Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு கிழக்கு காடுகளை அங்குலம் அங்குலமாக GIS system இல் தரவேற்ற அமெரிக்கா உதவி கடந்த 25 வருடங்களாக இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதி காடுகளும் கரையோரங்களும் தரவேற்றம் செய்யப்படாமல் இருந்தது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இந்த பிரதேசங்கள் கூடுதலாக இருந்ததால் யாரும் இதனை செய்ய முன்வராதது மட்டுமல்ல. விடுதலைப்புலிகளும் அனுமதிக்கவில்லை. ஆனால் இப்போ அமெரிக்க அரசாங்கம் யு.எஸ். எயிட் நிறுவனத்தின் ஊடாக இந்த திட்டத்தினை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்துக்கு நிதி உதவியும் பயிற்சியும் அளித்து வருகின்றது.அமெரிக்க தூதர் திருமதி பற்றீசியா புட்டின் இதற்கான கருவிகளையும் பயிற்சியினையும் வழங்கும் வைபவத்தினை நேற்று உத்தியோக பூர்வ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். சுனாமி காலப்பகுதியில்…

    • 0 replies
    • 774 views
  2. சிங்கள களியாட்டக்காரர்களால் நிரம்பிக் கிடக்கும் தமிழீழ கடற்கரைகள்: பிரித்தானிய ஊடகவியலாளர் போரால் மக்கள் மனங்களில் ஏற்பட்ட காயங்கள் ஆறும் வரைக்கும் சிறிலங்காவின் கிழக்குக் கடற்கரைகளை கடற்தொழிலாளர்களிடமும் விவசாயிகளிடமும் விட்டு வைப்பதே சிறந்தது. பிரித்தானிய ஊடகவியலாளர் Gill Charlton என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவரது கட்டுரையின் முழுவிபரமாவது: 30 வருடங்கள் நீண்ட உள்நாட்டுப் போரின் பின்னர் சிறிலங்காவின் கிழக்குப் பகுதி கடற்கரைகள் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் கைவிடப்பட்டுள்ள நிலையில் காணப்படும் கரையோரங்கள் சுற்றுலாப் பயணிகளுக்குத் திருப்தி அளிப்பதாக இல்லை. விடுதலைப் புலிப் போராளிகளுக்குப் …

    • 0 replies
    • 803 views
  3. போகம்பர சிறைச்சாலை தமிழர்களால் நிரம்பி வழிகின்றது: ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு சிறிலங்காவின் கண்டி நகரில் அமைந்துள்ள போகம்பர சிறையில் [bogambara Prison] ஏற்பட்டுள்ள கடும் இடநெருக்கடி குறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு [The Asian Human Rights Commission] தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைகள், நீதிமன்ற நடவடிக்கைகள் எவையும் இன்றி தமிழர்கள் தடுத்து வைக்கப்படுவதே சிறைகளில் ஆட்கள் நிரம்பி வழிவதற்கான காரணம் என்றும் ஆணைக்குழு சுட்டிக் காட்டி உள்ளது. 1876இல் கட்டப்பட்ட இந்தச் சிறைச்சாலை சிறிலங்காவில் உள்ளவற்றில் இரண்டாவது பெரிய சிறைச்சாலை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது…

    • 0 replies
    • 361 views
  4. புனர்வாழ்வு முகாம்களில் தங்கியிருந்த முன்னாள் புலிகள் 566 பேர் நேற்று விடுதலை பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் 566 பேர் நேற்று விடுதலை செய்யப்பட் டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் விடுதலைப் புலி உறுப் பினர்களை அவர்களது உறவினர்கள் மற் றும் பெற்றோரிடம் வவுனியாவில் வைத்து ஒப்படைத்ததாக நீதி மற்றும் சட்ட மறு சீரமைப்பு அமைச்சின் செயலாளர் சுகத கம்லத் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு நிலையங்களில் இவர்களின் மனநிலையை விருத்தி செய்யும் விசேட செயற் றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலை செய்யப்பட்டவர்கள் அவர் களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள…

    • 0 replies
    • 428 views
  5. தொடரும் தேர்தல் வன்முறைகள்; நேற்று ஒருவர் பலி;15 பேர் காயம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கு இடையில் நேற்று இடம் பெற்ற மோதல்களில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர். மதுரன்குளிய மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. மதுரன்குளிய பிரதேசத்தில் இடம் பெற்ற மோதலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச் சேர்ந்த ஆதரவாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் பத்து பேர் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ள தாகவும் தெரிவிக்கப்படுகிறது.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷகலந்து கொள்ளவிருந்த பிரசாரக் கூட்டம் ஒன்றுக்கு பயணித்துக் கொண…

