ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143398 topics in this forum
-
புலம்பெயர்ந்துள்ள தமிழ்மக்களிடம் உதவிகோரி மரணத்தின் விளிம்பில் நின்று மன்றாடும் வன்னி மக்கள்: செடோட் அறிக்கை [செவ்வாய்க்கிழமை, 12 ஓகஸ்ட் 2008, 04:53 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னி பெருநிலப்பரப்பு மீது சிறிலங்கா படைகள் மேற்கொண்டுள்ள திட்டமிட்ட இனச்சுத்திகாரிப்பு நடவடிக்கையால் இடம்பெயர்ந்து, வாழ்விழந்து மரணத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள், தமது அடிப்படை தேவைகளுக்கு உதவி புரியுமாறு புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களை மன்றாடி கேட்கிறார்கள் என்று புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் தொண்டுநிறுவனமான 'செடோட்' வன்னியில் இருந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- த…
-
- 1 reply
- 1.2k views
-
-
அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் நடைபெற்ற வேறு பல பிரதேசங்களில் இருந்து பாதுகாப்புக் கருதி வன்னேரிக்குளம், அக்கராயன் மற்றும் ஆனை விழுந்தான் ஆகிய இடங்களில் தஞ்சமடைந்தவர்கள் இப்போது அந்தப் பகுதிகளில் இருந்து அச்சம் காரணமாக பாதுகாப்புக் கருதி வேறு இடைப் பட்ட பகுதிகளை நோக்கி நகரும் இடம்பெயரும் பெரும் அவலநிலை தோன்றியுள்ளது. பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பதற்கேற்ப, இவர்கள் தாம் வந்து தங்கிய மேற்குறிப் பிட்ட இடங்களுக்கும் கிளிநொச்சி நகருக்கும் இடைப்பட்ட பகுதிகளை நோக்கி நகரத்தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. மன்னார், வவுனிக்குளம், மல்லாவி துணுக்காய் ஆகிய பகுதிகளில் மோதல்கள் தீவிரமாகியதைத் தொடர்ந்து அங்கிருந்து மக்கள் இடம்பெயர்ந்து முன்…
-
- 3 replies
- 1k views
-
-
மண்டூரில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது கிளைமோர் தாக்குதல்: ஒருவர் பலி [திங்கட்கிழமை, 11 ஓகஸ்ட் 2008, 08:44 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மண்டூரில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளார். மண்டூர் 15 ஆம் கிராமத்தில் இன்று திங்கட்கிழமை முற்பகல் 9:00 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளார். புதினம்
-
- 6 replies
- 1.4k views
-
-
களனி புதிய பாலத்திறப்பு விழாவில் 'சிரச' தொலைக்காட்சி நிறுவன படப்பிப்பாளர் தாக்கப்பட்டு அவரது புகைப்படக்கருவி பறிமுதல் செய்யபட்டது தொடர்பாக மேர்வின் சில்வாவிடம் பேலியாகொட பொலிஸார் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அமைச்சர் மேர்வின் சில்வாவையும் தாக்குதலுடன் சம்பந்தபட்டவர்களையும் உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் ஆஜா செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். எனினும் மேர்வினை இதுவரை கைதுசெய்யாத அதே நேரம், அவரும் இதுவரை பொலிஸாரிடம் சரணடையவுமில்லை இந்நிலையில், கடந்த 9ம் திகதி மேர்வின் சில்வாவின் வீட்டுக்குச் சென்ற பேலியாகொட பொலிஸார். இந்த சம்பவம் தொடர்பாக மேர்வினிடம் நீண்ட வாக்கு மூலமொன்றைப் பெற்றுள்ளனர். இ…
-
- 2 replies
- 970 views
-
-
நாட்டின் ஏனைய இடங்களிலும் பார்க்க யாழ்ப்பாணத்தில் பொருடகளின் விலைகள் பல மடங்காக இருப்பதைச் சுட்டிக்காட்டி, இதனைக் குறைப்பதற்கு கப்பல் செலவை அராசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என சமாதானத்தி;ற்கும் சமாதானத்திற்கும் நல்லெண்ணத்திற்குமான மக்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த அமைப்பின் இணைச் செயலாளர் எஸ்.பரமநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் சங்கக் கடைகளில் சீனி 68 ரூபா 50 சதத்திற்கு விற்பனை செய்தாலும், ஒரு ஆளுக்கு அரை கிலோ மட்டுமே கொடுக்கப்படுவதாகவும், வெளிக்கடைகளில் 80, 90 ரூபாவுக்கு விற்கப்படுவதாகவும், அரிசி 90 ரூபா தொடக்கம் 120 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும், பரமநாதன் தெரிவித்துள்ளார். கெர்ழும்பில் 95 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் பூடு யாழ்ப்பாணத்தில் …
