ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143264 topics in this forum
-
இலங்கை மனித உரிமை ஆணையகத்திடம் கையளிக்கப்பட்ட பன்னிரண்டாயிரம் வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது‐ 31 August 10 02:22 am (BST) இலங்கை மனித உரிமை ஆணையகத்திடம் கையளிக்கப்பட்ட பன்னிரண்டாயிரம் வழக்குகள் விசாரிக்கப்படாமல் தேங்கிக் கிடப்பதாக ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்திருக்கிறது. இவ்வழக்குகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ள ஆணையாளர்கள் எவரும் நியமிக்கப்படாததே இதற்குக் காரணம் எனவும் அது சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் அரசியலமைப்புச்சட்டத்தின்படி ஆணையாளர்கள் அரசியலமைப்புச் சபையால் நியமிக்கப்பட வேண்டும். அரசியலமைப்புச் சபையை நிறுவுவது என்பது நிறைவேற்றதிகாரமுள்ள ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு குந்தகம் விளைவிக்கக்…
-
- 1 reply
- 396 views
-
-
நீதிக்காக அலையும் ஒரு தேசிய இனத்தின் குரல்: நாடுகடந்த தமிழீழ அரசு அன்பானவர்களே!, உலகின் மிக மூத்த மொழிகளில் ஒன்றான தமிழை தாய் மொழியாகக் கொண்ட தேசிய இனத்தவர்கள் நாம். இலங்கையின் வடக்கு-கிழக்கு பாரம்பரிய நிலத்தை எமது தாயகமாகக்கொண்ட ஈழத்தமிழ் இனத்தவர்கள் நாம். உலகில் வரையறை செய்யப்பட்ட சுயநிர்ணய உரிமையை முழுமையாக பெற்றவர்களும் அதை மிகச்சிறிய அளவிலேனும் செயற்படுத்துவதற்கு அனுமதிக்கப்படாதவர்களும் நாம்தான். எமது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் சென்ற வருடத்தில் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களால் மிகமோசமாக அழிக்கப்பட்ட பொழுதினில் நிகழ்ந்த இனப்படுகொலையையும், இன்றுவரை தொடரும் இனச்சுத்திகரிப்புகளையும் நீங்கள் அறிவீர்கள். சென்றவருடத்தில் யுத்தம் மிகஉச்சத்தில் இருந்தபொழுதில…
-
- 2 replies
- 638 views
-
-
இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் கடல் மற்றும் ஆகாய வழி போக்குவரத்தினை அபிவிருத்தி செய்ய இந்தியா உதவி பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதற்கு இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்க உள்ளது. கடந்த காலங்களில் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது தமிழீழ விடுதலைப் புலிகளும், சில தமிழ் அரசியல் கட்சிகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கொழும்பு பத்திரிகைகள் தொவிக்கின்றன. பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போது, விமான நிலையம் மற்றும் துறைமுகம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்யும் யோசனைத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தலைமன்னார் மற்றும் இராமேஸ…
-
- 4 replies
- 669 views
-
-
வெறுப்பு நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர் - வலம்புரி யுத்தத்தின் வெற்றி மூலம் நாட்டை இணைத் தாலும் மக்களை இணைக்க முடியவில்லை என அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்த கருத் துக்கள் ஆழமானவை. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களை யுத்த வெற்றி மூலம் பெற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால் சிங்கள, தமிழ் இனங்கள் ஒற்றுமைப்படவில்லை. அவர்களிடையே இன்னமும் வேற்றுமை அதிகரித்துள்ளது என்பதே அமைச்சர் டியூ.குணசேகரவின் கருத்து. அப்படியானால் மக்களை இணைக்க வேண்டும். ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்பது அமைச்சரின் முடிபாக இருக்கும். ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர் ஓர் உண்மையை வெளிப்படையாகக் கூறியமை வர வேற்கப்பட வேண்டியதொன்றாகும். அதேநேரம் அவர் கூட மக்களை இணைப்பதற்கான திட்ட முன்மொழிவுக…
