ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நோக்கில் புலிகள் வலிந்த தாக்குதலை நடத்தத் திட்டமிட் டிருப்பதால், குடாநாட்டில் பாதுகாப்பு நடை முறைகளை இறுக்கமாகப் பேணவுள்ளதாக யாழ். படைகளின் கட்ட ளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறி அறிவித்துள்ளார். கடந்த புதனன்று பலாலியில் உள்ள யாழ். படைத் தலைமையகத்தில், குடாநாட்டில் இருந்து வெளியாகும் நாளிதழ்களின் ஆசிரிய பீடப் பிரதிநிதிகளைச் சந்தித்த போதே, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்தச் சந்திப்பின்போது குடாநாட்டின் பாது காப்பு நடைமுறைகள் எந்தளவுக்கு இறுக்கப் படவுள்ளன என்பது குறித்தும் அவர் விவரித் திருந்தார். ஊரடங்குச் சட்டம் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைமுறைப் படுத்தப்படும். இதற்கு முன்னர் இரவு 9 மணி முதல் அதிகாலை 4.30 மண…
-
- 6 replies
- 1.9k views
-
-
கண்டி, கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் சிங்கள இனவெறியரசின் மாணவர்கள் மீதான அட்டூழியங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. பெராதெனிய, மொறட்டுவ பல்கலைக் கழகத்திற் கல்வி கற்கும் மாணவர்கள் தொடர்ந்தும் இராணுவ மற்றும் காவற்துறையினரின் தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றார்கள். பல்கலைக் கழக மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளுக்கு செல்லும் இரணுவத்தினரும், காவற்துறையினரும் சந்தேகத்தின் பேரிலான கைது, விசாரணைக்காக அழைத்துச் செல்லுதல் என்று கூறி தமிழ் மாணவர்களை தொடர்ந்தும் கைது செய்து வருவதோடு அவர்கள் மீதான தாக்குதல்களையும் நடாத்தி வருகின்றனர். பல்கலைக் கழக மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளுக்கு இரவு வேளையில் செல்லும் இராணுவ உடை தரித்தவர்களும், அவர்களுடன் செல்லும் சில சிங்கள காடைக்கும…
-
- 0 replies
- 981 views
-
-
வெளியுறவு ஆணையாளர்: Benita.Ferrero-Waldner@ec.europa.eu துணை வெளியுறவு ஆணையாளார்: Joao-Luis.Aguiar-Machado@ec.europa.eu வெளியுறவுச் செயளாளர்: Helen-C- P.Campbell@ec.europa.eu சர்வதேச வர்த்தக ஆணையாளர்: Peter.Mandelson@ec.europa.eu ஏனைய உறுப்பினர்கள்: Julian.Wilson@ec.europa.eu Catriona.Carmody@ec.europa.eu, Peter.Power@ec.europa.eu, Michael.Jennings@ec.europa.eu, Peter.Hill@ec.europa.eu
-
- 5 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் கருத்துக்களில் இருவேறுபட்ட நிலைப்பாடுகள் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 641 views
-
-
மன்னாரில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுகளுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் படைத்தரப்புக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 889 views
-
-
எட்டுக் கோடித் தமிழர்களும் குரல்கொடுத்தால், தமிழீழத்தை உலகம் அங்கீகரிக்கும் என, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் கூறியுள்ளார். இன்று பொங்கு தமிழாக, டென்மார்க் மண்ணில் அணிதிரண்ட புலம்பெயர்வாழ் தமிழீழ உறவுகளை நோக்கி, தமிழீழ தாயகத்தில் இருந்து காணொளி நேரஞ்சல் வடிவில் உரையாற்றிய, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைகளை நீக்கி, தமிழீழ தனியரசுக்கு அங்கீகாரம் பெற்று , விடுதலையை வென்றெடுப்பதற்கான பொறுப்பு, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களையே சார்ந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். உலகெங்கும் வாழும் எட்டுக் கோடி தமிழ் மக்களும், தமிழீழ விடுதலைக்காக ஒருமித்துக் குரல்கொடுக்கும் பட்சத்தில், அதற்கு செவிசாய்த்து தமிழீழ தனிய…
-
- 2 replies
- 1k views
-
-
