ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
கொழும்பிலிருந்து முதற்தடவையாக மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்ரகாளி அம்மன் கோவிலுக்குச் சென்ற பக்தை ஒருவரின் கமராவில் சிக்கியது தான் இந்தப் படம். பரந்த இந்த நிலப்பரப்பில் நீல நிறமாக காணப்படும் வானில் ஏதாவது உங்களுக்குத் தென்படுகிறதா…? உங்களிடம் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா…? அப்படியானால் கூர்ந்து அந்தப் படத்தைப் பாருங்கள். நிச்சயம் அந்தப் படத்தில் ஒரு உருவம் தென்படுவதை காண்பீர்கள். நிச்சயமாக அது புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தான் என்கிறார் செல்வி லாவண்யா பகீரதன். இவர் ஒரு சட்டக் கல்லூரி மாணவி. வெள்ளவத்தையைச் சேர்ந்தவர். இந்தப் புகைப்படம் குறித்தும் அதில் தென்படும் அந்த அம்மன் உருவம் குறித்தும் லாவண்யா மெய்சிலிர்க்க எம்மிடம் பின்வருமாறு கூறினார். கொழும்பைச…
-
- 39 replies
- 5k views
-
-
கே.பி. மூலமாக கிளம்பும் கிடுகிடுப்பு ராஜீவ் கொலையில் கை நீட்டப்படும் தமிழகத் தலைவர்கள்? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'எந்திரன்' படத்துக்கு புலிகள் பணம் கொடுத்தனர்', 'தமிழ் திரையுலகத்தினர் பலரும் புலிகளிடம் பணம் பெற்றவர்கள்தான்' என்றெல்லாம் சிங்கள அரசு கிளப்பிய புகார், தமிழகத்தில் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது. இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை குறித்த சில விவரங்களை சிங்கள அரசு வெளியிடப் போவதாகவும், விடுதலைப் புலிகளின் தலைவரான கே.பி-யின் வாக்குமூலமாக வெளி யாகப் போகும் அந்த விவரங்கள், தமிழகத்தில் பெரிய அளவில் அதிர்வலைகளை உண்டாக்கப் போவதாகவும் அடுத்த கிடுகிடு முன்னோட்டம் கொடுக்கிறார்கள், கொழும்பில் இருக்கும் சில பத்திரிகையாளர்கள். இந்திய அரசின் ச…
-
- 1 reply
- 2.2k views
-
-
இலங்கை இராணுவத்தினர், தமிழ்ப் போராளிகளை சர்வதேச சட்ட விதிகளுக்கு முரணாகச் சுட்டுக்கொன்றனர் என்பது உண்மைதானா, இல்லையா என்று கண்டறிவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன், சர்வதேச மட்டத்தில், முழு அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும். 'சனல்4' தொலைக் காட்சியில் வெளியான காட்சிகள் உண்மையற்றவை, உறுதிப்படுத்தப்படாதவை என்று மேலெழுந்தவாரியாகச் சொல்வதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. இத்தகைய சந்தர்ப்பத்தில் அல்லது சூழ்நிலையில், இது விடயம் மிகுந்த கவலையைத் தோற்றுவிப்பதாக உள்ளது. அதேவேளை, இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை அரசாங்கம் இது குறித்த விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு செய்வதே அந்த நாட்டு அரசின் கடமையும் பொறுப்புமாகும். ஆனால் கடந்த காலங்களில் இதுபோன்ற விசாரணைகளுக்கான விடயத்தி…
-
- 0 replies
- 687 views
-
-
ஈழத் தமிழர் படுகொலையில், சர்வதேச அரங்கில் தமிழக முதல்வர் கருணாநிதி தான் முதல் குற்றவாளி, இரண்டாவது குற்றவாளி பிரதமர் மன்மோகன் சிங், மூன்றாவது குற்றவாளி இலங்கை அதிபர் ராஜபக்சே என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கடுமையாக விமர்சித்துள்ளார். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில், பரமக்குடியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு பேசியதாவது… இலங்கை அரசு, மன்னார் வளைகுடா படுகையில் உள்ள பெட்ரோல் எடுக்கும் உரிமையை சீனாவிடம் கொடுத்துள்ளது. இந்திய தென் பகுதியில் இந்தியாவுக்கு பாதுகாப்பு கேடயமாக இருந்த இலங்கை தற்போது மாறிவிட்டது. இப்போது அது …
-
