ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142919 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 879 views
-
-
சிறிலங்கா இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்று தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்படுவதாகக் கூறப்படும் சிங்கள இளைஞர் ஒருவரைக் கண்டுபிடிப்பதற்காக பொதுமக்களின் உதவியை காவல்துறை நாடியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கையில் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டால் மட்டுமே சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்க வேண்டுமென அமெரிக்கா புதிய நிபந்தனையொன்றை விதித்துள்ளதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து, இலங்கை அரசாங்கம் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனாக கோரியுள்ளது. இந்த நிலையில் யுத்த நிறுத்தம் ஏற்படுத்தாத பட்சத்தில் இலங்கைகான கடனுதவி நிறுத்தப்படும் என அமெரிக்கா இரகசிய எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. யுத்த நிறுத்தமொன்றை அமுல்செய்யுமாறு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் விடுத்த கோரிக்கையை இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ நிராகரித்ததனைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. மூலம் - GT…
-
- 0 replies
- 914 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள மக்களுக்குச் சேவையாற்றி வரும் அரசாங்க மருத்துவர்கள் மிகவும் களைப்படைந்துள்ளதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 431 views
-
-
சிறிலங்காவின் ஆக்கரமிப்பு படையினர் தமிழர் தாயகப் பிரதேசங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்பதை வலிறுத்தி கனடிய தமிழ் மாணவர்களும் மற்றும் கனடியத் தமிழர் சமூகத்தினரும் இணைந்து தலைநகர் ஒட்டாவா நாடாளுமன்றத்திற்கு முன்பாக மாபெரும் உரிமைப்பேரணியினை நடத்தவுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 362 views
-
-
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் உள்ள சிறிலங்காவின் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாகவும், தேசியப் பிரச்சினையில் நோர்வேயின் பங்களிப்பு தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டும் என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி கோரியுள்ளது. இது தொடர்பாக சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டாரவ
-
- 0 replies
- 372 views
-
-
வன்னியில் உள்ள மக்கள் படும் பேரவலம் தொடர்பாக அமெரிக்காவின் அரசாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையினை தமிழீழ விடுதலைப் புலிகள் வரவேற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 370 views
-
-
வவுனியா மாவட்டத்தில் உள்ள தேவர்குளம் பகுதியில் மூன்று தமிழ் இளைஞர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் நேற்று காலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தலை மற்றும் மார்புப் பகுதிகளில் கடுமையான துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் இவர்களின் உடலங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வவுனியா மருத்துவமனையில் காவல்துறையினரால் ஒப்படைக்கப்பட்டது. கொல்லப்பட்ட மூவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் நேற்று காலை தாம் மேற்கொண்ட நடவடிக்கை ஒன்றின் போது இவர்கள் கொல்லப்பட்டதாகவும் இராணுவத்தினர் தெரிவித்தனர். இவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் போன்ற சில ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. வவுனியா மருத்துவமனை பிரேத அறையில…
-
- 0 replies
- 427 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறிலங்காவின் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் பகுதியில் கைது செய்யப்பட்டிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 612 views
-
-
Mr.Robert Evans அவர்களின் செவ்வி. பி.குறிப்பு: இவரின் மின் அஞ்சல் முகவரியை இணைக்க முடியுமா? நண்பர்களை உருவாக்குவது மிக இன்றியமையாதது.
-
- 1 reply
- 641 views
-
-
ரெண்டு வழக்கு. ரெண்டுமே தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் தலைவலிய கொடுக்கறதுதான். ஒன்று மூத்த வக்கீல் கருப்பன் மூலமா கிளம்புது. இலங்கைக்கு ஆயுத உதவி, ஆள் உதவி யாரை கேட்டுக் கொடுத்தீங்க. ஆயிரம்கோடி பணம் கொடுத்த நோக்கமென்ன...? இந்தியர்களோட வரிப்பணத்தை இப்படி கண்டமேனிக்கு செலவு செய்ய அதிகாரம் கொடுத்தது யாரு. மந்திரிசபையா? எப்போ கூடி முடிவெடுத்துச்சு. என்னவென்று முடிவெடித்தது. இல்ல, பிரதமரா...? இப்படி அவர் தனியா முடிவெடுக்க அதிகாரம் இருக்கா? அப்படீன்னு கேட்டு ஒரு வழக்கு போட்டிருக்காரு. எப்படியோ வழக்கு ஏற்கப்-பட்டிருக்கு. பிரதமருக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் விளக்கம் தாங்கோ அப்படீன்னு உத்தரவு போட்டிருக்காரு நீதிபதி..." "இன்னொரு வழக்கு, திருச்சி வேலுசாமி போடுறது…
-
- 5 replies
- 1.9k views
-
-
Is there UN acquiescence for a military solution asks V. Rudrakumar at NY rally Mr V. Rudrakumar, the Legal Adviser to the Liberation Tigers of Tamil Eelam delegation at the Norwegian sponsored Peace Process gave a speech at the mega rally in New York on April 17, 2009. Tamil National Reporter from New York has commended it as a very impressive speech. Rudrakumar in his speech question whether there is U.N. acquiescence for a military solution to the Tamil national question. "We have been told that the GoSL will not agree to a ceasefire. It is hard to believe that if the international community could stand up to Saddam Hussein and enforce a no-fly zone and safe have…
-
- 1 reply
- 868 views
-
-
கனடாத் தமிழ் வானொலிகளின் கவனத்திற்கு கனடாவில் இருந்து இயங்கும் பல தமிழ் வானொலிகள் சிங்களத்தினதும் றோவினதும் பிரச்சார ஊடகமாக மாறி விட்ட பி.பி.சி தமிழோசையின் நிகழ்ச்சியை அப்படியே இங்கே ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். டக்கிளசின் வானொலி, மற்றும் ஒட்டடுக் குழுக்களின் வானொலிக்குக் கொஞ்சமும் குறைவில்லாத இந்தத் தமிழ் விரோத வானொலியின் செய்தி அறிக்கையை நீங்கள் ஒலிபரப்பித் தான் ஆக வேண்டுமா? கொஞ்சம் சிந்தியுங்கள்........
