ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
Sport cannot turn a blind eye Should the Australian cricket team tour Sri Lanka? Yes/No
-
- 0 replies
- 677 views
-
-
ஜூலை 8, 2011 அண்மையநாட்களில் தொடராக கிளிநொச்சி ஜெயந்திநகர் பகுதியில் தொடராக 9வீடுகளில் திருட்டுச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள் சிறீலங்காப்படையினர் காவலரண் அமைத்து முகாம்இட்டுநிலைகொண்டுள்ள கிளிநொச்சி நகர்பகுதிகளில் அண்மையநாட்களாக கொள்ளைச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதுஇரவுநேரங்களில் வீடுகளுக்குள்நுளைந்து திருட்டுநடவடிக்கையில் ஈடுபடும் திருடர்களினால் மக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள்.இதேவேளை பகல்கொள்ளைகளும் இடம்பெற தொடங்கியுள்ளன வீதியால் சென்று கொண்டிருக்கும் பெண்களிடம் உள்ள நகைகளை பறித்து செல்லல்போன்ற கொள்ளைச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். எதுவித சொத்துக்களும் இல்லாமல் மீள்குடியேறியுள்ள தங்களிடம் உள்ள சொத்துக்களையும் இந்…
-
- 0 replies
- 592 views
-
-
Posted by: on Jul 6, 2011 ஐக்கிய நாடுகள் சபை, ஐ. நா மனித உரிமைச்சபை, பொதுநலவாய நாடுகள், சர்வதேச சமூதாயம் ஆகியவற்றின்; போக்கைக் கண்டு சிறீலங்கா அரசு எதுவிதத்திலும் இன்று தயங்கவில்லை என்றால், அதற்கு சிங்கள பௌதவாதிகளிடையே தற்பொழுது நிலவும் அரசியல், சமய, சமூக வேறுபாடற்ற ஒற்றுமையே காரணம். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களாகிய ஈழத்தமிழர்கள் இன்று எந்தவித ஒற்றுமையுமின்றி நாளுக்குநாள் பிரிவினைகள், கோபதாபங்கள், அரசியல் வேறுபாடுகள் போன்று சகல விடயங்களிலும் ஒற்றுமையின்றியே காலத்தைக்கழிக்கின்றனர். இது திட்டமிட்ட சதி என்றே நாம் கருதவேண்டி உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய ஆயுதப் போராட்டம் இன்று மௌனித்து இருந்தாலும், தமிழீழ மக்களின் அரசியல் போராட்டம் எதிர் கால…
-
- 0 replies
- 694 views
-
-
Posted by சோபிதா on 08/07/2011 in செய்தி இந்து சமுத்திரத்தில் தனது செல்வாக்கை அதிகரித்துக்கொள்ள விரும்பும் சீனா, இலங்கைக்கான உதவிகளை 2005 ஆம் ஆண்டிலிருந்து சடுதியாக அதிகரித்துள்ளதாக அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் போர்க் குற்றங்கள் தொடர்பாக குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நாவும் சர்வதேச சமூகமும் நிர்ப்பந்திப்பது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தலாம் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சில ஆய்வாளர்கள் மற்றும் அவதானிப்பாளர்களின் கருத்தின்படி, சீனா தனது முத்து மாலை கடல் தந்திரோபாயத்தின் ஒரு பகுதியாக இந்து சமுத்திரத்தின் வடபிராந்திய துறைமுக அணுகலை விருத்தி செய்வதற்காக இலங்கை அரசாங்கத்துடனான செல்வாக்கை நாடுவதாக அவ்வறிக்…
-
- 0 replies
- 641 views
-
-
Posted by சோபிதா on 08/07/2011 in செய்தி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சமபள உயர்வுகோரி மேற்கொண்டு வரும் போராட்டங்களின் பின்னணியில் அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் றோபேட் ஒ பிளேக் செயற்பட்டு வருவதாக அமைச்சர் விமல்வீரவன்ஸ குற்றம் சாட்டியுள்ளார். பொரளையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது அமைச்சர் விமல் வீரவன்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தால் வழங்கமுடியாத சம்பள விகிதத்தை உயர்த்தக் கோரி விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதன் பின்னணியில் அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஒ பிளேக்கின் அனுசரணையுடன் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களே செயற்பட்டு வருகின்றன. ஆனால் இந்த போராட்டத்தை விரிவுரையாளர்கள் அல்லாத சிறுபான்மை கு…
-
- 0 replies
- 549 views
-
-
