Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதிய தீர்வுத் திட்டத்தை முன்வைப்பேன் என்கிறார் ராஜபக்ஷ-பி.பி.சி தமிழோசை இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் நிராகரித்துள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், நடக்ககவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தானே தனது சொந்தமான தீர்வை முன்வைப்பேன் என்று தெரிவித்துள்ளார். மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்வதற்காக இலங்கையின் அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ள போதிலும், அது முழுமையாக என்றும் அமல்படுத்தப்படவில்லை. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் தனது அரசாங்கம் கடந்த வருடம் மே மாதத்தில் முழுமையான வெற்றியைப் பெற்றபோது, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தின் அவசியம் குறித்து மஹிந்த ராஜபக்ஷ பேசினார். ஆனால், அ…

  2. பிரிட்டனில் நடைமுறையிலுள்ள அரசாங்க ஏற்றுமதித் தடைக்கு முரணாக இலங்கை அரசாங்கத்துக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்த லண்டன் வணிகர் ஒருவரை பிரிட்டன் போலீசார்கைது செய்துள்ளதாக லண்டன் ஈவினிங் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது. கிடியோன் சாரிக் எனப்படும் 58 வயதான நபரே இவ்வாறு கைதாகியுள்ளார். இவருடன் இன்னொரு லண்டன் நபரான ஹொவார்ட் ஃபிரெக்லட்டனும் கைதாகியுள்ளார். இவர்கள் இருவரும் இலங்கை உட்பட 8 நாடுகளுக்கு ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளனர். இவர்கள் ஆர்மட் காரைத் துளைத்துச் செல்லும் ஆயிரக்கணக்கான ஆயுதங்கள் மற்றும் பம்ப்-ஆக்ஷன் துப்பாக்கிகளை இலங்கைக்கு அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது. அதோடு 2006 ஆம் ஆண்டுகாலப் பகுதியில் லெபனானில் நடந்த சண்டையின்போதும் துருக்கியிலிருந்து பெற்ற ஆயுதங்களை இ…

  3. பலரையும் சிக்கல்படுத்தியுள்ள லலித் வீரதுங்கவின் தகவல்! நடந்து முடிந்த இந்திய பொதுத்தேர்தலில் இந்தியக் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காகவே வன்னி யுத்தத்தில் கனரக ஆயுதங்களை பயன் படுத்துவதில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்ததாக அவரின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வின் செயலாளர் லலித் வீரதுங்க மேற்படி தகவலை வெளியிட்டது எதற்காக என்ற கேள்வி நியாயமானதாயினும், லலித் வீரதுங்கவை பொறுத்தவரை ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ­ அதிக வாக்குகளைப் பெறவேண்டும் என்ற நோக்குடனேயே அவர் அவ்வாறு கூறினார் என்பது தெளிவு. ஆனால் இந்தியக் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காக வன்னிப் போரில் கனரக ஆயுதங்களைப்…

  4. தற்போதைய ஆட்சியாளர்களுக்கு தமிழர்கள் அங்கீகாரம் அளிக்ககூடாது இவர்களுடைய காலத்தில் தமிழர்கள் பெரும் துன்பங்களை அனுபவித்தார்கள். யுத்தத்தினை நடத்தி வன்னி பிரதேசத்தை நாசமாக்கியவர்களுக்கு நாம் வாக்களிக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார் தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா. வவுனியாவில் இன்றுமாலை (திங்கள்) நடைபெற்ற சனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்தரங்கில் பேசியபோது இவர் கூறியதாவது: வன்னியில் பெரும் இராணுவ மயமாக்கல் வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றது. எமது மண்ணில் பௌத்த சின்னங்கள் அமைக்கப்படுகின்றது. இதற்கு எல்லாம் நாம் அனுமதிக்கலாமா? அதனால்தான் நாம் ஏகோபித்த முடிவை எடுத்துள்ளோம். இந்த ஆட்சியாளர்களை மாற்றவேண்டும் என்பதாகும். ஆட்சிமாற்…

