ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
இலங்கையின் தேசிய பாதுகாப்பில் யாழ், மக்களே அதிகம் அக்கரை செலுத்து வருவதாக பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு யாழ், வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் பிரதமர் டி.எம்.ஜயரட்ன தமிழ் மொழியில் சுமார் 18 நிமிடங்கள் தொடர்ச்சியாக உரையாற்றியமை விசேட அம்சமாகும். பிரதமர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், தேசிய பாதுகாப்பு தினத்தை யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிப்பதை இட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். 2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தம் வந்தபோது நாம், தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற பேதமின்றி ஒன்றிணைந்து செயற்பட்டோம். நாட்டில் தற்போது ஆயுத தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுள…
-
- 0 replies
- 734 views
-
-
தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு யாழ், வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் புகழ்களை எடுத்தியம்பி தமிழ் மாணவிகளால் சிங்கள மொழியில் பாடலொன்று பாடப்பட்டது. யாழ், இராமநாதன் கல்லூரி மாணவிகளால் சிங்கள மொழியில் இந்தப் பாடல் பாடப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். ஈழ நாதம்
-
- 0 replies
- 1.1k views
-
-
30 வருடங்களின் பின்னர் யாழில் பௌத்த தமிழ் சங்கம்! [ பிரசுரித்த திகதி : 2010-12-26 06:31:12 AM GMT ] யாழ் மாவட்ட பௌத்த தமிழ் சங்கம் 30 வருடங்களின் பின்னர் மீண்டும் இயங்கவுள்ளது. அதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று சங்கத்தின் இணைப்பாளர் அருள்நேசரத்தினம் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். 1952 ஆம் ஆண்டு நிஷங்க விஜயரட்ண என்பவர் யாழ். மாவட்ட அரச அதிபராக இருந்த காலத்தில் பௌத்த தமிழ் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் அந்தச் சங்கத்தின் தலைவராக யாழ். புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த எஸ்.வைரமுத்து நியமிக்கப்பட்டிருந்தார். இன்றுவரை அவர்தான் தலைவராக கடமையாற்றி வருகின்றார். இப்போது அவருக்கு வயது 93. வயோதிபத் தளர்வால் அவர் இப்போது செயற்பட முடியாதவராக உள்…
-
- 1 reply
- 417 views
-
-
”நான் ஈழத்து சீமான் பேசுகிறேன்…” – ”நான் தமிழகத்து நடேசன் பேசுகிறேன்…” எனக்கும் நடேசன் அண்ணாவுக்கும் இடையேயான உரையாடல் இப்படித்தான் தொடங்கும். வார்த்தை குறைவாகவும் வாய் நிறைந்த புன்னகையாகவும் பேசுவார் தமிழ்ச்செல்வன், ”தமிழ் ஈழ ஆர்வலர்களின் தொலைபேசிப் பேச்சுகள் பதிவு செய்யப்படுகிறதாமே… அடிக்கடி நான் உன்னோடு பேசுவதால் உனக்கு ஏதும் பிரச்சினைகள் வருமா?” – தமிழ்ச்செல்வனின் குரலில் பரிவும் பதற்றமும் இருக்கும். ”நீங்கள் என்ன, தமிழ்நாட்டில் என்னை குண்டு வைக்கச் சொல்லியா பேசுகிறீர்கள்? அங்கே நம் உறவுகளின் தலையில் குண்டுகள் விழுவதைப் பற்றித்தானே அண்ணா பேசுகிறோம்… பதிவு செய்பவர்கள் அதனை உரியவர்களிடம் போட்டுக்காட்டினாலாவது அவர்களின் உள்ளத்தில் கருணை சுரக்கிறதா எனப் பார்க்க…
-
- 1 reply
- 889 views
-
-
ஞாயிற்றுகிழமை, டிசம்பர் 26, 2010 இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாவட்டங்களான யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றில் வாக்காளர்களின் எண்ணிக்கையானது முந்தையக் கணெக்கெடுப்போடு ஒப்பிடுகையில் 40 வீதத்தால் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தம் காரணமாக மக்கள் இப்பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்தது உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான துணை தேர்தல் ஆணையரரான ஏ.எஸ்.கருணாநிதி பிபிசியிடம் தெரிவித்துள்ளார். வாக்காளர் எண்ணிக்கை வீழ்ச்சி காரணமாக எதிர்காலத்தில் யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறையலாம் என்று…
