ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143633 topics in this forum
-
'அதிகாரம் மிகவும் அசௌக்கியமான காரியங்களை எவ்வித கணக்கு வழக்குகளும் இன்றி செய்ய முனைகிறது", 'தண்டணையற்ற அதிகார துஸ்பிரயோகம், வனத்தின் சட்டமாகும்", 'ஆக்கிரமிப்பு யுத்தமே பிரதான சர்வதேச குற்றமாகும்". -- ராம்சி கிளாக், (முன்னாள் அமெரிக்கா சட்ட மா அதிபர்) பாரிஸ் - 23 செப்டம்பர் 2005 சட்டங்கள் சமூதயத்தை காப்பாற்றவும், சமத்துவம் நீதியின் தாயாகவும் உள்ளது. அதிகாரம் ஒரு போதும் சட்டத்திற்கு மேலாக இருக்க முடியாது. இவை ஜனநாயத்திற்கும் நீதிக்குமான சில முக்கிய விதிகள். இவ் விதிகள் சிறிலங்காவை பொறுத்த வரையில் எவ்வித நிலையில் உள்ளன? நாம் சிறிலங்காவினுடைய மனித உரிமைக்கான புள்ளி விபரங்களையும், பல விதப்பட்ட அறிக்கைகளையும் ஆராய்வோமானால் - ஐக்கிய நாடுகள் சபையின் வேறு பிரிவுக…
-
- 2 replies
- 1.2k views
-
-
சென்னையில் வரும் 21-ந்தேதி ஈழத்தமிழருக்கு ஆதரவாக நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் அனைத்து தமிழ மக்களையும் சென்னைக்கு வருமாறு தமிழக முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.தமிழர்களின் பலத்தினை உலகிற்கு எடுத்துக்காட்டுவோம் என அவர் அறிவித்துள்ளார். http://www.tamilseythi.com/tamilnaadu/karu...2008-10-19.html நிருபர்:இறைவன்
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கை இனப்பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணப்படும் வரையில், கறுப்பு பட்டி அணிந்து தமிழர்களுக்கான ஆதரவை உறுதிப்படுத்துமாறு தமது கட்சியாளர்களுக்கு தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகத்தினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். இலங்கை தமிழர்களுக்கும் தமக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது .இதனை மையமாகக்கொண்டு இலங்கையில் ஏற்பட்டுள்ள போர் நிறுத்தப்படும் வரையில் தமது கட்சியாளர்கள் இந்த கறுப்பு பட்டிகளை அணிந்திருக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி, த…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆதித் தமிழன் தோன்றிய பூர்வீக மண் இலங்கை கவிபேரரசு வைரமுத்து முழக்கம் வீரகேசரி நாளேடு 10/19/2008 9:20:23 PM - ஆதித் தமிழன் பிறந்த பூர்வீக மண் இலங்கை மண். அந்த மண்ணுக்கு வந்தவர்களால், அந்த மண்ணில் பிறந்தவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று கவிபேரரசு வைரமுத்து கூறினார். இராமேஸ்வரத்தில் தமிழக கலையுலகத்தினர் நேற்று நடத்திய பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது: இலங்கை என்பது தமிழ் மன்னர்கள் ஆண்ட பூமி. அதனால் அது தமிழர்களுக்கு சொந்தமான மண் என்று உரிமைக் கொள்ளக்கூட எமக்கு வாய்ப்பிருக்கிறது என்ற தொனியில் எனக்கு முன்னர் பேசியவர் கூறிவிட்டுப் போனார். அந்தத் தோழருக்கும் அந்த வரலாற்றை இன்னும் பிழைபட எழுதிக்கொண்டிர…
-
- 0 replies
- 1.7k views
-
-
நிமல்ராஜன் கொல்லப்பட்டு இன்றோடு எட்டு வருடங்கள் - ஆம் சட்டத்தின் ஆட்சி பாஸிஸமாகிறது - செய்தி ஆய்வு: நிமல்ராஜன் கொல்லப்பட்டு இன்றோடு எட்டு வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. 2000ஆம் ஆண்டு ஒக்ரோபர் 19ஆம் திகதி இரவு தனது வீட்டில் இருந்து வேலை செய்து கொண்டிருந்த நேரம் அவர் கொல்லப்பட்டார். நிமல்ராஜனின் கொலை தொடர்பாக பல்வேறு அமைப்புக்கள் ஈபிடிபி மீது குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இற்றைவரை நிமல்ராஜனின் கொiலைச்சூத்திரதாரிகள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படவுமில்லை. தண்டிக்கப்படவுமில்லை. நிமல்ராஜனில் ஆரம்பித்த ஊடகவியலாளர் மீதான படுகொலை முயற்சிகள் இற்றைவரை தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன. ஊடகவியலாளர் நடேசன், சிவராம், சம்பத் லக்மல், றேலங்கி என்று கொல்லப்பட்ட ஊட…
