ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்றுப் பகுதியில் மதுபானக் கடை ஒன்றில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்நாள் புதன்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மதுபானக் கடை மீது அடையாளம் தெரியாத இளைஞர் குழு ஒன்று இரண்டு கைக்குண்டுகளை வீசித் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்திருக்கின்றது. இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுபானங்களுக்கான அனுமதிப்பத்திரம் தொடர்பாக இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே இந்தக் கைக்குண்டுத் தாக்குதல் இடம்பெற்றிருக்க வேண்டும் என காவல்துறையின் விசாரணைகளில் தெரியவந்திருக்கின்றது. புதினம…
-
- 0 replies
- 360 views
-
-
மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு சிறிலங்கா அரசு பதிலளிக்கும் வரையில் அந்த நாட்டுக்கு அனைத்துலக நாணய நிதியம் கடன் உதவிகள் எதனையும் வழங்கக்கூடாது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. போருக்குப் பின்னரான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரையில் உறுப்பு நாடுகள் சிறிலங்காவுக்கு ஆதரவளிக்கக்கூடாது மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கோரிக்கை விடுத்திருக்கின்றது. இது தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: "போர் முடிவடைந்த பின்னரும் 2 லட்சத்து 80 ஆயிரம் அப்…
-
- 0 replies
- 333 views
-
-
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 1,815 பேருக்கு பொது மன்னிப்பை வழங்கி அவர்களை மீண்டும் இராணுவச் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெலிக்கடைச் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் திங்கட்கிழமை விடுவிக்கப்படுவார்கள். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 351 views
-
-
யாழ்ப்பாண மாநகரசபைக்கு அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தேர்தல் பணிகளுக்காக தென்னிலங்கையிலிருந்து 80 சிங்கள தேர்தல் அதிகாரிகளை அனுப்பிவைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இதன் மூலம் தேர்தலில் மேசடிகள் இடம்பெறக் கூடிய வாய்ப்புக்கள் உருவாகியிருப்பதாகவும் எச்சரித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 318 views
-
-
திருப்பூர் மங்கலம் சாலை கருவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி (71). இயற்கை வாழ்வகம் நடத்தி வரும் இவர் பொது நலம் கருதி தவம் இருப்பதை தனது வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டிருக்கிறார். தமிழீழ மக்கள் நன்றாக வாழ வலியுறுத்தியும் உலக அமைதிவேண்டியும், அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை என தினந்தோறும் 2 மணி நேரம் தவ வேள்வி நடத்தி வருகீறார். இது குறித்து அவர் கூறுகையில்: அரசர் காலத்திலேயே வன்முறைகளை அருளாளர்கள் அன்பினால் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்படி தூய காற்றுவரும் நேரமான அதிகாலை தமிழீழ மக்கள் நலம் பெற இந்த தவத்தைத் தொடர்ந்து மேற்கொண்டுள்ளேன். தமிழீழம் அமையும் வரையோ அல்லது தனது இறுதி மூச்சு அடங்கும் வரையோ இந்த தவத்தை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தார். தென் செய்தி
-
- 1 reply
- 1.1k views
-
-
கறுப்பு ஜூலை நினைவாக ஓவியர் புகழேந்தியின் "உயிர் உறைந்த நிறங்கள்' என்னும் தலைப்பில் தமிழீழத்தின் ஒரு இரத்தப் பதிவு ஓவியங்களாக தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற
-
- 1 reply
- 548 views
-
-
