ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143404 topics in this forum
-
ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினர் சென்ற பஸ் ஒன்று கம்பஹா பகுதியில் விபத்துக்கு உள்ளானதில் 11 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் இருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது. நேற்று முன்தினம் புதன் கிழமை இரவு குறிப்பிட்ட பஸ் அதிவேகமாகக் சென்றமையால் தடம் புரண்டு குடைசாய்ந்துள்ளதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்த பாதுகாப்புப் படையினர் வத்துப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது http://www.tamilwin.com/view.php?2aIWn5e0d...d426QV3b02ZLu3e
-
- 0 replies
- 977 views
-
-
இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி அரிசியை ஏற்றிக்கொண்டு வந்த இலங்கைக் கப்பல் ஒன்று பங்களாதேஸ் சிட்டகொங் துறைமுகத்திற்கு அருகில் வேறொரு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளாகி மூழ்கியுள்ளது. இலங்கையின் பிரபல வர்த்தகரான தம்மிக பெரேரா என்பவருக்குச் சொந்தமான எம்.வி. பதுலுவலி எனும் கப்பலே 3000 தொன் அசிரியுடன் சிட்டகொங் துறைமுகத்திற்குள் நுழைந்தவேளை எதிரே வந்துகொண்டிருந்த பனாமா நாட்டின் எண்ணெய் கப்பலொன்றுடன் மோதி மூழ்கியுள்ளது. இதன்போது கப்பலில் இருந்த 17 பேரில் தலைமைப் பொறியியளாளர் தவிர ஏனைய அனைவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பங்களாதேஸ் துறைமுக அதிகாரிகளும் கடற்படையினரும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் தெரிவ…
-
- 0 replies
- 1.3k views
-
-
விசுவமடுவில் வான் குண்டுத்தாக்குதல்: அப்பாவிப் பொதுமகன் பலி [வெள்ளிக்கிழமை, 22 ஓகஸ்ட் 2008, 04:54 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடுப் பகுதியில் சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் அப்பாவிப் பொதுமகன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். விசுவமடு மேற்குப்பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9:50 மணியளவில் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் குண்டுகளை வீசின. இதில் மூன்று வீடுகள் சேதமடைந்தன. சிற்றூர்தி ஒன்றும் கடும் சேதங்களுக்குள்ளாகியது. இரண்டு பிள்ளைகளின் தந்தையான முருகேசு இராவணேஸ்வரன் (வயது 32) என்பவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். சி.பெருமாள் (வயது…
-
- 0 replies
- 641 views
-
-
அரசின் தமிழர் விரோதப்போக்குகளை புரிந்துகொண்டு தமிழர்கள் செயற்படவேண்டும் - மனோ கணேசன் வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணியிலேயே எமது மேலக மக்கள் முன்னணி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரினதும் வெற்றிகளுக்கும் கொழும்பிலும் ஏனைய நகரங்களிலும் வாழும் சப்ரகமுவ மாகாண தமிழர்கள் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கவேண்டும். தேர்தல் அன்று தமது சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க வேண்டுமென மேலக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் மனோ எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது சப்ரகமுவ மாகாணசபை …
-
- 0 replies
- 632 views
-
-
வருடத்துக்குள் வடக்கினை முழுமையாக மீட்டு கிழக்கிற்கு வழங்கப்பட்ட தீர்வினை அப்பகுதிக்கும் வழங்குவேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நேற்று நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, யாழ். குடாநாட்டில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. இதற்கான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளேன். விடுதலைப் புலிகள் என்னைக் கொல்ல முயற்சிக்கின்றனர். பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண நான் தயாராகவுள்ளேன். ஆனால் போராட்டத்தில் ஈடுபடும் 5 ஆயிரம் பேரையும் நான் எவ்வாறு சந்திக்க முடியும்? பல்கலைக்கழக மாணவர் போன்று புலிகளின் தற்கொலை குண்டுதாரி ஊடு…
-
- 4 replies
- 1.5k views
-
-