-
- 0 replies
- 642 views
-
-
வன்னிப் பிரதேசத்திற்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை நாளாந்தம் 20 லொறிகளில் ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக அனுப்பி வைப்பதற்கு வன்னிப்பிராந்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள் இணக்கம் தெரிவித்திருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் எஸ்.சண்முகம் தெரிவித்துள்ளார். வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுக்கும் வன்னிப்பிராந்திய ஆயுதப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய அவர்களுக்கும் இடையில் திங்களன்று வவுனியாவில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஓமநதை சோதனைச்சாவடி ஊடாக 20 லொறிகளில் பொருட்களை வன்னிப் பிரதேசத்திற்கு அனுப்புவது தொடர்பி…
-
- 0 replies
- 604 views
-
-
சாய்நதமருதுவில் தொடர்ச்சியான வெள்ளைவான் கடத்தல்கள் செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மகான்] நேற்றிரவு(11.08.08) 8 மணியளவில் சாய்ந்தமருதுவில் ஐ.லத்தீப்(50) எனும் கடற்தொழிலாளி இனம் தெரியாத வெள்ளை வான் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். நிந்தவூர் 24ம் வட்டாரத்தினைச் சேர்நத இவர் முன்னர் மரவியாபாரத் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இக் கடத்தல் தொடர்பாக சாய்ந்தமருது காவல்நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே வேளை நேற்று முன்தினம் (10.08.08) இரவு 7 மணிக்கு முகமட் ரபீன் எனும் 29 வயது இளைஞன் சாய்ந்தமருது கல்முனை வீதியில் உள்ள அவரது வாகனம் திருத்தும் நிலையத்தில் வைத்து வெள்ளைவான் கும்பலால் கடத்தப்பட்டுள்ளார். இக்கடத்தல் தொ…
-
- 0 replies
- 753 views
-
-
யாழ்ப்பாணத்தில் இரண்டு குழந்தைகள் கைவிடப்பட்டநிலையில் மீட்கப்பட்டன. இதில் இறந்த நிலையிலான குழந்தையும் அடங்குகின்றது யாழ்ப்பாணத்தில் இறந்தநிலையில் காணப்பட்ட குழந்தையொன்றின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் கொன்வன்ட் வீதி வாய்க்கால் ஒன்றிலேயே இந்த குழந்தையின் சடலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணம் பன்றிக்கோட்டு பிள்ளையார் கோயிலின் அருகில் அநாதரவாக கிடத்தப்பட்டிருந்த குழந்தையொன்றை பிரதேச மக்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். நன்றி தமிழ் வின்
-
- 6 replies
- 2.2k views
-
-
அரசாங்கமும் தமிழீழ விடுதலைப்புலிகளும் ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை,அரசாங்கத்தின
-
- 0 replies
- 966 views
-
-
வன்னிப் பகுதி மீது போர்நடவடிக்கை இருப்பதால் அங்கு மக்களுக்கான மனிதாபிமானப் பணியாளர்கள் மற்றும் அரச அதிபர் உள்ளிட்ட அரசஅதிகாரிகளின் மக்களுக்கான பணிகளின்போது அவர்களுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் தரமுடியாது என வன்னிப் பகுதி இராணுவத்தலைமையகம் தெரிவித்துள்ளது. நேற்று வவுனியாவில் இடம்பெற்ற நான்கு அரச அதிபர் மற்றும் வன்னிப் பகுதி இராணுவக் கட்டளைத்தளபதிகள், அதிகாரிகள் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பின் போது தற்போது வன்னிப் பகுதியில் நிலவுகின்ற மோசமான போர்ச் சூழலில் மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றார்கள் அவர்களுக்கான நிவாரணப்பணிகளை மேற்கொள்வதில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்…
-
- 0 replies
- 733 views
-
-