Posted by சோபிதா on 08/07/2011 in செய்தி போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக இந்த ஆண்டு இறுதிக்குள் சிறிலங்கா அனைத்துலக நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள நேரிடலாம் என்று ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் முறைப்படி விசாரணை நடத்துவதற்குப் பதிலாக நகைப்புக்கிடமான செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த நடவடிக்கையால், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்கா நிறுத்தப்படும் ஆபத்து இருப்பதாகவும் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார். அனை…
-
- 0 replies
- 356 views
-
-
வடக்கில் மாத்திரம் 5 இலட்சத்து 36,000 விதவைகள்! Friday, July 8, 2011, 9:55 சிறீலங்கா யுத்தம் மற்றும் காரணங்களினால் இலங்கையில் 5 இலட்சத்து 3684 பேர் விதவைகளாகியுள்ளனர். இவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் சுயதொழில் வாய்ப்புகள் வழங்கவும் உதவிகள் வழங்கவும் பல்வேறு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இந்த வருடத்தில் 4 கோடி 50 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். வாய்மூல விடைக்காக சிறுவர் அபிவிருத்தி மகளிர் மேம்பாட்டு அமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் சார்பாக பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது, மேல் மாகாணத்தில் ஒரு இலட்சத்து 30,018 விதவைகளும் மத்திய மாகாணத்தில் 65,880 விதவைகளும் ஊவா மாகாணத்தில் 33,531 பே…
-
- 1 reply
- 394 views
-
-
Friday, July 8, 2011, 10:28உலகம் சூடான் நாட்டிலிருந்து தெற்கு சூடான் எனும் புதிய நாடு நாளை உதயமாகிறது. இதற்காக முதல் சுதந்திர தின விழா தெற்கு சூடான் நாட்டின் ஜூபா நகரில் கொண்டாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆபிரிக்க நாடுகளில் மிகப்பெரிய நாடு சூடான். எண்ணெய் வளம் மிக்க இந்த நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வலுத்து வந்தது. இதனால் ஏற்பட்ட உள்நாட்டு போரில் 1.5 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர். கடந்த 2005ம் ஆண்டு அமைதி பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி சூடானை இரண்டாக பிரிக்க மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த மக்கள் வாக்கெடுப்பில் சூடான் இரண்டாக பிரிய ஆதரவு பெருகியதைத்தொ…
-
- 0 replies
- 725 views
-
-
http://youtu.be/xOzW5tIKmCQ நாளை 9ம் திகதி தெற்கு சூடான் தனி நாடு ஆபிரிக்க கண்டத்தில் உதயமாகிறது. தலைநகர் ஜூபாவில் கோலாகல விழாவுடன் கொண்டாடப்படுகிறது. இந்த புதிய தேசத்திற்கு சுதந்திரத்திற்காக போராடும் தமிழிழ மக்களின் வாழ்த்துக்கள். எங்கள் வயதை ஒத்த ஆயுதப்போராட்டத்தினை உடைய, எங்கள் வயதை ஒத்த சமாதான நடவடிக்கையினை கொண்ட தென் சூடான் மக்களாகிய உங்கள் இழப்பிற்கும், விடா முயற்சிக்கும், பெற்ற துன்ப துயரங்களுக்கும், இராஜதந்திர முயற்சிகளுக்கும் கிடைத்த வெற்றி தான் நாளைய சுதந்திரம். 15 இலட்சம் மக்களை போரினாலும் பட்டிணியாலும் பறிகொடுத்த உறவுகள் நாளை தமது இழப்பிற்கான அர்த்தத்தினை நினைத்து பெருமிதம் கொள்வார்கள்.இழப்பின் துயரங்கள் சுதந்திர சுவாசக்காற்றினால் தடவப்படும். இதயம் க…
-
- 0 replies
- 367 views
-
-
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசு ஆக்கபூர்வமான விசாரணைகளை நடத்தாவிடின் சர்வதேச தலையீட்டுக்கு முகங்கொடுக்க நேரிடும் [Friday, 2011-07-08 10:29:22] ஐ.நா.அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான விசாரணைகளை நடத்தாவிடின், சர்வதேச நாடுகள் தலையீடுகளை மேற்கொள்ளும் என்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியூயோர்க்கில் ஐ.நா. செயலாளர் நாயகத்தை நேற்று முன்தினம் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இச்சந்திப்பு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இச்சந்திப்பின்போது இலங்கைய…
-
- 0 replies
- 295 views
-
-
