Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2009, 05:36 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] புலம்பெயர் தமிழர்களின் தொடர் போராட்டத்தினால் மாத்திரமே வன்னியில் உள்ள ஏனைய தமிழர்களை பாதுகாக்க முடியும் என்று வன்னி மக்கள் நலன் பேணும் அமைப்பு புலம்பெயர் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வலைஞர்மடத்தில் இயங்கிவரும் வன்னி மக்கள் நலன் பேணும் அமைப்பு நேற்று முன்நாள் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விபரம் வருமாறு: அன்புக்குரிய எம் புலம்பெயர் வாழ் உறவுகளே! தங்களின் போராட்டங்கள் தொடருமானால் சிங்கள வெறியாட்டத்தில் இருந்து எங்கள் மக்கள் காக்கப்படுவர் - ஒர் உருக்கமான வேண்டுகோள். கூவி விழும் எறிகணைகளுக்குள்ளும், குண்டு மழைக்குள…

  2. [சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2009, 07:58 பி.ப ஈழம்] [பி.கெளரி] தமிழ் மக்கள் அண்மைக்காலமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பார்க்கும் போது அவர்கள் தம்மை தியாகம் செய்வதற்கு துணிந்தவர்கள் என்பது தெளிவானது என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'த இன்டிபென்டன்ற்' நாளிதழ் தெரிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை வெளியாகிய அந்த இதழில் முதற்பக்க செய்தியாக தமிழ் இளைஞர்களின் சாகும் வரையிலான உண்ணா நோன்பு தொடர்பான செய்தியும், ஆய்வும் வெளியிடப்பட்டிருந்தது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: 21 வயதே நிரம்பிய சிவதர்சன் சிவகுமாரவேல் என்ற மாணவன் தனது உயிரை இழப்பதற்கு தயாராகி வருகின்றார். ஆதரவாளர்கள் கண்ணீருடன் எப்போதும் ஆதரவு வழங்க வெப்பமூட்டும் துணிகளுக்கு மத்தியில் அவர் கிடக்க…

  3. வன்னியில் இன்றும் எறிகணை, துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்: 32 தமிழர்கள் படுகொலை; 75 போ் காயம் [சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2009, 07:50 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழைக்கும் மத்தியில் இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 75 பேர் படுகாயமடைந்துள்ளனர். 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன் மற்றும் அம்பலவன்பொக்கணை ஆகிய பகுதிகள் மீது இன்று சனிக்கிழமை காலை தொடக்கம் இரவு வரை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, மோட்டார் மற்றும் தொலைதூர துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்…

  4. புலியின் குகைக்குளதன் குட்டியைத் தேடி ?!!!!! To Catch The Cub In The Tiger’s Den While the Sri Lankan army claims to be close to wiping out the LTTE, Prabakaran may already have an able successor in his son. PC VINOJ KUMAR reports ONE DAY in July 1987, in a plush room of a New Delhi hotel, an Indian diplomat was beginning to lose his temper at an intransigent young man. JN Dixit, then Indian High Commissioner in Colombo, wanted Velupillai Praba - karan, the dapper chief of the rebel Liberation Tigers of Tamil Eelam (LTTE), to accept a proposed accord between the governments of India and Sri Lanka that aimed to bring an elusive peace to the strife-torn island nati…

    • 2 replies
    • 2.4k views
  5. யுத்த நிறுத்தப் பிரகடணத்தை சர்வதேச மத்தியஸ்த்தத்தின் கீழ் உடனேயே செய்யுங்கள் - இந்திய ஓய்வுபெற்ற நீதிபதி கிருஷ்ண ஐய்யர் முன்னாள் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியும், பிரபல ஜூரியுமான கிற்ருஷ்ண ஐய்யர் இலங்கையில் சர்வதேச மத்தியஸ்த்தத்தின் கீழ் உடனடியான யுத்த நிறுத்தம் ஒன்று அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும் தனது கோரிக்கையில், இறையாண்மை என்பது ஒருபோதுமே உள்நாட்டு அட்டூழியங்களையும், கணக்கற்ற படுகொலைகளையும் செய்வதற்கு அதிகாரம் கொடுக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க..... Declare cessation of military operation under international supervision in SL - Justice Krishna Iyer Saturday, 11 April 2009 07:05 administrator …

  6. இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனனுடனான சந்திப்புக்காக விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கருத்து முரண்பாடுகள் உருவாகியிருப்பதாகத் தெரிகின்றது. இதனால் கூட்டமைப்பு தனது முன்னைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளலாம் எனத் தெரிகின்றது. தொடர்ந்து வாசிக்க

  7. ஈழத்தில் இந்திய - சிங்களக் கூலிப்படையின் வெறியாட்டத்தை கண்டித்து ஈரோடு தமிழீழ விடுதலை ஆதரவு இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை கடந்த 08.04.2009 புதன்கிழமை நடைபெற்றது. சிறிலங்காவின் இரசாயன ஆயுததத் தாக்குதலுக்கு எதிராக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