-
- 0 replies
- 493 views
-
-
புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்கினால் மட்டுமே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும் என்றும் அரசமைப்பைத் திருத்துவதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் காணமுடியாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார். தெற்காசியாவில் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பாக அந்நாடு அதிக கவனம் செலுத்துகிறது. அதனால்தான் இலங்கையில் இந்தியாவின் பிரசன்னம் அதிகரித்துள்ளது. இதைவிடுத்து இந்தியா இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாகக் கூறமுடியாது. முஸ்லிம் மக்களின் உரிமைகளையும் தேவைகளையும் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு வழங்கும் …
-
- 0 replies
- 479 views
-
-
தடுப்பு முகாமில் இருக்கும் வலுவிழந்த மற்றும் தாய்மார். குழந்தைகள் அடங்கலாக ஐந்நூறு பேர் எதிர்வரும் 4ஆம் திகதி சனிக்கிழமை பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். இவர்கள் விடுதலைப்புலிகள் என்ற பேரில் பம்பைமடு மற்றும் பல தடுப்பு் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டவர்களாவார். இவ் வைபவம், வவுனியா பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் சிறைச்சாலை மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டியூ. குணசேகர மற்றும் பிரதியமைச்சர் விஜிதமுனி சொய்சா ஆகியோரின் தலைமையில் இடம்பெறவுள்ளது. இத்தகவல்களைப் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: வவுனியா பம்பைமடுவ புனர்வாழ்வு நிலையத்தில் பயிற்சிகளை நிறைவுசெய்த 500 பேர் அவர்க…
-
- 0 replies
- 522 views
-
-
யாழ்ப்பாணமும் சுற்றுலா விடுதிகள் அமைக்கும் களேபரமும் ‐ GTN செய்தியாளர்‐ 30 August 10 01:58 am (BST) 2010‐08‐29 22:17:58 விடுதலைப் புலிகளின் ராணுவ நடவடிக்கையின் போது முழுமையாக அழிக்கப்பட்ட சிறுத்தீவு படைத்தளப் பகுதியில் பாரிய 5 நட்சத்திர விடுதி ஒன்றை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி அடைந்துள்ளது. இந்த அமைப்பு வேலைகளுக்காக கண்ணி வெடிகள், மிதி வெடிகள் அகற்றப்பட்டு அளவை நடவடிக்கைகளும் நிறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் சிறுத்தீவுப் பகுதியில் மீனவர்களின் மீன்பிடிக்கான அனுமதி படைத்தரப்பால் தொடர்ந்து மறுக்கப்பட்டே வருகிறது. இதேவேளை யாழ்ப்பாணப் பகுதிகளின் விடுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் விரும்பத்தகாத, குறிப்பாக விபச்…
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழினத்திற்காய் குரல் கொடுக்கும் இளையோர்களுக்கு நோர்வே ஈழத்தமிழர் அவை தலைவணங்குகிறது பன்னெடுங்காலமாய் சொல்லாண்ணாத் துயரங்களை சந்தித்து, இனவழிப்பின் உச்சத்தையும் எட்டிவிட்ட எம் தமிழினத்தின் இளையோர்கள் சமீப காலமாய் பல வழிமுறைகளிலும் துறைசார் திறமையையும் கொண்டு நம்பிக்கையுடன் போராடி வருவதைக் கண்டு நோர்வே ஈழத்தமிழர் அவை மகிழ்ச்சியும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையும் அடைவதுடன் அவ்விளையோர்களுக்கு தலை வணங்குகிறது.. இவ்வுலக சமுதாயத்திடமும் ஐக்கிய நாடுகள் சபையிடமும் எமக்கான நியாயத்தை பெறும் முயற்சிகள் தொடர்ந்து நாம் மேற்கொண்டு வரும் இக்காலக்கட்டத்தில், உலகின் மனசாட்சியைக் கேள்வி கேட்பது போலவும், அறவழிப் போராட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு நிற்கும் இக்காலக்…
