Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் பொது நிர்வாக அமைச்சர் கரு ஜயசூர்ய புதிய பதவியைப் பொறுப்பேற்றுக்கொள்வதற்கு வசதியாக இன்று செவ்வாய்கிழமை தனது அமைச்சர் பதவியைத் துறப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

  2. வன்னியில் இன்னும் 15 ஆயிரம் விடுதலைப்புலிகளின் வீரர்கள் உள்ளதாக இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியிருக்கிறார். கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் 53வது ஆண்டு மாநாட்டில் அவர் பேசியது: விடுதலைப்புலிகளை அழித்து வருவதாக இந்த அரசு சொல்வது உண்மையல்ல. கிளிநொச்சி கைப்பற்றப்படவில்லை. வன்னியில் இன்னும் 15 ஆயிரம் புலிகள் இருக்கின்றனர். போர் பகுதிகளில் ஊடகங்கள் சுதந்திரமாக அனுமதிக்கப்படாதது மிகப் பெரிய குறைபாடு. அதிபர் ராஜபக்சேவும் புலிகள் தலைவர் வேலு பிள்ளை பிரபாகரன் இடையேயான போர் முறை வித்தியாசமாகவுள்ளது. பிரபாகரன் இரவு நேரங்களில் கொழும்பில் தாக்குதல் நடத்துகிறார். ராஜபக்சேவின் தாக்குதலால் அப்பாவி மக்கள் பலியாகின்றனர் என்று ரண…

  3. மட்டக்களப்பு லேக் வீதியில் அமைந்திருக்கும் விசேட அதிரடிப்படை முகாமிலுள்ள கரன் என்ற விசேட அதிரடிப்படை உத்தியோகத்தரே மட்டக்களப்பில் கடந்த 4,5 வருடங்களாக இடம்பெற்று வரும் கடத்தல்களுக்கும் கொலைகளுக்கும் பிரதான காரணமாக இருப்பதாக புலனாய்வு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவை சேர்ந்த சில்வெஸ்டர் என்பவரும் இவருடன் இணைந்து படுகொலை வேட்டையில் இறங்கியுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரும் கோத்தபாயா மற்றும் பஸில் ராஜபக்ஸவுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிவருவதாகவும் துணை ஆயுதக் குழுவினரை மேற்கோள் காட்டிய செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. மக்ஸ்டா ரக வெள்ளை நிற வானொன்றையே இவர்கள் கடத்தலுக்காக பயன்படுத்துகின்ற…

    • 0 replies
    • 1.5k views
  4. வாரங்களுக்கு முன்பு ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டிருந்த தமிழ் இளைஞர்களில் அரைவாசிபேர் விசேட அதிரடிப் படையினரின் புலனாய்வுப் பிரிவினரால் மிகவும் கொடுரமான முறையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். தற்பொழுது எமக்குக் கிடைத்த அதிர்ச்சித் தகவல் இது. இதன் உண்மைத் தன்மை தொடர்பாக நாம் ஆராய்ந்தபொழுது சில திடுக்கிடும் தகவல்கள் எமக்குக் கிடைத்தன. மட்டக்களப்பில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டு தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டிருந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது. ஆனால் அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளிலோ அவர்கள் பற்றிய தகவல்களை வெளியிடவோ எவருமே முன்வராதது கவலைக்குரிய விடையமாகும். கடந்த…

    • 0 replies
    • 1.1k views
  5. சிங்கள பவுத்த ஸங்கா பூநகரிக்கு விஜயம்.

    • 4 replies
    • 1.6k views
  6. சில நேரங்களில் எதிரியும்கூட நம்மிடமுள்ள ஓட்டையைக் காட்டி நகையாடுவது உண்டு. ‘தமிழ்நாட்டுத் தலைவர்கள் கோமாளிகள்’ என்ற சரத் பொன்சேக்காவின் கூற்று அது போன்றதேயாகும். ஈழத்தமிழர்மீது தமிழ்நாட்டுத் தமிழ் மக்களுக்கு உள்ள உள்ளார்ந்த தூய இனப்பாசத்தின் கொந்தளிப்பை அடக்கி மடைதிருப்ப தமிழ்நாட்டுத் தலைவர்கள் போடும் பொய்க்கால் ஆட்டங்கள் யாவும் தமிழ்நாட்டுத் தமிழ் மக்களுக்கு விளங்கின்றன. கருணாநிதி ஒரு தெலுங்கு வடுகர். தமிழை நன்றாகக் கற்றுக்கொண்டு தமிழரின் தலைமீது குந்திக்கொண்டுள்ள இவரை ‘உலகத் தமிழினத்தின் தலைவன் நீர்தான்’ என்று அவருடைய பரிவாரங்கள் உசுப்பேற்றிவிட்டமையால், தலைகால் தெரியாமல் வாய்ச்சிலம்பம் ஆடி வரும் வந்தேறி அவர். அதனால், இந்தச் சுரண்டல் பேர்வழியால் ஈழத்தமிழர…