தமிழர் விரோத செயற்பாடுகளை நிறுத்தாவிடின் வட-கிழக்கு மக்களை அணிதிரட்டி நடவடிக்கை: சம்பந்தன் _ வீரகேசரி நாளேடு 7/8/2011 11:46:50 தமிழர் தாயகப் பிரதேசங்களில் அரங்கேற்றப்பட்டு வருகின்ற அனைத்து தமிழர் விரோத நடவடிக்கைகளையும் அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும். தவறினால் வடக்கு, கிழக்கு மக்களை அணிதிரட்டி அரசுக்கு எதிரான பிரசாரங்கள், நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதன் மூலம் அரசாங்கமும் தோற்கடிக்கப்படும். இதற்கு நானே தலைமையேற்பேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எம்.பி.யுமான இரா. சம்பந்தன் நேற்று சபையில் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார். தமிழ் மக்களை ஒடுக்கி தீர்வினை இல்லாது செய்யும் நோக்கத்திலேயே யுத்தம் முன்னெடுக்கப்பட்டது என்றே எம…
-
- 0 replies
- 402 views
-
-
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணும் பொறுப்பை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்து விட்டது. இந்த முடிவில் எந்த மாற்றம் இல்லை. அதுவே இறுதியானது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். எந்தவொரு தீர்வானாலும் அதை நாடாளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும் என்றும், நாடாளுமன்றம் அங்கீகரிக்கும் தீர்வைத் தாம் ஏற்றுக் கொள்ளத் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை காலம் தன்னிடம் ஒரு தீர்வு யோசனை உள்ளதாகக் கூறிவந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்போது சடுதியாக அந்தப் பந்தை நாடாளுமன்றத்தின் பக்கம் தள்ளி விட்டுத் தான் தப்பிக் கொள்ள எத்தனிக்கிறார். கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஹிந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியிலும், அதன் பின்னர் சரிய…
-
- 0 replies
- 363 views
-
-
Jul 8, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / /uploads/images/2011/07/080711 002.jpg போர்க் குற்றங்களை முறியடிக்க ஐ.நா.விற்கு புதிய தமிழ்த் தூதர்! சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சராக லக்ஸ்மன் கதிர்காமர் என்ற தமிழரை நியமித்து உலகெங்கும் தமிழர்களுக்கு எதிரான பிரச்சாரங்களையும், விடுதலைப் புலிகள் மீது பயங்கரவாத முத்திரையையும் குத்தவைக்க சிறீலங்கா மேற்கொண்ட கடந்த கால இராஜதந்திர வரலாறுகள் பலருக்கும் தெரியும். இப்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சிறீலங்காவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வரும் நிலையில், அதனை முறியடிக்க தமிழர் ஒருவரை நியமிக்க மகிந்த அரசு முடிவு செய்துள்ளதாக அறியவருகின்றது. ஐ.நா வட்டாரங்களின் பிரகாரம் கூடிய விரைவில் சிறீலங்காவின் புதிய ஐ…
-
- 0 replies
- 504 views
-
-
புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் 302 பேர் இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவர் [Friday, 2011-07-08 09:56:34] புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் 302 பேர் இம்முறை கல்வி பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ளதாக, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரால் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.இவர்கள் வவுனியாவில் அமைக்கப்படவுள்ள மத்திய நிலையமொன்றில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களுக்கான கற்பித்தல் செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மேஜர் ஜெனரால் சுதந்த ரணசிங்க கூறியுள்ளார். வவுனியா தமிழ் வித்தியாலயத்தில் கல்வ…
-
- 0 replies
- 225 views
-
-
இறுதி யுத்தத்தின் போது அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை உறுதி – ஐ.தே.க : 08 ஜூலை 2011 இறுதி யுத்தத்தின் போது அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் அரசு அதை மறுத்து வருகின்றது. அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை உறுதி. ஆனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எம்மிடம் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் தற்போது நிலவுகின்ற நிலவரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் ஒத்திவைப்புவேளை பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்தார்.இந்தப் பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றியபோதே லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தம…
