Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்து சமுத்திர பிராந்தியத்தில் பெரிய நாடுகளுக்கு இடையில் பரஸ்பர நம்பிக்கையீனம் காணப்படுவது துரதிர்ஷ்டவசமானது என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று கூறியுள்ளார். இப்பிராந்தியத்தின் ஆகவும் பெரிய கடற்படை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்து சமுத்திரத்தின் எதிர்காலம் தொடர்பில் இந்தியாவுக்கு முக்கிய வகிபாகம் உள்ளது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவும் கணிசமான கடற்படை வலுவை கொண்டுள்ளது' என அவர் கூறினார். இலங்கை கடற்படையால் ஒழுங்குப்படுத்தப்பட்டு 27 நாடுகள் பங்குபற்றிய மூன்றாவது 'காலி சம்பாஷனை' நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'வருங்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்வதற்கான 'தந்திரோபாய கடல் ஒத்துழை…

  2. ஜனாதிபதிக்கு எதிரான தீர்மானங்களை விசாரிக்கும் பிரதமநீதியரசரை பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரிக்கலாமா? 13 டிசம்பர் 2012 இலங்கையில் ஜனாதிபதிக்கு எதிராக வரக்கூடிய கண்டனத் தீர்மாங்களை விசாரிக்கும் அதிகாரம் அரசியல்யாப்பின் கீழ் உச்சநீதிமன்றத்துக்கு இருக்கும் நிலையில், பிரதம நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அதிகாரம் இருக்கின்றதா என உச்ச நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பிரதம நீதிபதிக்கு எதிரான கண்டனத் தீர்மானம் சடவிரோதமானது எனக் குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு வந்தபோதே, நீதிபதி காமினி அமரதுங்கவினால் இந்த கேள்வி எழுப்பப்பட்டது. நாடாளுமன்ற தெரிவுக்குழு என்பது நாடாளுமன்ற கட்டளைச் சட்டத்தின்…

  3. சர்வதேச சமூகம் இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் வுட்வேர்த் தெரிவித்துள்ளார். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்களை அடுத்து இலங்கை மீதான கண்டனங்களும் கனடிய மண்ணில் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இலங்கையில் மனித உரிமைகள் சீர்கெட்டுச் செல்வது மிகுந்த கரிசனையளிப்பதாக கனடாவின் ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரும் பரித்தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான பற்றிக் பிரவுன் விடுத்த அறிக்கையைத் தொடர்ந்து கிச்சனர் மத்தி ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் வுட்வேர்த்தும் தனது ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டுள்ளார். தமிழர் தேசத்திற்கான போராட்டத்தில் மரணித்தவர்களை அமைதியாக நினைவு கூர்ந்த மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்…

    • 2 replies
    • 430 views
  4. ‘எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம்வேண்டும்’ என்பது சினிமாப் பாடல். அந்தப் பாடல் வரிகள் எமது நிஜ வாழ்வுக்கு சாலப் பொருந்துகிறது. யுத்தம் இல்லாச் சூழ்நிலையில் நிம்மதியான வாழ்வு கிடைக்கும் என்றால், அதுதான் இல்லை. அரச வேலை கிடைத்துவிட்டது என்று நினைத் தால், சமகால வாழ்க்கைச் செலவுக்கு அரச சம்பளம் எந்தமூலைக்கென்று ஏங்கவைக்கிறது. மகன் பல்கலைக்கழகம் சென்றுவிட்டான். இனி நிம்மதியாக மூச்சுவிடலாம் என்றால் பல் கலைக்கழகத்தில் பிரச்சினை.வகுப்பு பகிஷ்கரிப்பு என்ற துன்பம். ஒருமாதிரியாக பட்டம் முடித்துவிட்டாயிற்று எனின், நியமனத்தைப் பெற்றுக் கொள்ள குறைந் தது ஐந்து வருடங்கள் காத்திருப்பு. காத்திருப்பு முடிகிறது என்றால் மாதம் 10 ஆயிரம் ரூபாயில் என்ன வேலையயன்று தெரி யாத பட்ட…

