ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
'1200 புலிகள் இன்னும் மறைந்திருக்கின்றனர்' திங்கட்கிழமை, 21 ஜனவரி 2013 01:40 0 COMMENTS பாதுகாப்பு படையினரிடம் சரணடையாத மற்றும் கைதுசெய்யப்படாத நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச்சேர்ந்த இன்னும் 1200 பேர் இருக்கின்றனர். என்று பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். புலி சந்தேகநபர்கள் 400 பேர் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் இருப்பதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். வடக்கு பாதுகாப்பு பிரிவினரினால் கடந்தவாரம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட தகவல் வெளியாகியுள்ளதாக பிபிசியின் சிங்கள சேவையான சந்தேஷிய தெரிவித்துள்ளது. அந்த 1200 பேரிலும் 400 பேர் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல மாகாணங்களில் வசிப்பதாகவும் ஏனையோர் வெளிநாடுகளுக…
-
- 0 replies
- 715 views
-
-
'வடக்கில் கைதான 44 பேரும் பூஸாவுக்கு மாற்றம்' திங்கட்கிழமை, 21 ஜனவரி 2013 02:04 தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச்சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் வைத்து கைதுசெய்யப்பட்ட 44 பேரும் காலி பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பிபிசியின் சிங்கள சேவையான சந்தேஷிய தெரிவித்துள்ளதாவது, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை விடுதலைச்செய்வதற்கு முன்வருமாறு கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் மாவட்ட அதிகாரி தங்கவேல் கனகராஜ் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டவர்க…
-
- 0 replies
- 456 views
-
-
இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் சபைக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எவ்வகையிலும் நடைமுறைப்படுத்த அரசு முயற்சிக்கவில்லை என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் கூறுகிறார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் சி.மூ, இராசமாணிக்கத்தின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றும் போதே சம்பந்தர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். மட்டக்களப்பில் இவ்விழாவின் உரையாற்றிய அவர், நாட்டில் இயல்பு நிலையைக் கொண்டுவர இலங்கை அரசு இன்னும் பல விஷயங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது எனவும் சுட…
-
- 1 reply
- 661 views
-
-
வேலுப்பிள்ளை பிரபாகரன் இயக்கிய செஞ் சோலையை திறக்கிறார் குமரன் பத்மநாதன்: 13 ஜனவரி 2013 கிளிநொச்சியில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மீண்டும் செஞ்சோலை சிறுவர் இல்லம் திறக்கப்படவுள்ளது. செஞ்சோலை வேலுப்பிள்ளை பிரபாகரனால் ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க உருவாக்கப்பட்ட சிறுவர் இல்லம். பிரபாரகரனின் நேரடி வழிப்படுத்தலுடன் இந்த இல்லம் இயங்கிவந்தது. அத்துடன் செஞ்சோலை சிறார்களுடன் பிரபாகரன் மிகவும் நெருக்கமாக பழகி வந்ருந்தனர் எனக் சுறப்பட்டது. செஞ்சோலையில் பிரபாகரன் புலிக்குழந்தைகளை வளர்க்கிறார் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்தது. கடந்த 2006ஆம் ஆண்டு புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தில் உள்ள செஞ்சோலை வளாகம்மீது இலங்கை அரச விமானப்படை குண்டு வீசித்தாக்கியதில் 53 பாடசாலை …
-
- 3 replies
- 1.9k views
-
-
