ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
ஓர் ஒஸ்ரிய இளவரசன், ஒரு செர்பிய இளைஞனால் ஆற்றங்கரை ஒன்றில்வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டான். அதையடுத்து ஒஸ்ரியா, ஜெர்மனியின் உதவியுடன் செர்பியா மீது போர்தொடுத்தது. செர்பியாவுக்கு உதவ ரஷ்யா வந்தது. 1914, ஜூலை 28 இல் அந்த யுத்தம் ஆரம்பமானது. ஜெர்மனியின்மீது பெரும் கோபத்துடன் இருந்த பிரான்ஸ் இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஜெர்மனியை எதிர்த்தது. இந்த நிலையில் ஜெர்மனி பெல்ஜியம் வழியாக பிரான்ஸை நோக்கி தனது படைகளை நகர்த்தியது. பெல்ஜியம் அப்போது நடுநிலமை வகித்துவந்த நாடு, எனவே ஜெர்மனி செய்தது மகாதவறு எனத்தெரிவித்துக்கொண்டு ஜெர்மனிக்கு எதிராக பிரிட்டனும் போரில் குதித்தது. ஜப்பானும் பிரிட்டனோடு சேர்ந்துகொண்டது. சீனாவும் தன் பங்கிற்கு பிரிட்டனை ஆதரித்தது. அனால் பல்கேரியா ஜெர்மன…
-
- 0 replies
- 2.4k views
-
-
வடபகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் அவசரகாலச் சட்டப் பிரமாணங்களின் கீழ் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை என சிறிலங்காவின் சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்துக்கு இன்று அறிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 306 views
-
-
மெர்சி மிஷன்-கொலரடா கப்பல் நிவாரணப் பொருட்களுன் நடுக்கடலில் தத்தளிப்பு on 28-07-2009 05:17 Published in : செய்திகள், இலங்கை இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரண பொருட்களுடன் சென்ற கொலராடோ கப்பல் தத்தளிக்கிறது - இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு, ஐரோப்பிய தமிழர்கள் உணவு, உடை, மருந்து என 884 டன் நிவாரண பொருட்களை வணங்காமண் கப்பலில் அனுப்பினர். அதை இலங்கை அரசு திருப்பி அனுப்பியது. இதையடுத்து சென்னை துறைமுகத்துக்கு வெளியில் பல நாட்கள் வணங்காமண் கப்பல் தத்தளித்தது. முதல்வர் கருணாநிதியின் நடவடிக்கையை அடுத்து, 27 கன்டெய்னர்களில் நிவாரணப் பொருட்கள் அடைக்கப்பட்டன. அவை சென்னை துறைமுகத்தில் உள்ள சிசிடிஎல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்…
-
- 0 replies
- 765 views
-
-
ஜி-15 கூட்டமைப்பின் தலைவராகும் இலங்கை செவ்வாய்க்கிழமை, ஜூலை 28, 2009, 12:51 [iST] கொழும்பு: இந்தியா உள்ளிட்ட 15 வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி 15 கூட்டமைப்பின் தலைவர் பதவியை ஏற்க இலங்கை சம்மதித்துள்ளது. முதலீடு, வர்த்தகம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பாகும் இது. இந்த அமைப்பின் தலைவர் பதவி தற்போது இலங்கை வசம் வந்துள்ளது. கடந்த 1989ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த ஜி 15 அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் நிறுவன உறுப்பினர்களில் ஒன்றாக இலங்கை உள்ளது. இந்த அமைப்பில் இந்தியா, அல்ஜீரியா, அர்ஜென்டினா, பிரேசில், சிலி, எகிப்து, இந்தோனேசியா, ஈரான், ஜமைக்கா, கென்யா, மலேசியா, மெக்சிகோ, நைஜீரியா, பெரு, செனகல், வென…
-
- 0 replies
- 573 views
-
-
தமிழ்நாடு தலைநகர் சென்னையில் சிறிலங்காவின் துணைத் தூதுவராகப் பணியாற்றி லண்டனுக்குப் பதவி உயர்வு பெற்றுச்செல்லும் அம்சாவுக்கு 'இந்து' நாளேட்டின் பிரதம ஆசிரியர் என்.ராம் வழங்கிய இராப் போசன விருந்துபசாரத்தின் முடிவில் விடுதிக்கு வெளியே காத்திருந்த தமிழ்நாடு இளைஞர்கள் அம்சா மீது தாக்குதலை நடத்தியதுடன், அவரின் காரையும் அடித்து நொருக்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 337 views
-
-
முன்னாள் ஜப்பானிய பிரதமர் இலங்கை விஜயம் வீரகேசரி இணையம் 7/28/2009 11:42:52 AM - முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஜோசுவோ பொக்குடா நேற்று இரவு இலங்கை வந்து சேர்ந்ததாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை வந்த ஜப்பானிய முன்னாள் பிரதமரை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார்.சிகிரியாவில் இன்று இடம்பெறவுள்ள அரும்பொருட் காட்சித் திறப்பு விழாவிலும் பொக்குடா கலந்து கொள்ளவுள்ளார். முன்னாள் ஜப்பானிய பிரதமர் பொக்குடா தனது இலங்கை விஜயத்தின் போது அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
-
- 0 replies
- 347 views
-
-
தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைகளுக்கும் இனச் சுத்திகரிப்புக்கும் துணை போகும் சீன அரசின் செயல்களைக் கண்டித்து, எதிர்வரும் திங்கட்கிழமை (03.08.09) அமெரிக்க வாழ் தமிழர்கள் நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 360 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த ஒருவர் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 355 views
-
-