-
- 0 replies
- 250 views
-
-
நவீன வாக்களிப்பு முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது : 08 ஜூலை 2011 Bookmark and Share இலத்திரனியல் வாக்களிப்பு முறைமை அறிமுகம் செய்வதற்கு நவீன வாக்களிப்பு முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது : இலங்கையில் நவீன வாக்களிப்பு முறைமை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலத்திரனியல் வாக்களிப்பு முறைமையை அறிமுகப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இலத்திரனியல் வாக்களிப்பு முறைமை அறிமுகம் செய்வதற்கு அநேகமான கட்சிகள் இணக்கத்தை வெளியிட்டுள்ளன. பாரதி எலக்ட்ரோனிக் என்ற இந்திய நிறுவனம் இலத்திரனியல் வாக்கெடுப்பு முறைமை குறித்த பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளா…
-
- 0 replies
- 501 views
-
-
‘மிருகத்தனமான யுத்த வெற்றிக்கு’ எவ்வாறு பதிலளிப்பது என்பதில் இலங்கை ஒரு சோதனைக் களமாக உள்ளது அமெரிக்க Friday, July 8, 2011, 9:57 உலகம், சிறீலங்கா இந்து சமுத்திரத்தில் தனது செல்வாக்கை அதிகரித்துக்கொள்ள விரும்பும் சீனா, இலங்கைக்கான உதவிகளை 2005 ஆம் ஆண்டிலிருந்து சடுதியாக அதிகரித்துள்ளதாக அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் போர்க் குற்றங்கள் தொடர்பாக குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நாவும் சர்வதேச சமூகமும் நிர்ப்பந்திப்பது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தலாம் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சில ஆய்வாளர்கள் மற்றும் அவதானிப்பாளர்களின் கருத்தின்படி, சீனா தனது முத்து மாலை கடல் தந்திரோபாயத்தின் ஒரு பகுதியாக …
-
- 0 replies
- 356 views
-
-
Jul 8, 2011 / பகுதி: செய்தி / இன அழிப்பு இராணுவத்தை தத்து எடுக்கும் இந்தியா -தமிழ்நெற் சென்ற புதன், வியாழன், வெள்ளி நாட்களில் முதலாவது “இராணுவமும் இராணுவமும்” நேரடிப் பேச்சுக்கள் நடைபெற்றன. சிறிலங்கா, இந்தியா இராணுவப் பிரதிநிதிகள் அந்த நாட்களில் சந்திப்பை மேற்கொண்டனர். தங்கள் இராணுவப் பயிலகங்களில் கூடுதலான இராணுவப் போதனாசிரியர்களின் சேவையைப் பரிமாறிக் கொள்வதற்கு இரு பகுதியினரும் ஒத்துக்கொண்டனர். இந்திய ஊடகச் செய்திகளின்படி சிறிலங்கா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை “வெற்றிகரமாக” முடித்துள்ளபடியாலும் இந்தியா இன்னும் ஐம்மு – காஸ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போரிட்டுக் கொண்டிருப்பதாலும் இரு பகுதி இராணுவத்தினரின் அனுபவப் பகிர…
-
- 4 replies
- 1.2k views
-
-
யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றுவதற்கு மீள்குடியேற்ற அமைச்சுக்கு 170 கோடி ரூபா மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு படைத் தலைமையகத்தை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் 2000 கோடி ரூபாவை செலவிடுகின்றது என்று ஐ.தே.க. எம்.பி. யான கலாநிதி ஹர்சடி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்ண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், விருதை பெறுவதற்கு அமெரிக்காவிற்கு சென்றிருந்த வேளை ஜெனரல் கொலின் பவலை சந்தித்தேன். அந்த தருணத்தில் காங்கிரஸ் மற்றும் செனட் சபை உறுப்பினர்களும் இருந்தனர். அத்தருணத்தில் இலங்கையின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமை…
-
- 0 replies
- 455 views
-
-
