Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலிகளின் தலைவர் பிரபாகரனின் சவப்பெட்டியில் இறுதி ஆணி அடிக்கும் காலம் நெருங்கிவிட்டது என்றும் வெகுவிரைவில் படையினர் அதைச் செய்வர் என்றும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு: தேசிய பாதுகாப்புக்காகப் புலிகளுடன் சண்டையிடும் இந்த அரசை மக்கள் ஆதரிக்கின்றனர். புலிகள் முற்றாக அழிந்துவிடும் நேரம் நெருங்கிவிட்டது. புலிகளின் தலைவர் பிரபாகரனின் சவப்பெட்டிக்கு இறுதி ஆணி அடிக்கும் நடவடிக்கையில் எமது படைய…

    • 7 replies
    • 1.7k views
  2. சிறுமிகளான தனது இரண்டு புதல்விகளை மோசமான பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக தந்தை ஒருவருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இரண்டு குற்றங்கள் சுமத்தப்பட்டு தாக்கல் செயய்ப்பட்ட வழக்கு ஒன்றில் திருகோணமலை மேல் நீதிமனற்ம் எதிரிக்கு 20 வருட கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கி வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. மனைவி வெளிநாடு ஒன்றிற்கு தொழிலுக்காகச் சென்றிருந்த வேளை தனது பாதுகாப்பில் இருந்த இரண்டு சிறுமிகளை இரவு நேரத்தில் மோசமான பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக சேருவில தெஹிவத்தை பகுதியைச் சேர்ந்த டி.எச்.சந்திரசிறி என்வருக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த 2000 2001 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்…

    • 12 replies
    • 2k views
  3. நெருக்கடியான சூழல்களைக் கடந்து எமது போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  4. பாடசாலைகளை கொள்ளையடிக்கும் சிறிலங்காப் படையினர் [சனிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2008, 10:24 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மன்னார் மாவட்டத்தில் உள்ள மடு வலயப் பாடசாலைகளில் இருந்து சிறிலங்காப் படையினர் பொருட்களை கொள்ளையடித்துச் செல்கின்றனர். படையினர் மேற்கொண்ட வல்வளைப்பு நடவடிக்கை காரணமாக மடுக் கல்வி வலயத்தில் இருந்து 33 பாடசாலைகள் இடம்பெயர்ந்திருக்கின்றன. பாடசாலைகள் இடம்பெயரும் போது பொருட்களை பாடசாலையில் விட்டுவிட்டே இடம்பெயர்ந்தனர். இந்நிலையில் வல்வளைப்பில் ஈடுபட்டுள்ள படையினர் மடு வலயப் பாடசாலைகளில் பொருட்களை கொள்ளையடிப்பதில் ஈடுபட்டுள்ளனர். பாடசாலைகளின் பொருட்களைப் பிரித்து ஏற்றுதல், பாடசாலைத் தளபாடங்களை படையச் செயற்பாட்டிற்கு பயன்படுத்துவதில்…

    • 2 replies
    • 753 views
  5. அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவதாகக் குற்றச்சாட்டு அமெரிக்க காங்கிரஸின் உறுப்பினர் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சார்பான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார் என ஏசியன் ரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க காங்கிரஸின் ஆசிய பசுவிக் விவகாரங்கள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான குழுவின் உறுப்பினரான பிரட் ஷேமன் என்பவரே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவினால் தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புகளுடன் இவர் நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் கலிபோனியாவில் இடம்பெற்ற அப்படியான அமைப்பொன்னறின் முக்…

  6. படையினர் தமிழர் மீது மேற்கொள்ளும் தாக்குதல்களை வெளிப்படுத்தவும் - மேர்வின் சில்வா இராணுவப் படையினர் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளும் தாக்குதல்கள் ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும் என தொழிற்துறை அமைச்சர் மேர்வின் சில்வா ஊடகங்களுக்குச் சவால் விடுத்துள்ளார். சிரச தொலைக்காட்சி ஊடகவியலாளர் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து நீதிமன்றில் ஆஜரான சந்தர்ப்பத்தில் அங்கு குழுமியிருந்த ஊடகவியலளார்களிடம் அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். அரசாங்கப் படையினர் தமிழர்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதாக அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் குறிப்பிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை அரச படையினர…

