ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
சர்வதேச மனித உரிமைகள் தினமும் இலங்கையின் இன்றைய நிலையும் வீரகேசரி வாரவெளியீடு 12/7/2008 10:09:36 AM - உலகில் மனித உரிமை பிரகடனத்தின் சரித்திரங்களை ஆராயுமிடத்து தற்போதைய உலகில்உள்ள பலர் நம்பவோ ஏற்றுக் கொள்ளவோ முடியாத பல உண்மைகள் புலனாகின்றன. மிக அண்மைக்காலமாக பெரும் சர்ச்சைக்குரிய நாடுகளான ஈரான், ஈராக் ஆகிய இரு நாடுகளும் அதாவது முந்தைய பாரசீகம், மெசபத்தேமியா என அழைக்கப்பட்ட நாடுகள் கிறிஸ்துவுக்கு முன் 539 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மனித உரிமை பிரகடனத்தின் பதிவில் உள்ளன. சுருக்கமாக கூறுவதானால் பாரசீக போர் வீரர்கள், மெசப்பத்தேமியாவின் பாபிலோன் என்ற நகருக்குள் கி.மு. 539 இல் சென்று அங்கு தலைமுறை தலைமுறையாக அடிமைகளாக வைக்கப்பட்டிருந்தவர்களை விடுதலை செய்தபொழுது அ…
-
- 0 replies
- 673 views
-
-
தமிழீழத்தில் (வன்னியில்) இடம் பெயர்ந்த மக்கள் படும் அவலனிலை தொடர்பான ஒரு துளி காட்சிகள் இதில் உள்ளது.. அனைவரும் பார்ப்பதுடன் தங்களின் அனைத்துத் தொடர்புகளிற்கும் அனுப்பிவைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.
-
- 0 replies
- 734 views
-
-
ஒலி மூலம் இணைப்பு இலங்கை அரசால் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களில் ரஷ்ய தயாரிப்பு OFAB - 500 (Cluster) கிளஸ்டர் கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. கொத்துக் தொத்தாக மக்களைக் கொல்லும் இப் பேரழிவு ஆயுதம், காலங் கடந்தும் தனது திறமையைக் காட்டும் வல்லமை கொண்டது. அடைமழையால் குளங்கள் உடைப்பெடுக்கின்றன. இராணுவ எறிகணை வீச்சுகளால் உள்ளக இடப்பெயர்விற்குள்ளான வன்னி மக்கள், பேரவலத்தை எதிர்கொள்ளும் போது உலகளவில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை தமிழ் மக்கள் மீது வீசுகிறது இலங்கை அரசாங்கம் இதைத் தட்டிக் கேட்பதற்கு எவருமில்லை. கடந்த புதன்கிழமை, ஒஸ்லோவில் கூடிய 107 நாடுகள், இக் குண்டுகளைத் தயாரிப்பது களஞ்சியப்படுத்துவது, பாவிப்பது என்பவற்றிற்கெதிரான ஒப்பந…
-
- 1 reply
- 712 views
-
-
அரசின் நெருக்குவாரங்களால் வன்னி மக்கள் பேரவல நிலையில்! [07 டிசம்பர் 2008, ஞாயிற்றுக்கிழமை 11:10 மு.ப இலங்கை] வன்னிப் பெருநிலப்பரப்புமீது இலங்கை அரசுப் படைகள் தொடுத்திருக்கும் கொடூர யுத்தம் காரணமாக அப்பகுதித் தமிழ் மக்கள் அனுபவிக்கும் சொல்லொணாத் துன்ப துயரங்கள் சொல்லில் வடிக்க முடியாதவை. தமிழர் தாயகம் தனது இறைமைக்கு உட்பட்ட பிரதேசம் என்று உரிமை கோரிக் கொண்டே அதன்மீது கொடூர யுத்தத்தைத் தொடுத்திருக்கின்றது இலங்கை அரசு. ஒருபுறம் குரூர யுத்தத்தின் பேரழிவுகள். மறுபுறம் அத்தியாவசியப் பொருள்களைக்கூட அங்கு எடுத்துச் செல்லவிடாமல் போடப்பட்டிருக்கும் தடையால் எழுந்துள்ள மோசமான நெருக்கடி மருத்துவ, சுகாதாரப் பாதிப்புகள், வெள்ளப் பேரனர்த்தத்தால் ஏற்பட்டுள்ள பேரவலம். இப…
-
- 0 replies
- 478 views
-
-
http://vimbamkal.blogspot.com/2008/12/tamil-eelam-news.html
-
- 0 replies
- 1.1k views
-
-
