ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
வடபகுதிக்கு பயணம் மேற்கொள்வதற்கு சிறப்பு உலங்குவானூர்தியை வழங்க சிறிலங்கா அரசாங்கம் கடைசி நேரத்தில் மறுத்த விவகாரம் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை சீற்றம் கொள்ள வைத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அவர்கள் சிறிலங்காவுக்கு எதிராக பிரச்சினை எழுப்பவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொமன்வெல்த் நாடாளுமன்றச் சங்கத்தின் கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரித்தானிய மற்றும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறப்பு உலங்குவானூர்தி மூலம் வடபகுதிக்கு அழைத்துச் செல்ல கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது. அதேவேளை, கொமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை வடபகுதிக்கு அழைத்துச் செல்ல சிறிலங்கா…
-
- 0 replies
- 393 views
-
-
ஆட்கடத்தல், காணாமல் போதல் மற்றும் சட்டவிரோத கைதுகளை உடனடியாக நிறுத்தக்கோரி கொழும்பு, மட்டக்குளியில் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.மக்கள் போராட்ட இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர். மஹிந்த அரசிற்கு எதிராக கோஷங்களைத் தாங்கியவறு காணாமல் போனொர்களின் உறவுகள் கண்ணீர் மல்க போராட்டத்தினை நடத்தினர். http://thaaitamil.com/?p=32563
-
- 0 replies
- 364 views
-
-
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்த, ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தின் முக்கிய அதிகாரிகளிடம், கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை, நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கம் அதனை நிறைவேற்றவில்லை என யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயம் அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகத்தில் ஆசிய பசிபிக், மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா ஆகிய பிராந்தியங்களை கவனிக்கும் பிரிவுக்குத் தலைவரான ஹன்னி மெகல்லியும், அந்த உயர்ஸ்தானிகத்தில் சட்டத்தின் மாட்சிமை மற்றும் ஜனநாயகம் ஆகிய விஷயங்களை கவனிக்கும் பிரிவினைச் சேர்ந்த ஆஸ்கர் செல்டர்ஸும் யாழ்ப்பாணத்திற்கான தமத…
-
- 0 replies
- 381 views
-
-
இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அவரை இந்தியாவுக்குள் வர அனுமதிக்கமாட்டோம். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி சுமார் 1000 பேர் பங்கேற்கும் ரயில் மறியல் போராட்டம் நடத்தவுள்ளோம். இவ்வாறு தெரிவித்தார் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவுநர் வேல்முருகன். தமிழக வாழ்வுரிமை கட்சி பொதுக்குழு கூட்டம் புவனகிரியில் நேற்று நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவுநர் வேல்முருகன் கலந்துகொண்டு பேசும்போதே இதனைத் தெரிவித்தார். http://thaaitamil.com/?p=32490
-
- 1 reply
- 488 views
-
-
த.தே.கூ. - காத்தான்குடி முஸ்லிம் சமூக பிரதிநிதிகள் கலந்துரையாடல் வேறு தினத்திற்கு மாற்றம் By Farhan 2012-09-17 21:17:28 தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் காத்தான்குடி முஸ்லிம் சமூக பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் பிறிதொரு தினத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். சமகால அரசியல் விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காத்தான்குடியிலுள்ள முஸ்லிம் சமூக பிரதிநிதிகளை இன்று மாலை 5மணிக்கு காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள தாஜ் பிளாஸா ஹோட்டலில் சந்திக்க இருந்தது. குறித்த நேரத்துக்கு காத்தான்குடியிலுள்ள சமூக மதிப்புக்கான மக்கள் ஒன்றியம், காத்தான்கு…
-
- 0 replies
- 487 views
-
-
