Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சரத் பொன்சேகாவினால் சிறைவைக்கப்பட்ட ராணுவச் சிப்பாய்கள் ராஜபக்சேவால் விடுவிப்பு விடுதலைப் புலிகளுக்கெதிரான ,இறுதிக் கட்ட போரின் போது இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று, சரத் பொன்சேகாவின் உத்தரவின் பேரில் சிறைவைக்கப்பட்ட சிப்பாய்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கெதிரான போர் உக்கிரமடைந்திருந்த காலகட்டத்தில், ராணுவத்திலிருந்து பெரும் எண்ணிக்கையிலான சிப்பாய்கள் தப்பிச் செல்வது பாரிய பிரச்சினையாக உருவெடுத்திருந்தது. இவ்வாறு ராணுவத்திலிருந்து தப்பிச் செல்வோரின் எண்ணிக்கையைத் தடுப்பதற்கு அந்நாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா இறுக்கமான ராணுவச் சட்டத்தை அமுல்படுத்தியிருந்தார். அதற்கமைய ,ராணுவத்திலிருந்த…

  2. சரத்பொன்சேகாவின் பாதுகாப்பு தீடீரெனக் குறைப்பு சிறீலங்காப் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ஜென்ரல் சரத்பொன்சேகாவுக்கான பாதுகாப்பு தீடீரெனக் குறைக்கப்பட்டுள்ளது. சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த போது அவருக்கு 500 படையினர் பாதுகாப்பை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போது சரத்பொன்சேகா பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியாக நியமனம் பெற்றதும் அவருக்கான பாதுகாப்பை வழங்க 200 படையினர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த 200 படையினரில் சரத்பொன்சேகாவை எந்நேரமும் கண்காணிக்கும் வகையில் சரத்பொன்சேகாவின் நம்பிக்கைக்கு உரிய படை அதிகாரிகளை நீக்கிவிட்டு, கோத்தபாய ராஜபக்சவின் நம்பிக்கைக்குரிய படை அதிகாரிகளும், உளவாளிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். …

  3. ‘குற்றம் சாட்டுகிறேன்’ - இந்திய துரோகத்தை அம்பலப்படுத்தும் வைகோவின் ஆவணம் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எழுதிய கடிதங்களும், அதற்கு பிரதமரின் பதில் கடிதங்களும் – வைகோநேரில் பிரதமரை சந்தித்த போது நிகழ்ந்த உரையாடல்களும், தொகுக்கப்பட்டு ‘குற்றம் சாட்டுகிறேன்’ எனும் தலைப்பில் ம.தி.மு.க. சார்பில் நூலாக வெளியிடப் பட்டுள்ளது. நூலில் அடங்கியுள்ள இந்திய துரோகத்தை அம்பலப்படுத்தும் செய்திகளின் சுருக்கமான தொகுப்பு இது. • ஜன் 4, 2005 அன்று பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்த வைகோ, இந்தியாவுக்கும், இலங்கைக்குமிடையே இராணுவ ஒப்பந்தம் ஒன்று உருவாக நடக்கும் முயற்சிகளைக் கூறி, அப்படி ஒரு ஒப்பந்தம் வருமானால் அது பெரும் கேடு என்று கூறினார். …

  4. இடம்பெயர்ந்துள்ள மக்களை அவர்களின் விருப்பத்துக்கு முரணாகத் தங்கவைப்பது நியாயமற்றது எனத் தெரிவித்திருக்கும் சிறிலங்காவின் உயர் நீதிமன்றம், அகதி முகாம்களில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதி கோரும் இடம்பெயர்ந்த மக்களை விடுவிப்பதற்கான வழிவகைகளை ஆராயுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டிருக்கின்றது. சட்டரீதியான அதிகாரம் இன்றி இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் விருப்பத்துக்கு முரணாக முகாம்களில் நீண்ட காலம் தங்கவைப்பதன் மூலம் அவர்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. வவுனியா முகாமில் உள்ள நால்வர் சார்பில் அவர்களின் உறவினர் ஒருவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நேற்று வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு எடுத்த…

  5. பிரித்தானியாவில், இன்றைய times online & Guardian online இல் 'IMF approves controversial $2.5bn Sri Lanka loan' செய்தி பிரசுரிக்கப் பட்டுள்ளது... http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6727230.ece http://www.timesonline.co.uk/tol/news/worl...t=12&page=2 http://www.guardian.co.uk/world/2009/jul/2...a-imf-loan-vote தயவு செய்து உங்கள் கருத்துக்களை அங்கே பங்கிர்ந்து கொள்ளுங்கள்.... எமக்குள்ளேயே கருத்துக்களை மாறி மாறி பகிர்வதன் மூலம் உலகத்திற்கு எடுத்துக் கூற முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து... உங்கள் வைத்தேரிச்சல்களை அங்கே கொட்டுங்கள்... நன்றி.