    • 0 replies
    • 1.1k views
  7. நெருக்கடியான சூழல்களைக் கடந்து நகரும் எமது போராட்டம்: க.வே.பாலகுமாரன் [சனிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2008, 11:09 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] நெருக்கடியான சூழல்களைக் கடந்து எமது போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற போர் எழுச்சிக் குழுக்களின் ஒன்றுகூடலில் உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: எமது விடுதலைப் போராட்டம், நெருக்கடியான சூழல்களைக் கடந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது. உலக விடுதலைப் போராட்டங்கள் எல்லாம் பெரும் விலைகளைக் கொடுத்தே விடுதலையை வென்றெடுத்திருக்கின்றன. எமது விடுதலைப் போராட்டமும் பல அர்ப்பணிப்புக்களையும், தியா…

    • 3 replies
    • 885 views
  8. அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மோசடி அவுஸ்திரேலியாவில் 6 . 7 மில்லியன் டொலர் பெறுமதியான போதைப்பொருள் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இலங்கையருக்குப் பிணை வழங்க அவுஸ்திரேலிய நீதிமன்றம் மறுத்துள்ளது. இவரின் வீட்டைச் சோதனையிட்டபோது சுமார் 2 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பண வைப்புப் பத்திரங்கள் , சுமார் 7 லட்சத்து மூவாயிரம் டொலர்கள் பெறுமதியான 54 பணப் பரிமாற்றங்கள் தொடர்பாக ஆவணங்கள் அவுஸ்திரேலியக் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த இலங்கையர் போலியான கடவுச்சீட்டின் மூலம் இலங்கைக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என மெல்போர்ன் நீதிமன்றில் நேற்றுச் சட்டத்தரணிகள் சந்தேகம் வெளியிட்டனர். இந்த நிலையில் அவருக்குப் பிணை வழங்கினால் அவர் அவுஸ்திரேலியாவில் இருந…

  9. வவுனியாவில் புலிகள் பதில் தாக்குதல்: 6 படையினர் பலி; 11 பேர் காயம் [சனிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2008, 10:02 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டை, குஞ்சுக்குளம் ஆகிய பகுதிகள் ஊடாக முன்நகர்வை மேற்கொண்ட சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பதில் தாக்குதலில் ஆறு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பதினொரு பேர் காயமடைந்துள்ளனர். பாலமோட்டை, குஞ்சுக்குளம் ஆகிய பகுதிகள் ஊடாக நேற்று வெள்ளிக்கிழமை காலை 7:00 மணியளவில் பின்தளங்களில் இருந்து செறிவான பல்குழல் வெடிகணை, ஆட்லெறி எறிகணைச் சூட்டாதரவுடன் படையினர் முன்நகர்வினை மேற்கொண்டனர். பிற்பகல் 2:00 மணிவரை விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் …

    • 2 replies
    • 770 views
  10. ஆயுதம் ஏந்தியவர்கள் ஆயுதத்தினாலேயே பலியாவார்கள். இன்றைய தேர்தலில் மக்கள் வழங்குகின்ற தீர்ப்பிற்கு அரசாங்கம் தலைவணங்கும். எனினும் சிவாஜி கணேசன் போல நடிக்க முயன்று சகலரும் வெற்றி பெற முடியாது என்று அமைச்சரும் சபை முதல்வருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது, தேர்தலை ஜனநாயக ரீதியிலும் வன்முறைகளின்றியும் நடத்துவதற்கு அரசாங்கம் சகலவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. கட்சிக்குள் ஜனநாயகத்தை பற்றி கேட்க முடியாதவர்களே தேர்தலில் ஜனநாயகம் குறித்து பேசுகின்…

    • 2 replies
    • 1.7k views
  11. ஈழத்தின் வடபகுதி, வன்னியில் சிறிலங்கா அரச பயங்கரவாதப் படைகளின் இராணுவ நடவடிக்கைகளின் பெறுபேறாய் நடந்தேறும் சொல்லொணாத் துயர் மிகும் மனிதப் பேரவலங்கள் மனதிற்குள் விரக்தி வெறுப்பு ஓர்மம் கையறு நிலையென உணர்வுக் கலவையின் திரளென உருவாகித் தணிந்தெழுகின்றன. வீடும் ஊரும் இழந்து உறவுகளைத் திக்கொன்றாய்த் தொலைத்துவிட்டு இலக்கின்றி வரும் அயல் தேசத்தின் அன்பளிப்புக் குண்டுகளுக்கும் வானிருந்து உயிர்குடிக்கும் எமப் பறவைகளின் கொலைக் கொத்தல்களிலிருந்தும் தன்னை மனைவியை சின்னஞ்சிறு குழந்தைகளை காப்பாற்றி இளைப்பாற எங்காவது ஒரு மரநிழல் கிடைக்காதா என ஓடிய இடம்பெயர்வு வாழ்வின் அவலத்தினை வருடங்கள் கடந்து விட்ட பின்னரும் இன்றும் உலகின் எங்கெங்கோ தெருக்களில் திரியும் ஆடும் பாடும் வேலை செய்யும் விளைய…

