ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142959 topics in this forum
-
கடந்த 24 மணி நேரத்தினுள் இரு அகதி படகுகள் அவுஸ்ரேலிய கிறிஸ்மஸ் தீவுக்கருகில் சுமார் 7 நோட்டிகல் மைல் தொலைவில் அவுஸ்ரெலிய கடற்படையினரால் தடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று இலங்கை தமிழர்கள் 32 பேர் இருந்ததாகவும் இவர்களை கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு நிலயத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த படகில் 22 அகதிகளும் இரு மாலுமிகளும் உள்ளதாக அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் இன்று தெரிவித்துள்ளார். http://www.eelanatham.net/news/important
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழர்களின் மறுவாழ்வுக்காக இலங்கை அரசுக்கு இந்திய அரசு நிதி உதவி வழங்கக்கூடாது. நேரடியாகத் தமிழ் மக்களுக்கு உதவுவதே நல்லது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். ராஜபக்ஷவை சர்வதேச போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பதையும்இ மனித உரிமை மீறலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதற்காக இலங்கை அரசின் மீது உலக நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சென்னை மெமோரியல் அரங்கம் முன் இன்று காலை (22. 10. 09) பத்து மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை அரசுக்கு எதிராக கண்டன கோஷங…
-
- 1 reply
- 772 views
-
-
புதுடில்லி, ஒக்ரோபர் 22 சீனா, பாகிஸ்தான் போன்ற வெளிநாடுகளின் இலங்கை மீதான ஆதிக்கத்தைக் குறைக்கும் பொருட்டுப் போர்க்காலத்தில் இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கியது உண்மையே. அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதுமட்டுமன்றி யுத்த காலத்தில் இந்தியா கப்பல் களை யும் மற்றும் புலனாய்வு வசதிகளையும் இலங்கைக்கு வழங்கியதும் உண்மையே. இவ்வாறு தெரிவித்திருக்கிறார் இந்திய கொள்கை ஆய்வு மத்திய நிலையத்தின் அங்கத்தவர்களில் ஒருவரான பேராசிரியர் பிரம்மா செல்லச்சாமி. விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதானச் செயலகத் தலைவர் புலித்தேவன் மற்றும் மூத்த உறுப்பினர்களும் குடும்பத்தினரும் சரணடைந்த வேளை கொலை செய்யப்பட்டதும் உண்மையே என்றும் பேரா சிரியர் பிரம்மா ஊர்ஜிதம் செய்த…
-
- 0 replies
- 2.3k views
-
-
சுவிஸ் முரசம் ஈழ விடுதலைப்போராட்டத்தின் மிகப்பெரும் திருப்பமான காலத்தில் இன்று புலம்பெயர் தமிழர்களுடன் ஈழத்தமிழர்கள் கைகோர்த்துள்ளனர். இற்றைவரை ஆயுதப்போராட்டம் எமது மக்களின் குரலை சர்வதேசம் எங்கும் ஒலிக்கச்செய்தாலும் சர்வதேச சமூகத்தின் ஆதரவென்பது வெகு மந்தமாகவே இருந்துவந்தது என்பது உண்மையே. ஈழத்தமிழர்களின் கைகளில் இருந்த ‘தமிழீழ விடுதலைப்போராட்டம்’இன்று புலம்பெயர் மக்களின் கைகளுக்கு சென்றுள்ளநிலையில் அதனைக்கண்டு இலங்கை அரசு அச்சம் கொள்ள ஆரம்பித்துள்ளதானது இந்த போராட்டத்தின் வெற்றியின் முதல் படியாகும். கடந்த காலங்களில்போல் அல்லாமல்; ஈழத்தமிழர்கள் தொடர்பில் உறுதியான தீர்வுத்திட்டதுடன் சட்டத்தரணியும் தமிழ் உணர்வாளருமான உருத்திரகுமார் தலைமையில் வெளிக்கிளம்…
-
- 9 replies
- 1.3k views
-
-