- 3 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலை புலிகள் இலங்கையில் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கைக்கு வெளியே புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் சமாதானத்தை தோற்கடிக்க முனைவதாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார். 'த வோசிங்டன்" பல்கலைக்கழகத்தில், ஆசிய நிபுணர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் இலங்கையில் யுத்தம் முன்னெடுக்கப்பட்ட விதத்தை விளக்கி உரையாற்றினார். அப்போது, ஜனாதிபதி ராஜபக்ஷவின் தெளிவான கட்டளையின் கீழ் தமிழீழ விடுதலைப்புலிகளிடமிருந்து பொதுமக்கள் விடுவிக்கப்பட்டதாகவும், இந் நிலையில், தமிழீழ விடுதலை புலிகள் அரசியல் நீரோட்டத்திற்கு வரவேண்டுமானால் மேற்கத்தைய நாடுகளில், அவர்களுக்கான நிதி சேகரிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் …
-
- 0 replies
- 756 views
-
-
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா இலங்கை இராணுவ அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சரத் பொன்சேகாவுடனான உறவுகளை மீளப் புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இலங்கை இராணுவ அதிகாரசபையின் தலைவர் பதவியை சரத் பொன்சேகாவின் மனைவிக்கு வழங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது. அனோமா பொன்சேகாவை இலங்கை இராணுவ அதிகாரசபையின் தலைவராக நியமிப்பதன் மூலம் சரத் பொன்சேகாவின் நட்பை மீளப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று ஜனதிபதியின் சகோதரரும், பாதுகாப்பமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியதாகவும், அதன்காரணமாகவே அனோமா பொன்சேகாவுக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து …
-
- 0 replies
- 587 views
-
-
இடம்பெயர் மக்கள் தொடர்பில் உண்மையான தகவல்களை வெளியிட்ட யுனிசெப் உயரதிகாரி நாடுகடத்தப்படவுள்ளார் வவுனியாவில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களின் அவலநிலைக் குறித்த உண்மை தகவல்களை வெளியிட்ட யூனிசெப் அமைப்பின் தொடர்பாடல் பணிப்பாளரை உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற சிறிலங்கா அரசாங்கம் நேற்று (02) உத்தரவிட்டுள்ளது. இவர் இடம்பெயர்ந்த முகாம் தொடர்பாக பொய்யான தகவல்களை உலகிற்கு வெளியிட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. யூனிசெப் அமைப்பின் தொடர்பாடல் பணிப்பாளராக ஜேம்ஸ் எல்டர், இடம்பெயர்ந்த மக்கள் பட்டினியால் இறப்பதாகவும் குழந்தை போஷாகின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இவர் தெரிவித்த விடயங்கள் உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் பொய்யான செ…
-
- 0 replies
- 635 views
-
-
இந்திய நலன்களுக்காக திட்டமிட்டு சிறிலங்கா அரசாங்கத்தினால் ஏதிலிகளாக்கப்பட்ட சம்பூர் மக்கள் தமிழ் மக்கள் வாழும் திருகோணமலை கொட்டியார் களப்புக்கருகாமையில் உள்ள சம்பூர் பிரதேசம் மற்றும் அதற்கு அண்மையில் உள்ள கூனித்தீவு, நவரத்னபுரம் கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கு அண்மித்த எண்ணிக்கையானோரின் பூர்வீகப் பகுதிகளை எந்த வித சட்ட செயற்பாடுகளுமின்றி கைப்பற்றிக்கொள்ள சிறிலங்கா சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. இவ்வாறு உள்நாட்டில் அகதிகளாக மாற்றப்பட்டிருக்கும் கிழக்கு தமிழ் மக்கள் தமது பூர்வீக வசிப்பிடங்களில் இருந்து அகற்றப்பட்டு குடிநீர், நிலத்தடி நீர் மற்றும் பிற விநியோகங்கள் அற்ற மனித வசிப்பிடத் தகுதியற்ற வனப் பகுதியான இத்திக்குளம் பகுதியில…
-
- 0 replies
- 506 views
-
-
சிறிலங்கா சிறைகளில் போதைப் பொருள் புழக்கம் மற்றும் பாதாள உலகக் குழுவினரின் நடவடிக்கை என்பவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் சிறப்பு புலனாய்வு மற்றும் பாதுகாப்புப் பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புப் படைப்பிரிவுக்கு, சிறைக்குள் இருப்பவர்களை மட்டுமன்றி சிறைக் காவலர்கள் உள்ளிட்ட அலுவலர்களையும் சோதனையிடுவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு சிறைகளுக்குத் திடீர் பயணங்களை மேற்கொண்டு அங்கு செல்லிடப்பேசி அல்லது தேவையற்ற பொருட்கள் புழக்கத்தில் உள்ளனவா எனச் சோதனையிட்டு விசாரணைகளை மேற்கொள்ளும் என சிறைத்துறை ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி.ஆர்.சில்வா தெரிவித்தார். "சிறப்பான 1,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சிறைக்குள் நடைபெறும் போதைப் பொரு…