யாழ்ப்பாணத்தில் சர்வதேச வர்த்தகக் கண் காட்சி இடம்பெற்று வருகின்றது. சர்வதேசம் என்ற அகலித்த பெயர் சூட்டப்பட்டு நடத்தப்படு கின்ற வர்த்தகக் கண்காட்சியால் யாழ்.குடா நாட்டு மக்களுக்கு ஏற்படக் கூடிய நன்மைகள் என்ன? என்பதும் இத்தகைய கண்காட்சிகள் எங்கள் இளம் சந்ததியிடம் மனமாற்றத்தை ஏற்படுத்துமா? என்பது குறித்தும் ஒரு கணம் நாம் சிந்திப்பது அவசியமானதாகும். தனித்து இலாப நோக்கத்தை மட்டும் மைய மாகக் கொண்ட கண்காட்சியாக இது இருக்கு மாக இருந்தால் அதனால் யாழ்.குடாநாட்டில் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்பது திண்ணம். சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை வருடந் தோறும் யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக உள்ளன. இதற்கு யாழ்ப்பாண வணிகர் கழகமும் காத் திரமான ஆதரவை வழங்கிவருகின்றத…
-
- 0 replies
- 431 views
-
-
ஊடகங்கள் உரியமுறையில் அறிக்கையிடாவிடின் முன்னாள் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு நடந்ததே ஊடகங்களுக்கும் நடக்கும். என்று மேல் மாகாண சபை அமைச்சர் உபாலி கொடிக்கார தெரிவித்தார். கோட்டாவ தர்மபால வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த பாடசாலையில் ஆரம்ப பிரிவை நிறுவுவதற்காக எடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஒரு சிறு பிரிவினர் தங்களுடைய எதிர்ப்பினை தெரிவிக்கின்றனர். அவ்வாறானவர்களுக்கு ஆதரவாக எழுதுகின்ற ஊடகவியலாளர்கள் உண்மையை மறைத்துவிடுகின்றனர். விபரங்களை தேடியறிந்து அறிக்கையிடவும் இல்லையேல் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு நடந்ததே அவர்களுக்கும் நடக்கும் என்…
-
- 1 reply
- 426 views
-
-
சிறிலங்காவின் நீதித்துறை இழைத்த தவறே மகிந்தவை எல்லைகளற்ற அதிகார சக்தியாக மாற்றியது [ ஞாயிற்றுக்கிழமை, 20 சனவரி 2013, 10:20 GMT ] [ நித்தியபாரதி ] 1978ல் சிறிலங்கா குடியரசு யாப்பு உருவாக்கப்பட்ட வேளையில் சிறிலங்கா உயர் நீதிமன்ற நீதிபதிகளை சிறிலங்காவின் நிறைவேற்று அதிபர் நியமிப்பார் என்பது வரையறுக்கப்பட்ட போது, சிறிலங்காவின் சுயாதீன நீதித்துறை இதனை எதிர்க்கவில்லை. இவ்வாறு மலேசியாவை தளமாகக்கொண்ட The New Straits Times ஊடகத்தில் அதன் பத்தி எழுத்தாளர் Arjuna Ranawana எழுதியுள்ள பத்தியில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. தலைமை நீதியரசராகக் கடமையாற்றிய கலாநிதி சிராணி பண்டாரநாயக்க மீதான முரட்டுத்தனமாக, கொட…
-
- 1 reply
- 601 views
-
-
பதிவு செய்யப்படாத தொலைபேசிகளுக்கு தடை... [sunday, 2013-01-20 10:28:12] பதிவு செய்யப்படாத தொலைபேசிகள் நாட்டினுள் கொண்டுவருவது முற்றாக தடைசெய்யப்படும். இத்தகைய தொலைபேசிகளை கண்டுபிடிப்பதற்காக புதிதாக நவீன தொழில் நுட்ப கருவிகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும். தொலை தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட இத்தகவலைத் தெரிவித்தார். வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்படும் கையடக்க தொலைபேசிகள் அனைத்தும் IMEI இலக்கங்களுடன் தொலை தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்படல் வேண்டும். எனினும் பெரும் எண்ணிக்கையான தொலைபேசிகள சட்டவிரோதமாகவே நாட்டினுள் கொண்டுவரப்படுவதாக பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட சுட்டிக்காட்டினார்.…
-
- 2 replies
- 281 views
-
-