தமிழர்கள் பிழைக்க வழியின்றி தினம், தினம் செத்து மடியும் இந்நேரத்தில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவேன் என்பது, நாடு பற்றி எரிகின்ற பொழுது பிடில் வாசிக்கலாம் வாருங்கள் என்று புதிய நீரோ மன்னனை போல கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்போவதாக முன்பு அறிவித்த கருணாநிதி தற்போது இதற்கு மாறாக உலகத் தமிழ் செம்மொழி மாநாடு வரும் ஆண்டு ஜூன் மாதம் கோவையில் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். தமிழிலிலும் பிரித்தாளும் சூழ்ச்சி... உலகத் தமிழ் மாநாடு நடத்துவதற்கென உள்ள அகில உலகத் தமிழியல் ஆய்வு நிறுவனம் போதிய அவகாசம் கேட்டதை தவிர்த்து விட்…
-
- 0 replies
- 962 views
-
-
நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்க கோடீஸ்வரரான ராஜ் ராஜரட்ணம், தாம் நிர்மாணித்த காலியன் குழுமத்தை மூடுவதற்குத் திட்டமிட்டுள்ளார். தமது நிறுவனத்தில் உள்ள பணியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இது குறித்த கடிதம் ஒன்றை அவர் நேற்று புதன்கிழமை எழுதியுள்ளார். அக்கடிதத்தின் பிரகாரம் முதலீட்டாளர்களும், பணியாளர்களும் வன்முறைகள் ஏதுமின்றி தமது பணத்தைச் சுமுகமாக பெற்று மீட்சியடைவதிலேயே அதிக அக்கறை காட்டுவதால், அவர்களின் பணம் வருகின்ற ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் கொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதேவேளை தமது நிறுவனம் மற்றும் சில சொத்துக்களை வாங்க குறைந்தது ஒரு முக்கிய உத்தரவு குறித்தும் ராஜ் ராஜரட்ணம் கருத்தில் எடுத்துள்ளதா…
-
- 0 replies
- 1.5k views
-
-
கனடாவின் வன்கூவர் தீவுக் கடலில் படகுடன் பிடிபட்ட 76 இலங்கைத் தமிழர்களை தொடர்ச்சியான தடுப்புக் காவலில் வைக்குமாறு கனடிய குடிவரவு மறுமதிப்பீட்டு சபை உறுப்பினர் லியான் கிங் உத்தரவிட்டுள்ளார். குடியேற்றவாசிகள் அங்கு வந்து சேர்ந்த விதம் பற்றிய விவரங்கள் தெளிவற்றவையாக இருப்பதால் அவர்களைப் பற்றிய சோதனையை பூர்த்தி செய்ய நேரம் நேரம் போதவில்லை என்று தெரிவித்து கனடிய குடிவரவு அமைச்சரின் பிரதிநிதி ஒருவர் அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்து இந்த தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 76 இலங்கையர்களில் இரண்டு பேர் மீதான விசாரணைகள் பகிரங்கமாக நடைபெறும் என்றும் கிங் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த ஆண்களையோ அல்லது அவர்களது குடும்பத்தினரையோ அடையாளம் காணும் வகையிலான தகவல்கள்…
-
- 0 replies
- 968 views
-
-
அமெரிக்க அரசாங்கம் அதன் அதிகாரிகளால் அமெரிக்க காங்கிரஸ் இற்கு வழங்கப்பட்ட இலங்கையின் போர்க்கால நடவடிக்கைகள் பற்றிய மீறல்களை உள்ளடக்கிய அறிக்கையினை நேற்று உத்தியோக பூர்வ ரீதியாக இலங்கையிடம் சமர்ப்பித்தது. இதற்கு பதிலளிக்கும் முகமாக இலங்கை வெளினாட்டு அமைச்சர் ரோகித போகொல்லாம அவர்கள் கூறுகையில், அமெரிக்க அதிகாரிகள் கொங்கிரஸ் இற்கு சமர்ப்பித்த இந்த அறிக்கைகள் ஆதாரமற்றது எனவும் கூடுதல்லனவை கட்டு கதைகளாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமது அரசாங்கம் விடுதலைப்புலிகளிடம் துன்பத்தை அனுபவித்து கொண்டிருந்த மக்களை மீட்கும் நடவடிக்கையாகவே தாம் படை நடவடிக்கையினை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் யாரோ எவரோ சொன்னவற்றையெல்லாம் ஆதாரமாக கொண்டு புனையப்பட்ட அறிக்கைகள் என