Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மாநாட்டு ஒழுங்குபடுத்தல் செயற்பாடுகளால் 100 மில்லியன் ரூபா இழப்பு. 05.08.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்காவில் நடைபெற்ற சார்க் மாநாட்டு ஒழுங்குபடுத்தல் மற்றும் பாதுகாப்பு செயற்பாடுகள் காரணமாக 100 மில்லியன் நட்டத்தை தாம் எதிர்நோக்கியுள்ளதாக உல்லாச விடுதிகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த மாதம் 26 ஆம் திகதியிலிருந்து இந்த மாதம் 04 ஆம் திகதிவரை சார்க் மாநாட்டை முன்னிட்டு முக்கிய உல்லாச விடுதிகள் உள்ள பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயங்கள் ஆக்கப்பட்டமை, சார்க் மாநாட்டில் பங்கெடுப்பதற்கு வந்த வெளிநாட்டு பிரமுகர்களுக்கு தங்குமிட ஒழுங்குகளை வழங்க அரசாங்கம் பணித்தமை, முக்கிய வீதிகள் அடிக்கடி மூடப்பட்டமை என்பவற்றின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்…

    • 0 replies
    • 708 views
  2. வெளிவிவகார அமைச்சிடம் இந்திய தூதரகம் கவலை தெரிவிப்பு 05.08.2008 / நிருபர் வானதி கொழும்பில் நடைபெற்ற 15 ஆவது சார்க் உச்சி மாநாட்டின் போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனுக்குனின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது கவலையை வெளிவிவகார அமைச்சிடம் தெரியப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணனுக்கு சார்க் மாநாட்டின் போது விசேட பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமென கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இலங்கை வெளிவிவகார அமைச்சை கேட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை 15 ஆவது சார்க் உச்சி மாநாட்டின் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொள்ளச் சென்ற எம். கே.நார…

    • 10 replies
    • 2.2k views
  3. மட்டக்களப்புப் பகுதியில் 6 சுனாமி எச்சரிக்கைக் கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளன. நாடளாவிய ரீதியில் 23 சுனாமி எச்சரிக்கைக் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் களுவாஞ்சிகுடி காத்தான்குடி வாகரை மட்டக்களப்பு வாழைச்சேனை ஏறாவூர் ஆகிய இடங்களில் இவை அமைக்கப்படவுள்ளன. அது இயற்கை அனர்த்தங்களின்போது மக்களுக்குத் தானாக பாரிய ஒலியை ஏற்படுத்தும். இவை அனைத்தும் ஒரு நெற்வேர்க்கில் இணைக்கப்படும். www.tamilwin.com

  4. சார்க் அமைப்பு நாடுகளில் காவற்துறை பிரிவொன்றை அமைப்பது, தொடர்பாக சார்க் நாடுகளின் காவற்துறை மா அதிபர்கள், மற்றும் உள்துறை அமைச்சர்களின் மாநாடொன்று எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. சார்க் நாடுகளின் பயங்கரவாதம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி அதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது இந்த பிரிவின் நோக்கமாகும்.சார்க் நாடுகளில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் காணப்பட்டு இணக்கத்திற்கு அமைய இந்த காவற்துறை பிரிவு ( SAARC POLICE DESK) உருவாக்கப்படவுள்ளது. இந்த காவற்துறை பிரிவு சர்வதேச காவற்துறை பிரிவுகளுக்கு சமனானதாகும். பாகிஸ்தானில் நடைபெற உள்ள இந்த காவற்துறை மாநாடு குறித்து அந்த நாட்டின் பிரதமர் யூசுப் கிலானி ஜனாதிபதி மகிந்த ர…

    • 0 replies
    • 616 views
  5. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்லடி பாலத்துக்கு அருகில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிஸ்டல் குழு உறுப்பினர் ஒருவரால் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்று சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 485 views
  6. குஞ்சுக்குளத்தில் படையினருக்கு எதிராக முறியடிப்புத்தாக்குதல் [செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2008, 07:23 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு நவ்வி குஞ்சுக்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடிப்புத்தாக்குதலை நடத்தியுள்ளனர். வடமேற்கு நவ்வி குஞ்சுக்குளம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4:00 மணியளவில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் படையினர் முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கு எதிரான முறியடிப்புத்தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தியதில் படையினர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். புதினம்