-
- 2 replies
- 1.2k views
-
-
கோத்தபாய – பசில் இன்று இந்தியா பயணமாகின்றனர் - புதுடெல்லியில் அவசர சந்திப்புகள் ஏற்பாடு - இந்திய வெளியுறவு அமைச்சருக்கு இலங்கை அழைப்பு: ஜனாதிபதியின் ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் இன்று இந்தியா பயணமாகின்றனர். இந்திய பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் நேற்று தொலைபேசியில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றதுடன் இதன் போது, இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் பிரச்சினைகள் குறித்து, நேரில் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில், பசில், மற்றும் கோத்தபாய ஆகியோர் புதுடெல்லி செல்கின…
-
- 6 replies
- 1.9k views
-
-
தமிழக யுத்த எதிர்ப்புக்கள் - இராணுவ நடவடிக்கைகளைப் பாதிக்கவில்லை – படைத்துறைப் பேச்சாளர்கள்: இந்தியாவில் விசேடமாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள யுத்த எதிர்ப்பு நடவடிக்கைள் தமது இராணுவ நடவடிக்கைகளைப் பாதிக்கவில்லை என விமானப் படையின் பேச்சாளர் வின்கமாண்டர் ஜனக்க நாணயக்கார மற்றும் கடற்படையின் பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர். புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே புலிகளின் இலக்குகள் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டன. இவற்றில் எந்த மாற்றமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை, தொடர்ந்தும் தாக்குதல்கள் இடம்பெறுவதாகவும் விமானப் படையின் பேச்சாளர் கூறியுள்ளார். அதேவேளை ஒரு விமானத் தாக்குதல் கூட நடத்தாமல் இருந்த வாராங்களும் உண்டு, இந்த நிலையில் ஓரிரு நாள் வான்…
-
- 0 replies
- 996 views
-
-
நல்லது. மீண்டும் அந்தக் காலம் அரும்பியிருக்கிறது. ஈழத்தமிழர் நலனுக்காக ஒட்டுமொத்த தமிழகமுமே களம் இறங்கியிருக்கும் செய்திதான் அது. அம்மக்களின் நெடுங்காலப் போராட்டத்திற்கு ஆதரவாக ஆக்கபூர்வமாக என்ன செய்யப் போகிறோம் நாம்? என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி. என்னென்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்பதைக் காட்டிலும்…… என்னென்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதில் கவனத்தைக் குவித்தாக வேண்டிய வேளை இது. அது நாம் காலக்குதிரையை சற்று கழுத்தைத் திருப்ப அனுமதித்தால் மட்டுமே நடந்தேறக்கூடிய விசயம். முதலில், சமாதான மேசைகளில் பரிமாறப்பட இருப்பது ஈழத் “தமிழர்” குறித்ததான பிரச்சனை என்பது கவனத்துக்கு வருமேயானால்…… இந்தத் தமிழர்களது பிரச்சனைகள் குறித்து எந்தெந்தத் “தமிழரெல்லாம்” கூடி வி…
-
- 0 replies
- 1.8k views
-
-
தினமும் வீட்டை விட்டுக் கிளம்பும் முன் அருகிலிருக்கும் கடையில் செய்தித்தாள்களை லேசாக மேய்ந்துவிட்டுப் புறப்படுவது வழக்கம். அன்றும் அப்படித்தான் எதேச்சையாக நாளிதழைக் கையில் எடுக்கிறேன். நெஞ்சில் பேரிடி ஒன்று இறங்குகிறது. “இலங்கையில் தமிழர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்!” “தமிழ்க் கைதிகளை கொடூரமாகக் கொன்ற கோரம்!!” என விரிந்து கொண்டே போகிறது செய்தி. என்னை அறியாமல் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் கன்னத்தை நனைக்கிறது. வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த குட்டிமணி, ஜெகன், தம்பித்துரை உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் போராளிகளை அறை அறையாகச் சென்று தேடிப்பிடித்து நிராயுதபாணிகளான அவர்களை குத்திக் கொன்ற கொடூரமும்…….. உயிரிழந்தவர்களை இழுத்து வந்து அச்சிறையின் புத்தர் …
-
- 0 replies
- 1.2k views
-
-