    • 0 replies
    • 455 views
  6. இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எந்த தரப்புக்கும் ஆதரவில்லை அமெரிக்கா தெரிவிப்பு இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எந்த வொரு தரப்பினருக்கும் ஆரவளிக்கப் போவதில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதித் தேர்தலை பொறுத்த வரையில் அமெரிக்காவின் நிலைப்பாடு நடு நிலையானது என அந்நாட்டு தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்கா ஒரு பக்க சார்பாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமெரிக்கத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடை பெறவுள்ள நிலையில் அங்கு நாளுக்கு நாள் வன்முறைகள் அதிகரித்துச் செல்கின்றன. ஒருதரப்புக்கு ஆதரவு வழங்குபவர்கள் …

    • 0 replies
    • 343 views
  7. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் இலங்கைத் தமிழ் மக்க ளின் அரசியல் எதிர்காலம் போன்றவை தொடர்பான விடயங் களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவுகள், அணுகு முறைகள் போன்றவற்றை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப் பினரான மாவை சேனாதிராஜா நேற்றுப் புதுடில்லியில் வைத்துத் தெரிவித்தார். நேற்று மாலை வரை இரண்டு நாள்கள் புதுடில்லியில் தங்கியிருந்து இந்திய அரசுத் தலைமையோடும், அதிகாரிகளோடும் பேச்சு நடத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவில் மாவை சேனாதிராஜாவும் ஒருவர். அவருடன் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் எம்.பிக்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநா…

    • 4 replies
    • 676 views
  8. இரு தரப்புடனான நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க தயாராகிவிட்டது. மகிந்தவும் சரி, சரத்பொன்சேகவும் சரி தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வொன்றை வழங்கிவிடக் கூடியவர்கள் அல்ல. இருவரும் ஒன்றிணைந்துதான் தமிழினப் படுகொலையைப் புரிந்தவர்கள். இவர்களிடம் தமிழ் மக்களுக்கான நியாயத்தினைத் தேடுவதென்பது இருட்டறையில் கறுப்புப் பூனையைத் தேடும் குருடனின் நிலைக்கு ஒப்பானதுதான். ஆனால், இன்றைய காலத்தில் மகிந்த அரசின் ஆட்சியை அகற்றவேண்டிய ஒரு அவசியதேவை தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. கூட்டுக் குடும்ப ஆட்சியாக நடைபெறும் இவர்களின் ஆட்சியில் தமிழ் மக்கள் மிக மோசமான அவலங்களையும், அழிவுகளையும் சந்தித்துக்கொண்டிருக்…

    • 2 replies
    • 926 views
  9. யாழ். மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளி லேயே டெங்கு நோயின் பரம்பல் அதிகரித் துக் காணப்படுவதாக யாழ். பிராந்திய சுகா தார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, யாழ். மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் டெங்கு நோய் பீடிக்கப்பட்ட 308 நோயாளர் கள் இனங்காணப்பட்டதுடன் அதில் 5 பேர் உயிரிழந்தனர்.அத்துடன் இம் மாத ஆரம்பத்திலிருந்து நேற்று முன்தினம் வரை 350 நோயாளர்கள் இனங்காணப் பட்டதுடன் அதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.இதில் இம் மாதத்தின் ஆரம்பத்திலிருந்து நேற்று முன்தினம் வரை மாத்திரம் யாழ். மா நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக் கும் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் நல்லூர் பிரதேச சபைப்பிரி வில் 56 நோய…

  10. நியாயத் தீர்வே தமிழர்கள் கேட்பது தெற்கு விட்டெறியும் பிச்சையை அல்ல--உதயன் நாளிதழ் "நீதி நிலைநாட்டப்படுவது மாத்திரம் அல்ல, நிலைநாட்டப்படுவது போல காட்டப்படவும் வேண் டும்.'' என்பது சட்ட மற்றும் நீதித்துறை தொடர்பான ஓர் ஆன்றோர் மொழியாகும். இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினை தொடர் பான விடயத்துக்குத் தீர்வு காணும் விவகாரத்திலும் கூட அதுதான் நியாயம். அதுவே நிலைநாட்டaப்பட வேண்டிய முறையுமாகும். ஆனால் அதுபற்றி யாரும் சிந்திப்பவர்களாகத் தெரியவில்லை. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை விவகாரத் தில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட தரப்பு சிறுபான்மை யினரான தமிழர்கள்தாம். தமக்கு நீதி கோரி, நியாயம் வேண்டி, கௌரவ வாழ் வுரிமை தேடி, சுதந்திரம் நாடி பல்வேறு வழிகளிலும் போராடிய தமிழர் தரப்பு …

