ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143626 topics in this forum
-
வவுனியா வடக்கு கனகராயன்குளத்தில் சிறிலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் அப்பாவிப் பொதுமகன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 490 views
-
-
யாழ். மாவட்டத்தில் உள்ள சுண்டுக்குளிப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் மலேசிய மாணவன் உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 869 views
-
-
"ஈழத்தமிழர்களின் முழு விடுதலையே நம் கோரிக்கை" கம்யூனிஸ்டுத் தலைவர் சி.மகேந்திரன் திட்டவட்ட அறிவிப்பு வாழ்த்தரங்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக சி.மகேந்திரன் ஆற்றிய உரை. ஓர் மாற்றத்திற்கான போர்க் குணத்தை நாம் எங்கிருந்து பெறுவது என்ற உணர்வோடு இருக்கிறோம். தமிழர் களாய் உலகின் பல பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்கள் ஒரு தொன் மையான பண்பாட்டைக் கொண்டவர்கள்; ஆங்கிலேயர் காலத்திலும் அதற்குப் பின்னரும் பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவை விட்டுச் சென்றவர்கள் - இலங்கையில் அந்த காலம் முதல் ஆதி குடிகளாய் வாழ்ந்து கொண்டு இருப்பவர் கள் - பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஐயா நெடுமாறன் அவர்கள் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு கால தமிழக வரலாற்…
-
- 0 replies
- 917 views
-
-
யாருக்கும் தமிழர்கள் அஞ்சத் தேவையில்லை பழ. நெடுமாறன் தலைமையுரை மாநாட்டுத் தலைமையுரை ஆற்றிய திரு.பழ.நெடுமாறன் அவர்கள் உரை இன்று காலை தொடங்கி இந்நேரம் வரையிலும் மிகப் பொறுமையுடன் நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இன்னும் இறுதியாக வாழ்த்தரங்கம் ஒன்று உள்ளது. இங்கே பேசிய அத்தனை நண்பர்களும் வெவ்வெறு வகையான சொற்களால் பேசினாலும் உணர்ச்சி ஒன்றாகத் தான் இருந்தது. உலகப் பெருந் தமிழர் விருதினைப் பெற்றிருக்கக் கூடிய இந்த அறிஞர் கள் இதை விடச் சிறப்பான விருதுகளைப் பெற்றிருக் கிறார்கள் என்பது வேறு - அரசாங்க விருது கிடைத் திருக்கிறது என்பது வேறு - இது மக்களால் அளிக்கப் பட்ட விருது - தமிழர்களால் அளிக்கப்பட்ட விருது. இவர் களைப் பெருமைப்படுத்தியதன் மூலம் நாம் …
-
- 0 replies
- 855 views
-
-
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இந்த வாரம் இந்தியாவுக்கு செல்லவுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 682 views
-
-
வீரகேசரி நாளேடு 8/31/2008 7:29:38 PM - சென்னை, காமராஜருக்கும், எம்.ஜி.ஆருக்கும், மூப்பனாருக்கும், நெடுஞ்செழியனுக்கும் துரோகம் இழைத்தவர் முதல்வர் கருணாநிதி தான் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். முதல்வர் கருணாநிதியை விமர்சித்து நெடுமாறன் கட்டுரை எழுதியிருந்தார். இதற்குப் பதிலாக கவிதை மூலம் நெடுமாறனை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார் கருணாநிதி. அதற்கு விளக்கம் அளிப்பதாக குறிப்பிட்டு நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, முத ல்வர் கருணாநிதி அடுத்தமுறை, தான் முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை என கூறியதை விமர்சித்து நான் எழுதிய கட்டுரையில் எழுப்பப்பட்ட வாதங்களுக்கு எவ்வித பதிலும் கூற…
-
- 13 replies
- 2.3k views
-
-