இலங்கை அரசாங்கம் இன்னமும் தமிழரை சிறுபான்மை இனம் என்று அடிமைப்படுத்திக் கொள்ளவே எத்தனிக்கின்றது. அரசியல் தீர்வு ஒன்றை கோரியே யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் மூலகாரணமானது யுத்தம் முடிவடைந்த பின்னரும் வழங்கப்படவில்லை. தமிழர்களின் அரசியல் தீர்விற்காக ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் முடிவடைந்தும் இதுவரைக்கும் இலங்கை அரசாங்கத்தினால் அரசியல் தீர்வு முன்வைக்கப்படவில்லை. இன்னும் சிறுபான்மை இன்மை இனம் அடக்குமுறைக்குள்ளேயே உள்ளது என்று யாழ்.ஆயர் அதிவண.தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை ஜ.நா மனித உரிமைகள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இன்று யாழ்.வருகை தந்த ஜ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தொழில் நுட்ப அதிகாரிகள் யாழ்.ஆயரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இச் சந்திப்பின் போதே அவர் …
-
- 0 replies
- 513 views
-
-
முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்த ஆட்சி ஒன்றை கிழக்கில் ஏற்படுத்த முடிவு எடுக்க வேண்டும் என்று அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளும், முஸ்லிம் மக்களும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப் பீடத்தை தந்தி மூலமும், தொலைநகல் மூலமும் கோரியுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசனலி ஆகியோருக்கு இந்தத் தந்திகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்தத் தந்திகளில் நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் மக்கள் அரசுக்கு எதிரான கோரிக்கையையே வெளிப்படுத்தியுள்ளனர் என்று வலியுறுத்தப்பட்டுள்ளன. முஸ்லிம் காங்கிரஸ் எமது அபிலாசைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் என்…
-
- 3 replies
- 1.2k views
-
-
[size=5]2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போனோர் மட்டுமா? விசாரணை ஏனையவர்கள் இல்லையா; காணாமல் போனவர்களின் உறவுகள் கேள்வி[/size] [size=4]2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போனோர் தொடர்பான தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டவர்களுக்கான விசாரணைகள் இன்று திங்கட்கிழமை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிரந்திய காரியாலயத்தில் ஆரம்பமாகியுள்ளது. எனினும் இன்று காலை யாழ்.மனித உரிமை ஆணைக்குழு முன்னால் ஒன்று கூடிய உறவுகள் ஏன் 2006ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டும் காணமல் போனவர்கள் தொடர்பாக விராசணை செய்கின்றீர்கள் ஏனைய காலப்பகுதியில் காணமல் போன எமது உறவுகளை பற்றி விசாரணை இடம்பெறாதா? அவர்கள் காணாமல் போனவர்கள் இல்லையா? போன்ற கேள்விகளை உறவுகள் ஏக்கத்த…
-
- 0 replies
- 552 views
-
-
இந்திய இராணுவ ரகசியங்கள் அடங்கிய சீ.டி.யுடன் (இருவட்டு) இலங்கைக்கு தப்பிவர முயன்றதாகக் கூறப்படும் நபரொருவர் திருச்சி விமான நிலையத்தில் வைத்து இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெளிநாட்டுப் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வரும் மேற்படி நபரிடம் இந்திய இராணுவ ரகசியங்கள் அடங்கிய சீ.டி இருப்பதாக க்யூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்தே அவர் விமான நிலையத்தில் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளுடன் தனக்கு தொடர்பிருப்பதாகவும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திடம் குறித்த சீ.டி.யை கொட…
-
- 0 replies
- 653 views
-
-
தன்மானமும் இனமானமும் உள்ள என் தமிழ் சொந்தங்களே!! மறுக்கப்பட்டநீதிக்காக தீயெனமாறி எமை நெருங்கிவரும்தடைகளை எரித்து சாம்பலாக்க வேண்டியது காலத்திங்கட்டளையாகும். தட்டாத கதவுகள் ஒருபோதும் திறக்காது இது யதார்த்தமான உமை தட்டித்தட்டி தட்டியகைகள் வலித்தாலும் முட்டிமோதும் இளையதலைமுறையின் வேகத்தையும் விவேகத்தையும் தடுக்க எவராலும் முடியாது “இளங்கன்று பயமாறியாது” என்பார் உன்மைதான் பயத்துக்கும் பயம் கொடுக்கும்பாயும் புலிகாளாகிய தமிழன் சேனை ஒருபோதும் தரத்திலும் சரி பலத்திலும் சரி தாழ்ந்து போகாது என்பதை வரலாறுவலுவானசாட்ச்சியங்களுடன் நீரூபித்துக்காட்டுகின்றது .தான் இழந்த நிலத்தை முன்னூறு வருடம் கழித்து மீட்டெடுத்த வாரலாறும் எம் முன்னோர்களிடம் உண்டு. அதாவது காலமாற்றத்தாலும் கயவர்களின் ந…
-
- 0 replies
- 599 views
-
-