சிறிலங்காவின் அநுராதபுர வான்படைத் தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தபோது அது தொடர்பான காணொலி காட்சிகளை கிளிநொச்சியில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உட்பட முக்கிய தளபதிகள் அதேநேரத்திலேயே பார்க்கக்கூடியவாறு நேரலையாக அனுப்பப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 491 views
-
-
வவுனியாவில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படுவோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாமில் இருந்து புலிகளின் வான் படைப் பிரிவின் தலைவர் என கருதப்படும் ஒருவரை தமது விசேடக் குழுவொன்று கைதுசெய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் விடுதலைப்புலிகளின் வான்படை குறித்து பல்வேறு ரகசியங்களை தற்போது வெளியிட்டு வருவதாகவும் காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இதனடிப்படையில் வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படுவோருடன் தங்கியுள்ள, புலிகளின் சில விமானிகளை கைதுசெய்வதற்கான விசாரணைகளை தாம் ஆரம்பித்துள்ளதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். புலிகளின் இந்த விமானிகள் கைதுசெய்யப்பட்டால்,புலிகளின
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவில் அடுத்து நடக்கவுள்ள அரச தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக புத்த பிக்கு ஒருவரை போட்டியிட வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 427 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு நாளை உதவி வழங்குகிறார் சிறிசக்தி அம்மா இலங்கையில் சிறிலங்கா இராணுவத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களை புதன்கிழமை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்குகிறார் தமிழ்நாட்டைச்சேர்ந்த வேலூர் சிறிசக்தி அம்மா. ஆன்மிக பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள வேலூர் சிறி நாராயணி பீட நிறுவனர் ஸ்ரீசக்தி அம்மா, அங்கிருந்து நேரடியாக புதன்கிழமை சிறிலங்கா சென்று உதவிகளை வழங்குவார் என்று அவர்களது செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. http://www.meenagam.org/?p=6558
-
- 0 replies
- 977 views
-
-
செங்கல்பட்டு சிறப்பு முகாமில்(சிறையில்) 6-ம் நாள் உண்ணாநிலைப்போராட்டம் தமிழகத்தில் செங்கல்பட்டு சிறப்பு முகாமில்(சிறையில்) தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ ஏதிலிகள் திங்கள்கிழமை 6-வது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமை மாலை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முத்து, சத்தியமூர்த்தி ஆகிய இருவர் மயங்கி விழுந்தனர். அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கியூ பிரிவு போலீஸாரால் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள ஈழ ஏதிலிகள் 85 பேர் செங்கல்பட்டு சிறப்புச்சிறையில்(முகாமில்) தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 63 பேர் தங்கள் மீதுள்ள வழக்குகளை உடனடியாக விசாரித்து தங்களை விடுவிக்கக்கோரி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு…
-
- 0 replies
- 407 views
-
-
மணலாறு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் நாளுக்கு முன்பாக மீள்குடியமர்வுப் பணிகள் பூர்த்தி செய்யப்படும் என்று சிறிலங்கா அரச தலைவரின் ஆலோசகரும் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 380 views
-
-
அம்பாறை மாவட்டம் கல்முனைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் தமிழர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 491 views
-
-
அரசாங்கத்துடன் ஒத்துப் போகும் அரசியற் செயற்பாட்டின் மூலம் தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டை ஒற்றுமையினூடாக வலுப்படுத்த வேண்டியது வவுனியா, யாழ்ப்பாணம் நகர, மாநகர சபைகளுக்கான தேர்தல்களில் தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த கடமையாகும் என வவுனியாவில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது உரையாற்றும் போது அக்கட்சி தெரிவித்துள்ளது. யுத்தம் முடிவடைவதற்கு முன்னால் விடுதலைப் புலிகளை அழித்து விட வேண்டுமென்ற தேவை அரசாங்கத்திற்கு இருந்தது. இந்தத் தேவையை அப்போதைய இராணுவத் தளபதி, அமைச்சர்கள் எனப் பலரும் வலியுறுத்தினார்கள். விடுதலைப் புலிகளை அழித்து விட்டால் இந…
-
- 0 replies