    • 0 replies
    • 568 views
  7. இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உதவி நிறுவனங்கள் வழங்குகின்ற உதவிகளை பன்மடங்காக அதிகரிக்க வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 446 views
  8. பாதுகாப்பு செலவீனங்களை குறைக்கும் ஓர் நடவடிக்கையாக இதுவரை காலமும் வான்படையினருக்கு இரவு நேரத்தில் வழங்கப்பட்டு வந்த தேனீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. வான்படையைச் சேர்ந்த உயர் அதிகாரியொருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த பிரத்தியேக செவ்வியின் போது இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். பாதுகாப்பு செலவீனங்களை குறைக்குமாறு பாதுகாப்பு அமைச்சினால் ஏற்கனவே அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் வான்படையினருக்கு வழங்கப்பட்டு வந்த தேனீர் கோப்பைக்கு பதிலாக மல்லித் தண்ணீர் வழங்குவதற்கு உயர் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். படை சிப்பாய் ஒருவரின் உணவு செலவீனத்திற்காக நாளொன்றுக்கு 280 ரூபா செலவிடப்படுவதாகவும், பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள படைச் …

  9. இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளைவிடக் கிளிநொச்சி நோக்கிய முன்நகர்வுகள் சவால் மிகுந்ததாக அமையக்கூடும் என அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். எனினும், எவ்வாறான தடைகள் ஏற்பட்ட போதிலும் மிகுந்த மனோ திடத்துடன் யுத்தத்தை முன்னெடுக்கப் படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். யுத்த தந்திரோபாயமாக தமிழீழ விடுதலைப் புலிகள் சிவிலியன்களைப் பலிக்கடாவாக்க எத்தனித்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சிப் பிரதேசத்தில் காணப்படும் யுத்த பதற்ற நிலை காரணமாகக் கடைகள், காரியாலயங்களின் பணிகள் ஏற்கனவே ஸ்தம்பிதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது www.tamilwin.com

  10. மன்னாரில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் 58ஆவது படையணியினர் தற்போது தமது நிலைகளிலிருந்து முன்னேறி கிளிநொச்சி மாவட்டத்துக்குள் முன்னகர்ந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார். இதன் பிரகாரம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு ஆகிய இரு மாவட்டங்கள் மடடுமே படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது ஈழப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் அதிசக்தி வாய்ந்த கட்டுப்பாட்டுத் தளமாக விளங்கும் கிளிநொச்சி மாவட்டத்துக்குள் படையினர் தெற்கிலிருந்து முன்னகர்வை மேற்கொண்ட முதலாவது சந்தர்ப்பமாகவே இது கருதப்படுகிறது. இதுவரையில் வடக்கிலிரு…

    • 3 replies
    • 2.1k views
  11. விடுதலைப் புலிகளுக்கும் அல்கொய்தா அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை ராணுவம் புகார் கூறியுள்ளது.கொழும்பில் இன்று சார்க் மாநாடு தொடங்கியது. இதையொட்டி இலங்கையில் குவிந்துள்ள சர்வதேச பத்திரிகையாளர்களுக்கு ராணுவ செய்தித் தொடர்பாளர் கெகலியா ரம்புக்வாலா பேட்டி அளித்தார்.அவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் இயக்கம் ஈவிரக்கமற்ற மிக கொடுமையான பயங்கரவாத அமைப்பு. புலிகளுக்கும், அல்கொய்தா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.புலிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய வேட்டையின்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நபர்கள் சிக்கினர்.புலிகளுக்கு எதிராக போராட தெற்காசிய நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சார்க் நாடுகள் அனைத்துமே தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாட…

  12. வீரமிக்க படைவீரர்கள்?? தங்களது உயிரையும் துச்சமாக நினைத்து கிழக்கை மீட்டது மட்டுமல்லாது வடக்கை மீட்பதற்காக கிளிநொச்சியில் காலடி எடுத்து வைத்துள்ள தீர்மானமானதொரு நிலையில் வட மாகாண முலமைச்சர் பதவியை பிரபாகரனிடம் வழங்குவதா அரசின் நோக்கம் என்று தேசிய பிக்குகள் முன்னணி அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. பிரபாவை வட மாகாண முதலமைச்சராக்குவது அரசின் நோக்கமா? அல்லது அமைச்சரின் நோக்கமாக? என்றும் முன்னணி கேள்வியெழுப்பியுள்து. தேசிய பிக்கு முன்னணி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்: படையினர் கிளிநொச்சியில் காலடி எடுத்துவைத்துள் நிலையில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன வடமாகாண முதலமைச்சர் பதவியை பிரபாகரனுக்கு வழங்க முடிய…