    • 0 replies
    • 487 views
  5. நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அமர்வுகள், அமர்வின் அறிக்கைகள் எதுவும் தனக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் தெரிவுக்குழுவின் உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் இது தொடர்பில் அவர் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிற்கு இன்று வியாழக்கிழமை கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அந்தக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அமர்வுகள், அமர்வின் அறிக்கைகள் எதுவும் டிசெம்பர் மாதம் 4 ஆம் திகதி எனக்கு கிடைக்கவில்லை என்பதை தங்களின் கவனத்துக்கு கொண்டுவருகின்றேன். டிசெம்பர் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையின் பிரதியும் எ…

  6. சட்டவிரோத ஆட்கடத்தல்களால் பாதிக்கப்பட்டோருக்கு அமெரிக்கா அடைக்கலம்! [Thursday, 2012-12-13 10:04:04] சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளினால் பாதிக்கப்படுவோருக்கு அமெரிக்கா உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டோருக்கு அடைக்கலம் வழங்கும் நோக்கில் விசேட நிலையமொன்றை அமெரிக்க நிறுவியுள்ளது. இந்த நிலையத்தை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் திறந்து வைத்தார். சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்காக அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியது என சிசன் தெரிவித்துள்ளார். ஆட்கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்களும் ஊடகங்களும் போதியளவு விளக்கத்தை அளிக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ப…

  7. யாழ். பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற அசம்பாவிதங்கள் குறித்து அறிவதில் நோர்வேத் தூதுவர் தீவிர கவனம் : 13 டிசம்பர் 2012 யாழ். பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற அசம்பாவிதங்கள் குறித்து அறிவதில் நோர்வேத் தூதுவர் தீவிர கவனம் செலுத்தியுள்ளார். யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் இது தொடர்பான விடயங்களை நேரில் கேட்டறிந்துள்ளார். இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறீட் லொச்சன் மற்றும் தூதரக ஆலோசகர் டக்ரி மைக்கல் ஆகிய இருவரும் யாழ். மாவட்டத்துக்கு நேற்று சென்றிருந்தனர். யாழ். அரச அதிபரை மாவட்டச் செயலகத்தில் நேற்றுக் காலையில் சந்தித்துக் கலந்துரையாடினர். சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது சந்திப்பின் முடிவில் கருத்துத் தெரிவித்த யாழ். மாவட்ட அரச அதிபர், யாழ். மாவ…

  8. புலிகளை பற்றி பேச சம்பந்தனுக்கு உரிமை கிடையாது :புலம்பெயர் அமைப்புக்கள் [Thursday, 2012-12-13 08:22:57] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி பேசக் கூடாது என புலம்பெயர் புலி அமைப்புக்கள் உத்தரவிட்டுள்ளன. புலிகள் தாங்களாகவே தங்களை அழித்துக்கொண்டார்கள் என அண்மையில் சம்பந்தன் தெரிவித்திருந்தார். சம்பந்தனின் இந்தக் கூற்று கண்டிக்கப்பட வேண்டியதென சில புலம்பெயர் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. இந்தக் கருத்தை வெளியிட்ட சம்பந்தனை வெளிநாடுகளுக்கு அனுமதிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=71929&category=TamilNews&langu…

  9. யாழ்.பல்கலைக்கழக மாணவர் கைது சட்டவிரோதமானது! போராடத் தயாராகுமாறு எதிர்க்கட்சிகள் அழைப்பு!! தமிழ் மக்கள் தமது இறந்த உறவுகளை நினைவுகூர்ந்து அவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் உரிமையைப் பறிக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை என பொது எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. அரச படையினரால் மிலேச்சத்தனமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டு, கைதுசெய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களில் சிலரைப் புனர்வாழ்வளிப்பதற்காக முகாம்களுக்கு அனுப்புவதனூடாக, சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கை சாதாரணமானது எனக் காட்ட அரசு முயற்சிக்கின்றது என்றும் பொது எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இது தொடர்பாக பொது எதிர்க்கட்சிகள் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் அறிக்கையி…

