Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களைக் கொன்றொழிப்பதற்கான நிகழ்ச்சி நிரலின் கீழே இலங்கை அரசாங்கம் செயற்படுகிறது. இந்த அரசாங்;கத்தினாலோ அல்லது எந்தச் சிங்கள அரசினாலோ இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு கிட்டப் போவதில்லை. ஆகவே இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் தனித்து வாழக் கூடியதான ஏற்பாடொன்றுக்கு ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சமூகமும் உதவ வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். புலிகளுக்கெதிரான யுத்தத்தை அரசாங்கம் நிறுத்தப் போவதில்லையென் றும் இந்தியாவினால் இலங்கைத் தமிழர்களுக்கு அனுப்பப்படும் நிவாரணம் இலங்கை அரசாங்கத்தின் மூலமுமே விநியோகிக்கப்படுமெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ புதுடில்லியில் தெரிவித்த கருத்துகள் குறித்து தமி…

  2. தமிழக உறவுகளுக்கு நெதர்லாந்து தமிழ் அமைப்புக்கள் நன்றி தெரிவிப்பு [சனிக்கிழமை, 15 நவம்பர் 2008, 11:58 மு.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] நீதி கிடைக்கும் வரை எமக்காக உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும் என தமிழக உறவுகளுக்கு நெதர்லாந்து தமிழ் அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் அவர்களுக்கு தமது நன்றியினையும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் நெதர்லாந்து தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் வருமாறு: எமது தொப்புள்கொடி உறவுகளான தமிழக உறவுகளே!! இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சிங்கள அரசின் இனப் படுகொலைக்கு எதிராக தொடர்ச்சியாக நீதி கேட்டு ஓங்கிக்குரல் கொடுக்கும் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம், தமிழக அரசியல் கட்சிக…

    • 0 replies
    • 425 views
  3. பூநகரியை கைப்பற்றிய படையினருக்கு மகிந்த வாழ்த்து தெரிவிப்பு [சனிக்கிழமை, 15 நவம்பர் 2008, 01:01 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பூநகரியை கைப்பற்றியதற்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தனது படையினருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று சனிக்கிழமை அரச தலைவர் செயலகத்தில் இருந்து வெளியான வாழ்த்து செய்திக்குறிப்பில், போர்க் களத்தில் உள்ள படையினருக்கு பாராட்டும் மகிழ்ச்சியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆயுதங்களை கீழே வைத்து விட்டு பேச்சுக்கு வருமாறும் மகிந்த விடுதலைப் புலிகளை வற்புறுத்தியுள்ளார். புதினம்

  4. மின்பிறப்பாக்கி படையினரால் அபகரிப்பு திகதி: 15.11.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] தீவகம் புங்குடுதீவுப்பகுதியில் பொதுமக்களிற்கு மின்சாரம் வழங்கவென மின்சார சபையால் எடுத்துச்செல்லப்பட்டு, இறக்கிவைக்கப்பட்ட மின்பிறப்பாக்கியை சிறிலங்காப் கடற்படையினர் பலவந்தமாக காரைநகர் படைமுகாமிற்குகொண்டு சென்றுள்ளனர். சங்கதி

  5. ஈழத் தமிழர்களை பாதுகாக்க கோரி சேலத்தில் அமைதி ஊர்வலம் [சனிக்கிழமை, 15 நவம்பர் 2008, 10:43 மு.ப ஈழம்] [வி.நவராஜன்] ஈழத் தமிழர்களை பாதுகாக்கக் கோரியும் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாட்டில் உள்ள சேலம் ஏற்காட்டில் உள்ள அனைத்து பொதுமக்கள் சார்பாக அமைதி ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நேற்று நடத்தப்பட்டுள்ளது. ஈழத்தில் பாதிக்கப்படும் இரத்த உறவுகளான தமிழீழ மக்களை பாதுகாக்க வேண்டியும், அவர்களுக்கு மருத்துவ வசதியும் உணவு வசதியும் இருப்பிட வசதியும் செய்து தருவதோடு சிறிலங்கா அரசு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டியும், மத்திய மாநில அரசுகள் இதற்கான துரித நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தியும், சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இந்த அமைதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். …