  7. இலங்கை இராணுவத் தளபதி சரத்பொன்சேகா ஆங்கில நாளேட்டிற்கு கொடுத்த பேட்டியில் இந்திய அரசு இலங்கையில் போரை நிறுத்த சொல்ல கூடாது, இலங்கைக்கு உதவ வேண்டுமென்று கூறியதை கண்டித்தும் கொளத்தூர் விடுதலை சிறுத்தைகள் சார்பாக பேருந்து நிலையத்தில்...இலங்கை இராணுவத் தளபதி சரத்பொன்சேகா கொடும்பாவி எரிப்பு போராட்டம்....... படங்கள் இணைப்பு.......... http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

    • 24 replies
    • 5.3k views
  8. கிளிநொச்சியை கைப்பற்றுவதன் மூலம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டுமொருமுறை வலியுறுத்தியுள்ளது. தமிழர் பிரச்சினைக்கு யுத்தம் ஒருபோதும் தீர்வாக அமையப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மொத்த நிலப்பரப்புக்களையும் படையினர் கைப்பற்றினாலும், அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் போராட்டம் ஒயாதென அவர் குறிப்பிட்டுள்ளார். உரிமைகள் நசுக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் ஆயுத போராட்டங்கள் வெடித்த பல சந்தர்ப்பங்களை உலக வராலாற்றில் நாம் கண்டுகொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, எதிர்காலத்தில் மீண்டும் ப…

  9. யுத்தம் மற்றும் வறுமை காரணமாக இலங்கையில் மன நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபன அறிக்கையை ஆதாரம் காட்டி உலக சமூகவியல் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ச்சியான யுத்தம், வறுமை காரணமாக இலங்கையர்களின் பெருமளவானோர் மன நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. குறைபோசாக்கு, வேலை வாய்ப்பின்மை, அடிப்படை வசதிகள் இன்மை, இடப்பெயர்வு உள்ளிட்ட பல்வேறு சமூக,பொருளாதார பிரச்சினைகளுக்கு இலங்கை மக்கள் முகம் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மூன்று தசாப்த காலாமாக நீடித்து வரும் யுத்தம் மற்றும் ஆழிப்பேரலை ஆகியவற்றின் தாக்கம் பெரும்பாலான இலங்கையரை பாதித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. ஆயுத போராட்டங்களின் காரணமாக அ…

  10. உலக நாடுகளில் இடம்பெற்றுவரும் இன ஒழிப்புக்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பு அதிக கவனம் செலுத்த வேண்டுமென இன ஒழிப்புக்கு எதிரான அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. பலமுனைகளில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகளின் மூலமே இன ஒழிப்பை ஓரளவுக்காவது தடுக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் செயலகமும், பாதுகாப்புப் பேரவையும் இன ஒழிப்புக்கு எதிராக அதிக முனைப்புடன் செயற்பட வேண்டும் என இன ஒழிப்புக்கு எதிரான அமைப்பின் திட்டப் பணிப்பாளர் ஜில் சாவிட் தெரிவித்துள்ளார். இன ஒழிப்பு இடம்பெறக்கூடிய நாடுகள் குறித்து சிகப்பு சமிக்ஞை பட்டியலொன்று வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை, கொங்கோ, சூடானின் டார்பூர், மியன்மார், ஈராக், ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் மற்றும்…

  11. முத்தமிடும் தூரத்தில் கிளிநொச்சி முத்தமிடும் தூரத்தில் கிளிநொச்சியை நெருங்கி விட்டோம் என இலங்கை பாதுகாப்புப் படை வட்டாரங்கள் கூறியுள்ளன. இதுகுறித்து பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், டிஎப்1, 57 பிரிவு படைகள் தற்போது கிளிநொச்சியை முத்தமிடும் தூரத்திற்கு நெருங்கி விட்டன. கிளிநொச்சி நகருக்கு அருகே வந்து விட்டன. சமீபத்திய மோதல்களில் விடுதலைப் புலிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அடம்பன், நிவில் ஆகிய பகுதிகளில் நேற்று பெரும் உயிரிழப்பை அவர்கள் சந்தித்துள்ளனர். பரந்தன், அடம்பன், மேற்கு இரணமடு, தெர்முரிக்கண்டி, கொக்குவில், கனகராயன்குளம், புளியங்களுண், வட கிழக்கு ஒலுமடு, அலம்பில் ஆகிய பகுதிகள் வழியாக ராணுவம் முன்னேறி வருகிறது என்றார். -T…