வும் கூறியு…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கை அரசாங்கத்தின் மீழ் குடியேற்ற நடவடிக்கைகள் எமக்கு மிகவும் திருப்தியாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது; அதே போன்று இலங்கையில் அதிபர் இராஜபக்ஸ அவர்களை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தமையும் பெரு வெற்றியினை தந்துள்ளது. இவ்வாறு இந்திய மத்திய அரசின் வெளிவிவகார இணை அமைச்சர் திருமதி பிரனீத் கோர் அவர்கள் கூறியுள்ளார். த ஹிந்து பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் இந்திய அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்தின் மீது மீழ் குடியமர்வு மெதுவாக நடைபெறுவதாக கூறியதாகவும் ஆனால் தமிழ் நாடாளுமன்ற குழு சென்று வந்த பின்னர் தாம் உண்மைகளை கேட்டு அறிந்துள்ளதாகவும் கூறிய அவர் இலங்கை அரசின் செயற்பாடுகளுக்கு தாம் மேலும் உதவ முடியும் …
-
- 0 replies
- 656 views
-
-
இன்று காலை மகிந்த அவர்கள் இரு நாள் விஜயமாக வியட்னாம் சென்றுள்ளார். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இலங்கை வெளினாட்டு அமைச்சு வியட்னாம் சென்று இருதரப்பு வாணிப மற்றும்தொழில் நுட்ப ஒப்பந்தங்கள் பற்றி பேசியுள்ளனர். தன் தொடர்ச்சியாகவே சில ஒப்பந்தங்களில் கைசாத்திட மகிந்த செல்வதாக கூறப்படுகின்றது. http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 526 views
-
-
அகதி படகுகளில் பயங்கரவாதிகள் எவரும் இல்லை என கோபாவேசத்துடன் மறுத்துள்ளார் அவுஸ்ரேலிய பிரதமர் கெவின் ரட் அவர்கள். நேற்று பாராளுமன்றத்தில் எதிர்கட்சியினரின் கேள்விக்கு விடையளித்த கெவின் ரட் அவர்கள் எதிரணியினர் அல்லது சில பத்திரிகைகள் கூறுவது போன்று அகதி படகுகளில் வந்தவர்களிற்குள் யாரும் பயங்கரவாதிகள் இல்லையென் திட்ட வட்டமாக மறுத்துள்ளார். http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்திய கொள்கை ஆய்வு மத்திய நிலையத்தின் உறுப்பினரான பேராசியர் பிரம்மா செல்லசாமி தெரிவித்துள்ளதாவது.... யுத்தத்தில் வெற்றிப் பெறுவதை விட, சமாதானத்தை வெற்றி கொள்வதே மிகவும் சிக்கலானது.சமூகத்தினுள் கூட்டு வன்முறைகளை கையாளும் எந்த குழுவும், நீதிக்கு முரணானதே.இதேவேளை யுத்தகாலத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கொடுமையாக கொல்லப்பட்டமை உண்மையே என அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும்......... அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் மற்றும் சமாதான செயலக தலைவர் புலித்தேவன் உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் வெள்ளை கொடிகளுடன் மே மாதம் 17ம் திகதி காலப்பகுதியில் சரணடைந்தனர். இது தொடர்பில் சரணடைவதற்கு முன்னர், ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன…
-
- 1 reply
- 804 views
-
-
ஆல மரத்தில் பிள்ளையார் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கோமாரிப் பிரதேசத்தில் ஆல மரமொன்றின் மத்தியில் பிள்ளையார் வடிவமொன்று தோன்றியுள்ளது. இது மிகவும் வியப்பாகவும் அதிசயமாகவுமுள்ளது. இவ்வதிசயத்தை மக்கள் பெருமளவில் சென்று பார்வையிட்டு வீபூதி சாத்தி பட்டு அணிந்து வழிபாடு செய்து வருகின்றனர். அதிசய விநாயகர் வடிவத்தைப் படங்களில் காணலாம். - பாரிஸ் தமிழ் சுனாமியின் போதும் முள்ளிவாய்க்கால் அவலத்தின் போதும் எங்கே போயிருந்தார் இந்தப்பிள்ளையார்?
