ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
நவம்பர் மாதம் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை வரை 690 ராணுவத்தினர் காயம் 200 ராணுவத்தினரின் சடலங்கள் மலர்ச்சாலையில்: நவம்பர் மாதம் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை வரை வன்னியில் இடம்பெற்ற மோதல்களில் 690 ராணுவத்தினர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதோடு 200 ராணுவத்தினரின் சடலங்கள் பொறளை ஜெயரத்தின மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவரும் மாற்று பாதுகாப்பு ஊடக தகவல் நிலையப் பொறுப்பாளருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இவர்களில் 235 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் 85 பேர் களுபோவில வைத்தியசாலையிலும் 90 பேர் ஜெயவர்த்தன வைத்தியசாலையிலும் 300 பேர் ராணுவ வைத்தியசாலை…
-
- 2 replies
- 3.3k views
- 1 follower
-
-
சென்னை: இலங்கையில் தற்போது உள்ள சூழ்நிலையில் போர் நிறுத்தம் சரிப்பட்டு வராது என்று முன்னாள் பிரதமரும், இலங்கையின் பிரதான எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார். திருச்சி செல்லும் வழியில் சென்னை வந்த ரணில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், டெல்லியில் சமீபத்தில் பிரணாப் முகர்ஜியுடன் விரிவாகப் பேசினேன். அவர் இந்தப் பிரச்சினையை சிறப்பாக கையாண்டு வருகிறார். அதேபோல, பாஜக தலைவர் அத்வானி, சிபிஎம் தலைவர்கள் ஆகியோரையும் சந்தித்துப் பேசினேன். மீனவர் பிரச்சினை .. 2005ம் ஆண்டு இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த நிலையில் மீனவர்கள் பிரச்சினை அவ்வப்போது தலை தூக்கி வருவது வருத்தம் தருகிறது. இது தவிர்க்கப்பட வ…
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 0 replies
- 1.7k views
-
-
-
இலங்கை நாடாளு மன்றத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப் பைச் சேர்ந்த 22 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் அம்பாறை மாவட்ட எம்.பி. சந்திரநேரு சந்திரகாந்தன். வன்னி பெருநிலப்பரப்பில் தமிழர்களுக்கு எதிராக உக்கிரமான தாக்குதல்களை நடத்தி வரும் இலங்கை ராணுவம், கிளிநொச்சியை வீழ்த்துவோம் என சபதம் ஏற்றிருக்கிறது. இந்த சூழலில், கிளிநொச்சிக்குள் சென்று களம் கண்டு வந்துள்ளனர் சந்திரகாந்தனும் மற்றொரு எம்.பி. ஜெயானந்தமூர்த்தியும். பிரபாகரனையும் இவர்கள் சந்தித்ததாய் வந்துள்ள தகவல்களை அறிந்து, சந்திரகாந்தனை தொடர்பு கொண்டோம். அவர், நக்கீரனுக்கு அளித்த பேட்டியிலிருந்து... வன்னிப் பெருநிலப்பரப்பில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? தமிழினத்தை அழிக்கும் அகோரத்…
-
- 1 reply
- 4.1k views
-
-
குமுதம் 23.11.2008ல் 'தேர்தலுக்கு தயாரான கலைஞர்' என்ற தலைப்பில் சுவாமி வம்பானந்தா பகுதியில் வந்த ஆக்கத்தில் ஈழம் பற்றிய செய்திகள் ``என்ன சுவாமி, இவ்வளவு மும்முரமாக எதைத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள்?'' - ஆர்வமாக விசாரித்துக்கொண்டே ஆசிரமத்துக்குள் நுழைந்தார் சிஷ்யை. ``வாக்காளர் அடையாள அட்டையைத்தான் தேடுகிறேன் பெண்ணே. கலைஞரே தேர்தலுக்குத் தயாராகிறார் போலத் தெரிகிறதே'' என்றவாறே வரவேற்றார் சுவாமி. ``ஆமாம், சுவாமி. `மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகிவிட்டீர்களா?' என்று கோவையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, `எல்லாவற்றுக்கும் தயாராகித்தான் வருகிறோம்' என்று பதில் கூறியிருக்கிறார் கலைஞர். இலங்கைத் தமிழர் பிரச்னையில், கூட்டணிக் கட்சியான காங்கிரஸே கடுமையான …
-
- 0 replies
- 1.8k views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஆயுதங்களைக் கைவிட்டு ஜனநாயகச் செயற்பாடுகளில் இணைந்துகொண்டால் தேர்தல்களில் அவர் போட்டியிட முடியும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியலுக்குள் நுழைந்திருக்கும் பிள்ளையான் மற்றும் கருணாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்றிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பிரபாகரன் ஆயுதங்களைக் கைவிட்டு ஜனநாயக ரீதியாகச் செயற்பட்டு வடபகுதி மக்கள் அவரைத் தெரிவுசெய்தால் வடக்கில் முக்கிய பகுதி அவருக்கு வழங்கப்படும் எனக் கூறினார். “பிரபாகரன் அரசியலுக்கு வருவதை அரசாங்கம் தடுக்கவில்லை. அவர் ஆயுதங்களைக் கைவிட்டு தேர்தலில் போட்டியிடவேண்டும், அதனை நாங்கள் வரவேற்கிறோம்” என நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் ம…
-
- 6 replies