-
- 0 replies
- 474 views
-
-
உயிராயுதம் ஏந்தி, தமிழ் பற்றை, தமிழின பற்றை உலக தமிழர்களுக்கு உணரவைத்த முத்துக்குமரனின் வாழ்கையை சித்தரிக்கும் ஆவணப் படம் ஈழத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு போரைக் கண்டு உள்ளம் வெதும்பி, உயிராயுதம் ஏந்தி, தமிழ் பற்றை, தமிழின பற்றை உலக தமிழர்களுக்கு உணரவைத்த முத்து குமரனின் வாழ்கையை சித்தரிக்கும் ஆவன படம் ஜனவரி 29 என்ற பெயரில் குறுந்தகடு (டிஜிட்டல் வீடியோ டிஸ்க்)28-08-2010 இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள பிலிம் சேம்பரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது . குறுந்தகடை திரு தமிழர் சத்யராஜ், இயக்குனர் அமீர் அவர்கள் சேர்ந்து வெளியிட ரோட்டரி தலைவர் ஒளிவாணனும், முத்துகுமரனின் தந்தையும் பெற்று கொண்டார்கள். கடுமையான போராடங்களுக்கிடையே அரங்…
-
- 0 replies
- 672 views
-
-
புலிகளுக்கு தகவல் வழங்கிய சிறீலங்கா காவல்துறை அத்தியட்சகர் தொடர்பான ஆவணங்கள் மாயம் காவல்துறை உத்தியோகத்தர்களின் தவறுகள் தொடர்பில் ஜனாதிபதியோ, பாதுகாப்புச் செயலாளரோ அல்லது காவல்துறை மா அதிபரோ நடவடிக்கை எடுக்க முடியாத வகையில் காவல்துறை ஆணைக்குழுவின் சட்ட விதிகள் இருக்கின்றன. இவ் ஆணைக்குழுவின் முக்கிய உத்தியோகத்தர் ஒருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஆள ஊடுறுவித் தாக்கும் படையணி தொடர்பான தகவல்களை புலிகளுக்கு வழங்கிய காவல்துறை அத்தியட்சகர் தொடர்பாக தேசிய காவல்துறை ஆணைக்குழுவில் பேணப்பட்டு வந்த ஆவணங்கள் காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மை…
-
- 0 replies
- 483 views
-
-
விடுதலைப் புலிகளை மீளமைக்க முயற்சிப்போர் தொடர்பில் விசாரணை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கும் நபர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பல்வேறு வழிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்காக நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவக்கை எடுக்கப்படும் என குற்றத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலி உறுப்பினர்களை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் முயற்சிகள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு விடுதலைப் புலி உறுப்பினர்களை நீதிமன்றில் ஆஜர்ப…
-
- 0 replies
- 724 views
-
-
சிறீலங்கா அரசு மாற்றான் தாய் மனப்போக்கை காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா விசனம் வெளியிட்டார் மட்டக்களப்பில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களில் 80 வீதமானோருக்கு வாழ்வாதார தொகையான 25 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படவில்லையெனவும் பலருக்கு மீள்குடியமர்தல் தொடர்பில் ஒரு சதமேனும் செலுத்தப்படவில்லை என தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் 36 ஆயிரத்து 181 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளன இதில் 7ஆயிரத்து 267 குடும்பங்களுக்கு மாத்திரமே வாழ்வாதார கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. வன்னியில் இருந்து வந்து மட்டக்களப்பில் மீள்குடியமர்ந்துள்ள சுமார் 1066 குடும்பங்களுக்கு எவ்வித வாழ்வாதார கொடுப்பனவுகளும்…
-
- 0 replies
- 396 views
-
-