  12. சிறிலங்கா தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகாவின் கருத்தானது தமிழர்களின் சுயமரியாதைக்கு விடுக்கப்பட்ட சவால் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தா.பாண்டியன் நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, தமிழ்நாட்டு தலைவர்களை, கோமாளிகள் என்று கூறியிருக்கிறார். இமயம் சென்று கனகவிஜயனின் தலையிலேயே கல் சுமக்க வைத்து, சேரன் செங்குட்டுவன் அழைத்து வந்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. அந்த கனகவிஜயனின் ஆணவ சொற்கள் தான் இன்று சரத் பொன்சேகா வாயில் வெளிப்பட்டுள்ளது. இந்தியா என்ற வலிமைமிக்க நாட்டின் முக்கிய பகுதியாக தமிழ்நாடு விளங்குகிறத…

    • 2 replies
    • 672 views
  13. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா நிரந்தரமாக நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானம்? www.globaltamilnews.com முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா நிரந்தரமாக நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்திருப்பதாகத் தெரிய வருகிறது. 'வோர்ட்டர்ஸ் ஏஜ்' வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கமைய 30 இலட்சம் ரூபாய் நட்ட ஈட்டைச் செலுத்தி விட்டு அவர் நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்திருக்கிறார். உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கமைய அவர் ஊழல் மற்றும் லஞ்ச விசாரணைக்குழுவின் விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளார். திருமதி குமாரணதுங்க கொழும்பு றொஸ்மிட் பிளேஸிலுள்ள தனது காணியையும் வீட்டையும் விற்பதற்காக பிரபல காணி விற்பனை தரகர் ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது. இத்தகைய …

    • 12 replies
    • 1.9k views
  14. எல்லா மக்களையும் அழித்து விட்டால் சிறிலங்கா அரசாங்கம் யாருடன் பேச்சு நடத்தப் போகின்றது என திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் மீது, இராணுவத் தாக்குதல் நடத்தும் சிறிலங்கா அரசாங்கத்தை கண்டித்து தமிழக அரவாணிகள் சங்கங்களின் சார்பில் சென்னையில் நேற்று திங்கட்கிழமை உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்ற இந்த உண்ணாநிலைப் போராட்டத்தினை கனிமொழி தொடங்கி வைத்து உரையாற்றினார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது: சமுதாயத்தினால் ஒடுக்கப்பட்டு, மொழியற்று புறக்கணிக்கப்பட்டு வாழ்கின்ற அரவாணிகள், இலங்கை தமிழர்களுக்காக உண்ணாநிலைப் போராட்டம் நடத…

  15. கிழக்கு படுகொலைகளை அனைவரும் கண்டித்தால் வேற்றுக் கிரக வாசிகளா கொலையாளிகள்? பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.சந்திரநேரு சந்திரகாந்தன் ஆற்றிய உரை... மாகாண சபைத் தேர்தலின் பின்னர் கிழக்கில் அமைதி திரும்புமென மக்கள் எதிர்பார்த்த போதும் அது பகற்கனவாகி விட்டது. இரண்டு வருட கால யுத்தத்தின் பின்னர் ஆயுதக்குழு ஒன்றிடம் கிழக்கு மாகாணம் ஒப்படைக்கப்பட்டத மக்களும் அதிகாரம் மக்களுடைய கைகளில் கிடைத்துள்ளதென்பதால் எந்தவிதமான அச்சமும் இல்லாமல் வாழ முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தனர், ஆனால் தற்போது அது ஒரு பகற்கனவாக முடிந்துள்ளது. கொலைகள், கடத்தல்கள் , காணாமல் போதல் போன்றன நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் ப…

  16. இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினை விடயத்தில் இந்திய மத்திய அரசு இரண்டுங்கெட்டான் நிலையில் நடந்து கொண்டு வருகின்றமை இலங்கையில் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் - குறிப்பாகத் தமிழகத்திலும் - பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றது. ஒருபுறம் - மத்தியில் தனது ஆட்சியைத் தொடர்ந்து தக்க வைப்பதற்கு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் தயவில் தங்கியிருக்கும் மத்திய ஆட்சிப் பீடம், அதற்காகத் தமிழகத்தில் புதிதாகக் கிளர்ந்தெழுந்து வரும் ஈழத் தமிழர் ஆதரவு எழுச்சிக்கு சாதகமாகச் செயற்படுவதுபோல் காட்டப்படவேண்டிய கட்டாயம். மறுபுறம் - ஈழத் தமிழர்களுக்காகக் களத்தில் போராடி வரும் விடுதலைப் புலிகள் தொடர்பில், மத்திய கூட்டரசின் பிரதான கட்சியான காங்கிரஸின் மூத்த தலைவர்கள் கொண்டுள்ள கருத்து நிலைப்பாட…