  10. தேசிய அடையாள அட்டை விநியோகத்தில் தற்போது காணப்படும் வயது எல்லையில் மாற்றத்தை கொண்டுவர ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக அதன் பதில் ஆணையாளர் ஜீ.ஏ.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் அதிகுறைந்த வயதாக 16 வயது தற்போது காணப்படுகிறது. எனினும் அதனை 15 வயதாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான சட்ட மாற்றத்திற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.onlineuthayan.com/News_More.php?id=241501694113499631

  11. இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கையில் பல்பலைக்கழக மாணவர்கள் அதிகளவில் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. வகுப்பு ரத்து தொடர்பில் 524 சம்பவங்களும், மாணவர்களுக்கான ஒழுக்காற்று விசாரணை தொடர்பில் 104 சம்பவங்களும், மஹாபொல புலமைப் பரிசில் கொடுப்பனவு தொகை ரத்து தொடர்பில் 67 சம்பவங்களும், வழக்குகள் தொடர்பில் 104 சம்பவங்களும். கைதுகள் தொடாபில் 44 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல்கலைக்கழக மாணவர்களின் மனித உரிமைப் பாதுகாப்பு தொடர்பான அமைப்பின் பொறுப்பாளர் நுவான் பதுகே இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். கடந்த ஓராண்டு காலப்பகுதில் மட்டும்…

  12. இம்மாதம் 24ஆம் திகதி முதல் ரயில்வே ஊழியர்கள் பணிநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக ரயில்வே தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது. ரயில்வே தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு எவ்வித பதில்களும் சம்பள ஆணைக்குழுவினால் முன்வைக்காதமையினாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/local.php?vid=2071

  13. அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தமிழ் பெண்ணொருவருக்கு 20 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் திண்ணைவேலி பிரதேசத்தைச் சேர்ந்த ராசலிங்கம் தாமரைவதனி என்ற பெண்ணுக்கே கேகாலை மேல் நீதிமன்றம் 20 வருட சிறை தண்டனை விதித்துள்ளது. 2007 நவம்பர் 21ம் திகதி தொடக்கம் 2008 பெப்ரவரி 6ம் திகதிவரை கேகாலை ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை படுகொலை செய்ய குறித்த பெண் சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து கைது செய்யப்பட்ட குறித்த பெண் தொடர்பில் குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை நடாத்தி நீதிமன்றுக்கு அறிக்கை சமர்பித்தமை குற…

  14. 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படுவதற்கு சில முஸ்லிம் கட்சிகள் ஆதரவு 13 டிசம்பர் 2012 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படுவதற்கு சில முஸ்லிம் கட்சிகள் ஆதரவளித்துள்ளன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் சிலவே இவ்வாறு 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென கோரியுள்ளன. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யும் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப் போவதாக அறிவித்துள்ளன. 13ம் திருத்தச் சட்டம் நீட்டிக்கப்படுவதனை விரும்பவில்லை என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தைத் தவிர வேறும் பிரதேசங்களில்…

  15. தமது விடுதலை விரைவு படுத்தப்படுவதை எதிர் பார்த்தபடி பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் நால்வரும் வெலிக்கந்தவை அடுத்துள்ள கந்தன்கடுவ என்ற இடத்திலுள்ள திறந்தவெளி தடுப்பு முகாமில் காத்திருக்கின்றனர் என்று அவர்களை நேற்று நேரில் பார்வையிட்ட விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் கே.கந்தசாமி "உதயன்' பத்திரிகையிடம் தெரிவித்தார். "விடுதலையை விரைவு படுத்துங்கள்'' என்பதுதான் அவர்களின் கோரிக்கையாக இருந்தது என்றும் பேராசிரியர் கூறினார். பயங்கரவாத விசார ணைப் பிரிவுப் பொலிஸா ரால் கைது செய்யப்பட்டு வெலிக்கந்தவில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரையும் அவர்களின் பெற்றோரும், பல்கலைக்கழக பேராசிரியர்களும்பார்வையிட்டுள்ளனர். இரண்டு மணி நேரம் மாணவர்களுட…