மட்டகளப்பு மாவட்டத்தில் நாளை ஹர்த்தால் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக காவற்துறையின் பாதுகாப்பில் இருந்த இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்ட நிலையில் காத்தான்குடி பாலமுனைக் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மட்டக்களப்பில் தொடர்ச்சியாக பலர் கடத்தப்பட்டு காணாமல் போய் அல்லது கொல்லப்பட்டும் வருவதனை வெளி உலகிற்கு எடுத்துச் சொல்வதற்கும் இந்த ஹர்த்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்பேசும் மக்கள் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஹர்த்தால் அழைப்பு துண்டுப் பிரசுரம் அரசாங்க மற்றும் தனியார் அலுவலகங்கள், வியாபார ஸ்தலங்கள் என்பவற்றிற்கு தபால் மூலம் அனுப…
-
- 0 replies
- 1.4k views
-
-
வீரகேசரி வாரவெளியீடு - தமிழகத்தில் தற்போது இலங்கைத் தமிழ் மக்களுக்காக எழுந்துள்ள எழுச்சி யானது வெறும் தேர்தலை நோக்கியதல்ல. நாம் இலங்கையில் அல்லல்படும் தமிழ் மக்களுக்காகவே குரல் எழுப்புகிறோம் என்று தமிழக முதல்வரின் புதல்வியும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கேசரி வார இதழுக்கு வழங் கிய விசேட செவ்வியில் தெரிவித்தார். ""இலங்கையிலுள்ள தமிழர்களின் விவ காரம் உள்நாட்டு விவகாரம் என்பதை ஏற் றுக் கொள்கிறோம். ஆனால் அதற்காக நாம் ஒதுங்கியிருக்க முடியாது. நாஸி முகாம்களில் யூதர்களை ஹிட்லர் படுகொலை செய்த போது அதனை உள் நாட்டு விவகாரமென உலகம் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. அந்த வகையில் இலங்கையில் தமிழர்கள் பாதிக்கப்படு வது உள்நாட்டு விவகாரமாக இருந்தா லும் கூட அது குறி…
-
- 0 replies
- 916 views
-
-
ராமேஸ்வரம்: இலங்கையில் தமிழரக்ளுக்கு எதிராக சிங்கள ராணுவம் நடத்தும் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தக் கோரியும், நிரந்தர தீர்வு காணவும் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்த் திரையுலகின் படைப்பாளிகளும் தயாரிப்பாளர்களும் பெருமளவு ராமேஸ்வரத்தில் இன்று குவிந்துள்ளனர். சன் லைவ்: பிற்பகல் 2 மணிக்குத் துவங்கும் திரையுலகினரின் இந்த பரபரப்பான பேரணியை, சன் நியூஸ் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புகிறது. மாலை நடைபெறும் கண்டனப் பொதுக் கூட்டமும் நேரடியாக ஒளிபரப்பாகிறது. இந்தப் போராட்டத்துக்காக இயக்குநர் பாரதிராஜா, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் தலைமையில் 2000 இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நேற்று மாலை தனி ரயிலில் ராமேஸ்வரம் புறப்பட்டனர். இன்று காலை ரா…
-
- 50 replies
- 8k views
- 1 follower
-
-
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி வரும் இலங்கை கடற்படையினரைக் கண்டித்து இலங்கை தூதரகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்ற மீனவ அமைப்பை சேர்ந்த 100 பேர் கைது செய்யப்பட்டனர். இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்துவதும், தாக்குதல் நடத்துவதும் தொடர் கதையாக உள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகியுள்ளனர். இதை கண்டித்து அரசியல் கட்சியினர், மீனவர் அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர் முன்னேற்ற சங்கம், தென் இந்திய மீனவர் நலச் சங்கம் ம…
-
- 0 replies
- 848 views
-
-
"அல் ஜசிரா" தொலைக்காட்சி செய்தியாளர் பேர்ட்லி அண்மையில் வன்னி யுத்தகளத்திற்குச் சென்று சேகரித்த தகவலின்படி இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளின் இதயப் பகுதியை அடைவதற்கு இன்னும் 15 கிலோமீற்றர் தூரத்தைக் கடக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும் படையினரின் எந்த முனையில் இருந்து இந்த தூரம் என்ற விடயத்தை அவர் குறிப்பிடவில்லை. எனினும் இராணுவ பேச்சாளர் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல படையினர் கிளிநொச்சியை கைப்பற்ற இன்னமும் ஒன்றரை கிலோமீற்றரே இருப்பதாக குறிப்பிட்டுள்ளதை சண்டே டைம்ஸின் பாதுகாப்பு