  6. வெளிநாட்டு அரசுகளும் நிதி அமைப்புக்களும் கடந்த காலத்தில் அளித்த நிதி எமக்கு வந்து சேரவில்லை: பா.நடேசன் [சனிக்கிழமை, 15 நவம்பர் 2008, 11:28 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] வெளிநாட்டு அரசுகளும், நிதி அமைப்புகளும் சிங்கள அரசிடம் கொடுத்த பெருந்தொகைகள், தமிழரிடம் வந்து சேரவில்லை என்பதே கடந்த கால உண்மை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமிழகத்திலிருந்து வாரமிருமுறை வெளிவரும் ஜூனியர் விகடன் (19.11.08) இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளதாவது: ''இலங்கைத் தமிழர்களுக்காக திரட்டப்படும் நிதி, பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு போய்ச் சேராது என்று சொல்லப்படுவது உண்மையா?'' ''போரால் பாதிக்க…

    • 0 replies
    • 615 views
  7. டயலொக் குறுஞ் செய்தியில் புநகரியை இராணுவம் கைப்பற்றியுள்ளதாக இராணுவத் தளபதி ஐனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

  8. போர் நிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு வெளியிட்டு உடனடியாகப் படைகளைப் பழைய நிலைக்கு விலக்கிக்கொள்ள வேண்டும்” என தமிழக சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை தமிழ்மக்கள் வரவேற்பார்கள் என்பதில் அய்யமில்லை. இது தமிழீழச் சிக்கல்பற்றி தமிழக அரசியல் கட்சிகள் தங்களுக்கும் இருக்கும் சிறு சிறு வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபட்டு, ஒரே அணியில் நிற்பதைக் காட்டுகிறது. ஆனால் இந்தத் தீர்மானத்தை இந்திய மத்திய அரசு எவ்வளவு தூரம் கவனத்தில் எடுத்துக் கொண்டு அக்கறையோடு செயல்படும் என்பதில் பலருக்கு நியாயமான அய்யம் இருக்கிறது. தமிழீழத்தில் வி.புலிகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசினால் நடத்தப்படும் ஆக்கிரமிப்புப் போருக்கு இந்தியா ஆயுதம், பயிற்சி,…

  9. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மலேசியாவில் பேரெழுச்சி http://img511.imageshack.us/my.php?image=virakesarizw4.jpg நன்றி : http://epaper.virakesari.lk/

  10. அன்பான பெரிய பிரித்தானியா வாழ் தமிழ் மக்களே தாயகத்தில் எம் உறவுகள் படும் இன்னல்களை பிரித்தானிய அரசுக்கும் இங்குள்ள மக்களுக்கு உணர்த்தும் முகமாகவும் அத்துடன் தமிழக உறவுகளின்‍ எழுச்சிக்கும், எம்மவர்கள் தொடர்பில் அவர்களின் நேசக்கரத்திற்கு நன்றி கூறும் முகமாகவும் எதிர்வரும் 19ம் திகதி கார்த்திகை மாதம் புதன்கிழமை மாலை 3.30 மணி தொடக்கம் 6.30 மணி வரை பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் இடம்பெறும்.அனைத்து உறவுகளும் திரண்டு எம் மக்கள் மீதான சிங்கள அரசின் இன அழிப்பினை தெரியப்படுத்துவோம்.ந‌ன்றி