-
- 0 replies
- 302 views
-
-
ஞாயிற்றுகிழமை, டிசம்பர் 26, 2010 இந்திய தூத்துக்குடி மற்றும் கொழும்பிற்கு இடையே கப்பல் இயக்குவதற்கு இதுவரை 7 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளதாக தூத்துக்குடி துறைமுக பொறுப்புக்கழக துணைத்தலைவர் சுப்பையா தெரிவித்துள்ளார். அவர்களில் தகுதியானவர்களை மத்திய கப்பல் போக்குவரத்து கழகம் தேர்வு செய்து கப்பல் இயக்க அனுமதிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தூத்துக்குடி துறைமுகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக மத்திய கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க அதிகாரிகளும் ஜனவரி முதல் வாரத்தில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் …
-
- 0 replies
- 270 views
-
-
முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் தேராங்கட்டையில் நேற்று மாலை கிணறு ஒன்றினுல் இருந்து சடலம் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.இச்சடலம், கடந்த 7ம் திகதி காணாமல் போன அங்கமுத்து பாலகிருஷ்னணனுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.இதுபற்றி மேலும் தெரியவருவதாவது, டிசம்பர் மாதம் 7ம் திகதி 47 வயதுடைய அங்கமுத்து பாலகிருஷ்னண் தேராங்கட்டையிலுள்ள அவரது ஊரில் வைத்து காணாமல் போயுள்ளார். நேற்று மாலை மாடு மேய்த்துக் கொண்டு காட்டு வழியால் சென்ற ஒருவர் கிணற்றுக்குள் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்டு பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.பொலிஸாரின் உதவியுடன் வெளியில் எடுக்கப்பட்ட சடலம் அங்கமுத்து பாலகிருஷ்னணனுடையது என உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் நேற்று இரவு…
-
- 0 replies
- 615 views
-
-
5000 போராளிகளே தடுப்பு முகாமில் உள்ளதாக அரசு தெரிவிப்பு: மிகுதிப்பேர் எங்கே? * Sunday, December 26, 2010, 4:13 இன்னமும் 5000 போராளிகளே தமது தடுப்பு முகாமில் உள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது. மிகுதிப்பேரை தாம் விடுவித்துள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. சிறிலங்கா அரசாங்கம் தம்மிடம் 15,000 போராளிகள் சரணடைந்ததாக 2009 மே யூன் மாதம் அறிவித்திருந்தது. இந்த எண்ணிக்கை படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் கடத்தப்பட்டவர்களை உள்ளடக்காத தொகையாகும். ஆனால் இந்த வருடம் தம்மிடம் 12,000 போராளிகளே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறியது.அவர்களை கட்டம் கட்டமாக விடுவிப்பதாகவும் கூறியது. சில நூறு போராளிகளை விடுவித்தும் இருந்தது. ஆனால் இப்போ 5000 போராளிகளே இருப்பதாக கூறுகின்றது. இதன்ப…
-
- 0 replies
- 295 views
-
-
யாழ்.மானிப்பாயில் நாட்டப்படுகிறது, பௌத்த மதத் திணிப்பிற்கான அடிக்கல்! Sunday, December 26, 2010, 6:55 யாழ்.மாவட்ட பௌத்த தமிழ் சங்கம் என்ற பெயரிலான அமைப்பு ஒன்றினை முன்னெடுப்பதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்ப்பாணத்தை மேற்கோள் காட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து அந்த அமைப்பிற்கான இணைப்பாளர் எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் அருள்நேசரத்தினம் ரவிக்குமார் என்பவர் தெரிவித்திருக்கின்றார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,1952ஆம் ஆண்டு நிஷங்க விஜயரட்ண என்பவர் யாழ். மாவட்ட அரச அதிபராக இருந்த காலத்தில் பௌத்த தமிழ் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் அந்தச் சங்கத்தின் தலைவராக யாழ். புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த எஸ்.வைரமுத்து நியமிக்கப்ப…
-
- 0 replies
- 288 views
-
-
