுனியா வடக்கு பிரதேசத்தை மது மற்றும் புகைத்தல் அற்ற பிரதேசமாக மாற்ற வேண்டும் என பிரதேச செயலக மற்றும் சுகாதார திணைக்களத்தின் ஊழியாகள் பாடசாலை மாணவர்கள் இன்று (10.1) உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மீள்குடியேற்றப்பட்ட பிரதேசத்தில் மது மற்றும் புகைத்தலை நிறுத்துவதன் ஊடாக பொருளாதாரத்தில் அபிவிருத்தியை காணமுடியும் என்ற நோக்கோடு இடம்பெற்ற இந் நிகழ்வில் முதல்கட்டமாக வவனியா வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கருத்தரங்கு இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து பிரதேச செயலகத்தில் இருந்து நெடுங்கேணி மகாவித்தியாலயம் வரை வழிப்புணாவு ஊர்வலமும் இடம்பெற்றிருந்தது. அதனையடுத்து நெடுங்கேணி மகாவித்தியாலயத்தின் முன்பாக ஊர்வலத்தில் கலந்துகொண்டோர் பிரதேசத்தில் மது மற்றும் புகைத்தலை இல்லாதொழிக்…

  6. வடக்கில், இரணைப்பாலை சென்.அந்தனிஸ் பாடசாலை மைதானத்தில் எடுத்த சர்ச்சைக்குறிய படத்தையும் அதன் விளக்கத்தையும் டுவிடரில் இருந்து மாற்றப் போவதில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், வடக்கின் இரணைப்பாலை சென்.அந்தனிஸ் பாடசாலை மைதானத்தின் மீது இலங்கை இராணுவத்தினர் நடத்திய ஷெல் தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்காவின் சமூக வலைத்தளத்தளமான டுவீட்டரில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. இந்த புகைப்பட்டத்தில் இலங்கைக்கு சென்றிருந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே.ரெப்பும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்…

  7. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே.ரெப்பின் இலங்கை விஜயத்திற்கு எதிராக தேசிய ஓழுங்கமைப்பு ஒன்றியத்தினர் இன்று கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்திற்கு முன்பாக ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். (படங்கள்:பிரதீப் தில்ருக்ஷன) http://tamil.dailymirror.lk/--main/96206-2014-01-09-07-21-13.html

  8. தேசத்­து­ரோக செயலில் ஈடு­படும் மன்னார்,யாழ். கத்­தோ­லிக்க ஆயர்­களை உட­ன­டி­யாக கைது செய்ய வேண்டும்-ஞான­சார தேரர் தேசத்­து­ரோக செயலில் ஈடு­படும் மன்னார் மற் றும் யாழ். கத்­தோ­லிக்க ஆயர்­களை உட­ன­டி­யாக கைது செய்ய அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும் என வலி­யு­றுத்தும் பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர்இ தமிழ் -சிங்­கள மக்­களின் ஒற்­று­மையை சீர் குலைக்கும் இந்த ஆயர்­களின் சதியை தமிழ் இந்துத் தலை­வர்கள் புரிந்து கொள்ள வேண்­டு­மென்றும் தேரர் தெரி­வித்தார். இறுதிக் கட்ட யுத்­தத்தின் போது இரா­ணுவம் மக்கள் மீது இர­சா­யன ஆயுத தாக்­குதல், கொத்து குண்­டு­களை போட்­ட­ன­ரென்றும் எனவே சர்­வ­தேச விசா­ரணை தேவை­யென்றும் அமெ­ரிக்க விசேட பிர­தி­நிதி ஸ…

  9. இலங்கையில் புதிதாக மத வழிபாட்டு தலங்களை நிர்மாணிப்பதற்கும் செயற்படுத்துவதற்கும் புத்த சாசனம் மற்றும் மத விவகார அமைச்சின் எழுத்து மூல அனுமதி பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.புத்த சாசனம் மற்றும் மத விவகார அமைச்சின் செயலாளர் எம். கே. பீ. தர்மதாசாவினால் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல் உள் நாட்டு பத்திரிகைகளில் இன்று வெளியாகியுள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில், நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் விகாரைகள், கோயிலகள், மசூதிகள், தேவாலயங்கள், தியான நிலையங்கள், ஜெப நிலையங்கள் ஆகியவை எவ்வித தர நிர்ணயங்களும் இன்றியும் அனுமதி இன்றியும் பரவலாக நிர்மாணிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. அரச மரம், சிலைகள், தர்மச் சக்க…