-
- 4 replies
- 1.3k views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மனித உரிமை மீறல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அதன் விசாரணை அறிக்கையில் தெரிவித்திருந்தது ஆனால் நேற்று அந்த விடயங்களை இலங்கை சரி செய்யவேண்டுமெனில் எதனை கடைப்பிடிக்கவேண்டும் என்ன செய்யவேண்டும் என பல விடயங்களை உள்ளடக்கி ஒரு வரைபு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் இலங்கை அரசானது, 13 வது திருத்த சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும். தடுப்பு முகாமில் உள்ள மக்களுக்கு நல்ல தண்ணியும் சாப்பாடும் கொடுக்கவேண்டும் குற்றவாளிகளையும், சாட்சி வழங்குவோரையும் காபாற்றுவதற்கான சட்டம் கொண்டுவரப்படவேண்டும். இவையே முக்கியமாக காணப்படுகின்றன அத்துடன் தமிழ் தலைவர்களை இந்த முயற்சிகளுக்கு முழுமனதுடன் ஆதரவு தரவேண்டும் எனவும் குறிப…
-
- 0 replies
- 766 views
-
-
ஒரு தமிழ்ப் பெண் தன் தோளைத் தழுவச் சம்மதிக்காமல் தனித்தே வாழும் திருமாவளவன், ராஜபட்சவுக்குச் சால்வை போர்த்தித் தழுவியிருக்கிறாரே தழுவும்போது கம்பளிப்பூச்சி ஊர்வது போல் உணரவில்லையா? கட்சிகளெல்லாம் கிடக்கட்டும். எழுபதாயிரம் ஈழத்தமிழர்கள் சாகவும், ஐந்து லட்சம் தமிழர்கள் புலம் பெயரவும், மூன்று லட்சம் தமிழர்கள் சிங்கள அரசின் முள்வேலிகளில் சிறைவைக்கப்படவும், இரண்டு லட்சம் தமிழர்கள் அகதிகளாய்த் தமிழ்நாட்டில் கதி கெட்டு அலையவும் காரணமான ராஜபட்ச வைத்த விருந்தை உண்ணவும், அவரோடு மனங்கொள்ளாமல் சிரித்துப்பேசி மகிழவும் டி.ஆர். பாலுவாலும், கனிமொழியாலும், திருமாவளவனாலும் எப்படி முடிந்தது? ஏன்டி... உன் புருசனைக் கொன்னவனோட உனக்கென்னடி சிரிப்பு வேண்டிக்கிடக்கு என்று தாய் மகளிட…
-
- 4 replies
- 2.1k views
-
-
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தங்கை கணவர் திருச்செந்தூரில் சஷ்டி விரதம் மேற்கொண்டுள்ளார்.தமிழகத்தில் புகழ் பெற்ற முருகன் ஸ்தலங்களில் முதன்மையானதாக உள்ளது திருச்செந்தூர் முருகன் கோயில், மற்றும்திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் கடந்த 18 ம் தேதி சஷ்டி விழா துவங்கியது. ஆண்டுதோறும் சிங்கபூர், மலேசியா, லண்டன், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு வாழ் தமிழர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு விரதம் இருந்து, பக்தர்களுக்கு தினமும் அன்னதானமும் வழங்கி வருகின்றனர். ராஜபக்சவின் சகோதரி கணவரான திருகுமரன் நடேசன் கடந்த 22 ஆண்டுகளாக திருச்செந்தூர் சஷ்டி விழாவில் கலந்து கொண்டு விரதம் இருந்து வருகிறார். இந்த நிலலையில், 23 வது ஆண்டாக கடந்த 17 ம் தேதி திருச்செந்தூர் வந்த அவர்…
-
- 6 replies
- 1.7k views
-
-
இலங்கையில் 13 ஆவது திருத்தச் சட்ட மூலம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான யோசனைத் திட்டத்தில் இந்தப் பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் வழங்குவது தொடர்பான விவாதம் இன்றைய தினம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. தமிழ் மக்களின் நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இலங்கை அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரை செய்துள்ளது.கிரமமான முறையில் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள…