சிறிலங்கா இராணுவத்தினர் தற்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் மைய நகரமாகவும், அவர்களின் தற்போதைய தலைநகரமாகவும் உள்ள கிளிநொச்சி நகரை எதிர்வரும் நான்கு மாதங்களுக்குள் கைப்பற்றிவிடுவர் என்று தான் முழுமையாக நம்புவதாக சிறி லங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகையான ரைம்ஸ் பத்திரிகைகக்கு தற்போதைய படை நவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில், தற்போது எமது படையினர் வன்னியில் நாளாந்தம் பெரும் வெற்றிகளை பெற்றவண்ணம் முன்னேறிக்கொண்டு செல்வதாகவும், இந்த வருட முடிவுக்குள் அவர்கள் விடுதலைப்புலிகளின் முக்கிய நடுவ நகரமான கிளிநொச்சிநகரை கைப்பற்றிவிடுவர் என …
-
- 7 replies
- 1.8k views
-
-
30 வருடங்களாக எங்களையும் இந்த நாட்டையும் அல்லலுக்கும், அலைக்கழிப்புக்கும் உள்ளாக்கிய விடுதலைப்புலிகளின் தலைவர், தமது ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை நாடும்வரை எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் தமது அரசு தாயாராகப்போவதில்லை என்று அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். நேற்று கண்டியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து பேசிய அவர், விடுதலைப்புலிகளின் தலைவர் பேச்சுவார்த்தை என்ற பெயரில் பல தடவைகள் தமது இயக்கத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டுவந்துள்ளார். இனிவரும் காலங்களில் எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்துடன் அவரது இந்த நோக்கம் ஒருபோதும் வெற்றிபெறாது. நாம், உலகநாட…
-
- 2 replies
- 951 views
-
-
-
சார்க் மாநாட்டின் பின்னர் கொழும்பு நகரின் பாதுகாப்பு குறைந்துள்ளதால், விடுதலைப்புலிகள் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. கொழும்பு நகரில் காணப்பட்ட பாதுகாப்பு மாகாண சபைத் தேர்தல்கள் காரணமாக குறைந்ததுடன் சோதனை நடவடிக்கைகள் மற்றும் திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல்கள் ஸ்தம்பிதமடைந்திருந்தன. இந்த நிலைமையைப் பயன்படுத்தி விடுதலைப்புலிகள் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் கூறுவதாக புலனாய்வுத் துறை கூறுகிறது. அண்மையில் புறக்கோட்டைத் தேவாலயம் ஒன்றிலும் கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் இருந்தும் தற்கொலை அங்கிகள் உள்ளிட்ட வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மலையகப் பகுதிகளில் மறைந்திரு…
-
- 0 replies
- 986 views
-
-
இலங்கையை விட இந்தியாவிலேயே வறுமை அதிகம் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2008 ஆம் ஆண்டுக்கான வறுமை தொடர்பான சுட்டியில், இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை விடவும் இந்தியாவில் வறுமை அதிகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய அளவீட்டு முறை ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட இந்த மதிப்பீட்டில், 2005 இல் இந்தியாவில் 54.8 வீதமானோரும், பங்களாதேஷில் 42.9 வீதமானோரும், பாகிஸ்தானில் 24.9 வீதமானோரும், இலங்கையில் 5.9 வீதமானோரும் வறுமைக் கோட்டின்கீழ் வாழ்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நேபாளில் 55 வீதமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2005 ஆம் ஆண்டில், 54.8 வீதமானோரு…
-
- 0 replies
- 620 views
-
-
இடம்பெயர்ந்திருக்கும் இலட்சக்கணக்கான மக்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வருவதற்கு தடைகளை ஏற்படுத்த வேண்டாமென விடுதலைப் புலிகளிடம் கோரிக்கை விடுக்குமாறு, இலங்கை அரசாங்கம் அரசசார்பற்ற நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்தவர்கள் சுதந்திரமாக வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும் என அரசாங்கம் கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்தே அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை தங்கவைப்பதற்கான திட்டங்களை அரசாங்கம் வகுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து வெளியேறி அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வருமாறு அரசாங்கம், வான்வழியாக துண்டுப் பிரசுரங்களை விநியோகித்திருந்தது. அதேநேரம், அர…