- 1.8k views
-
-
தமிழக நிவாரண பொருட்கள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிப்பு வீரகேசரி இணையம் 11/20/2008 9:23:52 AM - தமிழகத்தில் சேகரிக்கப்பட்டு கொழும்பு துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்ட நிவாரண பொருட்கள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக நாளை மறுநாள் சனிக்கிழமை வன்னிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நாளை நிவாரணப் பொருட்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகளிடம் கையளிப்பர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. உணவு மற்றும் மருந்து அடங்கிய 1,600 மெற்றிக் தொன் பொருட்கள் தமிழகத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை கொழும்பு துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்…
-
- 1 reply
- 750 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு கருணா குழுவினர் திரும்புவதாக தகவல் thatstamil கொழும்பு: இலங்கை அரசிடமிருந்து போதிய அளவில் பணம் வராததால், கருணா தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் வீரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களில் ஒரு பிரிவினர் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத் திரும்பக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கொழும்பிலிருந்து வெளியாகும் சன்டே லீடர் இதழில் செய்தி வெளியாகியுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணா வெளியேறியபோது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கணிசமான விடுதலைப் புலிகளும், கருணாவுடன் சென்றனர். இந்த அமைப்புக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என பெயரிடப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் முழுக்க முழுக்க இல…
-
- 0 replies
- 2.7k views
-
-
யாழ் குடாநாட்லுள்ள பலாலி வான்படைத் தளத்தின் மீது கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் துல்லியமான எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளாக, யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார். எறிகணைகள் பலாலி படைத்தளத்தினுள் வீழ்ந்து வெடித்த பின்னரே யாழ்ப்பாணத்திற்கான செல்பேசிகள் கடந்த ஐந்து நாட்களாக படையினரால் தடை செய்யப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகளின் நெடுந்தூர எறிகணைகள் பலாலியில் மையப்பகுதியில் வீழ்ந்து வெடித்ததை எமது செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், அதனால் ஏற்பட்ட சேதவிபரங்களை உறுதிப்படுத்த முடியவில்லை. முகமாலையூடாக முன்னேற முற்பட்ட படையினரை வழிமறித்து தாக்கியவாறே விடுதலைப் புலிகள் பலாலி படைத்தளம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்தே ச…
-
- 0 replies
- 2.1k views
-
-
ஆயுதங்களை களைந்தால் பிரபாகரன் தேர்தலில் போட்டியிட முடியம் - ரோஹித்த: ஆயுதங்களைக் களைந்து, ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு தேர்தல்களில் போட்டியிட முடியும் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார். ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களான பிள்ளையானுக்கும், கருணாவிற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு கரம் நீட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மக்கள் பிரபாகரனைத் தெரிவு செய்தால் அதனை அரசாங்கம் ஒருபோதும் நிராகரிக்காதென அவர் சுட்டிக்காட்டியுள்…
-
- 2 replies
- 1k views
-
-
இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு மீண்டுமொரு பொது மன்னிப்பு: http://www.globaltamilnews.net/tamil_news....=2388&cat=1 இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு மீண்டுமொரு முறை பொது மன்னிப்பை வழங்க பாதுகாப்புத் தரப்பு தீர்மானித்துள்ளது. இதன்படி, இராணுவத்திலிருந்து தப்பியோடிய அல்லது விடுமுறைக்குச் சென்று திரும்பாத இராணுவ உத்தியோகத்தர்கள் எவ்வித தண்டனைகளும் இன்றி தங்களது படையணிகளில் மீண்டும் இணைந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் நவம்பர் 23ம் திகதி நள்ளிரவு வரையில் இவ்வாறு இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் மீண்டும் இணைந்து கொள்ள முடியும் எனக் குறிப்பிடப்படுகிறது. கடந்த சில மாதங்களாக வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலங்களில் …
-
- 0 replies
- 660 views
-
-