  5. ரக்வொண் டோ (Taekwondo) என்னும் தற்காப்புச் சண்டைப் போட்டியில் ஈழத்து இளைஞன் விபீசன் பரமநாதன் அவர்களின் சாதனை. உலகம் ஈழத்தமிழர்களை கைவிட்டாலும் ஈழத்தமிழர்களாகிய நாம் எங்கு வாழ்ந்தாலும் வாழ்கின்ற நாட்டிற்கு பெருமை சேர்ப்பவர்களாகவே வாழ்ந்து வருவது வரவேற்புக்குரியது அந்தவகையில் ரக்வொண்டோ (Taekwondo) என்னும் தற்காப்புச் சண்டைப் போட்டியில். இணுவிலைச் சேர்ந்த பரமநாதன் தம்பதிகளின் புதல்வன் விபீசன் (வயது 16); அவர்களின் திறமை பாராட்டுக்குரியது. ரக்வொண் டோ (Taekwondo) என்னும் தற்காப்புச் சண்டைப் போட்டியில்உலகக்கோப்பைக்கான(18வயதிற்குட்பட்டோருக்கான) ரக்வொண்டோ (Taekwondo) என்னும் தற்காப்புச் சண்டைப் போட்டியில் டென்மார்க் நாட்டின் சார்பாக கலந்து கொள்ள இருக்கின்றார். இ…

  6. கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் எழுதப்பட்டிருந்த கட்டுரையில், 2010 ஆம் ஆண்டில் தமது விடுமுறையைக் கழிக்க விரும்புபவர்களுக்கு இலங்கைதான் சிறந்த சுற்றுலாத் தலம் என எழுதியிருந்தது. சிங்கள் பெரும்பான்மையினருக்கும், தமிழ் பிரிவினைவாத குழுக்களுக்கும் இடையில் நடந்த கொடூர போரால் சீரழிந்த இலங்கையில், கடந்த மே மாதத்திற்கு பின்னர் அமைதியான யுகம் தொடங்கியுள்ளதாக அப்பத்திரிக்கை செய்தி கூறியிருந்தது. இவ்வாறு எழுதியமை இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஆனால் லண்டனை வதிவிடமாகக் கொண்ட பிரபல பாடகி M.I.A க்கு கடுங்கோபத்தை உண்டுபண்ணியது. தனது ட்விட்டர் இடுகைகள் பலவற்றிலும் இலங்கையில் நடக்கும் வன்முறைகளை மூடிமறைத்து எழுதிய நியூயோர்க் டைம்ஸுக்கு பல கண்டனங்களை வெள…

  7. மெல்பேர்ணில் வீரத்தந்தைக்கு வணக்க நிகழ்வு [படங்கள்] மெல்பேர்ணில் நடைபெற்ற தமிழ் தேசியத் தலைவருடைய தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வணக்க நிகழ்வு, அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநில வணக்க நிகழ்வுகள் என்று 15.01.2010 அன்று வெள்ளிக்கிழமை உணர்வுபூர்வமாக நடைபெற்றன. மெல்பேர்ண் ஸ்கோர்ஸ்பி சென் ஜூட் மண்டபத்தில் மாலை 7.15 மணிக்கு, அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் கவிதையும், திருச்சி வேலுச்சாமி அவர்களின் உரையும் அகலத்திரையில் காண்பிக்கப்பட்டன. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவுக் கவிதையை தயாநிதி வாசித்தார். இந்நிகழ்வின் போது வானலையூடாக தமிழ்நாட்டிலிருந்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர்…

