Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ்நாட்டிலுள்ள அகதி முகாம்களிலுள்ள 34 இலங்கையர்களை படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்ப முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் ஐவருக்கும் கேரளாவைச் சேர்ந்த நால்வருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கடந்த காலத்தில் தொடர்பிருந்ததாக சந்தேகிக்கப்படுவதாக கேரள பொலிஸார் தெரிவித்துள்ளனர். ‘இந்த 9 பேருக்கும் கடந்த காலத்தில் எல்.ரி.ரி.ஈ.யுடன் தொடர்பிருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள் காளமேஸரி பொலிஸ் முகாமில் விசாரிக்கப்பட்டனர். அவர்கள் சந்தேகத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் கியூ பிரிவு பொலிஸார் அவர்களை விசாரிக்கும்வரை எதையும் உறுதிப்படுத்த முடியாது’ என கேரளாவின் எர்ணாகுளம் பொலிஸ் அத்தியட்சகர் ஹர்ஷித அட்டாலுர…

  2. [Wednesday, 2011-09-28 11:03:22] மக்கள் விடுதலை முன்னணியில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கட்சியின் மாநாட்டை விரைவில் கூட்டத் தயார் என அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். கட்சியிக்குள் உள்ளகச் சிக்கல் இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க ஒப்புக்கொண்டுள்ளார். வருண தீப்தி ராஜபக்ஷ், புபுது ஜாகொட மற்றும் திமுது ஆர்டிகல ஆகிய மூத்த உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகியதை அடுத்தே கட்சியிக்குள் இவ்வாறான சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு இதுவரையில் கட்சியின் தலைமைக்கு அவர்களது வெளியேற்றம் குறித்து அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எப்படியிரு…

  3. [Wednesday, 2011-09-28 11:08:13] ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையே இடம்பெறும் பேச்சு தொடர்பாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கு விளக்கமளிக்கப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால படி சில்வா தெரிவித்தார். நாடாளுமன்றத்திற்கு வெளியில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இருந்தும் அபிப்பிராயங்களை அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் எனவும் அமைச்சர் சிறிபால படி சில்வா கூறினார். கொழும்பில் உள்ள வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இன்று செவ்வாய்க்கிழமை விசேட நேர்காணல் வழங்கிய அமைச்சர் அரசாங்கத்தின் சமாதான செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளித்தார்.அந்த விசேட நேர்காணலில் அமைச்சர் நிமல் சிறிபால டி சி…

  4. [Wednesday, 2011-09-28 11:13:39] ஐ.நாவின் 66 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுக் காலை நாடு திரும்பியுள்ள நிலையில் தேசப் பற்றுள்ள தேசிய இயக்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசு நடத்தி வரும் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. புலிக் குட்டிகளான கூட்டமைப்புடன் நடத்தி வரும் பேச்சுக்களை உடன்நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்திக் கூறியுள்ளது . தேசிய இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப்படவேண்டும் என்பது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விவரிக்கையிலேயே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு: தம…

  5. Sep 29, 2011 / பகுதி: செய்தி / தலைநகரிலிருந்து 3 இலட்சம் தமிழ் மக்களை வெளியேற்ற அரசாங்கம் சதி. தலைநகர் கொழும்பில் வாழும் சுமார் 3 இலட்சம் தமிழ் மக்களை வெளியேற்றுவதற்கான சதி முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது என்று ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளர் ஏ.ஜே.எம்.முஸாம்மில் தெரிவித்தார். தற்போது நடைபெறவுள்ள கொழும்பு மாநகரசபைத் தேர்தலானது தமிழ் மக்களுக்கு சோதனையான தேர்தலாகக் காணப்படுகின்றது. அரசாங்கத்தின் சதி வலையில் சிக்கிக்கொள்ளாது தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தமிழ் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். http://www.pathivu.com/news/18602/57/3/d,article_full.aspx

