Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. குருந்தூர் மலையினை தமது புராதன மதஸ்த்தலம் என்று நிறுவும் பல்கலைக்கழகங்கள் இலங்கையின் ஐந்து பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் இணைந்து குருந்தூர் மலை தொடர்பான பெளத்த சிங்கள வராலாற்று ஆராய்ச்சிகள் என்கிற பெயரில் உத்தியோகபூர்வ ஆவணம் ஒன்றை வெளியிட்டிருக்கின்றன. கொழும்பில் இடம்பெற்ற இந்த ஆவண வெளியீட்டு நிகழ்வில் அதி தீவிர சிங்கள பெளத்த இனவாதிகளும், முன்னணி இனவாதப் பிக்குவான எல்லே குணவன்ச போன்றோருடன் குருந்தூரை ஆக்கிரமித்து நிற்கும் பிக்குகள் குழுவும் முன்னாள் நல்லிணக்க அரசின் ஜனாதிபதி மைத்திரியும் கலந்துகொண்டிருந்தனர்.

  2. மட்டக்களப்பில் 29 மாணவிகளை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் - நீதிமன்ற எடுத்துள்ள அதிரடி முடிவு! Vhg ஆகஸ்ட் 01, 2023 மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பிரதேசத்திலுள்ள பெண்கள் உயர்தர பாடசாலையொன்றில் ஆங்கிலபாட ஆசிரியர் ஒருவர் 29 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டுப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணை நேற்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆரம்பமானது. மட்டக்களப்பு மேலதிக நீதிபதியும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியுமான எஸ்.அன்வர் சாதாத் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகவில்லை. சந்தேகநபர் தானே வழக்கைப்பேச அனுமதிக்குமாறு நீதிபதியைக்கோரிய போது சட்டத்தரணியை நியமிப்பதற்க…

  3. Published By: DIGITAL DESK 3 05 AUG, 2023 | 11:43 AM ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா சென்றபோது பிரதமர் மோடி 13 தொடர்பில் கூறியது அவருக்கு நன்கு விளங்கியிருக்கும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை (04) யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் அவர்களால் அனுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 வது திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போது அவரது உரை எவ்வாறு இருக்கும் என ஊடகவியலாளர் விக்னேஸ்வரனிடம் கேள்…

  4. 1800 மில்லியன் ரூபா செலவில் தலைமன்னார் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளது. இலங்கை – இந்திய கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பதற்காக தலைமன்னார் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளது. 37 வருடங்களின் பின்னர் 1800 மில்லியன் ரூபா செலவில் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை, விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. புனரமைக்கப்படவுள்ள தலைமன்னார் இறங்குதுறையை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று சென்று பார்வையிட்டார். https://thinakkural.lk/article/266876

  5. சீனாவின் அடுத்த இராணுவதளம் இலங்கையிலேயே உருவாகும் என அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வேர்ஜீனியாவின் வில்லியம் மேரி கல்லூரியின் எய்ட்டேட்டா ஆய்வகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. நுகர்வோர் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் எண்ணெய் தானியங்கள் மற்றும் அரிய உலோகங்கள்; இறக்குமதி போன்றவற்றில் சர்வதேச வர்த்தகத்தை பாதுகாக்க துறைமுகம் துறைமுக கட்டமைப்பை நிறுவுவதில் சீன வணிக நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள அதிக முதலீட்டை அடிப்படையாக வைத்து ஆய்வினை மேற்கொண்டுள்ள இந்த ஆய்வகம் சீனாவின் அடுத்த வெளிநாட்டு துறைமுகம் இலங்கையில் அமையலாம் என தெரிவித்துள்ளது. உலகளாவிய அபிலாசைகளை பாதுகாத்தல் -சீனாவின் துறைமுக தடம் மற்றும் எதிர்கால வெளிநாட்டு கடற்படை தளங்களுக்கான தாக்கங்கள் எ…