    • 0 replies
    • 297 views
  16. போர் முடிந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டபோதும் யாழ்ப்பாண நகரம் இன்னும் உயர் பதற்ற நிலையிலேயே உள்ளதாக ‘த டிப்ளொமெட்’ என்ற ஆசிய பசுபிக் வலய சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஈகைச்சுடர் ஏற்றிய நிகழ்வை அடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கைப் படையினரால் தாக்கப்பட்டனர். இதன் பின்னர் பல மாணவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தொடர்ந்தும் யாழ்ப்பாண பிரதேசம் பதற்றத்துடன் செயற்பட்டு வருவதாக அவ் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. சுதந்திரத்துக்கு பின்னர் 1956ம் ஆண்டு சிங்கள தலைவர்களால் சிங்களம் மட்டுமே என்ற சட்டம் கொண்டு வரப்பட்டமையை அடுத்து தமிழர்களின் மொழி உரிமைகள் உட்பட்ட உரிமைகள் நசுக்கப…

  17. விடுதலைப் புலிகளால் இரணைமடுவில் அமைக்கப்பட்ட விமான ஓடுபாதை புனரமைக்கப்பட்டு, சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் விரைவில் அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது. இரணைமடு ஓடுபாதையை சிறிலங்கா விமானப்படை தற்போது புனரமைத்து வருகிறது. இதுவரை 1100 மீற்றர் நீளமான ஓடுபாதை புனரமைப்பு வேலைகள் முடிவடைந்துள்ளன. இந்த ஓடுபாதையை 1500 மீற்றர் வரை விரிவாக்குவதற்கான பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சி-130 போன்ற கனரக போக்குவரத்து விமானங்களும் தரையிறங்கும் வகையில் இந்த ஓடுபாதை விரிவாக்கப்பட்டு வருகிறது. இந்த ஓடுபாதை புனரமைப்பு பணிகள் முடிவடைந்ததும், சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார். இதற்கு முன்னோடியாக, சிறிலங்கா விமானப்படைத் தளப…

    • 0 replies
    • 358 views
  18. நாட்டில் மீண்டும் அமைதியற்ற நிலையைத் தோற்றுவிக்க அரசு மேற்கொள்ளும் ஏகாதிபத்திய நடவடிக்கைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்று பொது எதிர்க்கட்சிகளின் கூட்டணி அறைகூவல் விடுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி, நவசம சமாஜக்கட்சி, புதிய சிஹலஉறுமய, ருஹுணு மக்கள் கட்சி, மௌபிம மக்கள் கட்சி, ஐக்கிய மக்கள் முன்னணி, ஐக்கிய சோஷலிஸக் கட்சி ஆகிய கட்சிகள் அடங்கிய பொது எதிர்க்கட்சிகளின் கூட்டணி நேற்று ஓர் அறிக்கை விடுத்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரை வெலிகந்த புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்புவதன் ஊடாக, சட்டவிரோதமாகத் தான் மேற்கொண்ட கைதுநடவடிக்கையை சாதாரணமானது எனக் காட்ட அரசு முயற…

  19. Started by akootha,

    பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களால் நேற்று புதன் கிழமை மட்டும் 6 முறைப்பாடுகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். இவற்றுடன் கைது முறைப்பாடுகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. நவம்பர் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் யாழ். குடாநாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள், முன்னாள் போராளிகள் எனப் பலதரப்பட்டோரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 3 முறைப்பாடுகள் வன்னி மாவட்டத்திலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த நிலையில் நேற்று புதன்கிழமை 6 முறைப் பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. கடந்த ஞாயிற்றுக் கிழமை அச்சுவேலிப் பகுதியில் கைதுச…

    • 0 replies
    • 359 views
  20. நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை எதிர்கட்சி உறுப்பினர்கள் புறக்கணித்துவிட்ட நிலையில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையானது அரசாங்க உறுப்பினர்களின் அறிக்கையாகும். அந்த அறிக்கைக்கும் பதிலளிப்பதற்கு நான் தயார் என்று பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தெரிவித்தார். தெரிவுக்குழுவிலிருந்து எதிரணியினர் வெளிநடப்பு செய்திருந்த நிலையில் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தனக்கு எதிரான குற்றப்பிரேரணையை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட தெரிவிக் குழுவின் அறிக்கையானது, அரசாங்க உறுப்பினர்களின் அறிக்கையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தனது சட்டத்தரணிகள் மூலமாக வெளியிட்டுள்ள அறிக்கைய…