  11. யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இந்தியா சென்றிருந்த மஹிந்த தெரிவித்த கருத்து தொடர்பாக நேற்று சட்டசவையில் காங்கிரசுக்கும் பா.ம.க வினருக்கும இடையே கடும் அனல் பறந்த வாக்குவாத மோதல் நடந்தது. இந்த விடயத்தில் பா.ம.க.வுக்கு ஆதரவாக ம.தி.மு.கவினர் குரல் கொடுத்தனர். விபரம் வருமாறு: சட்டசபையில் ஜி.கே.மணி (பா.ம.க) பேசியவை : மஹிந்த போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லி இருக்கிறார். மன்மோகன்சிங்குடன் அவர் பேசியவை என்ன என்பதுபற்றி தலைவருக்குத்; தெரிவிக்கபட்டிருக்கும் அது என்ன என்பது பற்றி முதல்வர் அறிவிப்பாரா? சிவபுண்ணியம் (இந்திய கம்னிஸ்ட்) பேசியவை : மஹிந்த போர் நிறுத்தம் செய்யமாட்டேன். ஆனால் தமிழருக்கு பாதிப்பு வராது என்கிறார…

  12. மஹிந்த நிபந்னையின்படி, தலைவர் பிரபாகரன் சரணடைந்தால், அங்கு போரை நிறுத்துவது பற்றி மஹிந்தவிடம் இந்தியப் பிரதமர் பேசுவார். காங்கிரசின் கொறடா சி.ஞானசேகரன் தெரிவித்தார். போரை நிறுத்த முடியாது என்று டில்லியில் கடந்த வியாழன் மஹிந்த கூறியதை அடுத்து, இந்திய அரசு இனி என்ன செய்யப் போகிறது என எதிhக்கட்சிகள் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பின. அதற்கு பதிலாக பேசிய போது காங்கிரஸ் கொறடா சி.ஞானசேகரன் : 'தமிழகம் கொந்தளிக்கும்' என்ற வார்த்தையை இங்கு பயன்படுத்தினார்கள். இலங்கை தனி நாடு. அதற்கென இறையாண்மை உண்டு. மத்திய அரசு மூலமாகத்தான் அதற்கு நடவடிக்கை எடுக்கச் சொல்ல முடியும். 'கொந்தளிப்பு' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, ஏதோ நாமே ஆயுதம் எடுத்து இலங்கைக்குப் போய் போரட வேண்…

    • 7 replies
    • 2.2k views
  13. கொழும்பிலுள்ள பிரபல தமிழ் வானொலிகளில் ஒன்றான வெற்றி எப். எம்மின் நிகழ்ச்சி முகாமையாளரும் ஊடகவியலாளருமான, லோஷன் என்று அழைக்கப்படும் வாமலோஷனன், ஸ்ரீலங்காவின் புலனாய்வுத்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேரடியாக வீட்டுக்குச் சென்று கைது செய்தவர்கள் ஸ்ரீலங்காவின் புலனாய்வுத்துறையினரே என்பதை உறுதிப்படுத்தியுள்ள லோஷனுடைய குடும்பத்தினர், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்ததன் காரணமாகவே தாம் கைதுசெய்துள்ளதாக, கைது செய்யும்போது வழங்கும் காரணத்தை உள்ளடக்கிய சீட்டில் ஸ்ரீலங்காப் புலனாய்வுத்துறையினர் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்தனர். எனினும் வாமலோஷனன் முன்னர் பணியாற்றிய வானொலி ஒன்றிலிருந்து, மீண்டும் தம்மோடு இணைற்துகொள்ளுமாறு தொடர்ச்சியாக அழுத்தங் கொடுக்கப்பட்டதாகவும். அதனுடன…

  14. தமிழீழ விடுதலைப் புலிகள் வானூர்திகள் மூலம் ஆயுதங்களை தருவிப்பதாக ஜேன்ஸ் பாதுகாப்பு வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  15. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கரடியனாறு பன்குடாவெளிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் தமிழ் துணை இராணுவக் குழுவின் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஏழு பேர் காணாமல் போய் உள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  16. இலங்கை தமிழர் தாக்கப்படுவதை கண்டித்து ஒரு தமிழன் என்ற முறையில் என் உணர்வைக் காட்ட வேண்டிய நேரம் இது. எனவே திட்டமிட்டபடி சென்னையில் நாளை மறுநாள், ஞாயிற்றுக்கிழமை, நானும் என் ரசிகர்களும் உண்ணாவிரதம் இருக்கிறோம் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். நெல்லையில் வில்லு படப்பிடிப்பில் நிருபர்கதளிடம் விஜய் கூறியதாவது: இலங்கையில் கொல்லப்படும் நம் தமிழ்ச் சகோதர சகோதரிகள் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் அங்கு பூரண சுதந்திரத்துடன் வாழ வகை செய்யப்பட வேண்டும். போர் நிறுத்தம் இப்போதே முடிவுக்கு வர வேண்டும். இந்த நோக்கங்களுக்காகத்தான் சென்னையில் திரைத்துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தில் பங்கேற்றேன். அதற்காக பிரதமருக்கு தந்தி அனுப்புமாறு எனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத…