புத்தளம், பதுளை பகுதியில் 25 தமிழ் பொதுமக்கள் கைது வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] செவ்வாய், புதன் கிழமைகளில் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளினபோது 25 தமிழ் பொதுமக்கள் உள்ளடங்கலாக 35 பொதுமக்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஐந்து தமிழ் இளைஞர்கள் பதுளை காவல்பிரிவுக்குட்பட்ட பகுதியில் கைது செய்யப்பட்டதாகவும் ஏனைய 30 பேரும் புத்தளம் காவல்பிரிவுக்குட்பட்ட பகுதியில் கைது செய்யப்பட்டதாகவும் தெரியவருகிறது. கைதுசெய்யப்பட்ட தமிழ்பொதுமக்கள் புத்தளம் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஏனைய கைது செய்யப்பட்ட பொதுமக்கள் பெரும்பாண்மை இனத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் எ…
-
- 0 replies
- 498 views
-
-
தீர்க்கமான கட்டத்தில் தேர்தல் 22.08.2008 வடமத்திய மற்றும் சப்பிரகமுவ மாகாணசபைகளுக்கு நாளை நடக்கப்போகும் தேர்தல், வெறும் பிரதேச மட்டப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் வாக்களிப்பு மட்டும் அல்ல. அதற்கும் அப்பால் தேசிய மட்டத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அது விளங்குகின்றது. தமிழர் தாயகம் மீது தமது அரசு தொடுத்திருக்கும் கொடூரப் போருக்கு தென்னிலங்கைச் சிங்களத்திடம் அங்கீகாரம் பெறும் தேர்தலாக நாட்டினதும் அரசினதும் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தேர்தலை முன்நிறுத்தியிருக்கின்றார். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவோ பட்டினியில்லாத வாழ்க்கைத்தரமும் சமரசமும் நிலைநிறுத்தப்படுவதற்கு மக்களின் அனுமதியைக் க…
-
- 0 replies
- 547 views
-
-
நல்லூர் திருவிழாவையொட்டி அங்கு செல்லும் மக்களை கந்தர் மட சந்தியில் முக மூடி அணிந்த தலையாட்டி முன் நிறுத்தி இராணுவத்திணர் கண்காணித்து வருகின்றனர். இதனால் திருவிழாவிற்கு செல்லும் மக்கள் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர் என யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.tamilseythi.com/tamileelam/nallur-2008-08-21.html
-
- 3 replies
- 1.7k views
-
-
தமிழர்கள் ஒரே சக்தியாக அணிதிரண்டு எதிரிக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும்: பா.நடேசன் [வெள்ளிக்கிழமை, 22 ஓகஸ்ட் 2008, 08:32 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழ் மக்களின் எல்லாப்பலத்தினையும் ஒருங்கிணைத்து எதிரிக்கு ஒரே சக்தியாக தக்க பதிலடி கொடுக்கவேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற போர் எழுச்சிக்குழுக்களின் சிறப்பு ஒன்றுகூடலில் சிறப்புரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: போர் எழுச்சிக்குழுக்களின் கருத்துக்கள் தமிழீழ விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை தந்துள்ளது. விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு வளர்ச்சிக் காலத்திலும் மக்களின் பலத்…
-
- 1 reply
- 903 views
-
-
-
- 23 replies
- 4.7k views
-
-
போருக்கு தயாராக வேண்டிய காலகட்டத்தில் தமிழ் மக்கள்: தமிழினி [வெள்ளிக்கிழமை, 22 ஓகஸ்ட் 2008, 07:53 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழ் மக்கள் அனைவரும் போருக்கு தயாராக வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.தமிழினி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று முன்நாள் புதன்கிழமை நடைபெற்ற போர் எழுச்சிக் குழுக்களின் சிறப்பு ஒன்றுகூடலில் கருத்துரை நிகழ்த்துகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழீழ விடுதலைப் போர் எழுச்சிகொண்ட காலகட்டத்தில் இந்த போர் எழுச்சி ஒன்றுகூடல் நடைபெறுவது சிறப்பாகும். விடுதலைப் போரின் நீண்ட பயணத்தில் முக்கியமான காலகட்டத்தில் இப்போது நாம் வந்துள்ளோம். தமிழ்மக்கள் இ…
-
- 0 replies
- 766 views
-
-
வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டை குஞ்சுக்குளம் பகுதி ஊடாக சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஏழு பேர் காயமடைந்துள்ளனர். படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் உட்பட படைப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 774 views