-
- 0 replies
- 719 views
-
-
சிறீலங்கா பயங்கரவாத அரசின் இராணுவம் வெளியிட்டுள்ள தகவலின் படி நேற்று பதவியாப் பகுதியில் நடந்த மோதலில் கொல்லப்பட்ட 10 போராளிகளின் உடலங்களையும் ஆயுதங்களையும் தாம் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மோதலில் சிறீலங்கா பயங்கரவாத அரசின் படையினர் 3 வரும் கொல்லப்பட்டுள்ளனராம். இச்சம்பவம் குறித்து விடுதலைப்புலிகள் இதுவரை செய்திக்குறிப்புகள் எதனையும் வெளியிடவில்லை. Ten LTTE bodies found in Padaviya The military says it recovered the bodies of ten LTTE cadres together with arms and ammunustions following a clash in Padaviya, Anuradhapura. The bodies are to be handed over to the ICRC tomorrow. சிறீலங்கா பயங்கரவாத அரச சார்ப்பு ஊடகமான டெயிலிமிரர் வெளி…
-
- 3 replies
- 2.2k views
-
-
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மூன்று இணைந்து தமது நாடுகளில் செயற்படும் விடுதலைப்புலிகளை கைது செய்ய கூட்டு நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு புலனாய்வு தகவல்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இத்தாலியில் அண்மையில் அதிகளவான விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டதை அடுத்து இவ்வாறான நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள குறித்த ஐரோப்பிய நாடுகள் மூன்றும் திட்டமிட்டுள்ளதாக அந்த ஊடகம் கூறுகிறது. குறித்த ஐரோப்பிய நாடுகளின் காவற்துறையினர் இணைந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இத்தாலியில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்கள் சம்பந்தமான விசாரணைகளுக்கு உதவும் நோக்கில் அமைச…
-
- 0 replies
- 2.2k views
-
-
பாலமோட்டை, வவுனியா, குஞ்சுக்குளம் பகுதிகளில் புலிகளின் எதிர்த்தாக்குதல்களில் 12 படையினர் பலி: 14 பேர் காயம் [ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2008, 08:08 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா படையினர் வவுனியா, பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதிகளில் மும்முனைகளில் மேற்கொண்ட நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப்புலிகள் நடத்திய தீவிர எதிர்த்தாக்குதல்களில் படையினர் 12 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.40 மணி முதல் வவுனியா பாலமோட்டை குஞ்சுக்குளம் பகுதிகளில் சிறிலங்கா படையினர் மும்முனைகளில் நகர்வுகளை மேற்கொண்டுள்ளனர். செறிவான எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணை சூட்டாதரவுடன் சிறிலங்கா படையினர் இந்த நகர்வுகளை மேற்கொண்டனர். இவற…
-
- 1 reply
- 1k views
-
-
கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் புலிகளின் பொறிவெடி தாக்குதலில் அதிகாரி உட்பட இருவர் பலி: இருவர் காயம் [ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2008, 08:18 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் விடுதலைப்புலிகளை தேடியழிக்கும் நோக்குடன் பெருமெடுப்பில் நடவடிக்கை மேற்கொண்டுவரும் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கு எதிராக விடுதலைப்புலிகள் நடத்திய பொறி வெடித்தாக்குதலில் அதிகாரி ஒருவர் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் காயமடைந்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.30 மணியளவி்ல் இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த நான்கு நாட்களாக கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் நடவடிக்கை மேற்கொண்டுவரும் படையினர் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குத…