  10. சிறிலங்காவுக்கு எதிராக ஆதாரமற்ற போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் போருக்குப் பிந்திய நல்லிணக்க செயற்பாடுகளை அமெரிக்கா சீர்குலைப்பதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். “ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியாவில் தனது சொந்த செயற்பாடுகள் தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தப்படாத நிலையில், சிறிலங்காவின் பொறுப்புக்கூறல் விவகாரங்களில் அமெரிக்கா எதற்காக அக்கறை காட்டுகிறது என்று உண்மையில் புரிந்து கொள்ள முடியவில்லை. மேற்குலகின் இந்த இரட்டைவேடம் குறித்து கடந்த திங்கட்கிழமை ஸ்டீபன் ராப்பையும், அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிசனையும் சந்தித்த போது சுட்டிக்காட்டியிருந்தேன். முன்னாள் லிபிய அதிபர் முவம்மர் கடாபி கைது செய்யப்பட…

  11. "நம்பிக்கை ஊட்டக்கூடிய சில தகவல்களை அமெரிக்க பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர்" இலங்கையில் நடந்தது இன அழிப்பே. அது இன்று வரை தொடர்வதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கான பயணமொன்றை மேற்கொண்டு சென்றிருந்த போர்க்குற்றங்களிற்கான அமெரிக்க அரசின் ஆலோசகர் ஸ்ரீபன் ரெப்பினை அவர் யாழ்.நகரிலுள்ள விடுதி ஒன்றில் இன்று மாலை சந்தித்து உரையாடியிருந்தார். அச்சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதரும் பிரசன்னமாகியிருந்தார். சந்திப்பின் பின்னர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கருத்து தெரிவித்த அனந்தி சசிதரன் 'இலங்கையில் நடந்தது இன அழிப்பே. அது இன்று வரை தொடர்வதாக அவர்களிடம் சுட்டிக்காட்டியிருந்தேன். இறுதி யுத்த காலப…

  12. இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் வடக்கு ரயில் பாதை புனரமைப்புப் பணிகள் எழுதுமட்டுவாள் வரை பூர்த்தியடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 15ம் திகதி பளை வரை பரீட்சார்த்த ரயில் ஓட்டம் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். தற்போது கிளிநொச்சி வரையே ரயில் சேவை இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. காங்கேசன்துறை வரையான ரயில் பாதை அமைப்புப் பணி வரும் ஏப்ரல் மாதம் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=101092&category=TamilNews&language=tamil

  13. மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்பு சபை உட்பட பல அரசசார்பற்ற நிறுவனங்களை நேற்று சந்தித்து இலங்கையில் மனிதஉரிமை நிலவரம் பற்றி கலந்துரையாடியுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ சுவையர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். 'இலங்கையில் மனித உரிமைகள் விடயத்தின் தொடர் முன்னேற்றத்தில் பிரித்தானியா கொண்டிருக்கும் அக்கறையை தான் தெளிவாக எடுத்துக் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=101091&category=TamilNews&language=tamil

  14. அவுஸ்ரேலியாவின் நியூசவுத் வேல்சில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரக அதிகாரியாக உள்ள பந்துல ஜெயசேகரவும், சனல் 4 ஊடகவியலாளர் கல்லும் மக்ரேயும், சிறிலங்கா விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் போர் நடத்திக் கொண்டிருக்கின்றனர். விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியரான அன்ரன் பாலசிங்கத்தின் துணைவியான அடேல் பாலசிங்கத்துக்காக கல்லும் மக்ரே பணியாற்றுவதாக பந்துல ஜெயசேகர குற்றம்சாட்டியுள்ளார். அதனை கல்லும் மக்ரே கடுமையாக மறுத்துள்ளார். தாம் அடேல் பாலசிங்கத்தை தனது வாழ்நாளில் சந்தித்ததேயில்லை என்றும், நபைப்புக்கிடமான பரப்புரையில் பந்துல ஜெயசேகர இறங்கியுள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் விடுதலைப் புலிகளின் பரப்புரைத் தலைவர் என்றும் கல்லும் மக்ரேயை, பந்துல ஜெயசேகர குறிப்பிட்டுள்ளார். …

