ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143690 topics in this forum
-
இந்தியாவின் மத்திய அரசில் ஏற்படக்கூடிய அரசியல் மாற்றத்தின் மூலம், தற்போது பிரதான எதிர்க்கட்சியாக உள்ள பாரதீய ஜனதா கட்சி ஆட்சிப்பீடமேறினால், ஈழத்தமிழர்களின் உரிமைகளை பெற்றுத்தரக்கூடிய வகையில் இம்முறை நடவடிக்கை எடுக்கும் என்று பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 12 replies
- 1.9k views
-
-
சார்க் மாகாநாடு இடம்பெற இருக்கின்ற வேளையில் இதனை கூட்டாக வைத்து கொண்டு தமிழர்கள் நைய புடைக்கின்ற,தமிழர்கள் கைது செய்கின்ற நடவடிக்கைகள் தென் இலங்கையில் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ஆகவே அத்தியாவசிய, வைத்திய தேவைகளை தவிர சார்க் மகாநாடு முடியும் வரை கொழும்பிற்கு பயணிக்க வேண்டாம் என மக்களிடம் தாழ்மையாக கேட்டுகொள்ளுகிறேன்.ஏன் என்றால் அரசாங்கம் அங்கு பல தடைகளை விதித்துகொண்டிருக்கிறது. புகையிரதங்கள் கடைசி வரை செல்லாது இடையிலேயே நிறுத்தப்படுகிறது.பஸ்ஸில் பயணிப்பவர்கள் அதுவும் மன்னாரில் இருந்து செல்பவர்கள் என்றால் மிகவும் மோசமாக பார்வையிடும் நிலையும்,குழந்தை தாய் வயோதிபர்கள் என்ற வித்தியாசமின்றி கைது செய்கின்ற நிலை காணப்படுகிறது. எனவே இக…
-
- 2 replies
- 949 views
-
-
மன்னார் விடத்தல்தீவு பகுதியில் இருந்து வடக்கே அமைந்திருந்த இலுப்பக்கடவை பகுதியை படையினர் இன்று காலை கைப்பற்றியுள்ளதாக இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். வடமேற்கு பகுதியில் அமைந்திருந்த மேற்படி இலுப்பக்கடவை தளம் புலிகளின் முக்கியமான தளம் என்றும், இங்கே கடற்புலிகளின் தளம் இல்லை என்றும், இவ் பகுதியில் புலிகள் தமது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இவ்பகுதியை பாவித்து வந்துள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். http://puspaviji.blogspot.com/
-
- 8 replies
- 2.5k views
-
-
அரசாங்கம் அண்மையில் இறக்குமதி செய்த குண்டுத் துளைக்காத 31 வாகனங்கள் அலரி மாளிகையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வாகனங்கள் யாருக்கு வழங்க கொண்டு வரப்பட்டன என்பதை பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிட முடியாது என ஆளும் கட்சியின் பிரதான கொறட அமைச்சர் தினேஸ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்த போதிலும், இந்த வாகனங்கள் யாருக்காக கொண்டு வரப்பட்டன என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட 31 குண்டுத்துளைக்காத வாகனங்கள் பெருபாலானவை ராஜபக்ஸ நிறுவனத்தின் உறவினர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அலரி மாளிகையின் தகவல்கள் கூறுவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் பாரியார், அவரது புதல்வர்கள், ஜனாதிபதியின் பாரியா…
-
- 0 replies
- 937 views
-
-
புத்தள ஒக்கம்பிட்டிய பகுதியில் இரத்தினக் கல் அகழும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கறுப்பு நிற உடையணித்த சிலர் யால வனாந்திரப் பகுதியில் வைத்து இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக புத்தள காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். எனினும், இந்தத் தாக்குதலில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும், கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 915 views
-
-