  6. மாலைத்தீவு சார்க் மாநாட்டுக்கு இலங்கை அதிரடிப்படை பாதுகாப்பு _ வீரகேசரி இணையம் 9/28/2011 7:15:58 PM 3Share மாலைதீவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டுக்கு இலங்கையிலிருந்து விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக செல்லவுள்ளனர். இலங்கை ஜனாதிபதி உட்பட பலநாட்டு அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளமையினால் அவர்களின் பாதுகாப்பு கருதியே விசேட அதிரடிப்படையினரை அனுப்பத் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. இது சம்பந்தமாக மோப்ப நாய்களுக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=34059

  7. காட்டுக்குள் ஓர் அதிசயம்! _ வீரகேசரி இணையம் 9/28/2011 11:41:33 AM 19Share இலங்கையின் இரத்தின மாநகரம் என்றழைக்கப்படும் இரத்தினபுரியிலிருந்து 53 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கிறது இறக்குவானை எனும் அழகிய நகரம். சிங்கராஜ வனத்தை எல்லைப்பகுதியாகக் கொண்ட இறக்குவானை அனைத்து மதங்களுக்கும் பொதுவானதோர் இடமாக விளங்குகிறது. நகரத்திலிருந்து பார்க்கும்போது நாலாபக்கமும் தூரத்தே தெரியும் ஆரண்யகத்தின் வனப்பு எம்மை மெய்சிலிர்க்க வைக்கும். இந்த காட்டுக்குள் ஒரு சிவன் ஆலயம் இருப்பதாகவும் அது அதிசக்தி வாய்ந்த ஆலயம் என்றும் அப்பகுதி மக்கள் அடிக்கடி பேசிக்கொள்வதுண்டு. அதனை கண்டறிவதற்காக எமது பயணம் ஆரம்பமானது. 'ஆமாங்க, பழைய காலத்துக் கோயில் ஒன்னு இருக்குது. …

  8. வடமாகாண ஆளுநரின் உத்தரவில் யாழ். பழைய பூங்கா இடித்துடைப்பு யாழ். நகரில் வரலாற்று புகழ்மிக்க பழைய பூங்கா கட்டடம் வடமாகாண ஆளுநரின் பணிப்புரையின் பேரில் இடித்துடைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் அரச அதிபரின் வாசஸ்தலமாக பாவிக்கப்பட்ட குறித்த கட்டடம் 1829ஆம் ஆண்டு யாழ். மாவட்ட அரச அதிபர் காரியாலயத்திற்கு சொந்தமானதென முன்னாள் அரச அதிபர் லைக்கினால் எழுதிக் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போதைய யாழ். அரச அதிபர் காரியாலயத்திற்கு நேரெதிரே அமைந்துள்ள குறித்த பழைய பூங்கா கட்டடம் தொல்பொருள் திணைக்களத்தினால் பராமரிக்கப்பட்டும் வந்துள்ளது. இந்நிலையிலேயே வடமாகாண ஆளுநர் சந்திரசிறியின் பணிப்பு என்று கூறி, அவரது பிரத்தியேக செயலர் தலைமையில் குறித்த கட்டடம் இடிக்கப்…

  9. அரசியல் ஆலோசனை சபை தமிழர்களுக்கு அவசர தேவை ஆரோக்கியமான அரசியல் தலைமையும் இல்லை. பலமான புத்திஜீவிகளும் இல்லை எனில் தமிழ் இனம் எப்படித் தலை நிமிர முடியும்? தமிழ் மக்கள் எவ்வளவுதான் இனத்துவப் பற்றுடையவர்களாக இருந்தாலும் தமிழ் அரசியல் தலைமைகள் விசுவாசமற்றவர்களாக இருப்பின் எதுவுமே செய்ய முடியாது. இனப்பிரச்சினைக்கு எந்தவிதமான தீர்வு முயற்சிகளும் முன்னெடுக்கப்படாத நிலையில், இலங்கை அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திவரும் பேச்சுவார்த்தையை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பலமான முயற்சியாக காட்டிவருகின்றது. ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளச் சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷ‌ அங்கு ஐ.நா செயலாளர் பான் கீ மூன் மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகி…