விருந்து உணவை உண்ட 60 பேர் வயிற்று நோவால் வைத்தியசாலையில் அனுமதி ருத்ரன் 8/12/2008 9:26:07 AM - வட்டவலை அகரவத்தை தோட்டப் பகுதியில் பூப்புனித நீராட்டு விழா ஒன்றில் பரிமாறப்பட்ட உணவை உண்ட 60 பேர் திடீர் வயிற்று நோவு கண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர் கினிகத்ஹேன வைத்தியசாலையிலும் ஏனையோர் வட்டவளை மற்றும் நாவலப்பிட்டிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட வைபவம் இடம்பெற்ற வீட்டின் உரிமையாளருக்கு தனிப்பட்ட ரீதியில் வேண்டத்தகாதவர்களே உணவில் ஏதோ ஒன்றை கலந்து விட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் உணவில் எதுவும் கலக்கவில்லை எனவும் அருந்தும்…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கை வேடுவக் குலத்தின் தலைவர் உருவருகே வன்னிலத்தோ தெரிவித்த ஒரு கருத்து இன்றைய காலகட்டத்தில் சிந்தனைக்கும் கவனத்துக்கும் எடுக் கத்தக்க விடயமாக உள்ளது. ""தங்களை நாகரிகமடைந்த மக்கள் என்று கூறிப் பெருமிதம் கொள்ளும் உலகத்தின் ஏனைய மக்களுடன் ஒப்பிட்டால், உண்மையில் உலகம் முழுவதும் காட்டில் வாழும் வேடர்களாகிய நாங்களே நாகரிகமடைந்த மேன்மையான மக்கள் கூட்டத்தவராவர்'' என்று குறிப்பிட்டிருக்கின்றார் அவர். சர்வதேச ஆதிவாசிகள் (பூர்வீகவாசிகள்) தினத்தை ஒட்டி கடந்த சனியன்று மகா ஓயாவில் சுற்றுச்சூழல் அமைச்சால் நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே வேடுவத் தலை வர் இப்படி வெளிப்படையாகக் கூறியிருக்கின்றார்.""தங்களை நாகரிகமடைந்த மக்கள் என்று கூறிக் கொள்ளும் உலக சமூகத்தவர…
-
- 0 replies
- 806 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. சார்க் பிராந்திய நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அதற்கு ஆதரவான அமைப்புக்களை அவுஸ்திரேலியாவில் தடை செய்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாகஅந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கும், அதற்கு எதிரான நடவடிக்கைகளுக்காக தெற்காசிய நாடுகளுடன் தொடர்புகளைப் பேணுவதற்கும் அவுஸ்ரேலியா விரும்புகிறது. இதற்காக தெற்காசியப் பிராந்தியத்தின் மு…
-
- 23 replies
- 3.7k views
-
-
'பினான்சியல் ரைம்ஸ் பத்திரிகையில் ஜோ லெகி எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம் இலங்கையில் இன்றுள்ள இராணுவ நிலைமைகளையும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமைகளையும் ஒப்பு நோக்கும் ஒரு வரைபடத்தை இராணுவ நடவடிக்கைகள் பணிபாளர் பிரிகேடியர் உதய பெரேரா ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது வெளியிட்டார். 2006ம் ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப்பட்ட பிரதேசம் சிவப்பு மையினால் அந்த வரைபடத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. வடக்கு கிழக்கில் கரையோரப்பகுதிகள் முழுமையாக தெற்கில் அரச கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்கள் வரை விரிவுடைந்து செல்கின்றது. இன்னோரு படம் இரண்டு ஆண்டுகாளக அரச படைகள் கைப்பற்றிய பிரதேசங்கள் நீலமையினால் காட்டபட்டிருந்தன. பெர…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரசாங்க அதிபர்களுக்கும், வவுனியாவில் உள்ள வன்னிப் பிரதேச ஆயுதப் படைகளின் தலைமையகத்தின் இராணுவ உயரதிகாரிகளுக்கும் இடையில் திங்களன்று... நடைபெற்ற முக்கிய உயர்மட்ட கூட்டத்தில் வன்னிப் பிரதேசத்திற்கு அத்தியாவசிய பொருட்களை சீரான முறையில் அனுப்புவது குறித்து கலந்துரையாடப்பட்டிருக்கின்
-
- 0 replies
- 542 views
-
-
முல்லைத்தீவு பிரதேசமக்கள் நேற்று எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தினர். அண்மைக்காலமாக இலங்கைப் படையினர் நடத்திவரும் தாக்குதல்களைக் கண்டித்தே இந்தப் பேரணி நடத்தப்பட்டுள்ளதாகத் தமிழ்நெற் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களின் போது கடந்த வாரத்தில் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் காயமடைந்தமை, துணுக்காயின் உதவி அரசாங்க அதிபர் இலங்கைப் படையின் ஆழ ஊடுருவும் பிரிவினரால் கொல்லப்பட்டமை, கிளிநொச்சி அபிவிருத்தித்துறை உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டமை, பொதுமக்கள் இலக்குகள் மீது விமானத்தாக்குதல் நடத்தப்பட்டு பல பொதுமக்கள் கொல்லப்பட்டமை போன்ற சம்பவங்களைக் கண்டித்தே இந்தப் பேரணி நடத்தப்பட்டது. பேரணியின் இறுதிக் கோரிக்கை மனு, முல்லைத்தீவு உதவி மேலதிக அரசாங்க அதிபர் பார…