  6. உள்ளூராட்சி, மாகாண மற்றும் பாராளுமன்ற மட்டத்திலான தொகுதிகளை மீள் நிர்ணயம் செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ஒத்திவைக்கப்பட்ட தேர்தல்களில் ஒன்று செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். உலக ஜனநாயக தினம் செப்டெம்பர் 15ஆம் திகதி அனுசரிக்கப்படுகிறது. “உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவது நாட்டின் ஜனநாயகம் தொடர்பான பிரச்சினையாகும்” என தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபை அல்லது உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், மாகாண சபைகளை ஆளுநர்களின் கீழ் நிர்வகிப்பதும், உள்ளூராட்சி சபைகளை ஆணையா…

  7. 07 AUG, 2023 | 03:25 PM (எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் அதிக வறட்சியான காலநிலை காரணமாக நான்கு மாகாணங்களை சேர்ந்த சுமார் 90ஆயிரம் பேர் வரை பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் சப்பரகமுவ, கிழக்கு, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களுக்குரிய 18 பிரதேச செயலக தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 27ஆயிரத்து 885 குடும்பங்களைச் சேர்ந்த 89ஆயிரத்து 485 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதிக பாதிப்புக்குள்ளாகி இருப்பது யாழ்ப்பாணம் மாவட்டமாகும் என மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. யாழ். மாவட்டத்தில் 5பிரதேச செயல…

  8. Published By: DIGITAL DESK 3 07 AUG, 2023 | 03:00 PM குச்சவெளி பகுதியில் உள்ள கல்மலையை உடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை (07) காலை குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, மலையை உடைப்பதற்கு எதிரான வாசகங்களை ஏந்தியவாறு மக்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநருக்கும் மகஜர் ஒன்றும் வழங்கபட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். https://www.virakesari.lk/article/161799

  9. 07 AUG, 2023 | 02:46 PM யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படையின் சோதனை நடவடிக்கையின் போது, 54 கிலோ 300 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இருவர் தப்பியோடியுள்ளனர். கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, கஞ்சாவை மீட்டுள்ளதுடன், கிளிநொச்சி தர்மபுரம் பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட இளைஞனையும், மீட்கப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை பொலிசாரிடம் கடற்படையினர் கையளித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளத்துடன், தப்பிச…

  10. 07 AUG, 2023 | 12:36 PM (துரைநாயகம் சஞ்சீவன்) அரச காணியை பெறுவோர் நடைமுறையில் உள்ள அரச காணிச் சட்டங்களை பின்பற்றுவதன் மூலமும் அதற்குரிய அதிகாரமளிக்கப்பட்ட ஆவணங்களை பெற்றுக் கொள்வதன் மூலமும் காணிப்பிணக்குகளை தவிர்த்துக் கொள்ளலாம் என ஓய்வுபெற்ற கிழக்கு மாகாண உதவி காணி ஆணையாளர் கணேசலிங்கம் ரவிராஜன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரச காணிகளை பெறுகின்ற பயனாளிகள் அரச நடைமுறைகளை பின்பற்றி அதிகாரமளிக்கப்பட்ட அரச ஆவணங்களை பெற்றுக் கொள்ளாததன் காரணமாகவே அதிகமான காணிப் பிணக்குகள் உருவாகின்றன. பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் அவ்வாறான பிணக்கு ஒன்று உருவாகாமல் இருக்க அரச காணிச் சட்டத்தில் பல்வேறு ஏற்பா…