மன்னார் மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்டிருந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்காக அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட உலர் உணவுப்பொருட்களில் ஒரு தொகுதி பொருட்கள் மக்களுக்கு விநியோகிக்கப்படாத நிலையில் மன்னார் பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் களஞ்சியசாலையில் பதுக்கி வைக்கப்பட்டு மிகவும் பழுதடைந்த நிலையில் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த களஞ்சியசாலை தற்போது சுகாதாரமற்ற முறையில் காணப்படுவதினைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி குனசீலன் சீல் வைத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மன்னார் மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதிக்கப்ப…
-
- 0 replies
- 357 views
-
-
இவ்வாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இலங்கை எதிர்வுகூறும் 7.5 சதவீதம் என்ற அளவை விடக் குறைவாக, 6.8 சதவீதமாக இருக்குமென உலக வங்கி எதிர்வுகூறுகிறது. கடந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக இருந்ததெனவும், இவ்வாண்டில் அது அதிகரித்து, 6.8 சதவீதமாக இருக்குமெனவும், எதிர்வரும் 2015 ஆம் ஆண்டளவில் அது 7.2 சதவீதமாக இருக்குமெனவும் உலக பொருளாதார எதிர்பார்ப்புக்கள் குறித்த உலக வங்கியின் அறிக்கை குறிப்பிடுகிறது. இறக்குமதிகளின் அளவு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கும், கடன்களின் அளவு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கும் இலங்கை அரசு கடந்த ஆண்டு எடுத்த நடவடிக்கைகள்தான், கடந்த ஆண்டில் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருந்தமைக்கு காரணமென உலக வங்கி தெரிவிக்கிறது. http://tham…
-
- 2 replies
- 451 views
-
-
-முறாசில் மூதூர் பீஸ் - ஹோம் நிறுவனத்தோடு இணைந்து மூதூரில் செயற்படும் மஜ்லிஸ் அஸ் - ஸுறா, உலமா சபை, கதீப்மார்கள் நலன்புரிச் சங்கம் மற்றும் தடயம் சமூக அபிவிருத்தி மையம் ஆகியன ஒன்றிணைந்து பணிப்பெண்களாக வெளிநாடு செல்வதை நிறுத்தக் கோரி கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டுள்ளன. பெண்கள் வெளிநாடு செல்வதினால் ஏற்படுகின்ற சமூக சீரழிவுகளை தடுக்கும் வகையில் பணிப்பெண்களாக வெளிநாடு செல்வதனை நிறுத்தக்கோரி பத்தாயிரம் பேர்களின் கையெழுத்துடன் அரசாங்கத்திற்கு மகஜர் ஒன்றை அனுப்புவதற்காகவே பொது மக்களிடமிருந்து கையெழுத்துக்கள் பெறப்படுகின்றன. பொதுமக்கள் கையெழுத்திடும் முயற்சியில் பெரும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாக மஜ்லிஸ் அஸ்-ஸுறா தலைவர் மௌலவி எம்.எம்.கரீம் நத்வி தெரிவித்தார். http…
-
- 6 replies
- 418 views
-
-
சர்வதேச தீவிரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணுவோருக்கு இரண்டாண்டு சிறைத் தண்டனை 20 ஜனவரி 2013 சர்வதேச தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்களைப் பேணுவோருக்கு இரண்டாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களாக கருதப்படும் தலிபான், ஜிஹாத் மற்றும் அல் கய்தா போன்ற இயக்கங்களுடன் இலங்கையின் வடக்கு கிழக்கு மக்கள் தொடர்புகளைப் பேணி வருவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறு தொடர்புகளைப் பேணும் தரப்பினருக்கு தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. குறிப்பாக இவ்வாறு தொடர்புகளைப் பேணியமை நிரூபிக்கப்பட்டால் இரண்டாண்டு கால கடூழிய சிறைத்தண்டனையும், பத்து லட்ச ரூபா அபராதமும் விதிக…
-
- 0 replies
- 671 views
-
-
