Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எல்லை மீறிய அரசியல் நெருக்கடிகளுக்கிடையில் சிக்கி அல்லற்படும் ஈழத்தமிழ் இனத்தின் துயர் துடைக்கும் கருணை உள்ளம் படைத்த கருணாநிதிக்கு ஈழத்தமிழினம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது. என்று த.தே.கூட்டமைப்பின் முன்னாள் பா.உ மா.க.ஈழவேந்தன் தெரிவித்துள்ளார்;. மேலும் : இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக தன் பதவியைத் துறப்பதற்கும் ஆயத்தம் என்று கூறியதுடன் தமிழனுக்கு தீங்கு வந்தால் அதை சகித்துக் கொண்டு பதவியில் நீடிக்கும் பதவி வெறி எந்தத் தலைவருக்கும் கிடையாது என்று முதலவர் தெரிவித்திருந்தமை வரவேற்கத்தக்கது. முனபொரு தடவை நாம் முதல்வரை சந்தித்து ஈழத்தமிழர்களின் பிரச்சனைகள் குறித்து தெரிவித்தபோது தமிழக மக்கள் கிளாந்தெழும் போது அவர்களை அடக்குவது கடினம். அந்தக் காலம் விரைவில் வரு…

    • 2 replies
    • 1.2k views
  2. 11/18/2008 8:54:25 AM - முல்லைத்தீவு நாயாறுப்பகுதியில் கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற கடற்சமரில் விடுதலைபுலிகளின் இரு படகுகளை கடற்படையினர் தாக்கியழித்துள்ளதாகவும் இதில் 6 விடுதலைப்புலி உறிப்பினர்கள் வர கொல்லப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை இத்தாக்குதலுக்கு உதவும் வகையில் விமானப்படையினரின் MI-24 ரக உலகு வானூர்திகள் தாக்குதல் நடத்தியதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=8472

    • 1 reply
    • 1.6k views
  3. யாழில் ஓட்டு குழுக்களினாலும் ஸ்ரீலங்கா ராணுவத்தாலும் கடத்தி கொலை செய்யப்பட்ட பட்டியல் இது .

  4. தமிழர்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகள் என்வென்று அறியும் பொருட்டு சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பில் வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துமாறு த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். அந்த வாக்கெடுப்பின் மூலம் மக்கள் வழங்கும் ஆணையை ஏற்க த.தே.கூட்டமைப்பு தயாராக இருக்கிறது என்று மேலும் தெரிவித்தார். மேலும் : இந் நாட்டில் சிங்களவர்களே 75 வீதமக உள்ளனர் என்பதால் சிங்களவர்களுக்கே இந்த நாடு சொந்தம் என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜாதிக ஹெல உறுமயவினரும் இதே கருத்தையே தெரிவித்துள்ளனர். இந்த நிலையின் கீழ் சிறுபான்மையினரின் பிரச்சினையை எப்படித் தீர்க்க முடியும்? இந்த யுத்தத்தைக் கூட பொன்சேகா த…

  5. இலங்கையில் போரை நிறுத்த இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாணவர் பிரிவு எழுச்சிப் பேரணி நடத்தவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  6. வவுனியா மாவட்டம் குருமண்காடு பகுதியில் நேற்று முன்நாள் ரெலோ அலுவலகம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரு உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 890 views
  7. சென்னை: இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்க உள்ளது. ஆனால் இந்த கூட்டத்தை திமுக புறக்கணித்துள்ளது. இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. ராணுவத்தின் பயங்கர தாக்குதலில் அங்குள்ள தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. போரை நிறுத்தி, அமைதி பேச்சு வார்த்தை நடத்த அந்நாட்டுக்கு மத்திய அரசு கூற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் கடந்த மாதம் முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இலங்கை பிரச்சைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும…