பஸ்களில் யாழ்ப்பாணம் செல்ல அனுமதியில்லை - பிரிகேடியர் நாணயக்கார தகவல் வீரகேசரி நாளேடு 7/23/2009 9:38:15 PM - ஏ9 வீதியூடாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணிப்பதற்கான அனுமதி இதுவரையில் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படவில்லை. இந்நிலையில் கொழும்பிலிருந்து யாழ்.நோக்கிப் பயணிப்பவர்கள் உள்ளூர் விமான சேவையூடாகவோ அல்லது கப்பலூடாகவோதான் பயணிக்க வேண்டும் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். வெகு விரைவில் ஏ9 வீதியூடாக கொழும்பிலிருந்து யாழ்.செல்வதற்கான அனுமதி பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் ஏ…
-
- 1 reply
- 649 views
-
-
-
தெளிவாகத் திட்டமிடும் சிங்களம்; குழம்பிப் போயிருக்கும் தமிழினம்; இனி நாம் என்ன செய்யப் போகின்றோம்??? என்ன செய்வது என்று தெரியாத நிலையில் குழம்பிப் போயிருக்கும் தமிழர்கள், அடுத்த கட்ட நகர்வுகளை செய்தேயாகவேண்டும் என்ற கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் தங்களுக்குள்ளேயே குழம்பமடைந்து கொண்டும், கருத்துப் பிளவடைந்து கொண்டும் சிலபேர் மனமுடைந்தும் இருப்பதை கண்ணூடாகக் காணமுடிகின்றது. நமக்குள் ஏன் இந்தக் குழப்பம்? ஏன் இந்தக் கருத்து வேறுபாடு ?? ஏன் இந்த மனமுடைவு??? நாம் செய்யவேண்டிய கடமைகள் மலைபோல் குவிந்து காத்திருக்கின்றன. ஆனால் நாமோ... நொடிந்துபோய் உட்கார்ந்திருக்கின்றோம். சிங்களம் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு தனது அடுத்த கட்ட நடவடிக்கைகளை படிமுறைப்…
-
- 1 reply
- 938 views
-
-
மடு உற்சவத்துக்கு செல்லும் பக்தர்களின் விபரங்கள் கணனி மயப்படுத்தப்படும் - பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு வீரகேசரி நாளேடு 7/23/2009 11:23:28 PM - மன்னார் மடு திருத்தல உற்சவம் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள நிலையில் அங்கு செல்லவிருக்கும் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான நடவடிக்கைகளை பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. இதன் பிரகாரம் மடு உற்சவத்துக்கு செல்லும் பக்தர்கள் பாதுகாப்பு தரப்பினரால் பதிவுக்கு உட்படுத்தப்படுவதோடு அந்தப் பதிவினைக் கணனிமயப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் தலைமையகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; …
-
- 0 replies
- 307 views
-
-
தற்போது நடைபெறப்போகும் யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை தேர்தர் பிரச்சாரங்கள் களைகட்ட தொடங்கியுள்ளது தமிழர்களாகிய நாம் இந்த தேர்தலை எப்படி முகம்கொடுக்கப்போகின்றோம் என்பதைபற்றி பலதரப்பிலிருந்தும் பலவாறான கருத்துக்கள் நிலவிவருகின்ற இன்றைய சூழலில் ஓர் தீர்க்கமான முடிவினை அனைவரும் எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பேரினவாத கட்சிகளாலும் அவற்றுக்கு முண்டுகொடுக்கும் தமிழ் தேசவிரோத சக்திகளின் பிரச்சார நடவடிக்கைகளை நோக்குகின்றபோது தமிழ்மக்களால் நடாத்தப்பட்ட மூன்றுசதார்ப்பதகாலமான போராட்டத்தின் அர்த்தமோ அதற்கான விலையினையோ கொச்சசைப்படுத்துவதாகவே உள்ளது .யாழ்,வவுனியா நகரில் சிலஇடங்களில் பேரினவாத சக்திகளிடம் பணத்தைபெற்றுகொண்டு வெற்றிலைக்காக கூலிக்குமாரடிக்கும் சிலரை …
-
- 0 replies
- 732 views
-
-