  10. "இலங்கையின் கொலைக்களம" : இன்று நோர்வே தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பு! [ Tuesday, 27-09-2011 16:56 ] பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியினால் உருவாக்கப்பட்டு இலங்கை அரசாங்கத்தினை போர்க்குற்ற நெருக்கடிக்குள் தள்ளியுள்ள இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படம் நோர்வே தேசிய தொலைக் காட்சியான என்ஆர்கே2 இல் இன்று ஒளி பரப்பப்படவுள்ளது. இன்றைய ஆவணம்’ என்னும் நிகழ்ச்சிப் பிரிவில் இன்று (27.09.2011) இரவு 10.30 மணிக்கு இலங்கையின் கொலைக்களம் ஆவணப் படத்தை ஒளிபரப்பவுள்ளதாக என் ஆர்கே நிறுவனம் அறிவித்துள்ளது. ‘இன்றைய ஆவணம்’ நிகழ்ச்சிப் பிரிவில் இதனை ஒளிபரப்புவது தொடர்பாக தொலைக்காட்சி அளித்துள்ள விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி நாட்…

  11. கேணல் ரமேஸின் மனைவியான வத்சலாதேவிக்கு எதிராக வழக்கு! [ Wednesday, 28-09-2011 10:34 ] தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதி கேணல் ரமேஸின் மனைவிக்கு எதிராக வழக்குத் தொடரத் திட்டமிடப்பட்டுள்ளது.சர்வதேச காவல்துறையினரின் (இன்டர்போல்) ஊடாக ரமேஸின் மனைவி வத்சலாதேவிக்கு பிடிவிராந்து பிறப்பிப்பது குறித்து இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினர் கவனம் செலுத்தி வருகின்றனர். புலிகளின் கிழக்கு மகளிர் பிரிவு தலைவியாக வத்சலாதேவி செயற்பட்டதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. 600 காவல்துறை உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்டமை, அரந்தலாவ பௌத்த பிக்கு படுகொலை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பிலான தகவல்களை மூடி மறைத்த குற்றத்திற்காக வத்சலாதேவிக்கு எதிராக வழக்குத் தொடரப…

  12. மஹிந்தவுக்கு எதிராக வழக்கு : சம்பவத்தின் பின்னணியில் அனைத்துலக மன்னிப்புச் சபை! [ Wednesday, 28-09-2011 10:49 ] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்த சம்பவத்தின் பின்னணியில் அனைத்துலக மன்னிப்புச்சபை செயற்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபைக்கும், வழக்குத் தாக்கல் செய்த அமெரிக்கப் பல்கலைக்கழகம் என்ற அரச சார்பற்ற நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தின் சட்டத்தரணி அலி புட்மான் மற்றும் நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் ருத்ரகுமாரன் ஆகியோர் வழக்கைத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கேணல் ரமேஸின் மனைவியினால் தாக்கல் செய்யப்ப…

  13. வரலாற்றில் முதன்முறையான நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு தொகை அரிசி கென்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி 250 மெற்றிக்தொன் அரிசி கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வரத்தக அமைச்சின் செயலாளர் சுனில் சிறிசேன தெரிவிக்கின்றார். சர்வதேச நாடுகளில் இலங்கை அரிசிக்கு நிலவும் கேள்வி தொடர்பில் ஆராய்ந்த போது 250 மெற்றிக் தொன் அரிசியை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு இருந்தமை கண்டறியப்பட்டதாக அவர் கூறினார். எனவே எதிர்வரும் காலங்களில் தூதரங்கள் ஊடாக இலங்கையிலுள்ள மேலதிக அரிசியை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டின் நெல் மற்றும் அரிசி என்பன தேவைக்கு மேலதிகமாக உள்ளமையினால் விவசாயிகள் எதிர்வரும் காலங்களில் கட்டாயமாக …

