ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
Posted on : 2008-07-07 இந்திய, அமெரிக்கத் தேர்தல்களால் இங்கு தமிழர்களுக்கு நீதி கிட்டுமா? இலங்கை இனப்பிரச்சினையை ஒட்டிய ஒரு முக்கிய விடயத்தை தமிழர் தரப்பு விடுதலைப் புலிகள் தரப்பு மீண்டும் மீண்டும் பாரத தேசத்துக்குச் சுட்டிக்காட்டி வருகின்றது. "இந்திய அரசும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் இப்பிராந்தியத்தில் தங்களின் நேச சக்திகள் எவை, நண்பனாக வேடம் போட்டுக்கொண்டு குழிபறிக்கும் சக்திகள் எவை என்பதைச் சரியாக அடையாளம் காண வேண்டும்' என்று புலிகள் உரிமையோடு இந்தியாவை வற்புறுத்தி வருகிறார்கள். அண்மையில் தமிழகத்தின் "குமுதம்' இதழுக்குப் பேட்டியளித்த விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப் பாளர் பா.நடேசன், இந்திய விவகாரத்தில் இலங்கைத் தரப்பு நடந்துகொண்ட போக்கை வரலாற்றுப் பின…
-
- 8 replies
- 1.4k views
-
-
17வது அரசியலமைப்பு திருத்தத்தை உடனடியாக அமுலுக்கு கொண்டு வருமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டங்களை ஜே.வீ.பீ மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. இதனை வலியுறுத்தும் நோக்கில் எதிர்வரும் 9 ஆம் திகதி கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு எதிரில் மக்களிடம் மகஜர் ஒன்றில் கையெழுத்து பெறப்படவுள்ளது. இதனை போன்று நாடு முழுவதிலும் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ஜே.வீ.பீ அறிவித்துள்ளது. மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் நாட்டின் சகல ஜனநாயக நிறுவனங்களையும் செயலிழக்க செய்து, ஜனநாயகத்திற்கு விரோதமான பாதையில் பயணித்து கொண்டிருப்பதாக ஜே.வீ.பீ குற்றம்சுமத்தியுள்ளது. செயலிழந்துள்ள சுயாதீன காவல்துறை ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு, அரசியலமைப்புச் சபை போன்ற …
-
- 0 replies
- 694 views
-
-
இம் மாத இறுதியிலும் அடுத்த மாத முற்பகுதியிலும் கொழும்பில் 'சார்க்' உச்சி மாநாடு நடக்கும் சமயத்தில் தலைநகர் கொழும்பின் கடல், வான் கண்காணிப்பு நடவடிக்ககைள் முற்றாக இந்தியத் தரப்பின் பொறுப்பின் கீழ் முன்னெடுக்கப்படும். தரைப்பாதுகாப்பிற்கு மட்டுமே இலங்கை அரசுப் படைகள் தனித்து முன்னெடுக்கும். அதேசமயம், இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காகக் கொழும்பு வரும் இந்தியப் பிரதமருக்கும் ஏனைய மூத்த அதிகாரிகளுக்கும் உரிய பாதுகாப்பை வழங்குவதற்காக நூற்றுக்கும் குறைவான இந்தியக் கொமாண்டோக்களே மெய்பாதுகாவலர்களே இலங்கை வருவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்திய தரப்பின் பாதுகாப்புக்கு சுமார் மூவாயிரம் பேர் கொண்ட படையணி இந்தியாவிலிருந்து கொழும்பு வரப்போவதாக முன்னர் வெளியான செய்திகள் முற்…
-
- 1 reply
- 966 views
-
-
அடிப்படை உரிமை மீறல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கின் பிரதிவாதியான பயங்கரவாத தடுப்பு பிரிவில் பணியாற்றும் பொலிஸ் இன்ஸ்பெக்டரை வெளிநாடு செல்வதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. விமான நிலைய அதிகார சபையின் முன்னாள் தலைவர் ரிரான் அலஸ் தன்னைக் கைது செய்து தடுத்துவைக்கப்பட்டது தொடர்பாக மிருதுசிறி அபயசிங்க என்ற பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை உள்ள நிலையில் பிரதிவாதி வெளிநாட்டில் பொலிஸ் பயிற்சியில் கலந்துகொள்ளச் செல்வதற்கு உயர்நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பம் புதன்கிழமை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் சிராணி திலகவர்த்தன, சலீம் மர்சூக் மற்றும் கே.ஸ்ரீப…
-
- 0 replies
- 663 views
-
-
தமிழ்நாட்டு கரையோரப் பகுதிகளில் ஆளில்லாத உளவு வானூர்திகளை பயன்படுத்த இந்திய அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 617 views
-
-
