Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கியூபா மற்றும் சிறிலங்கா இடையேயான இருதரப்பு பொருளாதாரம் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான குழுவின் முதல் கூட்டம் கியூபா தலைநகர் ஹவானாவில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 619 views
  2. தமிழக முதலமைச்சரை விமர்சித்தவனை எப்படி மன்னிக்க முடியும்.? என்று சிறிலங்கா படைத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 728 views
  3. இந்தியாவின் மும்பாயில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவராகக் கூறப்படும் அஜ்மலை, நேபாளத்திலிருந்து கடத்தி வந்தது இந்திய உளவு அமைப்பான "றோ" தான் என்று பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த சட்டத்தரணியான சௌத்ரி மொகமட் பரூக் கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  4. சிறிலங்கா படைத்தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஆசிரியர் உட்பட 4 பேரை சிறிலங்கா படையினருடன் இணைந்து செயற்படும் துணை இராணுவக் குழுவினர் கடத்திச் சென்றுள்ளதாக யாழ். மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 690 views
  5. சிறிலங்காவின் தபால்துறை அமைச்சு நட்டத்தில் இயங்குவதால் தனக்கு புதிய துறையை ஒதுக்கக் கோருவதைத் தவிர வேறு வழியில்லை என்று அமைச்சர் மகிந்த விஜேசேகர கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 586 views
  6. மூதூரில் 17 அப்பாவி தன்னார்வப் பணியாளர்கள் சிறிலங்கா படைத்தரப்பினரால் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான இரு காணொளி பதிவுகளில் ஒன்று மர்மமான முறையில் காணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 783 views
  7. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி மகிந்த அரசுடன் இணைந்த அதிருப்தியாளர்கள் குழுவினர் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 539 views
  8. தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து அம்பகாமம் கிராமத்தை கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 828 views
  9. பாகிஸ்தானில் இந்திய அணிக்குப் பதில் விளையாட தயார் என்று சிறிலங்கா துடுப்பாட்ட சபை அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  10. முல்லைத்தீவு நகரின் தென்மேற்கு கிராமமான முள்ளியவளையை சிறிலங்கா படைத்தரப்பு விரைவில் கைப்பற்றும் என்று சிறிலங்காவின் அரசின் ஆங்கில நாளேடான டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 462 views
  11. இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வருகை குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை பெறப்படவில்லை என்று சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபேயவர்த்தன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 432 views
  12. தமிழர்களின் கடல்ப்பிரதேசத்தை சிங்களப்படைகள் ஆளஇடமளியோம். இவ்வாறு எமது தாயக நிலப்பரப்புக்களை ஆக்கிரமித்து வரும் எதிரிப்படைகளை மக்களின் துணையுடன் எமது பகுதிகளில் இருந்து விரட்டியடிப்போம் என கடற்புலிகளின் வடமராட்சிக் கோட்டப் பொறுப்பாளர் அண்ணாத்துரை தெரிவித்துள்ளார். இன்று ஆழியவளைப் பகுதியில் இடம்பெற்ற சமகால அரசியல்க் கருத்தூட்டல் நிகழ்விலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார். வடமராட்சி கோட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் மலரவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடற்புலிகளின் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

  13. இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்ற எறிகணைத் தாக்குதலில் முல்லைத்தீவு அரசாங்க மருத்துவமனையும் பாதிக்கப்பட்டதாக அங்கிருந்து வருகின்ற செய்திகள் கூறுகின்றன. இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே அங்கு தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும், முல்லைத்தீவு மாஞ்சோலை, முள்ளியவளை பகுதிகளில் இன்று திங்கட்கிழமை பிற்பகலில் தொடர்ச்சியான எறிகணை தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொட்டும் மழைக்கு மத்தியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் இந்த எறிகணை தாக்குதல்களின்போது பொது வைத்தியசாலை பாதிக்கப்பட்டதையடுத்து, அது செயலிழந்துள்ளதாக அந்த வைத்தி்யசாலையின் மருத்துவ அத்தியட்சகர் டாக்டர் வி.சண்முகராஜா தெரிவிக்கின்றார். …