பயங்கரவாதம் குறித்த இலங்கை நிகழ்ச்சி நிரலுக்கும் இந்திய நிகழ்ச்சி நிரலுக்கும் வேறுபாடு கிடையாது – றோஹித: http://www.globaltamilnews.net/tamil_news....=2381&cat=1 இந்தியாவின் மத்திய ஆட்சியினை யார் கைப்பற்றினாலும் இலங்கையின் இறையாண்மைக்கு எதிராகச் செயற்படமாட்டார்கள் என்பது அரசாங்கத்தின் நம்பிக்கையாகும். பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியா, இலங்கையின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டுள்ளது. பிரபாகரன் பிடிபட்டால் அவருக்கெதிராகவுள்ள சட்டப் பிரச்சினைக்கே அரசாங்கம் முதலிடம் வழங்கும் என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். பயங்கரவாதத்தை ஒழிக்கும் இலங்கையின் நிகழ்ச்சி நிரலுக்கும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கும் எந்தவொரு வேறுபாடும் கிடையாது. இலங்கையி…
-
- 0 replies
- 616 views
-
-
குடில்களை அமைக்கத் தேவையான பொருட்களை வன்னிக்கு அனுப்புவதில் வரையறைகள் விதிக்கப்பட வேண்டும் - இராணுவம்: http://www.globaltamilnews.net/tamil_news....=2386&cat=1 தற்காலிக குடில்கள் மற்றும் தங்குமிடங்களை அமைக்கத் தேவையான பொருட்களை வன்னிக்கு அனுப்பி வைக்கும் போது சில வரைகளை பின்பற்ற வேண்டும் என இராணுவத் தரப்பு அறிவித்துள்ளது. வன்னிச் சிவிலியன்களுக்கு அனுப்பி வைக்கப்படும் பொருட்களை விடுதலைப் புலிகள் பயன்படுத்தக் கூடிய அபாயம் நிலவுவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். சிவிலியன்களுக்கு அனுப்பி வைக்கப்படும் பொருட்களைக் கொண்டு புலிகள் முகாம்களையும், பதுங்கு குழிகளையும் அமைத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பா…
-
- 0 replies
- 478 views
-
-
பிரபாகரன் சிறந்த தேகாரோக்கியத்துடன் உள்ளார் – பா.நடேசன: http://www.globaltamilnews.net/tamil_news....=2390&cat=1 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறந்த தேகாரோக்கியத்துடன் இருப்பதாக அந்த அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். பிரபாகரனின் வழிகாட்டுதல்களின் பேரில் யுத்த முன்நகர்வுகள் இடம்பெறுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளை விரைவில் தோற்கடிக்க முடியும் என்ற கருத்து அடிப்படையற்றதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவிலிருந்து வெளியாகும் தி வீக் பத்திரிகைக்கு அளித்த செவ்வியின் பொது நடேசன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கமும், படைத்தரப்பினரும் ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
பாராளுமன்றம் நேற்றுக் (18) கூடியபோது குழுநிலை விவாதத்தில் உரையாற்றுவதற்கு குறித்த உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகாத காரணத்தினால் சபை நடவடிக்கைகள் முன்னதாகவே நிறைவடைந்தது தெரிந்த விடயமே. இவ்வாறான ஒரு நிலை ஏற்பட ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே காரணமெனத் தெரிய வருகிறது. குழு நிலை விவாதத்தில் உரையாற்றும்படி சபாநாயகரால் பெயர் குறிப்பிட்டு சம்பந்தப்படட் பாராளுமன்ற உறுப்பினர் அழைக்கப்பட்ட போதும் அவர் அங்கிருக்கவில்லை. ஆனால் அவர் எங்கு இருந்தார் தெரியுமா? பாராளுமன்றத்தின் ஆயுர்வேத மருத்துவப் பிரிவின் மசாஜ் கிளினிக்கில்…. காட்டூனை வயது வந்தவர்கள் மட்டும் பார்க்க........... http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=103
-
- 4 replies
- 1.1k views
-
-
யானைகளாலும் சிறுத்தைகளாலும் அன்று அலங்கரிக்கப்பட்டிருந்த யால விலங்குகள் சரணாலயம் இன்று விடுதலைப் புலிகளால் நிரம்பி வழிகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டார தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பற்ற நிலை, பழைய மூலோபாயங்கள் காரணமாகவே சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத்திட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சுக்கான செலவுத் தலைப்பு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய சந்திராணி பண்டார: நாட்டின் பாதுகாப்பற்ற நிலை காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், இந்…
-
- 0 replies
- 982 views
-
-
11/20/2008 8:46:08 AM - விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முகமாலையின் ஒரு பகுதியை இராணுவம் இன்று காலை கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்ப்டுகிறது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=8567
-
- 58 replies
- 6.9k views
-
-
