Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அண்மையில் கடத்தப்பட்ட முன்னாள் போராளி யாழ். வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி Saturday, September 17, 2011, 12:32 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் இனந் தெரியாத 6 பேரினால் இந்த மாதம் 8ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்டு மயங்கிய நிலையில் மறுநாள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நேற்று முன்தினம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். பருத்தித்துறை செட்டித்தெருவைச் சேர்ந்த கந்தப்பு கோமிதன் (வயது 44) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டவராவார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: இந்த மாதம் 8ஆம் திகதி குறித்த நபர் தமது வீட்டிலிருந்து பி.ப. 2 மணியளவில், யாழ். நகரிலுள்ள ஜெய்ப்பூர் நிறுவனத…

  2. நெதர்லாந்து ஹேக் மாநிலத்தில் விடுதலைப்புலிகளுக்கு நிதி உதவி செய்ததாக குற்றம் சுமத்தபப்ட்ட ஐந்து தமிழர்களுக்கு எதிரான வழக்கு நடைபெறுகின்றது. இந்த வழக்கில் சிறிலங்காவின் போர்க்குற்றம் தொடர்பிலான காணொளி அதாவது சிறிலங்காவின் கொலைக்களம் என்ற சனல் 4 காணொளியை காண்பிக்க வேண்டும் என விடுதலைப்புலிகள் தரப்பில் வாதாடும் சட்டவாளர் விக்டர் ஹொப் கேட்டுள்ளார். . இதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ல நெர்தர்லாந்து தூதுவர் சனல்4 காணொளி புலிகளின் பிரச்சார காணொளியின் துண்டுகள் என்றும் அவை பொய்யானவை என்றும் கூறியுள்ளது. மாறாக தமது அரசின் லைஸ் அக்ரீ அப்போன் என்கின்ற காணொளியினை போட அனுமதி கோரப்ப…

  3. கூட்டமைப்பு 13+ தீர்வு திட்டத்தின் அடிப்படையில் பேச்சுக்களை தொடர்வது என தீர்மானித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏற்கனவே கையளித்த தீர்வு யோசனை ஒன்றை கையளித்துள்ளார்களாம். அதில் 18 அதிகாரங்கள் 13ஆவது திருத்தத்துக்கு அப்பாலானவையாக இருந்தனவாம். இதனாலேயே பேச்சு தடைபட்டதாகவும் ஆனால் இப்போ சிங்கல அரசு அதனையும் உள்ளடக்கி பேசுவோம் என கூறியுள்ளதாகவும் கூட்டமைப்பு கூறுகின்றது.. நேற்றுப் பிற்பகல் இருதரப்பினருக்கும் இடையில் அலரி மாளிகையில் நடைபெற்ற பேச்சில் இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் தடைப்பட்டிருந்த அரசு கூட்டமைப்புப் பேச்சு நேற்று மீண்டும் ஆரம்பமானது. பேச்சு ஆரம்பமானது என்பதனைவிட ஜெனீவா மனித உரிமை கூட்டத்தில் எழும் அழுத்தங்களை சமாளிக்கும் மஹிந்தவின…

  4. சிறீலங்காவின் ஆட்சித்தலைவர் அமெரிக்காவுக்கு வருகை தருவதைத் தடுக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமெரிக்க அரசிடம் வற்புறுத்தல்: [saturday, 2011-09-17 00:43:41] சித்திரவதை, போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனப்படுகொலை புரிந்த சிறீலங்காவின் ஆட்சித்தலைவர் மகிந்தா ராசபக்சே ஐக்கிய அமெரிக்காவுக்கு வருவதை அனுமதிக்கக் கூடாது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய அமெரிக்க அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கிய அமெரிக்க குடிவரவு மற்றும் தேசிய சட்டம் பிரிவு 212(ஏ)(3)(இ)(iii) (� 212(a)(3)(E)(ii) of the INA) "தனியொரு மனிதர் ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியில் மனிதப்படுகொலைக்குக் கட்டளையிட்டார், தூண்டினார், துணைபோனார் அல்லது வேறுவிதத்தில் ஈடுபட…

  5. கல்பிட்டியில் சட்டவிரோதமான முறையில் காணிகள் கைப்பற்றப்படுகின்றன : 17 செப்டம்பர் 2011 கல்பிட்டி பிரதேசத்தில் பெறுமதிவாய்ந்த காணிகள் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசியல் பின்புலத்துடன் கூடிய நபர்கள் இவ்வாறு காணிகளை கைப்பற்றி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுற்றுலாக் கைத்தொழிலை மேற்கொள்ளக் கூடிய மிகவும் பெறுமதியான 165 ஏக்கர் அரச காணி இவ்வாறு தனியாரினால் அபகரிக்கப்பட்டுள்ளது. புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் காணிகள் இவ்வாறு கைப்பற்றப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. பிரதி அமைச்சரின் ஆதரவாளர்களே இவ்வாறு காணிகளை அபகரித்துள்ளதாகவும், சட்டவிரோதமாக பெற்றுக் கொள்ளப்பட்ட காணிகளை வெளிநா…