  14. தமிழர்களின் கடல்ப்பிரதேசத்தை சிங்களப்படைகள் ஆள இடமளியோம் - வடமராட்சிக் கோட்டப் பொறுப்பாளர் திகதி: 15.12.2008 // தமிழீழம் // [வன்னியன்] தமிழர்களின் கடல்ப்பிரதேசத்தை சிங்களப்படைகள் ஆளஇடமளியோம். இவ்வாறு எமது தாயக நிலப்பரப்புக்களை ஆக்கிரமித்து வரும் எதிரிப்படைகளை மக்களின் துணையுடன் எமது பகுதிகளில் இருந்து விரட்டியடிப்போம் என கடற்புலிகளின் வடமராட்சிக் கோட்டப் பொறுப்பாளர் அண்ணாத்துரை தெரிவித்துள்ளார். இன்று ஆழியவளைப் பகுதியில் இடம்பெற்ற சமகால அரசியல்க் கருத்தூட்டல் நிகழ்விலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார். வடமராட்சி கோட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் மலரவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடற்புலிகளின் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். …

  15. பொன்னாலை வரதராஐப் பொருமாள் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை திகதி: 15.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] பொன்னாலை வரதராஐப் பொருமாள் ஆலயத்திற்கு அருகில் படையினரால் புதிய பௌத்த விகாரை ஒன்று நிறுவப்பட்டு வருகிறது. உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் இப்பகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. படையினரால் நிறுவப்பட்டு வரும் இப்பௌத்த விகாரை வரதராஐப் பெருமாள் ஆலயக் காணியில் நிறுவப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சங்கதி

  16. படை அணிவகுப்பைப் பார்வைவயிடச் சென்றபோது வீதி விபத்து - 11 பேர் காயம் திங்கள், 15 டிசம்பர் 2008, 17:25 மணி தமிழீழம் [தாயகன்] புத்தளம் - அநுராதபுரம் வீதியில் இன்று காலை இடம்பெற்ற ஊர்தி விபத்தில் பொதுமக்கள் 11 பேர் காயமடைந்துள்ளனர். அநுராதபுரத்தில் நடைபெற்ற சிறீலங்கா புதிய படையணியின் அணிவகுப்பைப் பார்வையிடச்சென்றபோது இன்று காலை 8:30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. காயமமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காயமடைந்தவர்கள் படை உறுப்பினர்களா, அல்லது உறவினர்களா என்ற விபரம் வெளியிடப்படவில்லை. இவர்கள் பயணித்த சிற்றூந்து கருவலகஸ்வேவ பகுதியில் பாரவூர்தியுடன் மோதியுள்ளது. pathivu

  17. இலங்கையில் நடைபெறும் தமிழர்களுக்கு எதிரான போரை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி 15.12.2008 திங்கள் அன்று மதியம் 12.30 மணியளவில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களை பாராளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து புதுச்சேரியை சேர்ந்த அரசியல் கட்சிகள்,சமுதாய இயக்கத் தலைவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். புதுச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலர் சு.பாவாணன், செயலர் ப.அமுதவன், மறுமலர்ச்சி தி.மு.க பொறுப்புக் குழு உறுப்பினர் வ.செல்வராசு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜீ.சுந்தரமூர்த்தி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் செயலாளர் யூ.முத்து, லோக் ஜனசக்தி தலைவர் புரட்சிவேந்தன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ…

  18. இலங்கை அரசாங்கம் சமீபத்தில் ஆரம்பித்திருக்கும் தமிழ் மொழியிலான பாதுகாப்பு இணையத்தளத்தில் வைரஸ் இருப்பதை புலம் பெயர் கணணி நிபுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். இலங்கை அரசின் பாதுகாப்பு இணையத்திற்கு செல்வோரின் கணணியில் TROJAN Js/Xilos வைரஸ் தாமாகவே உள்நுளைந்து கணணியின் IP முகவரி , மற்றும் இரகசிய தகவல்களை எடுத்துச் செல்கிறது. ANTI-VIRUS எனப்படும் பாதுகாப்பு மென் பொருள் உங்கள் கணணியில் இருந்தால் கூட இவை உங்கள் கணணியை தாக்கவல்லதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த வைரஸ் உள்நுளைந்து உங்கள் இரகசிய தகவல்களை திரட்டியபின்னர் ADOBE மென்பொருளாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு நீங்கள் உபயோகிக்கும் இணையம் மூலமாகவே வெளியில் சென்று வைரஸை இயக்கும் இலங்கை அரசிற்கு தக…