  11. 07 AUG, 2023 | 09:53 AM கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் அதிகளவான கடற் தொழிலாளர்களைக் கொண்ட பள்ளிக்குடா பகுதியில் உரிய இறங்குதுறை வசதிகளின்மையால் சுமார் 460க்கும் மேற்பட்ட கடற் தொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் அதிகளமான கடற் தொழிலாளர்களைக் கொண்ட பகுதியாக பூநகரி பள்ளிக்குடா பிரதேசம் காணப்படுகிறது. குறித்த பகுதியில் சுமார் 460 வரையான தொழிலாளர்கள் 300-க்கும் மேற்பட்ட படகுகளை பயன் படுத்தி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் உரிய இறங்கு துறை வசதிகள் இன்மையால் மேற்படி தொழிலாளர்கள் தமது படகுகள் மற்றும் இயந்திரங்களை தொழில்களுக்கு கொண்டு செல்வத…

  12. கே.கே.எஸ். சீமெந்து தொழிற்சாலையில் 2 மாதங்களில் 120 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரும்பு திருட்டு! adminAugust 3, 2023 காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் பிரதேச வாசிகள் இரும்பு திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும் , கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் சுமார் 120 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய இரும்புக்கள் திருடப்பட்டுள்ளதாக சீமெந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜகத் தர்மபிரிய தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், தொழிற்சாலைக்கு உரிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் , தொழிற்சாலைக்கு அருகில் வசிக்கும் பிரதேச வாசிகள் தொழிற்சாலை வளாகத்தினுள் அத்துமீறி நுழைந்து திருட்டுக்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 33 வருட காலமாக தொழிற்சாலை இராணுவ உயர்பாது…

    • 6 replies
    • 689 views
  13. இந்த வருட இறுதிக்குள் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இணையத்தளமூடாக பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டம் ஏற்கனவே 69 உள்ளூராட்சி நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அந்த உள்ளுராட்சி நிறுவனங்களில் தற்போது ஒன்லைன் முறையின் ஊடாக வரிகளை செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நிர்மாணத்துறைக்கு தேவையான அனுமதிகளை ஒன்லைன் முறையின் கீழ் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. மக்கள் எவ்வித அசௌகரியமும் இன்றி தமது கடமைகளை மேற்கொள்ளும் நோக்கில் இந…

  14. 2017 முதல் 2022 வரையிலான 5 ஆண்டுகளில் மத்தள சர்வதேச விமான நிலையம் 4 ஆயிரத்து 281 கோடி ரூபாய் நட்டமடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தள ராஜபக்ச விமான நிலையத்திற்கு கடந்த வருடம் மாத்திரம் 2 ஆயிரத்து 221 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனத்தின் கணக்காய்வுகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் விமான நிலையத்தின் செயல்பாட்டுச் செலவு 203 கோடி ரூபா என்றும், இது அதன் இயக்க வருமானத்தை விட 26 மடங்கு அதிகம் என்றும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்தள விமான நிலையத்தின் 2022ஆம் ஆண்டுக்கான வரிக்குப் பிந்தி…

  15. சாரதிகள் செய்யும் தவறுகளை தெரிவிப்பதற்காக விசேட செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதன் மூலம் சாரதிகள் செய்யும் தவறுகளை நேரடியாக பயணிகள் முன்வைக்க முடியும் என விபத்து விசாரணை முகாமையாளர் எரந்த பெரேரா தெரிவித்தார். இதேவேளை, சாரதிகள் செய்யும் தவறுகளை ஆவணப்படுத்தும் வகையில் சாரதியின் சோதனை புத்தகத்தை அறிமுகப்படுத்தவும் இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் 218 பஸ் விபத்துக்கள் இந்த வருடத்தில் இடம்பெற்றுள்ளன. இதில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக எரந்த பெரேரா குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/267075

  16. 06 AUG, 2023 | 10:45 AM முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குளம் பகுதியில் ஹெண்டர் வாகனத்தில் வந்திருந்த இராணுவத்தினர் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட பொலிஸார் துணை போகின்றனரா என சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார். சனிக்கிழமை (05) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கூறுகையில், தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும் நானும் அவ்விடத்துக்கு கள விஜயம் செய்தபோது இராணுவத்தினர் மணல் அகழ்வில் ஈடுபட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. …