-
- 0 replies
- 416 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு துறைமுகத்தின் இரண்டாவது பாதையைப் பயன்பாட்டுக்குத் திறந்து விடுவதற்கு சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் தடவையாக இந்தப் பாதை திறக்கப்பட உள்ளது. விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து நாட்டின் வர்த்தக நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதால், துறைமுகத்தின் இரண்டாவது பாதையையும் திறப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். "இன்னும் ஒரு சில நாட்களில் வடக்குப் பகுதியில் உள்ள பாதையை நாம் திறந்துவிடுவோம்" என்றார் சிறிலங்கா துறைமுக அதிகார சபை தலைவர் பிரியந்த பி.விக்கிரம. "எமது கலங்கள் உரிய நேரத்திற்கு துறைமுகத்திற்கு வந்து திரும்புவதற்கு இது உதவுவதுடன…
-
- 0 replies
- 428 views
-
-
போரினால் பாதிக்கப்பட்டு அகதிகளான வன்னி மக்களுக்கு, ஐரோப்பா வாழ் புலம் பெயர்ந்த தமிழ் மக்களால் "வணங்கா மண்" (கப்டன் அலி) கப்பல் மூலம் அனுப்பப்பட்ட உணவு மற்றும் மருந்து நிவாரணப் பொருள்கள் அவர்களின் கைக்கு எட்டுமா என்பது சந்தேகத்துக்குரியதாகியுள்ள
-
- 0 replies
- 453 views
-
-
அகதி முகாம்களில் புலி உறுப்பினர்கள் உள்ளனர் என்பது உண்மையென்றால் அவர்களுக்கு எதுவித தண்டனையும் வழங் காது அவர்களை சமூக வாழ்வுக்குள் இணைத் துக்கொள்ள வேண்டும். இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளது ஐக்கிய தேசியக் கட்சி. அதேபோல் மூன்று லட்சம் அகதிகளையும் புலிகளாக நினைத்துத் தண்டனை வழங்கவோ கொடுமைப்படுத்தவோ வேண்டாம் என்றும் அக்கட்சி கேட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத் தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் எம்.பி. விஜிர அபயவர்தனவே இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு: ஒருவர் குற்றம் புரிந்தால் அவரைக் கொலை செய்யக்கூடாது. அது பௌத்த தர்மம் அல்ல. மனிதர்கள் தவறு செய்யக் கூடியவர்கள். அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி அவர் களை…
-
- 0 replies
- 405 views
-
-
இலங்கையில் நிலைத்திருக்கக்கூடிய அமைதியான கருத்து இணக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு அரசு முயன்று வருகின்றபோதும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் அந்த அமைதி நடவடிக்கைகளைத் தோல்வி அடையச் செய்ய முயற்சிக்கின்றனர் என அமெரிக்காவுக்கான சிறிலங்காத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார். ஜோர்ஜ் வோஷிங்ரன் பல்கலைக்கழகத்தில் உள்ள தாயக பாதுகாப்பு காவல் கல்வி நிறுவனத்தில் உரையாற்றிய விக்கிரமசூரிய, விடுதலைப் புலிகளுடனான போரில் அரசை வெற்றியடைய வைத்த முக்கிய கூறுகள் குறித்து விளக்கினார். அவற்றில் ஒன்று, பொதுமக்களுக்கு எந்தவித தீங்கும் நிகழாமல் விடுதலைப் புலிகளை அழித்து ஒழிக்குமாறு படையினருக்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச விடுத்திருந்த தெளிவான உத்தரவு என்…
-
- 0 replies
- 370 views
-
-
சிறிலங்காவின் தென்பகுதியில் இருந்து ஏ-9 பாதை வழியாக யாழ்ப்பாணத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்வதற்கு 854 பார ஊர்திகளுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிகளை சிறிலங்காவின் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்துள்ளார். இந்த பார ஊர்திகளின் உரிமையாளர்கள் பொருட்களை விநியோகிப்பதற்கான அனுமதியைப் பெற்றதன் பின்னர் ஒரு தடவை கூட யாழ்ப்பாணத்திற்குத் தமது வாகனங்களில் பொருட்களை அனுப்பி வைக்கவில்லை என்பதனாலேயே அவற்றின் அனுமதிப் பத்திரங்கள் இரத்துச் செய்யப்பட்டன என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி.திவாரத்ன தெரிவித்தார். ஒரு தடவை யாழ்ப்பாணம் போய் வருவதற்கு இந்த பார ஊர்தி உரிமையாளர்கள் ஒரு லட்சம் ரூபாய் கேட்கின்றனர் என்றும் அதன் காரணத்தாலேயே வ…
