ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142851 topics in this forum
-
அமெரிக்க சுதந்திர நிகழ்ச்சித்திட்ட அமைப்பின் தலைவரும்இ நீதி நாடும் தமிழர் குழுமத்தின் அமெரிக்க சட்டவாளருமாகிய புறூஸ் வெயின் கனடா வந்துள்ளார். இலங்கை இனப் பிரச்சனைக்கு ஒரு நீதியானஇ நியாயமான தீர்வு காண்பதற்குஇ கனடியத் தமிழரின் ஆதரவை நாடி அவர் இங்கு வந்துள்ளார். தமிழ் மக்களைச் சந்தித்துஇ தமது திட்டங்களை அவர் வகுக்கவுள்ளார். 'பாதிக்கப்படும் மக்களுக்கு நீதி நாடுவதே எனது பணி. அமெரிக்க அரசின் மட்டு மீறிய செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நான் பாடுபட்டுவருகின்றேன். கடுங்கோலர்களை விரட்டியடிக்கும் உரிமையும் கடமையும் மக்களுக்கே உண்டு என்பதை வலியுறுத்தி வருகின்றேன். இலங்கைத் தமிழ்அரசு ஒன்றினால் மட்டுமே அங்கு அப்பாவி மக்களைக் காக்கமுடியும் என்று நான் உறுதிபட நம்புகின்றேன். உ…
-
- 2 replies
- 1.6k views
-
-
மட்டக்களப்பின் களுதாவளையில் கிளேமோர் தாக்குதல். 2 படையினர் பலி. http://www.orunews.com/?p=1386
-
- 1 reply
- 1.2k views
-
-
வெள்ளி விழாக் காணும் மீறல்கள் புனிதன் - 17-6-08 இம்மாதம் இலங்கைத் தீவின் கடைசி இனக் கலவரம் வெள்ளி விழாக் காண்கிறது. 83 ஜுலைக்கு எத்தனையோ ஆண்டுகளின் முன்னரே அரசியல் கைதிகளிற்கான ஜெனீவா விதிமுறைகள் - மனித உரிமைகள், சித்திரவதை - மீறப் பட்டன. தனி மனித சுதந்திமும் பறிபோயிற்று. இவற்றை எல்லாம் கண்டுகொள்ள இவற்றின் காவலனாகிய ஐக்கிய நாடுகளுக்கு 25 ஆண்டுகள் தேவைப் பட்டது. கடந்த சில வாரங்களில் விரும்பியோ, விரும்பாமலோ, அன்றி நிர்ப்பந்தத்தின் பேரிலோ பொதுமக்கள் பலர் இலங்கைத் தீவில் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தமிழர்களாக இருக்கும் போது பத்திரிகைகள், அரசியல் ஆய்வாளர்கள் எவருமே கண்டு கொள்ளாமல் இருந்தனர். பொதுமக்கள் சிங்களவர்களாக இருக்கும் போது பத்திரிகைகள், அரச…
-
- 5 replies
- 1.3k views
-
-
தமிழர்களைக் கொன்று குவிக்க சிங்கள அரசுக்கு ஆயுத உதவி செய்யும் இந்திய அரசாங்கத்துக்கு எதிராகத் தமிழகக் கட்சிகள் ஒன்றுதிரள வேண்டும் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 813 views
-
-
தெஹிவளையில் வெள்ளைவானில் இளைஞர் கடத்தல் Sunday, 22 June 2008 சுற்றாடல் அமைச்சில் சுற்றாடல் அதிகாரியாகப் பணிபுரிபவரும் ஊடகவியலாளருமான தி.திருக்குமரன் கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளையில் வைத்து நேற்றிரவு 8.45 மணியளவில் இனந்தெரியாத ஆயுதபாணிகளால் வெள்ளைவானில் பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றார். தெஹிவளை எபனேசர் வீதியிலுள்ள தொடர்மாடி இல்லத்தில் வைத்தே இவர் கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் முறைப்பாடு செய்திருக்கின்றார்கள். சுற்றாடல் அதிகாரியாக தற்போது பணிபுரியும் திருக்குமரன் முன்னர் சக்தி தொலைக்காட்சியிலும் பின்னர் தினக்குரல் பத்திரிகையிலும் ஒரு ஊடகவியலாளராகப் பணிபுரிந்தவர். 30 வயதான திருக்குமரனுக்கு ஒரு குழுந்தையும் இருக்கி…
-
- 0 replies
- 717 views
-
-
இராணுவ தீர்வுக்கு இந்தியா எதிர்ப்பு வீரகேசரி வாரவெளியீடு 6/22/2008 8:31:40 AM - இனப்பிரச்சினைக்கு இலங்கை இராணுவத்தீர்வைத் தவிர்த்து அரசியல் தீர்வை ஏற்படுத்தும் என நம்புவதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உயர் மட்ட அதிகாரிகள் குழு கூறியுள்ளது. இந்திய அரசாங்கத்தின் உயர் மட்ட அதிகாரிகள் மூவர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் முடிவில் கொழும்பிலுள்ள இந்திய செய்தியாளர்களை சந்தித்த போது இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் இதைத் தெரிவித்துள்ளார். இந்திய தூதுக்குழுவில் இடம்பெற்ற அதிகாரிகள் செய்தி யாளர்களை சந்திக்கவில்லை. ஆனால் அறிக்கையொன்று வாசிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இனப்பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து சமூகங்களும் ஏற்றுக்…