சிறுத்தீவில் அரசு காணியொன்றினை எடுத்துள்ளது சிறீலங்கா கடற்படையினரின் கட்டுப்பாட்டில் வசம் உள்ள யாழ்ப்பாண தீவுப்பகுதியான சிறுத்தீவில் உள்ள காணி ஒன்றை ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றை அமைப்பதற்காகவே அரசாங்கம் எடுத்துள்ளது. இந்தநிலையில் மண்டைத்தீவு பூநகரி மற்றும் யாழ்ப்பாண ஏரி ஆகிய இடங்களை உள்ளடக்கியுள்ள இந்தப்பகுதியில் மீனவர்கள் தமது தொழில்களை மேற்கொள்வதற்கும் படையினர் தடைவிதித்துள்ளதாக மீனவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இதேவேளை வேலனை சாட்டியிலும் மற்றும் காரைநகர் கசுரினா பகுதிகளிலும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் அமைக்கப்படப்போவதாக இலங்கை அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://meenakam.com/?p=6395
-
- 0 replies
- 495 views
-
-
ஐ.தே.கட்சி லச்மன் செனவிரட்னவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளது சரத் பொன்சேகா இராணுவ சேவையில் இருந்த போது அரசியலில் ஈடுபட்டார் என முதலாவது இராணுவ நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தமை காரணமாக ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்சன் செனவிரட்னவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக ஐ.தே.கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன முதலாவது இராணுவ நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க வேண்டாம் என கட்சியின் தலைவர், பிரதி தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் ஆகியோர் லக்மன் செனவிரத்னவுக்கு அறிவுறுத்தியிருந்தனர். எனினும் அதனை மீறி சாட்சியம் அளித்தமையை தொடந்தே, லக்மன் செனவி ரத்னவின் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள…
-
- 0 replies
- 386 views
-
-
ராஜபக்ஷேவை இந்தியா பக்கம் திருப்பவே நிருபமா பயணம் : பழ.நெடுமாறன் புதுச்சேரி ஆக.31,2010 சீனாவை சார்ந்து இருக்கும் அதிபர் ராஜபக்ஷவை, இந்தியா பக்கம் திருப்புவதற்காகவே வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் இலங்கை பயணம் மேற்கொண்டுள்ளதாக, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து புதுச்சேரியில் திங்கட்கிழமை நிருபர்களிடம் அவர் கூறுகையில், "இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு புனரமைப்பு நிதியாக ரூ.2 ஆயிரம் கோடியை இந்திய அரசு, இலங்கை அரசிடம் வழங்கியுள்ளது. அந்த நிதியைக் கொண்டு அங்கு கட்டப்படும் கட்டடங்களில் சிங்களர்கள் குடியமர்த்தப்படுகிறார்கள். இந்த நிதி சரியாக செலவிடப்படுகிறதா என்று பார்வையிட மத்திய வெளியுறவுச் …
-
- 0 replies
- 408 views
-
-
மகிந்தவுக்கு எதிராக அமெரிக்காவில் திரண்டெழப் போகும் சிங்களவர்கள் [ பிரசுரித்த திகதி : 2010-08-31 06:55:54 AM GMT ] ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அடுத்த மாதம் நியுயோர்க் செல்லவுள்ளார். மகிந்த நியுயோர்க் செல்லும் வேளையில் அங்கு எவரும் மகிந்தவின் வருகைக்கு எதிராக எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடாதவாறு நடவடிக்கை எடுக்கும்படி அங்குள்ள சிறிலங்கா தூதுவரகத்துக்கு சிறிலங்கா வெளிவவிகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவொன்று அடுத்த மாதம் நியுயோர்க் செல்லவுள்ளது. இந்தக் குழுவில் அரசியல் தலைவர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள…
-
- 0 replies
- 398 views
-
-
சிறீலங்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் மற்றொரு ஆணைக்குழு இலங்கையில் கடந்த காலங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை நியமிக்கும்; என நேபாளத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் பணிப்பாளர் எந்தனி கார்டன தெரிவித்துள்ளார். சர்வதேச கடத்தல் மற்றும் காணாமல் போனவர்களுக்கான தினம் இன்று அனுஷ்ட்டிக்கப்படுகிறது. காணால் போனவர்கள் தொடர்பில் நேபாளம் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் அரசாங்கங்கள், நீதிமன்றங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களை ஏற்று செயற்பட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் பலவற்றில், கடத்தல் மற்றம் காணாமல் போதல் தொடர்பான சட்டங்கள் மீறப்பட்டு வருகின்றமையை அவர்…