இந்தியா காத்திரமான பங்களிப்பை வழங்காததன் விளைவாகவே இலங்கை இனப்பிரச்சினை இழுபடுவதாக வாழும் கலை அமைப்பின் ஸ்தாபகர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜீ தெரிவித்தார். பெங்களுரில் வாழும் கலை அமைப்பின் சர்வதேச மத்திய நிலையத்தில் வைத்து விரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கி செவ்வியின் ஒரு பகுதி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனை தற்போது கூட நாம் சந்தித்துப் பேசுவதற்கு விருப்பம் கொண்டுள்ளோம். அவருடன் நேரடியாக தொடர்பு வைத்துக் கொள்ளவே விரும்புகிறோம். இலங்கையில் நிலவும் பிரச்சினைக்கு வெறுமனே அரசியல் ரீதியான அனுகுமுறை மூலம் தீர்வு கண்டு விட முடியாது. தீர்வை நோக்கிய பயணத்தில் மனமாற்றமும் பரஸ்பர நம்பிக்கையும் உறுதியான அடித்தளமாக அமைவதன் மூலமே இலகுவாக வெற்றியை நோக்கி பய…
-
- 0 replies
- 799 views
-
-
பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன் நிபந்தனையாக விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று மஹிந்த கோரியிருப்பது நடைமுறைச்சாத்தியமானது அல்ல. ஆயுத மோதல் ஒன்றில் சம்பந்தபட்டுள்ள எந்வொரு தரப்பும் ஆயுதங்களைக் கைவிடுவது என்பதும் சரணடைவது என்பதும் நடைமுறையில் ஒன்றேதான். என த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்று உறுப்பினர் ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது : ஆயுத மோதல் ஒன்றில் ஈடுபட்டு வந்திருக்கும் போராட்ட அமைப்பு ஒன்று ஆயுதங்களைக் கைவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு போனதாக வரலாறு கிடையாது. இலங்கை இனப்பிரச்சினைக்கு ஆயதங்கள் மூலம் தீர்வு காண முடியாது என்பதை கடந்த இருபத்தைந்து வருடகால வரலாறு நிரூபித்து நிற்கின…
-
- 0 replies
- 779 views
-
-
மன்னாரில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுகளுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் படைத்தரப்புக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 582 views
-
-
சிறிலங்காவிற்கான வர்த்தக ஏற்றுமதிச் சலுகையான ஜிபிஎஸ் பிளஸ் உடன்பாட்டை நீடிப்புச் செய்வதற்கு உதவுமாறு பிரித்தானியாவிடம் ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க மன்றாட்டமாக கேட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 505 views
-
-
வடபோர் அரங்கில் போர் முனைப்பு தீவிரமடைந்திருக்கும் இவ்வேளையில் தென்னிலங்கையிலும் அரசியல் போர் உக்கிரமடைகிறது. "தேசத்துரோகி' நாமத்தை எவர் நெற்றியில் ஒட்டலாமென்கிற பெரும் போரொன்றை ஆளும் தரப்பும் எதிர்த் தரப்பும் கட்டவிழ்த்து விட்டுள்ளன. படையினருக்கு ஏற்படும் இழப்புக்களை தமது அரசியல் இலாபத்திற்காக எதிர்க்கட்சியினர் பயன்படுத்துவதாக விசனமடையும் அதிகாரத் தரப்பின?ன் கோபத்திலும் சில உண்மைகள் பொதிந்திருக்கின்றன. ஆயினும் துரோகிப் பட்டம் சுமத்தும்போது அதைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றலை ஏனைய பெரும்பான்மையினக் கட்சிகள் பெற்றிருக்கவில்லை என்பதையும் புரிந்து கொள்ளலாம். தமிழ் ஊடகத்துறை நசுக்கப்படும்போது மௌனம் காத்த பேரினவாத எதிர்க்கட்சிகள், ஒட்டுமொத்த ஊடகத்திற்கும் அரசாங்…
-
- 0 replies
- 504 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் கொலைப் பட்டியலில் மேலும் 27 ஊடகவியலாளர்களின் பெயர்கள் உள்ளதாக அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகத்துறை உரிமைகளுக்கான பேச்சாளருமான தயாசீலி ஜெயசேகர தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 534 views
-
-
இந்த ஆண்டுக்கான உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களின் பொருட்டு அரசாங்கம் வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைத் திரட்டியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வருடாந்த கடன் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் முன்னணி சர்வதேச வங்கிகளிடமிருந்து இலங்கை இந்தக் கடன் தொகையைத் திரட்டியுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தில் அனுமதி வழங்கப்பட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பான விடயங்களுக்கே இந்த நிதி செலவிடப்படவுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இலங்கையின் வெளிநாட்டுக் கடன்கள் அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பில் தாம…
-
- 4 replies
- 914 views
-
-