  19. இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி தமிழகத் தலைநகர் சென்னையில் தகவல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களும் பணியாளர்களும் இருநாள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 448 views
  20. தீவிர மொழிப் பற்றும், ஆழமான இன உணர்வும் கொண்டு தமிழின எழுச்சிக்குப் பெருந்தொண்டாற்றிய மாம்பழம் என எல்லோராலும் அழைக்கப்பட்ட தேவதாசன் அன்ரனி அமெரிக்காவின் நியூஜேர்சி மாநிலத்தில் காலமானார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 940 views
  21. கிளிநொச்சி மீதான தாக்குதலும் அரசின் எதிர்பார்ப்பும் ஜெயராஜ் கிளிநொச்சி நகரை ஆக்கிரமித்தல் / கைப்பற்றுதல் தொடர்பில் சிறிலங்கா இராணு வத்தரப்பின் மதிப்பீட்டில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்வியை எழுப்புவதற்கான சமிக்ஞைகள் சில வெளிப்பட்டுள்ளன. இதில் கிளிநொச்சிக் களமுனையில் கடந்த ஒரு வார காலத்தில் நிலவும் மோதல் தணிவு குறிப்பிடத்தக்கதாகவுள்ளது. மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தைப் பொறுத்தும், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகாவையும் பொறுத்தும் கிளிநொச்சியைக் கைப்பற்று வதற்கான ஃஆக்கிரமிப்பதற்கான கால நிர்ணய மாக நவம்பர் மாதத்தின் இறுதி கொள்ளப் பட்டிருந்தது. அதாவது தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் (26.11)க்கும், மாவீரர் நாள…

    • 0 replies
    • 2.5k views
  22. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் இந்தியாவை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  23. பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெற உள்ள துடுப்பாட்டப் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் சிறிலங்காவை அழைக்க பாகிஸ்தான் துடுப்பாட்ட சபை முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 397 views
  24. புலிகளுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின் பொலிஸ் உயரதிகாரி உட்பட மூன்று பொலிஸார் கைது வீரகேசரி இணையம் 12/15/2008 9:54:02 AM - தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிகளை வழங்கி வந்தார்களென்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் அதிகாரி உட்பட மூன்று பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பொலிஸ் உயரதிகாரி மேல் மாகாண விசேட பொலிஸ் செயற்பாட்டுப் பிரிவில் முக்கிய பதவி வகிப்பவராவார். ஏனைய இருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள்களாவர்.கைதுசெய்ய

  25. நண்பனையும் எதிரியையும் இந்தியா அடையாளம் காண நல்ல சந்தர்ப்பம் [15 டிசம்பர் 2008, திங்கட்கிழமை 10:10 மு.ப இலங்கை இலங்கையில் யுத்தத்தை நிறுத்தக் கோரும் தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கருத்தை, இந்திய நிலைப்பாடாக இலங்கைக்குத் தெரிவிப்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இயன்ற விரைவில் கொழும்புக்குச் செல்வார் என, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடனான தமது சந்திப்பை அடுத்துத் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அறிவித்தார். அந்த அறிவிப்பு விடுத்து பத்துநாட்கள் கடந்து விட்டன. ஆனால், இந்திய வெளிவிவகார அமைச்சரின் உத்தேச இலங்கை விஜயம் இன்னும் கைகூடவே இல்லை. இந்தத் தாமதத்திற்கு - விஜயம் இழுபறிப்படுவதற்கு - பல காரணங்கள் பல தரப்பினாலும் கூறப்படுகின்றன. மும்பையில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.