  11. கனகரட்ணம், வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறீ தங்கியிருக்கும் விடுதியில் தடுத்துவைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம் பிணையில் கடந்த புதன்கிழமை (13) வவுனியா நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார். வன்னி இடப்பெயர்வின் பின்னர் சிறீலங்காப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கடந்த 8 மாதங்களாக 4ஆம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டு கடுமையாக விசாரணைக்கு உட்படுத்தியிருந்தமை அறிந்ததே. தற்பொழுது, வவுனியாவில் உள்ள வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறீ தங்கியிருக்கும் விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அத்துடன் இவரின் குடும்பத்தினரும் இவருடன் இணைக்கப்பட்டுள்ளனர். கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும்,…

  12. நோர்வேயின் பத்து முதன்மை (Top10) வெளிநாட்டவர்களில் ஒருவராக, தமிழரான பேராசிரியர் வேலாயுதபிள்ளை தயாளன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நோர்வே சமூகத்தின் சமூகக் கலாசார மற்றும் தொழில்சார் விடயங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய 10 முதன்மையான வெளிநாட்டவர்களை வருடந்தோறும் சுயாதீனமாக ஓர் அமைப்பு தெரிவு செய்து வருகிறது. 16 வயதுக்கு மேல் நோர்வே நாட்டுக்குப் புலம்பெயர்ந்து, மற்றைய வெளிநாட்டவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் தலைமைத்துவ பண்புகளைக் கொண்ட வெளிநாட்டவர்களையே இவ் அமைப்பு தெரிவு செய்து வருகிறது. இவ்வகையில், நோர்வே, பேர்கன் பல்கலைக்கழக, பொறியியல்துறையில் பேராசிரியராகக் கடமைபுரியும் வேலாயுதபிள்ளை தயாளனை இவ்வமைப்பு 10 முதன்மையான வெளிநாட்டவர்களில் ஒருவராகத் தெரிவு செய்துள்…

  13. சிறீலங்கா தளபதி - அவுஸ்ரேலிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு சிறீலங்காவிற்கான அவுஸ்ரேலிய அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சிறீலங்காபப்படைத் தளபதியினை சந்தித்து கலந்துரையாடியுள்ளர். சிறீலங்காவிற்கான அவுஸ்ரேலிய அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் நிமோனி இன்ஸ் சிறீலங்காப்படைத் தலைமை அலுவலகத்திற்கு சென்று கலந்துரையாடியுள்ளார். இதில் சிறீலங்காப்படைத் தளபதி லெப்ரினன் ஜெனரல் ஜெகத்ஜெயசூரியவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதில் சிறீலங்கா அவுஸ்ரேலியா நாடுகளின் பாதுகாப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=2961&cntnt01origid=52&cntnt01detailtempl…

  14. கே.பியை கொண்டு சரத்பொன்சேகாவிற்கு எதிரான பரப்புரை: ஜே.வி.பி கே.பியை கொண்டு சரத்பொன்சேகாவிற்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்ளும் முயற்சியில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளதாக ஜே.வி.பி.தெரிவித்துள்ளது. பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கினை இணைப்பதற்கு இடமளிக்கமாட்டோம் என்று ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜிதஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். மகிந்தராஜபக்சவிடம் நிறைவேற்று அதிகாரத்தை கொண்டு வடக்குகிழக்கினை பிரிக்குமாறு ஜே.வி.பி தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கினை மீண்டும் இணைக்க ஜே.வி.பி ஒருபோதும் இடமளிக்காது. இது இவ்வாறிருக்க, கே.பிக்கும் சிறீலங்காத் துணை ஆயுதக்குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்த விபரங்களை பகிரங்கமாக அறிவிக்க வே…

