Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிங்கள அரசின் அதிபர் ராசபட்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் தமிழகமெங்கும் நடந்தது. மதுரை மதுரையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் இணைந்த இவ்வார்ப்பாட்டத்தை நடத்தின. 12௧1௨008 காலை 11.00 மணிக்கு மதுரை மேலமாசிவீதிவடக்குமாசி வீதி சந்திப்பில் நடந்த இவ்வார்ப்பட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி மதுரை நகரச் செயலாளர் இராசு தலைமை தாங்கினார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்க செயற்குழு உறுப்பினர் கருப்பையா முன்னிலை வகித்தார். "தமிழர் இரத்தம் குடிக்கும் ராஜபட்சே திரும்பிப் போ!", "இனக்கொலை புரியும் ராஜபட்சே திரும்பிப் போ!", "கொலைவெறியன் ராஜபட்சேவுடன் இந…

  2. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)ஈழ விடுதலை ஆரவாளரும், தமிழுணர்வாளரும், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத் தலைவருமான திரு.பழ நெடுமாறன் இன்று காலை சென்னையில் கைதாகினார்.இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய். இலங்கை அரசுக்கு இராணுவ உதவிகள் செய்யாதே எனும் கோரிக்கைகளுடன் ஆர்ப்பாட்டம் செய்த போதே தமிழக காவல்துறையால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக செய்திகள் விரைவில்.... http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=267

    • 13 replies
    • 3.3k views
  3. இலங்கைக் கடற்படை நடுக்கடலில் வெறியாட்டம் தமிழக மீனவரை நிர்வாணப்படுத்தி சித்திரவதை - இந்திய இணையத்தளம் தகவல் [12 நவம்பர் 2008, புதன்கிழமை 8:45 மு.ப இலங்கை] கச்சதீவு அருகே இந்தியக் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்றுமுன்தினம் வாள் மற்றும் துப்பாக்கியால் அரக்கத்தனமாக - கண்மூடித்தனமாக - விலங்குகளைவிடக் கொடூரமான முறையில் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் - "இந்திய வேசி மகனே" என்று சிங்களப் பாசையில் தங்களைத் திட்டி - நிர்வாணப்படுத்தி - சித்திரவதை செய்து - மூர்க்கத்தனமாகத் தாக்கினர் - என்று கரை சேர்ந்த மீனவர் ஒருவர் தெரிவித்தார் என்றும் இந்திய இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்தச் …

  4. சிறிலங்கா அரசு உடனடியாக படைகளை பழைய நிலைக்கு விலக்கிக்கொள்ள வேண்டும்: தமிழக சட்டசபையில் தீர்மானம் [புதன்கிழமை, 12 நவம்பர் 2008, 07:13 பி.ப ஈழம்] [க.நித்தியா] போர் நிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு வெளியிட்டு உடனடியாக படைகளைப் பழைய நிலைக்கு விலக்கிக்கொள்ள வேண்டும் என்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் இன்று புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வருவதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். கருணாநிதி முன்மொழிந்த தீர்மானம் வருமாறு: "ஏறத்தாழ நாற்பதாண்டு காலத்திற்கு மேலாக இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் முடிவு…

    • 0 replies
    • 767 views
  5. வீரகேசரி இணையம் இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் திரட்டப்படும் நிதி 21 கோடியை அண்மித்துள்ளது. நேற்று மாலை வரை 20 கோடியே 63 இலட்சத்து 29 ஆயிரம் ரூபா சேர்ந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி, மத்திய ரயில்வே துணை அமைச்சர் வேலு ஆகியோரும் நேற்றைய தினம் நிதி உதவி வழங்கினர்.