  6. காலத்தை இழுத்தடிக்க அரசு முனைப்பு!! 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் தீர்வு காண இணக்கமாம்! (3ஆம் இணைப்பு) Published on September 17, 2011-8:01 am இனப்பிரச்சினைக்கு 13ஆவது திருத்தத்து்ககு அப்பால் சென்று தீர்வு காண அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணங்கியிருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏற்கனவே கையளித்திருந்த தீர்வு யோசனையில் தெரிவிக்கப்பட்டிருந்த 18 அதிகாரங்கள் 13ஆவது திருத்துக்கு அப்பாலானவை இருந்த போதும் அவை தொடர்பில் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று அரசு தெரிவித்திருக்கிறது. நேற்றுப் பிற்பகல் இரு தரப்பினருக்கும் இடையில் அலரி மாளிகையில் நடைபெற்ற பேச்சில் இந்த இணக்கம் எட்டப்பட்டிருக்கின்றது. தடைப்பட்ட அரசு – கூட்டமைப்புப் பேச்சு நேற்று மீண்டும் ஆரம…

  7. இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து பிரித்தானிய பாராளுமன்றத்தில் விவாதம் : 15 செப்டம்பர் 2011 ஒன்றரை மணித்தியாலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றிய விவாதம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இன்று மாலை இடம்பெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 18 ஆவது கூட்டத் தொடர் இடம் பெறும் கால கட்டத்தில், பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கையின் மனித உரிமைகள் பற்றியவிவாதத்திற்கு ஒன்றரை மணித்தியாலம் ஒதுக்கப்பட்டுள்ளது.வன்னியில் முள்ளிவாய்க்காலில் இடம் பெற்ற மோதலின் போது படைகள் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் உ…

  8. பாலியல் தொழிலில் வளர்ந்துவரும் நாடாக சிறிலங்கா Friday, September 16, 2011, 22:51 தென் இலங்கையில் நாற்பதாயிரம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர் என சிங்கல அரசின் புள்ளிவிபரம் ஒன்று கூறுகின்றது. கொழும்பு, அம்பாந்தோட்டை,காலி, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலேயே இந்த இவர்கள் உள்ளனர். இவர்களில் 1388 பேருக்கு எயிட்ஸ் நோய் தொற்று உள்ளது. இதனைவிட முப்பத்தைந்தாயிரம் ஆண் தன்னின சேர்க்கையாளர்களும் இந்த மாவட்டங்களில் உள்ளனர். பெண் தன்னின சேர்க்கையாளர்களின் மதிப்பீடு இன்னமும் செய்யப்படவில்லை எனவும் அரசாங்கம் கூறியுள்ளது. ஆசியாவில் பாலியல் தொழிலாளிகள் அதிகரித்துவரும் நாடாக சிறிலங்கா இருப்பதாகவும் கூறப்படுகின்றது.இதுதானா மஹிந்த சிந்தனையின் வளர்ச்சி என ஊடகவியலாளர்கள் கேல்வி எழுப்பியு…

  9. சர்வதேசம் அரசை அதட்டாவிட்டால் தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்த வரலாறே மிஞ்சும் ஈழத் தமிழ் மக்களின் நீண்ட காலப் போரா ட்டம் மிகப் பெரும் துன்பத்தில் முடிந்து போனமை உலகின் சகிக்க முடியாத துன்ப வரலாறுகளில் முதன்மையானதாகிவிட்டது. அக் கொடுந்துன்பத்தை உலக நாடுகள் தெரிந்து கொண்டிருந்தும் அதனைத் தடுத்து நிறுத்த முற்படாமை வேதனையிலும் வேதனை. வன்னி யுத்தத்தில் அகப்பட்ட தமிழ் மக்கள் உலக நாடுகளிடம் எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கேட்டார்கள். ஐ.நா.அமைப்புகள் வன்னியிலிருந்து வெளியேறிய போது மக்கள் வீதிக்குக் குறுக்கே கிடந்து எங்களை கைவிட்டுப் போகாதீர்கள் என்று மன்றாடினார்கள். ஆனால், நீங்கள் எப் பாடுபட்டாலும் பரவாயில்லை என்று சொல்லி விட்டுப் போவது போல ஐ.நா. அமைப்புகள் வன்னி மண்ணிலிருந்து ஓடி…