சிங்கள மாணவர்களுக்கு தேவையான பல சலுகைகளை வழங்கி வரும் யாழ் படைமுகாம் சனிக்கிழமை, 25 டிசம்பர் 2010 15:07 jaffna_campusயாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்காக சிறீலங்கா அரசால் அனுப்பப்பட்டுள்ள தென்னிலங்கை சிங்கள மாணவர்களுக்கு தேவையான உணவு விநியோகங்களை யாழ் நகரப்பகுதி இராணுவ முகாமே வழங்கிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ் பல்கலைக்கழகத்தில் முதலாவது தொகுதி சிங்கள மாணவர்கள் தமது கல்விச் செயற்பாடுகளை தற்போது ஆரம்பித்துள்ளனர். ஆனால் தமிழ் மாணவர்களுடன் நெருங்கிப் பழகவிரும்பாத சிங்கள மாணவர்கள் தமது உணவுத் தேவைகளை படை முகாமில் போக்கி வருகின்றனர். sangamam.com
-
- 0 replies
- 437 views
-
-
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 40 வீதமானவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன: 24 டிசம்பர் 2010 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 40 வீதமானவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவி;க்கப்படுகிறது. 2010ம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 300000 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் நாட்டை வெளியேறிச் சென்றவர்களின் பெயர்களே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதென தேர்தல் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் 500,000 வாக்காளர்களின் பெயர்கள் புதிய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மு…
-
- 2 replies
- 501 views
-
-
தென்பகுதியிலிருந்து 28 இலட்சம் பேர் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-25 06:46:34| யாழ்ப்பாணம்] 2010ஆம் ஆண்டில் இதுவரை தென்னிலங்கையைச் சேர்ந்த 28 இலட்சம் பேர் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவா கச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.வருடம் முடிப டைய இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில் அதற்கிடையில் இன்னமும் இரண்டு லட்சம் பேர் யாழ்ப்பா ணத்திற்கு விஜயம் செய்வார்கள் என நம்பப்படுகின்றது. ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் பாடசாலை விடுமுறைக்காலம் என்பதனால் அதிகளவான மக்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.போர் இடம்பெற்ற பிரதேசங்க ளைப் பார்வையிடுவதற்காகவும் மத வழிபாடுகளை மேற்கொள்வதற்காகவும் சுற்றுலா நோக்கிலேயே அதிகளவா னவர்கள் …
-
- 2 replies
- 393 views
-
-
இலங்கையைச் சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர்களினதும் மேலும் சில அமைச்சர்கயதும் தெலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்துத் கருத்துத் தெரிவித்துள்ள சில அமைச்சர்கள் தற்போது, எமது தனிப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் ஒத்துக் கேட்கப்படுகின்றன. இன்றைய அரசின் கீழ் எமக்கு அரசியல் செய்ய முடியாதுள்ளது. எமது தனிப்பட்ட அனைத்துத் தொலைபேசி உரையாடல்களும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. இவ்வாறான உரையாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அவற்றினை அவர் தினமும் கேட்டு வருகிறார். எனக் குற்றஞ்சாட்டியுள்ள இந்த அமைச்சர்கள், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக…
-
- 1 reply
- 891 views
-
-
http://www.youtube.com/watch?v=ebhJtQsJfQk http://www.youtube.com/watch?v=rH-ZhRS5Ipk http://www.youtube.com/watch?v=PPrOy0PcXWQ
-
- 0 replies
- 791 views
-
-
அறிவிப்பு : செந்தமிழன் சீமான் உரை நேரலை இன விடுதலைக்கு போராடிய தந்தை பெரியாருக்கும், ஈழ விடுதலைக்கு உதவிய புரட்சித் தலைவர் அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் விதமாக நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்க பொதுகூட்டதில் நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழன் சீமான் பேசுவது இன்று( 25.12.10) மாலை சுமார் 7.30 மணிக்கு நாம் தமிழர் இணையத்தளத்தில் http://www.naamtamilar.org/valaithirai நேரலை செய்யப்படும்.