  17. Published By: NANTHINI 06 AUG, 2023 | 10:41 AM (லியோ நிரோஷ தர்ஷன்) கப்பல் கட்டுமான துறையை மேம்படுத்துவதற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் இலங்கைக்கு வழங்கவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மேனுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். இலங்கை விஜயத்தின்போது இருதரப்பு உறவுகள் குறித்து பலதரப்பட்ட கலந்துரையாடல்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் முன்னெடுத்திருந்த நிலையில், கப்பல் கட்டுமான துறையை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்புகளுக்கும் உறுதியளித்துள்ளார். கப்பல் கட்டுமான துறையில் உலகில் மூன்றாவது இடத்தில் பிரான்ஸ் உள்ளது. இலங்கை ஒரு தீவு நாடென்ற வகையில் கப்பல் கட்டுமானத்துறையை அபிவிருத்தி செய்வதன் ஊடாக பொருளாதார ரீதியில் நன்மைகள் கிடைக்கப்ப…

  18. மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடுசெய்யும் வகையில் மின்கட்டணத்தை உடனடியாக மீண்டும் ஒருமுறை அதிகரிக்க வேண்டும் என மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது. மின்சார சபையின் பொது முகாமையாளர் ஜி.ஏ.டி.ஆர்.பி. செனவிரத்ன கடந்த 21ஆம் திகதி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் இந்த வருடத்தின் அடுத்த சில மாதங்களுக்கான செலவுகளை ஈடுகட்ட முடியாது என தெரிவித்துள்ளார். மின்சார சபைக்கான வருமானத்தை 3,300 கோடி ரூபாவால் அதிகரிக்கும் வகையில் இந்தக் கட்டண அதிகரிப்பு அமுலாக வேண்டுமென மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் மின் கட்டணம் அதிகரி…

  19. 05 AUG, 2023 | 08:09 PM (எம்.வை.எம்.சியாம்) இந்திய கடன் உதவியின் கீழ் எமக்கு 237 பில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றது. அதற்கமைவாக இதுவரையில் 207 பில்லியன் ரூபாவை பயன்படுத்தியுள்ளோம். இறக்குமதி செய்யப்படும் நூற்றுக்கான மருந்துகளில் ஒரு மருந்து தரமற்றதாக இருக்கலாம். இருப்பினும் எதிர்வரும் சில மாதங்களுக்குள் அவசர மருந்து கொள்வனவை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். நாட்டில் சுகாதார துறையில் எழுந்துள்ள நெருக்கடி மற்றும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் கொழும்பில் சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கரு…

  20. இறக்குமதி முட்டைகள் குறித்து வௌியான தகவல்! இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து முட்டைகளையும் நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச வணிக பல்வேறு கூட்டுத்தாபனம் வலியுறுத்துகிறது. நாளாந்தம் ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர குறிப்பிடுகின்றார். எனினும், அந்த முட்டைகளை பேக்கரிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்க முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார். லங்கா சதொச ஊடாக தினமும் ஒரு மில்லியன் முட்டைகள் விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார். அடுத்த வாரத்திற்குள் அனைத்து பல்பொருள் அங்காடிகளுக்கும் பொதி செய்யப்பட்ட முட்டைகளை விநியோகிக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று தயா…

    • 0 replies
    • 317 views
  21. வடக்கு கிழக்கு தமிழரை முட்டாள் ஆக்கும் செயல்! இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13 ஆம் திருத்தம் தொடர்பில் மீண்டும் மீண்டும் பேச அழைப்பது, வடக்கு கிழக்கு தமிழரை முட்டாள் ஆக்குவது மட்டுமல்லாது ஒட்டு மொத்த ஈழத் தமிழர்களையும் அவர் மதிக்கத் தயார் இல்லை என்பதையே காட்டுகின்றது என தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லும் தரப்பினருக்கு இந்த செயற்பாடு நன்றாகவே தெரியும் எனினும் தமிழ் மக்களின் பேரம் பேசும் வாய்ப்பை இல்லாமல் செய்து சிங்கள மக்களாலேயே நிராகரிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்கு முண்டு கொடுக்கின்ற செயலாகவே இருக்கின்றது என்பதை தமிழ் மக்கள் விளங்கிக்கொள…