  15. யாழ். பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் வேந்தர் எம்.சிவசூரியா தலைமையில் 29ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. நாளை சனிக்கிழமைவரை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், 08 அமர்வுகளாக 1,673 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றன. 911 இளங்கலைமானிப் பட்டதாரிகளும் 210 முதுகலைமானிப் பட்டதாரிகளும் 141 முதுநிலைமானிப் பட்டதாரிகளும் யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தைச் சேர்ந்த 124 பேரும் 03 மேற்பட்ட டிப்ளோமாதாரிகளும் 62 டிப்ளோமாதாரிகளும் 222 வெளிவாரிப்பட்டதாரிகளும் பட்டங்களைப் பெறுகின்றனர். (படங்கள்: சுமித்தி தங்கராசா) http://tamil.dailymirror.lk/--main/96316-2014-01-10-08-15-52.html

  16. -நா.நவரத்தினராசா வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தினால் வடமாகாண மாணவர்களை விளையாட்டுத் துறையில் மாகாண, தேசிய மட்டங்களில் வெற்றிகளை பெறும் வகையில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு 'வீரசூரி' என்னும் விருது வழங்கி கௌரவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் இன்று (10) தெரிவித்தார். குறித்த விருதினை அறிமுகம் செய்வதன் மூலம் 2014ஆம் ஆண்டு வடமாகாண பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிப்படுமென அவர் தெரிவித்தார். குறித்த விருது தமிழர்களின் மரபு வழிவந்த, மூதாதையர்களின் வழக்கத்திலிருந்து வந்த வீர விருதாக 'வீரசூரி' விருதினை அறிமுகப்படுத்துகின்றோம். இதனூடாக தேசிய ரீதியில் மாணவர்களை …

  17. -எஸ்.கே.பிரசாத் யாழ்ப்பாணத்திலிருந்து இடமாற்றமாகிச் செல்வது கவலை அளிப்பதுடன், இங்குள்ள மக்களை விட்டுப் பிரிவதற்கு தனக்கு மனம் இல்லையெனவும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். கொழும்பு இராணுவத் தலைமையகத்தின் நிர்வாக அதிகாரியாக நாளை வெள்ளிக்கிழமை இவர் பதவியேற்கவுள்ளார். எழுதுமட்டுவாள் பகுதியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற 52ஆவது படைப்பிரிவின் தலைமையகத் திறப்பு விழாவின்போது, ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில், 'யாழ். மாவட்டத்தில் கடந்த 04 வருடங்களாக கடமையாற்றி வருகின்றேன். இந்தக் காலப்பகுதியில் இங்கு வாழ்கின்ற மக்களுக்கு பல சேவைகளைச் செய்துள்ளோம். …

  18. சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதியாக எயர் வைஸ் மார்சல் கோலித அரவிந்த குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்தமாத இறுதியுடன் தற்போதைய விமானப்படைத் தளபதி எயர் மார்சல் ஹர்ச அபேவிக்கிரம ஓய்வுபெறவுள்ள நிலையில், அடுத்த மாதம் 28ம் நாள் சிறிலங்கா விமானப்படையின் தளபதியாக எயர் வைஸ் மார்சல் கோலித குணதிலகவை சிறிலங்கா அதிபர் நியமித்துள்ளார். இவர் தற்போது சிறிலங்கா விமானப்படையின் தலைமை அதிகாரியாக உள்ளார். 1980இல் சிறிலங்கா விமானப்படையில் இணைந்த இவர், ஆரம்ப விமானிப் பயிற்சியை முடித்த பின்னர், பாகிஸ்தானில் சிறப்பு பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். அதன் பின்னர், முதலாம் கட்ட ஈழப்போரில் சியாமாசெற்றி குண்டு வீச்சு விமானத்தின் விமானியாகவும், பின்னர் புக்காரா தரைத்தாக்குதல் விமானத்தின் வ…

  19. (எம்.நியூட்டன்) இலங்கையிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளவர்களையும் அரசாங்கத்தின் நல்லெண்ணத்தை இனப்பிரச்சினைத் தீர்வில் காட்டும் முகமாக பொது மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி விடுவிக்க வேண்டும். இதற்கு வடமாகாண சபை ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுக்கவேண்டுமென மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் சபையில் பிரேரணையை முன்வைத்தார். யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையின் கட்டடத்தில் நடைபெற்ற சபையின் நான்காவது அமர்வின்போதே சிவாஜிலிங்கம் இப்பிரேரணையை முன்வைத்தார். இப்பிரேரணையை வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் முன்மொழிய மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரவேற்று உரையாற்றினார். ப…