முன்னாள் ‘ரா’ அதிகாரி கூறுகிறார் - விடுதலைப் புலிகளை வீழ்த்த முடியாது! இந்திய உளவு நிறுவனமான ‘ரா’வில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர் பி. இராமன். இலங்கைப் பிரச்சினைப் பற்றியும், ராணுவ நடவடிக்கைகள் பற்றியும் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு எதிராக கட்டுரைகளை எழுதிவரும் அவர், கடந்த ஏப்.24 ஆம் தேதி முகமாலைப் பகுதியில் சிறீலங்கா ராணுவம் சந்தித்த கடுமையான பின்னடைவை ஒப்புக் கொண்டுள்ளார். சிறிலங்கா ராணுவம் - இனி எந்தக் காலத்திலும் தரை வழியாக புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் நுழையும் வாய்ப்பே இல்லை என்று, உறுதியாகக் கூறும் அவர், விரக்தியின் விளிம்புக்குப் போய் பிரபாகரன் மரணமடைந்தால்தான் சாத்தியம் என்கிறார். தென்னாசிய ஆய்வுகளுக்கான இணையத் தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (2…
-
- 2 replies
- 1.9k views
-
-
ஆயுள்தண்டனைக் கைதியை விட மோசமான நிலையில் தமிழக முதலமைச்சர் இருப்பதாக, புலவர் புலமைப்பித்தன் தெரிவித்துள்ளார். இன்று நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற, பொங்கு தமிழ் எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய புலவர் புலமைப்பித்தன், பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவை அணைத்துக் கொண்ட பொழுது, கலைஞர் எழுதிய இரங்கற்பாவிற்கு இந்திய ஆட்சியாளர்கள் மட்டத்தில் ஏற்பட்ட எதிர்ப்பு, இதனையே உணர்த்துவதாக சுட்டிக் காட்டியுள்ளார். இந்த வகையில், புழல்சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுள்தண்டனைக் கைதிக்கு இருக்கக்கூடிய அழுவதற்கான உரிமைகூட, தமிழக முதலமைச்சருக்குக் கிடையாது என்றும், இந்தியாவில் - தமிழ்நாட்டில் தமிழர்களே இல்லாமல் போய்விட்டதாகவும், …
-
- 0 replies
- 929 views
-
-
பொங்குதமிழ்ப் பாடல்கள் http://www.pathivu.com/?p=1076
-
- 0 replies
- 629 views
-
-
ஒளித்தடம் பகுதியில் இன்று புதிதாக இணைக்கப்பட்ட பதிவுகள் 10.06.08 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம். http://www.yarl.com/videoclips/view_video....26c1a174c735758 11.06.08 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....11b6acca57d8ea8 13.06.08 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை - 39 http://www.yarl.com/videoclips/view_video....d2b32ed45989c61 எதிர்வரும் நிலவரம் நிகழ்வில் பொங்கு தமிழ் 2008 பற்றி ஆராயப்படுகின்றது http://www.yarl.com/videoclips/view_video....35300f18b984988
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவில் கலைக்கப்பட்ட இரண்டு மாகாண சபைகளுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் அந்நாட்டு இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற 2 மேஜர் ஜெனரல்கள் போட்டியிடவுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 675 views
-
-
கனேடிய தமிழ் மாணவன் இலங்கையில் கைது வீரகேசரி இணையம் 6/13/2008 10:57:31 AM - கனடாவை நிரந்தர வதிவிடமாக கொண்ட மாணவரொருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கனடா ரொடிண்டோவை சேர்ந்த இரம்பைமூர்த்தி(வயது20) எனும் மாணவரே கடந்த இருமா தங்களிற்கு முதல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கனடாவிலிருந்து இலத்திரனியல் உபகரணங்கள் ,இரசாயண பொருட்கள் கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது இவை விடுதலைப்புலிகளிற்கு அனுப்பி வைக்கப்படும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளனவா என்ற சந்தேகத்தின் பேரில் இரம்பை மூர்த்தி கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு
-
- 4 replies
- 2k views
-
-
விடுதலைப்புலிகளின் ஆயுத விநியோகத்துடன் தொடர்புடைய கே.பத்மநாதனை சந்தித்தமை தொடர்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாசிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி வலியுறுத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் பத்மநாபனை தேடி ஜெர்மனி சென்றுள்ளனர். ஆனால் கடந்த ஜனவரி 9ம் திகதி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், ஜி.கே. மணி, திருமாவளவன் ஆகியோர் மலேசியா சென்று, அங்கிருந்து தாய்லாந்து சென்று பத்மநாபனை சந்தித்துள்ளனர் என சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார். இதுகுறித்து டாக்டர் ராமதாசிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளார். http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 1.2k views