தமிழர் கேட்க வேண்டியது " அதிகாரப் பகிர்வு" அல்ல "அரசாங்கத்திலே பங்கு ". அரசாங்கத்திலே பங்கு இல்லை என்றால் நாங்கள் தனி அரசாகப் போக வேண்டியது தான் . இதே மாதிரித்தான் , சிங்களவன் முழுத் தீவையும் ஸ்ரீலங்கா என்று உரிமை கோரியபோது , நாங்கள் வடக்கையும் கிழக்கையும் மட்டும் கேட்டோம் . உண்மையில் நாங்களும் முழுத் தீவையும் தமிழீழம் என்று கேட்டிருந்தால் ( அவனது கோரிக்கைக்கு சமமான கோரிக்கை ) இன்றைக்கு இந்த பிரச்சினை தீர்ந்திருக்கும் . எனவே , இஸ்ரேலியர்கள் போல அதிகமாகக் கேளுங்கள் அப்போது தான் உங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியது கிடைக்கும் . முழு இலங்கையையும் தமிழீழம் என்று உரிமை கோருங்கள், ஸ்ரீலங்கா சட்டவிரோதமான நாடு என்று கூறுங்கள் , உலகம் இந்த பிரச்சினையை திரும்பி பார்க…
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக நடவடிக்கை வேண்டி பிரேரணை ஒன்று அவுஸ்திரேலிய செனட் சபையில் இன்று சமர்பிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய செனட் சபை உறுப்பினர் பொப் ப்ரவுன் (Bob Brown) இந்த பிரேரணையை சமர்பித்துள்ளார். . அவுஸ்திரேலிய செனட் சபையின் எதிர் தரப்பின் ஆதரவுடன் குறித்தப் பிரேரணையானது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. . இதேவேளை, செனட் சபை உறுப்பினர் பொப் ப்ரவுன் தனது பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயம் குறித்து கூடிய கவனம் செலுத்துமாறு அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட்டுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. My link
-
- 7 replies
- 1k views
-
-
தஞ்சையில் உருவாகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்! Posted by: on Jul 7, 2011 தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவும் முள்ளிவாய்க்கால் ஈகிகள் முற்றம் அன்பு நிறைந்த தமிழ்ப் பெருமக்களே, வணக்கம். சிங்கள இனவாத அரசினால் 2009 மே 18ல் நிகழ்த்தப்பட்ட தமிழினப்படுகொலை வரலாற்றில் மறக்கமுடியாத பதிவாகிவிட்டது. சோழ மாமன்னனான இராசஇராசன் தஞ்சையில் எழுப்பிய மாபெரும் கற்கோயிலுக்கு அடுத்தபடியாக, ஈழ விடுதலைக்காக முள்ளிவாய்க்கால் படுகொலையில் பலியானவர்களின் நினைவாகவும், தீக்குளித்துத் தியாகம் செய்த முத்துக்குமார் உட்பட 19 ஈகிகளின் நினைவாகவும் சிற்ப நுணுக்கம் மிகுந்த நினைவுச் சின்னத்தை நிறுவும் முயற்சியில் உலகத் தமிழர் பேரமைப்பு ஈடுபட்டுள்ளது. இவ் வரலாற்றுப் பணியின் சிற்ப…
-
- 2 replies
- 960 views
-
-
அவுஸ்திரெலியா ABC தொலைக்காட்சியில் வரும் திங்கள் யூலை 4ம் திகதி இரவு 8.30 மணிக்கும் செவ்வாய் யூலை5ம் திகதி இரவு 11.35 மணிக்கும், ABC News24 தொலைக்காட்சியில் சனிக்கிழமை யூலை 9ம் திகதி இரவு 8 மணிக்கும் சனல்4 தொலைக்காட்சியில் வந்த "SRI LANKA'S KILLING FIELDS" ஒளிபரப்பாகவுள்ளது
-
- 13 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளின் முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டம் இலங்கை அரசை ஆட்டிப் படைத்ததோ இல்லையோ, புலிகளுடன் நடந்த இறுதி யுத்தத்தின் விளைவுகள் இலங்கை அரசை இப்போது மீள முடியாத மிகப்பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டிருக்கிறது. புலிகளின் கதை முடிந்தது’ என்று கொக்கரித்த மஹிந்த ராஜபக்ஷேவை ‘சேனல் -4’ வடிவத்தில் இப்போது புலிகளின் ஆவி வந்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. வன்னியில் 2009 ம் ஆண்டு மே மாதம் பெரிய முள்ளிவாய்க்காலுடன் விவகாரத்தை முற்றிலும் தீர்த்தாகி விட்டது என்று பெருமூச்சு விட்ட இலங்கை ஆட்சிப் பீடத்துக்கு இப்போதுதான் உண்மையான சோதனைக் களம் திறந்திருக்கின்றது. இலங்கை போர்க்குற்றம் புரிந்திருக்கிறது என்ற ஐ.நாவின் அறிக்கை ஒருபுறம், இலங்கைக்கு பொருளாதாரத் தடை…
-
- 4 replies
- 1.7k views
-
-
போர்க்குற்றவாழி மகிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை சந்தித்துள்ளார். தனக்கு வெளினாடுகளால் ஏற்பட்டுவரும் நெருக்கடிகள் பற்றி பேரினவாத பீடாதிபதிகளிடம் ஆலோசித்துள்ளார். . அதன் பின்னர் கண்டி தலதா மாளிகையில் பூஜை நிகழ்வுகளில் கலந்துக் கொண்ட மஹிந்தர; எந்த ஒரு வெளிநாட்டு சக்தியின் அழுத்தத்துக்கும் அடிப்பணிந்துவிட வேண்டாம் என, பீடாதிபதிகள் போர்க்குற்றவாழி மஹிந்தருக்கு ஆலோசனை கூறியுள்ளனர். My link
-
- 5 replies
- 971 views
-