ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143630 topics in this forum
-
இராணுவத்தின் கொடுந்தாக்குதலைச் சந்தித்துவரும் இலங்கைத் தமிழர்களின் இன்னலைத் தீர்க்க மத்திய, மாநில அரசுகள் மேலும் அக்கறை காட்ட வேண்டும், இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளான தமிழர்களுக்கு உணவு, மருந்து, உடைகள் போன்றவற்றை உடனடியாக அனுப்பி உதவ வேண்டும், இதற்குத் தடங்கல்கள் வருமானால் மத்திய அரசிலிருந்து திமுக விலக வேண்டும் என்று தமிழ்நாட்டின் 10 பெரிய நகரங்களில் நடத்திய கருத்துக் கணிப்பிலிருந்து தெரிகிறது. சென்னை, கோயமுத்தூர், ஈரோடு, சேலம், மதுரை, வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் இம் மாதம் 6 முதல் 11 வரையில் 1,031 பேர்களிடம் கருத்து கேட்டபோது இந்தத் தகவல்கள் கிடைத்தன. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக் குழுமம் சார்பில், சமூகத்தின் அனைத…
-
- 5 replies
- 1.4k views
-
-
லண்டனிலிருந்து வன்னியன் "கிளிநொச்சி' இது சிங்கள தேசத்தைப் பொறுத்தவரை வெல்லப்படமுடியாத ஆனால் வீழ்த்தப்பட வேண்டிய இலக்கு. அதேநேரம் புலிகளின் இராஜதந்திர நகரம் என உலகளாவிய ரீதியில் அறியப்பட்ட கிளிநொச்சி மிகக் கடுமையான போரழிவுகளைச் சந்தித்து மண்மேடாகி பின் குறுகிய காலத்தில் புதுப் பொலிவுடன் நிமிர்ந்து நிற்கிறது. தமிழர்களின் கடும் உழைப்பிற்கும், தன்னம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும் சான்று பகரும் நகரம். ஆனால் அதன் துரதிர்ஷ்டம் என்னவோ மீண்டும் அதன் மீது ஊழிப் பெருங்காற்று வீசத் தொடங்கிவிட்டது. கடந்த வாரத்திலிருந்து ஆட்லறிப்பல்குழல் எறிகணைகளும், விமானப்படைக் குண்டுவீச் சுக்களும் கிளிநொச்சி நகரத்தின் பெரும் பாலான கட்ட டங்களை அழித்துக்கொண்டிருக் கின்றன. இக் கட்டுரை எழுத…
-
- 3 replies
- 2.7k views
-
-
தற்போதைக்கு ஆயுதங்கள் களையப்பட மாட்டாது – TMVP: தற்போதைய பாதுகாப்பற்ற சூழ்நிலையில் ஆயுதங்கள் களையப்பட மாட்டாதென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். அத்துடன், எதிர்வரும் தேர்தல்களில் கருணா தலைமையில் TMVP போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திடீரென ஆயுதங்கள் களையப்பட்டால் சுமார் 3000த்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என கட்சியின் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார். மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேரா போன்ற முக்கிய இராணுவத் தலைவருக்கே பாதுகாப்பளிக்க முடியாத நிலையில் சாதாரண போரளிகளது பாதுகாப்பை எவ்வாற உறுதிப்படுத்த முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்வரும் பொதுத…
-
- 0 replies
- 965 views
-
-
யுத்தத்தை நியாயப்படுத்த அமைச்சர் ரோஹித்த இந்தியாவிற்கு அவசர விஜயம்: தற்போது முன்னெடுக்கப்படும் யுத்தத்தை நியாயப்படுத்தும் நோக்கில், வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம இந்தியாவிற்கு அவசர விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கில் இடம்பெற்றும் வரும் பாரிய மனிதப் பேரவலம் குறித்து தலைநகர் டெல்லியிலிருந்து விடுக்கப்பட்ட எச்சரிக்கையை அடுத்து அமைச்சர் இந்தியா செல்லவுள்ளார். இந்திய வெளிவிவாகர அமைச்சர் பிரணாப் முகர்ஜீ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயண் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வடக்கில் இடம்பெற்றுவரும் இராணுவ முன்நகர்வுகள் மற்றும் மனிதாபிமான பணிகள் தொடர்பில் இந்திய மத்திய அரசிற்கு இதன் போது விளக்கமளிக்கப்படவ…
-
- 1 reply
- 889 views
-
-
அரசாங்கத்திற்கும் TMVP க்கும் இடையிலான இரகசிய ஒப்பந்தம் அம்பலப்படுத்தப்பட வேண்டும் -UNP: ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கும், கருணா தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இரகசிய ஒப்பந்தம் அம்பலப்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். சிறுவர் போராளிகளை இணைத்துக் கொள்ளல் முகாம்களை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் சார்பில் பல்வேறு வன்முறைச் செயல்களை கருணா தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்டவிழ்த்துவிடுவதாக அவர் சுட்டிக்காட்டியு…
-
- 2 replies
- 935 views
-
-
சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவின் தலைமை அதிகாரி ரியர் அத்மிரல் சரத் வீரசேகரவுக்கு வழங்கப்பட்டிருந்த 15 கடற்படையினரின் பாதுகாப்பு விலகிக் கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படைத் தலைமையகம் அறிவித்துள்ளது. சரத் வீரசேகர சிவில் பாதுகாப்பு படையின் பணிப்பாளராக நியமிக்கப்படும் போது, அமைச்சரவைப் பத்திரம் மூலம், அவர் ஏற்கனவே கூட்டுப்படை அதிகாரியாக கடமையாற்றிய போது வழங்கப்பட்டிருந்த வாகனங்கள், பாதுகாப்பு என்பன வழங்கப்பட வேண்டும் என கடற்படையினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. புலிகளின் அச்சுறுத்தல் இருக்கும் கிராமங்களில் பாதுகாப்பு குறித்து ஆராயும் நோக்கில் அடிக்கடி அந்த பிரதேசங்களுக்கு செல்லும் வீரசேகரவுக்கு புலிகளின் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக…
-
- 0 replies
- 884 views
-
-
கனடாவில் நேற்று சனிக்கிழமை தொடங்கியுள்ள துடுப்பாட்டப் போட்டியில் பங்குபற்றும் சிறிலங்கா குழுவினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டப் போராட்டம் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 11 replies
- 1.7k views
-
-
ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தமிழ்த் திரையுலகத்தினர் இன்று முதல் கறுப்புப் பட்டி அணிந்து தங்களது பணிகளை மேற்கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
-
ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து கோவையில் மாணவர்கள் நேற்று சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 865 views
-
-
எப்பிடி இருந்த நான் இப்படி மாறிட்டன்
-
- 7 replies
- 2.1k views
-
-
பெண் விடுதலைக்கு வித்திட்ட 2 ஆம் லெப். மாலதி அன்று பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள், அடக்குமுறைகள் என்பன மேலோங்கியிருந்தன. எமது சமூகமோ சாதி, சமய கட்டமைப்புக்களால் இறுக்கமாக பின்னிப் பிணைந்திருந்தது. அவை எமது சிந்தனைகளுக்கும் தடைக்கல்லாகவே அமைந்தன. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவை அன்று பெண்களுக்கான வரைவிலக்கணமாக எழுதப்பட்டன. அன்றைய சமூக அமைப்புக்களில் பெண்ணானவள் பலவீனமுடையவளாகவும், பயந்தவளாகவும், பணிவுமிக்கவளாகவும், வீட்டின் கடமைகளைச் செய்பவளாகவுமே கருதப்பட்டாள். உறுதியானவனாகவும் உயர்ந்தவளாகவும் ஆண் சமூகத்தில் போற்றப்பட்டாள். வீட்டின் ஆஸ்தான நாயகியாக விளங்கிய பெண்ணுக்கு அடுப்பங்கரைதான் அவளின் உறைவிடமானது. கரிப்பு…. அவளுடைய சுவாசத்தோடு ஊறிப்…
-
- 0 replies
- 942 views
-
-
நோர்வேயின் பீப்பல்ஸ் எட் நிறுவனத்தின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் ருக்மலே பிரதேசத்தில் வைத்து சிலரால் தாக்கப்பட்டுள்ளார். ஆனந்த ராஜகருண என்ற இந்த முன்னாள் அதிகாரி இது குறித்து கொட்டாவ காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு 36 வாகனங்களை கொடுத்துள்ளதாக இந்த நோர்வேயின் அரசசார்பற்ற நிறுவனத்தின் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=103
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் நீட்டியுள்ள நேசக்கரம் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று சுவிசிலிருந்து வெளிவரும் "நிலவரம்" மாதமிருமுறை ஏட்டின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 738 views
-
-
http://vimbamkal.blogspot.com/2008/10/blog-post_11.html
-
- 0 replies
- 1.6k views
-
-
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் ரீ.எம்.வீ.பீ உறுப்பினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். இலங்கை நேரம் இன்று மாலை 6.30 அளவில் களுவாஞ்சிக்குடி டிப்போவுக்கு அருகாமையில் ரீ.எம்.வீ.பீயினரால் நடத்தப்படும் மதுபானச் சாலைக்கு முன்பாக ஏனைய உறுப்பினர்களுடன் கூடி நின்ற வேளை பிரவேசித்த இனம்தெரியாதோர் இவரைச் சுட்டுக் கொன்றதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. சுட்டுக் கொல்லப்பட்டவர் ராஜன் என அழைக்கப்படும் சாதுரியன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயம் அடைந்த ஏனைய 3 உறுப்பினர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 0 replies
- 1.2k views
-
-
மணலாறில் உள்ள தண்ணிமுறிப்புக்குளம் பகுதியில் சிறிலங்கா படையினரின் பெருமெடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படையினரின் இரு உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 991 views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுடன் தனக்கு எந்தவிதமான தனிப்பட்ட விரோதமும் இல்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்பினர் ‘இரத்த தாகம்’ கொண்டவர்கள் என அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி விபரித்துள்ளார். விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு அல்லது சரணடையும் வரை அவர்களுடன் எந்தவிதமான சமாதானப் பேச்சுக்களுக்கும் இடமில்லையென அவர் தெரிவித்தார். “நாட்டைத் துண்டாடி அதனைப் பயங்கரவாதிகளிடம் எம்மால் ஒப்படைக்கமுடியுமா” என ஜனாதிபதி கேள்வியெழுப்பினார். ஆயுதங்களைக் கைவிட்டு சரணடையவேண்டிய சூழ்நிலையே தற்பொழுது விடுதலைப் புலிகளுக்குத் தோன்றியிருப்பதாகவும், மோதலில் இறுதியை அடைவதே இ…