  8. கொழும்பில் மீண்டும் வகை தொகையின்றிய ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும் கொலைகளும் - பிரதி அமைச்சர் ராதாகிருஸ்ணனுடன் நேர்காணல் லோசனை விடுவிப்பதற்கான முயற்சி தொடர்கிறது என்கிறார்: விசேட செவ்வி: http://www.globaltamilnews.net/tamil_news....=2261&cat=1 மலேசியாவிலிருந்து இலங்கை திரும்பி வெள்ளவத்தையில் உள்ள உணவு விடுதியில் வேலை செய்து வந்த யாழ். நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து வெள்ளவத்தை காவல் நிலையத்திலும் பிரதியமைச்சர் பெ. இராதாகிருஷ்ணனிடமும் முறையிடப்பட்டுள்ளது. யாழ். நகரைச் சேர்ந்தவரும், வெள்ளவத்தை 37ஆவது ஒழுங்கையில் வசிப்பவரும் ஹம்டன் லேன் சிந்து கபேயில் தொழில் புரிந்துவந்தவர…

  9. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் ரசிகர்கள் இன்று உண்ணாவிரதம் இருக்கின்றனர். 37 இடங்களில் உண்ணாவிரதம் நடப்பதாக தகவல் வந்துள்ளது. உண்ணாவிரத மேடையில் நடிகர் விஜய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் ரசிகர்கள் இன்று உண்ணாவிரதம் இருக்கின்றனர். 37 இடங்களில் உண்ணாவிரதம் நடப்பதாக தகவல் வந்துள்ளது. ரசிகர் மன்ற நற் பணி இயக்கத்தினரே இப் போராட்டத்தை நடத்துகின்றனர். அவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் போராட்டமாக இது உள்ளது. இதில் எனது முயற்சி எதுவும் இல்லை. இப்படிப்பட்ட ரசிகர்கள் எனக்கு இருப்பதை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. அவர்களுக்கு எ…

  10. சிறிலங்கா படையினரின் தாக்குதல்கள் காரணமாக வன்னிப்பெரு நிலப்பரப்பில் 14,000 மாணவர்கள் இதுவரை பாடசாலைகள் எதிலும் இணைந்து கொள்ளவில்லை என்று வலயக் கல்வி பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 410 views
  11. நாவற்காடு சம்பவத்தைத் தொடர்ந்து சிங்கள வைத்தியர்கள் பாதுகாப்பு கோரியுள்ளனர் [ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2008, 07:19.19 AM GMT +05:30 ] மட்டக்களப்பு நாவற்காடு பிரதேசத்தில் சிங்கள வைத்தியர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென பிரதேச சிங்கள வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பில் உள்ள சகல சிங்கள வைத்தியர்களையும் கொழும்பிற்கோ அல்லது மாகாண சுகதார திணைக்கள காரியாலயத்திற்கோ செல்லுமாறு கோரப்பட்டுள்ளதாக அரச சுகாதார சேவையாளர் சங்க உப செயலாளர் டொக்டர் உபுல் குணசேகர தெரிவித்துள்ளார். மேலும், மட்டக்களப்பில் உள்ள சிங்கள வைத்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடு…

    • 2 replies
    • 1.4k views
  12. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரிப் பகுதியில் நடைபெற்ற மோதல்களில் சிறிலங்கா படையின் எட்டு அதிகாரிகள் உட்பட 54 போ் கொல்லப்பட்டுள்ளனர். 350 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.4k views
  13. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் நகரப் பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் மூன்று பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். கத்தோலிக்க தேவாலயம் தேசமடைந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 663 views
  14. வன்னி மக்களின் அவலம் தொடர்பில் கிளாரஸ் வாழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கவன ஈர்ப்பு நிகழ்வு நவம்பர் ஏழாம் திகதி பிற்பகல் கிளாரஸ் புகையிரத நிலையத்துக்கு அண்மித்ததாக உள்ள பூங்காவில் நடைபெற்றது. படங்கள் மற்றும் மேலதிக செய்திகள் உள்ளே........ http://www.tamilseythi.com/tamilar/glarus-2008-11-17.html