-
- 0 replies
- 1.4k views
-
-
வன்னியில் தினம் தினம் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மனிதப் பேரவலமானது புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களின் மனதில் ஒரு ஆறாத வடுவை ஏற்படுத்தி தமிழ்த் தேசிய உணர்வை தட்டியெழுப்பி விட்டிருக்கிறது. இந்தத் தமிழ்த் தேசியத்தின் எழுச்சி உலகின் தலைநகரங்கள் எங்கும் ஈழத்தமிழர்கள் நகர வீதிகளில் இறங்கி போக்குவரத்துக்களை ஸ்தம்பிதம் அடையச் செய்து உலக நாடுகளின் பார்வையை இலங்கையின் பக்கம் திரும்பச் செய்ததோடல்லாமல் இலங்கை அரசாங்கத்தை புலம்பெயர் தமிழர்களுடன் சர்வதேஅரசியற்களத்தில் போராடும் நிலைக்கும் இட்டுச்சென்றிருக்கின்றது. அந்தவகையில் புலம்பெயர் நாடுகளில் நடக்கும் வெகுஜனப் போராட்டங்களுக்கு அடித்தளமாக விளங்குவது லண்டன் ஆகும். கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி இங்கு நடத்தப்பட்ட வெகுஜன…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையுடனான உறவை வருகிற 20ம் தேதிக்குள் துண்டிப்பதாக சோனியா காந்தி அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் 23ம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் குதிப்போம் என இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார். பாரதிராஜா நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவருடன் சத்யராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது பாரதிராஜா கூறுகையில், இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். உலக நாடுகள் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. போரை நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசு கேட்டது, அனைத்து கட்சிகள் கேட்டன, பல்வேறு சங்கங்கள், அமைப்புகள், வக்கீல்கள், மாணவர்கள் என பலதரப்பினரும் போராடினார்கள். பலர் தீக்குளித்து மாண்டனர். ஆனால் மத்திய அரசு நினைத்திருந்தால் உடனடியாக ப…
-
- 0 replies
- 887 views
-
-
பிரபாகரனை எதிர்க்கிறேன் - ஈழத் தமிழர்களை ஆதரிக்கிறேன் - ஜெ. ஈழத்தில் நடந்து வரும் தீவிரவாதத்தை எதிர்க்கிறேன். இதனால் பிரபாகரனை எதிர்க்கிறேன். அதேசமயம், ஈழத் தமிழர்களின் உரிமைகளையும், அவர்களது போராட்டத்தையும் நான் ஆதரிக்கிறேன் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. நாகர்கோவிலில் நேற்று அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மினை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்தார். பிரசாரத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது, இலங்கை தமிழர் பிரச்சினையில் அ.தி.மு.க. நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ஈழத் தமிழர்களுக்கு அ.தி.மு.க. என்றுமே ஆதரவுதான். ஆனால் அங்கு நடக்கும் தீவிரவாதத்துக்கு எதிராக உ…
-
- 16 replies
- 2.1k views
- 1 follower
-
-
ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2009, 04:19 பி.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] பிரான்சில் நிறுவப்பட்டுள்ள ஈழத் தமிழ்ச் சங்களில் 67 சங்கங்களின் பிரதிநிதிகள் பாரிசில் நேற்று சனிக்கிழமை பேரவையாக ஒன்றுகூடி ஈழத்தில் தமிழ்ப்படை முன்னெடுத்துக்கொண்டிருக்கு
-
- 1 reply
- 728 views
-
-
சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2009, 02:41.03 PM GMT +05:30 ] பொதுமக்களின் இழப்புகளை தடுக்கும் ஒரே அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை, வன்னியில் உள்ள மக்களை காப்பாற்ற முடியாதுவிட்டால் யாரால் அவர்களை காப்பாற்ற முடியும் என தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் கேள்வி எழுப்பினார். வன்னியில் உள்ள மக்களின் நிலைமையை தெரிந்து கொள்வற்காக இலங்கைக்கு வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி நம்பியாரின் வன்னிக்கான வருகையை இலங்கை அரசாங்கம் தடுக்கக்கூடாது என தமிழீழ விடுதலைப்புலிகள் கோரியுள்ளனர். நம்பியார் வன்னிக்கு வந்தால் உண்மை நிலை தெரியவந்து விடும் என்பதற்காகவே இலங்கை அரசாங்கம் அவரின் வன்னி வருகையை தடுத்துள்ளதாக நடேசன் குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின…
-
- 9 replies
- 1.8k views
-
-
