Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சென்னை: இலங்கையில் தற்போது உள்ள சூழ்நிலையில் போர் நிறுத்தம் சரிப்பட்டு வராது என்று முன்னாள் பிரதமரும், இலங்கையின் பிரதான எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார். திருச்சி செல்லும் வழியில் சென்னை வந்த ரணில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், டெல்லியில் சமீபத்தில் பிரணாப் முகர்ஜியுடன் விரிவாகப் பேசினேன். அவர் இந்தப் பிரச்சினையை சிறப்பாக கையாண்டு வருகிறார். அதேபோல, பாஜக தலைவர் அத்வானி, சிபிஎம் தலைவர்கள் ஆகியோரையும் சந்தித்துப் பேசினேன். மீனவர் பிரச்சினை .. 2005ம் ஆண்டு இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த நிலையில் மீனவர்கள் பிரச்சினை அவ்வப்போது தலை தூக்கி வருவது வருத்தம் தருகிறது. இது தவிர்க்கப்பட வ…

  2. குமுதம் 23.11.2008ல் 'தேர்தலுக்கு தயாரான கலைஞர்' என்ற தலைப்பில் சுவாமி வம்பானந்தா பகுதியில் வந்த ஆக்கத்தில் ஈழம் பற்றிய செய்திகள் ``என்ன சுவாமி, இவ்வளவு மும்முரமாக எதைத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள்?'' - ஆர்வமாக விசாரித்துக்கொண்டே ஆசிரமத்துக்குள் நுழைந்தார் சிஷ்யை. ``வாக்காளர் அடையாள அட்டையைத்தான் தேடுகிறேன் பெண்ணே. கலைஞரே தேர்தலுக்குத் தயாராகிறார் போலத் தெரிகிறதே'' என்றவாறே வரவேற்றார் சுவாமி. ``ஆமாம், சுவாமி. `மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகிவிட்டீர்களா?' என்று கோவையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, `எல்லாவற்றுக்கும் தயாராகித்தான் வருகிறோம்' என்று பதில் கூறியிருக்கிறார் கலைஞர். இலங்கைத் தமிழர் பிரச்னையில், கூட்டணிக் கட்சியான காங்கிரஸே கடுமையான …

  3. தமிழக நிவாரண பொருட்கள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிப்பு வீரகேசரி இணையம் 11/20/2008 9:23:52 AM - தமிழகத்தில் சேகரிக்கப்பட்டு கொழும்பு துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்ட நிவாரண பொருட்கள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக நாளை மறுநாள் சனிக்கிழமை வன்னிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நாளை நிவாரணப் பொருட்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகளிடம் கையளிப்பர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. உணவு மற்றும் மருந்து அடங்கிய 1,600 மெற்றிக் தொன் பொருட்கள் தமிழகத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை கொழும்பு துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்…

  4. விடுதலைப் புலிகளுக்கு கருணா குழுவினர் திரும்புவதாக தகவல் thatstamil கொழும்பு: இலங்கை அரசிடமிருந்து போதிய அளவில் பணம் வராததால், கருணா தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் வீரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களில் ஒரு பிரிவினர் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத் திரும்பக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கொழும்பிலிருந்து வெளியாகும் சன்டே லீடர் இதழில் செய்தி வெளியாகியுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணா வெளியேறியபோது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கணிசமான விடுதலைப் புலிகளும், கருணாவுடன் சென்றனர். இந்த அமைப்புக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என பெயரிடப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் முழுக்க முழுக்க இல…