  17. சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வந்த அமைச்சர் கரு ஜெயசூரியவுக்கு பிரதித் தலைவர் பதவி வழங்கியமையால் அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்குள் முரண்பாடுகள் எழுந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 443 views
  18. தாயகத்தில் வாழும் மக்களை சிங்கள அரச பயங்கரவாதத்தின் இன அழிப்பிலிருந்து பாதுகாக்குமாறு கோரி பிரான்சில் எதிர்வரும் சனிக்கிழமை (13.12.08) மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 412 views
  19. சிறிலங்காவின் இரண்டு மாகாண சபைகள் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 477 views
  20. ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகளை நிறுத்தக் கோரி ஒரு நாள் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு தகவல் தொழில்நுட்பத்துறை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 560 views
  21. இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும் ஈழத்தில் நிரந்தர போர் நிறுத்தம் வேண்டி வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கத்தில் இன்று அரவாணிகள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார்கள். தமிழகமெங்கிலும் இருந்து 800 அரவாணிகள் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். இவர்கள் அத்துனை பேரும் தங்களது ஒரு நாள் வருமானத்தை ஈழத்தமிழர்களுக்கு நிவாரணநிதியாக வழங்கினார்கள். கவிஞர் கனிமொழி எம்.பி. இந்த உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்தார். அப்போது அவர், ‘’திருநங்கைகள் இதுவரை தங்களது பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். முதன் முதலாக இப்போதுதான் பொதுப்பிரச்சனைக்காக போராட்டம் நடத்துகிறார்கள். இலங்கை பிரச்சனையில் அவர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள்’’ என்று தெரிவித்தார்.…

  22. புதுச்சேரி வி-5 குழு ஓவியர்கள் மற்றும் ஓவியக் கலைஞர்கள் சார்பில் ஈழத்தமிழர் நிவாரண நிதிக்காக வீதியோர ஓவியக் கண்காட்சி கடற்கரைச் சாலை காந்தி திடலில் இரண்டு நாட்கள் (6,7-12-2008) நடைபெற்றது. கண்காட்சிக்கு ஓவியர் தனசேகர் தலைமைத் தாங்கினார். ஓவியர் ஸ்ரீதர் வரவேற்றார். ஓவியர்கள் எழிலரசன், திருநாவுக்கரசு, வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுச்சேரியைச் சேர்ந்த ஓவியர்கள் கலந்துக் கொண்டு ஆதரவுத் தெரிவித்தனர். கண்காட்சியில் இளம் ஓவியர்கள் தங்கள் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். மேலும் காண்காட்சிக்கு வருவோர்களின் முகபாவங்களை ஓவியர்கள் உடனுக்குடன் வரைந்தும் அதன்மூலம் தொகை ஈட்டினர். ஓவிய விற்பனை மற்றும் ஓவியம் வரைந்ததின் மூலம் கிடைக்கும் நிதியை ஈழ…

  23. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளையில் சிறிலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணி நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் தாயும் அவரது ஒன்பது வயதான மகனும் உட்பட மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  24. தமிழர் போராட்டத்தை அடக்க கச்சை கட்டி நிற்கும் சிங்களம் [08 டிசம்பர் 2008, திங்கட்கிழமை 10:25 மு.ப இலங்கை பிரிவினைக்கு ஆதரவாகச் செயற்படமாட்டோம் என நாடாளுமன்றத்தில் செய்துகொண்ட தமது சத்தியப்பிரமாணத்துக்கும், அரசமைப்புக்கும் எதிராகச் செயற்பட்டார்கள் என்று தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத்துறையினர் தாக்கல் செய்த முதனிலை அறிக்கையை (b report) ஒட்டித் தாம் கடந்த வெள்ளியன்று காலை விடுத்த உத்தரவை அன்று மாலையே வாபஸ் பெற்றுக்கொண்டு விட்டார் கொழும்பு பிரதம நீதிவான். மட்டக்களப்பு எம்.பிக்களான சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி, பாக்கியசெல்வம் அரியநேத்திரன், யாழ். மாவட்ட எம்.பிக்களான செல்வராஜா கஜேந்திரன…

    • 1 reply
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.