-
- 0 replies
- 1.4k views
-
-
மலர் தொலைக்காட்சியில் செந்தமிழன் சீமான் உரை http://www.youtube.com/watch?v=lhNEhCTwf-o http://www.youtube.com/watch?v=Zcr2mxZoKw4 http://www.youtube.com/watch?v=7QcF9Zm2ytM
-
- 0 replies
- 1.3k views
-
-
முல்லைத்தீவில் மீனவர் சங்கங்களைப் புதுப்பிப்பதில் இராணுவம் தலையீடு: தடுத்து நிறுத்த TNA கோரிக்கை 25 டிசம்பர் 2010 முல்லைத்தீவில் மீனவர் சங்கங்களைப் புதுப்பிப்பதில் இராணுவம் தலையீடு: தடுத்து நிறுத்த TNA கோரிக்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் காலம் காலமாக ஆலயங்கள், கோவில்களின் பெயர்களில் முன்னர் இயங்கி வந்து இடப்பெயர்வின் போது செயலிழந்துள்ள மீனவர் சங்கங்களைப் புதுப்பிப்பதில் பிரச்சினைகள் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது விடயத்தில் ஏற்பட்டுள்ள இராணுவ தலையீட்டை நீக்கி பழைய பெயர்களில் இயங்கவும் பழைய உறுப்பினர்கள் பதவி வகிக்கவும் வசதி செய்யப்பட வேண்டும் என முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒழுங்கிணைப்பு குழு கூட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்ப…
-
- 1 reply
- 420 views
-
-
Apologists in Sri Lanka are quick to defend Mahinda Rajapakse in pointing to LTTE flag waving protestors in London as evidence of proscribed terrorists on British soil plotting to divide the “motherland”. They are confused as to why Britain is turning a blind eye, refusing to crack down, accusing London of harbouring and even tacitly supporting secessionists to underpin a perceived master plan of colonial/European/Western domination. Its “divide and rule” they say. Another favourite explanation is that it is all being done for electoral expediency of British parliamentarians. The above is a display of weakness of Colombo’s thought and policy in relati…
-
- 5 replies
- 1.5k views
-
-
Dec 25, 2010 / பகுதி: செய்தி / வடமராட்சியில் வயோதிபர் மீது காடையர்கள் தாக்குதல் வடமராட்சி கரணவாய் மேற்குப் பகுதியில், இளைஞரொருவரைத் தேடிச் சென்ற கோஷ்டியொன்று அவர் இல்லாததால் அவரது தந்தையைக் கண் மூடித்தனமாக வாள்களால் வெட்டிப் படுகாயப்படுத்திவிட்டுச் சென்றுள்ளது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கரணவாய் மேற்கிலுள்ள மேற்படி வீட்டிற்கு இரு மோட்டார் சைக்கிள்களில் கத்திகள் மற்றும் வாள்களுடன் சென்ற நான்கு இளைஞர்களே இந்த வெறித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வீட்டுக்குச் சென்ற இவர்கள் அந்த வீட்டிலுள்ள இளைஞனொருவரின் பெயரைக் கூறி அழைத்துள்ளனர். ஆனால் அங்கு அவர் இருக்கவில்லை. அதே நேரம் அந்த இளைஞனின் தந்தை அ…
-
- 0 replies
- 543 views
-
-
யாழ்ப்பாணம் நன்றாகக் கெட்டுவிட்டது! இளைஞர்கள் கெட்டுப்போய்விட்டனர். கலாசாரம் சீரழிந்துவிட்டது! சில ஊடகங்களும், இணையத்தளங்களும் அடிக்கடி யாழ்ப்பாணத்தை இப்படிச் சித்திரித்து வருகின்றன. உண்மையில் என்ன நடக்கிறது? அந்தளவுக்கு யாழ்ப்பாணம் கெட்டுப்போய்க் கிடக்கிறதா…..? இந்தக் குற்றச்சாட்டுக்களில் பிரதானமாக முன்வைக்கப்படும் வாதங்கள் இவைதான். இளைஞர்கள் பள்சரில் பறக்கிறார்கள்! கைத்தொலைபேசி, நெட் கஃபே பாவனை அதிகரித்துவிட்டது! பாடசாலைப் பெண்கள் காதலிக்கிறார்கள்! கர்ப்பமடைகிறார்கள்!! இளைஞர்கள் மது அருந்துகிறார்கள்! விபசாரம் நடக்கிறது! இவையொன்றும் யாழ்ப்பாணத்தில் நடக்காத விவகாரங்களில்லைத்தான். உலகில் வேறெங்கும் நடக்காத விடயங்களும் …
-
- 0 replies
- 1.4k views
-
-