  6. சென்னை மத்திய அரசு தனது செல்வாக்கை பயன்படுத்தி இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வைக்க மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஏற்கனவே தமிழக அரசியல் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், ராஜபக்சே தற்போது இந்தியா வந்துள்ளார்.அவர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசும்போது இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து முக்கியமாக விவாதிக்க உள்ளனர். இந்நிலையில், போர் நிறுத்தத்திற்கு ராஜ பக்சேவை வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும்விதமாகஇ தமிழக சட்டசபையில் இன்று இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. …

  7. ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலையின் பின்னணியில் இந்தியா: வைகோ குற்றச்சாட்டு [புதன்கிழமை, 12 நவம்பர் 2008, 10:24 மு.ப ஈழம்] [கி.தவசீலன்] கடந்த 4 ஆண்டு காலமாக சிங்கள அரசு நடத்துகின்ற இனப்படுகொலை தாக்குதலுக்கு பின்னணியில் இருந்து இந்திய அரசு இயக்கி வந்திருக்கிறது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். கோவை வானூர்தி நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களுக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போது மேலும் தெரிவித்துள்ளதாவது: ஈழத்தமிழர்கள் சிறிலங்கா அரசால் கொடூரமான இனப்படுகொலைக்கு ஆளாகி வருகின்ற பெருந்துயரத்துக்கு, பின்னணியில் இருந்து இராணுவ தாக்குதலை இயக்கி வருகிற, ஆயுதங்களை வழங்கி வருகிற, 2 ஆயிரம் கோடி ரூபா…

  8. வன்னியில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்காக தமிழகத்தில் சேகரிக்கப்படுகின்ற நிவாரணப் பொருட்களை பரிசோதித்து கொழும்புக்கு கொண்டு வருவதற்காக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகள் குழு சென்னைக்கு சென்றுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

  9. ஓமந்தை சோதனைச்சாவடி 9 தொடக்கம் 1மணிவரையே திறந்திருக்கும் வீரகேசரி நாளேடு 11/12/2008 9:44:07 AM - ஓமந்தை சோதனைச் சாவடி இன்று முதல் காலை 9.00 மணிமுதல் 1.00 மணிவரையே திறந்திருக்குமென்று படையினர் அறிவித்துள்ளனர். பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு சோதனைச்சாவடி திறந்திருக்கும் நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக

    • 3 replies
    • 744 views
  10. கடலில் நீந்தி யாழ்ப்பாணம் வர முயன்றவர் கைது வீரகேசரி இணையம் 11/12/2008 9:56:46 AM - கேரதீவுக் கடலிலிருந்து நீந்தி யாழ்ப்பாணம் வர முயற்சித்த இளைஞன் ஒருவர் யாழ்ப்பாணம் நாவாந்துறை தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். வன்னியில் இடம் பெறும் படை நடவடிக்கைகள் காரணமாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மிகவும் துணிச்சலாக கேரதீவுக் கடலிலிருந்து நீந்தி யாழ்ப்பாணத்திற்க்கு வர முயன்ற வேளையில் இடையில் கடலில் கண்ட படையினர் அவரை கைது செய்து சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். அவர்கள் மேற் கொண்ட விசாரணையைத் தொடர்ந்து குறிப்பிட்ட இளைஞர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து யாழ் மாவட்ட மேலதிக நீதிபதி திருமதி ஜோஜ் மகாதேவா இவ் இளைஞனான உ…

    • 2 replies
    • 1.4k views
  11. இராணுவத்திலிருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை உயர்வினால் நெருக்கடியை எதிர்நோக்கும் படைத்தரப்பு : http://www.globaltamilnews.net/tamil_news....=2082&cat=1 இராணுவத்திலிருந்து தப்பியோடுவோர் மற்றும் உயிரிழப்புக்கள் காரணமாக இராணுவப் படையினர் பெரும் சவால்களை எதிர்நோக்கி வருவதாக பிரபல இந்திய ஊடகவிலயாளர் அனுஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக இலங்கை இராணுவத்திலிருந்து தப்பியோடுபவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், இந்தத் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானதென யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்துள்ளார். வெறும், 5 வீதமான படைவீரர்களே இராணுவத்திலிருந்து தப்பியோடியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ள…