அமைச்சரவையில் மாற்றத்தை கொண்டுவர அரசு தீர்மானம்! [sunday, 2013-01-20 09:34:55] இலங்கை அமைச்சரவையில் எதிர்வரும் வாரங்களில் மாற்றங்கள் ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதன்படி, சில அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. பொதுநிர்வாகம், மின்வலு மற்றும் எரிசக்தி, பெற்றோலிய வளம் உள்ளிட்ட சில அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இந்த அமைச்சுப் பதவிகள் மாற்றம் தொடர்பில் அண்மைக்காலமாக செய்திகள் வெளியாகி வந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும், இம்முறை நிச்சயமாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://seithy.com/breifNews.php?newsID=74234&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 412 views
-
-
40 வரையான கடைகள் கொழும்பில் இடித்து அகற்றம்! [sunday, 2013-01-20 09:03:42] கொழும்பு கோட்டை பிரிஸ்டல் வீதியிலுள்ள 40ற்கும் அதிகமான கடைத்தொகுதிகள் நேற்று மதியம் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் இடித்து அகற்றப்பட்டன. இது குறித்த அறிவித்தல் கடை நிர்வாகிகளுக்கு ஒருமாத காலத்திற்கு முன்னர் வழங்கப்பட்டதெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, நூற்றுக்கணக்கான பொலிஸ் உத்தியோகத்தர்களும் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவர்கள் குறித்த கடை நிர்வாகிகளுக்கு நேற்றைய தினமே அறிவித்தல் விடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.பின்னர் கடை நிர்வாகிகளும் ஊழியர்களும் கடைகளிலிருந்த குளிர்சாதனப்பெட்டி, போட்டோக்கொப்பி இயந்திரம் போன்ற மின்சாரப் பொருட்களையும் தமது கடைகளிலிருந்த ஏனைய அன…
-
- 0 replies
- 465 views
-
-
சரத் பொன்சேகாவின் பெயர் மீண்டும் மஹாவம்சத்தில் 20 ஜனவரி 2013 முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பெயர் மஹா வம்சத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.இலங்கையின் வரலாற்று நூலாகக் கருதப்படும் மஹாவம்சத்தின் ஆறாம் பதிப்பில் சரத் பொன்சேகாவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது. 1978ம் ஆண்டு முதல் 2010ம்; ஆண்டு வரையிலான காலப் பகுதியில இடம்பெற்ற வரலாற்று நிகழ்வுகள் இந்த ஆறாம் பதிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னைய பதிப்பில் சரத் பொன்சேகாவின் பெயர் உள்ளடக்கப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச, டி.பி. விஜேதுங்க மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் இவ்வாறு உள்ளடக்கப்பட்ட…
-
- 0 replies
- 574 views
-
-
மன்னாரிலும் இளம் பெண்களை படையில் இணையுமாறு வற்புறுத்து ஜன 20, 2013 மன்னார் மாவட்டத்தில் இளம் பெண்களை படையில் இணையும்படி வீடு வீடாகச் சென்று சிறீலங்கா படையினர் வற்புறுத்தி வருவதாக மன்னார் மாவட்டத்தில் உள்ள பெற்றோர்கள் பயம் கலந்த கவலையுடன் தெரிவிக்கின்றார்கள். ஏற்கனவே கிளிநொச்சி மாவட்டத்தில் வறுமையைப் பயன்படுத்தி சிவில் வேலை வாய்ப்பெனக் கூறி படையில் இனைத்துக் கொள்ளப்பட்ட 103 பெண்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கும் உள்ளாகியுள்ளதாக பரவலாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் படையினர் பெண் பிள்ளைகள் உள்ள வீடுகளுக்குச் சென்று, அவர்களை படையில் இணையுமாறு வற்புறுத்தி வருவது பொது மக்களிடையே பயம் கலந்த அச்சத்தை உண்டாக்கியுள்ளது. பொதுவாக படைத்தரப்பினருக்கு புதியவர்களை ஆட்ச…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை - ஜப்பான் உறவுக்காக நினைவு முத்திரை வெளியிடு இலங்கை - ஜப்பான் 60 வருடகால உறவுக்காக நினைவு முத்திரை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் இராஜதந்திர தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இரண்டு நினைவு முத்திரைகளும் முதல்நாள் உறைகளும் நேற்று வெளியிடப்பட்டன. அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற இந்த வைபவத்தில் தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க இந்த இரு முத்திரைகளையும் முதல்நாள் உறைகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார். இந்த வைபவத்தில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் உட்பட அமைச்சர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 20 ஜனவரி 2013, ஞாயிறு 8:40 மு.ப http://www.onlineuthayan.com/News_More…