-
- 0 replies
- 866 views
-
-
ஈழத் தமிழர்கள் தமிழகத்தில் சொத்துக்கள் வாங்குவது தடுக்கப்பட்ட வேண்டும் அவ்வாறு நடக்காமல் தமிழகக் காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று கருணாநிதி அறிவித்திருப்பதற்கு தமிழக கட்சிகள் பலவும் தமது கடும் கண்டனத்தை கேசரி வார வெளியீட்டிற்கு தெரிவித்த போது வெளிப்படுத்தியுள்ளன. தமிழகத்தில் பிற இனத்தவர்கள் மட்டும சொத்துகளை வாங்கும் நிலை உள்ளபோது தமிழர்கள் மட்டும் தமிழகதில் சொத்துக்களை வாங்க முடியாதா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறாh தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பழ.நெடுமாறன். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் : பொதுவாக வெளிநாட்டு வாழ் இந்திய வம்சாவளியினர் இந்தியாவில் சொத்துக்கள் வாங்க தடையேது கிடையாது. என்.ஆர்.ஐ எனப்படும் அத்தகைய இந்திய வம்சாவ…
-
- 2 replies
- 1.8k views
-
-
கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை சுகாதார விஞ்ஞானக்கல்வி நிறுவனத்தின் 2 ஆம் ஆண்டு நிறைவு விழாவும் உணவு மற்றும் பட்டய கற்கைநெறி மருந்தியலாளர் பட்டய கற்கைநெறி முதலாம் அணி மாணவர்களுக்கான பட்டமளிப்பு நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 759 views
-
-
தென்னாபிரிக்காவில் நேற்று சனிக்கிழமை பேரெழுச்சியுடன் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் அனைத்துலக சமூகத்தின் பாரபட்சமான அணுகுமுறைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 748 views
-
-
தமிழக கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட இருபத்தெட்டு இலங்கை மீனவர்கள், இந்திய கடலோர காவற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரிப் பகுதியில் இருந்து அறுபத்தைந்து கடல்மைல் தென்கிழக்கே, நேற்று இரவு ஆறு விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது, இவர்கள் அனைவரையும் தாம் கைது செய்ததாக, இந்திய கடலோர காவற்படையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும், இன்று காலை தமிழகம் தூத்துக்குடி துறைமுகத்தில், காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் http://www.pathivu.com/?p=1357
-
- 0 replies
- 587 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சியில் கப்டன் மொழியமுதன், தமிழீழத் தேசியத் துணைப்படை வீரர் கப்டன் கந்தசாமி, லெப். கீதவன் ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 824 views
-
-
இணைந்த வடக்கு - கிழக்கு ஈழத்தமிழர்களின் "பிராந்தியம்" என்று தாம் ஏற்றுக்கொள்வதாக சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு சென்றுள்ள சிறப்புத் தூதுவர் இந்தியத் தூதுக்குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.3k views
-
-