இலங்கைத் தமிழர்களின் அவல நிலை தொடர்பாக சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக 'தமிழ் லீக்' ஒன்றை அமைக்கும் யோசனையை மலேசிய இந்திய காங்கிரஸின் இளைஞர் அiணி முன் வைத்துள்ளது. இந்த அமைப்பானது இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு போன்று ஐ.நா.வின் அங்கீகாரம் பெற்ற அமைப்பாக இருக்க வேண்டும் என்று இதன் ஆலோசகர் வேல்பாரி தெரிவித்துள்ளர். இந்த தமிழ் லீக்கானது தமிழ் நாட்டில் உருவாக்கபட வேண்டும். அத்துடன் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் அரசியல், பொருளாதார, சமூக நிகழ்ச்சித் திட்டங்களை விழிப்புடன் பாதுகாக்கும் வகையில் இது உருவாக்கப்பட வேண்டும் என்று வேல்பாரி கூறியுள்ளார். ஐ.நா.போன்று தமிழ் லீக்கானது கட்டமைப்பையும் இராஜதந்திர ரீதியான அந்தஸ்த்தையும் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு உறுப்பு நாடுக…
-
- 1 reply
- 997 views
-
-
அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் போரினால் வன்னியில் பெரும் அவலத்தில் சிக்கியுள்ள 300,000 மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை தடை செய்வதனை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என அனைத்துலக மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 573 views
-
-
தேயிலை இறப்பர் மற்றும் பொருட்களுக்கு அமெரிக்காவின் வரிச்சலுகை ரத்து ஆதாரம் வீரகேசரி
-
- 4 replies
- 1.5k views
-
-
முக்கிய உறுப்பினர்களுக்கு பல்வேறு குழுக்களிடமிருந்து உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக TMVP கோதபாயவிடம் தெரிவிப்பு: http://www.globaltamilnews.net/tamil_news....=2336&cat=1 தமது அமைப்பின் முக்கிய உறுப்பினர்களுக்கு பல்வேறு குழுக்களிடமிருந்து உயிர் அச்சுறுத்தல் நிலவுவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு பாதுகாப்பு செயலாளரிடம் முறைப்பாடு செய்துள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென பிள்ளையான் கோரிக்கை விடுத்துள்ளார். பிள்ளையான் உள்ளிட்ட தமிழ் ம…
-
- 0 replies
- 1.4k views
-
-
திஸ்ஸ முப்படையினரிடம் மன்னிப்பு கோர வேண்டும் - லக்ஷ்மன் யாப்பா : http://www.globaltamilnews.net/tamil_news....d=2371&cat= ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க பூநகரி இராணுவ நடவடிக்கையை வரவு செலவுத் திட்ட நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளமை குறித்து கவலையடைவதாகவும் அவர் தனது கருத்து தொடர்பில் முப்படையினரிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பூநகரி வெற்றியானது அனைத்து மக்களினதும் வெற்றியெனவும் அதனைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கு 42 மேலதிக வா…
-
- 0 replies
- 1.3k views
-
-
காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மகனை விடுவிக்க பிரதியமைச்சர் இராதாகிருஸ்ணனிடம் தந்தை வேண்டுகோள் : http://www.globaltamilnews.net/tamil_news....d=2360&cat= திருகோணமலையிலிருந்து 10 ஆயிரம் சிறிய பென்டோர்ச் பற்றறிகளை கடத்த முயன்றார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த முஸ்லிம் இளைஞர் 11 மாதங்கள் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்து பின்னர் தற்போது கொழும்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் இவர் மீதான விசாரணை நவம்பர் மாதம் 24 ஆம் திகதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் உடையார் லேனைச் சேர்ந்த சனூன் மொஹமட் நஸார் (34) என்ற இளைஞரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இவரை விடுதலை செய்து தருமாறு கோரி தந்தையாரா…
-
- 0 replies
- 700 views
-
-
அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருந்த தமிழ்ச் சிறைக் கைதிகள் போரட்டத்தைக் கைவிட்டுள்ளனர்: சிவநாதன் கிஷோர் தெரிவிக்கிறார் - ஒலிவடிவில்: http://www.globaltamilnews.net/tamil_news....=2373&cat=1 அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டமொன்றில் ஈடுபட்ட தமிழ்ச் சிறைக்கைதிகள் இன்று அதனை கைவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சுமார் 30க்கும் மேற்பட்ட தமிழ்ச் சிறைக்கைதிகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். கடந்த சில தினங்களாக சிறைச்சாலை நிர்வாகம் தமக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருவதனைக் கண்டித்தே இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தனர். சக சிங்கள கைதிகளைக் கொண்டு தாம் சோதனையிடப்படுவதாகவும் நுளம்புகள் மற்றும் மூட்டைப் பூச்சிகள் நிறைந்த ஓர் …
-
- 0 replies
- 712 views
-