- 679 views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினைக் காணும் வகையில், 3 அம்சங்களை அடிப்படையாகக்கொண்ட தீர்வுத்திட்டமொன்றை தயாரிக்கும் பணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. இந்தத் தீர்வுத்திட்டம் தயாரிக்கப்பட்டதும் இலங்கை, இந்தியா மற்றும் சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறினார். தமிழ் மக்களுக்கு உரித்தான இறைமை, சுய உரிமைத் தத்துவம், தமிழ் மக்கள் தங்களைத் தாமே ஆளும் சுயாட்சிமுறை ஆகிய 3 அம்சங்களின் அடிப்படையிலேயே தீர்வுத்திட்டம் அமையுமெனவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்கத்தின் முன் தமது தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும்போது, அரசாங்கத்திற்கும், கூட்டமைப்புக்கும் இடையே ஏற்படக்கூடிய …
-
- 0 replies
- 487 views
-
-
மீன்பிடிப்பதற்கு சிறிலங்கா கடற்படையினர் விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக 90 விழுக்காடு கடற்றொழிலாளர்கள் தொழில் இன்றி வாடுகின்றனர் என்று மன்னார் கடற்றொழிலாளர் சங்கங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 342 views
-
-
சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அகதிகள் மற்றும் இடப்பெயர்வுத்துறை துணை அமைச்சர், வன்னியில் தமிழ் மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கும் சென்று நிலைமைகளைப் பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 358 views
-
-
சிறிலங்கா தரைப்படையின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் எம்.சி. மென்டக பி. சமரசிங்க நேற்று திங்கட்கிழமை தனது பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 442 views
-
-
தயான் ஜயதிலக்காவை கேள்வி கேட்கும் இன்னொரு சிங்களவர் தமிழர் இனவழிப்பை ஐ.நா வில் நியாயப்படுத்தியவனும், முன்னாள் வடக்கு கிழக்கு முதல்வர் வரதராஜப் பெருமாளின் கைக்கூலியுமான தயான் ஜயதிலக்காவிடம் ஒரு சிங்களவர் பின்வருமாறு கேள்வி கேட்டிருக்கிறார். Open Letter to HE Dr Dayan Jayatillake, Sri Lanka Ambassador in Geneva Posted on July 26th, 2009 Vipula HE Dr Dayan jayatillake, Could you please answer to the following questions (1) While you are serving as a Diplomat of Sri Lanka Government, have you communicated with RAW or any other foreign intelligence organisation, by telephone, emails or by any other means? (2) While you are serving as a D…
-
- 0 replies
- 726 views
-
-
சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்தை திரும்ப அழைத்துக்கொள்வது என்று இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது. இன்னும் இரண்டு மாதங்களுக்குள் நாடு திரும்பும்படி அலோக் பிரசாத் கேட்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காப் படையினருக்கும் இடையில் மிக மோசமான மோதல்கள் இடம்பெற்றபோது இந்தியாவின் ஆதரவை சிறிலங்கா அரசு பெற்றுக்கொள்வதில் மிக முக்கிய பங்காற்றியவர் இவர் என்று கூறப்படுகிறது. தற்போது மலோசியாவில் தூதுவராகப் பணியாற்றி வரும் அருள் பிரசாத், சிறிலங்காவுக்கான புதிய தூதுவராகப் பொறுப்பேற்பார் என்று தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. அலோக் பிரசாத்தின் காலப்பகுதி சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் மிக முக்கிய…
-
- 3 replies
- 582 views
-
-
அம்பாறையில் இன்று இரவில் ஒருவர் கடத்தல் அம்பாறை மாவட்டம் கல்முனைப்பகுதியில் இன்று ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். இன்று (27-07-2009) இரவு 7 மணியளவில் கல்முனைப்பகுதியிலுள்ள மணச்சேனை என்னுமிடத்தில் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் 43 அகவையுடைய வின்சன்ட் மத்தியூ என்பவரே கடத்தப்பட்டுள்ளார். வெள்ளைவானில் ஒன்றில் வந்த இந்த ஆயுததாரிகள் சிறிலங்கா படை புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் நிலவுகின்றது. கடத்தப்பட்டவர் உந்துருளி திருத்தும் நிலையம் ஒன்றை நடாத்துபவர் என்று மீனகம் நிருபர் தெரிவித்துள்ளார். http://www.meenagam.org/?p=6547
-
- 0 replies
- 458 views
-
-
http://www.channel4.com/news/articles/worl...+leader/3279457
-
- 0 replies
- 1k views
-
-
வவுனியாச் செய்தியாளர் கோபி 27/07/2009, 13:27 முகாம்களில் பெரும்பாலான மக்களிற்கு மனநோய் - பிரபல மருத்துவர் வவுனியா முகாம்களிலுள்ள மக்களில் பெரும்பாலாளவர்கள் மன நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, இலங்கையின் முன்னணி மனநல மருத்துவர் மகேசன் கணேசன் தெரிவித்துள்ளார். அங்கோடை மனநல மருத்துவமனையில் கடமையாற்றும் இவர், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளமை, ஆழ்ந்து கவனித்தக்கது எனவும், உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மனநோயால் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், வவுனியா மருத்துவமனையில் இதற்கென தனிப்பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் கணேசன் தெரிவித்தார். முகாமிலுள்ள 40 வீதமான மக்கள் நாள்தோறும் இந்தப் பிரிவில் சிகி…
-
- 1 reply
- 912 views
-