அனைவருக்கும் இனிய பொங்குதமிழ் வணக்கங்கள்! நேற்று நோர்வேயில் நிகழ்ந்த பொங்குதமிழ் நிகழ்ச்சியை தொலைக்காட்சியூடாக காணும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அங்கு உரையாற்றிய ஒருவர் (பெயர் தெரியவில்லை மன்னிக்கவும்) எமது தலைவரைப் பற்றி கூறிய ஒரு கதைகேட்டு உண்மையில் மனம் நெகிழ்ந்துவிட்டேன். இந்தக்கதையை பலரும் அறிந்து இருப்பது நல்லது போல தோன்றுகின்றது. எனவே, அதன் முக்கியத்துவம் கருதி இந்த சம்பவத்தை பற்றி அறியாதவர்களுக்காக அதை இங்கு பதிகின்றேன். முன்னொரு பொழுது ஒரு சிங்கள இராணுவச் சிப்பாய் ஒருவன் விடுதலைப்புலிகளிடம் பிடிபட்டு இருந்தான். விடுதலைப் புலிகள் அவனை யுத்தகைதியாக சிறைப்பிடித்து வைத்து இருந்தனர். காலங்கள் கடந்தது. வழமையாக நடைபெறுவதுபோல்... சிப்பாய் சிறைப்பிடிக்கப்பட்ட…
-
- 11 replies
- 4.4k views
-
-
வீரகேசரி இணையம் யாழ். குடாநாட்டில் அரிசியின் விலை நாளுக்கு நாள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி அதிகரித்துச் செல்கின்றது. தற்போது ஒரு கிலோ அரிசியின் விலை நூற்றி முப்பது ரூபாவினைத் தாண்டியுள்ளது. ஆயினும், அரசினால் அமுல்படுத்தப்பட்டுள்ள அரிசிக்கான நியம விலை நடைமுறை பற்றி எவருமே கண்டுகொள்வதில்லையென நுகர்வோர் நலன்புரி அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன. குடாநாட்டில் விலைக் கட்டுப்பாட்டுத் திணைக்கள அதிகாரிகள் எவருமே கடமையில் இல்லையெனவும் அவை கேள்வி எழுப்புகின்றன. குடாநாட்டின் உள்ளூர் உற்பத்தி அரிசி கையிருப்புக்கள் தீர்ந்து வருகின்ற நிலையில் அதன் விலையும் அதிகரித்துச் செல்லத் தொடங்கியுள்ளது. இதனால், கப்பல் மூலமாக இறக்குமதி செய்யப்படும் அரிசியே யாழில் நிவாரணக் கொடுப்பனவுகள் உள்ள…
-
- 4 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தலைமையிலான இராணுவ உயர்மட்டக்குழு இன்று சனிக்கிழமை காலை வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குச் சென்று பாதுகாப்பு நிலவரங்களை மீளாய்வு செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 937 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான தெகிவளையில் இன்று தமிழ் இளைஞர் ஒருவர் வெள்ளை வான் கும்பலால் கடத்தப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 509 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளியில் சிறிலங்காப் படையுடன் சேர்ந்து இயங்கும் துணைப்படையான பிள்ளையான் குழுவின் அலுவலகம் மீது இன்று இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் அலுவலகத்தில் இருந்த இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 585 views
-
-
லண்டனில் இலங்கை தூதரக கணக்காளரிடம் புதிய முறையில் கொள்ளை [21 - June - 2008] [Font Size - A - A - A] லண்டன் ஸ்ரீலங்கா உயர் ஸ்தானிகர் அலுவலகத்தைச் சேர்ந்த கணக்காளர் ரஞ்ஜித் பெரேரா வங்கியிலிருந்து பணம் எடுத்துக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இடைவழியில் வைத்து அவரை ஒருசில நபர்கள் வழிமறித்து அவரிடம் அந்தச் சந்தர்ப்பத்தில் பறித்துக்கொள்ளக்கூடியதாக இருந்த சுமார் நாலாயிரம் பவுண்ஸ் தொகையைப் பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த 17 ஆம் திகதி பட்டப்பகலில் நடந்துள்ளது. இதுபற்றி ஸ்தானிகர் அலுவலக கணக்காளர் ரஞ்ஜித் பெரேரா அலுவலகத்துக்கு அறிவித்திருக்கும் தகவல்களுக்கேற்ப அவர் தினமும் லண்டன் உயர் ஸ்தானிகர் அலுவலகத்திலிருந்து சும…
-
- 1 reply
- 1.4k views
-
-
வீரகேசரி இணையம் 6/21/2008 4:51:35 PM - கொழும்பில் நடைபெறவுள்ள "சார்க்' மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தரவுள்ள இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கை சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு மக்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவரும், மேலக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், இலங்கையில் உள்ள இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்திடம் கடித மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