இந்தியாவுக்கு எதிரான மகிந்தவின் மறைமுகப்போர்: பின்னணியில் நடப்பது என்ன? [திங்கட்கிழமை, 07 யூலை 2008, 06:21 மு.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] இந்திய உயர்மட்டக்குழுவினர் மூவர் சிறிலங்கா சென்று சார்க் உச்சி மாநாடு தொடர்பாக விதித்துச் சென்றுள்ள நிபந்தனைகளால் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ள சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இந்திய மத்திய அரசுக்கு எதிராக மறைமுகப்போரில் ஈடுபட்டு வருகிறார் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: அண்மையில் சிறிலங்காவுக்குச் சென்ற இந்திய உயர்மட்டக்குழு அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் நடத்திய சந்திப்பு விபரம் பற்றி ஊடகங்களுக்கு செய்தி வெளியிடுவதில்லை என்று முடிவெடுத்திருந்தது. அந்த முடிவுக்கு …
-
- 3 replies
- 905 views
-
-
ஈழத்தில் எம் உறவுகள் மீது இலங்கை அரசாங்கம் நடத்திவரும் இன்னல்களை உலகிற்கு தெரிவிக்கும் விதமாகவும், கண்டிக்கும் விதமாகவும் உலகெங்கும் நடந்து கொண்டிருக்கும் "பொங்கு தமிழ்" சிட்னியிலும் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்றது. பல்வேறு ஊடகங்கள் மூலம் இந்நிகழ்வு பற்றி அறிந்திருப்பீர்கள். நிகழ்வில் பங்கெடுத்த எனது நேரடி அனுபவம் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். படம்: புதினம் புகழ் பெற்ற சிட்னி ஒலிம்பிக விளையாட்டு கூடல் அருகே இருக்கும் பச்சை பசேலென்ற மேசன் மைதானத்தில் அனைவரும் காலை 11 மணிக்கு கூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கனடாவில் நடந்தது போலவே, சிட்னியிலும் முன்னர் அறிவிக்கப்பட்ட இடம் மாற்றப்பட்டு, பின்னர் அவசரமவசரமாக இந்த இடம் அறிவிக்கப்பட்டது. சுதந்திர ஒஸ்திரேலியாவி…
-
- 12 replies
- 2k views
-
-
இந்தியாவுடனான எண்ணெய்வள ஆய்வு உடன்படிக்கையை பிற்போட வேண்டும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் ஜெ.வி.பி அவசர கோரிக்கை வீரகேசரி நாளேடு 7/6/2008 7:39:24 PM - இலங்கையில் எண்ணெய் வள ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் இந்தியாவுடன் செய்து கொள்ளப்படவுள்ள உடன்படிக்கையினை அரசாங்கம் பிற்போட வேண்டும். இந்த உடன்படிக்கையின் உள்ளடக்கம் குறித்து பாராளுமன்றத்தில் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஜே.வி.பி. அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்திய நிறுவனத்துடனான எண்ணெய்வள ஆய்வு உடன்படிக்கை தன்னிச்சையாக மேற்கொள்ளப்படுவதை அனுமதிக்க முடியாது. எனவே இவ்விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் ஜே.வி.பி. சுட்டிக்காட்டியுள்ளது. மன்னார், கடற்பரப்பில் எண…
-
- 0 replies
- 627 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
பூநகரியில் இருந்து அரியாலை முகாம் மீது விடுதலைப்புலிகள் எறிகணை வீச்சு! கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரியில் இருந்து யாழ் அரியாலை படைமுகாம் நோக்கி விடுதலைப் புலிகள் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.நேற்று காலை 10:00 மணியவில் அரியாலை உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள படை முகாம்களில் சுமார் 6 எறிகணைகள் வீழ்ந்து வெடித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. படையினருக்கு ஏற்பட்ட சேத விபரங்களை படைத்தரப்பு இன்னும் வெளியிடவில்லை. நிருபர்:ஈழச்செல்வன் http://www.tamilseythi.com/tamileelam/poon...2008-07-06.html
-
- 0 replies