  15. வீரகேசரி இணையம் - யாழ்ப்பாணத்தில் ஆட்டோ உரிமையாளர்கள், ஏ-32 பாதையை இராணுவத்தினர் கைப்பற்றியதை இன்று பட்டாசு கொளுத்திக் கொண்டாடினர். யாழ்ப்பாணம் வேம்படிச் சந்தியில் இருந்து ஆரம்பமான ஆட்டோ ஊர்வலம் ஆஸ்பத்திரி வீதி, காங்கேசன் துறை வீதி உட்பட யாழ். நகர சபை மைய பகுதிக்கு பாண்ட் வாத்திய இசையுடன் வந்து சேர்ந்தது. வீதிகளில் பட்டாசுகள் திடீரென வெடிக்க வைக்கப்பட்டமையால் மக்கள் பதற்றமடைந்தனர். எனினும் பின்னர் ஒலிபெருக்கி மூலம் தகவல் சொல்லப்பட்டதையடுத்து மக்கள் தமது வழமையான பணிகளை மேற்கொண்டனர். அதேவேளை நகர்ப்புற பகுதியில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்கள் தமது முகங்களைத் துணியினால் மறைத்து இருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

  16. வடபோர் முனையில் சிறீலங்காப் படையினர் மூன்றாவது நாளாகவும் மேற்கொண்ட படை நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளனர். இதில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 29 படையினர் காயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை காலை 5:00 மணி முதல் பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலறி எறிகணைகள், மோட்டார் எறிகணைகள், மற்றும் கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் முகமாலை நோக்கிய முன்னகர்வுகளில் படையினர் ஈடுபட்டனர். இதற்கு எதிராக போராளிகள் முற்பகல் 11:00 மணிவரை எதிர்த் தாக்குதலைத் தொடுத்து படையினரை பழைய நிலைகளுக்குப் பின்வாங்கச் செய்துள்ளனர். இன்போது படையினர் தரப்பில் 8 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 29 படையினர் காயமடைந்துள்ளனர். இ…

  17. இந்திய அரசு ஆயுதங்கள் வழங்குவதனை நிறுத்தக் கோரியும், சிறிலங்கா அரசு போரை நிறுத்தக் கோரியும் தமிழ்நாட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர்களும் மாணவர்களும் இணைந்து கவனயீர்ப்பு நிகழ்வினை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  18. பூநகரியை கைப்பற்றிய படையினருக்கு மகிந்த வாழ்த்து தெரிவிப்பு [சனிக்கிழமை, 15 நவம்பர் 2008, 01:01 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பூநகரியை கைப்பற்றியதற்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தனது படையினருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று சனிக்கிழமை அரச தலைவர் செயலகத்தில் இருந்து வெளியான வாழ்த்து செய்திக்குறிப்பில், போர்க் களத்தில் உள்ள படையினருக்கு பாராட்டும் மகிழ்ச்சியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆயுதங்களை கீழே வைத்து விட்டு பேச்சுக்கு வருமாறும் மகிந்த விடுதலைப் புலிகளை வற்புறுத்தியுள்ளார். புதினம்

  19. பூநகரி வெற்றியை ஒரு வார விழாவாக கொண்டாடுகிறது சிறிலங்கா அரசு [சனிக்கிழமை, 15 நவம்பர் 2008, 11:08 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பூநகரி பிரதேசம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதற்கு தலைநகர் கொழும்பிலும் சிங்கள கிராமங்களிலும் தொடர் வெற்றி விழா கொண்டாடப்படவுள்ளது. மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பூநகரி ஊடாக செல்லும் ஏ-32 வீதியை படையினர் முழுமையாக கைப்பறிய செய்தியை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி ஊடாக இன்று சனிக்கிழமை இரவு அறிவித்ததுடன் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் சவால் விடுத்துள்ளார். இதனையடுத்து அரச தலைவர் செயலகத்தின் ஆலோசனையில் விழாவுக்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக கொழும்பு தகவ…

  20. 1993ம் ஆண்டுக்கு பின்னர் முதல் தடவையாக அரசாங்கப்படையினர் மேற்குக் கரையோரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றியுள்ளனர். தற்போது வன்னியில் இடம்பெற்று வரும் யுத்த முன்நகர்வுகள் குறித்து ரொய்டர் செய்திச் சேவை முக்கிய தலைப்புக்களின் கீழ் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. முன்கூட்டிய தேர்தல்கள்: இத்த யுத்த வெற்றியை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தேர்தல் முனைப்பிற்காக பயன்படுத்தக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள்; அமைப்பின் மீது மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு தாக்குதல்களையும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தனது அரசியல் நிலையை வலுப்படுத்திக் கொள்ள பயன்படுத்திக்கொள்ளலாம் எனக் குறிப்பிடப்படுகிறது. சில வேளைகளில் பொதுத் தேர்தல்களும், …