-
- 0 replies
- 274 views
-
-
ஊடகவியலாளர் ஜே.எஸ்.திசநாயகத்திற்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமை குறித்து அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 356 views
-
-
விசாரணைகள் எதுவும் இன்றி மரண தண்டனை விதிக்கும் பாணியில் சிறிலங்கா தரைப் படையினர் தமிழ் இளைஞர்களைச் சுட்டுக்கொல்வதைச் சித்தரிக்கும் வகையில் வெளியாகி இருக்கும் காணொலி ஒளிநாடா தொடர்பாக தம்முறை தீவிர அக்கறையை தெரியப்படுத்தி இருக்கும் அமெரிக்கா, இது தொடர்பாக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக மேலதிக தகவல்களை எதிர்பார்த்து இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது. "இந்தத் தகவல்கள் எம்மைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கின்றது" எனத் தெரிவித்திருக்கும் ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் தூதுவர் சுசன் றைஸ், "இது தொடர்பான எமது நாட்டின் பிரதிபலிப்பை வெளிப்படுத்துவதற்கு எமக்கு மேலதிகமான தகவல்கள் தேவையாக இருக்கின்றன" எனவும் தெரிவித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங…
-
- 0 replies
- 549 views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கோ அல்லது அரசுக்கோ எதிராக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முக்கிய விடயங்கள் தொடர்பாக அறிக்கைகள் எதனையும் வெளியிடக்கூடாது என துணைப் படைக்குழுக்களின் தலைவர்களில் ஒருவரும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வலியுறுத்தியிருக்கின்றார். கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு ஒன்றுக்குக் கருத்து வெளியிட்ட அவர், "சந்திரகாந்தனின் தேவையற்ற அறிக்கைகள் கிழக்கு மாகாண அரசியலில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கின்றது" எனவும் சுட்டிக்காட்டினார். அதனால் அரசையோ அரச தலைவரையே விமர்சிக்கும் வகையிலான அறிக்கைகள் எதனையும் முதலமைச்சர் வெளியிடக்கூடாது எனவும் அவர் வலியுறு…
-
- 2 replies
- 731 views
-
-
நடிகர் விஜயை எதிர்த்து தமிழ் நாட்டில் சுவரொட்டிகள் [படங்கள் இணைப்பு] தமிழ் நாட்டில் பிரபல நடிகரான விஜயை எதிர்த்துப் பல இடங்களில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. http://www.meenagam.org/?p=9450
-
- 0 replies
- 1.2k views
-
-
போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள காணிகளுக்குப் பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் மாகாண அதிகாரி ஒருவர், இப்பகுதியில் முதலீடுகளைச் செய்வதில் குறிப்பாக உல்லாசப் பயணத்துறை மற்றும் விவசாயத்துறையில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் பெருமளவு ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட கிழக்கு மாகாண காணி ஆணையாளர் எச்.எம்.யசரட்ன, கொழும்பைத் தளமாகக் கொண்டுள்ள நிறுவனம் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள பதியத்தலாவ பகுதியில் சோழப் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்காக 400 ஏக்கர் காணியைப் பெற்றுக்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டார். இதற்கு மேலாக திருகோணமலையில் உள்ள குச்சவெளி பகுதியில் காணிகள…
-
- 0 replies
- 427 views
-
-
தமிழர்களை உலகம் கைவிட்டது ஏன்? பழ. நெடுமாறன் "விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என் செய நினைத்தாய் எனக்குரை யாயோ?' என பாரதி சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் மனம்வெதும்பிப் பாடியதற்கான சூழ்நிலைகளும் நிகழ்ச்சிகளும் இந்த நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் கூட நீடிக்கின்றன. நூறாண்டு காலம் முடிந்த பிறகும்கூட தமிழ்ச் சாதியின் துயரம் தீரவில்லை. மாறாக மேலும் மேலும் பெருகிக்கொண்டே இருக்கிறது. இலங்கையில் நடந்து முடிந்த போரில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டனர். மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் மின்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு சொல்லொணாத சித்திரவதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். குறைந்தபட்ச அடிப…