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிப்பீடமேறினால் ஈழத்தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும்: புதினத்துக்கு வழங்கிய பேட்டியில் இல.கணேசன் [திங்கட்கிழமை, 21 யூலை 2008, 04:58 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] இந்தியாவின் மத்திய அரசில் ஏற்படக்கூடிய அரசியல் மாற்றத்தின் மூலம், தற்போது பிரதான எதிர்க்கட்சியாக உள்ள பாரதீய ஜனதா கட்சி ஆட்சிப்பீடமேறினால், ஈழத்தமிழர்களின் உரிமைகளை பெற்றுத்தரக்கூடிய வகையில் இம்முறை நடவடிக்கை எடுக்கும் என்று பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். "புதினம்" இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பேட்டியின் முழுவிவரம் வருமாறு: இந்தியாவில் அரசு மாற்றம் ஒன்று ஏற்பட்டால் ஆட்சிக…
-
- 2 replies
- 795 views
-
-
மட்டக்களப்பு பாலமீன்மடு அகதி முகாமருகில் கடந்த வாரம் கண்டுபிடிப்பக்கப்பட்ட மனிதப்புதைகுழி தொடர்பில் அரசாங்கம் சுதந்திர விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.அத
-
- 8 replies
- 1.1k views
-
-
கச்சதீவை மீண்டும் மீட்பதே, தமிழக மீனவர்கள் இலங்கைப் படையினராற் தாக்கப்படுவதற்குத் தீர்வாக அமையும் எனத் தமிழக மாநில ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளுராட்சித்துறை அமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்துரைத்த, அவர், மீனவர்களுக்காகத் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்தே, புதுடில்லி நிர்வாகம், தமிழகத் தலைவர்களை அழைத்துப் பேச்சு நடத்தியுள்ளது. இது உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என ஸ்டாலின் குறிப்பிட்டார். இந்தநிலையில் கச்சதீவை மீட்பதற்காக என்ன நடவடிக்கைகளை எடுக்கவேண்டும், எனத் தமிழக அரசாங்கத் தலைமையே முடிவெடுக்க வேண்டும் என ஸ்டாலின் குறிப்பிட்டார். http…
-
- 0 replies
- 642 views
-
-
விடுதலைப்புலிகளின் பிடியில் இருந்து வடமாகாணம் முழுவதையும் அரசு விரைவில் மீட்டுவரும் இவ்வாறு பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம் புக்வெல அரச ஊடகம் ஒன்றிற்கு நேற்று அளித்த செவ்வியில் தெரிவித்திருக்கிறார். அவர் மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு: வடமாகாணம் முழுவதையும் விடுத லைப்புலிகளின் பிடியில் இருந்து விடு விக்கும் நடவடிக்கையில் அரச படையினர் ஈடுபட்டுவருகின்ற னர். படையினர் விரை வில் வடமாகாணம் முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவர். கிழக்கு மாகாணத் தில் இருந்து புலிகளை விரட்டியடித்த தன் ஊடாக அவர்களின் வேசம் கலைக்கப்பட்டது. புலிகளின் பிடியில் உள்ள பிரதேசங்களை விடுவிக்கும் படையினரின் முயற்சிகளுக்கு பொதுமக்கள் பூரண ஆதரவுகளை வழங்கிவருக…
-
- 4 replies
- 1.2k views
-
-
தமிழக உண்ணாவிரதத்தில் இலங்கை கடற்படைக்கும் கடும் கண்டனம் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை யினர் சுட்டுக்கொல்வதற்கு கடுமையான கண் டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் கலை ஞர் கருணாநிதி, கச்சதீவை இந்திய அரசு மீளப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளார். தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற் படையினரால் படுகொலை செய்யப்படுவ தைக் கண்டித்தும் இந்தப் பிரச்சினையில் மத் திய அரசு தலையிடவேண்டும் என்று வலி யுறுத்தியும் சென்னையில் நேற்று சனிக் கிழமை தி.மு.க.வின் ஏற்பாட்டில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கி வைத்து கருணாநிதி உரையாற்றினார். தனது உரையில் அவர் மேலும் தெரிவிக் கையில் : நான் கிஞ்சித்தும் எதிர்பாராத அளவிற்கு இந்தப் போராட்டத்தில் இன்று ஈடுபட வேண் டிய ஒரு தவிர்க்க முடியாத சூழ…
-
- 10 replies
- 1.1k views
-
-