இலங்கையைச் சேர்ந்த ஒருவர் போலியான விபரங்களை உள்ளடக்கி தாம் ஒரு இந்தியர் என்ற ரீதியில் எடுக்கப்பட்ட போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்திப் பெற்ற வீசாவுடன் பிரித்தானியா நாட்டுக்கு செல்ல முயன்றபோது பெங்களூர் சர்வதேச விமான்நிலையத்தில் வைத்து நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வாழைச்சேனாபட்டி என்ற இடத்தைச் சேர்ந்த ரத்னம் நிக்ஷன் (33) என்ற இவர் மாங்குடி, சென்னையைச் சேர்ந்த தாசன் என்ற பெயரில் கடவுச்சீட்டு வைத்திருந்தார் என இவரைக் கைது செய்த குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் கூறுகிறார்கள். இவரின் கடவுச்சீட்டு மாங்குடி, திருச்சிராப்பள்ளியில் எடுக்கப்பட்டதாகவும் 2015 வரை இது செல்லுபடியாகும் என்று கூறிய அதிகாரிகள் லண்டன் செல்வதற்கான வீசா கடந்த ஜூலையுடன் காலாவதியாக…
-
- 0 replies
- 742 views
-
-
தனது மனைவியின் சம்மதத்துடன் யாழ்ப்பாணப் பெண்ணொருவரைத் தான் திருமணம் செய்யவுள்ளதாக அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே சபையில் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இடம்பெயர்ந்த அகதிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றுகையில் தமிழ் கூட்டமைப்பு எம்.பி.ஸ்ரீகாந்தாவுக்கே இவ்வாறு கூறினார். அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது: நான் யாழ்ப்பாணத்துக்கு இப்போது அடிக்கடி சென்று வருகின்றேன். அங்கு நான் பட்டு வேட்டியுடன் நான் நடமாடினேன். நான் ஒரு அமைச்சராகவன்றி சாதாரணமான ஒருவராகவே மக்களுடன் பழகினேன். இதன்போது தமிழ் கூட்டமைப்பு எம்.பி.ஸ்ரீகாந்தா ஏதோ குறுக்கிட்டுக் கூறினார். அமைச்சர் தொடர்ந்து கூறுகையில்: உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.…
-
- 1 reply
- 761 views
-
-
தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் என்றழைக்கப்படும் கருணா தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக அவரது மனைவி வித்தியாவதி தெரிவித்துள்ளார். கருணாவின் மனைவியும் மூன்று குழந்தைகளும் சில வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் வசித்து வந்தனர், தற்போது ஸ்கொட்லாந்தில் வசித்து வருகின்றனர். ஊடக தர்மத்தின் அடிப்படையில் அவரது மனைவி வழங்கிய நான்கு மணி நேர செவ்வியையும் பிரசூரிக்க முடியாது என பிரபல ஆங்கில இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் மக்களின் தலைவராக அவர் எவ்வாறு மாறினார் என்ற அடிப்படையை அடியோடு மறந்து விட்டார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். குடும்ப பிரச்சினைகளைக் கூட கதைக்க முடியாத அளவிற்கு அவர் குழப்பமான சூழ்நிலையில் காணப்படுவதாக தெரிவி…
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கைக்கு உதவ வேண்டாம்-எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு சீமான் எச்சரிக்கை வியாழக்கிழமை, ஜூலை 23, 2009, 17:43 [iST] சென்னை: சிங்களர்களை வளப்படுத்துவதற்காக தமிழக நிலங்களை மேம்படுத்த எம்.எஸ்.சுவாமிநாதனைப் பயன்படுத்த இலங்க முயல்கிறது. எனவே எம்.எஸ்.சுவாமிநாதன் இலங்கை செல்லக்கூடாது. மீறி அவர் சென்றால் சென்னையில் உள்ள சுவாமிநாதனின் வீடு மற்றும் அவரது அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று இயக்குநர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் சீமான் பேசியதாவது: இலங்கை அரசு வடக்கில் வசந்தம் என்ற பெயரில் குழு ஒன்றை அமைத்து பாதிக்கப்பட்ட தமிழர்களை மீண்டும் அவர்களது பூர்வீக பகுதியில் குடியமர்த்தப் போவதாக கூறி உள்ளது. ஆனால்…
-
- 0 replies
- 578 views
-
-