    • 0 replies
    • 276 views
  22. 05 AUG, 2023 | 12:50 PM புத்தளம் அநுராதபுரம் வீதியின் 6ம் கட்டைப் பகுதியில் சுமார் 30ற்கும் அதிகமான யானைகள் நேற்று வெள்ளிக்கிழமை (04) மாலை சஞ்சரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வீதியால் செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்கள் வாகனங்களை நிறுத்தி யானைகள் சஞ்சரிக்கும் அரிய வகைக் காட்சியை பார்வையிட்டனர். குறித்த காட்டு யானகள் இரவு நேரத்தில் வீதியைக் கடந்து கிராமங்களுக்குல் வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் குறித்த பகுதியிலுள்ள மக்கள் இரவு வேலைகளில் வெளியில் செல்வதற்கு மிகவும் அச்சத்திற்கு மத்தியில் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக மக்கள் இதன்போது அச்சம் தெரிவிக்கின்றமை குறிப…

  23. Published By: VISHNU 04 AUG, 2023 | 12:37 PM மூதூரில் அக்ஷன் பாம் (ACF) என்ற நிறுவனத்தில் பணியாற்றிய 17 தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 17 வருடங்கள் கடந்துள்ளன. 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி மூதூரில் நடந்த படுகொலைச் சம்பவத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான அக்ஷன் பாம் (ACF) என்ற நிறுவனத்தில் பணியாற்றிய 17 தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (04.08.2023) 17 வருடங்கள் பூர்த்தியாகின்றன. எனினும் தங்களுடைய உறவுகள் படுகொலை செய்யப்பட்டதற்கான நீதி 17 வருடங்களாகியும் இதுவரை கிடைக்கவில்லை என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்து வருகின்றார்கள். 2006ம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் த…

  24. தீவகம் முழுவதையும் ஒரு அதிகாரசபைக்குள் உட்படுத்தி கொழு்பில் இருந்து கட்டுப்படுத்த முயற்சி? adminAugust 4, 2023 இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13 ஆம் திருத்தம் தொடர்பில் மீண்டும் மீண்டும் பேச அழைப்பது, வடக்கு கிழக்கு தமிழரை முட்டாள் ஆக்குவது மட்டுமல்லாது ஒட்டு மொத்த ஈழத் தமிழர்களையும் அவர் மதிக்கத் தயார் இல்லை என்பதையே காட்டுகின்றது என தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லும் தரப்பினருக்கு இந்த செயற்பாடு நன்றாகவே தெரியும் எனினும் தமிழ் மக்களின் பேரம் பேசும் வாய்ப்பை இல்லாம் செய்து சிங்கள மக்களாலேயே நிராகரிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவி…

    • 2 replies
    • 534 views
  25. முல்லைத்தீவு பஸ் நிலையத்தினை இயங்க வைப்பதில் பல வருடங்களாக இழுபறி நிலை காணப்பட்டு வருகின்றது. அதனை, இயங்க வைப்பதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என கூறி நேற்று வியாழக்கிழமை (03) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பல்வேறு தரப்பினருடன் நீண்ட நேர விவாதம் இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு மாவட்ட உதவி ஆணையாளர் எஸ்.ஜசிந்தன் தெரிவிக்கையில், தனியார் பஸ் சங்கத்தினால் கூறப்பட்ட ஏற்பாடுகள் பிரதேச சபையினால் 100 வீதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது வேறுவிதமான பிரச்சினையை கூறுகிறார்கள். முள்ளிவாய்க்காலால் பஸ் வரும் என்றால் பஸ்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.