  8. கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் (16.01.1993) கேணல் கிட்டுவும் அவருடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி வங்கக் கடலில் சங்கமித்த அந்தச் சம்பவம் சரித்திரம் மறக்காத ஒரு சாவு மட்டுமல்ல அது எங்கள் நெஞ்சங்களை நீங்க மறுக்கும் நெடும் அலையாகி நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று. கேணல் கிட்டு தேசியத் தலைவரால் அதிகம் நேசிக்கப்பட்டவர். அவரின் அன்பை அனுபவித்தவர். தலைவரின் இலட்சியத்திற்கு தோள் கொடுத்து அவரின் மனதோடு ஒன்றித்து வாழ்ந்தவர் அதனால்தான் தமிழீழத் தேசியத் தலைவர் “கிட்டுவை ஆழமாக நேசித்தேன் தம்பியாக தளபதியாக எனது சுமைகளைத் தாங்கும் உற்ற தோழனாக நான் அவனை நேசித்தேன். இது சாதாரண மனித பாசத்திற்கு அப்பாலானது. ஒரே இலட்சியப்பற்றுணர்வில் ஒன்றி…

  9. திருடப்பட்ட நிதி தொடர்பான விபரங்கள் இணையம் ஊடாக வாங்கி விற்கப்படுவது எவ்வாறு என்பதை பிரிட்டிஷ் நீதிமன்ற வழக்கொன்று வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. லண்டனில் வெம்பிளி மாவட்டத்திலுள்ள இன்ரர்நெற் கபே ஒன்றிலிருந்து குற்றத்திற்கிடமான இணையத்தளமொன்றை உருவாக்கிய குற்றச்சாட்டில் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். இவர் மீதான வழக்கே திருடப்பட்ட நிதி விபரங்கள் இணையம் ஊடாக வாங்கி விற்பது எவ்வாறு என்பதை அம்பலமாக்கியுள்ளது. ரேணுகாந்த் சுப்பிரமணியம் (33 வயது) என்பவர் "ஜில்சி (ஒடிடூண்டி) என்ற புனைபெயரை இணையத்தில் பயன்படுத்தியுள்ளார். "டார்க் மார்க்கெட் தளத்தின் நிர்வாகியாக இருந்த அவர் மீது லண்டன் நீதிமன்றத்தில் மோசடி நிதிக் குற்றச்சாட்டு நேற்று மு…

  10. அதிபர் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகப்பணிகள் 65 சதவீதம் பூர்த்தி எதிர்வரும் 26ம் திகதி சிறிலங்காவில் நடைபெறப்போகும் அதிபர் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகப்பணிகள் 65 சதவீதம் பூர்த்தியடைந்துவிட்டதாக தபால் மா அதிபர் தெரிவிக்கின்றார். அதிபர் தேர்தலுக்கான வாக்களர் அட்டை விநியோகப்பணிகள் கடந்த 8ம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. வாக்காளர் அட்டை விநியோகப்பணிகள் நாளை மறுதினத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் நாளை விடுமுறை தினமாக இருந்தபோதிலும் நாளைய தினத்தை விசேடமாக வாக்காளர் அடை விநியோக நாளாக பிரகடனப்படுத்தி வாக்காளர் அட்டை விநியோகப் பணிகள் நடைபெறவுள்ளன. வாக்காளர் அட்டைகள் இதுவரையில் கிடைக்காதவர்கள் தமது முகவரிக்குரிய தபால் அலுவலகத்திற்குச் சென்று தமது அடைய…

  11. தேர்தல் ஆணையரின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கவும் – உச்ச நீதிமன்றம் எதிர்வரும் அதிபர் தேர்தலில் அனைத்து ஊடகங்களும் தேர்தல்கள் திணைக்கள ஆணையாளரால் விதிக்கப்பட்டுள்ள சட்டங்களை மதித்து நடக்குமாறு சிறிலங்காவின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அவரின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் ஊடகங்கள் வாயிலாக செய்யப்படும் பிரச்சாரங்கள் மற்றும் தேர்தல்கள் சம்பந்தமான செய்திகள் வெளியிடும் போது மிகுந்த அவதானத்துடனும் பொறுப்படனும் நடந்துகொள்ளுமாறு உயர் நீதிமன்ற நீதியரசர் அசோகா டி சில்வா கேட்டுள்ளார். http://meenakam.com/?p=3343

