ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
இந்துக்கள் தமது பிதிர் கடன்களை நிறைவேற்றும் ஆடி அடிமாவாசை தினத்தன்று - எதிர்வரும் முதலாம் திகதி - கொழும்பு முகத்துவாரம் கடற்பகுதியை பயன்படுத்தலாம் என்று சிறிலங்கா உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 604 views
-
-
இந்தியாவின் நலன்களுக்காக இலங்கைத் தமிழ் மக்களைப் பலி கொடுத்த சமாதான ஒப்பந்தம் சி.அ.யோதிலிங்கம் * கைச்சாத்திடப்பட்ட பின்னர் கடந்தோடிவிட்ட 21 ஆண்டுகள் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இன்றுடன் 21 வருடம் ஆகின்றது. இந்த ஒப்பந்தத்தின் படி உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் வடக்கு தவிர்ந்த ஏனைய இடங்களில் அரசியல் நிர்வாகத்தின் தலைமையில் செயற்படுகின்றன. வட, கிழக்கு மட்டும் தொடர்ந்தும் ஆளுநர் நிர்வாகத்தின் கீழ் செயற்படுகின்றது. இணைக்கப்பட்டிருந்த வடக்கு மாகாணமும் உயர் நீதிமன்றத்தீர்ப்பின் மூலம் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு ஆளுநர் நிர்வாகத்தின் கீழ் செயற்படுகின்றது. இப்பிரிப்பு பற்றி ஒப்பந்தத்தின் பங்காளியான இந்தியா வாயினையே திறக்கவில்லை. கிழக்கில் இராணுவத்தின் த…
-
- 0 replies
- 714 views
-
-
தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைப் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் எஸ் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இந்திய மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதற்காகப் பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று ராமதாஸ் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தபோதே இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது தமிழக மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமரிடம் கடிதம் ஒன்றையும் ராமதாஸ் கையளித்துள்ளார். இந்தக் கடித்தில் தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர்பாகக் குறிப்பிட்டுள்ள அவர் கச்சதீவை மீண்டும் இந்தியா பொறுப…
-
- 0 replies
- 608 views
-
-
வெலிக்கடை சிறையில் தமிழர்கள் 1,200 பேர் வரையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் திடிக்கிடும் தகவலை சிறீலங்காவின் உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் கொங்கிரஸ் கட்சியினால் கைதுகளுக்கு எதிராகத் தொடரப்பட்டிருந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. கல்வி, தொழில், வெளிநாடு செல்ல என கொழும்பு சென்றவர்களும், கொழும்பின் புறநகர் பகுதிகளில் தொழில் புரிந்தவர்களும் சிறீலங்கா படைகளால் கைது செய்யப்பட்டு இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். திருமணம் செய்வதற்காக கொழும்பு சென்ற பத்திற்கும் மேற்பட்டவர்களும் திருமணத்திற்கு முதல்நாள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது எந்தவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படாது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய…
-
- 2 replies
- 961 views
-
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான், முத்து சிவலிங்கம் எம்.பி. மற்றும் பிரதி அமைசசர் வி.இராதகிருஷ்ணன் அகியோருக்கு ஆறு மாத காலம் ஒத்திவைக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனையை நுவரெலிய மாவட்ட நீதிமன்றம் இன்று வழங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க... http://www.tamilseythi.com/srilanka/aarumu...2008-07-29.html
-
- 0 replies
- 887 views
-
-
90 நாட்களுக்கு மேல் தடுப்பு காவலில் தடுத்து வைப்பது சட்டவிரோதம் - உயர் நீதிமன்றம் தெரிவிப்பு வீரகேசரி நாளேடு 7/29/2008 8:37:16 PM - பொலிஸாரால் கைது செய்யப்படும் ஒருவர் 90 நாட்களுக்கு மேல் தடுப்பு காவல் உத்தரவில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படுவது சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்துள்ள உயர் நீதிமன்றம், தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரை உடனடியாக சிறைச்சாலைக்கு மாற்றுமாறு உத்தரவிட்டுள்ளது. வெள்ளவத்தை டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட தியாகராஜா மோகனரூபன் (வயது 33) என்பவரின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை மீறல் மனு மீதான பூர்வாங்க விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றபோதே இந்த உத…