-
- 1 reply
- 545 views
-
-
திங்கட்கிழமை, ஆகஸ்ட் 30, 2010 முருங்கனில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் இன்ஸ்பெக்டர், பொலிஸ் உத்தியோகத்தர், புளொட் அமைப்பின் உறுப்பினர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சூரிய கட்டைக் காட்டில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரின் வீட்டிலிருந்து ஏறத்தாழ 23 இலட்சத்து 78 ஆயிரம் பெறுமதியான பணம், தங்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசியொன்றைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் மற்றும் புளொட் அமைப்பின் உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்றம் முன் நிறுத்தப்பட் டதை அடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக…
-
- 1 reply
- 662 views
-
-
வெளி நாடுகளிற்கு ஆட்களை கடத்துவதற்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை - கடற்படை உள்நாடுமுக்கிய-செய்திஇணைய-பதிப்புவவுனியா நிருபர் திங்கட்கிழமை, ஆகஸ்ட் 30, 2010 பாரிய சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை என கடற்படைக் கப்டன் அதுல செனரத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்று வந்த பாரிய சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கடற்படை புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் மாரவில பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட ஐந்து பேரைக் கைது செய்ததன் மூலம் இந்த உண்மைகள் வெளியிடப்பட்டுள்ளன. நீண்ட காலமாக இந்த சட்டவிரோத ஆட்கடத்தல் வர்த்தகம் இடம்பெற்று வந்துள்ளதாகத் தெர…
-
- 1 reply
- 685 views
-
-
போரின் எச்சங்களாய் வன்னிநிலப்பகுதிகளில் மிஞ்சியிருப்பது துயரங்களின் குவியல். காலம்காலமாய் வாழ்ந்த மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு மனிதவுயிர்கள் எண்ணுக்கணக்கின்றி அழிக்கப்பட்ட கொடுமையின் முடிவு எங்கள் மக்களை ஏதிலிகளாக்கிவிட்டுள்ளது. தங்கள் நிலங்களில் மீளவும் வாழ வழியற்றுத் தவிக்கும் மனிதர்களும் அவர்களின் அனாதைக் குழந்தைகளும் தங்கள் எதிர்காலம் மீதான நம்பிக்கைகளுடன் தறப்பாள்களின் கீழே மீளவும் வாழ்வை ஆரம்பித்திருக்கிறார்கள். எல்லாம் இழந்தபின்னும் நம்பிக்கைகளோடு மீளவும் குடியேறியுள்ள பொன்னகர் கிராமமக்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டியவர்கள் நீங்களே உறவுகளே…..! பல்வேறு கட்டங்களில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இங்கு குடியமர்த்தப்பட்டார்கள். 50 வீட்டுத் திட்ட…
-
- 8 replies
- 805 views
-
-
திங்கட்கிழமை, ஆகஸ்ட் 30, 2010 யாழ்ப்பாணத்தில் இரவு நேரங்களில் தனியார் சிற்றூர்திகளில் மற்றும் பேருந்துகளில் இளைஞர்களின் சேஷ்டைகள் அதிகரித்துள்ளதாகப் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் சமீப காலமாகச் சுமுகமான சூழ்நிலை நிலவுவதால் பயணிகளின் நலன் கருதி யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து தூர இடங்களுக்குச் செல்லும் இறுதி நேர தனியார் சிற்றூர்திகள் மற்றும் பேருந்துகள் புறப்படுவது இரவுவரை நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலைக்குச் சென்று திரும்புவோர், மாலைநேர வகுப்புக்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், வைத்திய சாலைக்குச் சென்று திரும்புவோர் எனப் பலதரப்பட்டோர் இந்த இரவுநேர பஸ் சேவையால் பயனடைவது குறிப்பிடத் தக்கது. எனினும் இந்த இரவுநேர பஸ்களில் மதுபானம் அருந்…