  12. சனல் - 4 வீடியோக் காட்சிகள் குறித்த ஆதாரங்கள் விசாரணைக்குச் சமர்ப்பிப்பு: சனல் 4 வீடியோ காட்சிகள் தொடர்பிலான ஆதாரங்கள் டப்ளின் விசாரணைகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று டெமில்ஸ் எகேன்ஸ்ட் ஜெனேசைட் அமைப்பு தெரிவித்துள்ளது. http://www.uthayan.com/Welcome/full.php?id=2635&Uthayan1263558451 முடிந்தால் எழுதுங்கள்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=67968&pid=560733&st=0&#entry560733

  13. கனடாவுக்கு சென்ற ஓசியான் லேடி கப்பலில் 76 பேரில் பலர் கட்டம் கட்டமாக விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். இறுதியாக 25 பேர் விடுதலைப்புலிகள் சந்தேக நபர்கள் என தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களின் விசாரணைகள் முடிந்தன எனவும் விரைவில் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் கனேடிய அரசு தரப்பு தெரிவித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதே வேளை இவர்கள் மீதான தொடர் கண்கானிப்பு இருக்கும் எனவும் கனேடிய குடிவரவு அதிகாரிகளும், பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் கூறியுள்ளனர். இதற்கமையவே கூடுதலானோர் கனேடிய தமிழர்களின் ஆள் பிணை மற்றும் ரொக்க பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர். http://www.eelaman.com

    • 3 replies
    • 744 views
  14. வீரகெட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் போதுமான எண்ணிக்கையில் மக்கள் கலந்துகொள்ளாததால் ஆத்திரமடைந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே பிரதேசத்திற்குப் பொறுப்பான மாகாண சபை உறுப்பினர் கபில திஸாநாயக்கவை கடுமையாக திட்டியதுடன் அவரைத் தாக்கியதாகவும் தெரியவருகிறது. வீரகெட்டிய பிரதேசம் ஜனாதிபதியின் அரசியல் பிறப்பிடமாகும். ஜனாதிபதி தாக்கிய கபில திஸாநாயக்க ஜனாதிபதியின் உறவினராவார். மெதமுலன வளவில் வைத்தே அவர் தாக்கப்பட்டுள்ளார். கபில திஸாநாயக்க கடந்த தென் மாகாண சபைத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு விருப்பு வாக்குப் பட்டியிலில் நான்காம் இடத்தைப் பெற்றதுடன் மாகாண சபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார். http://tamilskynews.or…

  15. விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் எமில் காந்தனை நாமல் ராஜபக்சா லண்டனில் சந்தித்துள்ளார் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் எமில் காந்தனை நாமல் ராஜபக்சா லண்டனில் சந்தித்துள்ளார்இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்சா அண்மையில் லண்டனுக்குச் சென்றிருந்ததுடன் விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் எமில் கண்ணனை. இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்சா அண்மையில் லண்டனுக்குச் சென்றிருந்ததுடன் விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் எமில் கண்ணனை இரகசியமாக சந்தித்திருப்பதாக எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேக்காவின் ஊடகப் பேச்சாளர்களான மங்கள சமரவீர மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர். இந்தச்…

  16. தடுப்பு காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட வன்னி எம்பி சதாசிவம் கனகரட்ணத்திற்கு அரசாங்கம் வவுனியாவில் குடும்பத்துடன் தங்குவதற்கு விடுதி வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அத்துடன் வழமையான பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த எட்டு மாதகாலம் விசாரணையின் பொருட்டு கொழும்பில் நான்காம் மாடியில் தடுத்துவைப்பட்டிருந்த இவர் புதன்கிழமை மாலை விடுவிக்கப்பட்டிருந்தார். அமைச்சர் ஒருவர் இவரை விடுவிக்க உதவினார் என உறவினர்கள் தெரிவித்தனர். இன்னும் பல வசதிகளும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவரது மகன் விடுதலை புலிகளின் உறுப்பினர் என்ற காரணத்திற்காகவே விசாரணையின் பொருட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தார். பாராளுமன்ற உறுப்பினரை விடுவிக்கவேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் அண்மையில்…