    • 2 replies
    • 1.7k views
  12. சென்னை 'போர் நிறுத்தம் செய்வது இலங்கையின் கடமை. இதனை இலங்கைக்கு தெரியப்படுத்தி அந்நாட்டை செயல்படவைப்பது மத்திய அரசின் பொறுப்பு' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை : 'இலங்கையில் இரு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும்' என்று நான் கூறியிருந்தேன். தற்போது விடுதலைப் புலிகளின் போர் நிறுத்தத்திற்கு தயார் என அறிவித்துள்ளனர். இதற்கிடையே, 'மத்திய அரசு நினைத்தால் ஒரேநாளில் இலங்கையில் நடக்கும் சண்டையை நிறுத்தி விடலாம்' என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இலங்கை அரசும், 'விடுதலைப்புலிகளும் பேச்சு வார்த்தை நடத்தி அரசியல் தீர்வு காண இந்திய அரசு முயற்சிக்க வேண்டும்' என்றும் குறிப்பிட்டுள்ளது. கடந்த மாதம…

    • 3 replies
    • 1.3k views
  13. இலங்கையில் இனப்படுகொலை என்று ஒன்றில்லை - கூறுகிறார் ஆனந்த சங்கரி: http://www.globaltamilnews.net/tamil_news....=2044&cat=1 இலங்கையில் இனப்படுகொலை என்று ஒன்றில்லை. செம்மணிப்படுகொலை போன்ற ஒருசில சம்பவங்கள் இடம்பெற்ற போதும் ஊடகங்கள் அதனைப் பெரிதுபடுத்தியுள்ளதாகவும் இனப்படுகொலை எனத் தெரிவிக்குமளவிற்கு வேறு சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள வீ ஆனந்தசங்கரி யாழ் ஸ்ரான்லி வீதியிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் அதி பாதுகாப்புடன் தங்கியுள்ளார். இந்த நிலையில்; நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்தியுள்ளார். அதன் போதே இந்தக்…

    • 27 replies
    • 3.1k views
  14. இன்று மாலைதீவு செல்லும் மஹிந்த புதன், வியாழன் புதுடில்லியில் பேச்சு - அவரோடு முக்கிய விடயங்களை ஆராய்வதற்கு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றதாம் இந்தியா [10 நவம்பர் 2008, திங்கட்கிழமை 8:30 மு.ப இலங்கை] மாலைதீவில் நாளை நடைபெறும் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்காக இன்று கொழும்பிலிருந்து மாலைதீவுக்குப் புறப்படும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பின்னர் அங்கிருந்து புதுடில்லிக்குச் செல்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தை ஒட்டிய பல முக்கிய விடயங்கள் குறித்து எதிர்வரும் புதன்கிழமையும், வியாழக்கிழமையும் அவருடன் பேசித் தீர்மானங்களை எடுப்பதற்காக, இந்திய அரசியல் தலைமை, அவரது வருகைக்காகக் காத்திருக்கின்றது எனப் பு…

  15. விமானப்படை வான் தாக்குதல்களில் சொற்பளவு சிவிலியன்களே கொல்லப்படுகின்றனர் – தெரிவிக்கின்றது சமாதான செயலகம் : இலங்கை விமானப்படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் வான் தாக்குதல்களின் போது சொற்ப அளவிலான சிவிலியன்களே கொல்லப்படுவதாக அரசாங்க சமாதானச் செயலகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. சுமார் 50க்கும் குறைவான சிவிலியன்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் காயமடைந்தவர்கள் மற்றும் இன்பிற இழப்புக்கள் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விமானப்படையினர் அடையாளம் காணப்பட்ட இலக்குகள் மீது மட்டுமே தாக்குதல் மேற்கொள்வதாக சுட்டிக்காட்டப்படுகிறது. யுத்தத்தின் போது ஏற…

  16. ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள்:13-ந்தேதி கொண்டு செல்லப்படுகிறது on 11-11-2008 02:31 இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் அனைத்தும் சென்னையில் இருந்து கண்டெய்னர்களில் கப்பல் மூலம் 13-ந் தேதி கொண்டு செல்லப்படுகிறது. இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் உச்சகட்ட போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஏராளமான அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். லட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் தங்களது வீடுகளை விட்டுவிட்டு காடுகளுக்குள் பதுங்கிக் கிடக்கின்றனர். உணவு, உடை கிடைக்காமல் அவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். பாதிக்கப்பட்டு உள்ள அப்பாவி தமிழர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக அ…