  13. சார்க் மாநாட்டால் அப்பாவிப் பொதுமக்கள், கெடுபிடிகளுக்கும் அசௌகரியங்களுக்கும் உள்ளாக்கப்பட்மையைத் தவிர வேறு என்ன நன்மை விளைந்தது? எதுவுமேயில்லை. இவ்வாறு சீற்றத்துடன் தெரிவித்தார் மனோ கணேசன்.எம்.பி '15 ஆவது சாக்கு மாநாடு இம்முறை கொழும்பில் பெரும் எடுப்பில் நடந்து முடிந்திருக்கிறது. இந்த மாநாட்டை அரசு தன்னைப் பெருவாரியகப் பிரசாராப் படுத்துவதற்காகவே கொழும்பில் நடத்தியது 'சார்க்' மாநாட்டினால் பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கபட்டிருக்கிறார்கள். குறிப்பாக தமிழ் பேசும் மக்களே கடும் பாதிப்புக்குள்ளாகியிருந்தன

  14. கிளிநொச்சி பிரதேசத்தில் இரணைமடு வாவிப் பகுதியின் வடமேற்குத்திசையில் சுமார் மூன்று கி.மீற்றர் தூரம் வரையில் பரந்திருக்கும் காட்டுப் பகுதியை அண்டியும் அடுத்து திருவையாறு பிரதேசத்தை அண்டியும் புலிகள் இயக்கத்தின் இராணுவ பயிற்சி முகாம்கள் சில அமைந்ததுள்ளதாகவும் இந்தப் பயிற்சி முகாம்களில் புலிகள் இயக்கப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மானின் நேரடிக் கண்காணிப்பிலே முக்கிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரும்புலிகளுக்கான விசேட தற்கொலைத் தாக்குதல் பயிற்சிகள் மேற்படி முகாம்களிலேயே பொட்டு அம்மான் மற்றும் உயர்மட்ட புலிகள் இயக்கத் தலைவர்களின் கண்காணிப்பில் நடத்தபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கரும்புலித் தாக்குதல் உட்பட விசேட …

  15. படைப்பொருட்களும்இ சடலமும் மீட்பு. மன்னார் வெள்ளாங்குளம் நோக்கி நேற்று முன்தினம் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சிக்கு எதிராக விடுதலைப்புலிகள் மேற்கொண்ட எதிர்தாக்குதலில் பல படையினர் கொல்லப்பட்டும் பலர் படுகாயங்களுக் குள்ளாகியுள்ளதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ் எதிர்தாக்குதல்களின்போது படைச்சடலம் ஒன்றும் படைப்பொருட்களும் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் முற்பகலும் மாலை 4.30 மணிக்கும் ஆட்லெறி மற்றும் எறிகணைவீச்சுத்தாக்குதலை மேற்கொண்டவாறு வெள்ளாங்குளம் நோக்கி முன்நகர்ந்த படையினர் மீதே விடுதலைப்புலிகள் தீவிர தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதன்போது பெருமளவான படையினர் கொல்லப்பட்டும் படுகாயமடைந்துள்ளனர். இத் தாக்குதல…

    • 8 replies
    • 2.9k views
  16. ஐ.தே.கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அமரர் தி. மகேஸ்வரன் கடந்த வருடம் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சுக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் வைத்து பாதுகாப்பு உயரதிகாரிகளைப் பார்த்து ஓர் எச்சரிக்கையை விடுத்தார். நாட்டில் இடம்பெறும் ஆட்கடத்தல்கள், கப்பம் அறவிடல், சட்ட விரோதப் படுகொலைகளைக் கண்டித்து ஆவேசமாக உரையாற்றிய அவர், ஆட்சியிலிருப்பவர்களின் தூண்டுதலின் பேரில் பாதுகாப்பு உயரதிகாரிகள் இத்தகைய அரச பயங்கரவாதத்துக்குத் தொடர்ந்தும் துணை போவார்களானால் அடுத்த ஆட்சியில் கட்டாயம் அதற்கு அவர்கள் பதில் சொல்லவேண்டியிருக்கும் என்ற அறிவுறுத்தலையே பகிரங்கமாக அவர் அன்று அங்கு வெளிப்படுத்தினார். ஆட்சிப் பீடத்தின் சட்டவிரோத செயற்பாடுகளுக்குத் துணைபோகும் அரச…

    • 0 replies
    • 1.5k views
  17. தேசிய ஒற்றுமையென கூறி 300 சிங்கள மற்றும் முஸ்லீம் மாணவர்களை வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்கு அனுப்புவதற்கு எதிராக அந்த மாணவர்கள் இன்று (ஆகஸ்ட்04) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு வோட் பிளேசில் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு எதிரில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் செல்வதற்கு 9 ஆயிரத்து 500 ரூபா விமான கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் அத்துடன் தங்குமிட வசதிகளை தாமே ஏற்படுத்தி கொள்ள வேணடும் எனவும் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது. இது நியாயமற்ற தீர்மானம் எனவும் தமக்கு தென் பகுதிகளில் உள்ள பல்கலைக்கழங்களில் அனுமதி வழங்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர…