காணாமல் போன நால்வரில் மூவர் சுட்டுப்படுகொலை [திங்கட்கிழமை, 21 யூலை 2008, 06:36 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மன்னார் பள்ளமடுப்பகுதியில் வீடுகளில் பொருட்களை ஏற்றச்சென்ற போது காணாமல் போன நால்வரில் மூவர் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வடபிராந்திய பார ஊர்திச் சங்கத்தின் பணியாளர்களான இவர்கள், கடந்த புதன்கிழமை (16.07.08) காணாமல் போய் இருந்தனர். இந்நிலையில் தற்போது இவர்கள் கொல்லப்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் மன்னார் மருத்துவமனையில் சிறிலங்காப் படையினரால் ஒப்படைக்கப்பட்டு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினால் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கிளிநொச்சி விவேகானந்த நகரைச் சேர்ந்த கணபதி ஞானசீலன் (அகவை…
-
- 2 replies
- 852 views
-
-
கச்சதீவை இந்தியா மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருணாநிதியின் கருத்து தமிழ் மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக வெளியிடப்பட்டதாகும். இதனை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை. என்று ஜாதிக் ஹெல உறுமையவைச் சேர்ந்த ஊடகச் செயலாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார். கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது. அதனை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அவர் கூறினார். உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய கருணாநிதி கச்சதீவை மீளப் பெற வேண்டும் என்று கூறியதை குறித்து கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் : எமது கடல் எல்லைக்கு இந்திய மீனவர்கள் வந்தால் கடற்படையினர் கைது செய்வார்கள். அதே போலவே இந்திய கடல் எல்லைக்கு எமது மீனவர்கள் சென்றால் அவர்கள் …
-
- 5 replies
- 1.2k views
-
-
2006 ஆம் ஆண்டு வெம்பிளி பகுதியில் வைத்து 25 பேரடங்கிய இந்த கோஷ்டியொன்று இளைஞன் ஒருவரை கொடூரமாகத் தாக்கி கொல்ல முற்பட்டதோடு சாமுராய் ரகவாள், பிக்கான், பொல்லுகள் ஆகியவற்றினால் இந்தக் கோஷ்டி தாக்கியுள்ளது. இதன் போது அவர்கள் அந்த இளைஞனின் தலையில் போத்தல் ஒன்றினால் தாக்கி கீழே வீழ்த்திய பின் அவரது தலையை சாமுராய் வாளினால் துண்டித்து அவரைக் கொல்ல முற்பட்டுள்ளனர். எனினும் அந்த இளைஞன் தன்வசமிருந்த கிரிக்கெட் மட்டையை பயன்படுத்தி தன்னைக் காப்பாற்ற முற்பட்ட போது இடது முழங்கையில் பலத்த வாள் வெட்டுக்கு இலக்காகி கை துண்டிக்கப்படும் நிலையில் இருக்கையில் அப்பகுதியால் பிரிட்டிஷ் பொலிஸாரின் கார் வந்த போது அதணைக் கண்டு அவர்கள் தப்பியோடவே பொலிஸார் அவரைக் கொண்டு சென்று ஆஸ்பத்திரியில் அனுமதித்த…
-
- 0 replies
- 923 views
-
-
சார்க் பிராந்திய நாடுகளில் இயங்கிவரும் பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகளை இல்லாதொழிப்பதற்கு கூட்டுத்திட்டமொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்க் மாநாட்டில் முன்வைக்கவுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. சார்க் பிராந்திய நாடுகளில் சுமார் 9பிரதான தீவிரவாத இயக்கங்கள் இயங்கிவருவதாகவும் சர்வதேச சக்திகளின் உதவியுடன் பிராந்திய நாடுகளில் பிரிவை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது பிராந்திய நாடுகளின் சில அரசியல் கட்சிகள் சீ 4போன்ற அதிசக்திவாய்ந்த வெடிப்பொருட்களைப் பயங்கரவாத அமைப்புகளுக்குத் தொடர்ச்சியாக வழங்கிவரும் விடயங்களை மாநாட்டின் போது அம்பலப்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது சார்க் மாநாடுகளில் பயங்கரவாதத்தை இல்லாது ஒழிப்பதற்கு கூட்டு நிதியமொன்றை உர…
-
- 0 replies
- 768 views
-
-