  17. இலங்கையில் போரை நிறுத்துவதற்கு இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடர் கழக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 483 views
  18. போர் நிறுத்தத்திற்கு எப்போதும் தயார்: தமிழக முதல்வருக்கு புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் விளக்கம் [புதன்கிழமை, 12 நவம்பர் 2008, 09:44 மு.ப ஈழம்] [க.நித்தியா] சிறிலங்கா அரசுதான் போர் நிறுத்தத்தை தன்னிச்சையாக முறித்துக் கொண்டபோதும் தமிழீழ விடுதலைப் புலிகள் எப்போதும் போர் நிறுத்தத்துக்கு தயாராகவே உள்ளனர் என்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வேண்டுகோளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் 'தமிழோசை" நாளேட்டுக்கு அவர் அளித்துள்ள நேர்காணல் வருமாறு: வடக்குப் பகுதியில் களமுனை நிலவரம் எப்படி இருக்கிறது? வடக்கில் பல முனைகளிலும் சிங்கள இராணுவம் பாரிய இராணுவ நடவடிக்…

    • 0 replies
    • 478 views
  19. தமிழக கலைஞர்களின் போராட்டங்களுக்கு எதிராக சிங்கள கலைஞர்கள் அதிஸ்டான பூஜை : http://www.globaltamilnews.net/tamil_news....=2066&cat=1 இலங்கைத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துப்படும் இன ஒடுக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகக் கலைஞர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் சிங்கள கலைஞர்கள் அதிஸ்டான பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். எதிர்வரும் 13ம் திகதி சுதந்திர சதுக்கத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவும் இலங்கைக் கலைஞர்கள் தீர்மானித்துள்ளனர். யுத்தத்திற்கு எதிராக தமிழக கலைஞர்கள் கடல் போல் திரண்டு உணர்வெழுச்சியுடன் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த போராட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் சிங்கள கலைஞர்…

  20. இலங்கை அரசுப் படைகளின் பல முனைப் படை நடவடிக்கைகளினால் நொந்து, நொடித்துப் போயுள்ள விடுதலைப் புலிகள் வேறு வழியின்றி யுத்த நிறுத்தத்துக்கு வழி செய்வதற்காகப் பல தரப்புகளிடமும் ஓடித்திரிந்து காலில் விழுந்து கெஞ்சுகின்றனர் என்பது போலவும் :- ஆனால் இராணுவ வலுச் சமநிலையில் உச்சத்தில் இருக்கும் அரசுத்தரப்பு, புலிகளின் கெஞ்சலை உதாசீனம் செய்து, புறம் ஒதுக்கி, புலிகளின் தற்போதைய யுத்த நிறுத்த அறிவிப்பைத் திமிரோடு நிராகரிக்கின்றது என்ற மாதிரியாகவும் - தென்னிலங்கையில் இப்போது செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கினறன. செய்திகள், கட்டுரைகள், கேலிச்சித்திரங்கள் எனப்பலவாறாக வெளியாகும் இக்கருத்து வடிவங்களில் எல்லாம் யுத்த நிறுத்தத்துக்குத் தாம் தயார் என்ற புலிகளின் இப்போதைய அறிவிப்பு அ…

  21. இந்தியாவின் அழுத்தத்தின் பேரில் போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிய நிலை சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் கிளிநொச்சியைக் கைப்பிற்றிய பின்னர் நிபந்தனைகளுடனான குறுகியகால ஒரு யுத்தநிறுத்தத்தை அறிவிக்க அரசாங்கம் எண்ணியுள்ளதாகவும், அதற்காக கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான படை நடவடிக்கையினை விரைவு படுத்துமாறு படைத்தரப்பிற்கு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியைக் கைப்பற்றும் வரை யுத்தநிறுத்தம் என்பதற்கு இடமில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி நகரில் சிங்கக்கொடியினை ஏற்றி அதனை தெற்கில் பெரு விழாவாக கொண்டாட மகிந்த அரசாங்கம் எண்ணியுள்ளதாகவும், விடுதலைப்…