-
- 1 reply
- 478 views
-
-
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு என்று தினமணியில் வெளிவரும் கட்டுரையின் 142 ஆவது பகுதியில் வெளிவந்த ஆக்கம் இது தமிழகப் பத்திரிகைகளில், நவம்பர் 26-ஆம் நாள், விடுதலைப் புலிகள் தலைவர் பிறந்தநாள் என்றும், அதனைச் சிறப்பாகக் கொண்டாட, புலிகள் புதிய தாக்குதலை நடத்த இருப்பதாகவும் செய்தி வெளியாயிற்று. "உண்மையில் பிரபாகரன் எப்போதுமே தனது பிறந்தநாளைக் கொண்டாடியவரல்ல. தான் மட்டுமன்றி மற்றவர்களையும் பிறந்தநாள் கொண்டாட அனுமதித்ததில்லை' என்கிறார், பழ.நெடுமாறன் (தமிழீழம் சிவக்கிறது பக்-271). உண்மையில் நடந்ததென்ன? 1989-ஆம் ஆண்டு நவம்பர் 27-இல், மாவீரர் தினம் கொண்டாடவே அனுமதிக்கப்பட்டது. இந்த நாள், விடுதலைப் போராளிகளில், முதன்முதலில் வீரமரணமடைந்த சங்கரின் நினைவுநாள் ஆகும்…
-
- 0 replies
- 871 views
-
-
அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் வழி யில் தடுத்து நிறுத்தப்பட்ட படகிலுள்ள இலங்கையர்களுக்குத் தற்காலிகமாக தனது நாட்டில் தங்குவதற்கு அனுமதி வழங்க இந்தோனேஷியா முன்வந்துள்ளது. மனிதாபிமான காரணங்களைக் கருத் தில் கொண்டு அகதிகளின் படகை தமது கரைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப் படும் என இந்தோனேஷிய ஜனாதிபதி யின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். "படகிலுள்ளவர்கள் தற்காலிகமாக எமது பகுதியில் தங்கவைக்கப்படுவார்கள்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். "குறிப்பிட்ட படகில் நோய்வாய்ப்பட்ட குழந்தை ஒன்றும் உள்ளது. இந்தோனே ஷிய ஜனாதிபதி அந்தக் குழந்தை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளார்"என்றும் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். நன்றி உதயன் : http://www.uthayan.com/Welcome/full.php?id=1169&Uth…
-
- 0 replies
- 386 views
-
-
தங்களுடைய இனப்பிரச்சினைக்கு நீதி, நியாயமான தீர்வுவேண்டி நீண்டகாலம் போராடி போரழிவுகளையும், பேரழிவு களையும் சந்தித்து இன்று துரும்பாகித் துவண்டு போய்க் கிடக்கின்றது ஈழத் தமிழினம். ஈழத் தமிழர்கள் தங்களுடைய அரசியல் காய்நகர்த்தல் களை தந்திரோபாயமாக முன்னெடுக்கவில்லை, வேகத்துக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை விவேகத்துக்குக் கொடுக்கவில்லை, காரியம் பற்றிச் சிந்திக்காமல் வீரியம் மட்டும் பேசியமையால் வந்த வினை இது என்றெல்லாம் இப்போது நம் மத்தியில் இருந்தே சுயவிமர்சனங்கள் கிளம்பியுள்ளன. அவை சரியாகவும் இருக்கலாம் அல்லது பிழையாகவும் இருக்கலாம். அத்தகைய விமர்சனங்களைக் குறைகூறும் எண்ணம் எமக்கு இல்லை. ஆனால், தமிழினம் இன்று நொந்து போயிருக்கின்றது; பலவீனமுற்று இருக்கின்றது என்பது…
-
- 0 replies
- 465 views
-
-