    • 0 replies
    • 311 views
  21. இலங்கையில் பிரதமநீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பிலான பிரச்சினையில் இலங்கை அரசாங்கமும் எதிர்க்கட்சியும் முரண்பட்டு நிற்கின்றன. எனினும் நாடாளுமன்றம் மற்றும் பொதுமக்கள் மேடைக்கு அப்பால் அந்த இரண்டு தரப்புக்களும் ஒன்றாக இணைந்தே செயற்படுவதாக சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. கடந்த வாரத்தில் பிரதம நீதியரசர் விடயத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தரப்புக்கள் ஒன்றையொன்று குற்றம் சுமத்திக்கொண்டிருந்தன. இது, தமது ஆட்சியை கவிழ்க்கும் திட்டம் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதேநேரம் அநீதிக்கு எதிரான போராட்டத்தை மேற்கொள்ளப்போவதாக எதிர்க்கட்சியும் தெரிவித்திருந்தது. எனினும் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து எதிர்க்கட்சிகளின…

  22. 35 வருடகாலமாக மக்களால் பாவிக்கப்பட்டு வந்த கெற்பேலி மயானத்தை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளமையால் அதற்கு அருகிலுள்ள கோயில் காணியில் புதிய மயானத்தை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சாவகச்சேரி பிரதேச சபைத் தலைவர் சி.துரைராஜா தெரிவித்தார். கெற்பேலி மக்களால் 1983 ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்பட்டு வந்த மயானத்தை இராணுவத்தினர் படைமுகாம் அமைப்பதற்காக பெற்றுக் கொண்டுள்ளனர். காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியிலேயே மயானம் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் குறித்த அரச காணியை படையினர் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிடம் இருந்து நேரடியாகப் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளனர். இதனால் மக்கள் குடிமனைப் பகுதியில் உள்ள இடம் ஒன்றை மயானமாகப் பயன்படுத்துமாறு படையினர் கோரியிருந்தனர். இதனை மக்க…

    • 0 replies
    • 387 views
  23. இம்முறை இடம்பெறுகின்ற க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 46 முன்னாள் விடுதலைப் புலிப்போராளிகள் தோற்றுகின்றனர். இவர்கள் அனைவரும் 2009 ஆண்டு இடம்பெற்ற இறுதியுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களாவர்.இவர்களுக்காக வவுனியா மத்திய கல்லூரியில் விசேட பரீட்சை மண்டபமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று ஆரம்பமாகிய கா.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் நாடு பூராகவும் 4048 நிலையங்களில் 542,260 பரீட்சார்த்திகள் பரீட்நைக்குத் தோற்றுகின்றனர். இதில் 387,593 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=2062

    • 0 replies
    • 322 views
  24. கடந்த மாதம், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்ட கேணல் பரிதி தொடர்பான விசாரணைகளில் தொய்வு நிலை காணப்படுவதாகக் கூறப்படுகிறது. கேணல் பரிதி அவர்கள் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்ட வேளை, பிரெஞ்சுப் பொலிசார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வந்தனர். சுமார் 15 க்கும் மேற்பட்ட நபர்களை அவர்கள் கைதுசெய்து விசாரணைகளை நடத்தி வந்தனர். அவர்களில் பலரை விசாரணையின் பின்னர் விடுவித்துள்ள பிரெஞ்சுப் பொலிசார், கொலையின் சூத்திரதாரி யார் என்பதனை இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்று மேலும் அறியப்படுகிறது. இலங்கை அரசோடு சேர்ந்து இயங்கும் குழு ஒன்றின் உதவியுடன், இலங்கைப் புலனாய்வாளர்களே இக் கொலைக்கு மூல காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இக் கொலை தொடர்பாக பிரெஞ்சுப் பொலிசார் இதுவரை காத…

  25. அரசியல் கைதியாக கடந்த 14 வருடங்களாக மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பைச் சேர்ந்த 67 வயதான பெண்ணொருவரை மனிதாபிமான ரீதியில் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கோரிக்கையொன்றை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். http://www.hirunews.lk/tamil/49255

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.