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க சுழற்புயல் தமிழர் தாயகம் நோக்கி நகர்ந்துவரும் நிலையில், இன்று மாலை முதல் கிழக்கில் கன மழைப்பொழிவு ஆரம்பித்துள்ளதாக, கிழக்கு மாகாணச் செய்தியாளர்கள் அறிவித்துள்ளனர். அடை மழை, பலத்த காற்று, புயல் என்பன தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு, மற்றும் வடமத்திய மாகாணங்களை இன்று தாக்கும் என, சிறீலங்கா, இந்திய வானிலை அவதான நிலையங்கள் நேற்று அறிவித்திருந்தன. தமிழர் தாயகத்தில் கடந்த வாரம் பெய்த மழை வெள்ள அனர்த்தத்தில் இருந்து மக்கள் மீள முன்னர், மற்றொரு இயற்கையின் சீற்றத்திற்கு அவர்கள் முகம்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை, புயல்காற்று அறிவிப்பு காரணமாக தமிழர் தாயகத்தின் கடற்றொழிலாளர்களின் இன்றைய தொழில் மிகுந்…
-
- 0 replies
- 667 views
-
-
இந்தியாவின் ஆளுமைக்கும் அழுத்தத்துக்கும் இலங்கை அடிபணிந்தே தீர வேண்டும். இதனை இறுதியாக இலங்கையில் நடைபெற்ற சார்க் மகாநாடு தெளிவாகக் காட்டியுள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சார்க் மகாநாட்டில் கலந்து கொள்ளுவதற்காக இலங்கைக்கு வந்த போது பாதுகாப்புக்காக இலங்கைக் கடற்பரப்பில் இந்தியக் யுத்தக் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை இந்தியாவின் ஆளுமைக்கு ஒரு சிறந்த உதாரணம். இவ்வாறு தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன். இந்தியாவின் அழுத்தங்களுக்கு இலங்கை ஒருபோதும் அடி பணியமாட்டாதெனவும் யுத்த நிறுத்தத்துக்கு ஒரு போதும் இடமில்லையெனவும் இலங்கைப் பிரதமர் உட்பட அரசாங்க தரப்பு அமைச்சர்கள் தெரிவிப்பது குறித்து ஷ்கை நியூஸ்…
-
- 0 replies
- 662 views
-
-
ஈராக்கில் தூதுவராலயமொன்றை அமைக்க இலங்கைத் திட்டம்: ஈராக்கில் தூதுவராலயமொன்றை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹூசெய்ன் பய்லா தெரிவித்துள்ளார். பக்தாத் நகரில் சுமார் 5000 த்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் தொழில் வாய்ப்பு பெற்று சென்றிருப்பதாகவும், இவர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2003 அமெரிக்கா ஈராக் மீது யுத்தத்தை ஆரம்பித்த காலப்பகுதியில் இலங்கை ஈராக்கிற்கான தூதரகத்தை மூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும், ஈராக்குடனான வர்த்தக உறவுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஈராக்கில் …
-
- 0 replies
- 497 views
-
-
வெளியுறவுத்துறையில் அரசியல் நியமனங்கள் - ஜனாதிபதிக்கு நெருங்கியவர்களின் ஆதிக்கம் - அதிகாரிகள் விசனம்: www.globaltamilnews.com இலங்கை வெளியுறச் சேவைக்கான நியமனங்களில் 60 வீதமானவை அரசியல் ரீதியான நியமனங்கள் எனவும், தகுதியானர்கள் புறந்தள்ளப்படுவதாகவும் தொழில்சார் அதிகாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர். வெளியுறவுத்துறையில் தொழில்சார் தகுதியுடைய அதிகாரிகளுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை என வெளியுறவுச் சேவை அதிகாரிகள் சங்கம், அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகமவிடம் முறைப்பாடு செய்துள்ளது. முன்னர் 30 வீதமானவர்களே வெளியில் இருந்து வெளியுறவுச் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும், தற்போது அந்த எண்ணிக்கை இரு மடங்காக உயர்வடைந்துள்ளதெனவும் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 482 views
-
-