  10. 16 செப்டம்பர் 2011 கோத்தாபய வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்குத் தமிழ்ப் பொலிஸாரை நியமிக்க வேண்டிய தேவை இல்லை என்றும் அவ்வாறானதொரு தேவை இருப்பின் ரொபர்ட் ஓ பிளேக் அதனை அமெரிக்காவுக்குள் அமுல்படுத்தட்டும் எனவும் பாதுகாப்புச் செயலாளரான கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை வந்திருந்த அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் வடக்கில் தமிழ் பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவேண்டும் என குறிப்பிட்டிருந்தமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே பாதூப்புச் செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பொலிஸாரின் நியமனத்தில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற தெரிவோ அல்லது அந்தந்த மொழியைக் கொண்ட…

  11. அமெரிக்காவின் பிரதிநிதியாக இலங்கை வந்திருந்த அந்நாட்டு பிரதி ராஜாங்கச் ரொபர்ட் ஓ பிளேக் யாழ்ப்பாணத்துக்குச் சென்ற போது அவருக்கு யாழ். மாவட்டச் செயலகத்தில்வரவேற்பளிக்கப்படாமைக்கு அரசாங்கத்தின் உயர்மட்ட அழுத்தமே காரணம். இதனையடுத்தே அவர் சாதாரண மனிதன் போல் அங்கு நடத்தப்பட்டார். என்று டெலோ இயக்க அரசியல் தலைவர் எம். கே. சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்.. யாழ். மேலதிக அரசாங்க அதிபரைச் சந்தித்த பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சமூகத்துடன் கலந்துரையாடுவதற்காக அவர் அமெரிக்கன் கோணர் என்ற இடத்துக்குச் செல்ல முயன்ற போது அதனைக் குழப்பியடிப்பதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி அமைப்பினரால் ஆர்ப்பாட்டம் ஒன்றும் …

  12. தொறயா ஓபெய்டடின்; அறிக்கை வெளிவந்தால் மகிந்த – கோத்தாபய – பாதுகாப்பு உயரதிகாரிகளுக்கு பிடிவிறாந்து? 16 செப்டம்பர் 2011 விமல் வீரவன்ச:- தருஸ்மன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஆராய பான் கீ மூன் நியமித்த விசாரணை அதிகாரியான ஐ.நா. சனத்தொகை நிதியத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரான தொறயா ஓபெய்டடின் அறிக்கை வெளிவந்தால் இலங்கை ஜானதிபதிக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கும், பாதுகாப்பு உயரதிகாரிக்கும் பிடிவிராந்து அனுப்பப்படும் சந்தர்ப்பம் ஏற்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச ஆருடம் கூறுகின்றார். எனவே இந்த சதிதிட்டத்திற்கு எதிராக இந்த நாட்டு மக்கள் அனைவரும் அணிதிரண்டு போராட வேண்டும் எனவும் அவர் மக்களிடம் வேண்டுகோள…

  13. இரண்டு பேரில் யார் கூறுவது பொய்? Friday, September 16, 2011, 23:29 கொழும்பில் வீடுகள் உடைக்கப்படுவது குறித்து தந்தையும் மகனும் தற்போது இருவேறு கதைகளை மக்களுக்கு கூறுகின்றனர். இதில் எவர் உண்மையை கூறுகிறார்?. தற்போது உண்மையை கூறுவது மகன் தான் என தான் எண்ணுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயல் நிலை உறுப்பினர்கள் சிலர் கொழும்பு மாநகர சபைத் தேர்தலில், முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் ஏ.ஜே.எம். முஸ்ஸாமில் வீட்டில் நேற்று (14) நடத்திய சந்திப்பின் போது, மங்கள இதனை கூறியுள்ளார். பொரல்லையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதியின் புதல்வர் நாமால் ராஜபக…

  14. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு பிரித்தானியப் பாதுகாப்புச் செயலர் லியம் பொக்ஸ் ஆதரவளிக்க வேண்டும் என்று கோரி பிரி. வடக்கு சொம்செற் தொகுதியில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. நெயஸ்சீ நகர சதுக்கத்தில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தை அக்ற்நெளவ் என்ற அமைப்பு மற்றும் தமிழர்களும் இணைந்து முன்னெடுத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் வீதியில் சென்றவர்களிடம் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததுடன் அது தொடர்பான மனுவொன்றிலும் கையெழுத்துக்களைத் திரட்டியுள்ளனர். வடக்கு சொம்செற் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான லியம் பொக்ஸ் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களைக் குறித்து அனைத்…