-
-
வன்னி அகதிகளுக்கு உதவுங்கள்: யாழ். ஆயர் உருக்கமான வேண்டுகோள் [வியாழக்கிழமை, 21 ஓகஸ்ட் 2008, 05:17 மு.ப ஈழம்] [க.நித்தியா] வன்னியில் இடம்பெற்று வரும் உக்கிரமான மோதல்களால் வீடு வாசல்களை விட்டு வெளியேறி வரும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான போர் அகதிகளுக்கு உதவுமாறு யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகை உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். கத்தோலிக்க தொண்டு உதவி அமைப்பின் தேவைப்படுவோருக்கான திருச்சபையிடம் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள யாழ். ஆயர் செளந்தரநாயகம் ஆண்டகை மேலும் கூறியுள்ளதாவது: விடுதலைப் புலிகளுடனான அரச படையினரின் போரானது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. மக்கள் இடையில் சிக்கியிருக்கின்றனர். படைகளின் முன்னேற்றத்தினால் மக்கள் தமத…
-
- 5 replies
- 1.2k views
-
-
தலைமறைவாக இருந்துவந்த இளம்குடும்பஸ்தர் சுட்டுக்கொலை [வியாழக்கிழமை, 21 ஓகஸ்ட் 2008, 09:24 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்] உந்துருளிகளில் வந்து வீட்டுக்கு வெளியே காத்திருந்த இனம்தெரியாத ஆயுததாரிகளால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 0 replies
- 1.2k views
-
-
வீட்டிலிருந்து பலாத்காரமாக அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் கடத்திச்செல்லப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 979 views
-
-
திருகோணமலையில் விறகு வெட்டச் சென்றுகொண்டிருந்த இரண்டு முஸ்லிம்கள் இருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 688 views
-
-
யாழ்ப்பாணத்தில் உள்ளுராட்சிசபைக்கான தேர்தல்களை நடத்தப்போவதாக ஜனாதிபதி அறிவிப்பு வியாழன், 21 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைக்கான தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று தேசியத் தொலைக்காட்சியில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, தனது உரையிலேயே யாழ்ப்பாணத்தில் உள்ளுராட்சி சபைத்தேர்தல்களை நடத்துவதற்கான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தான் கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைத்தேர்தல்களை நடத்துவதற்கான கடந்த 2006 ஆம் ஆண்டு நியமனப்பத்திரங்கள் கோரப்பட்டிருந்தன. எனினும் தேர்தல்களை நடத்துவதற்கான சீரான நிலைமைகள் அங்கில்லை…
-
- 2 replies
- 1k views
-
-
சிறிலங்காப் படையின் 57 ஆவது டிவிசன் படையணி மீது பாரிய தாக்குதலினை நடத்துவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது சிறப்பு படையணிகளை கிளிநொச்சியில் குவித்திருப்பதாக படைத்துறை ஆய்வு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சிறிலங்காப் படையின் சகல படையிணிகள் மீதும் தாக்குதல் நடத்த முடியாவிட்டாலும், வலிந்த தாக்குதலை மேற்கொண்டு வரும் முக்கிய படையணியான 57 ஆவது டிவிசன் மீது பாரிய தாக்குதலினை நடத்தி, சிறிலங்காப் படையணிகளின் மத்தியில் தற்போது அதிகரித்துள்ள மன உறுதியை உடைக்கும் வகையில் விடுதலைப் புலிகள் தமது காய்களை நகர்த்தி வருகின்றனர். இதற்காக, மணலாறு பகுதியிலிருந்து தமது மோட்டார் படையணியை கிளிநொச்சிக்கு கொண்டு…
-
- 10 replies
- 3.1k views
-
-
அம்பாறை, கல்முனையில் தாயும் மகனும் வெள்ளைச் சிற்றூந்தில் சென்ற ஆயுத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். மருத்துவமனை வீதியிலுள்ள இவர்களது வீட்டிற்கு நேற்று அதிகாலை 1:30 அளவில் சென்ற ஆயுத நபர்கள் இவர்களைக் கடத்திச் சென்றனர். 40 அகவையுடைய நவரத்தினம் மஞ்சுளா, உயர்தரப் பரீட்சையில் தோற்றும் அவரது மகனான 18 அகவையுடைய நவரத்தினம் கலைவாணன் ஆகியோரே கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் கடத்திச் செல்லப்பட்ட வீட்டில் இருந்து 75 மீற்றர் தொலைவில் துணைப்படைக் குழு ஒன்றின் முகாம் அமைந்திருக்கின்றது. nitharsanam: கல்முனையில் சார்க் அமைப்பின் தலைவரின் அம்பாறை இணைப்பாளரால் தாயும் மகனும் கடத்தல்!!