  20. இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தும் தீர்மானத்தை எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்ற அமெரிக்கா முழுமூச்சுடன் தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் நேற்று நேரடியாகத் தெரிவித்துள்ளார் சர்வதேசப் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்ரீபன் ராப். இலங்கை அரசுக்கு எதிராக இந்த சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தும் தீர்மானத்தை ஐ.நாவில் நிறைவேற்றுவதற்காக மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளுடன் அமெரிக்கா பேச்சு நடத்திக் கொண்டிருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.…

  21. இன்றைய செய்தியறிக்கை (09.01.2014)

  22. மத்திய கிழக்கு நாடுகளுக்கான தமது விஜயத்தை நிறைவு செய்துக் கொண்டு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ இன்றைய தினம் நாடு திரும்பினார். கடந்த சனிக்கிழமை இந்த விஜயத்தை அவர் ஆரம்பித்திருந்தார். முதலில் ஜோர்தானிலும், பின்னர் பாலஸ்தீன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செய்த ஜனாதிபதி, அந்தந்த நாடுகளின் அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். அத்துடன் இதன் போது பல வர்த்தக உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டதுடன், பாலஸ்தீனத்தில் வைத்து அவருக்கு ஸ்டார் ஒப் பாலஸ்தீன் என்ற விருதும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/28988/85//d,article_full.aspx

  23. -எஸ்.கே.பிரசாத்,நா.நவரத்தினராசா 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்.முற்றவெளி திறந்த வெளியரங்கில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டின் போது உயிரிழந்தவர்களின் 40 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வு யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் அமைந்துள்ள நினைவு தூபிக்கு முன்பாக இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, வடமாகாண சபை உறுப்பினர்களான கனகலிங்கம் சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், வேலுப்பிள்ளை சிவயோகன், அரியகுட்டி பரஞ்சோதி, பாலச்சந்திரன் கஜதீபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற தம…

  24. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு கீழுள்ள வலி.கிழக்கு பிரதேச சபையின் வரவு – செலவுத்திட்டம் இரண்டாவது தடவையாக இன்று சமர்ப்பிக்கப்பட்ட போதும், 3 மேலதிக வாக்குகளால் மீண்டும் தோல்வியடைந்தது. வலி.கிழக்கு பிரதேச சபையின் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத்திட்டத்தினை தவிசாளர் அன்னலிங்கம் உதயகுமார் சபையில் இன்று (10) இரண்டாவது தடவையாகச் சமர்ப்பித்து, வாசித்துக் காட்டினார். இதன்போது, பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கொன்ஸ்ரன்ரைன் ஜக்சீலும் உடனிருந்தார். இந்நிலையில், முதலாவது முறை கொண்டுவரப்பட்ட வரவு – செலவுத்திட்டத்தினை மாற்றங்கள் எதுவும் செய்யாமல் அப்படியே கொண்டு வந்தமை, மற்றும் சபை உறுப்பினர்களின் ஆலோசனைகள் பெறப்படவில்லையென சபை உறுப்பினர்களுடையே வாதவிவாதம் இடம்பெற்ற…

  25. வெள்ளி, ஜனவரி 10, 2014 - 09:58 மணி தமிழீழம் | தமிழ்நாடன், யாழ்ப்பாணம் இதுவல்லவோ பிறந்த நாள்.... ஜேர்மனை சேர்ந்த தமிழ் சிறுவன் தனது 10 வது பிறந்த நாளை அனைத்து தமிழ் மக்களையும் கண்கலங்க வைக்கும் வகையினில் தாயகத்தினில் கொண்டாடியுள்ளான்.தனது கைச்செலவிற்கென பெற்றோர் வழங்கிய பணத்தினை சேமித்து வைத்திருந்த அவன் பிறந்த தின கொண்டாட்டங்களிற்கென பெற்றோர் வைத்திருந்த பணத்தினையும் கேட்டுப்பெற்றுள்ளான். தாயக செய்திகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டுள்ள அவன் தனது பிறந்த தினத்தினை யுத்தத்தினால் நடமாட முடியாதிருக்கும் தாயக உறவுகள் இரண்டிற்கு உதவ விருப்பங்கொண்டுள்ளான்.அவனது உதவிகளை ஊடகவியலாளர்கள் சிலரது உதவியுடன் கள செயற்பாட்டாளர் ச.சஜீபன் மூலம் அவன் சேர்ப்பித்துள்ளான்.கண்ணீருடே நூறு வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.