  17. ஈழத்தமிழர் அரசியல் உரிமைக்கான பொதுசன வாக்கெடுப்பும் அதன் நோக்கங்களும் "ஈழத்தமிழர் அரசியல் உரிமைக்கான பொதுசன வாக்கெடுப்பும் அதன் நோக்கங்களும்" என்ற தலைப்பில், வெள்ளிக் கிழமை (15-01-2010) பிரித்தானிய நேரம் இரவு பத்து மணிக்கு சூரியோதயம் (http://firstaudio.net/) வானொலியில் கலந்துரையாடல் இடம் பெறவுள்ளது. 'புதிய திசைகள்' அமைப்பினர் இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்துள்ளனர். Tamil Legal Advocacy Project அமைப்பில் இயங்கிவரும் கணநாதன் அவர்களும், தமிழகம் மதுரையில் இயங்கிவரும் ஈழ பொதுசன வாக்கெடுப்பு கோரிக்கை ஆதரவாளர் வட்டம் அமைப்பை சார்ந்த பிரபாகரன் அவர்களும் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கே பதிவு செய்து கொள்ளலாம். …

  18. தமிழீழத்தின் இன்றைய நிலையும் சிறிலங்காவின் தேர்தலும்.. தமிழர்திருநாளில் இயக்குனர் சீமானின் செவ்வி தமிழீழத்தின் இன்றைய நிலை பற்றியும், சிறீலங்காவின் தேர்தல் நிலைப்பாடு பற்றியும், தமிழீழ தமிழர்களும் தமிழக தமிழர்களும் என்ன செய்யவேண்டுமென்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் இயக்குநர் சீமான் அவர்கள் தமிழர் திருநாளில் மீனகம் தளத்துக்கு அளித்த செவ்வி http://meenakam.com/?p=3290

  19. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்சா தலைவராக செயற்படும் லங்கா லொஜிஸ்டிக் நிறுவனத்தின் ஊடாக கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8000 ரெட் ஹரோ 8 அல்ஃபா ரக ஏவுகணைகள் இறக்குமதி செய்யப்பட்டன. இவற்றை இறக்குமதி செய்ததற்காக சீனாவின் நொரின்கோ ஏசியா பசுபிக் நிறுவனம் அன்பளிப்பாக வழங்கிய பெறுமதிமிக்க ஐந்து பென்ஸ் கார்கள் மாயமாகியிருப்பதாக இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் ஒன்றின் பெறுமதி 30 மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஏவுகணைகள் காலாவதியான ஏவுகணைகளாகும். 2007ம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட இந்த ஏவுகணைகள் 2004ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. 2007ம் ஆண்டு செப்டம்பர் நடுப்பக…

  20. பொங்குதமிழ் நிகழ்வின் 9ம் ஆண்டு நிறைவு அனுஷ்டிக்கபடும் இவ்வேளையில் பல்கலைக்கழக சமூகம் அழுத்தங்கள் குறைந்த இந்த சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி பொங்குதமிழ் தீர்மானங்களை மக்கள் மனதில் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வரவேண்டும் என தமிழர் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நீண்டு செல்லும் தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. இணைந்த வடக்கு கிழக்கு தமிழர்களின் மரபுவழித்தாயகம், தமிழர் ஒரு தனித்துவமான தேசிய இனம் (Distinctive Nation), தன்னாட்சி உரிமை (Right of self Determination) என்ற தீர்மானங்களை வலியுறுத்தி பல்கலைக்கழக சமூக…

  21. வல்வெட்டிதுறையில் இருந்து தொல். திருமா உரை Video உங்கள் கருத்துக்கள் இதன் கீழ் எழுதுங்கள் !! காணொளி பார்பதற்க்கு இதில் அழ்துதுங்கள் source : dailymotion