  6. அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் எதிர்ப்புக்களின் மத்தியில் சிறிலங்காவுக்கு 2.6 பில்லியன் டொலரை கடன் உதவியாக வழங்குவதற்கான அங்கீகாரத்தை அனைத்துலக நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு (ஐ.எம்.எஃப்) நேற்று வழங்கியுள்ளது. இந்தத் தொகையில் 322 மில்லியன் உடனடியாக வழங்கப்படும் என வாசிங்ரனில் இருந்து வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான இறுதி முடிவு வாசிங்ரனில் நேற்று வெள்ளிக்கிமை நடைபெற்ற அனைத்துலக நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. "அனைத்துலக நாணய நிதியத்தின் திட்டத்துக்கு அமைவாக தனது கொள்கையை மாற்றிக்கொள்வதில் சிறிலங்கா அரசுக்கு உள்ள பற்றுறுதி மற்றும் அதன் இயலுமை தொடர்பான மதிப்பீட்டின் அடிப்படையிலே…

  7. செய்தியாளர் கயல்விழி 25/07/2009, 12:05 6 மாதங்களில் ஊடகவியலாளர்கள் 59 பேர் படுகொலை இலங்கை உட்பட பல நாடுகளில் கடந்த 6 மாதங்களில் ஊடகவியலாளர்கள் 59 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2008ஆம் முதல் 6 மாதங்களில் 45 பேர் கொல்லப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள தொகை அதிகரித்துள்ளது. பி.இ.சி எனப்படும் “ஊடக அடையாளப் பரப்புரை” என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. • பாகிஸ்தானில் 6 பேரும், • ஈராக், பிலிப்பைன்ஸ், ரஸ்யா, மற்றும் சோமாலியாவில் 5 பேரும், • காசா, ஹொண்டுராசில் 4 பேரும், • கொலம்பியாவில் 3 பேரும், • இலங்கை, ஆப்கானிஸ்தான், …

  8. எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் வாக்குகளைச் சேகரிக்கும் நோக்குடன் தீவிரவாதம் தொடர்பான விடயங்களில் மென்போக்கு கடைப்பிடிக்கப்படமாட்டாது என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச திட்டவடட்மாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 451 views
  9. யாழ். மாநகரசபை தேர்தலின் போது வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிப்பது இடம் பெயர்ந்து வதைமுகாம்களில் கம்பி வேலிகளுக்குள் சிக்கி இருக்கும் எமது மக்களுக்கு கொள்ளிவைப்பதாகவே அமையும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெவித்தார். யாழ்ப்பாணம் த்திரைச்சந்தியில் நேற்று ன்தினம் மாலை இடம் பெற்ற மாநகரசபை தேர்தலுக்கான பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெவித்தார். இந்த பிரசாரக்கூட்டத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, பத்மினி சிதம்பரநாதன், தன்மை வேட்பாளர் ரெமிடியாஸ், உட்பட பலரும் கலந்து கொண்டனர். இங்கு உரையாற்றிய சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. மேலும் கூறியதாவது: வன்னியில்…

  10. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு மற்றும் நான்கு முக்கிய நகரங்களிலும் உள்ள தமது தூதரகங்களை மூடிவிடுவதற்கு சுவீடன் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுவீடன் நாட்டின் வெளிவிகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டைச் சமப்படுத்தும் நோக்கத்துடனேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் சுவீடன் அரசு தெரிவித்திருக்கின்றது. சுவீடன் அரசு எடுத்துள்ள தீர்மானத்தின்படி கொழும்பில் உள்ள அதன் தூதரகத்தை மூடும் பணிகள் 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் நாள் பூர்த்தியாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்காவுக்கு சுவீடன் வழங்கும் அபிவிருத்திக்கான நிதி உதவிகளைப் பொறுத்தவரையில் 2007 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தீர்மானமே நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பிலுள்ள த…