-
- 0 replies
- 240 views
-
-
ஷிராணிக்கு சார்பானவர்கள் கூண்டோடு இடமாற்றம் ஞாயிற்றுகிழமை, ஜனவரி 20, 2013 முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்குச் சார்பாகச் செயற்பட்ட நீதிதுறையைச் சார்ந்தோர் மற்றும் உயர்நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். இந்த இடமாற்றம் விரைவில் இடம்பெறவுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இதன் முதற்கட்டமாக முன்னாள் பிரதம நீதியரசருக்கு நெருக்கமாக இருந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை உடனடியாக இடம்மாற்றம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் நீதிச் சேவை ஆணைக்குழுவின் உயர்மட்ட அதிகாரிகள் தரத்தைச் சேர்ந்தவர்களும் பழி வாங்கலுக்கு உள்ளாக்கப்படவுள்ளனர். ஷிராணி பண்டாரநாயக்கா பிரதம நீதியரசாகவிருந்த இறுதிக் காலத்தில் அவ…
-
- 0 replies
- 494 views
-
-
சமல் ராஜபக்ஷவே அடுத்த பிரதமர் - அமைச்சர் குமார வெல்கம தெரிவிப்பு! [saturday, 2013-01-19 19:34:30] இலங்கையின் அடுத்த பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் சமல் ராஜபக்ஷவே என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய சபாநாயகர் சமால் ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களின் விருப்பமாக அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் டி.எம். ஜயரட்ன அரசியலிலிருந்து ஒய்வு பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளதனால், அந்த வெற்றிடத்திற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மத்துகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு குறிப்ப…
-
- 1 reply
- 434 views
-
-
மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது இலங்கைக்கு தலைமை தாங்கவுள்ள சரத் என்.சில்வா! [sunday, 2013-01-20 07:01:23] இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசரும், தமிழின விரோதியும், இதுவரை மகிந்த ராஜபக்சவுடன் கடுமையான முரண்பாட்டைக் கொண்டிருந்தவருமான சரத் என். சில்வாவை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்குள் உள்வாங்கி அவருக்கு நீதியமைச்சுப் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக அரச சார்பு சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது அரசுடனும் முரண்பட்ட நிலையில் காணப்பட்ட இவர், அண்மையில் பதவி நீக்கஞ் செய்யப்பட்ட பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அவரது பதவி நீக்கத்தை நியாயப்படுத்தியதுடன் நீதி…
-
- 1 reply
- 614 views
-
-
முஸ்லிம்களுக்கு எதிராக துண்டுப்பிரசுரம் விநியோகித்த பௌத்த பிக்குகள்! [sunday, 2013-01-20 07:43:59] பௌத்த பிக்குமார் குழு ஒன்று புடவைக்கடை ஒன்றுக்குள் புக முயற்சித்த சம்பவத்தை பொலிஸார் தடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை கொழும்பின் புறநகர் மஹரகமவில் இடம்பெற்றுள்ளது. ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்ட பௌத்த பிக்குமாரே இந்தக் கடைக்குள் புகுவதற்கு முயற்சித்துள்ளனர். இதன் காரணமாக பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் குறித்தக்கடைக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டது. மஹரகமவில் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான 'நோ லிமிட்' புடவைக் கடைக்கு செல்லும் வழியில் நின்றுகொண்டு குறித்த பௌத்த பிக்குமார் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துக்கொண்டிருந்தனர். அத்துடன் அ…