  15. பொன்சேகாவுக்கு முன்நாள் இராணுவ தளபதிகள் ஆதரவு - இராணுவத்துள் பெரும் நெருக்கடி முன்நாள் இராணுவ தளபதி ஹமில்டன் வனசிங்க தனது ஆதரவினை சரத்பொன்சேகாவுக்கு தெரிவித்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் முகமாக நிட்டம்புவவில் நடந்த சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கும் தேர்தல் ஊர்வலத்தில் அவர் கலந்து கொண்டார். இதே வேளை இன்னொரு முன்நாள் இராணுவ தளபதியான சிறில் ரணதுங்க அவர்களும் சரத் பொன்சேகாவுக்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளார். சிறீலங்கா இராணுவத்துள் பெரும்பாலான தளபதிகள் மற்றும் அதிகாரிகள் சரத்பொன்சேகாவை ஆதரிக்கின்றார்கள் என செய்திகள் தெரிவிக்கும் அதேநேரம், அரசின் கட்டளைகளுக்கு ஏனோதானோ என்று பணி செய்வதாகவும், இதனால் பெரும் நெருக்கடிகள் சிறீலங்கா இராணுவ தரப்பில் தோன்றியுள்…

  16. அரசில் அங்கம் வகித்த முஸ்லீம்கள் பலர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு - அமைச்சர் இஸ்தீனும் தாவல் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்கள் பலர் தமது பதவிகளைத் துறந்து, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர். ஜனாதிபதி வேட்பாளர் மயோன் முஸ்தபா,அமைச்சர் சேகு இஸ்தீன், ஜனாதிபதியின் ஆலோசகர் நசீர் அகமட் ஆகியோரே பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் மயோன் முஸ்தபா, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கவுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவி யலாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜன…

  17. தாய்லாந்து பாங்கோக் நகரிலுள்ள ஸ்வொன் புளு என்னுமிடத்தில் அமைந்துள்ள தாய்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஐ.டீ.சி சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள யூ.என்.எச்.சீ.ஆர் இலங்கை அகதிகள் (ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் தம்மை அகதிகளாக பதிவு செய்து கொண்டுள்ள) எதிர்வரும் 18ம் திகதிமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளனர். பல வருடங்களாக ஐ.டீ.சீ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த யூ.என்.எச்.சீ.ஆர் அகதிகள் மேற்படி ஐ.சீ.சி சிறைச்சாலையிலிருந்து தங்களை விடுதலை செய்யும்படியும் அல்லது வேறொரு அகதிகள் முகாமிற்கு தங்களை மாற்றும்படியும் கோரி மேற்படி உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளனர். மேற்படி கைதிகள் ஆண்கள், ப…

  18. எந்தவொரு காரணத்திற்காகவும் வடக்கில் சுயாட்சி நிறுவப்பட மாட்டாது எனவும், நாட்டிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட சுதந்திரம் தேர்தல்களுக்காக காட்டிக் கொடுக்கப்பட மாட்டாது எனவும் ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து source link : http://www.sei...com

    • 0 replies
    • 495 views
  19. எல்லாளன் பாடல் வெளியிடு Video காணொளி பாடல் இங்கு அழுத்துங்கள் உங்கள் கருத்து ? source = dailymotion video

    • 0 replies
    • 1.1k views
  20. நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமைக்க பிரதிநிதிகள் தேர்வு: ருத்திரகுமாரன் தகவல் - நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமைப்பதற்கு உலகம் முழுவதும் 135 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவர் என்று அதன் ஒருங்கிணைப்பாளர் வி. ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அவரது அறிக்கை இலங்கைத் தமிழ் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. அதில், வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நேரடித் தேர்தல் மூலம் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமைப்பதற்காக உலகம் முழுவதும் 115 மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும், மேலும் 20 பேர் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளை முன்னிலைப்படுத்தக்கூடிய வகையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். http://www.…

  21. சிங்களப் பகுதிகளில் மகிந்த அலை: அவரே வெல்வாராம் - இந்திய நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு வடக்கு, கிழக்கு தவிர்ந்த சிறிலங்காவின் ஏனைய மாகாணங்களில் மகிந்த ராஜபக்சவுக்கே அதிக செல்வாக்கு இருப்பதாகவும், அவர் அதிபர் தேர்தலில் இலகுவாக வெற்றியீட்டுவார் என்றும் இந்திய நிறுவனம் ஒன்றின் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. விப்லாவ் தொடர்பாடல் நிறுவனம் [Viplav Communications Pvt. Ltd.] இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியிருக்கிறது. இதன் அடிப்படையில் வடக்கு,கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் சரத் பொன்சேகாவை விட மகிந்த ராஜபக்ச முன்னணியில் உள்ளார். பெரும்பான்மைச் சிங்களவர்களும் முஸ்லிம்களும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குகின்றனர். மலையகத் தமிழரில் பெரும்பாலானோர் கூட…