  8. "தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னான காலகட்டம் (Post-LTTE Scenario) என ஒன்று ஒருபோதுமே வரப்போவதில்லை" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், "இவ்வாறான காலம் ஒன்று வரும் எனக் காத்திருந்து - காலத்தை வீணடித்து, மனித உயிர்களை அழிக்காமல், தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையையும், தமிழர் தாயகத்தையும் அங்கீகரித்து அவர்களுடைய அரசியல் விருப்புக்களை நிறைவேற்றுவதில் கவனத்தைச் செலுத்துங்கள்" என உலக சமூகத்தையும், இந்தியாவையும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவில் இருந்து வெளிவரும் 'தெஹெல்கா' இதழின் ஊடகவியலாளர் பி.சி.வினோஜ்குமாருக்கு பா.நடேசன் அளித்த சிறப்பு நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு: தமிழீழ விடுதலைப் புலிகளு…

  9. அனைத்துலக சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கும் நோக்கத்துடன் சுவிற்சர்லாந்தின் பேர்ண் மற்றும் சூரிச் நகரங்களில் தொடங்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டங்கள் இன்று சனிக்கிழமையும் பேர்ண் மாநகரில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதேவேளையில் வீதிகளை மறித்து போக்குவரத்துக்களை தடை செய்திருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 376 views
  10. உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில் கடந்த சுமார் மூன்று மாத காலமாக அரசியல் செயற்பாடுகளில் இருந்து முற்றாக ஒதுங்கி வெளிநாட்டில் அஞ்ஞாதவாசம் இருந்துவந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர இன்று சனிக்கிழமை மீண்டும் நாடு திரும்பியிருப்பதாக கொழும்பில் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 316 views
  11. 11/04/2009, 03:58 [] பிரித்தானியாவில் தமிழர்களின் தொடர் போராட்டம் முக்கிய திருப்பத்தில் பிரித்தானியாவில் நான்காவது நாளாக உணர்வெளிச்சிவுடன் இடம்பெற்று வரும் போராட்டத்தில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுபப்பினர் சைமன் குரூஸ் அவர்கள் கலந்து கொண்டு பிரித்தானிய அரசாங்கம் இதுதொடர்பில் மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள். பிரித்தானிய அரசாங்கம் மாணவர்களுடன் இணைந்து நாளையில் இருந்து எதிர்வரும் 10 நாட்களுக்குள் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர் குழுவில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மூன்று மாணவர்கள் வீதம் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஒரு குழுவும் மற்றைய குழு பெல்லியத்தில் ஐரோப்பிய ஆணையகத்திற்கும், மூன்றாவது குழு பிரித்தானியாவில் க…

  12. சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலையையும் அனைத்துலக சமூகத்தின் பாராமுகத்தையும் கண்டித்து பிரித்தானியாவில் இன்று மாபெரும் மக்கள் பேரெழுச்சி நடைபெறுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 472 views
  13. தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கம் நடத்தி வரும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்தக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் கனடா, டென்மார்க், அவுஸ்திரேலியாவிலும் தமிழர்கள் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 279 views
  14. தமிழ் மக்கள் அண்மைக்காலமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பார்க்கும் போது அவர்கள் தம்மை தியாகம் செய்வதற்கு துணிந்தவர்கள் என்பது தெளிவானது என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'த இன்டிபென்டன்ற்' நாளிதழ் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 526 views
  15. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழைக்கும் மத்தியில் இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 75 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 380 views
  16. சிறிலங்கா அரசாங்கம் நடத்தி வரும் போரை நிறுத்தக் கோரும் போராட்டம் நேற்று வெள்ளிக்கிழமையும் ஐந்தாவது நாளாக நெதர்லாந்து நாடாளுமன்ற முன்றலில் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்களால் நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 490 views
  17. சென்னை: ஈழப் போரில் தமிழர்களை வீழ்த்த, அவர்களுக்கு துரோகம் செய்து வரும் இந்திய 'அம்பி' யார் என என்பதை தமிழக முதல்வர் கருணாநிதி மக்களுக்கு விளக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா பாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னையில் தா.பாண்டியன் அளித்த பேட்டி: முதல்வர் கருணாநிதி கடந்த சில நாட்களாக இலங்கையில் இருந்து வருகிற செய்திகள் தமிழினம் அழிக்கப்பட்டுவிடுமோ என்ற கவலையை அவருக்கும் தந்திருப்பதாக கூறியிருக்கிறார். ராஜபக்சேவுக்கு வேண்டுகோளும், சோனியா காந்திக்கு யோசனையும் கூறியிருக்கிறார். சோனியா காந்தி, இந்திரா காந்தி போல பேச வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அவர் அப்படி சொல்லியிருப்பதிலிருந்தே சோனியா காந்தி, இந்திரா காந்தி போல பேசவில்லை என்பதை ந…