-
- 0 replies
- 556 views
-
-
சிறிலங்கா கடற்பரப்புக்கு வந்துள்ள இந்திய யுத்தக்கப்பல்களில் 1,000 கடற்படையினர் Tuesday, 29 July 2008 கொழும்பில் எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் நடைபெறவிருக்கும் சார்க் உச்சி மாநாட்டில் பங்குகொள்வதற்காக வருகைதரவிருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கான பாதுகாப்பை வழங்குவதற்காக கொழும்பையடுத்துள்ள கடற்பிராந்தியத்துக்குள் பிரவேசித்துள்ள இந்தியாவின் மூன்று யுத்தக் கப்பல்களில் சுமார் ஆயிரம் இந்தியக் கடற்படையினர் இருப்பதாகவும், குறிப்பிட்ட கப்பல்களுடன் இணைந்ததாக 30 தாக்குதல் படகுகள் வந்திருப்பதாகவும் கொழும்பில் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. சில தினங்களுக்கு முன்னர் இந்தியத் துறைமுகங்களிலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பல்கள் நேற்று சிறிலங்காவின் க…
-
- 0 replies
- 889 views
-
-
நேற்றுடன் வன்னியில் இருந்து வரும் கடசி தொடர்புகளும் துண்டிக்கபட்டுள்ளது. டெலிபோன் கொம்பனிகாரரிடம் தொடர்புகொண்டபோது, அவர்கள்... இது ஜீலம் பயங்கரவாதிகளை அழிப்பதற்க்கு என்று கூறினர். EEZHAM என்பதை உச்சரிக்கமுடியாமல் மோட்டு சிங்களவன் ஈழத்தை ஜீலம் எண்டு சொல்லுறான். ***
-
- 3 replies
- 2.1k views
-
-
http://www.pathivu.com/tv/index.php?mact=N...nt01returnid=58
-
- 2 replies
- 1.7k views
-
-
மன்னார் மடு தேவாலயத்தைப் பொறுப்பேற்குமாறு மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய ராயப்பு ஜோசப்பிடம் இன்று படைத்தரப்புக் கேட்டுக் கொண்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். படையினரின் கோரிக்கையின்படி தேவாலயத்தைச் சென்று பார்வையிட்டு வந்ததாக ஆயர் குறிப்பிட்டுள்ளார். மடு தேவாலயப் பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலக் கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளமை தொடர்பாகப் படைத்தரப்பு ஆயரிடம் தெரிவித்ததாகவும் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை படையினரின் கோரிக்கையின்படி தாம் மடுத் தேவாலயத்தை இன்று பார்வையிட்டுத் திரும்பியதாக மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய ராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். தாமும் குருமுதல்வர் வணக்கத்துக்குர…
-
- 0 replies
- 909 views
-
-
இனிவரும் காலங்களில் என்ன நடக்கப்போகிறது அழுத்துக http://www.vakthaa.tv/play.php?vid=1490
-
- 0 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் பாரிய வரட்சி நிலவுவதால் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு ஆகிய பிரதேசங்களிலேயே கடும் வரட்சி நிலவுவதால், பல மைல் தூரம் சென்றே பெரும் அசௌகரியங்களுக்கு மத்தியில் குடிநீரை பெற்று வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குளங்கள் வற்றி வரண்டு காணப்படுகின்றன. சில்லிக்கொடி ஆற்று வாய்க்கால் உட்பட அனைத்து வாய்க்கால்களும் வற்றி வரண்டு காணப்படுகின்றது. இதனால், இப்பகுதி மக்களின் அவலம் தொடர்கிறது. சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பாக உடன் கவனம் செலுத்தி பவுசர் மூலம் நீரினை வழங்குவதன் மூலம் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்கலாம் என சுட்டிக்காட்…
-
- 0 replies
- 639 views
-
-
எதிரிகளால் வன்பறிப்புச் செயய்ப்பட்டுள்ள எமது நிலப்பகுதிகளை மீட்டெடுத்து விடுதலைக் குறிக்கோளை உறுதியாக அடைவோம் என்று கடற்புலிகளின் துணைத் தளபதி விநாயகம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
இன்று காலை புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுப்பகுதியான பூ நகரியிலிருந்து 10 தடவைகள் முகமாலையிலுள்ள படையினரின் நிலைகள் மீது ஆட்லறி தாக்குதல் நடத்தியதில் இரண்டு படையினர் காயமடைந்ததாக படைதரப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் புலிகள் யுத்த நிறுத்தத்தை மீறிவிட்டனராம்.புலிகளின் யுத்த நிறுத்த அறிவித்தலின் பின்னர் தேவன்பிட்டியில் படையினரின் தாக்குதலில் 16வயதுடைய வினாயகர் செல்வகுமார் என்ற சிறுவன் கொல்லப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது. இதனைவிட தொடர்ச்சியாக படை நடவடிக்கையை அரசாங்கம் நடாத்திவருவதும் குறிப்பிடத்தக்கது. போர் நிறுத்த அறிவிப்பின் மத்தியில் முகமாலையில் படையினர் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்க் மாநாட்டை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் போர் நிறுத்த அ…