  14. கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலைய கணனி வலைப்பின்னல் கடந்த 20 ஆம் திகதி திடீரென பாதிக்கப்பட்டது. இதனால் அன்றைய பங்கு பரிவர்த்தனையில் பாதிப்புக்கள் ஏற்பட்டது. இதன் போது 100 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டதாக கூறபப்டுகின்ரது. . ஆனால் இப்போது கிடைத்த தகவல்களின் படி தடைப்பட்ட நாளான 20 ஆம் திகதி அன்று பெருமளவான தரவுகள் காணாமல் போயுள்ளதாக கூறபப்டுகின்றது. இது திட்டமிட்டு மூன்றாம் தரப்பு ஒன்றின் ஊடுருவலாக இருக்குமோ என ஆய்வுகள் நடக்கின்றன. . இந்த திருடப்பட்ட தகவல்களின் பெருமளவானவை அரச சார்பு முதலீட்டாளர்களின் தரவுகள் என கூறப்படுகின்றன. மூலம்

  15. ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவுக்கு எதிராக நியூயோர்க்கில் தொடரப்பட்டுள்ள வழக்குத் தொடர்பாக ஐ.நா தூதுவர் பிரிவின் அறிவிப்பு இலங்கை வெளிவிவவகார அமைச்சுக்கு இன்று கிடைக்கலாம் என அமைச்சின் அதிகாரி ஒருவர் எமது இணையத்துக்குத் தெரிவித்தார். சிறிலங்காவின் ஐக்கிய நாடுகளுக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியும் போர்க்குற்றவாளியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராஜதந்திரி என்பதால், ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள வியன்னா ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் சலுகைகள், நியமங்கள் ஊடாக அவர் பாதுகாக்கப்படுவார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மற…

  16. [Wednesday, 2011-09-28 11:46:45] பாராளுமன்றத் தெரிவுக் குழு என்ன அடிப்படையில் இருக்கும் என்பதைப் பொறுத்தே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அக்குழுவில் பங்குபற்றுவது பற்றி தீர்மானமெடுக்கும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் வீரகேசரி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார். இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இதற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மேற்படி தெரிவுக்குழுவில் பங்குபெறப் போவதில்லையென ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இ…

  17. சிறிலங்கா ஒரு ஜனநாயக நாடு என்பதில் இருந்து அது இராணுவமயபப்டுத்தப்பட்டு வருகின்றது என சிறிலங்கா கிறிஸ்தவ சமூகம் குற்றம் சுமத்தியுள்ளது. நேற்று கிறிஸ்தவ ஒற்றுமைக்கான இயக்கம் (Christian Solidarity Movement (CSM)கொழும்பில் ஒரு மா நாட்டை நடாத்தியது. சிறிலங்காவின் அபிவிருத்தியும் இராணுவ மயபப்டுத்தலும் என்ற தலைப்பில் இந்த மா நாடு நடந்தது. . இந்த மாநாட்டில் பேசிய அமைப்பின் இணைபாளர் லக்‌ஷன பெர்னாண்டோ கூறுகையில்; . சிறிலங்கா ஜன நாயக நாடாக இருந்தும் அது ஒரு இராணுவமயப்படுத்தலை நோக்கி செல்கின்றது. அரசியல் மற்றும் சமூக நடத்தைகளில் பொதுமக்கள் தைரியமாக சுதந்திரமாக செயற்படமுடியவில்லை. நான் அண்மையில் யாழ்ப்பானம் சென்றிருந்தேன் அங்கு உள்ள ஊர் மக்களை சந்தித்தேன் ஆனால் அவர்கள் யுத்தம்…