- 2.4k views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கருணா அம்மான் மீண்டும் கிழக்கில் புலிகளுக்கு எதிராகச் செயற்படத் தயாராக உள்ளதாக அந்தக் கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் திவயினவிற்குத் தெரிவித்துள்ளார். கிழக்கு முதலமைச்சர் பிள்ளையான் உள்ளிட்டோருடன் கருணா ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, முதலமைச்சர் பதவியைப் பிள்ளையான் வழங்க முன்வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனக் கருணா குறிப்பிட்டுள்ளதாகத் திவயின ஞாயிறு இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கருணாவிற்கு முதலமைச்சர் பதவி ? தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மானிற்கும், தற்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைப…
-
- 4 replies
- 2k views
-
-
மன்னிக்கவும் டெய்லிமோசன் வீடியோவை இனைக்கமுடியவில்லை அதன்தொடர்பை இனைக்கின்றேன் இதை கட்டாயமாக கருனா பார்க்கவேண்டும் உங்கள் கருத்து என்னங்கோ அழுத்துக http://www.dailymotion.com/video/x1h3ya_karuna_music
-
- 3 replies
- 3.2k views
-
-
மன்னார் வளைகுடா பகுதியில் இருப்பதாக கூறப்படும் எண்ணெய்வள ஆய்வு குறித்து இந்தியாவின் கேயான் நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் நாளை கைச்சாத்திடவுள்ளது. இந்திய நிறுவனத்திற்கான ஆய்வு அனுமதி ரகசியமாக கோரப்பட்ட கேள்வி பத்திரத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வுக்கான உடன்படிக்கை நெறிமுறைகளை மீறி மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த உடன்படிக்கையில் உள்ள விடயங்கள், இதனால் நாட்டுக்கு ஏற்படகூடிய நன்மைகள், எண்ணெய் வளத்தை கேயான் நிறுவனத்துடன் எவ்வாறு பகிர்ந்து கொள்வது போன்றவை குறித்து வினைத்திறனான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள கனிய எண்ணெய்வள ஆய்வுகள் குறித்த தகவல்களை நாடாளுமன்றத்திற்கு அறிவிப்பதாக கூறிய எண்ணெய…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழகத்தில் நிலம், வீடு முதலிய சொத்துகளை அயல் நாட்டினர் வாங்குவது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், சிறிலங்கா அகதிகள் தமிழகத்தில் சொத்து வாங்குவதை அனுமதிக்க இயலாது என்பது போல் தவறான பொருள் தரும் வகையில் சில பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்தியர் அல்லாதவர் இந்தியாவில் சொத்து வாங்குவது குறித்த விதிமுறை இந் தியா முழுவதும் நடைமுறையில் உள்ளது. இந்திய அரசின் அசை யாச் சொத்து மேலாண்மை, கைய கப்படுத்துதல், மாற்றம் பற்றிய ஒழுங்குமுறை ஆகியன நடைமுறை யில் உள்ளன. பாகிஸ்தான், வங்கதேசம், சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், சீனா, ஈரான், நேபாளம் அல்லது பூடான் ஆகிய எந்த நாட்டின் குடியுரிமை பெற்றவரும…
-
- 3 replies
- 2k views
-
-
சிக்கலாகிவிட்ட களங்களில் தனிவீரம் காட்டி வெற்றிகளை எம்பக்கம் திருப்பிவிட்ட புலி வீரர்களை நான் கண்டுள்ளேன். நாங்கள் எதிர்பார்த்தபடி சண்டையின் போக்கு அமையாமல் எங்களுக்கு எதிராக எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்ட வேளைகளில், கட்டளைப்பீடத்தில் இருந்தபடி, சூழ்நிலைக்கேற்றவாறு சண்டை வியூகங்கள் அமைத்து தன்னம்பிக்கை தெறிக்கும் கட்டளைகளால் போராளிகளை வழிநடாத்திச் சண்டைகளை வென்ற தளபதிகளை நான் கண்டிருக்கின்றேன். ஒரு தாக்குதலுக்கு முன், சண்டைக்கான தயார்ப்படுத்தல்களை இரவு - பகல் பாராது ஓடியோடி உழைத்து - வெற்றிகளுக்கு அத்திவாரமாகத் திகழ்ந்த தளபதிகளை நான் கண்டிருக்கின்றேன். ஆனால் இந்த வீரதீர பண்புகள் அனைத்தையும் ஒருங்கே கொண்டிருந்த புலிவீரர்களில் ஒருவரை நான் கண்டிருக்கின்றேன். அது…
-
- 2 replies
- 941 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சிப் பகுதியில் இன்று சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் நடத்திய தாக்குதலில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பொதுமக்களின் வீடுகள் பலவும் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 555 views
-
-