  22. ஈழத் தமிழர் மீதான இலங்கை இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான மூர்க்கத்தனமான தாக்குதல்களைக் கண்டித்து, உலகத் தமிழர்களின் ஒற்றுமையை வலியுறுத்தியும் நவ.14ம் திகதி அந்தமான் தீவில் மாபெரும் கண்டனப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்படுகின்றன. இது தொடர்பாக, அந்தமான் தமிழர் சங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு : இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை மற்றும் போரை நிறுத்துவதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கச்சதீவை மீட்பதே தமிழக மீனவர்களின் வாழ்வாதர உரிமைக்கும், அவர் தம் இருப்பிற்கும்; பாதுகாப்பு என்பதால் இது தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பல்லாண்டு காலமாக தமிகத்தில் அகதிகளாக வந…

  23. ரிஎம்விபி ஒட்டுக்கும்பலின் கருணா-பிள்ளையான் குழுக்களினிடையேயான மோதல்கள் நாளுக்கு நாள் உயிர்களை பலி கொண்டு வரும் இவ்வேலையில், இரு குழுக்களில் இருந்தும் ஆயுதங்களுடன் தப்பி ஓடும் உறுப்பினர்களின் எண்ணிக்கை, ஒட்டுக்கும்பல்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை கேள்விக்குறியாக்கி விடப்போகிறது. தெருநாய்களை அமுக்கி பிடிப்பது போல சிறார்களை தெருவுக்கு தெரு பிடித்து ஒட்டுக்கும்பலில் இணைத்ததின் பலனை இன்று அனுபவிக்க தொடங்கியிருக்கிறார்கள். தப்பி ஓடும் ஒட்டுக்கும்பலின் உறுப்பினர்கள், தாம் ஓடுவதை ஆயுதமுனையில் தடுப்போர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு ஓடுவதாகவும், எந்த ரிஎம்விபி ஒட்டுக்கும்பலின் முகாமிலிருந்து யார், யாரை வெடி வைத்து விட்டு ஓடப்போகிறார்கள் என நாள் தோறும் நடுக்…

  24. வன்னியை ஆக்கிரமிப்பதான போரில் கடந்த இரண்டு வருடங்களாக சிறிலங்கா அரசாங்கம் 40 ஆயிரம் கோடி ரூபாய்களை செலவளித்திருப்பதாக பொருளியல் ஆயவாளரான திரு க.பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். வன்னியில் கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே இத்தகவலை அவர் தெரிவித்தார். இவ்வளவு பெரிய தொகையை செலவளித்து படைநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதும் அவர்களால் அவர்களின் திட்டத்திற்கேற்ப இடங்களை ஆக்கிரமிக்க முடியாதுள்ளது. பல மாதங்களாக கிளிநொச்சியை கைப்பற்ற முயன்றும் சில கிலோ மீற்றர்களே அவர்களால் நகர முடிந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். விடுதலைப்புலிகள் குறைந்த அளவிலான வளங்களுடனேயே தற்காப்புப் போரை நடத்தி வருகின்றனர். அவர்கள் கண்மூடித்தனமாக ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை. சிறிலங்காப் படையினருக்க…

  25. தாயகத்தில் அல்லலுறும் எம்முறவுகளின் அமைதிவேண்டியும், போரின் பிடியில் இருந்து விடுபட்டு இன்புற்று வாழவும், தமிழீழத் தாயகம் விரைவில் எமதாகவும் எல்லாம் வல்லபரம்பொருளை வேண்டி, சுவிஸ் நாட்டில் உள்ள சைவ ஆலயங்களில் ஒரே நேரத்தில் இறைவனை வேண்டிஅமைதிப் பிராத்தனை நடைபெற திருவருள் கூடியுள்ளது. காலம்; - 14.11.2008 வெள்ளிக்கிழமை இரவு 8.50 மணிக்கு மங்கள ஒலி எழுப்பி இறைவனை நோக்கி இரந்து வேண்டி, 21.00 மணிக்கு அனைவரும் ஒரே நேரத்தில் அமைதியாக இறைவனிடம் எங்கள் உறவுகளின் சுமைகளை முறையிடுவோம். அனைவரும் ஓரே நேரத்தில் பரம்பொருளிடம் வேண்டினால் நிச்சயம்;, எம்முறவுகள் இன்னல்களில் இருந்து விடுபட்டு இன்புற்று வாழ வழி செய்வான். அனைவரையும் இவ்வழிபாட்டி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.