    • 0 replies
    • 922 views
  22. சனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் 11 தினங்கள் உள்ள இத்தருணத்தில் வடமாகாணத்தில் பொலிசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பிரச்சார வேலைகள் மந்தகதியில் நடைபெற்றபோதிலும், வன்னி மக்கள் மத்தியில் உணர்வுபூர்வமான ஆதரவு எவருக்கும் கிடையாது. வாக்குரிமையின் பலம் சக்திகொண்டது என தெரிவிக்கும் அரசியல்வாதிகள்இ வட மாகாண தமிழ் வாக்காளர்கள் இலங்கையில் 6வது சனாதிபதி யார் என்பதினை தீர்மாணிக்கப்போகின்றார்கள் என குறிப்பிடுகின்றனர். ஆனால் யுத்தம் காரணமாக பலவித துன்பங்களை அனுபவித்த தமிழ்மக்கள் வாக்களிக்கும் நிலையில் இல்லை என்ற கருத்து அவர்கள் மத்தியில் உள்ளது. ஆட்சிமாற்றம் தேவை எதிரியைக்கொண்டு எதிரியை முறியடிக்கவேண்டும் என தமிழ்தேசியகூட்டமைப்பு தலைவர்கள் கூறிவருகின்றனர். தற்போதை…

    • 0 replies
    • 790 views
  23. சுட்ட பழங்கள் இந்தியாவுக்கு விஜயம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவினர் இன்று இந்தியா புறப்பட்டனர். இந்தியா அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளின் அழைப்பின் பேரில் இவர்கள் டெல்லி செல்வதாக கூட்டமைப்பு தெரிவித்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே இந்திய அரசாங்கத்தினை கூட்டமைப்பு சந்திக்க வேண்டும் என சம்பந்தன் கேட்டிருந்தார் ஆனால் இந்திய அரசாங்கம் திகதியினை வழங்கவில்லை இப்போது தான் வரும்படி அழைப்பு விடுத்துள்ளனர். ஆகவே இன்று கூட்டமைப்பு இந்தியா புறப்படுகின்றது.இந்தியா செல்லும் கூட்டமைப்பில் வழமையாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியினை சம்பந்தன் அவர்கள் வெட்டி விட்டே செல்வதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா செல்லும் அணியினர் 16 ம் திகதி வரை இ…

  24. தன்னை ஒரு நடிகனாகவே அரசு சித்தரிக்கின்றது – சரத் பொன்சேகா அரசியல்வாதி என்பதனை விடுத்து தன்னை ஒரு நடிகனாகவே அரசு சித்தரிக்க முயல்வதாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சகல இனங்களுடனான தமது அரசியல் பயணத்தையும் வெற்றி இலக்கையும் வன்முறைக்கலாசாரத்தால் தடுத்து விடமுடியாத எனவும் அவர் தெரிவித்தார். எதிர்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் பிரச்சார அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற பொங்கல் தின சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். சகல இனங்களிடையேயும் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் எனவும் எமது அரசியல் பயணத்தில் இன ஐக்கியம் முதன்மை இடத்தை பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை பேச்சளவில் மாத்திரமன்…

  25. பொன்சேகாவை ஆதரிப்பது எதற்காக?: இந்திய வெளியுறவுத் துறைக்கு தமிழ்க் கூட்டமைப்பு விளக்கம் சிறிலங்காவில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற தீர்மானத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கின்றது. இந்த முடிவைத் தாம் எடுத்தமைக்கான காரணம் என்ன என்பதையிட்டு அதன் பிரதிநிதிகள் குழு இந்திய அதிகாரிகளுக்கு விளக்கிக் கூறியிருக்கின்றது. இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று புதுடில்லி சென்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவைச் சந்தித்து உரையாடியுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. சரத் பொன்சேகாவை ஆதரிக்க எடுத்த முடிவுக்கான விளக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.