  17. தமிழகத்தில் பழங்கால கலை பண்பட்டின் இலக்கணமாக திகழும் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழின் சுவையையும் ஒருங்கே கொண்ட நாடக கலை தற்போது அழிந்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.இயல், இசை, நாடகம் இணைந்த முத்தமிழ் என்ற பெருமையுடைய தமிழில் இன்று நாடகம் என்பது தன் பீடும் நடையை இழந்து ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டுக் கிடக்கிறது. நாடகம் படைப்பதும் நாடகம் நடிப்பதும் பல தமிழர்களுக்கு தெரியுமா என்பது சந்தேகம் தான். படங்களுடன், கட்டுரையினை வாசிக்க... http://www.tamilseythi.com/kaddurai/tamiln...2008-11-15.html

  18. யாழ் குடாநாட்டில் நீச்சல் தடாகம் இல்லாத குறையை போக்குவதற்கு மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைவாக அவரின் புதல்வர் நாமல் ராஜபக்ஸவினால் இயக்கப்படும் இளைஞர்களுக்கான நாளை எனப்படும் அமைப்பினால் இந்த திட்டம் இன்று உத்தியோகபூர்வமாக சமய நிகழ்ச்சிகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ் நகரின் மத்தியில் உள்ள மத்திய கல்லு10ரியில் இந்த நீச்சல் தடாகம் அமைக்கப்படவுள்ளது. கடுமையான உயர் பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று இடம்பெற்ற இந்த வைபவத்தில் யாழ் நகர தளபதி பிரிகேடியர் குலதுங்க, மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக கல்விப் பணிப்பாளர், மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள், புளுவோற்றர் சிஸ்ரம் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். யாழ் குடாநாட்டில் நீச்சல்…

  19. சாயல் கண்ணாடி அணிந்துகொண்டு எடுப்பாகச் செயற்பட்டுவரும் விமானப்படை உயரதிகாரிகள் புலிகள் இயக்கத்தினரின் சிலின் 143 ரக சிறிய விமானங்களை தாக்கி அழிப்பதற்காக “”நைற்விஷன்’ (Niபாவஎளைழைn iளெவசரஅநவெ)இரவுத் தேடலுக்கான உபகரணம் தொடக்கம் சுப்பர் சொனிக் விமானங்கள் வரை பல்வேறு விமான வகை மற்றும் விமானப் பாதுகாப்பு உபகரணங்கள் கருவிகளை கொள்வனவு செய்யும்படி அரசைக் கோரியபோது உடனேயே அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. ஆயினும்இ கடந்த நவம்பர் 4 ஆம் திகதி இரவு புலிகளின் விமானம் கொழும்பு வான் பரப்புக்குள் தாழ்வாகப் பறப்பதையும் அதற்கு மேலாக விமானப்படையின் எப்7 தாக்குதல் விமானம் ஒன்று பறப்பதையும் காட்டும் விமானப்படையின் வீடியோ காட்சியொன்றில் காட்டியிருப்பதால் விமானப்படையினர் செயற்படும் விதம் ப…