  21. இந்திய நிவாரணப் பொருட்கள் இலங்கையை சென்றடைந்துள்ளன: http://www.globaltamilnews.net/tamil_news....=2248&cat=1 யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வன்னிச் சிவிலியன்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட ஒரு தொகுதி பொருட்கள் இலங்கையை அடைந்துள்ளன. 1700 தொன் நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய மத்திய அரசினால் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் கொழும்பு துறைமுகத்தை அடைந்தள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக பாதிக்கப்பட்ட சிவிலியன்களுக்கு நிவாரணப் பொருள் விநியோகிக்கப்படவுள்ளது. 100 கொள்கலன்களில் குறித்த நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்…

  22. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் விமானங்களின் மூலம் வான் வழியான தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடும் என பாதுகாப்பு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இராணுவப் படையினர் தொடர்ச்சியாக ஈட்டிவரும் வெற்றிகளை முறியடிக்கும் நோக்கில் இத்தகையாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்படக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிது. கிழக்கு கரையோரப் பகுதியின் முக்கிய கடற்படை இலக்குகள் மீது விடுதலைப் புலிகள் விமானம் மூலம் தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் முக்கிய இலக்குகளை பாதுகாக்கும் வகையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நன்றி : www.globaltamilnews.net

  23. பௌத்த மதமும், சிங்கள மொழியுமே இலங்கைக்குரியவை எனத் தெரிவித்திருக்கும் சுற்றாடல் வளத்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ஏனைய மதங்களும், மொழிகளும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டவையெனக் கூறியுள்ளார். இதுவே ஜாதிக ஹெல உறுமயவின் தெளிவான நிலைப்பாடு என கொழும்பு வார இதழொன்றுக்கு வழங்கியிருக்கும் செவ்வியில் அமைச்சர் தெரிவித்துள்ளார். “சிங்கள பௌத்தமே இலங்கைக்குரியவை. சிங்கள மொழியே அரசகரும மொழி. ஏனைய மொழிகளும், சமயங்களும் இங்கு ஸ்தாபிக்கப்பட்டவை. அவை இங்கு குடியேறியவற்றைப் போன்றன” என அமைச்சர் கூறினார். எனினும், சிங்களவர்களுக்கு இருக்கும் அனைத்து உரிமைகளும் ஏனைய சிறுபான்மை இனத்தவர்களுக்கும் உள்ளது எனவும், இதனை சிலர் ஏற்றுக்கொள்ளாதபோதும் ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாடு அதுதான் எனவும் சம்…

  24. ஈழத் தமிழர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற விடயத்தில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் போதிய அக்கறை காட்டவில்லை என்பதையே சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் பேச்சு சுட்டிக்காட்டுகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  25. ""தேசிய ரீதியாக, அனைத்துலக ரீதியாக எமக்குச் சாதகமான அரசியல், இராணுவ சூழ்நிலைகளை வைத்தே, நாம் வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டும்'' என அண்மைய நேர்காணலொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைச் செயலர் பா.நடேசன் தெரிவித்திருந்தார். இதில் குறிப்பிடப்பட்ட விடயம், வன்னி மேற்கு மீதான இராணுவ நடவடிக்கைக்கு புலிகளின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. விடுதலைப் புலிகள், ஆயுதங்களை கீழே போட்டால் மட்டுமே, அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்கிற அரசின் பிரகடனத்திற்குப் பதில் அறிக்கையாகவும் இதனைக் கொள்ளலாம்.அதேவேளை புலிகளுடன் இனிப் பேச்சுவார்த்தை கிடையாதெனவும் அரச தரப்பிலிருந்து செய்திகள் வெளியிடப்படுகின்றன. வடக்கிற்கு வசந்தத்தை அழைத்து வர, புலி அழிப்புப் பாதையில் ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.