-
- 1 reply
- 1.8k views
-
-
சிறீலங்கா வெள்ளவத்தையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதலில சந்தேகத்தின் பேரில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். தமது அடையாளத்தை உறுதிப்படுத்த தவறியர்களும், இப்பகுதயில் தங்கியிருப்பதற்கான முறையான காரணத்தை தெரிவிக்காதவர்களுமே கைது செய்யப்பட்டனர் என இலங்கை காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர் என வெள்ளவத்தை காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அதிகமானவர்கள் தமிழர்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன. நிருபர்:அன்பு http://www.tamilseythi.com/srilanka/colombo-2008-07-29.html
-
- 0 replies
- 792 views
-
-
வீரகேசரி இணையம் - அவுஸ்திரேலியாவில் சர்ச்சைக்குரியதாயிருந்த புகலிடம் கோருவோரை சிறைவைக்கும் கொள்கையை புதிய அவுஸ்திரேலிய அரசாங்கம் கைவிட்டுள்ளது. இதனை மனித உரிமைகள் குழுக்கள் வரவேற்றுள்ளன.அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் ஏற்கனவே புகலிடம் கோருவோரை நீண்ட காலம் பசுபிக் தீவுகளில் தடுத்து வைப்பதை முடிவிற்கு கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
-
- 0 replies
- 1.1k views
-
-
மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களுடைய நிலைமை இதுவரை என்ன என்று தெரியாமல் இருப்பதாக காணாமல் போனவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.இரவு வேளைகளில் முகமூடி அணிந்து வரும் ஆயுததாரிகள் விசாரணைக்கு என அழைத்துச் சென்றுள்ள நிலையில் பலர் காணாமல் போயுள்ளனர். வேலை நிமித்தம் செல்பவர்கள் வீடு திரும்புவதில்லை மற்றும் வெள்ளை வானில் வருபவர்களில் பலர் கடத்தப்ப்டுகின்றனர்.இப்படிய
-
- 0 replies
- 459 views
-
-
மன்னார் மாவட்டத்தில் தொடரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக மூன்று முக்கிய வைத்தியசாலைகள் இடம்பெயர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அக்கராயன் வைத்தியசாலையில் சேர்ந்து இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் மாவட்டத்தின் அடம்பன் வைத்தியசாலை முதலில் இடம்பெயரந்;து பள்ளமடு வைத்தியசாலையுடன் இயங்கி வந்தது. பின்னர் பள்ளமடு வைத்தியசாலையும் அடம்பன் வைத்தியசாலையுடன் இடம்பெயர்ந்து வெள்ளாங்குளம் வைத்தியசாலையில் சேர்ந்து இயங்கி வந்தது. வெள்ளாங்குளம் பகுதிகளிலும் எறிகணை தாக்குதல்கள் இடம்பெற்றதனால், இந்த மூன்று வைத்தியசாலைகளும் சேர்ந்து இடம்பெயர்ந்து தற்போது கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் வைத்தியசாலையில் இயங்கி வருவதாக அதிகாக்ரிகள் தெரிவித்துள்ளனர். மன்னார் மடு பிரதேசத்தில் இ…
-
- 0 replies
- 469 views
-
-
அரச நிறுவனங்கள் தொடர்பான தெரிவுக்குழு மற்றும் அரச கணக்கீட்டு தெரிவுக்குழு ஆகியவற்றின் தலைவர்களாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு உள்ளமையானது, நிறைவேற்று தரப்பினரால் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகளை தடையின்றி செய்வதற்காக தெரிந்தே மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக விரோத நடவடிக்கை என் ட்ரான்ஸ்பேரன்சி இண்டர்நாஸ்னல் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குழுக்களின் உறுப்பினர்களாகவும் அவற்றின் தலைவர்களாகவும் அமைச்சர்கள் நியமிக்கப்படுவது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணானதும் ஆபத்தன நிலைமையுமாகும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. நாடாளுமன்றம் இந்த பிரச்சினைக்குரிய விடயத்தை மீண்டும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் இந்த நாட…
-
- 0 replies
- 639 views
-
-