    • 0 replies
    • 1.2k views
  12. இடம்பெயர்ந்துள்ள மக்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்லவேண்டும் என்றால் எதிரியின் வன்பறிப்பில் உள்ள எமது மண்ணை மீட்டு எமது மண்ணில் காலூண்றி நிற்கும் எதிரியை எமது மண்ணுக்கு உரமாக்கவேண்டும் என தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி அழைப்பு விடுத்துள்ளார். கடந்த புதன்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்ற போர் எழுச்சிக்குழுக்களின் ஒன்று கூடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த ஒன்று கூடலில் அவர் மேலும் உரையாற்றும்போது தெரிவித்ததாவது: தமிழீழ விடுதலைப் போர் எழுச்சிகொண்ட காலகட்டத்தில் இந்த போர் எழுச்சி ஒன்றுகூடல் நடைபெறுவது சிறப்பாகும். விடுதலைப் போரின் நீண்ட பயணத்தில் முக்கியமான காலகட்டத்தில் இப்போது நாம் வந்துள்ளோம…

  13. அமைச்சர்கள் அமீர் அலி மற்றும் ஹுசைன் பைலா ஆகியோர் சென்று கொண்டிருந்த ஜீப் வண்டி மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இச்சம்பவம் பொலநறுவை நெலும்விலவில் நடைபெற்றுள்ளது. வாகனம் சிறிது சேதமடைந்தாலும் எவருக்கும் காயமெதுவும் ஏற்படவில்லை. குண்டு வாகனத்துள் பொருத்தப்பட்டிருந்ததா அல்லது தெருவோரத்தில் வைக்கப்பட்டிருந்ததா என்பது குறித்து காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://isoorya.blogspot.com/2008/08/blog-post_4508.html

  14. ஸ்கார்பரோவிலமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கையை பிறப்பிடமாக கொண்ட சிவா அழகேந்திரா என அழைக்கப்படும் 92 வயது வயோதிப பெண் உடல் கருகி பலியாகியுள்ளார். ரொரன்டோவில் லோரன்ஸ் ஒழுங்கைக்கும் பிரிம்லி வீதிக்கும் தென் கிழக்கே 28 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள "கூட்னே கிரெஸ்' என்ற பங்களாவில் அந்நாட்டு நேரப்படி வியாழக்கிழமை பி.ப.3.00 மணியளவில் இத் தீவிபத்து இடம்பெற்றுள்ளது. கைத்தடி உதவியின்றி சுயமாக நடக்க முடியாத நிலையிலிருந்த மேற்படி பெண் தீ விபத்தையடுத்து உடனடியாக வெளியேற முடியாததால் தீயில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயணைப்பு படை வீரர்களால் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சிவா அழகேந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழ…

  15. சிறிலங்கா அரச படைகளின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளால் லட்சக்கணக்கில் இடம்பெயர்ந்துள்ள வன்னி மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு அனைத்துலக சமூகத்துக்கு அழுத்தம் வழங்கும் முகமாக அவுஸ்திரேலியா மெல்பேர்ன நகரில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 403 views
  16. யாழ் குடாநாட்டில் துணைப்படை E.P.D.P குழுவினரின் கப்பம் அறவீடு தொடர்ந்து வருகின்ற போதிலும், அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் வெளியே அதனைக்கூறாது தவிர்த்து வருகின்றனர். பொதுமக்களின் வீடகளுக்கு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ளும் துணைப்படை E.P.D.P குழுவினர் தம்மை கருணா குழு எனத் தெரிவித்து கப்பம் கோருகின்றனர். இடமொன்றைக் குறிப்பிட்டு அங்கு கப்பப் பணத்தைக் கொண்டுவந்து தருமாறு அச்சுறுத்தும் துணைப்படைக் குழுக்கள், இல்லையெனில் கடத்திச் செல்வோம், அல்லது சுட்டுக்கொல்வோம் என எச்சரிக்கை செய்து வருகின்றனர். சிறீலங்கா படைகளது இறுக்கமான தடைகள் காரணமாக துணைப்படைக் குழுக்களின் மிரட்டலுக்கு அஞ்சும் மக்கள் வேறு இடங்களுக்கு சென்று வாழ முடியாத நிலை காணப்படுவதாக எம…