யுத்தம் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ளபோதிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கேப்பாபிலவு கிராம மக்கள் இன்னமும் மீள்குடியமர அனுமதிப்படவில்லை. அக்கிராமம் உள்ளிட்ட 2500 ஏக்கர் நிலத்தில் நிரந்தரமாக இராணுவ தலைiமையகம் ஒன்றினை அமைத்துள்ளதுடன், இக் கிராம மக்களை அவர்களது விருப்பங்களுக்கு மாறாக வேறு இடங்களில் குடியேற்றுவதற்கும் அரச இயந்திரம் வலுக்கட்டாயப்படுத்தி வருவதாகவும் அம்மக்கள் எம்மிடம் தெரிவித்துள்ளனர். அந்தக் கிராமத்திற்குச் சொந்தமான மக்கள் வவுனியா செட்டிகுளத்திலுள்ள தடுப்பு முகாமில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி அடிமைகள் போல் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்குச் சொந்தமான இந்தப்பகுதிகளை நிரந்தரமாக ஆக்கிரமித்து இராணுவமயமாக்குவதற்கும், சிங்களக் குடியேற்றங்களை மே…
-
- 0 replies
- 507 views
-
-
உயர்திரு விஜயராஜ் அவர்களோடு முடியட்டும் இந்த தீக்குளிப்பு...! போதும்...போதும்..! தமிழர்களின் இந்த சாத்வீகமான போராட்டம்..?! ஈழதேசம் செய்தி..! சாத்வீகமான போராட்டம், தன்னையே அழித்துக் கொள்வது, அதன் மூலம் தங்களுடைய எதிர்ப்பை தெரிவிப்பது என்ற போராட்ட அமைதியின் உச்சம் தான் இந்த தீக்குளிப்பு..! உண்ணா நோன்பு இருந்து இறப்பதை தாண்டிய, அதிஉச்ச அமைதி வழி போராட்டத்தின் இறுதி தான் இந்த தீக்குளிப்பு போராட்டம் என்று கருதலாம். 1947 - க்கு முன்பு இந்த தீக்குளிப்பு போராட்டம் நடந்திருந்தால் அஞ்சி நடு நடுங்கி பிரிட்டிஷ் ராணியார் குடும்பம் இந்தியாவை விட்டு வெளியேறியிருப்பார்கள் என்று கூட யோசிக்க முடிகிறது. இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே அவர்களின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து…
-
- 3 replies
- 579 views
-
-
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் போஸ் மைதானத்தில் ஒருவர் தீக்குளித்தார். பொதுமக்களும், சேலம் டவுன் போலீசாரும் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தீக்குளித்தவர் ஆட்டோ டிரைவர் எனவும், அவரது பெயர் விஜயராஜ் (26) எனவும் தெரியவந்துள்ளது. இன்று (17.09.2012) அதிகாலை சுமார் 4.30 மணி அளவில் அவர் சேலம் பேருந்து நிலையத்தில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு ராஜபக்சேவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன், அவர் இந்தியாவிற்கு வரக்கூடாது என்றும் உரக்க கத்தியுள்ளார். அப்போது திடீர் என்று உடலில் தீ வைத்துக்கொண்டார். பொதுமக்களும், சேலம் டவுன் போலீசாரும் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவருக்கு அங்கு தீவி…
-
- 3 replies
- 658 views
-
-
[size=4]உலகக் கிண்ண 20 – 20 கிறிக்கட் போட்டியை நடத்துவதன் மூலம், இலங்கையில் இடம்பெற்ற போர் மற்றும் அதன் போது இடம்பெற்ற மீறல்களை உலகின் கவனத்தில் இருந்து மறைப்பதற்கு இலங்கை முற்பட்டுள்ளதாக கருத்து வெளியிடப்பட்டுள்ளது. நாளைய தினம், உலகக் கிண்ண 20 – 20 போட்டித் தொடர் இலங்கையில் ஆரம்பமாகிறது. இலங்கையின் புதிய தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு அடுத்த மூன்று வாரங்களும் உதவியாக இருக்குமெனவும், அந்த நிலை தொடர்ந்து சென்று போர்க் குற்றங்கள் குறித்து அனைத்துக விசாரணை கோரும் குரல்கள் மறைந்துபோகுமெனவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்றால் நம்பிக்கை வெளியிட்டார். சில தமிழ் இளைஞர்கள், 20 – 20 போட்டித் தொடரையிட்டு மகிழ்ச்சி கொள்ளக்கூடுமென தெரிவித்த நாடாளுமன்ற உற…
-
- 1 reply
- 354 views
-
-
போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 19 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ள நிலையில் அவருடன் வடபகுதி ஒடுக்குழு தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை அழைத்து வரக்கூடாது என புதுடில்லி வட்டாரங்கள் கண்டிப்புடன் தெரிவித்துள்ளதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன. பாரதீய ஜனதாக் கட்சியின் அழைப்பினை ஏற்றே அவர் புதுடில்லி செல்லவுள்ளார் எனத் தெரிவிக்கப்படும் நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், காஸ்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளமை தெரிந்ததே. இந்த நிலையிலேயே புதுடில்லி அரசு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அழைத்து வரவேண்டாம் எனத் தெரிவித்துள்ளது. டக்ளஸ் இந்தியாவுக்கு வருவதன் காரணமாக உள்ளுர் அரசியல், விசேடமாகத் தமிழக மக்களின் எதிர்ப்பினை காங்கிரஸ் சந்திக்க வேண்டியுள்ளதா…