உள்நாட்டு அரசியலில் இந்தியா அளவுக்கதிகமாக தலையீடு; ஜே.வி.பி.சீற்றம் எம்.ஏ.எம்.நிலாம் இலங்கையின் உள்நாட்டு அரசியலிலும் பொருளாதாரத்தைச் சுரண்டுவதிலும் இந்தியா நேரடியாகத் தலையிடத் தொடங்கி இருப்பதாக கண்டனம் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி. இந்தியாவின் ஆதிக்கம் மோசமான விளைவுகளைத் தோற்றுவிக்கும் என எச்சரித்துள்ளது. சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை வரவிருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் நிகழ்ச்சி நிரலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானைச் சந்திப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எமது நாட்டை இந்தியாவுக்கு தாரைவார்க்கும் விடயத்தில் ஜே.ஆர்.ஜயவர்தனவை விடவும் மோசமானதாகக் காணப்படுவதாகவும் ஜே.வி.பி. சுட்டிக்காட்டி…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்காவுக்கு கட்டாரிலிருந்து விடுமுறையில் சென்ற தமிழ் இளைஞர்கள் இருவர் கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து கடத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 634 views
-
-
நாட்டில் மீண்டும் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளினது எண்ணிக்கை கடந்த ஆண்டுகளிலும் பார்க்க இந்த ஆண்டு பாரியளவில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் குற்றப்பதிவுப் பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன. முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குற்றச்செயல்களினதும், குற்றவாளிகளினதும் எண்ணிக்கை பாரியளவு அதிகரித்துள்ளதாகவும் பொலிஸ் குற்றப்பதிவுப் பிரிவு தெரிவித்துள்ளது. கள்ள நோட்டு அச்சிட்டமை, முத்திரைகள் அச்சிட்டமை, கொலை, கொலை முயற்சி, தாக்குதல்களை நடாத்தியமை, வீடுடைப்பு, களவு, கொள்ளை, ஆள்மாறாட்டம், ஏமாற்று, மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் இவர்கள் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டுள்ள பொலிஸ் குற்றப்பதிவுப் பிரிவு, இவர்களது கைவிரல் அடையாளத்தைக் கொண்டே பொலிஸ் பதிவுகள் மூலம் அவர்கள…
-
- 0 replies
- 753 views
-
-
திருகோணமலையில் இளைஞர் சுட்டுக்கொலை வீரகேசரி இணையம் 7/29/2008 2:25:01 PM - திருகோணமலை உப்புவேளி பகுதியில் இளைஞர் ஒருவர் நேற்று இரவு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். உப்புவேளி அன்புவளிபுரம் பகுதியைச் சேர்ந்த மரியதாஸ் என்ற இளைஞரே சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என உப்புவேளி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் உப்புவேளி பொலிஸார் மேலதி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
-
- 0 replies
- 771 views
-
-
யாழ்.தென்மராட்சி மிருசுவில் பகுதியிலிருந்த பதினாறு குடும்பங்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு படையினர் நிர்ப்பந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இதேவேளை, யாழ்.வடமராட்சி மாலு சந்தி, துன்னாலை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை மாலை தொடக்கம் இரவு 9 மணிவரை படையினர் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதலை மேற்கொண்டுள்ளனர். அத்துடன், யாழ்.தீவகம் வேலணைப் பகுதியில் பெண்ணொருவரிடமிருந்து கடற்படையைச் சேர்ந்த ஒருவர் தாலிக்கொடியைப் பறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சனிக்கிழமை மாலை தெரு வழியாக நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணை வழிமறித்த கடற்படையைச் சேர்ந்தவரே அவரின் கழுத்திலிருந்த பத்துப் பவுண் தாலிக்…
-
- 0 replies
- 549 views
-
-
தங்காலை சிங்களக் குடும்பத்துக்கு புலிகளுடன் தொடர்பு? காவல்துறை கடும் விசாரணை Tuesday, 29 July 2008 சிறிலங்காவின் தென்பகுதி நகரான தங்காலைப் பகுதியிலுள்ள மூன்று சிங்களக் குடம்பங்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த மூன்று குடும்பங்களும் திடீர்ச் செல்வந்தர்களானதை அடுத்தே அவர்கள் மீது சந்தேகம் தெரிவிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அம்பாந்தோட்டையை அடுத்துள்ள தென்பகுதிக் கிராமங்களில் குறிப்பாக புத்தள பகுதியில் மறைந்திருந்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் விடுதலைப் புலிகளுக்கு உணவு, நீர், இருப்பிடம் போன்ற…
-
- 0 replies
- 609 views
-