  18. Published By பெரியார்தளம் On Wednesday, September 28th 2011. Under உலகத்தமிழர் செய்திகள் ஜெனீவாவில் உள்ள ஐ.நாவின் மனித உரிமை மையத்தின் கூட்டத் தொடர் நடைபெற்றும் வரும் இவ்வேளை சனல்-4 தொலைக்காட்சியின் ‘இலங்கையின் கொலைக்களம்’ ஆவணப்படம் ஜெனீவா நகரில் உள்ள பன்னாட்டு பெண்கள் அமைப்பு பிரதிநிதிகளுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. ’2009 மே போரின் இறுதி நாட்களில் ஈழத் தமிழ் மக்களின் அவலங்களும் அதன் பின்னரான​ இன்றைய​ தமிழ் பெண்கள் குழந்தைகளின் நிலை’ என்கிற​ தலைப்பின் பின் கீழ் இடம்பெற்ற அமர்விலேயே இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. நாடு கடந்த​ தமிழீழ​ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதியும் ‘பெண்கள் சிறுவர் முதியோர் நலம்பேணல்’ துணை அமைச்சருமாகிய ரஜனிதேவி.செல்லத்துரை அவர்களால் இத்…

  19. கிளிநொச்சி கனகபுர மாவீரர் துயிலுமில்ல காணி சிலரிடம் கையளிப்பு : 28 செப்டம்பர் 2011 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையின் வட-கிழக்குப்பகுதிகளில் இன்று வரை போர் நினைவு சின்னங்களின் எச்சங்களாக உள்ள விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலுமில்லங்களின் தடயங்களை இல்லாதொழித்துவிட அரசு முழு அளவினில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. வட-கிழக்குப்பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் பெரும்பாலும் இடித்தழிக்கப்பட்டுள்ளது. பல இடங்களிலும் அவை படைத்தளங்களாகியுமுள்ளது. யாழ்ப்பாணத்தின் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் 51வது படைத்தளமாகியுள்ளது.வேலண சாட்டியில் நட்சத்திர விடுதி அமையவுள்ளது. இதனிடையே கிளிநொச்சி கனகபுரத்திலுள்ள விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலுமில்ல காணிக்கு சிலர் உரிமை…

  20. தொண்டமான்நகர் கிராமப் பகுதியில் மக்களைப் படம் பிடிக்கும் நடவடிக்கையில் இராணுவம்! Published on September 28, 2011-9:31 am கிளிநொச்சி தொண்டமான் நகர் கிராமப் பகுதியில் வீடு வீடாகச் செல்லும் இராணுவத்தினர் மக்கள் வசிக்கும் வீடுகளைப் புகைப்படம் பிடித்ததுடன் வீட்டில் உள்ளவர்களின் பெயர், தொலைபேசி இலக்கம் என்பவற்றையும் பெற்றுப்பதிந்து சென்றுள்ளதாக இங்கு வசிக்கின்ற மக்கள் தெரிவித்தனர். இது பற்றி மேலும் தெரியவருவதாவது; கடந்த 24ஆம் திகதி காலையில் மேற்படி பகுதிக்கு வந்த இராணுவத்தினர் மேற்குறிப்பிட்ட விவரங்களைக் கேட்டுப்பதிந்ததுடன் வீடுகளையும் புகைப்படம் எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்கள். இது எதற்கென மக்கள் அந்த இராணுவத்தினரிடம் கேட்ட போது வீடு இல்லாதவர்களுக்கு வீடுவழங…

  21. கடற்புலித் தளபதியின் வீட்டை தேடி அலையும் தெற்கு மக்கள் Wednesday, September 28, 2011, 9:29 கடற்புலிகளின் தளபதி சூசை வீடு என நினைத்து சூலை என்ப வரின் வீட்டைத் தென்பகுதியிலிருந்து வந்தவர்கள் குதூகலத்துடன் புகைப்படம் எடுத்து ஏமாந்த சம்பவம் அண்மையில் புதுக்குடியிருப்பில் அரங்கேறியுள்ளது.தென்பகுதியிலிருந்து மாங்குளம் முல்லைத்தீவு வீதியூடாக வந்த தென்பகுதியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வள்ளிபுனத்திலுள்ள கடையொன்றில் தமது வாகனத்தை நிறுத்திச் சூசையின் வீட்டுக்குச் செல்லும் வழியைக் கேட்டுள்ளனர். கடையில் இருந்தவர்களுக்குச் சூசை என்பது சூலை எனக் கேட்டுள்ளது. இதனால் கோம்பாவில் பகுதியிலுள்ள சூலை என்பவரின் வீட்டுக்கு வழிகாட்டியுள்ளனர். தென்பகுதிச் சுற்றுலாப் பயணிகளும் மிகுந்த …