-
- 0 replies
- 493 views
-
-
கடந்த 8ஆம் திகதி முல்லைத்தீவு வைத்தியசாலை, அரசாங்க அதிபர் இல்லம் ஆகியவற்றினை இலக்கு வைத்து மணலாறு முன்னரங்கு நிலையிலிருந்து ஏவப்பட்ட எறிகணை வீச்சில் முல்லைத்தீவின் அரசாங்க அதிபர்... திருமதி.இமெல்டா சுகுமார் கையில் மட்டும் காயமடைந்து உயிர்தப்பினார். எனினும் இத்தாக்குதலில் ஒன்றரை வயதான குழந்தை உடல் சிதறிப் பலியானது. 16க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். வைத்தியசாலைக் கட்டிடம், பல வீடுகள், பொதுக்கட்டிடங்கள் சேதமடைந்தன. மேலும் கால்நடைகள் பலியாகின.எனினும் அரசாங்க அதிபர் உயிர் தப்பியதை அறிந்து கொண்ட இலங்கை இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார இத்தாக்குதலை தாம் நடாத்தவில்லையென வழமைபோல் தெரிவித்துக் கொண்டார். எனினும் நேற்று வன்னிக் கட்டளைத் தளபதியைச் சந்தித்த வன்னிப்பகுதிக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய மின்னல் வேக அதிரடித் தாக்குதலில் உயரதிகாரி உட்பட படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: கஞ்சிக்குடிச்சாறு வேப்பையடி சிறப்பு அதிரடிப்படை முகாமிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரம் முன்னேறி நிலைகொண்டிருந்த சிறப்பு அதிரடிப்படையினர் மீது இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் விடுதலைப் புலிகள் மின்னல் வேக அதிரடித் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் நிமால் லுகே எனும் உயரதிகாரி உட்பட அதிரடிப்படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர். …
-
- 4 replies
- 2k views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் உள்ள மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்கா வான்படையின் வானுர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் பொதுமகன் ஒருவர் காயமடைந்துள்ளார். புதுக்குடியிருப்பு மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று திங்கட்கிழமை காலை 8:20 மணியளவில் சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தின. இதில் ஜி.சசிதமலர் என்பவர் காயமடைந்துள்ளார். பொன்னம்பலம் செல்வரத்தினம் என்பவரின் வீடு முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளதுடன் பத்து வரையான வீடுகள் மற்றும் பயன்தரு மரங்கள் சேதமாகியுள்ளன. www.puthinam.com
-
- 1 reply
- 819 views
-
-
வன்னியில் மணலாறுக் களமுனையில் ஆண்டாங்குளத்துக்கு கிழக்கே முல்லைத்தீவை நெருங்கி நடந்த சண்டையில் 7 போராளிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சடலங்களும் ஆயுத தளபாடங்களும் படையினரால் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை பாலமோட்டையில் நடந்த சண்டையில் இரண்டு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இரு போராளிகளின் உடலங்களும் ஆயுத தளபாடங்களும் இராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளன. இதற்கிடையே கிளாலியில் படையினர் திடீர் தாக்குதல் நடத்தி போராளிகளைக் கொன்றுவிட்டு மீண்டும் தமது நிலைக்குத் தரும்பியுள்ளனராம். இரண்டு பெண் போராளிகளின் உடலங்கள் படையினரால் மீட்கப்பட்டுள்ளன. இச்சண்டைகளில் சில படையினருக்கு காயம் மட்டும் ஏற்பட்டுள்ளது. என்று படைத்தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
-
- 28 replies
- 5.2k views
-
-