-
-
மட்டக்குளி உயர்தொழில் நுட்பப் பயிற்சி நிலையத்தில் கல்வி பயிலும் நான்கு தமிழ் மாணவர்கள் கைது தகவல் ஒன்றை அடுத்து கைது செய்யப்பட்ட நான்கு தமிழ் மாணவர்கள் தொடர்ந்தும் கொட்டாஞ்சேனை கடற்கரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்களும், நண்பர்களும் பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடம் புகார் செய்துள்ளார்கள். மட்டக்குளி ""உயர் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தில்' கல்வி பயிலும் கரவெட்டியைச் சேர்ந்த எஸ்.ராஜரட்ணம், திருநெல்வேலியைச் சேர்ந்த நடராஜா விசாகன், அம்பாறையைச் சேர்ந்த ஏ.அசோகதீபன், பாசையூரைச் சேர்ந்த மத்தியூ சகாயதாஸ் ஆகிய நான்கு தொழில்நுட்பவியல் மாணவர்களே கடந்த 5 ஆம் திகதி இரவு தெமட்டகொடை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தற்போது கடற்கரை பொலிஸ் ந…
-
- 0 replies
- 606 views
-
-
மணலாறு, மன்னார் களமுனைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் 7 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 5 படையினர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 633 views
-
-
ஜூன் மாதம் 2ம் திகதி முதல் 11ம் திகதி வரையான காலப்பகுதியில் 11 ஆட்கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சிவில் பாதுகாப்பு கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இவ்வாறு கடத்தப்பட்ட நபர்களில் ஒருவர் மாத்திரம் கடந்த 11ம் திகதி விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாலசிங்கம் அரியதீபன் என்ற 26 வயது இளைஞரே இவ்வாறு கடத்தப்பட்டதாகவும், கொழும்பு 12 சென்றல் வீதியில் பணியாற்றிய ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். ராதகிருஸ்ணன் சனாதன்(24), நவரத்னம் வேனுகன்(24), பரசாமி கமலநாதன்(23), கதிரேசன் சிவபாலன்(31), சிவஞாரத்னம் முகுந்தன்(32), ஜோசப் பெட்ரிக் பெர்னாண்டோ(71), தம்பிராசா சுதாகரன்(27), பியதாஸ அஜித்குமார(42), நடராசமூர்த்தி கேதீ…
-
- 0 replies
- 575 views
-
-
இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் அகழ்வை மேற்கொள்ளவதற்கு விலைமனுக் கோரிய கெயான் இந்திய என்ற இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கும் குறித்த நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் 3ம் திகதி கைச்சாத்திடப்படவுள்ளது. எண்ணெய் அகழ்வு தொடர்பாக ஆரம்பகட்ட ஆய்வுகள் நடத்தப்பட்ட மன்னார் பிரதேசத்தில் மூன்று பகுதிகள் குறித்த இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட மூன்று தொகுதியும் இந்திய நிறுவனங்களினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. 3400 சதுர கிலோ மீற்றர் பரப்பில் கெயன் இந்தியா நிறுவனத்திற்கு 200 முதல் 1800 சதுரகிலோ மீற்றர் வழங்கப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 719 views
-
-
அக்கரைப்பற்று காவல்துறை பொறுப்பதிகாரியின் துணையுடன் விபச்சாரத் தொழில் முன்னெடுப்பு அம்பாறை அக்கரைப்பற்று காவல்நிலையப் பொறுப்பதிகாரி முஹமட் இஷாட் (O.I.C சொந்த இடம் கொழும்பு இரு வருடங்களுக்கு மேல் இப்பகுதியில் கடமையாற்றுகின்றார்) உதவியுடன் விபச்சார தொழில் இடம்பெற்றுவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பொத்துவில், வாங்காமம், ஆலங்கேணி, போன்ற பின்தங்கிய பகுதியில் உள்ள முஸ்ஸிம் யுவதிகளும் திருக்கோவில், கோமாரி, விநாயகபுரம், தம்பிலிவில், போன்ற பகுதி தமிழ் யுவதிகளையும் இத்தொழிலுக்கு ஈடுபடுத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்பகுதி காவல்நிலைய அதிகாரிகளுக்கு கையூட்டாகப் பணமும் பெண்களையும் கொடுத்து விபச்சாரத் தொழிலை அக்கரைப்பற்று நகரில் முதன்மை இடத்தைப் பெ…
-
- 2 replies
- 1.8k views
-