  20. முள்ளை முள்ளால் எடுக்கும் தந்திரோபாயமே இனிச் சரி! [15 நவம்பர் 2008, சனிக்கிழமை 12:50 மு.ப இலங்கை] ஈழத் தமிழர் தாயகம் மீது தனது அரசு தொடுத்திருக்கும் போரை நிறுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை என இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நின்றுகொண்டு திட்டவட்டமாக அறிவிப்பு விடுத்திருக்கின்றார் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இலங்கை அரசுப் படைகள் தொடுத்திருக்கும் யுத்தத்தை நிறுத்தச் செய்வதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மத்திய அரசை தமிழகத்தின் அனைத்துக் கட்சிக் கூட்டம் வற்புறுத்திக் கோரியுள்ள பின்னணியில் - யுத்தத்தை நிறுத்துமாறு தமிழக சட்டசபை ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி வற்புறுத்தியுள்ள பின்புலத்தில் - இந்தியத் தலைநகர் புதுடில்லியில் போய் நின்றுகொண…

  21. ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலையைக் கண்டித்தும், போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வலியுறுத்தியும் புதுடில்லியில் உள்ள இந்திய நாடாளுமன்றம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களின் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

  22. பிரபாகரன் படை! அதிரடித் தளபதிகள் அறிமுகம் 1975, ஜூலை 27... பிரபாகரனின் துப்பாக்கி தனது முதல் குண்டைத் துப்பிய நாள். யாழ்ப்பாணம் மேயர் துரையப்பாவைச் சுட்டுக் கொன்றது அது! 16 வயதில் வீட்டை விட்டுப் புறப்பட்டவரின் வாழ்க்கை, இப்போது காடுகளுக்குள், பதுங்கு குழிகளுக்குள். 'பிரபாகரனையும் அவரது உளவுப் படைத் தளபதி பொட்டு அம்மனையும் கைது செய்யும் நாளில்தான் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படும்' என்று ஜனாதிபதி மாளிகையில் இருந்து கடந்த வாரத்தில் கர்ஜனை செய்துள்ளார் மகிந்தா ராஜபக்ஷே. அவரது ராணுவத்துக்குக் கடந்த 30 ஆண்டுகளாகத் தண்ணி காட்டி வருகிறது தமிழீழ விடுதலைப் புலிகளின் படை. 'மூன்று நாட்களில் பிரபாகரன் இருக்கும் இடத்தை நெருங்கிவிடுவோம், 30 நாட்களி…

  23. 13ஆவது திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது - சபையில் சம்பந்தன் எம்.பி. கருத்து வீரகேசரி நாளேடு 11/14/2008 7:49:37 PM - யுத்தத்தின் மூலம் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயற்சிக்கின்றார். ஆனால், அது நடைமுறைச் சாத்தியமற்றது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இணைக்கப்பட்ட வட.கிழக்கினை பிரித்தமை தமிழ் மக்களுக்கு இழைத்த பாரிய துரோகமாகும். 13ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் மக்களின் உயிர்கள், சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் இன சுத்…

  24. ஒமந்தை சோதனைச்சாவடியில் ஐ.சி.ஆர்.சி மீண்டும் பணியில் ஆ.அருண் 11/14/2008 10:05:28 PM - இவ்வாண்டு ஜனவரிமாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 270000ற்கு அதிகமான மக்கள் இருபக்கங்களிலிருந்தும் ஒமந்தைக்கடவையைப்பயன்படுத்த

  25. புலிகளின் மீது குண்டு வீசினாலும் தமிழர்கள் மீது வீசுகின்ற குண்டுதான்: மகிந்தவுக்கு கருணாநிதி பதில் [வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2008, 08:38 பி.ப ஈழம்] [க.நித்தியா] தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது குண்டு வீசினாலும் தமிழர்கள் மீது வீசுகின்ற குண்டுதான் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி பதிலளித்துள்ளார். தமிழக சட்டசபையில் இன்று வெள்ளிக்கிழமை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் கருத்து குறித்து அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்பினர். இதற்கு பதிலளித்து கருணாநிதி ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த 12 ஆம் நாள் இந்த சபையில் ஒரு மனதாக - ஒரே மனதாக ஒரு தீர்மானத்தை தமிழர்களின் இனம் கா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.