சிறிலங்கா அரசுக்கு வர்த்தகத்துறையில் ஏற்பட்டு வரும் பாதிப்புக்கள் ஆபத்தான கட்டத்தை அண்மித்துள்ளதாக சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 656 views
-
-
அவுஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னியில் இன்று நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் 2,000-க்கும் அதிகமானோர் பேரெழுச்சியுடன் பங்கேற்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 547 views
-
-
அம்பாறை கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 564 views
-
-
மொனறாகல மாவட்டத்தில் உள்ள புத்தள - கதிர்காமம் வீதியில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த இருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 562 views
-
-
வடமராட்சியில் கரும்புலிகள் தின சுவரொட்டிகள் யாழ். நகரப் பகுதியில் மக்கள் நடமாட்டமில்லை [06 - July - 2008] ] * கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு படையினர் பலத்த பாதுகாப்பு கரும்புலிகள் தினமான நேற்று சனிக்கிழமை யாழ். மாநகரப் பகுதி சன நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டதுடன் இராணுவத்தினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்பட்டன. கரும்புலிகள் தினத்தையொட்டி விடுதலைப்புலிகள் தாக்குதல்கள் எதனையும் நடத்தலாம் என்ற அச்சத்தில் கடந்த சில நாட்களாக சோதனை நடவடிக்கைகளையும் வீதி ரோந்து நடவடிக்கைகளையும் படையினர் வெகுவாக அதிகரித்திருந்தனர். இதன் காரணமாக பீதியடைந்த மக்கள் கரும்புலிகள் தினமான நேற்று யாழ். மாநகரப் பகுதியில் தமது நடமாட்டங்களை வெகுவாகக் குறைத்…
-
- 0 replies
- 694 views
-
-
கருத்துக்கணிப்பை நடத்தினால் புலிகள் தமிழர்களின் பிரதிநிதிகளா? இல்லையாவென்பதை சர்வதேசம் அறிய முடியும் [06 - July - 2008] *விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் யோகி கூறுகிறார் விடுதலைப் புலிகளையும் அவர்களின் போராட்டத்தையும் கொச்சைப்படுத்திவரும் சர்வதேசம், தமிழ் மக்கள் தன்னுரிமையை வேண்டுகிறார்களா இல்லையா என்பதை அறியவும் விடுதலைப் புலிகள் தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகளா இல்லையா என்பதை தெரிந்துகொள்ளவும் கருத்துக் கணிப்பொன்றை நடத்திப்பார்க்க வேண்டுமென விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தரும் சமர் ஆய்வுப் பொறுப்பாளருமான யோகரட்ணம் யோகி தெரிவித்துள்ளார். உலக நாடுகள் தடை செய்துவிட்டன என்பதற்காக விடுதலைப் புலிகளின் போராட்டம் நின்றுவிடப்போவதில்லை. எம்மை தடை செய்துவிட்டார்…
-
- 0 replies
- 563 views
-
-
-
கிபிர் ரக யுத்த விமானமொன்று கட்டுநாயக்கவில் விபத்துக்குள்ளாகியுள்ளது [ ஞாயிற்றுக்கிழமை, 06 யூலை 2008, 11:06.14 AM GMT +05:30 ] இலங்கை வான்படையின் கிபிர் ரக தாக்குல் விமானமொன்று கட்டுநாயக்க வான்படை இறங்குதளத்தில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இன்று பிற்பகல் 4.20 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த விமானம் வன்னித் தாக்குதல் நடவடிக்கைகளில் மிகவும் முதன்மையானதென தெரிவிக்கப்படுகிறது. விமானத்தின் சக்கரத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறினால் விபத்து ஏற்பட்டதாக வான்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் விமானிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அண்மைக்காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது…
-
- 13 replies
- 3.6k views
-
-
தாயகக்த்தில் இருந்து நேரடியாக நேரலை மூலம் நிகழ்ச்சிகள் தற்பொழுது இணையத்தில் ஒளிபரப்புகின்றது கொஞ்ச நேரம் தடங்கி வரும் பின் நல்லா இருக்குது நான் தற்பொழுது பார்த்து வருகிறேன்.. கரும்புலிகளின் நிணைவு நாளுடன் இவ் ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது..... இவ் ஒளிபரப்பு http://www.tamilntt.com/ இவ் தொடரியில் பார்க்கலாம்...
-
- 5 replies
- 3.3k views
-