  18. புலம்பெயர் தமிழர்களின் தொடர் போராட்டத்தினால் மாத்திரமே வன்னியில் உள்ள ஏனைய தமிழர்களை பாதுகாக்க முடியும் என்று வன்னி மக்கள் நலன் பேணும் அமைப்பு புலம்பெயர் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 374 views
  19. ஜோன் ஹோம்ஸின் கருத்து ஐ.நா.வின் நிலைப்பாடா? வீரகேசரி நாளேடு 4/10/2009 8:47:25 AM - இலங்கையில் ஒரு யுத்தநிறுத்தத்தினையோ அல்லது ஒரு இடைக்கால மோதல் தவிர்ப்பினையோ மேற்கொள்ளும்படி கோருவதை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தவிர்த்திருந்த மறுதினமே அவரது மிகவுயர்ந்த தரத்தினரான மனிதவுரிமை அதிகாரி ஜோன் ஹோம்ஸ், பிரித்தானிய கார்டியன் பத்திரிகையில் தெரிவித்த கருத்தில் இடைக்கால போர் ஓய்வு வலியுறுத்தப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் நடைபெற்ற மதியநேர செய்தியாளர் மாநாட்டில் இன்னர் சிற்றி பிறஸ் சார்பில், ஜோன் ஹோம்ஸ் இன் கருத்து இப்போது ஐ.நா.வினது நிலைப்பாடா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் மேலும் நுட்பமான விபரங்களை நீங்கள் நாளையோ, நாளை மறுதினமோ அறியலாம் என்று…

  20. 11/04/2009, 08:04 [ யாழ் செய்தியாளர் சிறீதரன்] யாழ் மக்களை ஏமாற்ற மீண்டும் ஒரு வானூர்தி சேவை பற்றி பரப்புரை யாழ் குடாநாட்டுக்கு சிறீலங்கா அரசும், வான் படையும் இணைந்து பயணிகள் வானூர்தி சேவை ஒன்றை அரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளன. கடந்த சில நாட்களாக இவ்வானூர்தி சேவை இயங்குவதாகவும் இது குறைந்த கட்டணத்துக்கு சேவையை வழங்குவதாகவும் தெரிவித்து பெரும் பரப்புரைகளை சிறீலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது. ஏ-9 வீதி சிறீலங்கா படையினரால் முழுமையாக ஆக்கிரமிக்கபட்ட பின்னர் யாழ்ப்பாணத்துக்கான தரைப்பாதை வெகு விரைவில் திறக்கப்படும் எனவும், புதுவருடத்தை அண்டி திறக்கப்படும் எனவும் தொடர் பரப்புரைகள் மற்றும் பெரும் எடுப்பிலான விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால…

    • 1 reply
    • 738 views
  21. முல்லைத்தீவில் இருந்து விடுதலைப்புலிகள் தமிழகத்திற்குள் ஊடுருவுகின்றனரா என்பதை அறிய இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் உளவு செய்மதி ஒன்றை விண்ணுக்கு செலுத்த தீர்மானித்துள்ளனர். இந்த செய்மதி எதிர்வரும் 20 ஆம் திகதி சிறிஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இலங்கை படையினர் பாதுகாப்பு வலய பகுதியை சுற்றிவளைத்துள்ளதால், விடுதலைப்புலிகள் இந்தியாவுக்குள் தப்பிச் செல்லக்கூடும் என இந்திய புலனாய்வுதுறையினர், அந்த நாட்டு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். விசேடமாக எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் விடுதலைப்புலிகளின் ஆதரவு அமைப்புகளின் புலிகளின் உதவிகளை பெறக்கூடும் என இந்திய புலனாய்வு துறை குறிப்பிட்டுள்ளது. இதனை தவிர புலிகளை உளவு பார்ப்பதற்காக விமானம் ஒன்றைய…

    • 1 reply
    • 1.3k views
  22. மட்டக்களப்பில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் மினி முகாம் மீது நேற்று தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 469 views
  23. தென்னாபிரிக்காவின் டேர்பன் நகரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் இரண்டாவது நாளாகவும் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 462 views
  24. ஈழத்தில் ஆயிரம் மக்கள் செத்தாலும் பரவாயில்லை ஒரு புலி கூட தப்பி விடக்கூடாதென ராஜபக்ஷேவின் சிங்கள ராணுவம் மக்களை கொன்று குவித்து வருகிறது. அன்றாடம் வரும் உயிரிழப்புக்களின் சோகம் தமிழகத்தில் வெறும் புள்ளிவிவரங்களாய் நீர்த்து போகிறது. அ.தி.மு.க ஆதரவில் நெடுமாறனின் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவையும், தி.மு.க ஆதரவு நல உரிமைப் பேரவையும் மாறி மாறி தேர்தல் காலத்தில் பத்தோடு ஒன்றாக ஈழம் குறித்த அழுகுணிக் குரலை ஒலிக்கின்றன. குஜராத்தில் முசுலீம்களை இனப்படுகொலை செய்த பா.ஜ.கவையும், ஈழப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்கும் அ.தி.மு.கவின் ச்சிகலா நடராஜனையும் அருகில் வைத்துக் கொண்டு நெடுமாறன் ஈழத்திற்காக கண்ணீர் விடுகிறார். அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் பா.ம.க, சி.பி.ஐ முதலான …

    • 1 reply
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.