  11. கொழும்பில் இரு தமிழ் இளைஞர்கள் கைது சிங்கப்பூரிலிருந்து இலங்கை வந்த இரு தமிழ் இளைஞர்களை சீதுவ போலீசார் கடந்த வியாழக்கிழமை கைது செய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய இந்த இரு இளைஞர்களும் தமது இடம் நோக்கி வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது சீதுவ சோதனைச்சாவடியில் சோதனைக்காக நின்றபோதே போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரிடமும் பலவகையான டிஜிட்டல் கமெராக்களும் கைத்தொலைபேசிகளும் இருந்ததாகக் கூறும் போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகக் கூறுகிறார்கள். இவர்களுக்கும் பயங்கரவாத குழுக்களும் தொடர்புள்ளதா என விசாரணைகள் நடத்துவதாக போலீசார் மேலும் கூறியுள்ளனர். http://www.meenagam.org/?p=6378

  12. ஈழமக்களை காக்கக்கோரி தமிழகத்தில் கையெழுத்து இயக்கம் சித்ரவதை முகாம்களில் சிக்கியுள்ள 3 லட்சம் ஈழத்தமிழரை அவர்களது வாழ்விடங்களில் உடனே மீண்டும் குடியமர்த்தக் கோரியும், இரக்கமற்ற போர்க்குற்றவாளிகள் ராஜபக்சே சகோதரர்களைக் கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரியும் தமிழகம் தழுவிய கையெழுத்து இயக்கத்தை சட்டவல்லுநர்கள் தொடங்கியுள்ளனர். இதன் முதற்கட்டமாக கோயம்புத்தூர் நகர பேருந்து நிலையம் முன்பாக இக்கையெழுத்து இயக்கம் தொடங்கியது. இதனை கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள், கோவை வழக்குரைஞர்கள் மற்றும் மனித நேயத்திற்கான மாணவர் அமைப்பு ஆகியோர் முன்நின்று நடத்துகிறார்கள். சட்டக்கல்லூரி மாணவர்கள் தொல்காப்பியன், பஞ்சலிங்கம், இளையராஜா, குமார் மற்றும் வழக…

  13. சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள பேருவளையில் இரண்டு முஸ்லிம் குழுக்களிடையே நேற்று இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், ஒன்பது போர் வரையில் படுகாயமடைந்துள்ளனர். முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றும் இச்சம்பவத்தில் தீவைத்து எரிக்கப்பட்டது. பேருவளைப் பகுதியில் உள்ள குறிப்பிட்ட இரு முஸ்லிம் மதக்குழுக்களிடையேயும் நீண்ட காலமாக பகைமை நிலவி வந்துள்ளது. இந்தப் பகைமை நேற்று வெள்ளிக்கிழம இரவு மோதலாக வெடித்து பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட ஒரு மதப்பிரிவினருக்குச் சொந்தமான பள்ளிவாசல் மற்றைய மதப் பிரிவினரால் எரிக்கப்பட்டது. இதன்போது இடம்பெற்ற மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஒன்பது பேர் காயமடைந்து மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டனர். …

    • 0 replies
    • 452 views
  14. முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்து அவர்களின் மூதாதையர்கள் வாழ்ந்த சொந்த ஊரில் குடியமர்த்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை பான் கி மூன் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபைதான் செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய முடியவில்லை என்றால் ஒட்டுமொத்தமாக பிரகடனப்படுத்தி தமிழ் மக்கள் அனைவரையும் படுகொலை செய்து விடுங்கள் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 268 views
  15. Started by senthil5000,

    செங்கல்பட்டிலேயே ஒரு வதைமுகாம். மக்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம். CHENNAI: More than 60 inmates of Chengalpattu Sri Lankan refugee camp in Kancheepuram district on Wednesday went on an indefinite hunger strike demanding their immediate release. Most of the inmates, in 20s and 30s, have been languishing in the camp for more than three years. They have been picked by the Q branch for trying to smuggle consignments to LTTE and some on the basis of suspicion. This is the 20th time the inmates are on a hunger strike. “This time we are going on an indefinite fast,” the inmates said, handing out a signed copy of the list of detainees in the camp. …

    • 0 replies
    • 483 views
  16. வன்னியில் முட்கம்பிவேலிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகள் எதிர்பார்க்கப்பட்டதைவிட மேலும் தாமதமாகும் என்று சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். ஆறு மாத காலப்பகுதியில் மக்கள் அனைவரும் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவார்க