  15. [saturday, 2011-09-17 00:43:41] சித்திரவதை, போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனப்படுகொலை புரிந்த சிறீலங்காவின் ஆட்சித்தலைவர் மகிந்தா ராசபக்சே ஐக்கிய அமெரிக்காவுக்கு வருவதை அனுமதிக்கக் கூடாது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய அமெரிக்க அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கிய அமெரிக்க குடிவரவு மற்றும் தேசிய சட்டம் பிரிவு 212(ஏ)(3)(இ)(iii) (� 212(a)(3)(E)(ii) of the INA) "தனியொரு மனிதர் ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியில் மனிதப்படுகொலைக்குக் கட்டளையிட்டார், தூண்டினார், துணைபோனார் அல்லது வேறுவிதத்தில் ஈடுபட்டார் எனில் அவர் ஐக்கிய அமெரிக்காவுக்குள் நுழையத் தகுதியற்றவர்" எனக் கூறுகிறது. மேலும் ஐக்கிய அமெரிக்க குடி…

  16. குற்றம் சுமத்தப்பட்ட நபர் 11 வருடகால வழக்கு விசாரணையின்பின் விடுதலை ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் கொன்டு சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டு 2000 ஆம் ஆண்டில் வழக்குத் தொடுக்கப்பட்ட நபர் ஒருவரை 11 வருடங்களின்பின் நிரபராதி என கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்தது. சந்திரகுமார் ரொபர்ட் புஷ்பராஜ் எனும் நபருக்கு எதிரான வழக்கு கொழும்பிலும் நீர்கொழும்பிலும் பல நீதவான்கள் மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் 11 வருடங்களாக விசாரிகக்ப்பட்டது. இந்நிலையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ, சந்தேக நபரை நேற்று விடுதலை செய்தார். இச்சந்தேக நபர் மீதான குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என நீதிபதி சுனில் ரா…

  17. சிங்களக் குடியேற்றம் – வெலிஓயா பிரதேச செயலர் பிரிவு முல்லைத்தீவில் உருவாக்கம் Saturday, September 17, 2011, 0:19 முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக வெலிஓயா பிரதேசசெயலர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசுக்கு நெருக்கமான இணைய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த மாதத்தில் இருந்து செயற்படும் வெலிஓயா பிரதேசசெயலர் பிரிவில் எட்டு கிராம நிர்வாகப் பிரிவுகள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அந்த இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. முன்னதாக 1987ம் ஆண்டில் இந்த நிர்வாகப் பிரிவு அனுராதபுர மாவட்டத்தின் பதவியா பிரதேச செயலர் பிரிவின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது. தற்போது பதவியா பிரதேசசெயலர் பிரிவில் இருந்து பிரிக்கப்பட்ட 8 கிராம நிர்வாகப் பிரிவுகளையும் கொண்ட வெலிஓயா பிரதேச …

  18. Published By பெரியார்தளம் On Friday, September 16th 2011. Under பெரியார் முழக்கம், முதன்மைச்செய்திகள் ராஜீவ் கொலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவர் கே.டி.தாமஸ். அவருடன் நீதிபதிகள் வாத்வா மற்றும் முகம்மது குயாத்ரி ஆகிய மூவரும் சேர்ந்து இந்த வழக்கை விசாரித்தனர். இம் மூவர் அடங்கிய அமர்வின் தலைமை நீதிபதியாக கே.டி.தாமஸ் இருந்தார். முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய நால்வருக்கும் உச்சநீதி மன்றம் தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்தியது. இதில் கே.டி. தாமஸ் மட்டும் நளினிக்கு தூக்குத் தண்டனை வேண்டாம் என்று தீர்ப்பளித்தார். நளினியின் கணவர் முருகனுக்கு தூக்குத் தண்டனை தரப்பட்டுவிட்டதால், முருகனின் மனைவி நளினி வயிற்றில் வளரும் குழந்தை, அநாதையாகிவிடக்கூடிய கட்டாயத்தை உர…

  19. Published By பெரியார்தளம் On Friday, September 16th 2011. Under பெரியார் முழக்கம் ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு மட்டுமல்ல, இக்கொலை பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள் செயல்பாட்டிலும் பல மர்ம முடிச்சுகள் காணப்படுகின்றன. ராஜீவ் கொலையில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவதில் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசுக்கு உண்மையான கவலை இருக்கவே இல்லை என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. எப்படியாவது விடுதலைப் புலிகள் இயக்கத்தினரையும், அந்த இயக்கத்தின் இலட்சியத்துக்காக தமிழின உணர்வோடு செயல்பட முன் வந்த தமிழின இளைஞர்களையும் தண்டித்தாக வேண்டும் என்ற ‘ஒற்றைப் பார்வை’யோடு, காங்கிரஸ் ஆட்சி செயல்பட்டிருக்கிறது. ராஜீவ் கொலையில் உண்மையான குற்றவாளிகளை…