- 0 replies
- 687 views
-
-
HERE IS A MUST READ PASS IT ON......... Dear SINHALESE: I understand that you are upset by us. Indeed, it appears that you are quite upset, even angry. Today, it is the 'Barbarism of LTTE terrorism' yesterday it was the Federal party, before that it was the 'favouritism of the British'. It appears that Tamil, who could achieve equality and who, therefore, could live, upset you. Indeed, every few years you seem to become upset by us. Your were upset in 1956, 1958, 1961 and 1977 and went on acts of arson, rape, pillage, murder and plain barbarity and we were scornfully asked to go to the federal party for help Of course, dear…
-
- 1 reply
- 1.6k views
-
-
தவறுதலான வெடிவிபத்தில் பிள்ளையான் குழு ஆயுததாரி காயம் சனி, 21 ஜுன் 2008 [நிருபர் வி.சிறீதரன்] வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் மட்டக்களப்பு கரடியனாறு பிள்ளையான் ஆயுதக்குழுவின் முகாமில் இடம்பெற்ற வெடிவிபத்தில் ஆயுததாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதன்போது படுகாயமடைந்தவர் ஆயுததாரி தமிழ்வாணன் (அகவை 19) எனத் தெரியவருகிறது. இவர் தற்பொழுது மட்டக்களப்பு ஆசிரியர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/?p=1352
-
- 0 replies
- 605 views
-
-
திரைப்படக் கூட்டுத்தாபன பணிப்பாளர் சபையைச் சேர்ந்த தேவதாசன் கைது கொழும்பில் இடம் பெற்ற தாக்க்குதல்களுக்கு உடந்தையாக இருந்தார் என்ற பேரில் இவர் கைது செய்யப்பட்டார். கொட்டாஞ்சேனை பொதுச் சந்தையில் கடை ஒன்று இருப்பதாகவும், அங்கிருந்தே இவர் தற்கொலை குண்டுதாரிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார் எனவும் defence.lk இணையத்தளம் தெரிவித்துள்ளது. ஆதாரம் வீரகேசரி இணையத்தளம் Major LTTE operative arrested in Colombo Police have arrested an LTTE operative who posed himself as a film director, and assisted numerous terrorist activities in Colombo. A special police team arrested this person hailing from Kilinochchi, based on information extracted from another LTTE activist arrested …
-
- 0 replies
- 651 views
-
-
மன்னாரில் கடந்த 2 நாட்களில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் உடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 485 views
-
-
ஒரு தந்தையின (ஸ்ரீ லங்கா படைச் சிப்பாய்) வேண்டுகோள் ஆதாரம் வீரகேசரி
-
- 10 replies
- 2.7k views
-
-
நோயாளர் மருத்துவ வசதிகளை மேம்படுத்தி தருமாறு கிளிநொச்சி மருத்துவ அதிகாரிகள் அவசர வேண்டுகோள் [சனிக்கிழமை, 21 யூன் 2008, 03:39 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] கிளிநொச்சி மருத்துவமனையின் மருத்துவ வசதிகளை மேம்படுத்தித் தருமாறு கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையின் அனைத்து மருத்துவ அதிகாரிகள் அவசர வேண்டுகோளினை விடுத்துள்ளனர். இது தொடர்பில் கிளிநொச்சி மருத்துவ அதிகாரிகள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனை மருத்துவர்களாகிய நாம், தற்போது எமது மருத்துவமனையில் நிகழும் நெருக்கடி நிலை குறித்து மனிதாபிமான அடிப்படையிலான இந்த அவசர வேண்டுகோளினைச் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரிடமும் முன்வைக்கிறோம். பின்னணி …
-
- 0 replies
- 553 views
-