    • 0 replies
    • 330 views
  17. வெலிக்கடை சிறையில் இருந்து வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் கைதிகள் திரும்பி வரும்போது சிறை அதிகாரிகளால் துகிலுரியப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்படும் குற்றசாட்டு தொடர்பில் சிறிலங்காவின் நீதி அமைச்சின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கவனத்தில் எடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 313 views
  18. தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் மீண்டும் புத்துயிர் பெறுவதற்குகான சாத்தியங்கள் ஏதும் இல்லை என்று சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 353 views
  19. அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஜே.வி.பி. இதுவரை கொண்டிருந்த கடுமையான நிலைப்பாட்டைக் கைவிட்டுவிட்டது என்று வெளியான செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அவையெல்லாம் வெறும் வதந்திகள் என்றும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 280 views
  20. மடு மாதா பெருநாளுக்கு வரவுள்ள பக்தர்கள் மீதான சோதனை கெடுபிடிகள் குறைப்பட வேண்டும் என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 309 views
  21. வன்னியில் சிறிலங்காப் படையினரால் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் சிறைக் கைதிகள் போன்றே நடத்தப்படுகிறார்கள் என்று இந்தியாவின் புகழ்பெற்ற புலனாய்வு இணையத் தளமான 'தெகல்கா' தெரிவித்துள்ளது. முகாம்களில் உள்ள மக்கள் தொடர்பாக அந்த இணையத் தளம் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய பகுதிகள்: முகாம்களில் மக்கள் சிறைக் கைதிகள் போன்று நடத்தப்படுகிறார்கள் என்று ஆர்.சுமதி கூறுகிறார். நலன்புரி முகாம்களில் தொண்டராகச் சிலநாட்கள் பணியாற்றியவர் அவர். படையினரின் முட்கம்பி வேலிகளுக்குள் வாழும் மக்களின் வேதனைகளையும் ஆதரவற்றவர்களின் நிலையையும் பெற்றோரை இழந்து அநாதைகளாகி நிற்கும் குழந்தைகளின் வேதனையையும் அவர் விவரித்தார். வன்னியில் நடைபெற்ற இறுதிப்…

    • 0 replies
    • 420 views
  22. போரால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடபகுதியைப் புனரமைப்பதற்கு இந்தியா உதவவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. வடக்கில் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்படவுள்ள கட்டுமானப் பணிகளில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். பொது மற்றும் தனியார் கட்டுமானங்கள் இதன் கீழ் புனரமைக்கப்படும். புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு இரண்டையும் உள்ளடக்கியதாக இந்தியாவின் உதவிகள் அமைந்திருக்கும் என்று சிறிலங்காவின் கட்டுமான மற்றும் பொறியியல் அமைச்சு நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்னிலையில் கடந்த புதன்கிழமை இது தொடர்பிலான ஒப்பந்தம் அமைச்சின் கட்டுமானப் பிரிவிற்கும் இந்தியாவின் கட்டுமான தொழில்துறை அபிவி…

    • 0 replies
    • 338 views
  23. ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர்களால் சேகரிக்கப்பட்டு 'வணங்கா மண்' என்ற கப்பல் மூலம் வன்னியில் உள்ள உறவுகளுக்காக என அனுப்பிவைக்கப்பட்ட 840 தொன் எடையுள்ள அத்தியாவசியப் பொருட்கள் சிறிலங்கா மற்றும் இந்திய அதிகாரிகளின் திட்டமிட்ட அலட்சியப் போக்கினால் கொழும்பு துறைமுகத்திலேயே கிடந்து பழுதடைவதாகத் தெரியவந்திருக்கின்றது. கொழும்பு துறைமுகத்துக்கு 27 கொள்கலன்களில் கொண்டுவரப்பட்ட இந்த நிவாரணப் பொருட்கள் சிறிலங்கா சுங்கப் பிரிவில் இருந்து வெளியே கொண்டுவரப்படாமல் கடந்த ஒரு மாத காலமாகத் தேங்கிக் கிடக்கின்றது. இந்த பொருட்களை வெளியே கொண்டுவந்து வவுனியா முகாம்களில் உள்ள மக்களுக்கு விநியோகிப்பதற்காகு இந்தியத் தூதரகத்தின் தலையீட்டை, சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கம் கோரிய…

    • 0 replies
    • 338 views
  24. சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள லேக் ஹவுஸ் ஊடக நிறுவனத்தினால் வெளியிடப்படும் சிங்கள வார ஏடான 'சிலுமின'வில் கடந்த வாரம் வெளிவரவிருந்து கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி சரத் பொன்சேகாவின் நேர்காணல் இறுதி நேரத்தில் மேலிட உத்தரவைத் தொடந்து நீக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இதனால் சரத் பொன்சேகா பெரும் அதிருப்தியடைந்திருக்கின்றா

    • 0 replies
    • 530 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.