-
- 0 replies
- 708 views
-
-
அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு ரூபஸ்குளம் விசேட அதிரடிப்படை முகாம் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட ஸ்னைபர் தாக்குதலில் கமாண்டோ வீரர் கொல்லப்பட்டுள்ளார். ரூபஸ்குளம் பகுதி சோதனைச் சாவடிக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மரமொன்றிலிருந்து குறித்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50
-
- 0 replies
- 1.1k views
-
-
புல்மோட்டை போகஸ்வௌப் பகுதியில் நுளைந்துள்ளதாகக் கூறப்படும் 60 விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களைத் தேடி படையினர் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். மணலாறு பகுதியில் இடம்பெறும் மோதல்களை சீர்குலைக்கும் நோக்கில் இவர்கள் பதவிய பிரதேசத்தின் தெற்கில் அமைந்துள்ள இந்த பிரதேசத்திற்குள் நுளைந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளின் இந்த குழுவைச் சேர்ந்த ஒருவர் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து, அந்த பகுதிக்குள் சென்ற படையினர் இருவரும், சிவில் பாதுகாப்பு படையின் சிப்பாய் ஒருவரும் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டனர். அத்துடன் மூன்று படையினர் காயமடைந்தனர். விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் மரங்களில் இருந்தவாறு…
-
- 0 replies
- 1k views
-
-
புதுமுறிப்பில் படுகொலை செய்யப்பட்ட ஐவரின் வணக்க நிகழ்வு [ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2008, 06:37 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் கிளிநொச்சி புதுமுறிப்பில் நேற்று சனிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட கைக்குழந்தை உட்பட ஐவரின் வணக்க நிகழ்வு கிளிநொச்சி புதுமுறிப்பில் இன்று நடைபெற்றது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் மரியநாயகம் குருஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடலங்களுக்கு உறவினர்கள் சுடரேற்றி மலர்மாலைகள் சூட்டினர். வணக்க உரைகளை ஆ.சந்தியோ, வன்னேரிக்களம் கிராம அலுவலர் சபாரட்ணம், கிளிநொச்சி அன்னை இல்ல இயக்குநர் அருட்திரு எட்மன் றெஜினோல்ட் அடிகளார், மன்னார் மாவட்ட தம…
-
- 3 replies
- 845 views
-
-
கொட்டும் மழையை சாதகமாக பயன்படுத்தி ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் சுண்ணாகம் பகுதியில் 3 வீடுகளில். சுமார் இரண்டரை லட்சம் ரூபாய்கு மேற்பட்ட நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சுண்ணாகம், காளிகோயிலடியை சேர்ந்த ஒருவர் வீட்டிற்கு சென்று ,கதவை தட்டி படையினர் எனக்கூறி கதவை திறக்கசெய்த கொள்ளையர்கள் சுமார் மூண்று நிமிடத்தில் மின்னல் வேகமாக கொள்ளையிட்டு சென்றதாக அறியப்படுகிறது. http://www.tamilskynews.com/
-
- 0 replies
- 703 views
-
-
தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பம் வீரகேசரி இணையம் 8/31/2008 12:10:33 PM - வரலாற்று புகழ் மிக்க தெல்லிபழை துர்க்கையம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. பகல் 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 12 நாட்கள் உற்சவம் இடம்பெற்றுள்ளன. எதிர்வரும் 9ம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு வேட்டைத் திருவிழாவும் 10ம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு சப்பறத்திருவிழாவும்,11 ம் திகதி வியாழக்கிழமை காலை மணிக்கு தேர்திருவிழாவும் 12ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மண்க்கு ஆவணி ஓணம் நாளில் தோர்தோற்சவம் இடம்பெறவுள்ளன. தினமும் காலை 7.00 மணிக்கு பூசையும் 8.00 மணிக்கு ஸ்நபன அபிஷேகமும் 9.00 மணி…