Please write protest letters to the government and the police to express your strongest condemnation of the mistreatment of refugees. Please also demand the Malaysian Government to stop the repatriation of Sri Lankan refugees. Please call and send your protest letters to: Pekan Nanas Immigration Detention Depot Pekan Nanas, 81500 Pontian, Johor Tel : +607-6993577 Faks : +607-6993588 Dato' Abdul Rahman bin Othman Director-General of Immigration Department, Director-General’s Office, Immigration Department of Malaysia Headquarters, Level 7 (Podium), No 15, Persiaran Perdana, Presint 2, 62550 Putrajaya, Malaysia Tel: +603-88801005 …
-
- 0 replies
- 812 views
-
-
தற்போது கலைஞரும் சிதம்பரமும் அடுத்த 500 கோடி பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் முந்தய 500 கோடிக்கு என்ன நடந்தது? அந்த 500 கோடிக்கு எவ்வளவு மக்கள் குடியேற்றப்பட்டனர்? என்பதனை வெளிப்படையாக கூறவேண்டும். என கேள்வி எழுப்பியுள்ளார் செல்வி ஜெயலலிதா.இலங்கை அப்பாவி மக்களை தமது அரசியல் கபட நாடகத்திற்காக கருணா நிதி பலிக்கடா ஆக்குகின்றார். முந்தய நிதிக்கு என்ன நடந்தது என்பது மூடு மந்திரமாகவே உள்ளது எனவும் கூறியுள்ளார். 58 ஆயிரம் பேர் குடியமர்த்தப்படுவர் என இலங்கை சென்ற குழு கூறியது ஆனால் அதற்கான சமிக்ஞை எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளார். http://www.eelanatham.net/news/important
-
- 1 reply
- 589 views
-
-
குற்றவாளிகள், சந்தேக நபர்களை தடுத்து வைத்திருக்கும் இடங்கள் போதிய வசதி கொண்டதாக இல்லை எனவும் மனிதர் வாழக்கூடிய இடங்களாக இல்லை எனவும் ஐக்கிய நாடுகளின் தண்டனைகள் மற்றும் சித்திரவதைகளுக்கு எதிரான விசாரணையாளர் மான்ஃபிரெட் நொவாக் குறிப்பிட்டுள்ளார் (Manfred Nowak) ஐக்கிய நாடுகளின் தடுத்து வைக்கப்பட்டோரை பாதுகாக்கும் உரிமை சட்டத்தின் கீழ் இத்தகைய வழிமுறைகளை இலங்கை, நேபால்,ஜோர்ஜியா, ம்மொல்டோவா போன்ற நாடுகள் பின்பற்றுவதில்லை என கூறியுள்ளார். சிறைகூடங்கள் மிகவும் சிறியதாகவும் சில கூடங்கள் படுத்து உறங்க முடியாதனவாகவும் காணப்படுவதாக தெரிவித்துள்ள நோவாக் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டோர்கள் வெளியில் தொடர்புகொள்ள முடியாதவர்களாகவும் இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் தடுத்து வைக்கபட்டோர…
-
- 0 replies
- 529 views
-
-
சரத் பொன்சேகா அவர்களை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டால் அதற்கான எமது முழு ஆதரவினையும் தாம் வழங்க தயாராக உள்ளதாக ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் திரு லால் காந்த தெரிவித்துள்ளார்.அதே போன்று புதிய சிஹல உறுமைய எனும் கட்சியும் இதே கருத்தை தெரிவித்துள்ளது. அதே நேரம் டெலோ கட்சி இதனை எதிர்ப்பதாக கூறியுள்ளது. http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 556 views
-
-
இலங்கை தரைப்படையின் 611 வது பிரிகேட் இன் கட்டளை அதிகாரி கேணல் துமிந்த அமரசேகர இன்று காலை தம்புள்ள வீதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த வேளை நடந்த விபத்தில் கொல்லப்பட்டுள்ளார். தொரயாய எனும் இடத்தில் விபத்துக்குள்ளான இவர் குருனாகல வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனளிக்காது கொல்லப்பட்டுள்ளார். http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 726 views
-