-
- 1 reply
- 870 views
-
-
[size=4]யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான வாழ்வாதார உதவிகள் சரியான முறையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை. அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலேயே மீள்குடியேறியுள்ள மக்கள் வாழ்ந்து வருவதாக ஐ.நா மனித உரிமை ஆணையக அதிகாரிகளிடம் யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய பசுபிக், மத்திய கிழக்கு, வட அமெரிக்க பிரிவுக்கான பொறுப்பாளர் ஹன்னி மெகாலி மற்றும் சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகத் தெரிவுகளுக்கான மனித உரிமைகள் அதிகாரி ஒஸ்கார் சொலேரா ஆகியோர் யாழ் ஆயர் தோமஸ் சௌந்தர நாயகத்தை இன்று மதியம் 2.00 மணிக்கு சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்தச் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வன்னிப்பகுதியில் 80 சதவீதமான வீடு…
-
- 0 replies
- 300 views
-
-
[size=4]இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தின் ஆசிய பசுபிக், மத்திய கிழக்கு, வட அமெரிக்க பிரிவுக்கான பொறுப்பாளர் ஹன்னி மெகாலி மற்றும் சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகத் தெரிவுகளுக்கான மனித உரிமைகள் அதிகாரி ஒஸ்கார் சொலேரா ஆகியோரை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். வடமாகாண பிரதம செயலாளர் அலவலகத்தில் விசேட சந்திப்பொன்றில் ஈடுபட்ட இவ் அதிகாரிகள், வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற பொருளாதார அபிவிருத்திகள், கண்ணிவெடி அகற்றும்; செயற்பாடுகள், மீள்…
-
- 1 reply
- 322 views
-
-
சிறீலங்காவில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் 6 சத வீதத்தால் அதிகரிப்பு சிறீலங்காவில் சிறுவர்கள், பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் 6 சத வீதத்தால் அதிகரித்துள்ளதாக காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக ஒன்லைன் உதயன் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, முன்னைய காலத்தை விட தற்போது சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றது. கடந்த வருடம் 1775 ஆக இருந்த பாலியல் துஸ்பிரயோகம் இவ் ஆண்டு மேலும் 6 வீதத்தினால் அதிகரித்துள்ளது. குறிப்பாக அநுராதபுரம்,இரத்தினபுரி மற்றும் குருநாகல் பிரதேசங்களிலே இவ்வாறான பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வ…
-
- 0 replies
- 478 views
-
-
துரித கதியில் வளர்ச்சியடைந்துள்ள மன்னார் உப்பளம் By Lambert 2012-09-17 11:37:38 மன்னார் மாந்தை உப்பு உற்பத்தி நிலையம் தற்போது நவீன மயப்படுத்தப்பட்டுள்ளதோடு துரித கதியில் வளர்ச்சியடைந்து பலருக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. கடந்த காலங்களில் மன்னார் மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தில் பல வசதிக் குறைபாடுகள் காணப்பட்டன. குறிப்பாக இயந்திரங்கள் அதிகளவில் இல்லை.இதனால் தொழிலாளர்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர். தற்போது உப்பு உற்பத்தி நிலையத்துக்கு பல்வேறு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. உப்பளத்தில் தற்போது 60 க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து வருகின்றார்கள். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 600 ரூபா முதல…
-
- 0 replies
- 912 views
-
-
அனைத்துலக ரீதியாக எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும், நாட்டுக்குச் சுதந்திரம் பெற்றுக் கொடுத்த படையினரைப் பாதுகாப்பதற்கு சகல நடவடிக்கைகளையும் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொள்ளும் என்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கம்பகா மாவட்டத்தில் உள்ள திவுலப்பிட்டியவில், சிறிலங்காப் படையினருக்காக அமைக்கப்பட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் முப்படைத் தளபதிகள் பங்கேற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய பசில் ராஜபக்ச, சிறிலங்கா அதிபர் போருக்குத் தலைமை தாங்கினாலும், நாட்டை மீட்டெடுத்து அபிவிருத்தியைக் கட்டியெழுப்பு வதில் முப்படை…