களத்தி;ல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் யுத்தக்களம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தரப்பு தகவலை தம்மால் பெறமுடியவில்லை என பேர்ட்லி குறிப்பிட்டுள்ளார். அமைச…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போதைய காலச் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் நான்காம் தலைமுறை யுத்த உபாயங்களைப் பயன்படுத்தி போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக லக்பிம நாளேட்டின் ஆய்வு தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை இராணுவம் மூன்றாம் தலைமுறை யுத்த தந்திரோபாயங்களை பயன்படுத்தி களத்தில் வெற்றிகளை ஈட்டி வருகின்ற போதிலும், யுத்தம் தவிர்ந்த ஏனைய விடயங்களில் அரசாங்கம் தோல்வியைத் தழுவியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வான்,தரை மற்றும் கடல்வழி மூலமாக முழுப்படைப்பலத்தையும் பயன்படுத்தி தொடர்ச்சியாக தாக்குல்களை மேற்கொள்வதே மூன்றாம் தலைமுறை யுத்த உபாயமாகும். யுத்த நடவடிக்கைகளுடன், சமய, கலாச்சார அரசியல் சக்திகளை இணைத்துக் கொண்டு இராஜதந்திர ரீதியில் போராட்டத்தை முன்னெடுப்படுப்பது நா…
-
- 0 replies
- 1.5k views
-
-
சென்னை: அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய தயாநிதி மாறன் முடிவு செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை நேரில் ஒப்படைக்க தமக்கு நேரம் ஒதுக்கி தருமாறு முதல்வர் கருணாநிதிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். திமுக சார்பில் மத்திய சென்னை தொகுதியிலிருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன். மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் அழகிரியுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பின் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து அவரை நீக்க திமுக பொதுக்குழு முடிவு செய்தது. ஆனால் அதற்குள்ளாகவே தயாநிதி மாறன் தனது மத்திய அமைச்சர் பதவியை தாமே முன…
-
- 0 replies
- 951 views
-
-
புதுடெல்லி- கொழும்பு (ஏஜென்சி) தமிழர்கள் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி, தன்னிடம் தொலைபேசியில் பேசிய இலங்கை அதிபர் ராஜபக்சேவைஇ பிரதமர் மன்மோகன்சிங் கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக நேரில் விவாதிப்பதற்காக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்கிறார். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதை, மத்திய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங்கை இலங்கை அதிபர் ராஜபக்சே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி: பிரதமர் மன்மோகன் சிங்கை, இலங்கை அதிகர் ராஜபக்சே சனிக்கிழ…
-
- 0 replies
- 840 views
-
-
கே. இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட முடியாது. அது ஓர் இறைமையுள்ள அரசு. எனவே ஒரு வரையறைக்குள்தான் இந்தியா செயல்பட முடியுமென காங்கிரஸ் பேச்சாளர் அபிஷேக் சிங்வி கடந்த 15ம் திகதி கூறியிருக்கிறாரே? பதில் : கடந்த கால சம்பவங்களை அறியாமல் அபிஷேக் சிங்வி தன்னுடைய ஆசைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.இந்திய அரசு இலங்கை நாட்டு இறையாண்மையில் தலையிட முடிhயாது என்றால் எந்த அடிப்படையில் ராஜீவ் அவர்கள் இந்திய அமைதிப்படையை அங்கு அனுப்பினார்? இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எப்படி ஏற்படுத்தினார்? வடக்கு கிழச்கு மாகாணங்கள் ஒரே பகுதியாக இருக்க வேண்டும் என்கிற கருத்;தை அந்த ஒப்பந்தத்தில் எப்படிப் பதிவு செய்தார்? இந்த வரலாறு எல்லாம் தெரியாத அபிN|க் சிங்வி இன்று சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழினமும் ஒற்றுமையின் நிலைப்பாடும் - சாண்டில்யன் ஒற்றுமை என்பது, ஒரு குடும்பத்தின் / சமுதாயத்தின் / இனத்தில் வாழும் அங்கத்தவரினது கூட்டு முயற்சி. முதலாவதாக, ஒற்றுமை என்ற எண்ணம் / பார்வை, குடும்பத்திலிருந்துதான் உதிக்கவேண்டும். பிள்ளைகளை பெற்றோர் சரியாக வளர்த்தாலும், பிள்ளைகளுடைய வளரும் சூழல் நிலைகள் அவர்களைப் பாதிக்கலாம். ஒற்றுமையின்மை என்பது ஒரு இனத்தின் அங்கத்தவரிடம் எப்படி உருவாகின்றது / உதிக்கின்றது. இவைகளை அடையாளம் கண்டு, அப்படியான காரணங்களை எமது எண்ணத்திலிருந்து அழித்துவிட்டால், எமது எண்ணத்தில், எமது பழக்க வழக்கங்களிலிருந்து ஒற்றுமையின்மை என்ற குணாதிசியங்கள் முற்றாக அழிந்து விடும். தொழில் நுட்ப குறைகளை, மூலக் காரண ஆராய்வு செய்து, அவைகளை நிவிர்த்தி …