அகதி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் மிகவும் ஆடம்பரமான உணவு வகைகளையே உட்கொள்வதாகத் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். அகதிகளின் நிலைமை குறித்து ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க ஏழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அகதி முகாம்களில், சீஸ், பிஸ்கட், கொகாகோலா, ஸ்பிரைட் மற்றும் ஏனைய ஆடம்ப உணவு வகைகள் விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அகதி முகாம்களில் உள்ள கடைகளில் நாளாந்தம் 500,000 ரூபா வருமானமாக ஈட்டப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூலம் - GTN
-
- 1 reply
- 630 views
-
-
சென்னை செங்கல்பட்டில் ஈழ அகதிகளுக்கான சிறப்பு முகாம் ஒன்று உள்ளது. 1993 ஆம் ஆண்டு இம்முகாம் தொடங்கப்பட்டது. தமிழீழ மக்களுக்கான அரிசி, பருப்பு உள்ளிட்ட இன்றியமையாப் பொருட்களும் மருந்துகளும் அனுப்ப முயன்றாதாக “குற்றம்”சாட்டப்பட்டவர்கள் உட்பட சுமார் 85 பேர் இம்முகாமில் தற்பொழுது அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள வதை முகாம் இது என்றும், சிங்களர்களை விட இங்குள்ள தமிழ்நாட்டு அரசு தங்களைக் கொடுமையாக நடத்துவதாகவும் முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் வேதனையுடன் கவலைத் தெரிவித்து இது குறித்து நமக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். பிணையில் சிறையிலிருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தாலும் கூட, தமிழக அரசு சிறையிலிருந்;து வெளிவந்தவர்களை வெளியில் விடாமல் தனி முகாமிட…
-
- 1 reply
- 410 views
-
-
ஊடக அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது சிறிலங்கா அரசு – ரணில் விக்ரமசிங்க குற்றச்சாட்டு இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள் பல்வேறு வழிகளில் ஊடகங்களை நசுக்க முற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகப் பேரவையை மீளவும் செயற்படுத்துவதற்கு அரசாங்கம் காட்டி வரும் அக்கறை ஏற்றுக்கொள்ள முடியாததொன்றென குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க ஊடகப் பேரவை சட்ட மூலம் இந்த நாட்டு ஊடகவியலாளர்களை மேலும் அடக்குமுறைக்கு உட்படுத்தும் என பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஊடகப் பேரவை சட்ட மூலத்தை மீள அறிமுகப்படுத்துவதன் மூலம் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அடக்குமுறைக்கு உட்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இது எதிர…
-
- 0 replies
- 351 views
-
-
சிறிலங்காவிக்கு கடன் வழங்கக் கூடாது – மனித உரிமை கண்காணிப்பகம் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய பதில் அளிக்கப்படும் வரையில் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்கக் கூடாது என மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. யுத்தத்திற்கு பின்னர் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரையில் உறுப்பு நாடுகள் இலங்கைக்கு அதரவளிக்கக் கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் எதிர்வரும் 24ம் திகதி விசேட வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தம் முடிவடைந்த பின்னரும் 280000 அப்பாவி தமிழ் பொதுமக்களை அரசாங்கம் முகாம்களில் தடுத்து வைத்திருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. …
-
- 0 replies
- 381 views
-
-
அம்பாறையில் 13 அகவையே ஆன சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை அம்பாறை மத்தியமுகாம் 4ம் கொலனிப் பகுதியில் பாடசாலை மாணவியொருவர் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக அறியப்படுகிறது. 4 ஆம் கொலனி வாணி வித்தியாலய 7 ஆம் வகுப்பு மாணவி மோகன் மனோதுஸ்டிகா (வயது 13) இவ்விதம் குருரமான முறையில் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. அவர் சம்பவதினம் முட்டை விற்பதற்காக அருகிலுள்ள சிங்களக் கிராமமான 3 ஆம் கொலனிக்குச் செய்றுள்ளார். வரும் வழியில் இச்சம்பவம்இடம்பெற்றுள்ளது. மத்தியமுகாம் பொலிசார் தற்போது விசாரணை நடாத்தி வருகின்றனர். சடலம் அம்பாறை வைத்திய…