  20. உயர்மட்டத்தில் ஒழுங்கு செய்யப்பட்டு இயக்கப்படுவதுதான் 'கிறீஸ் மனிதன்' - சுமந்திரன் எம்.பி.விசேட செவ்வி மர்ம மனிதன் விவகாரமானது உயர் மட்டத்தில் இயக்கப்படுகின்ற காரியம் என்பது எங்களுக்கு மிகவும் தெளிவாக விளங்குகிறது. இல்லாவிட்டால் பொத்துவிலிலும் யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் ஒரே காலகட்டத்திலே ஒரே மாதிரியான சம்பவங்கள் இடம்பெற மாட்டாது. அந்த இடங்களில் இருக்கின்ற மன நோயாளிகள் எல்லோருக்கும் ஒரே நாளில் இப்படி செய்யத் தோன்றாது எனக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழப்; பேசும் மக்கள் வாழுகின்ற இடத்திலேயே தான் திடீரென இம்மாதிரியான யோசனை வர வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பினார். மர்ம மனிதன் விவகாரம் மற்றும் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் வீரக…

  21. [Friday, 2011-09-16 20:42:25] இலங்கைத் தமிழர்களது பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தென் மற்றும் மத்திய ஆசிய வலய நாடுகளுக்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். புது டெல்லியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக தமிழக தொலைக்காட்சி ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக யுத்தம் காரணமாக பாதிப்புக்களை எதிர்நோக்கி வரும் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் அவலங்களை போக்குவதற்கு துரித கதியில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய மத்திய அரசாங்கம் வலியுறுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்த…

  22. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் நடத்துவது என இணக்கம் காணப்பட்டதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமது கட்சியினால் முன்னர் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் 2011 மார்ச் 18 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகக் கூறிய அவர், இரு தரப்பினருக்கும் இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை எதிர்வரும் அக்டோபர் மாதம் 3 ஆம் திகதி நடத்தவும் இணக்கம் காணப்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான தகவல்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தருகிறார். கரு…

  23. [Thursday, 2011-09-15 20:16:32] ஜெனீவாவின் தீர்மானங்களுக்கோ ஐ.நா. உட்பட அமெரிக்காவின் படைப் பலங்களுக்கோ இலங்கை ஒருபோதும் அஞ்சாது. மீள் தலையீடுகளுக்கு எவராவது முயற்சித்தால் அதனை எதிர்கொள்ள நாம் தயாராகவே உள்ளோம் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார். ரொபட் ஓ பிளேக் போர் குற்றச்சாட்டுக்களுக்கு அடிப்பணிய வைக்கவும், உள்நாட்டில் அதிகாரப் பகிர்வின் ஊடாக நாட்டை துண்டாடவுமே இலங்கை வந்தார். எனவே, அரசாங்கம் உடனடியாக பிரிவினைவாதத்திற்கு ஏதுவான காரணிகளை தேசிய அரசியலில் தடை செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக கலாநிதி குணதாச அமரசேகர மேலும் கூறுகையில்: ஜெனீவா அமர்விற்கு பான் கீ மூன் நி…

  24. 16 செப்டம்பர் 2011 தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தென் மற்றும் மத்திய ஆசிய வலய நாடுகளுக்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளார். புது டெல்லியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக தமிழக தொலைக்காட்சி ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக யுத்தம் காரணமாக பாதிப்புக்களை எதிர்நோக்கி வரும் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் அவலங்களை போக்குவதற்கு துரித கதியில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய மத்திய அரசாங்கம் வலியுறுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சக…

  25. யுத்தம் நிறைவடைந்து இரு வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் சர்வதேச சமூகம் வலியுறுத்தி வரும் சில விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் புருஸ் லெவி தெரிவித்துள்ளார். சமதானத்தையும், அபிவிருத்தியை ஏற்படுத்த மெய்யாகவே அரசாங்கம் அக்கறை காட்டினால் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது தொடர்பான விவகாரத்தை உதாசீனம் செய்ய முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். கனடாவின் பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் அண்மையில் வெளியி;;ட்ட கருத்து தொடர்பில் இலங்கை ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது தெடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.