-
- 4 replies
- 765 views
-
-
சென்னை: ஈழத்தில் நடந்த போரின்போது அங்கிருந்து தப்பி சென்னைக்கு வந்த பெண் அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்தவர் வேலன்டினா. 34 வயதாகும் இவரது கணவர் சிவரூபன். காதல் மணம் புரிந்தவர்கள் இந்தத் தம்பதியர். இவர்களுக்கு ஹம்சாலினி என்ற 2 வயதுக் குழந்தை இருந்தது. குழந்தையை சிறப்பாக வளர்க்க வேண்டும், வாழ்வில் பெரிய அளவுக்குப் போக வேண்டும் என்ற கனவுகளுடன் வாழந்த இந்திய அழகிய குடும்பத்தை குண்டு போட்டு சிதைத்து விட்டது இலங்கை ராணுவம் . கிளிநொச்சியில் நடந்த தாக்குதலின்போது இலங்கை வான்படை வீசிய குண்டு ஹம்சாலியின் உடலை சிதறடித்து சிவரூபன்-வேலன்டினா தம்பதியினரை உருக்குலைத்து விட்டது. அப்போது வேலன்டினா கர்ப்பிணியாக இருந்தார். அவரும் இந்தத் த…
-
- 0 replies
- 771 views
-
-
எமது மக்களை போக விடு! -அருட்தந்தை ஜெகத்கஸ்பர் "மறக்க முடியுமா' நக்கீரனில் நான் எழுதத் தொடங்கி இது ஐம்பதாம் பதிவு. இரண்டு இதழ்களுக்கெனத் தொடங் கிய எழுத்து, காலம் தமிழ் வரலாற்றை சிலுவையிலறைந்த வலியின் கதறலாய் தொடர்கிறது. இப்போதும் நிறைவு செய்திடவே விருப்பம். எனினும் அரசியல் வெளி உண்மை அறுபட்டும், மானுடவெளி உணர்வு சலித்தும் கிடக்கின்ற ஒரு காலகட்டத்தில் இருள் கவிந்த பாலைவனத்தின் தூரத்துக் கூக்குரலாய் இன்னும் சில வாரங்கள் தொடரும். வீழ்ந்த தமிழினம் மீண்டும் எழும், மானுடம் வெல்லும் என்ற நம்பிக்கையின் தளிர்களாய் ஆங்காங்கு இயங்கிவரும் உணர்வு கொண்ட இளையர்களுக்கு இவ்விதழ் பதிவினை சமர்ப்பிக்கிறேன். ""எமது மக்களை போகவிடு'' (Let Our People Go) என்ற முழக்கத்தை செப்டம்பர…
-
- 0 replies
- 555 views
-
-
மக்கள் செய்தி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 2 replies
- 776 views
-
-
புலிகளின் நடமாட்டம் அற்றுப்போயுள்ள நிலையிலும் தமிழக மீனவர்கள் மீது படையினர் நடத்திவரும் தாக்குதல்கள் தொடர்ந்து வருவதையடுத்து, புலிகள் இருந்த காலத்தில் அவர்கள் தமக்கு பாதுகாப்பு அரண்களாக செயற்பட்டனர் என்ற அபிப்பிராயம் தமிழக மீனவர்கள் மத்தியில் தற்போது தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ராஜிவ் காந்தியின் மரணத்திற்கு பிறகு, பெரும்பாலான தமிழக கடலோர மீனவ கிராமங்களில், விடுதலைப் புலிகள் ஆதரவு குறைந்து சென்றது. ஆனால் தற்போது, இலங்கை கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்ந்து வந்த மோதல் தமிழக மீனவர்கள் மீது திசை திருப்பப்பட்டுள்ளது. இதனால் தமிழக மீனவர்கள், விடுதலைப்புலிகள் தங்க…
-
- 7 replies
- 1.3k views
-
-
பிரித்தானியாவில் இயங்கும் சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக அதன் அலுவலகத்திற்கு முன்னால் வருகின்ற 5ம் திகதி(சனிக்கிழமை 05.09.2009) சிங்களவர் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். காலை 11.00 மணி முதல் மதியம் 2.00 மணிவரை இப்போராட்டம் நிகழும் என செய்திகள் கசிந்துள்ளன. பிரித்தானியாவில் இயங்கும் சனல் 4 தொலைக்காட்சி கடந்த 25 ம் திகதி இலங்கை இராணுவம் நடத்திய கொடூரமான யுத்தக்குற்றங்களை உலகிற்கு அம்பலப்படுத்தியது. இந்த வீடியோக் காட்சிகளை இலங்கை ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்(JDS) அமைப்பு வெளியிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து BBC மற்றும் CNN உட்பட உலகின் முன்னனித் தொலைக்காட்சிகளும் இதனை ஒளிபரப்பியிருந்தன. இதனையடுத்து பெரும் நெருக்கடியில் இலங்கை அரசு உள்ளது. மிஞ்சியிருந்த இலங்க…
-
- 1 reply
- 740 views
-