-
- 0 replies
- 732 views
-
-
எவ்வித இடர் வரினும் இலட்சியப் போர் தொடர உறுதி கொள்வோம் – சுவிஸ் தமிழர் பேரவை “இலட்சியத்தால் ஒன்றுபட்ட எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கி விட முடியாது என்ற எங்கள் அழியாச்சுடர் தேசியத்தலைவர் அவர்களின் இலட்சிய மொழியை நெஞ்சில் நிலைநிறுத்தி தாயகத்தில் வாழும் உறவுகளுக்காக ஒன்றுபடுவோம். தமிழினத்தின் உரிமைகளுக்காக மானிடம் சுடரும் விடுதலைக்காய் ஒன்றிணைவோம்” என சுவிஸ் தமிழர் பேரவை அழைப்பொன்றை விடுத்துள்ளது. இவ் அமைப்பு விடுத்த அழைப்பு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : உறுதியும், விடுதலை வேட்கையும் தாயகப்பற்றும் கொண்ட சுவிஸ்வாழ் மக்களே, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தி வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர் மட்டத் த…
-
- 0 replies
- 400 views
-
-
http://www.hrw.org/en/news/2009/07/22/sri-...-condone-abuses
-
- 0 replies
- 599 views
-
-
கொழும்புச் செய்தியாளர் மயூரன் 23/07/2009, 10:44 அவுஸ்திரேலிய குடியவரவு அமைச்சர் கொழும்பில் அவுஸ்திரேலிய குடியவரவு அமைச்சர் கிறிஸ் இவான்ஸ் நேற்றிரவு கொழும்பை சென்றடைந்துள்ளார். அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அது பற்றிப் பேச்சு நடத்தவே இவர் கொழும்பு சென்றுள்ளார். அத்துடன்இ வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பாகவும் இவர் சிறீலங்கா அரசுடன் பேச்சு நடத்துவார் எனக் கூறப்பட்டுள்ளது. பதிவு
-
- 0 replies
- 419 views
-
-
செய்தியாளர் கயல்விழி 23/07/2009, 10:21 மகிந்த ஆட்சியில் 34 ஊடகவியலாளர்கள் படுகொலை - படுகொலைப் பட்டியல் இணைப்பு சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் 34 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக, “இலங்கையின் சனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பு” கண்டனம் தெரிவித்துள்ளது. 2004ஆம் ஆண்டு சிறீலங்கா பிரதமராகப் பதவியேற்ற மகிந்த, 2005ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சிறீலங்கா அதிபராகப் பதவியேற்றிருந்தார். அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டத்தானம் தமிழ் வானொலியின் மட்டக்களப்புச் செய்தியாளர் ஜி.நடேசன் 2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டது முதல் இதுவரை தர்மட்ணம் சிவராம், புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி உட்பட 34 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்…
-
- 0 replies
- 568 views
-
-
யாழ் செய்தியாளர் சிறீதரன் 23/07/2009, 10:28 வவுனியா, யாழ் தேர்தல் முடிந்ததும் ஏ-9 வீதி மூடப்படும் வவுனியா நகரசபை, மற்றும் யாழ் மாநகசபைத் தேர்தலை முன்னிட்டு ஏ-9 நெடுஞ்சாலையை சிறீலங்கா அரசாங்கம் பொதுமக்கள் பாவனைக்குத் திறந்துள்ளது. கப்பலில் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட இருந்த மக்களில் ஒரு தொகுதியினர் நேற்று காலை திடீரென ஏ-9 வீதியூடாகக் கொழும்பிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இருந்து 5 பேரூந்துகளில் 210 பயணிகள் மதவாச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகரசபைத் தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள துணைப்படை ஈ.பி.டி.பி குழுவின் தலைவரும் அ…
-
- 0 replies
- 458 views
-