ட்ரக் வண்டிகள் கொள்வனவில் பாரிய நிதி மோசடிகள் திங்கள், 21 ஜுலை 2008 [செய்தியாளர் நிலாமகன்] சிறீலங்கா காவல்துறையின் விசேட அதிரப்படையினருக்கு தாக்குதல் வாகனங்களை கொள்வனவு செய்த சந்தர்ப்பத்தில் பாரியளவு நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆயுதப் படையினரின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் ஐந்து ட்ரக் வண்டிகள் பிலிப்பைன்ஸிலிருந்து 25 கோடி ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொடுக்கல் வாங்கல்களின் மூலம் சுமார் 13 கோடி ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையின் விசேட அதிரடிப்படை உயர் அதிகாரிகளினால் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாகத் திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த ரக ட்ரக் வண்டிகளை சுமார…
-
- 2 replies
- 648 views
-
-
அரசாங்கத்தின் பாதுகாப்பை ஜானக பெரேரா நிராகரித்தார் Monday, 21 July 2008 ஐக்கிய தேசியக் கட்சியின் வடமத்திய மாகாண சபை முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளரும் முன்னாள் இராணுவ அதிகாரியுமான மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பாதுகாப்பை நிராகரித்துள்ளார். ஜானக பெரேராவுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் வலியுறுத்திவந்த நிலையிலேயே அவருக்கு நான்கு மெய்ப் பாதுகாவலர்களை அரசாங்கம் நியமித்தது. இருந்த போதிலும் ஜானக பெரேரா அதனை நிராகரித்திருக்கின்றார். தனக்கு அதிகளவு பாதுகாப்புகு அச்சுறுத்தல் காணப்படும் நிலையில் நான்கு பேரை பாதுகாப்புக்கு நியமிப்பது என்பது போதுமானதல்ல எனத் தெரிவித்திரு…
-
- 1 reply
- 720 views
-
-
Posted on : 2008-07-21 உச்சிமாநாட்டால் உச்சத் தொல்லை ஒரு நாட்டில் ஒரு சர்வதேச ஒன்றுகூடல் அல்லது சர்வதேச மாநாடு நடைபெறுகின்றது என்றால் அந்த நாட்டுக்குக் கொண்டாட்டம்தான். அக்கொண்டாட்டத் தடல்புடலில் அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைப்பார்கள். சர்வதேச மட்டத்தில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளையோ, உலகக் கிண்ண விளையாட்டுப் போட்டிகளையோ, சர்வதேச ஒன்றுகூடல்கள் மற்றும் மாநாடுகளையோ நடத்துவதற்கு நாடுகள் விழுந்தடித்துப் போட்டிபோடுவதே இதற்குத்தான். இத்தகைய நிகழ்வுகளை நடத்துவது பெரும் செலவும் சிரமமும் மிஞ்சிய விவகாரம் என்றாலும், அப்போட்டிகள், நிகழ்வுகள் மூலம் அவற்றை நடத்தும் நாடுகள் புத்துயிர்ப்புப் பெறுகின்றன. அத்தேச மக்களின் வாழ்வும், வளமும் புதுமெருகு பெறுகின்றன. இப்…
-
- 1 reply
- 695 views
-
-
வீரகேசரி வாரவெளியீடு - இலங்கையில் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு பணிபுரிந்த காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட கோவைகள் மற்றும் தரவுகளை நோர்வே தேசிய ஆவணக்காப்பகத்தில் வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஆவணங்களிலுள்ள இரகசிய தகவல்களைப் பொதுமக்கள் பார்வையிட தடைவிதிக்கப்படும் எனவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கணக்குகள் உள் ளிட்ட அதிகாரபூர்வமானதும் உண்மையானதுமான தகவல் களை வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளும் இறுதிக்கட் டத்தை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள கண்காணிப்புக் குழு, ஆய்வாளர்கள், மதிப்பீட்ட…
-
- 1 reply
- 923 views
-
-
கனடா மொன்றியலில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற பொங்குதமிழ் கனடா மொன்றியலில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் பெருந்திரளான தமிழீழ மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டுள்ளனர். தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற தமிழர் கோட்பாட்டை மீண்டும் வலியுறுத்தி இப்பொங்கதமிழ் எழுச்சி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