  5. யாழ் குடாநாட்லுள்ள பலாலி வான்படைத் தளத்தின் மீது கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் துல்லியமான எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளாக, யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார். எறிகணைகள் பலாலி படைத்தளத்தினுள் வீழ்ந்து வெடித்த பின்னரே யாழ்ப்பாணத்திற்கான செல்பேசிகள் கடந்த ஐந்து நாட்களாக படையினரால் தடை செய்யப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகளின் நெடுந்தூர எறிகணைகள் பலாலியில் மையப்பகுதியில் வீழ்ந்து வெடித்ததை எமது செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், அதனால் ஏற்பட்ட சேதவிபரங்களை உறுதிப்படுத்த முடியவில்லை. முகமாலையூடாக முன்னேற முற்பட்ட படையினரை வழிமறித்து தாக்கியவாறே விடுதலைப் புலிகள் பலாலி படைத்தளம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்தே ச…

  6. இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு மீண்டுமொரு பொது மன்னிப்பு: http://www.globaltamilnews.net/tamil_news....=2388&cat=1 இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு மீண்டுமொரு முறை பொது மன்னிப்பை வழங்க பாதுகாப்புத் தரப்பு தீர்மானித்துள்ளது. இதன்படி, இராணுவத்திலிருந்து தப்பியோடிய அல்லது விடுமுறைக்குச் சென்று திரும்பாத இராணுவ உத்தியோகத்தர்கள் எவ்வித தண்டனைகளும் இன்றி தங்களது படையணிகளில் மீண்டும் இணைந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் நவம்பர் 23ம் திகதி நள்ளிரவு வரையில் இவ்வாறு இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் மீண்டும் இணைந்து கொள்ள முடியும் எனக் குறிப்பிடப்படுகிறது. கடந்த சில மாதங்களாக வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலங்களில் …

  7. பயங்கரவாதம் குறித்த இலங்கை நிகழ்ச்சி நிரலுக்கும் இந்திய நிகழ்ச்சி நிரலுக்கும் வேறுபாடு கிடையாது – றோஹித: http://www.globaltamilnews.net/tamil_news....=2381&cat=1 இந்தியாவின் மத்திய ஆட்சியினை யார் கைப்பற்றினாலும் இலங்கையின் இறையாண்மைக்கு எதிராகச் செயற்படமாட்டார்கள் என்பது அரசாங்கத்தின் நம்பிக்கையாகும். பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியா, இலங்கையின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டுள்ளது. பிரபாகரன் பிடிபட்டால் அவருக்கெதிராகவுள்ள சட்டப் பிரச்சினைக்கே அரசாங்கம் முதலிடம் வழங்கும் என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். பயங்கரவாதத்தை ஒழிக்கும் இலங்கையின் நிகழ்ச்சி நிரலுக்கும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கும் எந்தவொரு வேறுபாடும் கிடையாது. இலங்கையி…

  8. குடில்களை அமைக்கத் தேவையான பொருட்களை வன்னிக்கு அனுப்புவதில் வரையறைகள் விதிக்கப்பட வேண்டும் - இராணுவம்: http://www.globaltamilnews.net/tamil_news....=2386&cat=1 தற்காலிக குடில்கள் மற்றும் தங்குமிடங்களை அமைக்கத் தேவையான பொருட்களை வன்னிக்கு அனுப்பி வைக்கும் போது சில வரைகளை பின்பற்ற வேண்டும் என இராணுவத் தரப்பு அறிவித்துள்ளது. வன்னிச் சிவிலியன்களுக்கு அனுப்பி வைக்கப்படும் பொருட்களை விடுதலைப் புலிகள் பயன்படுத்தக் கூடிய அபாயம் நிலவுவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். சிவிலியன்களுக்கு அனுப்பி வைக்கப்படும் பொருட்களைக் கொண்டு புலிகள் முகாம்களையும், பதுங்கு குழிகளையும் அமைத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பா…