  22. நெடுந்தீவை சுற்றுலா மையத் துறையாக மாற்ற முயற்சி : 28 செப்டம்பர் 2011 குளோபல் தமிழ்ச்செய்தியாளர் அரசு ஆதரவுக்கட்சியான ஈபிடிபியின் கோட்டையான நெடுந்தீவை சுற்றுலா மையத் துறையாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கென சுற்றுலாத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று இப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இப்பகுதியில் கடல் விமானங்களை தரையிறங்குவதற்கேற்ற வசதிகளை செய்வதற்கும், அங்குள்ள குதிரை போன்ற கால்நடைகளைப் பாதுகாப்பதற்கு வெளிநாடுகளைப்போன்று புற்தரைகளை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. தற்பொழுது நெடுந்தீவு இறங்குதுறைப் பகுதியை அண்மித்த…

  23. போரின் தாக்கத்தால் கிளிநொச்சி மாவட்டத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட பலர் – ரொய்ட்டர் செய்தி சேவை! Published on September 28, 2011-4:26 am போரால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட பலர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று ரொய்ட்டர் செய்தி சேவை தெரிவித்துள்ளது. ரொய்ட்டர் செய்திச்சேவை கிளிநொச்சியில் சேகரித்த தகவல்களின் படி, இரண்டு வருடங்களுக்கு முன்னர் தாம் போரின் போது முகங்கொடுத்த கோரங்களில் இருந்து மக்கள் இன்னும் மீளத் திரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளது. ரஞ்சனி என்ற பெயரைக் கொண்ட பெண் ஒருவர், போரின் போது தனது தாயின் சடலம் எரியுண்டதையும், தமது சகோதரி இரத்தம் தோய்ந்த நிலையில் வீழ்ந்து கிடந்ததையும், உறவினர்கள் கண்முன்னே கொல்லப்பட்டதையும் நினைவுகூரு வதை ர…

  24. இலங்கை – இந்திய கடற் கூட்டுப்பயிற்சி முறிவடைந்த நிலையில் அமெரிக்கா போர்க்கப்பல் வருகிறது! Published on September 28, 2011-9:42 am இந்திய இலங்கை கடற்படைகளின் கூட்டுப்போர்ப்பயிற்சி இலங்கை கடற்பரப்பில் நடைபெற்று முறிவடிடைந்த நிலையில், அவசர விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்க கடற்படை அதிகாரிகள் விசேட போர்க்கப்பலொன்றில் விரைவில் இலங்கை வரவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க கடற்படையினரின் இலங்கை விஜயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும், ஆனால், திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கை வரும் அமெரிக்க கடற்படையின் விசேட அதிகாரிகள் உள்ளடங்கிய குழு இலங்கைக் கடற்படையின் முக்கிய அதிகாரிகளைச் சந்தித்துப் பல்வேறு விடயங்கள் தொடர்…

  25. [ செவ்வாய்க்கிழமை, 27 செப்ரெம்பர் 2011, 00:10 GMT ] [ கார்வண்ணன் ] வன்னியில் போரின் இறுதிக்கட்டத்தில் பாதுகாப்பு வலயத்தில் நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதலில் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் கூறியபோது, காலநிலை சரியில்லாததால் இரண்டு நாட்களாக ஜெட் போர் விமானங்கள் பறக்கவில்லையே என்று ஏளனமாகப் பதிலளித்துள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. கொழும்பில் இருந்து அப்பேதைய அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் இதுபற்றி வொசிங்டனில் உள்ள இராஜாங்கத் திணைக்களம் மற்றும் தூதரகங்களுக்கு 2009 மார்ச் 12ம் நாள் அனுப்பி வைத்துள்ள தகவல் குறிப்பிலேயே இவ்வாறு கூறியுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவ்ல வெளியிட்டுள்ளது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.