-
- 2 replies
- 654 views
-
-
இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் அதிமுக வழக்கறிஞர்கள் குழு டெல்லியில் உள்ள சர்வதேச நீதிமன்ற நீதிபதியான தல்வீர் பண்டாரியிடம் இன்று மனு அளித்துள்ளனர். செப்டம்பர் 20-ந் தேதி இந்தியாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்ச வருகை தர உள்ளார். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் அதிமுக வழக்கறிஞர்கள் குழு டெல்லியில் உள்ள சர்வதேச நீதிமன்ற நீதிபதியான தல்வீர் பண்டாரியிடம் இன்று மனு அளித்துள்ளனர். இந்த மனுவில் இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நீதிமன்ற நீதிபதியிடம் அரசியல் கட்சி ஒன்றில் இ…
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கையின் அதிகாரிகள் எவரையும் நம்பமுடியாது என்று தெற்காசியாவுக்கான பிரதி அமரிக்கா ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளெக் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது 2009 ம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர், இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளான ஹோம்ஸ் மற்றும் பெஸ்கோ ஆகியோர் இலங்கை தலைவர்களுடனும் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இதன்போது இலங்கையின் சார்பில் எவருமே நம்பி செயற்படும் அளவில் நடந்துகொள்ளவில்லை என்று ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் ரொபட் ஓ பிளெக்கிடம் தெரிவித்துள்ளனர். வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் உரிய தரவுகளை வழங்கவில்லை என்று ஐக்கிய நாடுகளி…
-
- 4 replies
- 822 views
-
-
யாழ்.வேலணை, மண்கும்பான் கடற்பரப்பில் தொடர்ச்சியாக கரை ஒதுங்கி வரும் சடலங்கள் அவுஸ்திரேலியாவிற்கு பயணித்தவர்களினதாவென சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே நேற்றுக் காலை இதே இடத்தில் சடலமொன்று மீட்கப்பட்டிருந்த நிலையில் உருக்குலைந்த நிலையில் மேலும் ஒரு ஆணின் சடலம் இன்று காலையும் கரையொதுங்கியிருந்தது. நேற்று சனிக்கிழமை குறித்த பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியிருந்த நிலையில் அது மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஞாயிறு காலையும் மற்றொரு சடலம் கரையொதுங்கியிருக்கின்றது. இந்தச் சடலமும் முற்றாக உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றது. சடலத்தின் தலைப்பகுதி முற்றாக உருக்குலைந்துள்ளது, மேலும் சடலத…
-
- 2 replies
- 628 views
-
-
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள், தங்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தி தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில், சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர், மனித உரிமை அமைப்புகள், மக்கள் கண்கானிப்பு அமைப்பு, தமிழ் தேசிய கூட்டமைப்பு பா.ம உறுப்பினர்கள் ஆகியோருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பின்மை தெடர்பானது அநுராதபுரம் சிறைச்சாலையில் சுமார் 65 க்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் பாதுகாப்பு மற்றும் இதர பிரச்சனைகள் காரணமாக அரசியல் கைதிகளுக்கென ‘உயர் …
-
- 0 replies
- 374 views
-
-
தியாகதீபம் திலீபன் அவர்களின் 25ம் ஆண்டு நினைவெழுச்சியுடனும் சிங்கள இனவெறி அரசின் கோரப்பிடியில் சிக்குண்டு நாளும் பொழுதும் மரணப்பொறிக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் எம் உறவுகளை காப்பாற்றவும் அங்குலம் அங்குலமாய் பறிபோய்க்கொண்டிருக்கும் எமது தாய்நிலத்தை மீட்க குரல் கொடுப்பதற்காக ஒன்றாய் எழுவோம். எம் மண்ணின் விடிவிற்காய், மாண்ட எம் வீரர்களின் கனவை நனவாக்க, ஒர் அணியில் திரள்வோம். இளையோர்களே எம் புலம்பெயர் மக்களே எம் தாய் மண் விடிவிற்காய் நாம் விழித்தெழுவோம். எமது நிலம் எமக்கு வேண்டும் என்கின்ற இலட்சிய உறுதியோடு நாம் ஒன்றாய் கரம் கொடுத்து நீதி கேட்டு தாயகம் மீட்போம். இளையோர்களே எம் சொந்தங்களே ஒன்றாய் பொங்கி எழுவோம் உலக அரங்கில் உரத்துக்குரல் கொடுப்போம். nஐனிவா ஐ.நாடுகள் மனி…
-
- 5 replies
- 1.3k views
-