  9. பிரபாகரன் சிறந்த தேகாரோக்கியத்துடன் உள்ளார் – பா.நடேசன: http://www.globaltamilnews.net/tamil_news....=2390&cat=1 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறந்த தேகாரோக்கியத்துடன் இருப்பதாக அந்த அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். பிரபாகரனின் வழிகாட்டுதல்களின் பேரில் யுத்த முன்நகர்வுகள் இடம்பெறுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளை விரைவில் தோற்கடிக்க முடியும் என்ற கருத்து அடிப்படையற்றதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவிலிருந்து வெளியாகும் தி வீக் பத்திரிகைக்கு அளித்த செவ்வியின் பொது நடேசன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கமும், படைத்தரப்பினரும் ப…

  10. யானைகளாலும் சிறுத்தைகளாலும் அன்று அலங்கரிக்கப்பட்டிருந்த யால விலங்குகள் சரணாலயம் இன்று விடுதலைப் புலிகளால் நிரம்பி வழிகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டார தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பற்ற நிலை, பழைய மூலோபாயங்கள் காரணமாகவே சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத்திட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சுக்கான செலவுத் தலைப்பு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய சந்திராணி பண்டார: நாட்டின் பாதுகாப்பற்ற நிலை காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், இந்…

  11. தேயிலை இறப்பர் மற்றும் பொருட்களுக்கு அமெரிக்காவின் வரிச்சலுகை ரத்து ஆதாரம் வீரகேசரி

    • 4 replies
    • 1.5k views
  12. இலங்கைத் தமிழர்களின் அவல நிலை தொடர்பாக சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக 'தமிழ் லீக்' ஒன்றை அமைக்கும் யோசனையை மலேசிய இந்திய காங்கிரஸின் இளைஞர் அiணி முன் வைத்துள்ளது. இந்த அமைப்பானது இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு போன்று ஐ.நா.வின் அங்கீகாரம் பெற்ற அமைப்பாக இருக்க வேண்டும் என்று இதன் ஆலோசகர் வேல்பாரி தெரிவித்துள்ளர். இந்த தமிழ் லீக்கானது தமிழ் நாட்டில் உருவாக்கபட வேண்டும். அத்துடன் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் அரசியல், பொருளாதார, சமூக நிகழ்ச்சித் திட்டங்களை விழிப்புடன் பாதுகாக்கும் வகையில் இது உருவாக்கப்பட வேண்டும் என்று வேல்பாரி கூறியுள்ளார். ஐ.நா.போன்று தமிழ் லீக்கானது கட்டமைப்பையும் இராஜதந்திர ரீதியான அந்தஸ்த்தையும் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு உறுப்பு நாடுக…

  13. கொழும்பு: கிளிநொச்சியைப் பிடிக்க முயலும் ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கடும் தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கிளிநொச்சியைப் பிடிக்க ராணுவம் கடுமையாக முயன்று வருகிறது. விமானப்படையின் துணையுடன் கடந்த பல நாட்களாக ராணுவம் போராடி வருகிறது. முதலில் கிளிநொச்சி நகருக்கு அருகில் வந்து விட்டோம் என்று கூறினர். ஆனால் இதுவரை அப்படி நடந்ததாக தெரியவில்லை. விடுதலைப் புலிகள் அதிரடியான போர்த் திட்டங்களை வகுத்து இலங்கை ராணுவத்தினரை தற்போது நிலை குலைய வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3 முனைகளில் ராணுவம் தாக்குதலை தொடுத்து வருகிறது. கிளிநொச்சிக்கு வடக்கில் இருந்து ஒரு படையும், தெற்கில் இருந்து ஒரு படையும் மேற்கு பகுதியில்…

    • 6 replies
    • 2.9k views
  14. வெற்றி வானொலியின் பொது முகாமையாளர் ஏ.எர்.வாமலோஷனன் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியுடன் தொடர்புவைத்திருந்தவர் என ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். “தற்கொலை அங்கி வைத்திருந்த தற்கொலைக் குண்டுதாரி ஒருவருடன் லோஷன் தொடர்பு வைத்திருந்துள்ளார். குறிப்பிட்ட தற்கொலைக் குண்டுதாரி சைனட் அருந்தித் தற்கொலை செய்துவிட்டார். அவர் குறித்து விசாரணை செய்யும் போதே லோஷனுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது” என இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன்யாப்பா அபயவர்த்தன தெரிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டிருப்பதாகக் கூறி கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு லோஷன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்ப…