  17. சிறீலங்காப் படையினரின் வடக்கு நோக்கிய யுத்த முன்னெடுப்புகள் ஆரம்பமாகவுள்ள பருவப்பெயர்ச்சி மழை காரணமாக தடைப்படலாம் என அரசியல் ஆய்வாளரான முன்னாள் இராணுவத் தளபதியுமான சுசந்த செனவிரட்ன தெரிவித்துள்ளார். ஏபி செய்திச் சேவை நிறுவனத்திற்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். சிறீலங்காப் படையினர் கிழக்கைக் கைப்பற்றியதுபோன்று வடக்கை மிக இலகுவாகக் கைப்பற்ற முடியாது. ஏனெனில் விடுதலைப் புலிகளால் பெருமளவில் நிலக்கண்ணிகள் புதைக்கப்பட்டிருக்கும் என்பதால் படை முன்னகர்வுகள் மிகவும் சிக்கல் நிறைந்தாகக் காணப்படுகின்றது. விடுதலைப் புலிகளின் பின்வாங்கல், சிறீலங்காப் படையினரை கவர்ந்து இழுக்கும் நிகழ்ச்சி நிரலாக அமையலாம். காடுகளில் பதுங்கியிருக்கும் புலிகள் த…

    • 21 replies
    • 5.1k views
  18. துணுக்காயை வளைக்க படையினர் முன்நகர்வாம்! வன்னியில் தமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தித் தொடரும் இராணுவத்தினர் நேற்று அதிகாலை துணுக்காயை நோக்கி முன்னேறத் தொடங்கியுள்ளனர் எனப் பாதுகாப்பு அமைச்சுத் தெரிவித்துள்ளது. இராணுவத்தின் 57 ஆவது படைப்பிரிவினர் விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்ப்பிற்கும் மத்தியில் துணுக்காய் நகரைச் சுற்றிவளைக்கத் தொடங்கியுள்ளனர் எனத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, நேற்று அதிகாலை வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் ஊடாக இராணுவத்தினர் முன்னேறத் தொடங்கினர் எனவும் தெரிவித்தது. நேற்று நண்பகல் 11.35 மணியளவில் அங்கு மோதலொன்று இடம்பெற்றது. இதன் பின்னர் விடுதலைப் புலிகள் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெர…

    • 19 replies
    • 5.2k views
  19. வான்பரப்பில் இருந்து உணவுப் பொதிகளைப் போடும் நிலைமைக்கு உட்பட்ட நாடாக மேற்குலக நாடுகள் இலங்கையை பட்டியலிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய நேரம் இதுவெனவும் கூத்தாட வேண்டிய சந்தர்ப்பம் இது அல்ல எனவும் அவர் கூறியுள்ளார். பணிப்புறக்கணிப்புகள், அரசாங்கம் நடத்தும் தேர்தல்கள் என்பன இந்த பிரச்சினைகளை திசைத்திருப்பும் செயற்பாடுகள். அரசாங்கம் இந்த மூடத்தனமான வேலையை செய்யும் போது, ஏனையோரும் இந்த மூடத்தனமான வேலையை செய்ய தமக்கு உரிமை இருப்பதாக கூறுகின்றனர் எனவும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார். ‘ யுத்தம் என்றால் அரசாங்கம் தேர்தலை நடத்தமால் இருக்காலம்தானே, அரசாங்கத்திற்கு தேர்…

    • 1 reply
    • 1.4k views
  20. இந்தியாவிடம் தோற்றுப்போகாமல் இருக்கும் தமிழ்த் தேசியம் சிங்களத்திடம் தோற்குமா? சந்திரகாந்தன் எம்.பி. கேட்கிறார் "இந்தியாவிடம் தோற்றுப் போகாத தமிழ் தேசியம் ஒருபோதும் சிங்கள மேலாண்மையாளர்களிடம் தோற்றுப் போகாது.இந்த யதார்த்தத்தை சிங்கள அரசு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.தமிழ் மக்களின் அபிலாஷைகளை நோக்கிய தீர்வுக்கு எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காது விடுதலைப் புலிகளுக்கெதிரான சமர்களில் வெற்றிகளைக் குவித்து அனைத்தையும் சாதித்துவிடலாம் என நினைப்பது தவறு. இந்நிலையில் அரசு ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மஹிந்த அரஸ்ரீசின் பக்கம் தமிழ்மக்கள் இல்லை; புலிகளது போராட்டத்தின் ஆணிவேராகவே அவர்கள் இருக்கின்றனர். இதனால் கள வெற்றிகள் நிலையற்றது என்பதனை புரிந்துகொள்ள வேண்டும்.'' …