Carnage inside safe zone; shelling amid heavy rain Sri Lanka Army is on a scorching battle to break in to the no fire zone through Irradaivaikal and fierce fighting is going on in the Iraddaivaaikal front lines. Tamil National Reporter said he could hear continuous explosions and gunfire in that area. Meanwhile Sri Lanka Army is continuously and indiscriminately firing in to the safe zone using heavy targeted with cluster bombs, mortars, artillery shells and multi barrel rockets. More than 600 are feared killed and maimed in the carnage. Only the information on wounded and dead brought to hospital are coming out, whereas many are being buried then and there…
-
- 0 replies
- 1.1k views
-
-
வீரகேசரி வாரவெளியீடு - இலங்கை அரசுக்கு ராஜதந்திர ரீதியில் கொடுக்க வேண்டிய அழுத்தங்களை இப்போதுதான் இந்திய அரசு கொடுக்கத் தொடங்கியிருப்பதாக கருதுகிறோம். ஆனால் இலங்கை அரசு இத்தகைய அழுத்தங்களுக்கு செவிமடுப்பதாக தெரி யவில்லை. எனவே இலங்கை அரசுக்கு நன்றாக விளங்கக் கூடிய வகையில் அழுத்தங்களை கொடுக்கும் பாணியை இந்தியா மாற்றிக் கொள்ள வேண்டும் எனக் கருதுகிறோம். இலங்கை அரசு செவிசாய்க்காவிட்டால் இந்திய அரசு அடுத்த கட்டமாக எத்தகைய நடவடிக் கையை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். என தமிழ்த் தேசிய கூட்ட மைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். டில்லி சென்று இந்திய வெளியுறவுச் செய லாளர் சிவ்சங்கர் மேனன் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர்…
-
- 4 replies
- 993 views
-
-
பாதுகாப்பு வலயத்தினுள் நடக்கும் அகோர எறிகணைத் தாக்குதலில் பலியிடப்படும் தமிழர்கள் - லண்டன் கார்டியன் பத்திரிகை Tamil civilians slaughtered as army shells 'no-fire zone'• Red Cross doctors treat 1,500 injured evacuees Gethin Chamberlain near Pulmoddai, Sri Lanka The Observer, Sunday 19 April 2009 Article history The Observer was refused access to the Putumattalan field hospital by the military, but a doctor, Thangamutha Sathiyamorthy, sent this picture of injured Tamils awaiting treatment. Photograph: Thangamutha Sathiyamorthy Hundreds of civilians are being killed or seriously injured in artillery and gun attacks as the Sri Lankan army attempts to finish of…
-
- 1 reply
- 1.2k views
-
-
தீக்குளித்த தமிழர் தேசிய இயக்க தொண்டர் மரணம் திகதி: 18.04.2009 // தமிழீழம் // [வன்னியன்] இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் சென்னையில் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் தீக்குளித்து இறந்துள்ளார். சிவானந்தன் (46) என்ற அந்தத் தொண்டர் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனின் தீவிரமான ஆதரவாளராவார். கரூரைச் சேர்ந்த அவர் சென்னை வடபழனியில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணை அலுவலகத்துக்கு முன்னால் நேற்றிரவு "இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்" என்று கோரிக்கையை உரக்க எழுப்பியபடி தீக்குளித்தார். தகவல் அறிந்த காவல்துறையினர் …
-
- 4 replies
- 656 views
-
-
பயங்கரமான உயிர் கொல்லி இரசாயண திரவகம் திருகோணமலைக்கு ஏன் வந்தள்ளது? துருக்கி கப்பலுக்கூடாக சல்பூரிக் அமில இரசாயண திரவகத்தை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வந்த கப்பலிருந்து சல்பூரிக் அமிலம் ஒழுக்கேற்பட்டுள்ளது. கிட்லர் இந்த அசிட்டுக்குள்ளே தான் யூதரை போட்டு கரைத்தவர் என்பதும் உலகம் அறிந்த உண்மை. அப்படியானால் தமிழரை இந்த அசிட்டுக்குள்ளே போட்டுக் கரைப்பதற்கா இந்த அமிலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதா? இந்த அமிலத்துடன் திருகோணமலைத் துறைமுகத்திற்கு வந்திருப்பதை டெயிலி மிரர் 07.04.09 இணைய பத்திரிகையில் 10.40 வெளியிடப்பட்ட, "Navy repairing Turkish Sulfuric Acid Ship off Trincomalee" என்ற செய்தியில் இடம்பெற்றிருக்கின்றது. இலங்கையரசின் இன அழிப்பு கொ…
-
- 2 replies
- 2.2k views
-
-
-
இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவிப்பு வெளியிடக்கோரி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் 7 ஆவது நாளாக உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண்களில் ஒருவர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 416 views
-