    • 7 replies
    • 1.9k views
  15. ஈழத்தமிழ்மக்கள் மீதான சிறிலங்கா அரசின் இனவன்முறையைக் கண்டித்து பிரித்தானியப் பாராளுமன்றத்தின் முன்னால் எழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆயிரக் கணக்கில் கூடியிருக்கும் ஈழத்தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமை வலியுறுத்தியவாறும், சிறிலங்காவின் இனப்படு கொலை நடவடிக்கைகளைக் கெதிராக வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்து கொண்டுமிருக்கின்றனர். அங்கிருந்து எமது சிறப்புச் செய்தியாளர்கள் தரும் ஒலிவழிச் செய்தியினூடு, அக்க கவனயீர்பில் கலந்து கொண்டுள்ள தமிழ்மக்களின் உணர்வோடு உங்களையும் இணைத்துக் கொள்கின்றோம். http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=266

    • 3 replies
    • 1.2k views
  16. ஈழக்கிழவனுடன் கொஞ்ச நேரம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  17. அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் போரினால் வன்னியில் பெரும் அவலத்தில் சிக்கியுள்ள 300,000 மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை தடை செய்வதனை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என அனைத்துலக மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 573 views
  18. முக்கிய உறுப்பினர்களுக்கு பல்வேறு குழுக்களிடமிருந்து உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக TMVP கோதபாயவிடம் தெரிவிப்பு: http://www.globaltamilnews.net/tamil_news....=2336&cat=1 தமது அமைப்பின் முக்கிய உறுப்பினர்களுக்கு பல்வேறு குழுக்களிடமிருந்து உயிர் அச்சுறுத்தல் நிலவுவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு பாதுகாப்பு செயலாளரிடம் முறைப்பாடு செய்துள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென பிள்ளையான் கோரிக்கை விடுத்துள்ளார். பிள்ளையான் உள்ளிட்ட தமிழ் ம…

  19. திஸ்ஸ முப்படையினரிடம் மன்னிப்பு கோர வேண்டும் - லக்ஷ்மன் யாப்பா : http://www.globaltamilnews.net/tamil_news....d=2371&cat= ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க பூநகரி இராணுவ நடவடிக்கையை வரவு செலவுத் திட்ட நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளமை குறித்து கவலையடைவதாகவும் அவர் தனது கருத்து தொடர்பில் முப்படையினரிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பூநகரி வெற்றியானது அனைத்து மக்களினதும் வெற்றியெனவும் அதனைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கு 42 மேலதிக வா…

  20. காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மகனை விடுவிக்க பிரதியமைச்சர் இராதாகிருஸ்ணனிடம் தந்தை வேண்டுகோள் : http://www.globaltamilnews.net/tamil_news....d=2360&cat= திருகோணமலையிலிருந்து 10 ஆயிரம் சிறிய பென்டோர்ச் பற்றறிகளை கடத்த முயன்றார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த முஸ்லிம் இளைஞர் 11 மாதங்கள் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்து பின்னர் தற்போது கொழும்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் இவர் மீதான விசாரணை நவம்பர் மாதம் 24 ஆம் திகதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் உடையார் லேனைச் சேர்ந்த சனூன் மொஹமட் நஸார் (34) என்ற இளைஞரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இவரை விடுதலை செய்து தருமாறு கோரி தந்தையாரா…