-
- 0 replies
- 993 views
-
-
பாரிய வியாபாரமாக யுத்தம் இன்று நாட்டில் மாறியுள்ளது - எதிர்க்கட்சி தலைவர் ரணில் கவலை வீரகேசரி நாளேடு 8/20/2008 11:06:24 PM - யுத்தம் இன்று பாரிய வியாபாரமாக இலங்கையில் மாறியுள்ளது. யுத்தத்தை தொடர்வதற்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த கோருகிறார். யுத்தம் வியாபாரமாக பரிணமிக்கும் பட்சத்தில் மக்களின் நலன் குறித்து எவரும் சிந்திக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யுத்தத்துக்காக அரசாங்கமும் பசி பட்டினியின்றி மீண்டும் நிம்மதியான சூழ்நிலையை ஏற்படுத்த நாமும் வாக்குக் கோருகிறோம். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இரத்தினபுரி நகரில் இன்று நடைபெற்ற ஐ.தே.க. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போ…
-
- 3 replies
- 949 views
-
-
தேர்தல் கடமைகளுக்காக 21000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைத் தேர்தல்களுக்காக சுமார் 21000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு மேலதிகமாக இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. எதிர்வரும் 23ம் திகதி இரு மாகாணசபைகளுக்குமான தேர்தல்கள் நடைபெறவுள்ளது. நன்றி தமிழ் வின்
-
- 0 replies
- 588 views
-
-
பனாகொடை இராணுவ முகாமில் படைவீரர் தற்கொலை பனாகொடை இராணுவ முகாமின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த லான்ஸ் கோப்ரல் ஒருவர் கடமை நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரவு நேரக் கடமையில் ஈடுபட்டிருந்த படைவீரர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகப் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும்இ அண்மைக்காலமாக இராணுவ முகாம்களில் கடமையில் ஈடுபட்டுள்ள படைவீரர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நன்றி தமிழ் வின்
-
- 0 replies
- 982 views
-
-
படைவீரர்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமானால் ஐ.தே.க விற்கு வாக்களிக்கவும் - ஜானக பெரேரா வடக்கில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள படைவீரர்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமானால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்கவும் என மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார். ஊழல் மற்றும் மோசடிகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என நினைப்பவர்கள் மாத்திரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நன்றி தமிழ் வின்
-
- 0 replies
- 715 views
-
-
மக்கள் பலத்தின் ஊடாகத்தான் நாங்கள் ஒரு பலமான தேசிய விடுதலை இயக்கமாக வளர்த்துள்ளோம். சிங்களப்பயங்கரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதைமுகம்கொடுத்து வெற்றிகொள்ள மக்கள் எங்களுக்குப் பலமாக இருப்பார்கள். கடந்த போராட்ட காலத்தை பின்நோக்கிப்பார்த்தால் இது தெரியும் என தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். நேற்று கிளிநொச்சியில் நடைபெற்ற தேசிய போரெழுச்சிக்குழுவின் பேராளர்களின் சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விடுதலைப்போராட்டத்தின் முக்கிய காலகட்டங்களில் மக்கள் பலமாகஇ கவசமாக இருந்தமையால்தான் எங்களுடைய விடுதலை இயக்கம் உலகம் முழுக்கப் பேசப்படுகின்ற தேசி யவிடுதலை இயக்கமாக வளர்ந்ததிருக்கின்றது. …
-
- 0 replies
- 1.6k views
-
-
அதிகாரத்துக்கு வர உதவிய ஜனநாயகத்தை மீறலாமா? 21.08.2008 மரணங்கள் மலிந்த பூமியாகி விட்டது இலங்கைத் தீவு. ஆட்கடத்தல்கள், அச்சுறுத்தல்கள், படுகொலைகள், கப்பம் அறவிடல், காணாமற் போகச் செய்தல் என்று மனித உரிமை மீறல்கள் மோசமாக இடம்பெறும் அராஜக தேசம் என்ற பெருமையை இலங்கை ஈட்டிக் கொண்டுள்ளது. தலைநகர் கொழும்பில் இம்மாத முற்பகுதியில் இடம்பெற்ற "சார்க்' உச்சிமாநாட்டை ஒட்டி சர்வதேசத்தின் முழுக் கவனமும் இலங்கை பக்கம் திரும்பியிருந்தது. அக் காரணத்தினால் இலங்கையில் வெகுவாகக் குறைந்திருந்த ஆட்கடத்தல்கள், வெள்ளைவான் அட்டகாசங்கள், காணாமற் போகச் செய்தல் போன்ற பிரச்சினைகள் இப்போது, "சார்க்' மாநாடு முடிவடைந்தமையை அடுத்து, மீண்டும் தலைநகரிலும், பிற இடங்களிலும் பரவலாகத் தலைதூக்க ஆரம…
-
- 0 replies
- 672 views
-