-
- 7 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவின் வான், கடல் தாக்குதல்களில் சிறுவர்கள் உட்பட 9 பேர் காயம்- 15 படகுகள் சேதம் [திங்கட்கிழமை, 21 யூலை 2008, 06:59 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முழங்காவில் அன்புபுரம் கரையோரக் கிராமம் மீது சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் மற்றும் கடற்படையினரின் படகுகள் நடத்திய குண்டுத்தாக்குதல்களில் சிறுவர்கள் உட்ட 9 பேர் காயமடைந்துள்ளனர். கடற்றொழிலாளர்களின் 15 படகுகளும் சேதமடைந்துள்ளன. வன்னியின் மேற்குப்பகுதியில் உள்ள முழங்காவில் கிராமத்தின் கரையோர மக்கள் குடியிருப்பான அன்புகுடியிருப்பு மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:30 முதல் மாலை 5:00 மணிவரை கிபீர் ரக வானூர்திகள் மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து குண்டுத்தாக்குதலை நடத்தின. அதேநேரம…
-
- 1 reply
- 762 views
-
-
இலங்கை சிங்களவர்களாலேயே ஆளப்படும் - தளபதி சிறுபான்மையினர் பெரும்பான்மையினரை ஒரு நாட்டில் ஆள்வார்களாயின் அது பெரும் ஆபத்துக்கு உரியதாகும். அது பெரும் பிரச்சினையாக அமையும் எனவும் அது நடைபெற முடியாத ஒன்றாகும் என இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்த நாடு எப்போதும் 74 சதவீதத்தினரான சிங்கள இனத்தவராலேயே ஆளப்படும். இந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டுமெனில், நாம் உயிர்வாழ வேண்டுமானால், நாம் தியாகம் செய்தே ஆக வேண்டும். இந்த வேளையில் சாதாரண மக்களுக்கு பொருளாதாரக் கஷ்டங்கள் தவிர்க்க முடியாதவையே. அரச சார்பு ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பண வீக்கம் 29 சத வீதத்தை தொட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் ச…
-
- 2 replies
- 1.4k views
-
-
சார்க் மாநாட்டை குழப்புவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சிக்கவில்லை. தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் சுதந்திரப் பேராட்டத்திற்கு பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பை நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 16 replies
- 2.1k views
-
-
த.தே.தொலைக்காட்சியின் அவசிய அறிக்கை- 42 பார்வையிட...
-
- 0 replies
- 1.1k views
-
-
மன்னார், பூநகரி நாச்சிக்குடாவில் விடுதலைப் புலிகளின் 8 சிறிய படகுகள் மீது சிறீலங்கா கடற்படையினரும், வான் படையினரும் கூட்டாக தாக்குதல் நடத்தியிருப்பதாக, சிறீலங்காபாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.நடைபற்ற தாக்குதலின் போது விடுதலைப் புலிகளின் 6 படகுகள் முற்றாக மூழ்கடிப்பட்டதுடன், எஞ்சிய இரண்டு படகுகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக, படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க..
-
- 0 replies
- 771 views
-
-
மட்டக்களப்பு காரைதீவு முருகன் ஆலய ஆடிவேல் தீர்த்தோற்சவத்தில் 6 இளைஞர்கள் கடலில் முழ்கினர் திங்கள், 21 ஜுலை 2008 [செய்தியாளர் நிலாமகன்] நேற்று காலை 11 மணியளவில் நடைபெற்ற காரைதீவு முருகன் ஆலய வருடாந்த உற்சவ இறுதி நாளான ஆடிவேல் தீர்த்தோற்சவ நிகழ்விற்காக கடலுக்கு சென்ற வேளையில் 6 இளைஞர்கள் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் நால்வர் மீட்கப்பட்டுள்ளனர். செல்லத்துரை ஜனார்த்தனன், காண்டீபன் தனுஷாந் ஆகிய இரு இளைஞர்களுமே கடலில் மூழ்கியவர்களாவர். இருவரும் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கு தோற்ற உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை குறித்த இருவரது உடலங்களும் கரை ஒதுங்கியுள்ளது. http://www.…
-
- 0 replies
- 715 views
-