    • 2 replies
    • 2k views
  21. குற்றம் இழைத்த தரப்பே குற்றம் சுமத்தும் விநோதம் 23.08.2008 ஐந்து மாதங்களுக்கு மேல் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸநாயகத்துக்கு எதிராக ஒருவாறு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துவிட்டது இலங்கை அரசு. இதனையடுத்து, இதுவரை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு அவலத்தை அனுபவித்து வந்த திஸநாயகம் ஒருவாறு விளக்கமறியலுக்கு மாற்றப்பட்டிருக்கின்றார். எனினும், திஸநாயகத்துக்கு எதிராக அரசு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பலவீனமானவை எனத் தெரிவித்துள்ள சுதந்திர ஊடக இயக்கம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களை மிரட்டும் முயற்சி இது என்றும் கண்டித்திருக்கின்றது. இலங்கையில் இ…

  22. கடந்து 3 ஆண்டுகளாக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த குருநாகலைச் சேர்ந்த சிங்கள மாணவன் இனந்தெரியாத நபர்களால் வந்தாறுமூலையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தமிழ் மாணவ மாணவிகளை பாலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாவும் ராக்கிங் என்ற பெயரில் சிங்கள மாணவர்கள் இனவாதப் பகிடிவதை செய்து வருவதாகச் சொல்லி அதற்கு எதிராக பிள்ளையான் குழு கடும் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இச்சிங்கள மாணவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த ராக்கிங் விவவாகரம் சிறிய விடயமென்றும்.. பல்கலைக்கழகத்துக்கு வெளியில் உள்ளோர் அதை பெருப்பிப்பதாகவும் பல்கலைக்கழக மாணவ சங்கம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி 2007/08 கல்வியாண்டுக்கு என 181 சிங்கள மாணவர்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு தெரிவ…

  23. நிந்தவூரில் இளைஞன் ஒருவன் மீது துப்பாக்கிச் சூடு வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] மட்டக்களப்பு நிந்தவூரில் நேற்று பிற்பகல் தமிழ் இளைஞன் மீது துபடபாகடகழபடபழரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஞானப்பிரகாசம் சசிகரன்(18) எனும் இளைஞனே துப்பாக்கிப்பிரயோகத்தில் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். முட்டக்களப்பு சித்தாண்டி காளிகோவில் வீதியில் வசித்து வரும் குறித்த இளைஞன் நிந்தவூரில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் தொழில் நிமிர்த்தம் சென்றிருந்தவேளையிலேயே இனம் தெரியாத துப்பாக்கி தாரிகளின் சூட்டுக்கு இலக்காகி உள்ளான். குறித்த அரிசி ஆலைக்கு அருகிருள்ள தேனீர்க்கடையில் சாப்பிட்டு விட்டு திரும்பிய வேளையிலேயே சம்பவம் நிகழ்ந்துள்ளது. …

  24. ஒரு காலத்தில் வெட்டுப்புள்ளியை அறிமுகம் செய்து தரப்படுத்தல் மூலம் தமிழ் மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை பறித்த சிங்களப் பேரினவாதிகள் இன்று அதே வெட்டுப்புள்ளியைப் பாவித்து சிங்கள மாணவர்களைக் கொண்டு தமிழ் மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை பறிக்க முற்படுகின்றனர். கிழக்குப் பல்கலைக்கழகம் மட்டுமன்றி யாழ் பல்கலைக்கழகத்துக்கும் பெருவாரியான சிங்கள மாணவர்கள் அனைத்துப் பீடங்களுக்கும் தெரிவாகி இருப்பதும்.. பொருளாதார நெருக்கடியிலும் இராணுவ அச்சுறுத்தலின் கீழும் கல்வி பயிலும் தமிழ் மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்பு இதனால் இழக்கப்படுவதும் கண்கூடாகியுள்ள போதும்.. தமிழர்கள் மத்தியில் இருந்து இது தொடர்பில் எந்த ஆட்சேபனைகளும் கிளம்பாதது வியப்பளிப்பதாகவே இருக்கிறது..! உதாரணத்துக்கு யா…

  25. போர்ச் சூழலினால். வாழ்விடங்களை இழந்து, வாழும் வகையறியாது, ஏதிலிகளாக நிற்கும் எம்மவர்க்கு உதவுங்கள் என தமிழர் சமூக பொருளாதார அமைப்பு நிறுவனம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.பாதிப்புற்ற மக்களுக்கு உதவி கோரி. உலககெங்கும் பரந்திருக்கும் தமிழ்மக்களிடம் விடுக்கப்பட்டிருக்கும் அதன் விரிவான அறிக்கை மேலும் விபரங்கள் இங்கே... http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=268

    • 0 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.