  21. அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருந்த தமிழ்ச் சிறைக் கைதிகள் போரட்டத்தைக் கைவிட்டுள்ளனர்: சிவநாதன் கிஷோர் தெரிவிக்கிறார் - ஒலிவடிவில்: http://www.globaltamilnews.net/tamil_news....=2373&cat=1 அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டமொன்றில் ஈடுபட்ட தமிழ்ச் சிறைக்கைதிகள் இன்று அதனை கைவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சுமார் 30க்கும் மேற்பட்ட தமிழ்ச் சிறைக்கைதிகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். கடந்த சில தினங்களாக சிறைச்சாலை நிர்வாகம் தமக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருவதனைக் கண்டித்தே இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தனர். சக சிங்கள கைதிகளைக் கொண்டு தாம் சோதனையிடப்படுவதாகவும் நுளம்புகள் மற்றும் மூட்டைப் பூச்சிகள் நிறைந்த ஓர் …

  22. மட்டக்களப்பு மற்றும் வவுனியா வைத்தியசாலைகள் இஸ்தம்பிக்கும் நிலை – தனது வைத்தியசாலை நிலை குறித்து வைத்திய கலாநிதி முருகானந்தம் பேசுகிறார்: ஒலிச் செய்திகள் http://www.globaltamilnews.net/tamil_news....=2357&cat=1 வவுனியா பொது மருத்துவ மனையில் கடமையாற்றி வந்த தென்பகுதியைச் சேர்ந்த வைத்தியர்கள் பாதுகாப்புக் காரணம் காட்டி வவுனியா பொது மருத்துவ மனையை விட்டு நேற்று மாலையுடன் வெளியேறியுள்ளனர். மட்டக்களப்பு பகுதியில் வைத்து சிங்கள மொழி பேசும் வைத்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமையால் தங்களின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்தே வவுனியாவில் பணியாற்றி வந்த வைத்தியர்கள் வெளியேறியுள்ளனர் வவுனியா பொது மருத்துவ மனையில் 17 சிங்கள மொழி பேசும் வைத்தியர்…

  23. வரலாற்றுக் காலம் தொட்டு இந்தியா சந்தித்த படையெடுப்புக்களெல்லாம் இமயம் கடந்து வந்தவைதான். அதன் பின்னர் பாகிஸ்தான் படையெடுப்புக்களைச் சந்தித்தோம். இந்திய - சீன எல்லைப் பிரச்னை கூட இமயத்தின் மடியில் நடந்த விபரீத விளையாட்டுத்தான். எனவே, ஆபத்து என்பது இந்தியாவிற்கு வடதிசையிலிருந்துதான் வரும் என்ற நம்பிக்கை இருந்தது. இனி அந்த ஆபத்து தென் திசையிலிருந்தும் கடல் கடந்தும் வரும் என்ற அச்சம் ஏற்பட்டது. ராணுவ தளங்களை அமெரிக்கா தனது எல்லைக் காவல் சாவடிகளாகக் கருதுகிறது. ஆகவே உலகம் முழுமையும், குறிப்பாக ரஷ்யா, சீனம் ஆகிய நாடுகளைச் சுற்றி அத்தகைய தளங்களை அமைத்த அந்த நாடு, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நமது தலைக்கு மேலே பாகிஸ்தானில் ராணுவ தளம் அமைத்தது. நமது காலடியில் இ…

  24. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் இன்று புதன்கிழமை காலை ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 8 மணித்தியாலங்கள் விசாரிக்கப்பட்டார். நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கஜேந்திரனுடன் தொலை பேசியில்; தொடர்பு கொண்ட ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கடந்த யூன் மாதம் யேர்மனியில் நடை பெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் பங்கு பற்றியமை தொடர்பான விசாரணைகளுக்கு வரவேண்டும் என கூறியமைக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் குற்றப் புலனாய்வு பிரிவு தலைமையகத்திற்கு இன்று சமூகமளித்திருந்தார். இன்று 19-11-2008 கொழும்பு குற்றப் பலனாய்வு பிரிவு தலைமையகத்திற்ன் நான்காம் மாடியில் வைத்து காலை 10:30 மணி தொடக்கம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.