-
- 0 replies
- 674 views
-
-
எந்த சக்தி எதிர்த்தாலும் வடக்கை மீட்கும் அரசின் படை நடவடிக்கை நிறுத்தப்படாது பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க வீரகேசரி நாளேடு 8/31/2008 5:14:50 PM - வடக்கை மீட்டெடுப்பதற்காக அரசு முன்னெடுத்து வரும் படை நடவடிக்கையை எந்தச் சக்தி எதிர்த்தாலும் நிறுத்தப் போவதில்லை என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார். கல்கிரியாகம சிவில் பாதுகாப்பு படை பயிற்சி முகாமில் இரண்டரை மாத பயிற்சியினை முடித்து வெளியேறும் சிவில் பாதுகாப்புப் படையின் இரண்டாவது குழு வெளியேறும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், எமது இராணுவ வீரர்கள் வீரதீரத்துடன் போர…
-
- 2 replies
- 846 views
-
-
சிங்களச் சிறைச்சாலைப் படுகொலைகள்- அன்பரசு - தமிழ் இலக்கியத்திலே நனவிடை தோய்தல் என்றால் பழையதை நினைவுகூரல் என்று பொருள். நாம் கட்டாயமாக முன்பு நடந்தவற்றை, நாம் கடந்து வந்தவற்றை நினைத்துப் பார்க்க வேண்டும். அது எமது போராட்டத்தை வலுப்படுத்தும். சிங்களப் பேரினவாதிகள் செய்த தமிழினப் படுகொலைகளை எண்ணித் துவண்டு போகாமல் எமது போராட்ட வலுவை உயர்த்த வேண்டும். அன்றைய தமிழ்மக்கள் சேவல் கூவ எழுந்தார்கள். இன்றைய தமிழ்மக்கள் செல் கூவ எழும்புகிறார்கள். எமது வாழ்வின் தன்மை மாறிவிட்டது. அதற்காக வருந்த வேண்டிய அவசியம் இல்லை. பழையது எமக்குப் புத்துணர்ச்சி ஊட்டும், தொடர்ந்து போராடும் வலுவைத்தரும். சென்ற மாதம் கறுப்பு ஜுலைப் படுகொலைகளின் இருபத்தைந்தாவது வருட நிறைவை மனமுரு…
-
- 0 replies
- 847 views
-
-
ஒரு இராணுவ நடவடிக்கையின் போது குறித்த காலவரையொன்றினுள் முடிந்துவிடும் என காலம் வகுப்பது முட்டாள்தனமானதாகும். வன்னி முற்றுகைக்கு பதிலடியாகவே திருமலையில் புலிகள் மேற்கொண்ட விமானத் தாக்குதல் அமைந்துள்ளது. புலிகள் பயன்படுத்தும் சிறிய ரக விமானங்களை உலகின் எந்த நாட்டினாலும் கண்காணிக்க முடியாது என்று அண்மையில் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்தார். அரசாங்கம் கிழக்கை கைப்பற்றிபோது புலிகளின் எதிர்ப்பு குறைந்தது. அச்சமயம் வன்னியை ஸ்திரப்படுத்தும் நோக்கில் புலிகள் தந்திரோபயமாக பின்வாங்கிச் சென்றதாக கூறப்பட்டது. ஆனால், இப்போது என்ன நடக்கின்றது? இராணுவ ஆய்வாளர்களும், …
-
- 5 replies
- 2.4k views
-
-
வான் புலிகளின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதல்கள்: முதலாவது தாக்குதல்: 2007-03-26 அன்று கொழும்பு கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்துடன் அமைந்திருந்த வான்படைத் தளம் மீதான தாக்கதலில் வான் படையினர் மூவர் கொல்லப்பட்டதுடன், 15 பேர் காயமடைந்திருந்தனர். இரண்டாவது தாக்குதல்: 2007-04-24 அன்று அதிகாலை 1:20 அளவில் யாழ் பலாலி படைத்தளம் மீதான வான் புலிகளின் தாக்குதலில் சிறீலங்கா படையினர் 30 பேர் காயமடைந்திருந்தனர். மூன்றாவது தாக்குதல்: 2007-04-29 அன்று அதிகாலை 1:50 அளவிலும், 2:05 அளவிலும் கொழும்பு கொலன்னாவ, முத்துராஜவெல பகுதிகளில் அமைந்திருந்த சிறீலங்கா வான் படையினருக்கான எரிபொருள் வழங்கல் எண்ணைத் தாங்கிகள் வான் புலிகளால் தாக்கப்பட்டதி…
-
- 9 replies
- 2.6k views
- 1 follower
-