ஜே.வீ.பீக்குள் முரண்பாடு வலுக்கிறது – விமல் - லால்காந்த சந்திப்பு? http://www.globaltamilnews.com ஜே.வீ.பீக்குள் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த ஆகியோர் ரகசியமாக சந்தித்துக் கலந்துரையாடி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்புக்கு வெளியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ஜே.வீ.பீக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டு உள்ளதுடன், இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் பற்றியும் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விமல் வீரவன்ஸவுடன் தேசிய சுதந்திர முன்னணியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டு…
-
- 0 replies
- 505 views
-
-
போர் நிறுத்தம் வேண்டுமாயின் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும் - நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை – அரசாங்கம்: www.globaltamilnews.com விடுதலைப்புலிகளுடன் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டுமாயின் அவர்கள் கட்டாயமாக ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும் அடுத்த வாரம் இலங்கை செல்லும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக முதலமைச்சரின் போர் நிறுத்தக் கோரிக்கையை அடுத்து, அது குறித்த அழுத்தங்களை ஏற்படுத்தும் நோக்கில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரை இலங்கைக்கு அனுப்பி வைக்க உள்ளதாக அ…
-
- 0 replies
- 429 views
-
-
ோர்வே தொண்டர் நிறுவனத்தின் ஊழியர் கொலை - விசாரணை வேண்டும் - ஐநா மனிதாபிமான இணைப்பாளர்: www.globaltamilnews.com நோர்வே தொண்டர் நிறுவனத்தின் ஊழியர் விக்னேஸ்வரன் கொலை தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென இலங்கைக்கான ஐ.நா. மனிதாபினமான இணைப்பாளர் நீல் புஹ்னே இலங்கை அரசை கோரியுள்ளார். நோர்வே அதிதிகள் கவுன்ஸிலின் ஊழியரான விக்னேஸ்வரன் கடந்த வாரம் மட்டக்களப்பில் வைத்து கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இக்கொலையைக் கண்டித்துள்ள நீல் புஹ்னே மனிதாபிமானப் பணியாளர்கள் தமது கடமைகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு அவர்கள் அச்சமின்றி செயற்படக்கூடிய நிலை இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். முழுமையான விசாரணை நடத்தப்பட்டு கொலையாளி சட்டத்தின் முன் கொண்டுவரப்படுவது விக்ன…
-
- 0 replies
- 548 views
-
-
நன்றி:வீரகேசரி 07.12.2008 ஞாயிறு பதிப்பு
-
- 1 reply
- 2k views
-
-
தமிழக முதல்வர் கருணாநிதியின் தலைமையில் புதுடில்லிக்கு சென்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த குழுவினர் தமது நோக்கத்தை நிறைவேற்ற தவறிவிட்டதாக சென்னையில் உள்ள செய்தியாளர் தரப்புகள் தெரிவித்துள்ளன. இந்தக் குழுவினால் இலங்கை தொடர்பான இந்திய நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை என இந்த தரப்புகள் குறிப்பிட்டுள்ளன. மன்மோகன்சிங், கருணாநிதியின் தலைமையிலான குழுவினருக்கு எவ்வித உறுதிப்பாடான உறுதிமொழியையும் வழங்கவில்லை என்றும் சென்னையின் செய்தியாளர் தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. எனவே ஈழத்தமிழ் மக்கள் மீது தொடர்ந்தும் இனப்படுகொலை யுத்தம் முன்னகர்த்தப்படும் என்ற செய்தியையே இந்த சந்திப்பின் முடிவும் எடுத்துக்காட்டுவதாக சென்னை செய்தியாளர் தரப்புகள் கு…
-
- 1 reply
- 640 views
-
-
கோதபாயவுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி பிரசுரிக்கக கூடாது - சண்டே லீடர் பத்திரிகைக்கு உத்தரவு : http://www.globaltamilnews.net/tamil_news....=3011&cat=1 பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் எதிர்காலத்தில் செய்திகளைப் பிரசுரிக்கக் கூடாதென கல்கிஸை மாவட்ட நீதிமன்றம் 'சண்டே லீடர்' பத்திரிகைக்கு உத்தரவிட்டுள்ளது. 'சண்டே லீடர்' பத்திரிகையில் தொடர்ச்சியாகத் தனக்கெதிராகப் பிறப்பிக்கப்பட்ட கட்டுரைகள் தனது நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்துவதாக கோதபாய ராஜபக்ஸ தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போதே கல்கிஸை மாவலட்ட நீதிமன்ற நீதிபதி பிரியந்த டி சில்வா இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். இந்த மனுவில் …
-
- 1 reply
- 730 views
-
-
A huge amount of Colombo’s war money is lavishly spent in foreign countries in fixing collaborators, capturing or coercing diaspora Tamils and in organizing gala programmes to shield its sins of inhuman war at home," said an activist of a vigilant group of German Tamils called 'Committee for People’s Uprising (CPU),' Friday. "The latest is a festive season’s grand dinner inviting German dignitaries and an exhibition of its 'contemporary civilization' to hoodwink the German public. The Eezham Tamils in Germany effectively neutralized Colombo’s devises on Friday through creative undertakings, right in front of Sri Lanka’s propaganda stall," the activist told TamilNet. …
-
- 1 reply
- 1.5k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளை மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாகவும் கண்மூத்தனமாகவும் எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 476 views
-
-
பூநகரிக்கு முன்னதாகவே கிளிநொச்சியைக் கைப்பற்றுதல் என்ற திட்டம் படைத்தரப்பிற்கு இருந்த நிலையில் கிளிநொச்சி சாத்தியமற்றுப் போகவே, பூநகரி நோக்கிய நகர்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னரும் கிளிநொச்சி நெருக்கடி மிக்கதானதொன்றாக இருக்கையில், முல்லைத்தீவு நோக்கியதான நகர்வு தற்போது மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால் முல்லைத்தீவு பூநகரி அல்ல என ஈழநாதம் பத்திரிகையின் ஆசிரியர் திரு. ஜெயராஜ் நேற்று வெளிவந்துள்ள வெள்ளிநாதம் இதழில் எழுதியுள்ள பத்தியில் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவிற்காக கிளிநொச்சியோ கிளிநொச்சிக்காக முல்லைத்தீவோ கைவிடப்படக் கூடியவையல்ல. ஆகையினால் சிறிலங்கா இராணுவம் அதிகவிலை கொடுக்கக்கூடியதான இரு களமுனைகளைத் திறந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மகிந்த ராஜ…
-
- 6 replies
- 2k views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பினை சுற்றி சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் விளக்கமளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 24 replies
- 3.4k views
-
-
யாழ்ப்பாணத்தின் முதன்மை ஆங்கில ஊடகவியலாளரான ஜோ.அரியரட்ணம் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இன்று காலமானார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 813 views
-
-
இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதாகவும், அதனை நிறுத்தி சிறீலங்கா அரசுடன் இணைந்து செயற்பட வேண்டும் என, APP எனப்படும் பாகிஸ்தானின் அசோசியேட் பிறஸ் ஒஃப் பாகிஸ்தான் (Associated Press Of Pakistan) என்ற ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாகச் சித்தரிக்கும் இந்த ஊடகம், இவ்வாறான அமைப்புகளிற்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இந்தியாவிலும், ஏனைய இடங்களிலும் பயங்கரவாத அமைப்புகளிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதற்கு இந்தியா அயல் நாடுகளான சிறீலங்கா, மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அசோசியேட் பிறஸ் ஒஃப் பாகிஸ்தான் (Associated Press Of Pakistan) …
-
- 3 replies
- 2.8k views
-
-
நாடு பிரிவினைக்கு உள்ளாக வேண்டுமென்று வாதிடுமுன்னர் சிங்களத் தலைவர்களுக்கு ஒரு வாய்ப்பளித்து அவர்களின் உண்மைச் சொரூபத்தை வெளிக்கொண்டுவருவது சிறந்தது' [06 - December - 2008] [Font Size - A - A - A] கலாநிதி ஆ.க.மனோகரன் * எழுதிய "இலங்கை தேசிய இன முரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புகளும்; ஒருவரலாற்றுப் பார்வை 1948 2007' நூல் வெளியீட்டு வைபவம் கடந்த ஞாயிறு மாலை கொழும்பு இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நடைபெற்றபோது முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்திய வெளியீட்டுரை 1926 ஆம் ஆண்டில் "ஒக்ஸ்ஃபொட்" சர்வகலாசாலையில் பயின்று வெளிவந்த எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா அவர்கள் இலங்கைக்கு சமஷ்டி முறையே சிறந்தது என்று கூறிய போது அவ்வாறு அவர் கூ…
-
- 2 replies
- 1.3k views
-
-
வணக்கம், தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையிலான இந்திய பிரதமருடனான சந்திப்பும், ஈழத்தில் போர் நிறுத்தம் தொடர்பான செய்திகளும் நம்பிக்கை ஊட்டுகின்றது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் என்றென்றும் உங்களுக்கு நன்றி உடையவர்களாக இருப்பார்கள். அரசியல் தாமதங்கள் சிங்களத்துக்கு அணுகுண்டின் உடன் பிறவா உறவான "கிளச்ச்டார்" குண்டை புயலாலும், பெரும்வெள்ளத்தாலும் அவதிப்படும் தமிழர்களின் அகதி முகாம் மீது பதினாறு தரம் பரிசீலிக்க அவகாசம் தந்துள்ளது. உலகமே இந்த உயிர் கொல்லி ஆயுதத்தை பிரயோகிக்க மறுக்கும் ஒப்பந்தத்தில் ஒப்பமிடும் இந்நாளில், சிங்களம் கைச்சாத்திடா சீனத்துடன் கை கோர்த்துள்ளது. இதுவே, ஈழத்தில் தமிழருக்கெதிரான இன ஒழிப்பை சிங்களம் எந்த அழுத்தத்தாலும் கைவிடாது என்பதற்கு சான்று. …
-
- 0 replies
- 997 views
-
-
-
ஈழத்தில் நடைபெற்று வரும் போர், இப்பொழுது பல நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது. பெரிய வல்லரசு நாடுகளுடன் மோதியும், பல சதிச் செயல்களிலும் இருந்து வெற்றி பெற்று வரும் இந்த வேளையில், புலத்தில் வாழும் மக்கள் கதைப்பது என்ன? சிறீலங்கா இராணுவத்தினர், தமிழ் மக்களின் பல இடங்களைக் கைப்பற்றி விட்டார்கள், கிளிநொச்சியினையும் இன்னும் சில நாட்களில் கைப்பற்றி விடுவோம் என்று பல மாதங்களும் கடந்து பிடிக்கவில்லை. இப்படி இலங்கை இராணுவத்தினர் தெரிவித்து வருகின்றனர். இராணுவத்தினர், தாங்கள் வெற்றி பெறுவதாக பெரிதாக சந்தோசம் அடைந்து வருகின்றனர். சிறீலங்கா இராணுவத்தினர் வெற்றி பெற வேண்டும் என பல வல்லரசு நாடுகள், இராணுவ உதவிகள், போர் தந்திரங்கள் போன்றவற்றை வழங்கி வருகின்றது. இப்படி பல…
-
- 1 reply
- 1.4k views
-