-
- 1 reply
- 925 views
-
-
தாயின் கள்ளக் காதலனான 66 வயது முதியவரால் 26 வயது மகள் இன்று கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொகரல்லையில் இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மத்திய வங்கியில் பயிலுனராகப் பணியாற்றும் சந்திராணி பிரியங்கலா என்பவரே கொல்லப்பட்டவர் ஆவார். வீதியில் பஸ் இற்காக காத்து நின்றபோதே கத்தியால் குத்தப்பட்டார். படுகொலையாளியும் தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டார். முன்விரோதமே இப்படுகொலைக்கு காரணம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9353:-66-26-&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410
-
- 2 replies
- 1.9k views
-
-
இலங்கை உட்பட வெளிநாடுகளில் இருந்து அரசியல் தஞ்சம் கோரி வரும் அகதிகளை ஆஸ்திரேலியா ஒழுங்கு முறையாக நடத்துவது கிடையாது என்று ஐ.நாவின் இனரீதியான பாரபட்சங்களுக்கு எதிரான குழு அறிவித்துள்ளது. அகதிகளின் உரிமைகளைப் பாதுகாக்க கூடிய வகையில் ஆஸியின் அரசமைப்பு இல்லை என்றும் அது சுட்டிக் காட்டி உள்ளது. இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து கடல் வழியாக வரும் அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் வழங்கும் நடவடிக்கைகளை ஆஸி இடை நிறுத்தி வைத்ததையும், இந்த அகதிகளை சிறையில் அடைத்து நடத்தும் முறையையும் இக்குழு கடுமையாக விமர்சித்துள்ளது. http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9368:2010-08-30-16-45-18&catid=54:2009-12-16-09-39-…
-
- 1 reply
- 563 views
-
-
இலங்கையில் இருந்து சவூதி அரேபியாவுக்கு வேலைக்காகச் சென்ற ஆரியவதி அங்கு வேலை செய்த வீட்டிலிருந்த எஜமானியான தம்பதிகள் இருவராலும் 24 ஆணிகள் ஏற்றப்பட்டு கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார். அந்த இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் தனித் தனியாக வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இலங்கை வேலைவாய்ப்பு பணியகம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு கட்டிக் கொடுக்க ஒப்புதல் அளித்துள்ளதோடு ஆரியவதியை இலங்கையிலிருந்து அனுப்பி வைத்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தை தடை செய்வதற்கும் தீர்மானித்துள்ளது. http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9363:2010-08-30-13-13-35&catid=54:2009-12-16-09-39-33&…
-
- 1 reply
- 1.3k views
-
-
Last Part : பிரபாகரனுக்குப் பின் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக அறிவிக்கப்பட்டவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளருமான குமரன் பத்மநாதனை (கே.பி.) சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் 'டெய்லிமிரர்' ஆங்கில பத்திரிகைக்காக கண்ட விசேட செவ்வியின் நான்காவது பாகம் ஓகஸ்ட் 28 ஆம் திகதி அப்பத்திரிகையில் வெளியாகியது. அப்பாகத்தின் தமிழாக்கம் இது:- கேள்வி : அண்மைக் காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றி விளக்கமாக கூறினீர்கள். நன்றி. இவ்விடயங்கள் தொடர்பாக புதிய விளக்கங்களை நீங்கள் தந்துள்ளீர்கள். ஆனால் இப்போது நான் சமகால நடப்புகள் பற்றி கேட்க விரும்புகிறேன். இந்த அரசாங்கத்துடனான , குறிப்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தாபய ராஜபக்ஷவுடனான உ…
-
- 7 replies
- 1.5k views
-