-
- 0 replies
- 1k views
-
-
http://vimbamkal.blogspot.com/2008/10/blog-post_19.html
-
- 0 replies
- 1.6k views
-
-
ஈழத்தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்ளுக்காகக் காலங்காலமாக "கவலை" தெரிவித்துக்கொண்டிருப்பவர்
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழர் விரோத அணியில் கூட்டு இணையும் சக்திகள் [19 ஒக்டோபர் 2008, ஞாயிற்றுக்கிழமை 9:05 மு.ப இலங்கை]/td> ஈழத் தமிழருக்கு நியாயம் தேடிக் கொடுப் பதற்கான எழுச்சி - கிளர்ச்சி - தமிழகத்தில் பிரவாகம் எடுக்கத் தொடங்கியதுமே, தென்னிலங்கைச் சிங்க ளத்துக்காகக் காவடி தூக்கும் தமிழக சக்திகளும் தங் கள் பங்கு கைவரிசையை தம்பாட்டுக்கு ஆரம்பித்து விட்டன. அந்த வரிசையில் வழமைபோல, சென்னையி லிருந்து வெளியாகும் ‘த ஹிண்டு’ பத்திரிகையும் அதன் பிரதம ஆசிரியர் என்.ராமும் தங்கள் பங்கு கைங்கரியத்தை ஒப்பேற்றத் தொடங்கி விட்டனர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான தமிழகத்தின் எழுச்சிக் குரலை சகிக்க முடியாத ‘த ஹிண்டு’ பத்திரிகை ஒரு புறம் அந்த எழுச்சியை பயங்கரவாத இயக்கமான புலிகளுக்கு ஆதரவான கிளர்ச…
-
- 0 replies
- 1.4k views
-
-
25 ஆண்டுகளுக்குப் பின்னர், தமிழகத்தில் உருவாகியுள்ள பேரெழுச்சி, ஈழப் போராட்ட வரலாற்றில் பெரும் மாறுதல்களைத் தோற்றுவித்துள்ளது. தடுத்து நிறுத்தும் தற்காப்புச் சமரினை முன்னெடுக்கும் விடுதலைப் புலிகள், அழித்தே தீருவோமென வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் தென்னிலங்கை மற்றும் இடம்பெயரும் மக்களென இறுக்க நிலையடைந்துள்ள களநிலைமைகள் மோசமடையும் போது தமிழக இன உணர்வலைகள் எழுந்து நிற்கின்றன. தமிழின அழிப்பிற்கு, படைக்கல உதவி புரிந்த இந்திய அரசின் மறைமுகத் தலையீடு, வவுனியா படைத்தளம் மீதான தாக்குதலின் போது அம்பலமானதால் தமிழக எழுச்சிக்கான அடித்தளம் தோற்றமுற்றது. இந்திய பொதுவுடமைக் கட்சியின் உண்ணா விரதப் போராட்டத்தினூடாக பல செய்திகள், தமிழ் நாட்டு மக்களின் கவனத்திற்கு கொண்டு செல…
-
- 1 reply
- 1.2k views
-
-
உள்ளுராட்சி திருத்த சட்டமூலத்தை எதிர்க்க SLMC - CWC என்பன தீர்மானித்துள்ளன: அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க உத்தேசித்துள்ள உள்ளுராட்சி திருத்த சட்டமூலத்தை எதிர்க்க ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பன தீர்மானித்துள்ளன.உள்ளுராட்ச
-
- 0 replies
- 692 views
-
-
பிரதமரின் வீட்டின் முன்பாக வெடி மருந்து கொண்டு சென்றார்களாம் நால்வர் கைது: களுத்துறை மாவட்டம் ஹொரண பிரதேசத்தில் உள்ள பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் இல்லத்திற்கு எதிரில், முச்சக்கர வண்டியில் வெடி மருந்தை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியையும், அவற்றை கொண்டு சென்றதாகக் கூறப்படும் 4 பேரையும் தாம் கைதுசெய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். 4.5 கிலோ கிராம் வெடி மருந்து, 4 ஜெலக்னைட் குச்சிகள், சிறிதளவு அமோனியம் என்பவற்றை கைப்பற்றியுள்ளதாக ஹொரணை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இவற்றை தாம் கடுவல பிரதேசத்திற்கு கொண்டு செல்விருந்ததாக கைதுசெய்யப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.
-
- 0 replies
- 914 views
-