வவுனியா செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள கதிர்காமர் நலன்புரி முகாமின் இராணுவப் பொறுப்பதிகாரி மேஜர் அபயக்கோன் முகாம் மக்கள் மீது பாலியல் கெடுபிடி உட்பட்ட பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்திவருவதாக அங்கிருந்து மக்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,முகாம் மக்களுக்கு வழங்கவென அனுப்பிவைக்கப்படுகின்ற நிவாரணம் உட்பட்ட பொருட்கள் குறித்த இராணுவ அதிகாரியினால் சூறையாடப்பட்டு வருகின்றன. மக்களுக்கு வழங்கவென பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களினால் கொண்டு செல்லப்படுகின்ற நிவாரணப் பொருட்களை அதே ஊர்களில் ஏற்றி விற்பனை நிலையங்களுக்கும், தனது ஊருக்கும் அபயக்கோன் அனுப்பிவைப்பதாக மக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சில நாட்களுக்குள் மட்டும் பத்திற்கும் மேற்…
-
- 0 replies
- 1k views
-
-
பிரிட்டிஷ் பயணிகளின் வருகை அதிகரிப்பு! சனி, 25 டிசம்பர் 2010 11:55 பிரிட்டனிலிருந்து இலங்கை வரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இலங்கை செல்வதற்கான பயணக் கட்டுப்பாடுகளை பிரிட்டிஷ் அரசு தளர்த்தியுள்ளமையே இதற்கு முக்கிய காரணமாகும். 2010 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் பிரிட்டனிலிருந்து இலங்கை வந்த உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 95320 என கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு 72868 பேர் வருகை தந்திருந்தனர். இதனோடு ஒப்பிடுகையில் இவ்வாண்டின் அதிகரிப்பு 30.8%எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2010ல் இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரிட்டிஷ் உல்லாசப் பயணிகளே இலங்கைக்கு அதிகம் விஜயம் செய்துள்ளனர். இந்தியாவிலிர…
-
- 0 replies
- 709 views
-
-
சிறீலங்காவில் வர்த்தகத்துறையின் வீழ்ச்சி இரு மடங்காக அதிகரிப்பு டிச 24, 2010 இந்த வருடத்தின் முதல் பத்து மாதங்களில் சிறீலங்காவின் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்துறையின் துண்டுவிழும் தொகை கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் சிறீலங்கா அரசின் ஏற்றுமதித்துறை 13.2 விகிதத்தால் உயர்வடைந்துள்ளதாகவும், அது 6,505 மில்லியன் டொலர்கள் எனவும் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அதன் இறக்குமதி 32.8 விகிதத்தால் உயர்ந்துள்ளது. அதன் தொகை 10,863 மில்லியன் டொலர்களாகும். எனவே வர்த்தப் பற்றாக்குறை (ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையிலான வேறுபாடு) 4,357 மில்லி…
-
- 0 replies
- 516 views
-
-
யப்பானின் உதவியுடன் அம்பாந்தோட்டையில் சூரியசக்தி மின்னிலையம் Saturday, December 25, 2010, 4:03 யப்பான் மற்றும் தென்கொரிய ஆகிய நாடுகளின் உதவியுடன் அம்பாந்தோட்டையில் 1237 மெகாவற் சக்தி கொண்ட சூரியசக்தி மின்நிலையம் ஒன்று அமைக்கப்படள்ளதாக சிறீலங்கா எரிசக்தித்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: அம்பாந்தோட்டைப் பிரதேசத்தின் பருதன்கன்ட பகுதியில் சூரியசக்தி மின்நிலையம் அமைக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக தென்கொரியாவின் உதவியுடன் 737 மெகாவற் சக்தி கொண்ட மின்நிலையம் அமைக்கப்படவுள்ளது. இரண்டாம் கட்டமாக 500 மெகாவற் சக்தி கொண்ட மின்நிலையம் யப்பானின் உதவியுடன் அமைக்கப்படும். 2011 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஆரம்பமாகும…
-
- 0 replies
- 474 views
-
-
புனர் வாழ்வளிக்கப்பட்ட புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் நூறு பேர் புனித நத்தார் தினத்தை முன்னிட்டு இன்று வவுனியாவில் வைத்து விடுவிக்கப்பட்டனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் சுசதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இவர்களில் இருவர் பெண்களாவர். வவுனியா புனர்வாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த இவர்கள் இன்று அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர் எனவும் அவர் தெரிவித்தார். படையினரிடம் சரணடைந்த பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களில் சுமார் 4,500 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டனர் என்றும் இவர்களில் 300 பெண்களும் அடங்குகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=16247:2010-12-25-06-47-…
-
- 0 replies
- 683 views
-