    • 0 replies
    • 1.3k views
  18. சார்க்” மாநாட்டிற்காக தமிழீழ விடுதலைப்புலிகள்ää அறிவித்திருந்த ஒருதலைப்பட்சமான யுத்தநிறுத்தம் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகிறது. “சார்க்” நாடுகளின் மாநாட்டுக்காக தமிழீழ விடுதலைப்புலிகள் இந்த யுத்தநிறுத்தத்தை அறிவித்திருந்த போதும். அரசாங்கம் அதனை நிராகரித்திருந்தது. இந்தநிலையில் அரசாங்கப்படையினர் வன்னியில் தமது தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தனர். இதேவேளை, யாழ்ப்பாணம் முகமாலையில் படையினர் நேற்று தமது சந்தோசத்தை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் வடமுனைத்தளபதி கேனல் தீபன், வன்னிக்களமுனைக்கு அழைக்கப்பட்டதாக சிங்கள செய்திதாள் ஒன்றில் வெளியான செய்தியை அடுத்தே படையினர் எறிகனைகளை வீசியும் துப்பாக்கி வேட்டுக்களை தீhத்தும் தமது சந்தோசத்தை ப…

  19. (2ம் இணைப்பு)கோத்தபாய - பசில் - பொன்சேகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ள இனச்சுத்திகரிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு [திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2008, 08:51 பி.ப ஈழம்] [க.நித்தியா] தமிழின அழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் சிறிலங்கா அரசின் முக்கிய நபர்களாகக் கருதப்படும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் கோத்தாபாய ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகிய அமெரிக்க குடிமகன்கள் மூவருக்கும் எதிராக இனச்சுத்திகரிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு (Tamils Against Genocide [TAG]) அமெரிக்காவில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்…

  20. வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டையில் முன்நகர்வை மேற்கொண்ட சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் ஒன்பது படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  21. வடபோர் அரங்களில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் மற்றும் பொறிவெடிகள் மற்றும் பிற சம்பவங்களில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 12 படையினர் கொல்லப்பட்டு மேலும் 14 படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சிறீலங்காப் பாதுகாப்பு ஊடக தகவல் மையம் அறிவித்துள்ளது. மன்னார் மன்னாரில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட வலிந்த ஆகிரமிப்பு நடவடிக்கைகளில் 7 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக சிறீலங்கா தேசிய பாதூப்பு ஊடக மையம் அறிவித்துள்ளது. நேற்று மன்னார் வெள்ளாங்குளப் பகுதியில் ஆக்கிரமிப்பு யுத்தத்தில் ஈடுபட்ட சிறீலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் 7 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 11 படையினர் படுகாயமடைந்துள்ளனர். …

    • 0 replies
    • 1.2k views
  22. தெஹிவளை வாசல வீதியில் உள்ள உணவகம் ஒன்றிற்கு சென்றுஇ உணவக உரிமையாளரின் தலையில் துப்பாக்கி வைத்து அச்சுறுத்திஇ 11 ஆயிரத்து 500 ரூபாவை கொள்ளையிட்டமை மற்றும் உணவகத்தின் உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த இரண்டு காவற்துறை அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொதுமக்களிடமிருந்து அச்சுறுத்திப் பெறப்பட்ட பணத்தை வைத்திருந்தமை, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகள் எனத் தம்மைக் கூறி கடத்தல்களில் ஈடுபட முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின்பேரில், இரு அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட இரு பாதுகாப்பு அதிகார…

    • 0 replies
    • 753 views
  23. ஒன்றுபட்ட சக்தியாக நாம் அணிதிரண்டு எமது தேசத்தின் விடுதலையை விரைவாக வென்றெடுப்போம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.1k views
  24. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சி கோட்ட தேசிய போர் எழுச்சிக்குழுக்களின் சங்கம நிகழ்வு இன்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 831 views
  25. குறைந்த செலவில் பயணங்களை மேற்கொள்ள எதிபார்த்திருந்த பெரும் எண்ணிக்கையிலான பயணிகளை மிஹின் எயார் நிறுவனம் நிர்க்கதியாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏனைய விமான சேவை நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்தளவு கட்டணங்களை அறவிட்டுவந்த மிஹின் எயர் திடீரென தமது சேவையை இடைநிறுத்திக் கொண்டமை பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர். நிர்வாகத்திறன் இன்மை, போதிய நிதியின்மை போன்ற காரணிகளினால் மிஹின் எயார் நிறுவனம் நட்டத்தில் இயங்கி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் சாதாரண தொழிலாளர்கள் தமது பயணங்களுக்காக மிஹின் எயார் சேவையை பெரிதும் நம்பியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. ஏற்கனவே விமாணச் சீ…

    • 0 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.