  22. ஆகக் குறைந்த காலத்தில் அதிகமான மக்களை கொன்று குவித்த ஒரே ஜனாதிபதி!: விக்கிரமாகு ஆகக் குறைந்த காலப்பகுதியில் கூடுதலான மக்களை கொன்று குவித்த ஒரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். காலி பலப்பிட்டியில் இன்று காலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஏதிர்வரும் காலங்களில் பெருந்தோட்டத்துறை, துறைமுகம், பெற்றோல் உள்ளிட்ட விடங்களில் ஏற்படும் பொருளாதார பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளும் நோக்கிலேயே ஜெனரல் சரத் பொன்சேகாவை இந்த நாட்டின் ஏகாதிபத்திய வாதிகள் தெரிந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடந்து முடிந்த யுத்தம் இந்தியாவின் வேண்டுகோளின் பேர…

  23. இலங்கை அரசு ஐநா சபையை ஏமாற்றியுள்ளது! இறுதிப்போரில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தபடவில்லை என்று ஐநா சபைக்கு இலங்கை அரசு பொய்யான தகவலை அளித்து ஏமாற்றியுள்ளது என்று முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான மங்கள சமரவீர கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை அதிபரின் செயலாளர் லலித் வீரதுங்க சமீபத்தில் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று போரில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று கூறியிருந்தார். இதன் மூலம் அதற்கு முந்தைய காலத்தில் போரில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது உறுதியாகிறது. ஆனால், ஐநா சபைக்கு அரசு அளித்த தகவலில் போரில் அத்தகைய ஆயுதங்களே பயன்படுத்தப்படவில்…

  24. பிரபாகரன்! மதிவதனி! இசைப்பிரியா! -நேரில் கண்ட அறிவரசனின் நினைவலைகள்! சிங்கள ராணுவத்திடம் சரணடைந்து தடுப்பு முகாமிலிருந்த புலிகளின் பெண் போராளியும் தமிழீழத் தேசியத் தொலைக் காட்சியின் செய்தி வாசிப்பாளருமான இசைப்ரியாவை, ராணுவத்தினர் கடத்திக் கொண்டு போய் கொடூரமாகப் படுகொலை செய்திருப்பதை “அய்யோ… தங்கச்சி! கதறும் ஈழ அண்ணன்’ என்கிற தலைப்பில் விரிவாக எழுதியிருந்தோம். இந்த செய்தி, தமிழகத்திலும், புலம்பெயர்ந்த தமிழர்களிடத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. நக்கீரனை தொடர்பு கொண்டு நிறைய விபரங்களை பகிர்ந்து கொள்கின்றனர் புலம்பெயர்ந்த தமிழர்கள். இந்த சூழலில், நெல்லையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் அறிவரசன் கிளிநொச்சியில் 2 வருடம் தமிழ்ப்பணி செய்தவர். இச…

  25. முள்ளிவாய்க்கால் அவலங்களுக்குப் பின்பு நடைபெறும் முக்கியமான தேர்தல் இது. இதில் கலந்து கொள்ளும் ஆர்வம் தமிழ் மக்கள் மத்தியில் அறவே இல்லை. இனப்படுகொலையை ஏவியவனும், அதனை கனகச்சிதமாக செய்து முடித்தவனும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டு, தமிழ் மக்களிடம் ஆதரவு தேட வந்துள்ளார்கள். சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட வேண்டிய போர்க் குற்றவாளிகள் இவர்கள். இவர்களை நீதியின் முன்னிறுத்துவதற்கு காலம் எடுக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் இவர்கள் இருவரையும் நிராகரிப்பதன் மூலமாக இவர்கள் தொடர்பான தமது அபிப்பிராயத்தை அனைத்து உலகத்திற்கும் தெரியும் படி செய்தாக வேண்டாமா? இந்த இரண்டு இன ஒழிப்பாளர்களுள் குறைந்த தீமை செய்தவர் யார் என்று யோசிப்பதற்கு இதுவொன்றும் பட்டிமன்றமல்ல. ஒரு தேசத்தின் எ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.