-
- 1 reply
- 526 views
-
-
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாடு, கனடாவின் செயற்பாட்டால் கேள்விக்குறி! [sunday, 2013-01-20 08:05:57] இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை நடத்தமுடியுமா? என்பது தொடர்பில் ஆராயுமாறு கனடா அந்த அமைப்பின் அமைச்சரவை நடவடிக்கை குழுவிடம் கோரிக்கை விடுக்க உத்தேசித்துள்ளது. இதன் அடிப்படையில் கனடா அறிக்கை ஒன்றை குறித்த நடவடிக்கை குழுவுக்கு அனுப்பவுள்ளதாக இலங்கையின் ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் பிரதமநீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மீது கொண்டு வரப்பட்ட குற்றவியல் பிரேரணையை அடுத்தே இந்த நடவடிக்கையை கனடா மேற்கொண்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் 15 - 17 ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் …
-
- 0 replies
- 371 views
-
-
இலங்கை வருவது தொடர்பில் ஜெனீவா மாநாட்டின் பின்னரே முடிவு! [sunday, 2013-01-20 08:41:00] கடந்த வருடம் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதப்பிள்ளை இலங்கைக்கு வருவார் எனத்தெரிவிக்கப்பட்டது. இலங்கை அரசு ஆரம்பத்தில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு வருவதை எதிர்த்தது. அதன் பின்னர் சர்வதேச ரீதியில் எழுந்த கடும் நெருக்கடிகளை அடுத்து, மனித உரிமை ஆணையாளர் இலங்கை வருவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இதற்கமைய கடந்த செப்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமையாளர் அலுவலகத்தின் ஆசியபசுபிக்-மத்திய, கிழக்கு-வட, அமெரிக்கப் பிரிவுகளுக்குப் ப…
-
- 0 replies
- 335 views
-
-
மகிந்த அரசை எதிர்த்த சிறிலங்கா அமைச்சர் டியூ.குணசேகரவுக்கு இந்தியாவில் இருந்து பாராட்டுமழை [ ஞாயிற்றுக்கிழமை, 20 சனவரி 2013, 00:34 GMT ] [ தா.அருணாசலம் ] சிராணி பண்டாரநாயக்கவை தலைமைநீதியரசர் பதவியில் இருந்து நீக்குவதற்கான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மூத்த அமைச்சர் டியு.குணசேகரவுக்கு இந்தியாவில் இருந்து பாராட்டுகள் குவிந்துள்ளன. கடந்தவாரம், சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சிறிலங்காவின் மூத்த அமைச்சர் டியூ.குணசேகர, அதனைக் கடுமையாக எதிர்த்துக் கருத்து வெளியிட்டிருந்தார். அத்துடன், வாக்கெடுப்பில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் அறிவித்த…
-
- 2 replies
- 351 views
-
-
சவுதிக்கான இலங்கை தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டமைக்கு காரணம் என்ன ? ரிசானா நபீக் சிரச்சேதம் செய்து கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டார் என கூறப்பட்டபோதும் அவர் தொடர்ந்தும் அங்கு பணிபுரிந்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் இலங்கை தூதுவர் இலங்கைக்கு திருப்பி அழைக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ரிசானா நபீக் கொல்லப்பட்ட பின் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சவுதியில் உள்ள இலங்கை தூதுவரை உடன் திருப்பி அழைத்ததாக இலங்கை அறிவித்திருந்தது. எனினும் ரியாதில் உள்ள இலங்கை தூதுவர் அஹமட் ஜவாட் தொடர்ந்தும் அங்கு பணிபுரிந்து வருவதாகவும்…
-
- 2 replies
- 555 views
-