அரச படையினரால் மேற்கொள்ளப்படும் வான் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமெனத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். வன்னிப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள சிவிலியன்களைக் கருத்திற் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளும், அரச படையினரும் யுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை நிறுத்துவதன் மூலம் சிவிலியன்களைப் பாதுகாக்க முடியுமென அவர் சுட்டிக் காட்டியுள்ளார். நாட்டின் சகல பாகங்களிலும் உள்ள சிவிலியன்களைப் பாதுகாக்கும் தார்மீகப் பொறுப்பு அரசாங்கத்திற்குக் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கையொன்றின் மூலம் ஆனந்தசங்கரி இந்தக் கருத்துகளை முன்வை…
-
- 6 replies
- 2k views
-
-
யாழ்ப்பாணத்தில் சிறுவர் இல்லங்களை நாடிச்செல்லும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுவர் இல்லங்களில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் சிறுவர் இல்லங்களில் சேர்க்கப்படும் சிறுவர்களுக்காக சிறுவர்களுக்கு உகந்த சூழல் - குடும்ப சூழலே என்ற திட்டத்தின் கீழ் சேவ் த சில்ட்ரன் இன் ஸ்ரீ லங்கா அமைப்பு மேற்கொண்டு வந்த பணிகள் கடந்த மே மாதத்துடன் முடிவடைந்துள்ளன. இந்த காலப்பகுதிக்குள் சேவ் த சில்ட்ரன் அமைப்பினால் 403 சிறுவர்கள் அவர்களின் பெற்றோர்களுடன் மீளிணைக்கப்பட்டுள்ளார்கள். எனினும் மே மாதத்தின் பின்னர் சிறுவர் இல்லங்களுக்கு வந்த சுமார் 408 சிறுவர்களை பராமரிக்கமுடியாமல் போயிரு…
-
- 0 replies
- 937 views
-
-
மட்டக்களப்பிலிருந்து மகான் எழுதிய ” மகிந்த பிள்ளாயான் இடையே ஆரம்பித்த நிழல் யுத்தம் ” ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் செந்தமிழ்] தெற்காசிய வலைய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் சந்தித்துக் கொண்ட பதினைந்தாவது உச்சி மகாநாட்டின் மூலம் மஹிந்தா அரசுக்கும் ஒட்டுக்குழுவின் தலைவர் பிள்ளையானுக்கும் இடையில் முதல் முறையாக பாரிய நிழல் யுத்தம் ஆரம்பித்துள்ளது. அரசாங்கத்தின் கைபொம்மையாக செயற்பட்டுவரும் ஆயுதக்குழுவின் தலைவர் பிள்ளையானை பாரத பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் சந்திக்க மறுப்பு தெரிவித்தமை பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைக்கும், முதல் அமைச்சருக்கும் அடித்த சாவு மணியாகும். 1987ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் இலங்கையின் சிறுபான்மை இனமா…
-
- 13 replies
- 2.3k views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், சிரேஷ்ட அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பகிரங்கமாக விமர்சித்துள்ளதாக பி.பி.சீ. உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகளை 100 வீதம் ஏற்றுக் கொள்ள முடியாதெனப் பொலன்னறுவைப் பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சர் என்ற ரீதியில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பல கொள்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேனவின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி…
-
- 2 replies
- 1.2k views
-
-
பௌத்த மதத்தினர் எப்படி யுத்தம் செய்யலாம் என தமிழர்கள் தற்போது கேள்வி எழுப்புகின்றனர். தமது மதத்தை பரப்புவதற்காக கொலைகளை செய்யாதவர்கள் பௌத்தர்கள் மாத்திரமே. பொறுமை என்ற பண்டைய மரண தண்ணீரின் இறுதிக்குச் செல்ல இடமளிக்க முடியாது. அரச அதிகாரம் சிங்களவர்களுக்கு இல்லாதுபோனால் பௌத்த சாசனம் காணாமல்போவதுடன் பௌத்த தர்மமும் காணாமல் போகும் என சுற்றாடல்த்துறை அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமையவின் கொள்கை வகுப்பாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். உடனடி சரிவை எதிர்கொண்டுள்ள சிங்கள நாகரிகத்தை அதிலிருந்து தடுப்பதற்கு புத்த மதத்தின் பாதுகாவலனான துட்டகைமுனுவின் வழியில் செல்ல அனைவரும் ஒன்றுதிரள வேண்டுமெனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செயலமர்வ…
-
- 0 replies
- 1.1k views
-