-
- 2 replies
- 1.8k views
-
-
சிறீலங்காப் படையினரின் உயிர்கள் ஆபத்தில் இருந்தாலும் எதிர்காலத்தி வெற்றி பெறுவோம் என சிறீலங்கா தரைப் படைத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை சிறீலங்கா படையினரின் 59 ஆண்டு நினைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.விடுதலைப் புலிகளுடன் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை படையினருக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தியிருந்தது. மாவிலாறு ஆரம்பித்த வெற்றி கிழக்கு மாகாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி என வியாபித்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் எமக்கு மரியாதையும் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் எமது படையினருக்கு உயிர் ஆபத்துக்கள் ஏற்பட்டாலும் நாம் பெற்றிவெறுவோம் என அவர்…
-
- 4 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் பாலையடிவெட்டை பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய மின்னல் வேக தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 815 views
-
-
வவுனியாவில் ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளர் ஒருவர் இன்று சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 876 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சிங்களவாதக் கொள்கைகளே தமிழக கட்சிகள் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தீவிரமடையக் காரணம் என பிரபல அரசியல் ஆய்வாளர் பி. ராமன் தெரிவித்துள்ளார். யுத்த நிறுத்த உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டமை, தமிழர் பிரதேசங்களில் நடத்தப்படும் வான் தாக்குதல்கள் மற்றும் இராணுவத் தளபதியின் அண்மைய செவ்வி உள்ளிட்ட காரணிகள் தமிழகத்தில் ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர் நிரந்தர சமாதானம் எட்டப்படும் என்ற ஜனாதிபதி மஹிந்தவின் உறுதி மொழியை தமிழக அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ராஜீவ் காந்தி படுகொலைச் சம்…
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கை தொடர்பான இறுதி அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் தயாரித்து வருகின்றது: இலங்கை குறித்த இறுதி அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், இலங்கை அரசாங்கம் மற்றும் ஏனைய தரப்பினரின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற வெளிவிவகாரப் பணிப்பாளர் நாயகம் பிலிப் கமாரிஸ் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை குறித்த வரைவுத் திட்டமொன்று ஐரோப்பிய ஒன்றிய இலங்கை பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கு விஜயம் மே;றகொண்ட ஐரோப்பிய பிரதிநிதிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த அறிக்கை இலங்கையின் நன்மதிப்பிற்கு குந்தகம் ஏற்படக் கூடிய வகையில் தயாரிக்கப…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறீலங்கா படையினர் மேற்கொண்ட கிளேமோர் தாக்குதலில் கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான செழியன் சாவடைந்துள்ளதாக பிரபலமான ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இன்று காலை 6.30 மணியளவில் முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்றதாகவும்,அதில் செழியனுடன் மேலும் இருவர் சாவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்,இது பற்றி விடுதலைப் புலிகளின் தரப்பில் இருந்து தகவல்கள் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilseythi.com/srilanka/LTTE-S...2008-10-11.html
-
- 1 reply
- 2.7k views
-
-
அண்மைக்காலங்களாக சிறிலங்கா விமானப்படையானது தமிழப்பகுதிகள் மீதான விமானத் தாக்குதல்களுக்கு, அண்மையில் உக்ரேன் நாட்டிலிருந்து கொள்வனவு செய்த நவீன குண்டுவீச்சு விமானக்களை பயன்படுத்தி வருகிறது. இத்தாக்குதல்களில் தினந்தோறும் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டு வருவதும், அவர்களின் வாழ்வாதராங்கள் அனைத்துமே இல்லாதொழிக்கப்பட்டு வரும் நிலையில், சிறிலங்கா விமானப்படையினரின் குண்டு வீச்சு விமானங்களை இந்திய விமானப்படையினரின் விமானிகளே ஓட்டி வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரேன் நாட்டிலிருந்து சிறிலங்காவானது அண்மையில் கொள்வனவு செய்த ‘MIG27, MIG29′ போன்ற நவீன தொழில்நுட்ப குண்டுவீச்சு விமானங்களை செலுத்தக்கூடிய விமானிகள் சிறிலங்காவிடம் இல்லை என்பதும், குறுகிய காலத்தில் அவற்றை…
-
- 0 replies
- 1.1k views
-